Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vinmeengalin Sathiraattam

விண்மீன்களின் சதிராட்டம் – 20

அத்தியாயம் – 20 முழித்துக்கொண்டிருந்த அம்மாவையும் மகளையும் பார்க்க ஒரு புறம் எரிச்சசலாகவும், மறுபுறம் பாவமாகவும் இருந்தது மாலினிக்கு. பர்வதம் கண்ணில் நீர் பொங்க அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார். ஒர் பெருமூச்செடுத்து, “அத்தை, நீங்க ஏன் இப்படி இருக்கீங்கன்னு எனக்கு தெரியுது. உங்க அம்மா வீட்ல உங்களை விட்டுட்டாங்க. அதுல மாமவோட தங்கைங்க ஆட்டம் ஜாஸ்தியாச்சு. மாமா தன் குடும்பத்துக்கு கூட இல்லாம, அவங்களுக்கு செய்யறத பார்த்தும் உங்களால தடுக்க முடியலை. அந்த நிலை உங்க பொண்ணுக்கு வந்துட […]


விண்மீன்களின் சதிராட்டம் – 19

அத்தியாயம் – 19 வேதாவின் கவனிப்பும் அவள் அருகாமையும் சேர்ந்து, நீண்ட  நாள் கழித்து ஒரு ஆழ்ந்த தூக்கத்திலிருந்தான் விக்ரம். பட்டென்று முகத்தில் ஒரு அடி விழுந்தது. அடித்து பிடித்து எழுந்தான் விக்ரம். “ஆஆ …அம்மா… இழுக்குதே.”,  என்று வேதா முனகிக்கொண்டிருந்தாள். “என்னாச்சு வேதா ?”,படபடப்பாய் எழுந்து அமர்ந்தான். “கால்ல க்ராம்ப்ஸ்…பாதத்துல…அடியில…. பிடிச்சு விடு, எத்தன வாட்டி கூப்பிடறது ? அப்படி தூங்கற ?”, வலியிலும் சண்டை பிடித்தாள். அவசரமாய் அவள் காலை மடியில் வைத்து, பாதத்தை […]


விண்மீன்களின் சதிராட்டம் – 18

அத்தியாயம் – 18 மாலை வேதாவின் வளைகாப்பு அழகாய் நடந்துகொண்டிருந்தது. வேதாவும் சிந்துவும் ஒரே நிறத்தில் உடை அணிந்திருந்தனர். விக்ரமிற்குப் பிடித்த மயில்கழுத்து நீலம். ராக்கொடி, குஞ்சம் வைத்து பின்னி, பின்னலின் நடுவில் பொன்மணி சொருகியிருந்தார்கள் இருவரும். தலை நிறைய மல்லி. நெத்திச்சுட்டி, மிதமான மேக்கப். கண்களில் அடர்த்தியாய் மை, உதட்டில் வெறும் க்ளாஸ். குடை ஜிமிக்கி, அட்டிகை என்று நகை கூட ஒன்று போலவே. வேதா மாங்காய் மாலை போட்டிருக்க, சிந்து அவள் தாயின் காசு […]


விண்மீன்களின் சதிராட்டம் – 17

அத்தியாயம் – 17 இந்த ஒரு வாரமாய் சந்தோஷமாய் இருந்தாள் வேதா. மாலினி சொல்லியிருந்த சின்னச் சின்ன மாற்றங்களை செய்யவும், இப்போது படிப்பு இலகுவானது. முதல் வேலையாக, அவள் கருவுற்றிப்பதை அவள் ஆசிரியர்களிடமும், சக மாணவர்களிடமும் சாக்லேட் கொடுத்து சொல்லவைத்தாள். அதன் பின் ராஜ உபசாரம் வேதாவிற்கு. போன் மூலம் பாடம் நடத்துவதை வீடியோ எடுக்க எல்லா பிரொஃபசர்களுமே அனுமதித்தனர். கிளாசில் தூக்கம் தள்ளினாலும், பின் மாலை நேரத்தில் சிரத்தையாக பதிவு செய்ததை போட்டுக் கேட்டாள். சந்தேகங்களை […]


விண்மீன்களின் சதிராட்டம் – 16

அத்தியாயம் – 16 “குழந்தையை … என்ன பேசற விக்ரம் ?”, மாலினியால் கலைக்க என்று வார்த்தைக்குக் கூட சொல்ல முடியவில்லை. “ படிப்புக்காக குழந்தை வந்தப்பறம்  வேணாம்னுவியா ? என்ன முட்டாளா நீ ? ஒரு வருஷம் ப்ரேக் எடுத்துட்டு படிச்சிக்கலாம் விக்ரம், அதுக்காக நீ இவ்வளவு பெரிய முடிவு எடுப்பியா ?” “இல்ல அண்ணி. நான் யோசிச்சிதான் சொல்றேன். கல்யாணம் பண்ணிக்க நாந்தான் கேட்டேன். நான் அவ கூட இருந்திருக்கணும். இங்க வந்து உட்கார்ந்துகிட்டு, […]


விண்மீன்களின் சதிராட்டம் – 15

அத்தியாயம் – 15 ராஜேந்திரன் பெங்களூர் வந்து இரண்டு நாட்களாகியிருந்தது.. டைல்ஸ் டீலர்ஷிப் எடுக்கும் விஷயமாக வந்திருந்தான். இரவு, மஞ்சரிக்கு விடியோ கால் செய்தான், ஹோட்டல் மெத்தையில் படுத்தவாறே. “ஹே மஞ்சரி ! இண்ணைக்கு எப்படி போச்சு நாளு ?”, விரிந்த புன்னகையுடன் கேட்டான். “ம்ம்..எப்பவும் போலதான். எப்ப வரீங்க திரும்பி ? போன வேலை முடிஞ்சிதா ?”, வசதியாய் அவளும் படுக்கையில் சாய்ந்து தலையணையை மடிமீது வைத்துக்கொண்டு பேச ரெடியானாள். “முடிஞ்ச மாதிரிதான். ஆனாலும் நாளைக்கு […]


விண்மீன்களின் சதிராட்டம் – 14

அத்தியாயம் – 14 வேதா சொன்னதற்கு தப்பாமல் கோமதி அலப்பரையைக் கூட்டினார். பெரிய ஹாஸ்பிடல், பெரிய டாக்டர் யாரென்று கேட்டு, போகவேண்டும் என்றார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல்,  “அத்தை, உங்களுக்கு முதல் பேரக் குழந்தை. எங்க வீட்ல இது அஞ்சாவது குழந்தை. அதுல மூணு குழந்தைங்க பிறந்தது டாக்டர். கீதா கிட்டதான். எல்லாம் சுக பிரசவம். அண்ணியொட ஸ்கூல்  பிரெண்ட். எந்த நேரமும் அவங்களை நேர போன்ல பிடிக்க முடியும். இந்த அளவுக்கு உங்களுக்கு […]


விண்மீன்களின் சதிராட்டம் – 13

அத்தியாயம் – 13 அன்று விசேஷமாய் தனனை அலங்கரித்திருந்தாள் மஞ்சரி. லைட் பிங்க்கில் கரு நீல கரையில் சரிகையிட்ட காஞ்சிக் காட்டன் சேலை, அவளது சற்றே மானிற கலருக்கு எடுப்பாய் இருந்தது. வில்லாய் வளைந்த திருத்தமான புருவங்களின் கீழ் அழகான கண்கள் மையிட்டு மெருகேற்றப்பட்டிருந்தது. லேசான லிப் க்ளாஸ் சிப்பி இதழ்களை பளபளப்பாய் வைத்திருந்தது. “என்ன விசேஷம் என்று கேட்காதவர்கள் இல்லை அலுவலகத்தில். புதுப் புடவை உடுத்தவே, சற்று மெனக்கெட்டதாகக் கூறி சமாளித்தாள். மனதின் சந்தோஷம் முகத்தில் […]


விண்மீன்களின் சதிராட்டம் – 12

அத்தியாயம் – 12 விஸ்வா பில்டர்ஸ் என்ற பெயர் தாங்கிய அந்த பெரிய கட்டிடத்தின் உள் சென்று தன் பைக்கை நிறுத்தினான் ராஜேந்திரன். மனதில் ஒரு உற்சாகம், பார்வையில் ஒரு ஆர்வம். ஹெல்மெட்டைக் கழட்டி வண்டியில் மாடியவன், விரலால் முடியைக் கோதி சரி செய்தவாறே, லிஃப்டில் மூன்றாவது தளத்தை அடைந்தான். அங்கிருந்த ரிசப்ஷனிஸ்டைப் பார்த்ததும், அவள் புன்னகைத்து, “சார் உள்ளதான் இருக்காங்க. நீங்க போய் பாருங்க.”, என்றாள் புன்னகைத்து. வந்தவன், எதிர்புறம் அக்கௌண்ட்ஸ் செக்ஷனைப் பார்த்தவாறே, விஸ்வரூபன், […]


விண்மீன்களின் சதிராட்டம் – 11

அத்தியாயம் – 11 சிறிய அழகான அம்மன் கோவில், பச்சை பசேலென வயல்களின்   நடுவே அமைந்திருந்தது.  பல தலைமுறைகளை பார்த்த பெரிய அரசமரம், பல கிளைகளில் தொட்டில்கள் தொங்கிக்கொண்டிருந்தன. எதிர்புறம் மஞ்சள் பூசி நிழல் பரப்பிக்கொண்டிருந்த வேப்ப மரம். முதல் ரவுண்ட் இவர்கள் இருவரையும் அம்மன் சன்னிதானம் முன் அமர வைத்து, மந்திரங்கள் சொல்லி, சில பல சாங்கியங்கள் பண்ணச் செய்து, அனுப்பியிருந்தார்கள். அம்மன் அபிஷேகம் பார்த்துவிட்டு, இப்போது அலங்காரம் முடிய வேப்பமரத்தின் அடியில், பாய் விரித்து […]