தாத்தா அருகில் சென்று அவரை ஒரு இருக்கையில் அமர வைத்தவன், அவர் நடக்கும் காரணம் புரிந்து , “தாத்தா சென்னைலையே பெஸ்ட் கேட்டரிங் சர்வீஸ் கிட்ட அப்பா இந்தப் பொறுப்ப ஒப்படைச்சிருக்காங்க நீங்க ஓரமா இருந்து ரெஸ்ட் எடுங்க , நடந்துட்டே இருந்தா கால் வலிக்கும்…” என்றவனிடம் , “பேரா … இது சென்னைக் கிடையாதே , பத்து இருபது வகை சாப்பாட இலையில முதல்லயே போட்டு வச்சுட்டு போய் உக்காந்து சாப்பிடுறதுக்கு […]
தேன் துளி 31 நான்கு வருடங்களுக்கு முன்பு … கோவிலில் இருந்து வருவும் அவள் சகோதர சகோதரிகளும் கிளம்ப இருக்க , லதா மற்றும் அவரது உறவுப்பெண்கள் சிலருடன் விக்ரமும் கையில் ஒரு குழந்தையை வைத்து விளையாட்டுக் காட்டிக் கொண்டு அங்கு வந்துக் கொண்டிருந்தான். லதாவின் அக்கா மகள் சுபாவின் குழந்தையைத் தான் கையில் வைத்திருந்தான். வித்யா அன்று வராததால் ஏமாற்றமடைந்திருந்த அரவிந்தும் தங்கைகளை அழைத்துச் செல்ல அங்கு வந்தவன் ,விக்ரம் குடும்பத்தாரைக் கண்டதும் […]
தங்கையின் கூற்றும் சரியாகப் படவே , அவனது அப்பா அம்மாவுடன் இன்னும் சிலரும் சென்னைக்கு கிளம்புவும் , பாட்டித் தாத்தா , சித்தி சித்தப்பாவுடன் இன்னும் இரண்டு நாளில் கிளம்ப முடிவெடுத்து சீமந்த விழாவை சிறப்பாக செய்த சந்தோஷத்தில் உறவினர்களை வழியனுப்பி வைத்து , இரவு கவிழும் நேரம் வீட்டு முன் இருந்த தோட்டத்தில் தாத்தாவுடன் அமர்ந்திருந்த பாட்டியிடம் வந்த விக்ரம் , அவர் அமர்ந்திருந்த சாய்வு நாற்காலியின் அருகில் அமர்ந்துக் கொண்டு […]
தேன்துளி 30 தூத்துக்குடி சறைமுகத்திலிருந்து சரக்கு ஏற்றிக் கொண்டு சென்ற மிகப் பெரிய சரக்கு லாரி பாரம் தாங்காமல் கவிழ்ந்திருந்ததே அதற்கு காரணம். வேறு பாதையில் செல்வதென்றால் அது மேலும் பல மணி நேரம் எடுக்கும் என்பதால் வரிசையாக நின்ற வாகனங்களுக்கு பின்னால் நின்று விட்டான். திருப்பவும் இயலவில்லை , அது தேசிய நெடுஞ்சாலை என்பதால் இவர்களது வாகனத்திற்கு பின்னும் வாகனங்கள் . திலீபனுக்கு ஃபோன் செய்து வீட்டினரிடம் விவரம் தெரிவிக்கச் சொன்னவன் காரில் […]
வருவிற்கு பத்து நாட்கள் முன்பு வித்யாவிற்கு பிரசவத் தேதி தந்திருக்க வித்யாவிற்கு முதலில் சீமந்தம் செய்ய முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தனர். வித்யா வளைகாப்பிற்கு விக்ரமால் வர இயலாது என்பதால் பத்து நாட்கள் கழித்து வருவிற்கு செய்ய முடிவெடுத்து விக்ரம் வீட்டினர் அனைவரும் திருநெல்வேலிக்கு கிளம்பினர். லதாவிடம் பேசியவன் , ” ம்மா இந்த டைம் இவ்வளவு அலைச்சல் எதுக்கு மா…. எப்படியும் விதுவ பார்க்க கூடாது சொல்லிட்டீங்க … […]
தேன் துளி 29 ஐந்து மாத வயிற்றை மட்டும் வீடியோவில் கணவனிடம் காண்பித்து விட்டு , வீடியோவை ஆஃப் செய்த வரு , மொபைலைக் காதில் வைத்துப் பேசிக் கொண்டிருந்தாள். “ரிது ப்ளீஸ் முகம் காட்டு … உன் வாய்ஸ் கேட்க ஆசைதான். ஆனா முகம் பார்த்துட்டேப் பேசினா ரொம்ப திருப்தி டா ….” “ம்ஹூம் …. நீங்க இங்க வர்ற வரை .… நம்ம ஜுனியர்ஸ்தான் வீடியோல பேசுவாங்க… ” […]
அதற்குள் தயாராகி கீழே வந்த விக்ரம் , வரு கிளம்பாமல் சோஃபாவில் படுத்திருப்பதைப் பார்த்து பதட்டமாக அருகில் வந்தான். சங்கரி தான் , “பேரா… உன் தங்கச்சிய நீ மட்டும் போய் பார்த்துட்டு , வரும் போது உங்கம்மாவையும் கையோட அழைச்சிட்டு வா … இல்ல மகளுக்கு இன்னும் சாப்பாடு ஆக்கிப் போட ஆசையிருந்தா அங்கேயே இருக்கச் சொல்லு …. நான் என் பேத்தியப் பார்த்துக்குவேன் . வரு அருகில் அமர்ந்துக் கொண்டவன் […]
தேன் துளி 28 நாட்கள் இவ்வளவு அழகாக இருக்குமா என்பது போல் தான் விக்ரமிற்கும் வருவிற்கும் காதல் வாழ்க்கை சென்றது. அரவிந்த் கோவை சென்று விட இன்னும் பத்து நாட்களில் அனுவின் படிப்பும் முடிவடைய இருந்தது. விக்ரமிற்கு இளமனைவியுடன் கொஞ்சல்களோடு இனிதாக ஆரம்பிக்கும் நாளின் துவக்கம்…. குடும்பத்தாரோடு பேசி மகிழ்ந்து , எப்போதடா வீட்டிற்கு செல்வோம் என்ற நினைவில் தொழிலையும் திறம்படக் கவனித்து , ‘ரிது.. ப்ளீஸ்’ என்ற கெஞ்சல்களோடு அவனும் , ‘விக்கி […]
அது போலவே ஊட்டிக்குச் சென்றதும் தகவல் தெரிவித்து ஃபோனை அணைத்ததோடு , மனைவியையும் அணைத்தவன் தான் … இரவா பகலா என்றுத் தெரியாத அளவிற்கு அந்த இளம் தம்பதியர் தங்கள் பொழுதுகளை கழித்தனர். விக்ரம் சொன்னது போல் கொண்டு வந்த ஆடைகள் கூட எடுக்கப்படவில்லை …. அவர்கள் தங்கியிருந்தது விக்ரம் வீட்டினர் வந்தால் தங்குவதற்காக வாங்கப்பட்ட ஆங்கிலேயர் கால கட்டிடம். காலத்திற்கேற்ப சரி செய்து வைத்திருந்தார்கள். வீட்டைப் பராமரிப்பவர்களும் செக்யூரிட்டிகளும் மட்டுமே இருந்தனர். அவர்கள் […]
தேன் துளி 27 தனது அறையில் ஆளுயரத்திற்கு இருந்த மனைவியின் புகைப்படம் முன்பு கைகட்டி நின்று கொண்ட விஸ்வனாதன், “ஷர்மி …. உன் பொண்ணு சொன்னத கேட்டியா…. இதுக்கு மேல ஒரு பெண்ணப் பெத்த தகப்பனுக்கு என்ன சந்தோஷம் இருக்க முடியும் .நீ போன உடனேயே நானும் வந்துருவேன்னு பயந்து தான … அவள அப்படி ஒரு நிலையில விட்டுட்டுப் போன …. எப்படியோ போராடி நம்ம இளவரசிய மீட்டு இப்ப ஒரு […]