Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Uncategorized

அலரெழில் – 9

வான்மகளிடம்  கொண்ட ஊடலின் விளைவாக இடியுடன் கரம்கோர்த்த மின்னல் கீற்றுகள் ஒன்றோடொன்று உறவாடியவாறு பூமியை தழுவி தஞ்சம்புக அவர்களுக்கு சற்றும் குறையாத அக்ரோஷத்தோடு மழைநீரும்  போட்டி போட்டுகொண்டு அதிவேகமாக அவனியை சென்றடைந்த தருணமது..! அறையில் இருந்த ஜன்னல் வழியாக ஊடுருவும் கூதகாற்றினால் உடல் வெடவெடக்க மனதில் மூண்ட சஞ்சலம் நொடிக்கு நொடி விஸ்வரூபம் எடுத்ததில்  இதழ்கள் துடிக்க  அடைமழையை வெறித்து கொண்டு அமர்ந்திருந்தாள் அலர்விழி. கடந்த ஒருவாரமாக குற்ற உணர்ச்சியின் சிகரத்தில் சிக்கிக்கொண்டு தவித்தவள்  நாதனின் வீட்டில் […]


ககனம் சேர்வாயா பௌர்ணமியே -02

            அத்தியாயம் -02              பூரணி பத்திரிக்கையை பார்த்ததும் அதிர்ந்தவள், மனதில் தோன்றும் எண்ணங்களை தவிர்க்க இயலாதவளாய் தவித்து நின்றாள். அதற்குள் இனியனும், கவினும் வீட்டிற்கு வந்து விட்டனர்.   கவின் அவளது தோற்றத்தை கண்டு ,” என்ன சித்தி  ஏன் இப்படி நிக்கிறீங்க ?”என்று கேட்க , சட்டென வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு,”  எதுவும் இல்லப்பா  பாப்பா பெயரை பாத்துட்டு இருந்தேனா… பார்க்கவும் என்னை […]


உயிர் – 14

எழில் சென்றபின் சரண் கீர்த்தியை பார்க்க இப்போது அவள் பார்வையும்  ஆராய்ச்சியாய் தன் எதிரேயிருந்த சரணையே தழுவி இருந்தது…. “இவன் ஏன் எப்போதும் தன் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டவனாகவே இருக்கிறான்..!!  சரணை சந்தித்த நாளில் இருந்தே அவன் மீதான தன் கணிப்புகள் தவறாகவே முடிகிறதே” என்று அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை.  விழிகளை தழைத்து தன்நெஞ்சில் புதிதாக உறவாடிய கயிறை ஆராயந்தவளுக்கு, பொன் தாலியோ, மஞ்சள் கிழங்கோ கோர்க்கபடாத வெறும் மஞ்சள்கயிறு தூக்குகயிறாக மாறி அவளை மூச்சடைக்க செய்து […]


உயிர் – 13

எழில் வெளியேறவும் அவனை தொடர்ந்து நாதன் அலருடன் செல்ல அவர்களை பார்த்து கொண்டிருந்தாலும் எவரையும் தடுக்கும் திறன் அற்றுபோயிருந்தனர் மீதம் இருந்த நால்வரும். நான்கு பேரின் மனமும் நான்கு துருவங்களாக வெவ்வேறு எண்ணங்களால் ஆட்கொள்ளப்பட்டு  இருந்தது. கீர்த்தி முன்பு வந்தமர்ந்த சரண் தாலி கட்டியபோது அவள் கொண்ட அதிர்வை கண்டுகொண்டாலும் அதையும் மீறி அவள் விழியில் உறைந்திருந்த உணர்வை கண்டறிய முயன்று தோற்றுபோனான். இது தான்..  இந்த பார்வையை தான் அவன் சில மாதங்களுக்கு முன்பும் பலமுறை அவளிடம் […]


அலரெழில் – 8

தன் ஆசையை நிராகரித்து இன்றுவரை தொடரும் கணவனின் பாராமுகம் வெகுவாக பாதித்திருக்க அலுவலகத்தில் ஃபைலை புரட்டிகொண்டு அமர்ந்திருந்த அலர்விழியின் மனம்  மூன்றாவது முறையாக சரணின் வீட்டில் இருந்து நாதனுடன் கிளம்பிசென்ற  நாளை அசைபோட்டது. ஒரு வாரத்திற்கு முன்….. என்னத்தான் தன்நிலையை  புரிந்துகொண்டு கனமான சூழலை நாதனிடம் வாதிட்டு மேலும் மோசமாக்காமல் தனக்கு சம்மதம் தெரிவிக்கும் விதமாய் எழில் கிளம்பி சென்றாலும், ஒருபுறம் அவளின் காதல்மனம்  தந்தையிடம் தன்னை விட்டுகொடுத்து சென்றதை எண்ணி கலங்கித்தான் போனது. அவனிடம் விட்டுகொடு […]


உயிர் – 12

தன் உயிரில் உறைந்திருப்பவளின் வயிற்றில் குழந்தையை உணர்ந்தவனின் கரத்தின் நடுக்கும் நொடிக்கு நொடி அதிகரிக்க கொண்ட அதீதஅதிர்ச்சியில் அவன் இதயத்துடிப்பு ஒருநொடி  நின்றுதான் போனது..!! அக்கணத்தின்  கனம் அவனை வெகுவாக இறுக்கிபிடித்து மூச்சடைக்க செய்திருக்க தன்னிலை இழந்திருந்தவனின்  உடல் முழுதும் பரவியிருந்த  நடுக்கமும் சேர்ந்து அவனை அழுத்த அந்நொடிகளை  கடக்கமுடியாமல் தொண்டைக்குழி அடைக்க திண்டாடிபோனான் சரண்.  ”ஹாஆஆஅ..” என்று மூச்சை இழுத்துவிட்டவனின் உயிர் அப்போதுதான் அவன் வசம் திரும்பியிருக்க முகம் முற்றுமாக வியர்வையில் குளித்திருந்தது. காண்பது கனவாக […]


உயிர் – 11

ஆர்பரிக்கும் சீற்றத்துடன் சரண் கீர்த்தியை நெருங்குவதற்குள் எழில் கொண்டிருந்த மொத்த அழுத்தத்தையும் சரண்  கன்னத்தில் இறக்கியிருந்தான். ‘ண்ணாஆஆ..’ “டேய் என்னடா  நடக்குது இங்க ?  பிரச்சனை உனக்கும் அந்த ஆளுக்கும் தானே எதுக்கு நடுவுல கீர்த்தியை கொண்டு வந்தீங்க.. நீ சரியானவனா  இருந்திருந்தா அந்த ஆள்கூட மோதியிருக்கணும் அதை விட்டுட்டு பெண்ணை வச்சு.. ப்ச் ஏன்டா ஏன் நீயும் மத்த ஆம்பளைங்க மாதிரி பெண்ணை முன்னிறுத்தி ஒருத்தனை அடிக்கனும்னு நினைக்கிற..” “ரொம்ப நம்புறேன்டா உன்னை ஆனா ஏன் என்கிட்ட […]


நின் வதனம் மதுரமடி -07

         அத்தியாயம் -07 உறங்கிப் போனவள் மெல்ல திரும்பி படுக்க ரசனையாய் பார்த்திருந்தான். ‘அந்தக் குட்டிப் பொண்ணு என் வாழ்க்கை முழுசும் வரப் போறான்னு தெரியவே இல்லை பாரு எனக்கு. ஏன் டி அன்னைக்கு அப்படி அழுத நீ ?’மெலிதாய் முனகிக் கொண்டான். கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து அவளை மீண்டும் பார்த்த போது கதறி கதறி அழுது கொண்டிருந்தாள். அவளை நெருங்கக் கூட முடியவில்லை அன்று. “யார் அந்தப் பொண்ணு ?,ஏன் […]


அதிரல் தாங்கும் பாதிரி – அத்தியாயம் 1

அதிரல் தாங்கும் பாதிரி அத்தியாயம் 1 “அழைக்கா விருந்தாளியாக தினமும் உன் அழைப்பு வந்து விடுகிறது. உனை அணைத்திட கைகள் பர பரத்தாலும் அடக்கி கொள்கிறேன் என் உணர்வுகளை மட்டுமல்ல! என் உள்ளத்தையும்!!!” வீரனவன் கைகளிலிருக்கும் வாளை விட இரு கண்களின் கரு விழிகளில் அத்தனை கூர்மை இழையோட, இரு விழிகள் நடுவே கூர் வாளின் பள பளப்பு மின்ன, வெண்ணிற தளிர் கரங்களில் இருந்த கரிக்கோல் இன்னும் அவன் விழிகளுக்கு கூர்மை தீட்டிக் கொண்டிருந்தது. காகிதத்தில் […]


உயிர் – 10

“ரெண்டு பேர் தப்பு பண்ணினாலும் பழி என்னைக்குமே பெண்ணுக்கு தானே மாமா !” என்று அலர் விரக்தியான குரலில்  கேட்க அதிர்வோடு நின்றிருந்த சரணின் இதயத்தை சொல்லென்னா துயரம் கவ்விக்கொள்ள பதிலின்றி உறைந்து போனான்.  ‘சொல்லுங்க மாமா..’ என்று அழுத்தமாய் பார்த்தவள், “நிஜமாவே எதனால கீர்த்தி உங்க கூட ரெண்டு வாரம் இருந்தா, ஏன் சித்தப்பா அப்படி விட்டுட்டு வந்தாருன்னு எனக்கு தெரியாது  ஆனா உங்களை நம்பி ஒரு பெண்ணை விட்டிருக்கும் போது இதுதான் நீங்க அவளை […]