Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

pon maazhai pozhuthu

பொன் மாலை பொழுது 18

நிலா அவள் அறையில் உட்கார்ந்து, நித்யாவுடன் பேசியதை நினைத்துக் கொண்டிருந்தாள். சின்ன வயதிலிருந்தே அவளுக்கு நித்யாவை பிடிக்காது. நித்யாவுக்கு தான் அழகாய் இருக்கிறோம், பணக்காரி என்ற திமிர் அதிகமாக இருப்பதாக நிலா நினைத்தாள். அதனால் நிலா நித்யாவிடம் அளவாக தான் பேசுவாள். மனோரஞ்சனுக்கு கல்யாணம் முடிந்ததும் நிலா, மதிவதனி தனக்கு அண்ணியாக வந்தது குறித்து மிகவும் சந்தோஷம் அடைந்தாள். ஆனால் நித்யாவால் அந்த சந்தோஷம் கெட்டு, தன் அன்பு அண்ணனின் சந்தோஷமும் கெட்டு விடுமோ என்று பயந்தாள் […]


பொன் மாலை பொழுது 17

“நிலா….ஏன் புரிஞ்சிக்க மாட்டிக்கிற? கோயிலுக்கு போறதுனா நீயே போயேன். என்னை எதுக்கு கூப்பிடுற? எனக்கு வேலை இருக்கு மா” மனோரஞ்சன் சிறு எரிச்சலுடன் கூறினான். “அண்ணா அண்ணா….ப்ளீஸ் அண்ணா….நாளைக்கு எனக்கு எக்ஸாம் ணா….சாமிக்கு ஐஸ் வைக்கணும் ணா. கோயிலுக்கு போகனும் ணா” நூறு அண்ணா போட்டாள் நிலா. “ஏய்…ஷாப்பிங்லாம் தனியா தானே போவ. இப்ப மட்டும் எதுக்கு என்னை கூப்பிடுற? ரித்துவ கூட்டிட்டு போயேன்” “அவனை ஆளையே காணோம். ப்ளீஸ் வாங்கணா.” “முடியவே முடியாது….கார் எடுத்துட்டு போ. […]


பொன் மாலை பொழுது 16

மதிவதனி அவள் அத்தையை பார்த்ததிலிருந்து மிகுந்த சந்தோஷத்தில் இருந்தாள். அவள் சந்தோஷத்துக்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. காரைக்குடியில் வைத்து மனோரஞ்சன் அவளிடம் கூறியது அவளுக்கு நினைவுக்கு வந்தது.’உன் கண்ணை இறுக மூடிக்கிட்டு உன் மேல யாரும் பாசம் வைக்கலைன்னு நினைச்சுக்கிற. ஆனால் அது உண்மை கிடையாது.கண்ணை திறந்து பாரு மதி….’ அப்படியென்றால் அவன் கூற வந்தது என்ன? மனோரஞ்சனும் அவள் மேல் பாசம் வைத்திருப்பதாகவும், அதை தான் புரியாமல் இருப்பதாகவும் கூறுகிறானா?!’ காரைக்குடியில் அவள் பயந்து […]