Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thenmazhai Thoovuthadi

Thenmazhai thoovuthadi 26 2

  மறுநாள் வித்யாவை அழைத்துக் கொண்டு அரவிந்த் மருத்துவமனை கிளம்பும் நேரம் , விக்ரம் மனைவியுடன் ஹாலுக்கு வந்தவன் , ” சித்தப்பா ஒரு வாரம் கோயம்புத்தூர் பிராஞ்ச்ல இருந்து ஒர்க் பண்ணலாம் இருக்கேன் …நைட் கிளம்பலாம்னு பிளான் … “வருவுக்கும் இது புதுச் செய்தியே.. மகிழ்ச்சியுடன் கணவனைப் பார்க்க , அரவிந்த் விக்ரமுக்கு கைக் கொடுத்து ,   “மாப்ள … அப்பாவும் நானும் யோசிச்சிட்டு இருந்தோம் … இப்போ ரொம்ப ஹாப்பி … ஆனா […]


Thenmazhai thoovuthadi 26 1

  “தேன் துளி 26   தாய், தந்தை ,தங்கை என வெகு நாட்களுக்குப் பிறகு ஒன்றாக அமர்ந்து பேசிச் சிரித்த மகிழ்ச்சி மனதை உற்சாகப்படுத்த , அது முகத்திலும் பிரதிபலிக்க தங்கையுடன் பேசிக் கொண்டே மாடியேறியவன் தன்னறைக்குச் செல்ல , இருளில் பிரெஞ்ச் விண்டோ எனச் சொல்லப்படும் அந்த ஆளுயர ஜன்னலின் முன் இருந்த இருக்கை போன்ற திண்டில் அமர்ந்து தலையை ஜன்னல் கம்பியில் தலை சாய்த்து அமர்ந்திருந்தவளைப் பார்த்தவனுக்கு மனம் என்னவோ போல் ஆகிவிட்டது. […]


Thenmazhai Thoovuthadi 25 2

  அமிர்தாவிற்கு  என்ன ஃபங்ஷன்… என்ன என்னால … ஒன்றும் புரியவில்லை , அவளிடம் என்ன என்றுக் கேட்பது நாகரீகமாகாது என்பதால் கேட்டுக்கொள்ளவில்லை.    அவர்கள் செல்லவும் தான், வீட்டு வேலையாளை விட்டு, காரிலிருந்து விக்ரமின் பொருட்களை அவனறைக்கு எடுத்துச் செல்ல சொல்ல , அதைப் பார்த்தவள் மனதினுள் ,   ” திரும்பவும் வெளியூர் போறாங்களா … இவ்வளவு லக்கேஜ் எடுத்துட்டு வந்துருக்காங்க… ” . அதற்குள் விக்ரம் , அமிர்தாவிடம் ,   “ஒரு […]


Thenmazhai Thoovuthadi 25 1

தேன் துளி 25                     சென்னை வந்து ஒரு மாதமாக இன்னும் இரண்டு மூன்று நாட்களே …. அன்று மாலை ஸ்பீச் தெரஃபி முடித்து வருவும் வித்யாவும் வீட்டுக்கு வர , வீட்டு வாசலில் அரவிந்த் மட்டுமே உபயோகிக்கும் காரைக் கண்டதும் வரு, வேகமாக இறங்கி வீட்டினுள் ஓடினாள். வித்யாவிற்கு சொல்லவா வேண்டும் …வெளியேக் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் உள்ளம் துள்ள உள்ளேச் சென்றாள். காரிலேயே வந்திருக்கிறான் , தன்னிடம் ஒன்றுமே சொல்லாமல் கிளம்பி வந்தவன் […]


Thenmazhai Thoovuthadi 24 2

  மனைவியின் வருகையை உணர்ந்தவன் திரும்பி நின்று கைகட்டிக் கொண்டு அவளையேப் பார்த்தான்.அருகில் நெருங்கி நின்று தன் கையிரண்டையும் அவன் முன் நீட்டி ,   “அழகா இருக்கா , இதுல உங்கப்பேர் இருக்கு கண்டுபிடிங்க….” என்றவளிடம் ,   “உனக்கு மெகந்திப் போட்டுக்கிறது பிடிக்குமா…”   “ம்… டெல்லில இருக்கும் போது அண்ணா கிளாஸ்மேட் கல்யாணத்துக்கு போயிருக்கேன் …அங்க இது தனி பங்ஷன்தானே… அப்ப போட்டு விடுவாங்க , அதுவும் இப்படி ஹஸ்பன்ட் பேர் எழுதிக் […]


Thenmazhai Thoovuthadi 24 1

  மழைத்துளி 24   வரவேற்பறையில் அமர்ந்து லேப்டாப்பில் ஏதோ செய்துக்கொண்டிருந்த விக்ரம் , வாசலில் ஒரு கண்ணும் , லேப்டாப்பில் ஒரு கண்ணுமாக அமர்ந்திருந்தான்.   அவனது தாத்தா பாட்டி வெளியே சென்றிருக்க லதா மட்டும் வேலையாட்களோடு பொங்கல் சீர்வரிசைப் பொருட்களை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.   மணி பார்த்தவன் , ” ம்மா எங்கம்மா உங்க மருமக … இன்னும் காணோம் … ” என சலித்துக் கொண்டே கேட்க ,   ” […]


Thenmazhai Thoovuthadi 23 2

  ” உன்னையத் தெரியாதா விக்கி …..” மனதில் விக்ரமின் வார்த்தைகள் ரீங்காரமிட ,சுகமாக சாய்ந்திருந்தவளிடம் ,   “ரிது …. எல்லாரும் பக்கத்துல வந்தாச்சாம் … ”   அவள் எழவேயில்லை … எத்தனை வருட தவம் … தன்னை நொடியாவது நினைத்திருப்பானா … தன் ஞாபகம் இருக்குமா இருக்குமா என்று யோசித்திருந்தவளுக்கு விக்ரமின் இன்றைய விளக்கங்கள் அப்படியொரு ஆறுதலைத் தர, வெளியே கார் சத்தம் கேட்கும் வரை அவனை விட்டு விலகவில்லை. அவனும் விலக்கவில்லை […]


Thenmazhai Thoovuthadi 23 1

  மழைத்துளி 23 . அன்று மாலை காரில் வீட்டு முன் வந்து நின்றவர்களைக் கண்ட ராணி , வேகமாக உள்ளே சென்று ஆரத்திக் கரைத்து மகளையும் மருமகனையும் வரவேற்றார். கனிப் பாட்டியுடன் அறையிலிருந்த வித்யா அவரையும் அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வர , அருகருகே வீட்டில் இருந்த வருவின் தம்பி முறையுள்ள சிறுவர்கள் அக்காவையும் அத்தானையும் காண வந்து விட்டார்கள்.   “என்ன ரிது இது … முதல்லயே பிளான் போட்டிருந்தா பசங்களுக்கு எதுவாது வாங்கிட்டு […]


Thenmazhai Thoovuthadi 22 2

  வருவின் காதல் தன்னையே அவனுக்கு கொடுக்க வைக்க ,அவனது கொஞ்சல்களும் , கெஞ்சல்களும் மட்டுமே மொழியாகி….தை மாதக் குளிரையும் மீறி வியர்வையில் உடல்கள் குளித்திருக்க , அவளது நெற்றிக் கூந்தலை ஒதுக்கி நெற்றியில் இதழ் பதித்து தன் திருப்தியை அவளுக்கு உணர்த்தி இளைப்பாற, தன் நிறைவை அவன் மார்பில் தலை வைத்து உறங்க….   ஆம் … கடமைக் கலவியின் இறுதியில் இப்படி இருக்க முடியாது என்பதே உண்மை…. காதலினால் உண்டாகும் கூடலின் திருப்தியை ஒரு […]


Thenmazhai Thoovuthadi 22 1

  மழைத்துளி 22   அன்று மாலை தன் நண்பனான ஆற்றங்கரை பிள்ளையாரை லதாவுடன் சென்று தரிசித்து வந்த வரு , இரவு எப்போது வரும்  என்று மணிப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அழகிய சில்க்காட்டன் புடவையில் அப்போதுதான் கோவிலுக்கு போய் வந்த அடையாளமாக நெற்றி நிறைய குங்குமத்துடன் இருந்தவளிடம் சங்கரி பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.   காலையிலயே ஃபோன் செய்திருந்தான் ஆதி , இரவு பத்து மணிக்கெல்லாம் தூத்துக்குடி விமான நிலையம் வந்து விடுவேன். எப்படியும் […]