வெற்றிச்செல்வன் செந்தாமரையைப் பஞ்சாபிலேயே விட்டுவிட்டு சேலத்திற்கு புறப்படத் தயாரானான். அவன் அறியாமல், அவள் பார்வை அவன்மீது ஆராய்ச்சியாய் வலம் வந்து கொண்டிருந்தது. ‘உன்னை விட்டுவிட்டு இருக்கவே முடியாது’ என்று பினாத்தியவன், இப்பொழுது ‘எத்தனை நாள் இங்கு இருக்க வேண்டும்? எப்பொழுது வந்து அழைத்துச் செல்வான்? என்பது குறித்து வாயே திறக்காமல் இருக்கிறான்’ என மூளையைக் கசக்கிக் கொண்டிருந்தாள். ‘சரி நாமாகக் கேட்கக் கூடாது. என்ன சொல்லிவிட்டுப் போகிறான் என்று பார்ப்போம்’ என மனைவி […]
கணவன் சுதாரித்தான். “அந்த மாரியப்பன் தான்னு எல்லாரும் பேசிக்கிறாங்க” எனச் சொல்லிச் சமாளித்தான். “அவனா? அவன் தானே இப்ப செத்தது? அந்த டிராவல்ஸ் நியூஸ்… அவன்தானே?” என்றாள் யோசித்தபடி. அவன் போலீஸில் மாட்டியதிலிருந்து, இறந்தது வரை… ஊருக்குள் அவன் தானே தலைப்பு செய்தி. ஆகையால் அனைத்து விஷயங்களும் செந்தாமரைக்கும் தெரிந்தது. மனைவியின் தெளிவில், இப்பொழுது முழுதாக சுதாரித்திருந்தான் கணவன். “ஹ்ம்ம் அவன் தான். சரி விடு வேற பேசுவோம்” என […]
செந்தாமரை இங்கு பஞ்சாபிலேயே தங்க நேர்ந்ததை குறித்து, வெற்றிச்செல்வன், விஷயம் தெரிந்தபோது மட்டும் கோபம் கொண்டதோடு சரி. அதன்பிறகு, அன்றிரவே அவளுக்காக விமான டிக்கட்டை மட்டும் ரத்து செய்து விட்டு, “பத்திரமா இருக்கணும் சரியா?” என்றான் வெகு இயல்பாக. ‘மதியம் அரை மனதோடு ஒப்புக்கொண்டவன் இவன்தானா?’ என்று மலைப்பாக இருந்தது பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு. தலைகீழ் மாற்றங்கள் கருத்தில் பதியாமல் இருக்குமா? “என்ன மாஹி?” அவளது அமைதியில் கணினியிலிருந்து பார்வையைத் திருப்பி அவள் முகம் […]
“ஹ்ம்ம் நல்லா இருக்கா டி… நீ பிரீயானதும் போன் பண்ணி பேசு அவகிட்ட… ” என மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள், “சரி அண்ணன் வந்து எங்களை அடிச்சு துரத்தும் முன்ன ஓடி போயிடறோம்… அவரோட பொண்டாட்டியை நாங்களே பிடிச்சு வெச்சிருக்கோம்” எனக் கேலி பேசி கிளம்ப எத்தனித்தவர்களை, “உதை விழும்… சாப்பிட்டு கிளம்புங்க…” என உபசரித்தே அனுப்பி வைத்தாள். என்னதான் இலகுவானதாக நினைத்துக் கொண்டாலும், மனதிற்குள் சந்தேகங்கள் முணுமுணுத்துக் கொண்டே […]
செந்தாமரை மறுவீடு வருவது தெரிந்த அவளுடைய நெருங்கிய தோழிகள் சிலர் அவளை காண வீட்டிற்கு வந்திருந்தனர். வெற்றிச்செல்வன் வரவேற்பாக இரண்டு வார்த்தைகள் பேசியதோடு, அவர்களுக்குத் தனிமை தந்து ஒதுங்கிக் கொண்டான். அனைவரும் முதலில் கலகலப்பாகத் தான் பேசிக் கொண்டிருந்தனர். அதிலொருத்தி, செந்தாமரையின் அக்கா கணவன் சுந்தரேசனின் ஊரைச் சேர்ந்தவள். அவள் தான், “எனக்கு தெரியாதாக்கும்… கண்டிப்பா காதல் கல்யாணம் தான்…” என அடித்து கூறினாள். “அதெல்லாம் இல்லைன்னு சொன்னா நம்பமாட்டியாக்கும்” செந்தாமரை மெல்லிய […]
அவனை முறைத்தபடியே, “போங்க. கோயிலுக்கு போகணும். போயி, குளிச்சுட்டு வந்து துணி மாத்துங்க” என மனைவி பல்கலைக் கடித்தபடி கூற, “சரி சரி கோச்சுக்காத. போ போயி நீ சீக்கிரம் குளிச்சுட்டு வா. நீ டிரெஸ் பண்ணறதுக்குள்ள நான் குளிச்சு கிளம்பிடுவேன்” என அவளின் கோபத்திற்கு கட்டுப்பட்டு தாஜா செய்து அவளை முதலில் அனுப்பினான். இருவரும் அவசர குளியலும், பட்டாடையும் அணிந்து கீழே வந்தனர். வேறு புடவை மாற்றியதில் சங்கடத்துடன் செந்தாமரை வர, […]
“யாரும் எழுப்பி விடறதுக்கு முன்னாடி எழுந்து வந்துடணும்” அம்மா திரும்ப திரும்பச் சொல்லி விட்டது, செந்தாமரையின் மண்டைக்குள் சடுகுடு ஓடிக்கொண்டிருந்ததாலோ என்னவோ… பின் தூங்கியிருந்தாலும், முன் எழுந்திருந்தாள். உறக்கத்திலிருந்து விழித்தது பெரிய விஷயமில்லை. அருகில் உறங்கும் கணவன் அறியாமல் கட்டிலிலிருந்து இறங்குவது தான் அவளுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. பூனையின் வம்சாவளியாய் சத்தம் எழுப்பாமல் வெற்றிச்செல்வனிடமிருந்து மெல்ல விலகி, கட்டிலை விட்டிறங்கி, தனக்குத் தேவையான உடைகளை எடுத்துக் கொண்டு, குளிக்க செல்லும் வரையும் […]
அவளது அழுகை குறைந்ததும், “சின்ன குழந்தை மாதிரி செய்யற மாஹி” என்றான் செல்ல சலிப்பாக. “கோச்சுக்காம சொல்லுங்களேன், உங்களுக்கு ஏன் என்னைப் பிடிக்கும்?” “இதெல்லாம் என்ன கேள்வி?” என்று முறைத்தான். “பிளீஸ் சொல்லுங்களேன்…” என்று அவனது அணைப்பிலிருந்தபடியே முரண்டு பிடித்தாள் மனையாள். “என்ன சொல்ல…. ஹ்ம்ம்… ஒருநாள் எங்க அப்பாவைத் தேடி வந்த, அப்பத் தான் உன்னை முதல்முறை பார்த்தேன். அப்பவே தெரிஞ்சுடுச்சு, நீ தான் எங்க அப்பா சொன்ன […]
செந்தாமரை சொன்னது சற்று ஏமாற்றம் தான். வெற்றிச்செல்வன் அப்படி ஒன்றும் கட்டாயப்படுத்தும் ரகமில்லை. ஆனால், அமைதியாக இருக்கும் ரகமும் இல்லையே! அவனுக்கும் காதல் மனைவி மீது நிறையப் பிரியம் இருக்கிறதே! ஆகவே அவள் இப்படி புறக்கணிப்பாகச் சொல்லவும் அவனுக்கு மிகுந்த ஏமாற்றம். அதோடு ‘என்ன கோபம்?’ என்று அவளிடம் கேட்டால், அதை மதித்து பதில் கூடச் சொல்ல மாட்டேன் என்கிறாள் என்பதில் வேறு அவனுக்குக் கோபம் எழுந்தது. மேற்கொண்டு அதுகுறித்து எதுவும் பேசாமல், பால்கனி […]
ஆதரவாக அவனது தோளணைக்க, “என்னை வழிநடத்த யாரும் கூட இல்லை வெற்றி. எப்பவும் உனக்கு அப்பா ஞாபகம் தான் வருமா? எங்களைப்பத்தி யோசிக்க மாட்டியா? அப்பா மிலிட்டரியில வேலையில இருந்தாலும், நீ என்னையும் அம்மாவையும் நல்லா பார்த்துப்ப. திடீர்ன்னு அப்பாவோட ஆசைக்காக, மிலிட்டரி சர்வீஸ் செய்ய போறேன்னு கிளம்பி போயிட்ட, அப்போ தவிச்சு போன அம்மாவை நான் தான் தேத்துனேன் தெரியுமா? என்னால எப்படி முடியும் சொல்லு? அப்ப நான் ஸ்கூல் தான் படிச்சிட்டு இருந்தேன். […]