“நானே ஓட ஓட விரட்டுவேன். நான் அவனை, மூணு வருசமா லவ் பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா? எத்தனை தடவை அவன் கிட்ட சொல்லிட்டேன் தெரியுமா? அவன் தான் எங்க அம்மா சொல்ற பொண்ணு தான் கல்யாணம் செஞ்சிப்பேனு சொல்லிட்டான்” “ஓஹோ, நீ தான் அந்த அர்ச்சனாவா?” “என்னை உனக்கு தெரியுமா? ஆதி உன்கிட்ட என்னை பத்தி சொல்லிருக்கானா? என்னை பத்தி உனக்கு எப்படி தெரியும்?”, என்று கண்களில் ஒரு வித மின்னலுடன் கேட்டாள் அர்ச்சனா. […]
அத்தியாயம் 5 “இன்னைக்கு போன உடனே அர்ச்சனா, என்னை பாக்க வந்தா டா. அவ உன்னோட பேப்பர் சப்மிட் பண்ண பாரின் போயிருந்தாள்ல. அந்த இடை பட்ட நாளில் நீ கல்யாணத்தை முடிச்சிட்டியாம். வந்த உடனே அவளுக்கு யாரோ சொல்லிருக்காங்க. என்கிட்ட வந்து ஒரே அழுகை. எனக்கு என்ன செய்யனே தெரியலை. அப்புறம் பாத்தா, கொஞ்ச நேரத்தில் டீன் என்னை கூப்பிட்டு விட்டாரு. ஏதும் பிரச்சனையோன்னு பயந்துட்டு தான் போனேன். ஆனா, உன்னோட கல்யாணத்துக்கு ஒரு […]
அத்தியாயம் 4 “ஆமா, உன் பேரு கிளியோ பாட்ரா பாரு. எவன் டி உனக்கு பஞ்சவர்ணம்னு பேர் வச்சான். எப்படி ஸ்டைலா கூப்பிட்டாலும், கேவலமா தான் இருக்கு. சரி உனக்கு ஒரு பேர் வைப்போம்”, என்று சொல்லி கொண்டே யோசித்தவன், “இனி உன்னை வர்ணானு, கூப்பிடுறேன் சரியா?”, என்றான். “சரி மாமா”, என்று சொல்லி கொண்டே அவனுடன் நடந்தாள். பைக் எடுத்து கொண்டு வந்தவன், “உக்காரு”, என்று சொல்லி விட்டு வண்டியை கிளப்பினான். […]
“வா உனக்கு பவுடர், அப்புறம் ஷாம்பு எல்லாம் வாங்குவோம்” என்று அழைத்து சென்றான். “எனக்கு கண் மையும் வாங்கி தரனும் மாமா”, என்று சொல்லி கொண்டே அவனுடன் சென்றாள். ரோட் கிராஸ் பண்ணும் போது, அவள் கையை பற்றி அழைத்து போனான். அந்த தருணத்தை சந்தோசமாக அனுபவித்தாள் பஞ்சு. அவள் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தவன், “தேவையானது வாங்கிட்டியா? வேற ஏதும் வேணுமா?”, என்று கேட்டுகொண்டே திரும்பினான். அவள் கொஞ்சம் தள்ளி, அவனை […]
அத்தியாயம் 3 அழகு பதுமை என அழைத்து வர பட்டாள் பஞ்ச வர்ணம். ஒரு நிமிடம் ஆதியே விழி விரித்தான். “அப்பாடி பவுடரை முகத்தில் வெள்ளை அடிச்சு வைக்காம வந்திருக்கா”, என்று நினைத்து கொண்டே அவளை பார்த்தான். அவன் அருகில் அமர்ந்தவள், “பாருங்க மச்சான் பவுடரை கம்மியா போட்டு வச்சிட்டாங்க. நீங்க வெள்ளையா இருக்கீங்க. நான் கருப்பா இருக்கேனா?”, என்று கேட்டாள். அவள் தைரியத்தை வியந்த ஆதி, “அப்படி மட்டும் அள்ளி தட்டிட்டு […]
“அவங்களோடதுல இருந்து கீ கீ னு சத்தம் வருது. என்னனு காட்ட சொன்னா, காட்டலை. அதனால தான்”, என்று ஆங்கிலத்தில் சொன்னார் அவர். அவளிடம் திரும்பியவன் “என்ன டி உள்ள வச்சிருக்க? அதை காட்டு அப்ப தான் விடுவாங்க”, என்று கேட்டான். “லூசா மச்சான் நீங்க? நம்ம பையை அவன் எதுக்கு பாக்கணும்? அதெல்லாம் முடியாது. நான் காட்ட மாட்டேன்”, என்றாள் அவள். “லூசு மானத்தை வாங்காத. குடு அதை”, என்றவன் பையை […]
“ஹா ஹா, அப்ப தாத்தா தான் உன் மாமனாரா? சரி எதுக்கு இப்படி நாலு பொண்ணு? ஒரு வேளை பையன் வேணும்னு ஆசைல இப்படி விபரீதம் நடந்துருக்குமோ?”, என்று கேட்டான் சீனி. “முக்கியமான ஆராய்ச்சி. உள்ள பாட்டி மாதிரி இருக்குறவங்க தான் டா அத்தையா இருப்பாங்க. அவங்க கிட்டயாவது பேச முடியுதான்னு பாப்போம். வாயை மூடிட்டு உள்ளே வா டா”, என்றான் ஆதி. உள்ளே போனவன், பாட்டி போல ஆளை தேடினான். “அப்படி யாரும் […]
அத்தியாயம் 2 “என்ன ஆச்சு பஞ்சு? எதுக்கு இப்படி கத்துற?”, என்று கேட்டாள் பூங்கோதை. “இங்க பாரு டி பூவு, நாட்டில் என்ன நடக்குன்னு?” தலையணைக்கு உறை போட்டு கொண்டிருந்த பூங்கோதை “என்ன நடக்கு? நீயே சொல்லு”, என்றாள். “நம்ம முதலமைச்சர் அம்மாவை, உடம்பு சரி இல்லைன்னு ஹாஸ்பிட்டலில் வச்சிருக்காங்களாம் டி. நாளைக்கு அவங்க பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணனும் டி பூவு” “லூசு பஞ்சு, அது போன வருஷத்து […]
அவன் தோளில் கை போட்ட ஆதி, “டேய் சீனி, நீ அம்மாவை ஏய் ராட்சசின்னு வேணா கூப்பிடு. சந்தோசமா உன்கிட்ட சிரிச்சு பேசுவா. ஆனா, நீ அம்மா அம்மான்னு பாசத்தை பொழிஞ்ச, உன்னை அடி பிச்சிருவா. நீ வா நித்யா பாத்துக்குவா. அப்புறம், கவலை படாதே! நமக்கு கல்யாணம் ஆகி நம்ம பிள்ளைங்களை எல்லாம் பாக்குற வரைக்கும், அம்மாக்கு ஒன்னும் ஆகாது”, என்றான். “போடா ஆதி, நான் வாங்க போங்கன்னு தான் சொல்லுவேன்” “சரி […]
புதிதாய் மலர்ந்த காதல் அத்தியாயம் 1 நைட் ஷிப்ட் முடிந்து காலையில் எட்டு மணிக்கு, வீட்டுக்கு வந்தான் ஆதித்யா. டெல்லியில் உள்ள மருத்துவ மனையில் டாக்டர் பதவியில் இருப்பவன் மற்றும் கேன்சர் ஸ்பெசலிஸ்ட். அங்கேயே அதற்கான ரிசர்ச்சும் செய்து கொண்டிருக்கிறான். தன்னுடைய வீட்டு அழைப்பு மணியை அழுத்தி விட்டுக் காத்திருந்தான். கதவை திறக்க தான் ஒரு ஆளையும் காண வில்லை. “என்ன ஆச்சு இந்த அம்மாக்கு? எப்பவும் நான் எப்ப வருவேன்னு காத்துட்டு […]