Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Nin Ninaivugalil Naanirukka

Nin Ninaivugalil Naanirukka 17 1

அத்தியாயம்…17 திரும்பவும் வசுந்தரா… “என்ன மணி கண்டுக்கவே மாட்டேங்குற…ஓ நாத்தனார் கெத்தை  காட்டுறியா…?” என்று கிண்டல் செய்வது போல்  வீரேந்திரன் முன்  அவளிடம் சாதரணமாக பேசுவது போல் பேசினாள். எப்போதும் மணிமேகலை தன் சித்தி மகனிடமும் சரி…அவள் குடும்பத்தில் இருப்பர்களோடும் சரி பேசுவது என்ன…?அவர்கள் எதிரில்  மற்றவர்களிம்  கூட  பேச மாட்டாள். அந்த தைரியத்தில் தான் வசுந்தரா மணிமேகலையிடம் பேச்சை வளர்த்தது. அவளின் திட்டத்தை புரிந்துக் கொண்ட மணிமேகலை… “நாத்தனாரா…யார்…?என் அம்மா அப்பாக்கு நான் ஒரே பெண் […]


Nin Ninaivugalil Naanirukka 16

அத்தியாயம்….16  மணிமேகலையின் உடமைகளை அடுக்க அவளுக்கு உதவி செய்த வாறே சோனாலி… “தோ பார் மணி. இங்கு நடந்ததை எதுவும் சொல்லாதே… உங்க வீட்டில் பார்த்திருக்கும் மாப்பிள்ளையே உனக்கு நல்ல துணையா கூட  இருக்கலாம். புரியுதா…?எது என்றாலும் கொஞ்சம் யோசிச்சி பேசு. யோசிச்சு செய். அவ்வளவு தான் நான் சொல்வேன்.” ஒரு நல்ல தோழியாய் அவள் வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டு விட கூடாது என்று  சொன்னாள். அனைத்திற்க்கும்… “சரி…சரி.” என்று தலையாட்டல் மட்டுமே மணிமேகலையிடம் இருந்து […]


Nin Ninaivugalil Naanirukka 15 2

அதை வீடு என்று சொல்ல முடியாது. ஓட்டலின் அந்தஸ்த்து இங்கும் காணப்பட்டது. வீட்டின் வெளியில்  அணிவகுத்து நின்ற காரின் எண்ணிகைகளை பார்த்து அனைவரும் இருக்கிறார்கள் என்று நினைத்து தான் வீட்டின்னுள் சென்றனர். ஆனால்  தங்களை பார்த்ததும் வீட்டின்  வேலையாள் அரக்க பறக்க…ஒடி வந்து… “வீட்டில் யாரும் இல்லை.” என்று சொல்லிக் கொண்டே அவர் கண்கள் மேல் தளம் நோக்கி பாய்வதை பார்த்து… “சரி அவங்க இல்ல தான். நீங்க சொன்னதை நான் நம்பிட்டேன்.” என்று சொன்ன மணிமேகலை… […]


Nin Ninaivugalil Naanirukka 15 1

அத்தியாயம்….15 “பயப்படும் படி ஒன்னும் இல்ல. அதிர்ச்சியில தான் மயங்கி விழுந்து இருக்காங்க. “ என்று சொல்லி விட்டு அந்த மருத்துவர் சென்று விட்டார். அந்த மருத்துவர் சொன்னதை  கேட்ட பின்னும் வில்சன் விக்டரின்   பயம் போகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். “டாட் அது தான் டாக்டர் ஜஸ்ட் அதிர்ச்சின்னு சொல்லிடாரே இன்னும் ஏன் டாட் டென்ஷனா இருக்கிங்க…ஒன்னும் இல்ல அம்மாவுக்கு ஒன்னும் ஆகாது.” என்று  தந்தைக்கு தைரியம் சொன்ன ஜான் விக்டர், அன்னை […]


Nin Ninaivugalil Naanirukka 14 2

வெளி வந்த வசு எப்படி பார்ப்பது என் று கையைய் பிசைந்து தவித்து நிற்கையில்… வாசு சைகையில் கோயிலில் என்று சொல்லி விட்டு சென்று விட்டான். அவன் சைகையை புரிந்துக் கொண்ட வசு செருப்பை மாட்டிக் கொண்டு கோயிலை  நோக்கி சென்றாள். அது மதியம்  நேரம் என்பதால்  கோயில் நடையை  சாத்தி இருந்தார்கள். எங்கே வாசு என்று சுற்றி பார்த்தவளுக்கு, பின் குளத்தில் வாசு கள் எரியும் சத்தத்தில், அங்கு  நோக்கி சென்றது மட்டுமே அவள் அறிவாள். […]


Nin Ninaivugalil Naanirukka 14 1

அத்தியாயம்….14 மணிமேகலை ஜான் விக்டரை கைய் பேசியில் அழைப்பு விடுக்கும் போது நேரம் இரவு பதினொன்னை  கடந்து இருந்தது.நேரத்தை எல்லாம் பார்க்கும் நிலையில் மணிமேகலை இல்லை. ஆனால் மணிமேகலையிடம் இருந்து அந்த நேரத்திற்க்கு தன்னை அழைத்ததை  பார்த்து ஜான் விக்டர் பதறி  போனவனாய்… “மேகலை என்ன பிரச்சனை. உனக்கு ஏதும் இல்லையே…?” என்று  மிக பட படப்பாக கேட்டான். ஜான் விக்டரின் இந்த படப்பட்டப்பான பேச்சி, அப்போது தான் நேரத்தை பார்த்த மணிமேகலை தன் தலையிலேயே கொட்டிக் […]


Nin Ninaivugalil Naanirukka 13

அத்தியாயம்…13 மணிமேகலைக்கு, வீராவின் சிட்டு என்ற அழைப்பில்  பழைய நினைவுகள் வந்து போயின…ஆனாலும்  பதிலுக்கு அவள்  அழைப்பான அத்தான் என்று அழைக்காது,  அவள்  எதை தெரிந்துக் கொள்ள வீராவை பேசியில் அழைத்தாளோ…அதற்க்கு உண்டான கேள்வியான… “வசுவுக்கும் சித்தி பையனுக்கும் கல்யாணமா…?” என்ற கேள்வியில் இப்போது வீரா ஆடித்தான் போனான். “நீ எ..ன்ன கேட்குற…?”  என்று கேட்ட  வீராவின் குரலில்  இருந்த தடுமாற்றம்  மணிமேகலைக்கு புதியதாக தெரிந்தது. அவன் பேச்சு எப்போதும் வள வள என்று நீண்டு இருக்காது. […]


Nin Ninaivugalil Naanirukka 12

அத்தியாயம்….12  அன்றும் எப்போதும் போல் வகுப்பறைக்குள் நுழையும் போதே மணிமேகலையை பார்த்துக் கொண்டே வந்த  ஜான் விக்டர்… “குட் மார்னிங்க…” என்ற தொடக்கத்தோடு தன் வகுப்பை ஆராம்பித்தவன் முடித்த பின் வகுப்பறையை விட்டு போகும் முன் மணிமேகலையை பார்த்து… “நீ போகும் போது என்னை பார்த்துட்டு போ…” என்று ஜான் விக்டர் சொன்னான். இதனை கேட்ட மணிமலையோடு சோனாலிதான் …’கடவுளே இன்றுமா…’ என்பது போல் தன்  பக்கத்தில் அமர்ந்து இருந்த மணிமேகலையை பார்த்தாள். அப்போது மணிமேகலையும் சோனாலியை […]


Nin Ninaivugalil Naanirukka 11

அத்தியாயம்….11 ஜான் விக்டர் தன் அறைக்கு சென்ற  பின் மலர் விழி தன் கணவனிடம்… “ஏங்க அந்த பெண் இந்த வீட்டுக்கு மருமகளா  வருவது உங்களுக்கு பிடிக்கலையா…?ஆனா நம்ம பையனுக்கு அந்த பெண்ணை  ரொம்ப பிடிச்சி இருக்கே… காதல் கல்யாணம் செய்துக் கொண்ட நீங்கலே  காதல் கல்யாணத்தை எதிர்க்கலாமா…?அதுவும் நீங்க…” தன் பேச்சை முழுவதும் முடிக்காது தன் கணவன் முகத்தை பார்த்தாள். “மலர் இது தான் நீ என்னை புரிஞ்சிக்குன லட்சணமா…?” என்று  வில்சன் விக்டர் தன் […]


Nin Ninaivugalil Naanirukka 10

அத்தியாயம்….10 “மணியா  ஸ்டார் ஒட்டலுக்கா…?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான் வீரேந்திரன். “ வீரா…இதுல அதிர்ச்சியாக  என்ன இருக்கு…?  மணி அவ சார் கூட தான் போனா…அதுவும் இல்லேம்மா அவங்க கூட  அவர் பேரன்ஸ்சும் வந்து இருந்தாங்க…இதுல தப்பு என்ன இருக்கு…?” லாலிக்கு வீரேந்திரன் மணிமேகலை ஒரு ஒட்டலுக்கு சென்தற்க்கு இந்த அளவுக்கு அதிர்ச்சியாக என்ன இருக்கு…?என்பதை விட ஆச்சரியமாக இருந்தது. அதையே வீரேந்திரனிடம் கேட்டும் விட்டாள். இப்போது தன் அதிர்ச்சியில் இருந்து வெளி வந்த வீரேந்திரன்…. “இல்ல […]