Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Uncategorized

மழை – 12.1 (a)

கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்து சரத்தை  பார்க்கிறாள் இளந்தளிர். நேற்று இரவு உதயாதித்தனிடம் பேசிக் கொண்டிருந்தபோது கூட இன்று காலை அவன் இங்கு வந்து நிற்பான் என்று சுத்தமாக நினைக்கவில்லை. என்னதான் உதய் தைரியம் கொடுத்தாலும் அவளால் கண்முன் நடக்கும் நிகழ்வுகளை அத்தனை எளிதாக ஏற்க முடியவில்லை. “உதய் எனக்கு இங்க என்ன நடக்குதுன்னு எதுவும் புரியலை.. எப்படி இது திடீர்னு.. சரத் ஏன் இந்த மாதிரி செய்யறான்…?” என்று கலங்கிய குரலில் கேட்டவளுக்கு இப்போது தான் […]


மழை – 12.1 (b)

கஜபதியையும் அவர் மனைவியையும் மேடையில் நிற்க வைத்த சீதாலக்ஷ்மி சற்று தள்ளி நின்று மகளின் திருமண சடங்குகளை கண்குளிர பார்வையிட்டு கொண்டிருந்தார். சட்டென ஏற்பட்ட சலசலப்பில் ஒன்றும் புரியாமல் சீதாவும் மற்றவர்களை போல சரத்தை பார்த்திருந்தவர் அவன் பேசிய பேச்சில் முற்றிலுமாக நிலைகுலைந்து போனார். தளிரை போலவே அவன் வரவை சீதாவும் எதிர்பார்க்கவில்லை சொல்லப்போனால் அவருக்கு அவனை அடையாளமே தெரியவில்லை அனால் தன் கைக்கு வந்து சேர்ந்த புகைப்படத்தை கண்டவர் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. மேலும் […]


இடைவெளி 11. 2

‘அவனுக்கு ஏன் இந்தக்காதல் வந்தது. அதுவும் என்மீது. அவனைவிட பத்துமாதங்கள் மூத்த பெண்ணின்மீது எப்படி ஒருவனால் காதல் கொள்ள முடிந்தது. இது தவறல்லவா?. அதை எப்படி இந்த உலகம் ஏற்கும். அதிலும் நான் இன்னொருவருக்கு சொந்தமாகக்கூடியவள் என்று அறிந்தும் எதற்காக இப்படி ஒரு பைத்தியகாரத்தனத்தை வளர்த்துக்கொண்டான் தன்னுடைய திவா. அது என்னையும் சேர்த்து வாட்டுகிறதே. அவன் கோரிக்கையை ஏற்று அவன் வேதனையைக் குறையேன் என்று என்னையும் குத்திக்கூறுபோடுகிறதே. அவனைவிட ஒருநாளாவது பின்னே பிறந்திருக்கக்கூடாதா என்ற ஏக்கத்தையும் என்னுள் […]


இடைவெளி 11. 1

சிறுவயதிலிருந்து ஒன்றுக்குள் ஒன்றாய் வளர்ந்து இருந்தாலும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக உள்ளம் நிரம்பி வழியும் நேசமதை உரியவளிடம் சேர்ப்பிக்கும் பரவசநாளை எண்ணிக்கொண்டிருந்தவனை அலைபேசியில் வந்த நவீன் சம்யுக்தாவின் திருமணச்செய்தி அவன் உள்ளத்தையே ஆட்டம் காண வைத்திருக்க… அடுத்தநாளே அடித்துபிடித்து சென்னையிலிருந்து பூஞ்சோலை வந்து இறங்கியவனை யாரோபோல் பார்த்த தனது ஒற்றை பார்வையால் அவனை அந்நியனாக்கி நிறுத்தியிருந்தாள் அவனின் யுகி. அலைபேசியில் திருமணச் செய்தியை கேட்டபொழுதுகூட அவன் இத்துணை அதிர்ச்சி அடைந்திருக்கவில்லை. அதைவிட அவனுக்கு பெரிதான ஏமாற்றத்தையும் கலக்கத்தையும் […]


கவிதை – டீசர்

“ம்மா நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே..?” என்று தயக்கத்தோடு சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருந்த அன்னையிடம் கேட்டாள். “சொல்லு” என்றவர் கவனம் பொங்கிய பாலின் மீதிருக்க, “அது வந்தும்மா.. இப்போ.. ப்ச்.. இன்னைக்கு நான் உன்கூட படுத்துகட்டும்மா” என்று முடிக்கும் முன்னமே, “என்ன அறிவுகெட்டதனமான பேச்சு இது..? இன்னொரு முறை இப்படி பேசின என்ன நடக்கும்னே தெரியாது” என்று சீறியவர் பாலை பக்குவமாக ஆற்றி, “இந்தா பிடி மாப்பிள்ளைக்கு கொண்டு போய் கொடுத்துட்டு அங்கேயே […]


பரிபாஷை-20

அன்றைய நாளின் விடியல் அத்தனை உற்சாகமாய் இருந்தது இருவருக்கும்.ஷியாமாவின் வேலையை கருத்தில் கொண்டு அன்றைய இரவே பிஸினஸ் வட்டாரத்திற்கான விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தான் மகிழன். வெகு நாட்களுக்குப் பின்னான அயர்ந்த உறக்கம்.கண் விழித்த போதே பக்கத்தில் ஷியாமாவைத் தேட அவளோ பால்கனியில் நின்று வானத்தை வெறித்திருந்தாள். “மிர்ச்சி..” “இங்கே இருக்கேன்..”,என்றவள் உள்ளே வர சுடிதாரில் அவளைப் பார்ப்பதே அத்தனை பிடித்தமாகியிருந்தது மகிழனிற்கு. சாதாரண காட்டன் சுடிதாரில் கை நிறைத்த சிவப்பு வளையல்களோடு நெற்றியில் சிறு பொட்டும் ஈரம் […]


இடைவெளி 10. 2

அன்று திங்கள்கிழமை காலை வழக்கமாய் ப்ரித்திவிடம் இருந்து வரும் காலைநேர குறுஞ்செய்தி இன்னும் வந்திருக்காது இருக்க, கைபேசியும் கையுமாக குட்டிபோட்ட பூனையாய் உலவிக்கொண்டிருந்தாள் சம்யுக்தா. அப்பொழுதுதான் கையில் ஒரு தூக்குவாளியோடு உள்ளே நுழைந்த நவீனோ, “யுக்தா இந்தா பால்பாயசம். சாப்பிடு” என்று அதை அவளிடம் நீட்ட… அதை எல்லாம் சிறிதும் கவனியாதவளோ, “மாமா…” என்று பதட்டமாய் அவனை நெருங்கி, “காலைல எந்திரிச்ச உடனே திவா எனக்கு மெசேஜ் பண்ணிடுவான் மாமா. ஆனா இன்னிக்கு இவ்ளோ நேரம் ஆகியும் […]


இடைவெளி 10. 1

“அஞ்சலி ஏந்ரு அஞ்சலி. அஞ்சலி ஏந்ரு அஞ்சலி” என்ற அஞ்சலி திரைப்பட வசனம் போல்… “குட்மார்னிங்டா எரும. எஞ்சிட்டியா? குட்மார்னிங்டா எரும. எஞ்சிட்டியா?” என்ற பெண்ணவளின் தேன் குரல் மீண்டும் மீண்டும் அலைபேசியின் அலாரமாய் ஒலித்துக்கொண்டிருக்க, அதன் முதல் சப்தத்திலே விழித்துவிட்ட ஆடவனோ அந்த அலாரத்தை நிறுத்தமட்டும் முயற்சிக்கவே இல்லை. அப்படி ஒரு எண்ணம் இருக்கிறது என்ற அறிகுறிகூட இல்லாது ஆண்கள்விடுதி அறையில் அசையாது விட்டத்தை வெறித்துப் படுத்திருந்தவனின் எண்ணம் மட்டுமல்ல அவன் ஊனிலிருந்து உள்ளம்வரை, நாடிநரம்பு […]


Bangalore Days 1

Episode 1 Whenever my heart jumps in ecstasy, the reason is your friendship. Whenever my soul melts in sweetness, the reason is your love. It was a warm sunny day with a slight cool breeze in the beautiful Bengaluru city. June 2013. The shiny glittering forum mall was standing upright engrossing the crowd towards it. […]


பரிபாஷை-19

மாலை அறைக் கதவு தட்டப்படும் ஓசையில் ஷியாமா கதவைத் திறக்க மோனிஷா புதிதாய் ஒரு பெண்ணோடு நின்றிருந்தாள். “சொல்லு மோனி..” “அண்ணி எனக்காக ப்ளீஸ்..நோ சொல்லாதீங்க..”,என்று மெஹந்தியைக் காட்டி நிற்க இடவலமாய் தலையசைத்தவளாய் உள்ளே வருமாறு கையசைத்தாள். அடுத்த இரண்டு மணி நேரமும் ஷியாமாவின் பொறுமை மொத்தமாய் பறந்து விட்டிருந்தது. “உன்னை நம்பி கையை கொடுத்ததுக்கு..ஏன் மோனி இப்படி பண்ற..” “அண்ணி எவ்ளோ அழகா இருக்கு..நீங்க என்ன இப்படி சொல்றீங்க?” “எனக்கு முதுகெல்லாம் வலிக்குது.அதைவிட டியூட்டிக்கு போகும் […]