ஒன்றில் நில்லாயோ? – 2 “மீனு…மீனும்மா.. பைக் சாவி பார்த்தியா? எங்க வச்சேன்னே தெரியலை” என மாடியில் இருந்து பார்த்திபனின் குரல் எதிரொலித்தது. அவ்வளவாக பொருட்கள் இல்லாத காரணத்தினால் பார்த்தியின் அழைப்பு பன்மடங்கு அதிகமாகவே ஒலித்திருக்க வேண்டும். ஏனென்றால், அந்த டியூப்லெக்ஸ் வீட்டின் மாடியைக் கடந்து இடையில் தென்பட்ட சிறிய செடிச் சுற்றுச்சுவற்றின் மீது தாவி ஏறிய பார்த்தியின் குரல், பக்கத்து வீட்டின் பால்கனி வழியே உட்புகுந்து, திறந்திருந்த ஃப்ரெஞ்ச் விண்டோஸைத் தாண்டி, அழகிய வெள்ளை திரைசீலையை […]