10
ஒன்பது மாதங்களுக்குப் பிறகு:
“வணக்கம்மா. பார்த்து ரொம்ப மாதமாகிருச்சி. எப்படியிருக்கீங்க?” என்றபடி தன் முன் நின்ற சபரிநாதனை யோசனையுடனும் சற்றுப் பயத்துடனும் ஏறிட்டார் விக்னேஷின் தாய் விமலா.
“என்னம்மா என்னை மறந்துட்டீங்களா? ஒரே முறைதான பார்த்திருக்கீங்க. அதனால ஞாபகமிருக்காது. நான் சபரிநாதன். உதயாவோட மாமா பையன். அப்படிச் சொல்றதோட ஹரிணி அப்பான்னா தெரியும்” என புன்னகை மாறாது கேட்டவன், “ஆமா உதயா எங்க? என்னம்மா கேட்ட எதுக்கும் பதில் சொல்லாம உட்கார்ந்திருக்கீங்க? விக்னேஷ் கூட வெளில போயிருக்காளா?”
“அ..அது தம்பி. சூ..சூர்யா…”
“அம்மா ஒரு காஃபி குடுங்க” என்று தன் முன் அமர்ந்த விக்னேஷை ஆச்சர்யமாகப் பார்த்தான் சபரி. முதல் தடவை அதிர்வு என்றாள் இந்த முறை அச்சர்யமே! “விக்னேஷ் நீங்களா? இந்த பத்து மாசத்துல டோட்டலா மாறி… டெய்லி ஜிம் போறீங்களா?”
“ஆமா சார். என்னைப் பிடிச்ச சனியனை விரட்டி அனுப்பிட்டு என் உடம்புல அக்கறை வச்சேன். உங்களை மாதிரி ஸ்மார்ட்டான பையன்களைத்தான பொண்ணுங்களுக்குப் பிடிக்குது. என்ன இவ்வளவு காலையில?” தான் சொன்னதை சபரியை யோசிக்கவிடாது வேறு கேட்டான்.
“சென்னை வர்றேன்தான். உங்க வீட்டுக்கு வந்து பத்து மாசமாகுது. பூவரசி அத்தை வீட்லயிருந்து சூர்யாவைப் பார்க்க வரேன்னு சொன்னப்ப, கொஞ்ச நாளாகட்டும்னு சொல்லிட்டீங்களாம்? அவங்களுக்குள்ள நிறைய குழப்பமும் பயமுமிருக்கு. அப்புறம் அவங்களுக்கும் அங்க சின்னச்சின்ன ப்ராப்ளம். நீ போனா பார்த்துட்டு வான்னு இசக்கி அத்தை சொன்னாங்க. எங்க உங்க ஒய்ஃப்? இன்னும் தூக்குறாளா?”
“அவள் தூக்குறாளா? மா சபரி சாருக்கு காஃபி எடுத்துட்டு வா” என்று உள்ளே திரும்பி குரல் கொடுத்தான்.
“இதோ வந்துட்டேயிருக்கேன்க.”
தனக்குக் கேட்ட குரல் வேறாகத் தோன்ற சடனாக எழுந்து திரும்பிப் பார்க்க அதிர்ந்துதான் போனான் சபரிநாதன்.
“இந்தாங்க சார் காஃபி” என்று அவள் நீட்ட…
“யார் இவங்க?” என்றான் விக்னேஷைப் பார்த்து.
“என் மனைவி காவ்யா. என்னை மாதிரி சினி பீல்டுல இருக்கிறா.”
“ஏய்! என்ன உளர்ற? உதயா எங்க?” என்று கோபத்தில் அவனின் சட்டையைப் பிடிக்க…
“முதல்ல சட்டையிலிருந்து கையை எடுங்க சார். அதான் சொன்னேனே என்னைப் பிடிச்சதை விரட்டிட்டேன்னு.”
“ஏய்! கொன்னுருவேன். அவள் குழந்தை மாதிரிடா. அவளைப் போய்… என்ன பிரச்சனைன்னாலும் எங்ககிட்டச் சொல்லியிருக்கலாமே? நாங்க பேசியிருப்போம். இத்தனை பேரும் உனக்கு உடந்தையா?” என்று அவன் வீட்டிலுள்ள அனைவரையும் கண்டு முறைத்தான்.
“அவங்களை ஏன் சார் கேட்குறீங்க? இது என் வாழ்க்கை. அதை இங்க யாரும் கேட்க முடியாது.”
“எ..எங்கடா உதயா? அவளை என்ன பண்ணின?” என்றான் திணறலாக.
“உட்காருங்க சார். காலையிலேயே ஜிம் போயிட்டு வந்ததால அசதியாயிருக்கு. அட உட்காருங்க சார்” என்று கைபிடித்து அமரவைத்து காஃபி கொடுக்க… வேண்டாமென மறுத்தவனைக் கண்டுகொள்ளாது, “அதெப்படி சார், பார்க்காமலே சூர்யா மனசுல சிக்ஸர் போட்டீங்க?” கேலியை மறைக்காது கேட்டான்.
“விக்னேஷ் மைண்ட் யுவர் வேர்ட்ஸ். அவள் என்னோட ஒன்பது வயசு சின்னப்பொண்ணு.”
“ஓ… அந்தச் சின்னப்பொண்ணு மனசை மட்டும் நீங்க கெடுக்கலாமா ஆபீஸர்” என்றான் இன்னும் நக்கலாய்.
“இங்க பார் இந்த நக்கல் பண்ற வேலையெல்லாம் வேண்டாம். எங்க… எங்க வீட்டுப் பொண்ணு?”
“சாருக்கு அவசரம் அதிகம்தான். உங்க ஆளைப் பற்றித் தெரிஞ்சிக்கிறதுல வேகம் உள்ள அளவுக்கு விவேகம் வேணும் சார்.”
“கண்டதையும் பேசாம உதயா எங்கன்னு சொல்லு?”
[the_ad id=”6605″]
“அதெப்படி சார் கட்டிக்கிட்ட நான் தொட்டா மரம் மாதிரி நிற்கிறவ, நீங்க தொட்டா மட்டும் உருகுறா?”
“விக்னேஷ்!” என்று கத்தி, “அவ்வளவுதான் உனக்கு மரியாதை. அவளை விரும்பிக் கல்யாணம் பண்ணினவன் நீ. அவள் அழகுக்கு பக்கத்துல நிற்கத் தகுதியில்லாத உன்னைப் போய் நல்லவன், நல்லா பார்த்துப்பான்னு முடிச்சி வச்ச பூவரசி அத்தையைச் சொல்லணும்” என்றான் ஆத்திரம் குறையாது.
“ஹா எனக்குத் தகுதியில்லையா? இதோ என் ஒய்ஃபை பாருங்க சபரி எவ்வளவு அழகாயிருக்கா? எனக்கு நடந்த எல்லாம் சொல்லிதான் கல்யாணம் செய்தேன். உங்க அத்தைப் பொண்ணு அவ்வளவு பெரிய அப்பாடக்கர்லாம் கிடையாது” என்று முகம் சுளிக்க…
“விக்னேஷ் ப்ளீஸ். உங்களுக்குள்ள நான் எப்படி வந்தேன்னு தெரியாது. என் குழந்தை அவளை அம்மான்னு சொல்றதால கோபம்னா, நான் அவளைக் கூட்டிட்டு வரமாட்டேன். ஏன் நானே இங்க வரமாட்டேன். அவளுக்கு இந்தச் சென்னையில யாரையும் தெரியாது. அதிக படிப்பும் கிடையாது. ஊருக்கும் போகலைன்னா அவளை எங்கன்னு சொல்லு?” என்றான் கெஞ்சலாய்.
விக்னேஷ் பேச ஆரம்பிக்கும் போதே மற்றவர்கள் உள்ளே சென்றிருக்க, காவ்யா மட்டும் நின்றிருந்தாள்.
“இப்படி நல்லபிள்ளையா கேட்டா சொல்லாமலா போகப்போறேன். நீங்க வந்து போன ஒரு மாசத்துல நடந்தது. இதுல முக்கியமான விஷயம் என்னன்னா, அவள் இன்னும் கல்யாணத்துக்கு முன்ன இருந்த மாதிரியே இருக்கா.”
“விக்னேஷ்!” என்றான் அவன் சொல்வது புரிந்து.
“எஸ் விக்னேஷ்தான். ஷி இஸ் வெர்ஜின்னு பட்டுன்னு சொன்னா புரியும்ல” என்றான் நக்கல் தொணி மாறாது.
தலையில் கைவைத்து அமர்ந்து, “ஏன்?” என சபரி கேட்க…
“காரணம் நீங்கதான்” என்றான் பட்டென்று.
“விக்னேஷ் நான் அவளை இரண்டே முறைதான் பார்த்திருக்கேன். அதுவும் அவளோட சடங்கப்ப அவ்வளவு கூட்டத்துக்கு நடுவில். அடுத்து உங்க வீட்டுல. எங்களுக்குள்ள வேறெந்த சம்பந்தமும் கிடையாது” என்றான் இனம்புரியா வேதனையுடன்.
“அப்படியா? சம்பந்தம் எதுவும் கிடையாதா ஆபீஸர்?” ஏளனமாகக் கேட்டு, “அப்புறம் ஏன் அப்படிச் சொன்னா? சபரின்ற பெயரைக் கேட்டாலே அப்படியே ஐஸ்ல வச்ச மாதிரி ஜில்லுன்னு ஆகுறா. நீ என்னடான்னா சம்பந்தமில்லன்னு சொல்ற. நீதான் அவளோட ஹீரோவாம்? எங்க கல்யாணத்துக்கு முந்தின இரவு கனவுல கூட நீதான் வந்தியாம்? ஒரே நாள்ல ஃபயர் பத்திக்கிச்சா? ஆச்சர்யமாயிருக்கே” என்று தன் ஆத்திரம் மொத்தத்தையும் கொட்டினான்.
“வேண்டாம் விக்னேஷ். நீ பேசுறதையெல்லாம் கேட்கிறதுக்குக் காரணம், எங்க வீட்டுப் பொண்ணைப் பற்றித் தெரியணும்ன்றதுக்காக. என்ன நடந்ததுன்னு முழுசா சொல்லு?”
“சொல்றேனே! உனக்கும் அவளோட வண்டவாளம் தெரியணும்ல. கல்யாணம் முடிஞ்சதுல இருந்து எங்களுக்குள்ள எதுவுமில்லை. சரி கிராமத்துப் பொண்ணு கூச்சப்படுறாள்னு நானும் விட்டுட்டேன். அவளோ கூச்சம்னா என்னன்னு என்கிட்டக் கேட்கிறா? அதுக்காக கட்டாயப்படுத்தவா முடியும். கிணற்றுத் தண்ணீர்தான எங்க போகப்போகுதுன்னு இருந்துட்டேன். குறிப்பிட்ட நாளுக்கு மேல எங்களுக்குள்ள சின்னச் சின்னதா சண்டைகள். அவள் அமைதிதான். ஏன்னா இந்தக் கல்யாணத்தை அவளோட மனசு ஏத்துக்கலை. என்னால அப்படியிருக்க முடியுமா சார்? இதுக்காகவே கௌரவம் பார்க்காம ஹாஸ்பிடல் கூட்டிட்டு அலைஞ்சேன். கவுன்சிலிங் எத்தனை கொடுத்தும் வேலைக்காகலை.”
“ஏன்? என்னாச்சி?” என்றான் பதற்றமாய்.
“உடம்புல எந்தவிதக் குறையும் இல்லைன்னு சொன்னாங்க. அதுக்குப் பின்னதான் சைக்யாட்ரிஸ்ட் மூலமா ஆழ் மனசுல இருக்கிறதைக் கொண்டு வர்ற சிகிச்சை செய்தோம். பேசினா… பேசினா நிறைய பேசினா. சின்ன வயசுல அவளுக்கு நடந்த பாலியல் தொந்தரவுகள்ல ஆரம்பிச்சி, உன்னை ஹீரோவா மனசுல பதிய வச்சது முதற்கொண்டு. என்னைக் கண்டா நட்பு பாராட்டத் தோணுதாம். இடியட்! யாருக்கு வேணும் அவளோட நட்பு. இதுல கண்டவனும் அவளைத் தொட்டிருக்கான்” என்றான் கோபத்தில்.
[the_ad id=”6605″]
“விக்னேஷ் வார்த்தையை விடாத. என்ன நடந்ததோ அதைத் தெளிவா சொல்லு?” சற்று கறாராகவே சொன்னான் சபரி. அவனுக்கு அவளின் நிலை மெல்லப் புரிவதாயிருந்தது. அதைப் புரிந்து கொள்ளாமல் பேசும் விக்னேஷின் மீது கோபம் வந்த போதிலும் அதை அடக்கியபடி கேட்டான்.
அன்று நடந்த டெஸ்டில் அவள் பேசியதை தனக்கு சாதகமானதைச் சொல்லி, “டாக்டர் சொல்றார் நீ கடைசிவரை நண்பன்தான்டா. அவள் மனசுல சபரிதான் இருக்கான்னு.”
“நீ சொல்றது நம்புற மாதிரியில்லை விக்னேஷ்?”
“அதானே! குழந்தை முகம் எப்படிப் பொய் சொல்லும் இல்ல ஆபீஸர்? பத்து மணிபோல துர்கா மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் போகலாம். அங்க அவளுக்குப் பார்த்த டாக்டர்.ருத்ரனும் டாக்டர்.பிரம்மசக்தியும் இருக்காங்க. போய்ப் பேசிப்பாருங்க. உங்க முறைப் பொண்ணோட லட்சணம் தெரியும். அவங்களை நான் விலை கொடுத்து வாங்கினதா சந்தேகப்படவும் முடியாது. ஏன்னா அவங்க அவ்வளவு நேர்மை. அவங்களை விலைக்கு வாங்குற அளவுக்கு நான் வசதியும் கிடையாது. வாங்க போகலாம்” என்றான்.
“அதை அப்புறம் பார்க்கலாம். அதுக்கப்புறம் என்ன நடந்தது? சூர்யா எங்க?” என்றதும் அன்று நடந்தது நினைவில் வந்தது.
“என்ன விக்னேஷ் முடிவு பண்ணியிருக்கீங்க?” என்று டாக்டர் கேட்டதற்கு…
“அவளை டைவர்ஸ் பண்றதா ஐடியா டாக்டர்” என்றான் பட்டென்று.
“ஏன் சார் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்த நீங்க, சின்னச் சண்டைக்கே தூக்கிப் போட்டுருவீங்களா?” என கோபத்தை அடக்க வழியில்லாது சக்தி சத்தம் போட…
“ஒரு பழமொழி இருக்கு டாக்டர். காலுக்கு உதவாத செருப்பைக் கழட்டி தூக்கி வீசிடணும்னு.”
“உங்க மனைவியும் செருப்பும் ஒண்ணா” என்று இன்னுமே சத்தமாகக் கேட்க…
“தப்பு… தப்புதான் டாக்டர். செருப்பாவது கொஞ்சம் யூஸாகும். ஆனா, இவள்…” அவளை ஏளனமாகப் பார்த்து, “எனக்கு வேண்டாம் டாக்டர். கடைசிவரை நண்பனாயிருக்கிற அளவுக்கு நான் நல்லவன் கிடையாது. எனக்கும் குடும்ப வாழ்க்கை பிள்ளைங்கன்னு வாழணும். சோ, இப்ப அவள் பேசினதை பேப்பர்ல எழுதி ரிப்போர்ட் குடுங்க. இந்த ரிப்போர்ட் வச்சிதான் டைவர்ஸ் வாங்கப் போறேன்.”
“தரமுடியாது சொன்னா என்ன செய்றதா உத்தேசம் மிஸ்டர்.விக்னேஷ்?”
“ஒண்ணு கேஸ் போடுவேன். இல்லையா வேற சைக்யாட்ரிஸ்டா பார்த்துத் தேவையான ரிப்போர்ட் வாங்கிப்பேன்.”
“விக்னேஷ்” என்று ருத்ரன் அவனின் சட்டையைப் பிடிக்க வர…
“டாக்டர் அவங்க கேட்டதைக் குடுத்திருங்க” என இடையிட்டாள் சூர்யா.
“ஏய்! நீ என்ன குடுக்கச் சொல்றது? உன் வண்டவாளம் தண்டவாளம் ஏறி ரொம்ப நேரமாகிருச்சி. என்னவோ உத்தமி மாதிரி பேசுற. வயசுக்கு வர்றதுக்கு முன்ன வரை கண்டவனும் தொட்ட உடம்புதான இது” என்று தன் வன்மத்தைக் கொட்ட…
“ஏ..ஏன் இப்படிப் பேசுறீங்க? உங்கமேல நிறைய மரியாதை வச்சிருக்கேன். இப்படிப் பேசாதீங்க.” உடல் அதிர கண்களில் கண்ணீர் வந்தது.
“ஆமாமாம். புருஷன் மேல மரியாதை வை. அந்த சபரி மேல காதல் வை” என வார்த்தையில் விஷத்தைத் தெளிக்க…
“ச்சீய் என்ன பேச்சிது? சபரி மச்சானை ஏன் நமக்குள்ள இழுக்கறீங்க?” என்றவள் கண்ணீர் மறைந்து ஒருவித சீற்றம் வந்தது.
“நீதான சொன்ன அவன் உன்னோட ஹீரோன்னு.”
“அது ஒரு சாதாரண விஷயம். அதையும் இதையும் சேர்த்து ஏன் முடிச்சிப் போடுறீங்க? நான் அவங்களை இரண்டே முறைதான் பார்த்திருக்கேன். அதைவிட முக்கியம் அவங்களுக்குக் குழந்தை இருக்கு.”
“அது உன்னைத்தான் அம்மான்னு கூப்பிடுதுன்னும் தெரியும். அதெப்படி குழந்தை போலவே நடிக்கிற? நீ சொல்ல மறுத்த உன் கடந்த கால வாழ்க்கை, இந்த ட்ரீட்மெண்ட்னால உன் மூலமாவே எனக்குத் தெரிஞ்சி போயிருச்சி. குழந்தையிலிருந்தே அப்படின்னா, இப்ப சொல்லவே வேண்டாம்” என்று எகத்தாளமாய் கேட்க…
சட்டென்று மூண்ட கண்ணீர் கன்னம் இறங்க, “நான் அப்படி கிடையாதுங்க. வேணும்னா நான் கன்னிப் பொண்ணுன்றதை டெஸ்ட் பண்ணிக்கோங்க.” தன்னை நிரூபிக்கவென்றே அதைச் சொன்னாள்.
“ஹா… அதெல்லாம் டெஸ்ட் பண்ணியாச்சி. அதோட சேர்த்து உன் கடந்த காலத்தையும் தெரிஞ்சிக்கிட்டாச்சி” என்றான் சாதாரணமாய்.
“எனக்கே தெரியாமலா?” என்றாள் முழுதாக அதிர்ந்து.
“அப்ப தெரிஞ்சா பண்ணுவாங்க. உனக்கே தெரியாம உன்னைத் தொட்டதே தெரியலன்றப்ப, இதெப்படி தெரியுமாம். எனக்கு சாதகமா நீயே நிறைய உளறிட்ட. அவன் யாரு? ம்… முத்துகுமார். ஆள் எப்படியிருப்பான்? உன்னை முழுசா பார்த்திருப்பான் போல?”
அவனின் ஏளனங்கள் குறைந்தபாடில்லை. அவனுக்கு அவள் தன்னை ஏமாற்றிய வலி. அவளின் வலியைப் புரியாமல் தன் வலியை மட்டுமே பார்த்தான்.
“ப்ளீஸ் இப்படிலாம் அசிங்கமா பேசாதீங்க.” அவமானம் பிடுங்க அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கையெடுத்துக் கும்பிட்டு கதறினாள்.
“விக்னேஷ் யூ ஆர் டாக்கிங் டூ இஸ் நாட் ஃபேர்” என்று ருத்ரன் இடையிட…
[the_ad id=”6605″]
“நீங்க இருங்க டாக்டர். நீதான சொன்ன உடம்பைப் பார்க்கிறதால ஒரு பொண்ணு கெட்டுப் போயிரமாட்டாள்னு. ஓ… அதனாலதான் நான் பக்கத்துல வந்தப்பவும் மரம் மாதிரி நின்னுட்டிருந்தியா?”
“ஏன் இப்படி தரமில்லாம பேசுறீங்க?” என்றவள் சக்தியிடம் திரும்பி, “நீங்க ஏன் டாக்டர் அந்த மாதிரி டெஸ்ட் பண்ணுனீங்க? இதுதான் உங்க நியாயமா?”
“சாரிமா. நான் இப்படி எதிர்பார்க்கல. உன்மேல உள்ள அன்பால, எல்லாத்தையும் பாசிட்டிவா எடுத்துப்பார் நினைச்சிதான் ஹிப்னாடிக் மூலமா உன் கடந்தகாலம் தெரிஞ்சிக்க ட்ரீட்மெண்ட் கொடுத்தோம். அது இப்படி வந்து… தப்பா பேசுவார்னு தெரியாது” என்றாள் சக்தி.