“அதுக்கு…”, என்று சொல்லி கொண்டே அவன் மேலே கையை வைத்தாள் பஞ்சு “இவ என்ன செய்றா?”, என்று நினைத்து கொண்டு அமைதியாக நின்றான். அவனுடைய உடையை கழட்டி கொண்டிருந்தாள் பஞ்சு. “ஏய் பிராடு, என்ன டி பண்ற?”, என்று சிரித்து கொண்டே கேட்டான் ஆதி. “ஹ்ம்ம் உங்களுக்கு சோப்பு போட போறேன் மாமா”, என்று சிரித்தாள் பஞ்சு. “உன்னை குளிக்க வைக்க வந்தா நீ என்னை குளிக்க வைக்கிறியா? அப்புறமா […]
அத்தியாயம் 11 “நான் உனக்கு கொஞ்சம் கொஞ்சம் இங்கிலீஸ் சொல்லி தரேன் பஞ்சு. நிறைய கத்து கிட்டு நீ என்ன பரிட்சையா எழுத போற? அடிக்கடி பேசுற வார்த்தைகளை சொல்லி தரேன், அதை மட்டும் கத்துக்கோ. அப்புறம் உன் பிள்ளை படிக்கும் போது, கூட சேர்ந்து படிச்சிக்கோ. இப்போதைக்கு அவனை எப்படி கொடுமை படுத்தன்னு யோசி என்ன?”, என்று சொல்லி கொண்டே பஞ்சுவை அழைத்து கொண்டு வெளியே வந்தாள் சகுந்தலா. அங்கே சகுந்தலாவை, முறைத்து […]
அத்தியாயம் 10 “எப்பா என்னை விட வேகமா அடிக்கிறா? இந்த பிரச்சனையை கடைசி தடவை பேசி முடிக்கணும். இல்லைன்னா அந்த அர்ச்சனா மாதிரி வேற யாரவது பிரச்சனையை கிளப்புவாங்க”, என்று நினைத்து கொண்டு “எதுக்கு இப்ப அடிச்ச? நான் கேட்டதுல என்ன தப்பு?”, என்று கேட்டான். “என்ன தப்பா? லூசு தனமா பேசிட்டு இருக்கீங்க. நான் எப்படி அப்படி ஒரு சூழ்நிலைல உங்களை விட்டு போவேன். அசிங்கமா பேசாதீங்க மாமா. எனக்கு நீங்க தான் […]
“எனக்கு ஒரு ஐடியா வந்துருக்கு. நீ பேசாம வயிறு வலிக்குதுன்னு பொய் சொல்லி, உன் ரூம்ல படுத்துக்கோ பஞ்சு. எப்படியும் நீ அப்படி படுத்திருந்தா, அவன் வந்து உன்னை விசாரிப்பான். அப்புறம் உங்கிட்ட பேசிருவான் சரியா?”, என்று சொன்னாள் சகுந்தலா. “சூப்பர் ஐடியா அத்தை அவங்க வரட்டும்”, என்று சிரித்தாள் பஞ்சு. அன்று முழுவதும் ஊரை சுற்றி விட்டு இரவு தான் வந்து சேர்ந்தார்கள் இருவரும். சகுந்தலா தான் கதவை திறந்தாள். “சாப்ட்டியாம்மா”, […]
அத்தியாயம் 9 ஆனந்தமாக திரும்பினாள் பஞ்சு. “ஹா ஹா, தமிழ்னா தமிழ் தான். அப்ப உன்னோட புருசனுக்கு தமிழ் தெரியுமா? நீ பேசினதை எல்லாம் கேட்டுட்டார் போல? பாத்தீங்களா சார், உங்க பொண்டாட்டியோட லட்சணத்தை. உங்களுக்கு என்ன மொழி பேச தெரியும்னு கூட தெரியலை. இவ எங்க குடும்பத்தை பிரிக்க வந்துட்டா. எங்க ஊர்ல பொம்பளைங்க இப்படி எதாவது தப்பு செஞ்சா, அவங்களை கட்டிருக்குற புருஷன் இடுப்புல கட்டிருக்க பெல்ட் வச்சு அடி பின்னிருவாங்க. நீங்களும் கொஞ்சம் […]
அது சாப்பிட நன்றாக தான் இருந்தது. ஆசையாக தன் முகத்தை பார்த்து கொண்டிருக்கும் பஞ்சுவை பார்த்தவன் இன்னும் மூன்றை எடுத்து சாப்பிட்டான். “நல்லா தான் இருக்கு வர்ணா”, என்று சொல்லவும் செய்தான். “அப்ப சரி மாமா இருங்க, மிச்சத்தையும் கொண்டு வரேன். காலி பண்ணிரனும்”, என்று எழுந்தாள். “ஐயையோ இதுவே போதும்”, என்று சொல்லி விட்டு அறைக்குள் ஓடி விட்டான். அவன் பின்னாடியே, அதை எடுத்து வந்தவள் அவன் வாயில் வைத்தாள். “போதும் டி” “வீணா போயிரும் […]
அத்தியாயம் 8 அப்போது தான் கவனித்தான், அங்கே பல பாத்திரங்கள் வாரி இறைக்க பட்டிருந்தது. “ஐயோ என்ன ஆச்சு? வீட்டுக்கு திருடன் வந்துட்டானோ?”, என்று இன்னும் வேகமாக எட்டு வைத்தான். சமையல் அறையில் இருந்து பெரிய சத்தமாக வந்தது. அங்கே போய் பார்த்து திகைத்தான். எல்லா பொருளும் கீழே கிடந்தது. அதை விட கொடுமை சகுந்தலாவும், பஞ்சுவும் சண்டை போட்டு கொண்டிருந்தார்கள். ஒரு நிமிஷம் ஆதிக்கு தன் கண்களையே நம்ப முடிய […]
வெளியே அர்ச்சனா நின்றிருந்தாள். அவளை பார்த்த பஞ்சு உடனடியாக ஓடி வந்து சகுந்தலாவிடம் “இன்னைக்கு கொஞ்சம் நேரம் போகும் அத்தை. நடக்குறது மட்டும் வேடிக்கை பாருங்க”, என்று சொல்லி விட்டு கதவை திறந்தாள். சகுந்தலாவும் ஆர்வமாக, வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். கதவை திறந்த பஞ்சு, “உள்ள வாங்க”, என்று வர வேற்றாள். “உன் வரவேற்பு ஒன்னும் தேவை இல்லை. நான் ஆதியை பாக்க வந்தேன்”, என்று சொல்லி உள்ளே வந்தாள். “அடடே […]
அத்தியாயம் 7 “ஏய் வர்ணா, எதுக்கு இப்ப அழுற? அந்த லூசு பத்தி எதுக்கு பேசுற?”, என்று கேட்டு கொண்டே அவள் கண்ணீரை துடைத்து விட்டான். “ஆமா, நான் படிக்கலை. நீங்க நிறைய படிச்சிருக்கீங்க. அவ சொன்ன மாதிரி நான் உங்களுக்கு தகுதியே இல்லை. என்னை எங்க வீட்லயே விட்டுட்டு போயிருங்க” “நீ முதலில் அழுறதை நிப்பாட்டு”, என்று சொல்லி கொண்டே அவளை எழுப்பி அமர வைத்தவன், அவளை தன்னுடைய தோளில் சாய்த்து […]
அத்தியாயம் 6 அவள் கையை பிடித்தவன், “இன்னைக்கு அதுக்கு தான ஆசையா வந்தேன்?”, என்று நினைத்து கொண்டு “எங்க அம்மா மேல சத்தியம், அம்மாக்கு அடுத்து என் மனசுல இருக்குறது நீ மட்டும் தான்”, என்றான். அவன் குரலில் என்ன உணர்ந்தாளோ, அமைதியாக இருந்தாள். “அப்பாடி சமாதானம் ஆகிட்டா”, என்று நினைத்து கொண்டே அவள் அருகில், தைரியத்தை வர வழைத்துக் கொண்டு நெருங்கி அமர்ந்தான். “ஏய் வர்ணா, இங்க பாரேன்”, என்று […]