வெற்றிச்செல்வன் செந்தாமரையுடைய பெற்றோரை அழைத்து வந்து அவளோடு இணைத்து வைத்தபொழுது எவ்வளவுக்கெவ்வளவு மகிழ்ந்து, ஆர்ப்பரித்து, கர்வம் கொண்டாளோ… அதையெல்லாம் திருமண பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு சீட்டுக்கட்டு மாளிகை போலத் தகர்த்தெறிந்திருந்தான். திருமணம் குறித்துப் பெற்றவர்கள் பேசினார்கள் என்று சொன்ன அன்று, அத்தனை மகிழ்ந்தவன், விடிய விடிய உறக்கம் தொலைத்து, உறக்கம் மறந்து, உறக்கத்தை மறக்கச் செய்து பேசியவன், அதன்பிறகு இம்மியும் கண்டு கொள்ளாமல் இருந்தால் அவளும் தான் என்ன செய்வாள்? பெண் […]
அதிலும் மஞ்சுளா வந்திருந்தபோது, செந்தாமரையிடம், ‘நீ என் கணவரின் தேர்வு!’ என்று சொல்லிச் சொல்லி பெருமைப்பட, ஏற்கனவே தெரிந்த விஷயம் தான் என்றாலும் மனம் சுணங்கியது. கூடுதல் தகவலாக, ‘அவனுக்கு அப்பான்னா ரொம்ப பிடிக்கும் தான் மா, ஆனா எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு… நான் சண்டை போட்டும் நிக்காம இங்க வந்து அவரு வேலை மொத்தத்தையும் பார்த்துக்கிறான். அப்பாவோட ஆசைக்காக, தன்னோட கெரியரை விட்டு… பெத்த அம்மாவை விட்டு, தம்பியை விட்டு… இங்க வந்து […]
செந்தாமரை தன் பெற்றோர்களிடம் ஒரு வழியாகச் சமாதானத்திற்கு வந்திருந்தாள். அம்மாவிடம் தனியாகப் பேசும்போது, “அதுக்காக ஊருக்கெல்லாம் வர சொல்லாதீங்க ம்மா” என்று கண்டிப்புடன் கூறினாள். “உன்னை ஊருக்கு கூட்டிட்டு போயிட்டா… மாப்பிள்ளை?” என வெற்றியை மனதில் வைத்து அம்பிகா கேட்க, மறுபடியும் திருமண பேச்சா என பயந்தவள், “அம்மா கல்யாணம் அது இதுன்னு பேசாதீங்க” என்று அடமாகக் கூறினாள். “என்ன தாமரை இப்படி சொல்லற? வெற்றி தம்பி கிட்ட உன்கிட்ட […]
அவளது கேள்வியைக் கண்டுகொள்ளாமல், “பைத்தியமா உனக்கு? உன்னை யாரு இங்க வர சொன்னது?” என மீண்டும் அதட்டினான். அவன் கோபம், ஆத்திரம் எல்லாம் எப்பொழுதுமே எல்லையைக் கடக்கும் என்று தெரியும் தான். ஆனால், இந்தளவு அடித்துத் தள்ளுவான் என்றெல்லாம் தெரியாது. முதல்முறை இவனது மற்றொரு முகத்தை நேரில் பார்க்கிறாள். அதனால் வெகுவாக நடுங்கி போனாள். இப்பொழுது அவன் அதட்டி வேறு கேட்கவும், அவன் மேலேயே சாய்ந்து கதறத் தொடங்கினாள். […]
சண்டை, சச்சரவுகள் இயல்பு தானே! தானாகச் சரியாகட்டும். சற்று விட்டு பிடிப்போம் என்று செந்தாமரை நினைத்தாள். அதனால் வெற்றிச்செல்வனை அவள் மறுபடியும் அழைக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க அந்த ஆசிரியர் செய்த பிரச்சனை தொடர்பாக வெற்றிச்செல்வனிடம் கூறிவிட்டதால் சற்று நிம்மதி வந்தது. இனி அவன் பார்த்துக் கொள்வான் என்பது போல! எதுவும் வன்முறையில் ஈடுபட்டுவிடுவானோ என்பது மட்டும் சற்று உறுத்தல். பள்ளியில் வினோதினியையும் அழைத்து, “இனி எந்த பிரச்சனையும் இருக்காது. […]
வேலைகள் முடிந்து வீட்டிற்குச் சென்று, உணவை முடித்து ஓய்விற்காக அறைக்கு சென்றான். எப்பொழுதுமே சிறிது நேரம் படிப்பான். இன்று அதற்கும் மனம் செல்லாமல் செந்தாமரையின் ஞாபகமே! ஏன் இப்படி என்று அவனுக்கே விளங்கவில்லை. அவளைக் கைப்பேசியில் அழைத்திருந்தான். கைப்பேசி எண்கள் பரிமாறியதிலிருந்து அவசியத்திற்காக அன்றி இருவரும் பேசிக்கொண்டதே இல்லை. இன்று தான் அவனுக்காகத் தோன்றி அழைப்பு விடுத்திருக்கிறான். செந்தாமரை அழைப்பை ஏற்றதும், “சொல்லுங்க…” என்றாள் மலர்ச்சியாக! அவளுக்கும் ஒரு எதிர்பார்ப்பு, இன்றாவது அழைப்பானா […]
கண்களில் அத்தனை ஆசையோடு, “எனக்காகவா?” என்று கேட்ட பூங்குவியலின் நினைவு, வெற்றிச்செல்வனை நொடிக்கொரு முறை இம்சை செய்து கொண்டே இருந்தது. ‘மாஹி என்னை இத்தனை தூரம் உன்னால மாத்த முடியுமா?’ என்று எண்ணியவன், உஃப் என இழுத்துப்பிடித்த மூச்சை வெளியிட்டவாறே… இருக்கையில் தளர்வாகச் சாய்ந்து கண் மூடி அமர்ந்து கொண்டான். காதல் வயப்படுவான் என்றெல்லாம் அவன் நினைத்ததே இல்லை. ஏன் உடனிருப்பவர்கள் கூட அவனை அப்படி நினைக்க மாட்டார்கள். அப்படி […]
வெற்றிச்செல்வன் தன் அம்மா மஞ்சுளாவிடமும் அந்தியூர் செல்லப்போவதை சாக்கிட்டு விவரம் சொல்வதற்காக பேசியிருக்க, அவருக்கும் செந்தாமரை எப்பொழுது இங்கு வந்தாள்? பெற்றோருடன் ஏன் இல்லை என்பது போன்ற விவரங்கள் தேவையாய் இருக்க, மேற்கொண்டு மகனிடம் பேச்சை வளர்த்தார், அன்புத் தம்பி முத்துக்குமாரும் பேச்சில் ஐக்கியமாகி இருந்தான். நேற்றைய பேச்சு வார்த்தைக்கும், இன்றைய பேச்சு வார்த்தைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தது. அன்னையும், தம்பியும் தன்னை மிகவும் தேடுவதையும், தன் பிரிவால் மிகவும் வாடுவதையும் அவனால் உணர […]
செந்தாமரைக்குத் தமக்கை அன்பழகியின் நினைவு வாட்டி வதைக்க, மீண்டும் தியானம், யோகாசனத்தின் துணை கொண்டு மெல்ல மீண்டாள். சுந்தரேசன் குடும்பத்தினர் மீது சந்தேகம் வந்ததிலிருந்து, தன்னை திடமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்னும் உறுதி வந்திருந்தது அவளுக்கு. முன்பே சற்று தைரியமான பெண் தான் என்றாலும், தன் தைரியத்தையும், துணிவையும், தன்னம்பிக்கையையும் முடிந்த வரை நற்சிந்தனைகள், நல்ல போதனைகள், யோகாசனம், தியானம் கொண்டு வளர்த்தாள். அதன்பிறகு சிறிது தேறியவள் வேலைக்குச் சென்றுவர தன் முயற்சிகளின் […]
ரேகாவிடம் வம்பு வளர்க்கும் பையனின் கைங்கரியம். காரில் ஏற்றியதும் கத்த விடாமல் இருவரின் வாயையும் ஒருவன் துணியால் கட்டி விட்டு, அவர்களின் கைப்பை, கைப்பேசி அனைத்தையும் பறித்து முன் சீட்டில் வீசியிருந்தான். பெண்கள் இருவருக்கும் சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை. சுதாரிக்க நேரமின்றி அனைத்தும் நடந்திருந்தது. அவர்களுக்கு நடக்கவிருக்கும் நிகழ்வை நினைத்து பயத்தில் வெடவெடத்தது. அந்த நேரத்தில் அவர்களால் எதையும் யோசிக்கக் கூட முடியவில்லை. வாகனத்தை ஒருவன் ஒட்டிக்கொண்டிருக்க, செந்தாமரை, ரேகா அவளை […]