EPI-23 வீட்டினர் அனைவரும் மதுவை சுற்றி நிற்க அழுகையுடன் நிமிர்ந்தவளுக்கு என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரிய வில்லை .தனிமையில் பூதாகரமாக தெரிந்தது இப்போது ஒன்றும் இல்லா விஷயமாக தெரிந்தது. எல்லோரையும் பார்த்து பார்த்து மலங்க மலங்க விழித்தவளை காவேரி ‘என்னடா மது என்று ஆதுரமாக கேக்க” “ச்ச்ச சரியான லூசுடீ நீ இந்த அய்யனார் சொல்ற மாதிரி நீ இன்னும் சின்ன புள்ள தான் போல ,என்று சங்கடமாக சக்தியை நிமிர்ந்து பார்க்க , […]
ஜெய் ஸ்ரீ ராம் EPI-22 சுரேஷ் சொன்னதை கேட்டு உண்மையில் சதிஷ் வாயடைத்து தான் போய்விட்டான். இதுவரை சதிஷ் சொன்னதை சுரேஷ் மறுத்து பேசியது கிடையாது.அவனின் மேல் மதிப்பு என்பதை விட பயம். ஆம் பயம் தான் சுரேஷ் மட்டும் இல்லை சக்தியை தவிர அங்கு இருக்கும் அனைவர்க்கும் ஒரு வித பயம். அவனை பகைத்து கொள்வதும் பாம்பு புத்தில் கையை விடு வதும் ஒன்று. பணம், அரசியல் செல்வாக்கு என்று அனைத்தும் கொண்டவன் ஆயிற்றே! “சொல்லுங்க சதீஸ் நான் அவரை அடிக்கலைனு அவர் சொல்லிட்டார். இப்போ என்ன எப்டி வெளில அனுப்ப போறீங்க ,”என்று மேலும் சக்தி ஊக்குவிக்க, தன்னிலை அடைந்த சதிஷ் “சுரேஷ் என்ன சொல்ற சக்தி உன்னை அடிச்சதா தானே நீ கம்ப்லைன்ட் பண்ண இப்போ மாத்தி பேசுற, என்று குற்றம் சாட்டும் குரலில் கூறியவன், யாராவது உன்னை மிரட்டி பொய் சொல்ல சொன்னாங்களா பயப்படாம சொல்லு நான் பாத்துக்கிறேன்“. சுரேஷ் திருத்தி விட்டான் என்று சதீஸிற்கு தெரியவில்லை [the_ad id=”6605″] தினகரன் மாமா வீட்டிற்கு செல்லும் முன்னே சுரேஷின் மனைவி சக்தியை அழைத்து “அண்ணா உங்க கிட்ட பேசணும் எங்க இருபிங்கனு சொல்லுங்க ரெண்டு பெரும் வரோம் .” “இல்லமா நானே வரேன்“.என்றவன் கல்லூரி வரும் முன்பு அவர்களின் வீட்டிற்கு சென்று சந்தித்து விட்டு தான் வந்தான் . சுரேஷ் வீடு நுழையும் முன் சக்தி பதட்டதோடு தான் சென்றான்.அவன் சென்றதுமே “அண்ணா நீங்க தான் இவரை அடிச்சீங்கன்னு சொன்னாரு” அது வந்து என்று சக்தி யதோ சொல்ல வர, “நீங்க அடிச்சது தப்புனு நான் சொல்லலை அண்ணா, இதுவரைக்கும் இவர் பண்ண காரியம் எனக்கு தெரியாது, இவருக்கு நீங்க குடுத்த தன்டனை கம்மி தான் அண்ணா. காலேஜ்ல படிக்கும் போதே யன் மனசை மாத்தி படிப்பு முடியும் முன்னவே கல்யாணம் முடிச்சி, எங்க வீட்டையும் விட்டு கூட்டிட்டு வந்தாரு, வந்த பிறகு தான் தெரிஞ்சது ரொம்ப பணத்தாசை பிடிச்ச மனுஷன்னு, ஆனா இவ்ளோ கேவலமான வேலை செய்வாருன்னு நான் நினைக்கலை. அந்த பொண்ணுங்க பாவம் எங்களை சும்மா விடாது . இவர் இப்போ திருந்திட்டார் […]
ஜெய் ஸ்ரீ ராம் EPI-21 மது சொன்னதை கேட்டதும் சக்தி குழப்பத்துடன் அமர்ந்துவிட்டான். சட்டென மனத்தில் ஏதோ எண்ணம் தோன்ற திரும்பி கடிகாரத்தை பார்க்க;மணி பதினொன்று. மனதில் ஏமாற்றம் சூழ்ந்த போதும் தனது மொபைலை எடுத்து யாருக்கோ அழைப்பு விட்டுத்தான் . மறுபக்கம் அடுத்த நொடி அழைப்பு ஏற்கப்பட்ட தோடு “ஹப்பா ஒரு வழியா கூப்ட்டுட்டீங்க சார்.என்ன பண்றதுனு யோசிச்சிட்டே இருந்தேன்என்று அசுவாசப்பட்டார் பிரவீன். “ஏன்….. பிரவீன் நீங்க எங்க இருக்கீங்க “ “நீங்க எங்க சொன்னிங்களோ அங்கதான் சார். என் பொண்டாட்டிக்கு தெரிஞ்சா என்ன பின்னி எடுத்துருவா,” ரத்தினத்துடன்பேசி முடித்ததும். சக்தி பிரவீனை தொடர்பு கொண்டு நான் முக்கியமான விஷயமா வெளில இருக்கேன். கொஞ்சம் இவனுங்களை பாலோவ் பண்ண முடியுமா என்று கேட்டதோடு அந்த பாரின் முகவரியையும் அனுப்பி வைத்தா ன். அடுத்த பத்தாவது நீமிடத்தில் இருந்து இப்போது வரை பிரவீன் பாரில் தான் இருக்கிறான். அவர்கள் இருவரும் இப்போதைக்கு வெளியில் செல்வதை போல் தெரியவில்லை “ம்ம்ம்ம் சரி பிரவீன் ரொம்ப நல்லதா போச்சு. இன்னும் ஒரு ஹெல்ப் பன்னிட்டு நீங்க கிளம்புங்க. சதிஸ் போன்கு ஓர் நோட்டிபிகேஷன் வரும் அதுக்கு மட்டும் எஸ் குடுத்துட்டு நீங்க கிளம்புங்க ,” “ஐயோ என்ன சார் நீங்க யதோ சாக்லட் வாங்கி சாப்பிடுன்னு சொல்லுற மாதிரி ஈஸியா சொல்றிங்க ,அவன் ஒரு கருநாகம் அவன் கிட்ட போய் என்ன மாட்டிவிடுரிங்க, “ இதுவரைக்கும் அவன் கண்ணுல படமா இறுக்கவே நான் படாத பாடு படுட்டுஇருக்கேன். சக்தி “அப்டினா நான் வர வரைக்கும் அங்கேயே இருங்க நா வரதுக்கு ஒரு அரைமணி நேரம் அப்புறம் நீங்க உங்க வீட்டுக்கு போறதுக்கு ஒரு அரை மணி நேரம் ஆகும். அதுனால நான் இப்போ கால் பண்ணி உங்க வைப் கிட்ட நீங்க பார் ல இருகிங்க வர்ரதுக்கு லேட்டா ஆகும்னு சொல்லிர்றேன்” . [the_ad id=”6605″] “ஏன் சார் உங்களுக்கு நான் என்ன பாவம் பண்ணேன். என் பொண்டாட்டிக்கு இந்த சதிஷ் எவ்ளவோ பெட்டெர். நீங்க பத்திரமா வீட்லயே இருங்க என்றவர். அங்கு வேலை செய்யும் பையனுக்கு பணம் குடுத்து சதிஷ் மொபைலை எடுத்து வர சொல்லி சக்தி சொன்ன வேலையை செய்து விட்டு மொபைலை திரும்ப அந்த பையனிடம் அளித்து சதீஷிடம் சேர்த்துவிட சொன்னார் . பின் சக்தியிடம் சொல்லிவிட்டு இன்ணைக்கு வீட்ல என்ன மண்டகப்படி காத்துட்டு இருக்கோ ,ஆண்டவா என்ன காப்பாத்து என்று வேண்டியவாறு வீட்டை நோக்கி சென்றார் . பிரவீன் மெசேஜ் ஆக்சப்ட் பன்னதும் சதிஷ் லேப்டாப்பில் இருந்த அணைத்து விபரங்களும் கிடைத்து விட்டது […]
ஜெய் ஸ்ரீ ராம் EPI-20 கல்லூரியில் இருந்து திரும்பிய மதுவிற்கு மனதே சரி இல்லை. சக்தி சாதாரணமாக கூறும் வார்த்தைகள் எல்லாம் அவளை சாட்டையாய் சுழன்று அடித்தது. அவன் தெரிந்து சொல்கின்றனா இல்லை தெரியாமல் இவ்வாறு நடந்து கொள்கிறானோ தெரியவில்லை. ஆனால் அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இவள் மனதை காயப்படுத்து என்னவோ உண்மை . அவள் பிறந்ததில் இருந்து வீட்டில் மஹாராணியாய் வளையவருபவள். கஷ்டம் என்ற வார்த்தையின் அர்த்தம் கூட அவளுக்கு தெரிந்தது இல்லை. அவளிற்குஅனைத்தும் கொடுத்த இறைவன். ஏனோ!!!! கணவனை மட்டும் அவளை எப்போதும் காயப்படுத்த வென்றே அனுப்பி வைத்தார் போலும். இப்போதெல்லம் சக்தி ….கணவன் என்கிற கடமைக்காக தான் தன்னோடு வாழ்கிறானோ !!!என்ற சந்தேகம் அவளை ஆட்டிப்படைக்கிறது .அன்று ஏற்காட்டில் அவர்களின் முதல் கூடலின் போது உண்மையில் என் மேல் காதல் இருக்கிறதா, இல்லை மனைவியின் கடமையை ஆற்ற நினைகிறாயா , என்று சக்தி கேட்டபோது இவள்அவளின் காதலிசொன்னபோதும்.அவன் திரும்ப அவன் காதலை சொல்லவில்லை […]
அன்று மதிய உணவு இடைவேளையில் கங்கா மதுவிற்கு அழைக்க, கல்லூரியில் இருந்து இவள் வரும்பொழுது வீடிற்கு தேவையான பொருட்கள் ஏதாவது வாங்கி வரச் சொல்வது வழக்கமானது என்பதால் சாதாரணமாகவே அழைப்பை ஏற்றாள் . “மதுமா பிஸியாடா “என்ற கங்காவின் கேள்விக்கு,” லஞ்ச் ஹவர்தான் சொல்லுங்க அத்தை” “இல்லடா காவியா மேல ஒரு கண்ணு வச்சுக்கோ, ரத்தினம் அண்ணா வியாபார விஷயமா அடிக்கடி வெளியேவே இருக்காரு மனோவும் இங்கே இல்ல, புள்ள கொஞ்சம் நம்ம காவேரி அக்கா மாதிரி பயந்த சுபாவம் […]
ஜெய் ஸ்ரீ ராம் EPI -18 சக்தி வீட்டில் இருந்து கிளம்பி நேராக சுரேஷ் அட்மிட் செய்திருக்கும் மருத்துவ மனையில் நுழைந்தான். சுரேஷ் இன்னும் மயக்கதில் இருந்து விழிக்க வில்லை. அவன் அருகில் ஒரு இளம் பெண் வயது 21 குள்ள தான் இருக்கும் குழந்தையுடன்அமர்ந்து இருந்தாள். அவள் சக்தியை கேள்வியாய் நோக்க, ” கூட வேலை பாக்கறேன். இப்போ எப்டி இருக்காரு,கை குழந்தையோடு நீ மட்டும் இருக்க வீட்டு ஆளுங்க யாரும் கூட […]
ஜெய் ஸ்ரீ ராம் EPI -17 சக்திக்கு சுத்தி வளைத்து எல்லாம் பேச தெரியாது, “பிரவீன் சார் உங்களுக்கும் எனக்கும் எந்த ப்ராப்ளமும் இல்ல, பட் நீங்க என் கூட பேசுறது இல்லை. ஏன்னு தெரிஞ்சிக்கலாமா, ” இவன் கேள்வியில் சற்று தடுமாறியவர் “அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை. “என்று மழுப்ப, “எதுவா இருந்தாலும்சொல்லுங்க, என் மேல தப்பு ஏதாவது இருந்தா சரி பண்ணிக்கிறேன்.பீ பிராங்க் ப்ளீஸ். ” ” ஓகே சார் நீங்க ரொம்ப […]
ஜெய் ஸ்ரீ ராம் . EPI -16 மதுவும், டாலி பேபியும் கிட்சன் மேடையில் அமர்ந்து கொண்டு “எனக்கு பொடி தோசை, எனக்கு முட்டை தோசை “என்று காவேரியிடம் ஆர்டர் போட்டு கொண்டிருந்தனர். காவேரி சிரிப்போடு அவர்களுக்கு தலை ஆட்டி அவர்கள் கேட்டதை செய்து கொடுத்து கொண்டிருந்தார். வெளியில் சக்தியோ வன்டியில் அமர்ந்து கொண்டு “ஸ்ரீ இன்னைக்கு சீக்கிரம் போகணும்னு நைட் சொன்னேன் இல்லை வா……” என்று அழைத்து கொண்டிருந்தான். அதை அவள் காதில் கூட […]
ஜெய் ஸ்ரீ ராம் EPI -15 ஏற்காட்டில் இருந்து வந்த மறு நாளே அர்ஜுன்னும், தமிழினியும் சென்னை கிளம்பி விட்டனர். அவர்களுக்கு அடுத்த குழந்தை பிறக்கவும், சக்தி, மது குழந்தை பிறப்பதர்காகவும் குலதெய்வதிற்கு வேண்டுதல் வைத்து, விரதம் இருப்பதால் பரிமாளாவும், யாழினியும் இன்னும் ஒரு வாரம் சென்று கிளம்புவதாக இருந்தது. மனோவும் அவர்களோடு சென்று விட்டான். ஏனோ கங்காவிற்கு தான் மனம் கஷ்டமாக இருந்தது. அவரும் திருமணத்திர்க்கு எத்தனை முறையோ கேட்டு பார்த்து விட்டார். பிடிகொடுக்காமல் இருப்பவணை […]
ஜெய் ஸ்ரீ ராம் EPI -14 மது” சரி அப்போ எல்லாரும் போய்ட்டு வரலாம்”, என்று வீட்டினரை அழைக்க தோட்டத்தை காரணம் காட்டி, அதிக வேலை இருக்கிறது என்றுவிட்டனர். மது, மனோவை பார்க்க”, போகலாம் “என்று தலையசைத்தவன். கங்காவின் முறைப்பை கண்டு “நான் சென்னை போறேன் வேலை இருக்கு” என்று விட்டான். யாழி பேபி கூட சமத்தாக “நான் வரலை பாட்டி கூட இருக்கேன்” என்றது . சக்திக்கு தான் இதெல்லாம் மதுவோட எக்ஸாம் […]