15
பிறந்து விவரம் தெரிந்த இத்தனை ஆண்டுகளில் தாயை அணைத்ததில்லை. மடியில் படுத்ததாக ஞாபகமில்லை. தாய் தன்னைக் கொஞ்சியதாக நினைவடுக்கில் தேடிப்பார்த்தும் சுத்தமாக எதுவும் தோன்றவில்லை. ஆனாலும், தாய்மேல் கண்மண் தெரியாத பாசம்.
பார்க்காதது வரை தெரியாத ஒன்று தாயை நேரில் கண்டதும் தன்னை மீறி கட்டியணைத்துக் கொண்டாள். தாயினருகில் நின்றிருந்த அப்பா உறவு கண்களுக்குத் தெரியவில்லை. மகளின் முதுகைத் தடவிக்கொடுத்து, “சூர்யாமா அழக்கூடாது” என்று தான் அழுது கொண்டிருந்தார் பூவரசி.
‘இருக்கிறாளா? இல்லையா? கிடைப்பாளா? மாட்டாளா? சாகுறதுக்கு முன்னே தன் பெண்ணைப் பார்த்திட மாட்டோமா என்றிருந்தவராயிற்றே!’
சில நிமிடங்கள் அவர்களின் துக்கங்களைக் கண்ணீரில் கரையவிட்டு, பின் வம்படியாய் சகஜமாக்கி சம்பிரதாய வருவேற்பாக தன் தகப்பனை “வாங்க” என்றிருந்தாள்.
தர்மராஜனுக்குப் பாசம் இருக்கிறதா தெரியாது. மகளின் வாழ்க்கை பிரச்சனையில் இருக்கிறதே எதாவது செய்வோமா என்றெல்லாம் அவருக்கு தோன்றவதற்குரிய சாத்தியக்கூறுகள் சுத்தமாக இல்லை. “அம்மாவோட கேரளா போறீங்களா?” என்று மகன் கேட்டதற்கு சுற்றிப்பார்க்கும் ஆசையில்தான் வந்ததே.
“வாங்க கேக் ரெடி. ரெண்டு பேரும் சேர்ந்தே கட் பண்ணுங்க” என்ற பரத் சொல்ல… குழந்தையுடன் வந்து ஹரிணியை மெழுகுவர்த்தி ஊதி அணைத்து, அதில் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி கேக் கட் செய்தாள்.
“ஏன்மா ஒண்ணு திரும்பவும் ஏத்தியிருக்க?” எனக்கேட்ட இசக்கியிடம், “முடிஞ்ச வயசுக்கு அணைத்தாயிற்று. இது தொடங்கும் வயசுக்கும்மா” என்றாள்.
“ஏ புள்ள இசக்கி! என் பொண்ணு பேசுறதப் பாரு?” என ஆச்சர்யப்பட…
“இதெல்லாம் என்ன பேச்சு. இந்த வெள்ளச்சி இதுக்கு மேலயும் பேசுவா.”
[the_ad id=”6605″]
“இசக்கிம்மா?”
“ஆமாமா நானேதான்” என்று பதில் கொடுக்க, கேக்கின் முதல் துண்டை குழந்தைக்குக் கொடுத்து தாய்க்கு ஊட்டியவள், அடுத்த துண்டை இசக்கியின் வாயில் அடைத்தாள்.
வாயில் உள்ள கேக் துண்டோடு அவர் பேசிய வார்த்தைகளும் துண்டாட… வேகமாக முழுங்கி, “நான் சொன்னேன்ல உன் பொண்ணு கேடின்னு. அப்படியே நிரூபிக்கிறா பாரு.”
“முன்னல்லாம் இவ இப்படியில்ல இசக்கி. நான்தான் கவனிக்கலையோ?”
“ஏய் பூவு! உன் வீட்டுக்காரர் ஏதோ முணுமுணுக்கிற மாதிரியிருக்கு பாரு” என்று கிசுகிசுக்க…
“அவருக்கென்ன. புள்ள தப்பிச்சதை நினைக்காம இப்படி வந்து நிற்கிறாளேன்னு கவலை. அதோட அடுத்த கல்யாணம் முடிக்கிறது அவர் கௌரவத்துக்கு இழுக்காம். அப்பா அம்மா சேர்ந்து வந்தா பொண்ணு சந்தோஷப்படுவாளேன்னு கூட்டிட்டு வந்தேன். அப்பக்கூட நான் வேண்டாம் சொன்னேன் இசக்கி. இந்த ராமன் பயல்தான், சனியனை பனியன்ல கட்டிக்க நாங்க தயாராயில்லை. நீங்க கூடவே கூட்டிட்டுப் போங்கன்னு பஸ் ஏத்திவிட்டுட்டான்.”
“விவரமான பையன்” என்றவர், “ஹரிணிமா அப்பாவுக்கு கேக் ஊட்டியாச்சா?” என…
“இதோ” என்று சபரிக்கு ஊட்ட, அவன் மகளுக்கு ஊட்டிவிட… “அப்பா அம்மாவுக்கும் பர்த்டேதான அவங்களுக்கும் ஊட்டுங்க” என்றதில் சூர்யா அதிர, “அப்பா ஏன் நிற்குறீங்க? அம்மாவுக்கு ஊட்டுங்க. அப்புறம் அம்மா உங்களுக்கு ஊட்டுவாங்க” என்றதும், தான் போட்ட சிறு திரி பற்றியதில் சந்தோஷம் இசக்கிக்கு.
‘அட அட அடடடடா இது ரொம்ப நல்லாயிருக்கே. என்ன செய்யப்போறாள்னு பார்ப்போமே’ என்று வேடிக்கை பார்க்க தயாரானது சபரியின் மனம்.
கணவன், மகளையும் சபரியையும் திட்டி முணுமுணுப்பது பூவரசிக்கு நன்றாகவே கேட்டது.. ‘கடவுளே! இந்த மனுஷன் எதுவும் தவறாகப் பேசி இந்த இனிய தருணத்தைக் கெடுத்துவிடக்கூடாதே என்ற கவலை வேறு.’
“ஹரிணிமா அது தப்புடா” என்று குழந்தைக்குப் புரியவைக்க முயன்றாள்.
“அப்பா அம்மாவுக்கு ஊட்டி விடுறது தப்பு கிடையாது.” சிறிதும் யோசியாத பதில் ஹரியிணிடமிருந்து வர…
“பாப்பு நான்…” ‘உன்னைப் பெத்தவள் கிடையாது’ என்று சொல்லி குழந்தையின் சந்தோஷத்தைக் கெடுக்க மனம் வரவில்லை. நிமிர்ந்து சபரியிடம், ‘எதாவது செய்யுங்களேன்?’ என்ற கெஞ்சல் பார்வை பார்க்க…
அப்பார்வை தனில் சொக்கியவன் புருவம் உயர்த்தி, ‘நீ என்ன சொல்ல வர்றேன்னு எனக்குப் புரியலை?’ என்பதாய் பதில் பார்வை பார்த்தான்.
“நல்லா நடிக்கிறீங்க. நான் என்ன சொல்ல வந்தேன்னு புரியலையா?” மெல்லிய குரலில் அழுத்தம் கொடுத்து அவனைக் கடிய…
“புரிஞ்சிக்கணுமா?” என்றான் ஹஸ்கியாக.
“ம்…” என தலையசைத்தாள்.
“ஏன்?” என்ற பார்வையை சுவாரஸ்யமாக அவள் மீது செலுத்தி வரப்போகிறேன் என்ற சிரிப்பை அடக்கி நின்றிருந்தான்.
“என்ன ஏன்னு கேள்வி கேட்குறீங்க? ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க மச்சான்” என்று இறைஞ்சல் பார்வை பார்க்க… அதுவரை அடக்கிய சிரிப்பு பட்டென்று தெறிக்க… சில நொடித் தடுமாற்றம் அவளுள் எழத்தான் செய்ததோ!
‘இவங்களை… என் அவஸ்தை புரியாம பல்லைக்காட்டிட்டு இருக்காங்க’ என்று முறைப்பை அவனுக்குக் கொடுத்தாள்.
விளையாட்டைக் கைவிட்டவன் மகளினருகில் முட்டிபோட்டு அமர்ந்து, “இத்தனை பேர் இருக்கிறப்ப அம்மாவுக்கு வெட்கமா இருக்காதா செல்லம். அதான் அம்மா வேண்டாம் சொல்றாங்க.”
“ஏன்பா பொய் சொல்றீங்க? அம்மாவுக்கு நம்மகிட்ட என்ன வெட்கம்? இவங்க என் அம்மா. எங்க ஸ்கூல்ல பேரண்ட்ஸ் மீட்டிங்கப்ப ரேஷ்மாவை தனியா பாராட்டினதுக்கு, அவங்கம்மா அவளோட அப்பாவுக்கு கிஸ் பண்ணினாங்க. நான் பார்த்ததை அவங்க பார்த்ததும், அப்பா அம்மான்னா அப்படித்தான்டா சொன்னாங்க. நான் என்ன கிஸ் பண்ணவா சொன்னேன். கேக் ஊட்டதானப்பா சொல்றேன்.” தகப்பனை விட பெரிய விளக்கம் கொடுத்தாள்.
‘அந்த ரேஷ்மா அப்பா அம்மா கையில கிடைக்கட்டும்’ என்று சபரி மனதினுள் திட்ட… சூர்யாவோ அதிர்ந்து சபரியைப் பார்க்க… அவனும் அவளைக் காண… ‘இல்ல என்னால முடியாது’ என மௌனமாகத் தலையாட்டினாள்.
ஏனோ பெண்ணவளின் சிறு சிறு செய்கைகளில் இன்னுமின்னும் சுவாரஸ்யம் எழுந்தது சபரிநாதனுக்கு.
அத்தனை பேர் பார்வையும் அவர்கள் மேல் சுவாரசியமாய் படிய…
“பிஞ்சிலயே பழுத்திருக்கும் போல.” முகம் சுருக்கி தர்மராஜன் முணுமுணுக்க…
“அவள் குழந்தை. அவளுக்கென்ன தெரியும்? அவளுக்கு எதிர்ல முத்தம் கொடுத்து அதுக்கு விளக்கமும் கொடுத்த அந்த அதிபுத்திசாலிகளை சொல்லணும்” என்றார் பூவரசி.
“உன் பையன்கள் இருக்கிற தைரியத்துல எதிர்த்துப் பேசுறல்ல. எனக்கும் காலம் வரும். அப்பயிருக்கு உனக்கு.”
“வரும்போது மொத்தமா வாங்கிக்குறேன். இப்ப வந்த வேலையை மட்டும் பாருங்க.”
“என்னம்மா எதாவது பிரச்சனையா?” தகப்பனை முறைத்தபடி வந்து நின்றான் பரத்.
“உங்கப்பாவுக்குதான் நாம சந்தோஷமாயிருந்தால் பொசு பொசுன்னு வருமே.”
“அமைதியா இருக்கச் சொல்லுங்கம்மா. ரொம்ப நாள் கழிச்சி அக்கா கிடைச்சிருக்கா. இங்க இருந்தும் விரட்டிற வேண்டாம்னு சொல்லுங்க. அப்படி எதாவது நடந்துச்சிது, அப்பறம் நான் என்ன செய்வேன்னே தெரியாது.” கொஞ்சம் அதட்டிவிட்டே சென்றான்.
[the_ad id=”6605″]
“நேத்து பெய்த மழையில் இன்னைக்கு முளைச்ச காளான்லாம் என்னை மிரட்டுது. இதுக்குதான் என்னை கூட்டிட்டு வந்தியா?”
“புள்ளைங்களுக்கு அப்பா வேணும்னுதான் கூட்டிட்டு வந்தேன்” என நொடித்து, “ஜோடிப்பொருத்தம் எவ்வளவு அழகாயிருக்கு” என்றார் மகளை ரசித்தபடி.
“உனக்கு அசிங்கமாயில்ல?
“அசிங்கத்தைப் பற்றி நீங்க பேசுறீங்களா? சும்மா வாயை மூடிட்டு நில்லுங்க.”
“அம்மா டைமாகுது குடுங்க” என்ற குழந்தையின் கொஞ்சலில்… ‘வேற வழியே இல்லையா?’ என நினைத்து, “அம்மான்னு ரெண்டு பேர் நிற்கறீங்கள்ல. கொஞ்சம் சொல்ல வேண்டியதுதான?” என்று தன் இயலாமையை வெளியிட…
“யார் சொன்னாலும் அதைக் கேட்கிற நிலையில் அவள் இல்லை. கேக் ஊட்டுறதால எதுவும் மாறப்போறதுமில்லை. நாங்க தப்பா நினைக்கமாட்டோம்” என்று இசக்கி அறிவுறத்தினார்.
கையில் கேக் பீஸ் ஒன்றை எடுத்து நிற்க… சபரியும் அதேயிடத்தில் நிற்க, “வந்து வாங்கிக்கலாம்ல.” மெல்லிய குரலில் அதட்டி அருகில் வந்து வாயைத் திறக்கச் சொல்ல, அவன் வாயினருகே கொண்டு செல்ல… அவன் தலை சற்று முன்னே வந்ததில் கேக்குடன் சேர்த்து அவள் விரல்கள் சபரியின் நாக்கில் கோலமிட்டு உள்ளே செல்ல… அக்கோலம் தனைச் சுற்றி கலரிட்டது அவன் உதடுகள்.
சட்டென்று உடலெல்லாம் உதற வேகமாகக் கையை எடுத்தாலும் விரல்களிரண்டிலும் ஈரப்பதம் உணர்ந்தாள். தாங்க முடியாதொரு உணர்வு! அவள் இதுவரை உணராததொரு உணர்வு உடலெங்கிலும் பரவி ஒருவித மயக்கத்தைக் கொடுத்தது. ஒரு நொடியேனும் கண்கள் அவளைக் காட்டிக் கொடுத்ததோ சபரிக்கு! சட்டென்று வெளியே தெரியாதவாறு தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டாள்.
“அப்பா இப்ப நீங்க” என்று கேக் எடுத்துக் கொடுக்க, சூர்யாவின் வாய் திறக்கச் சொல்லி கேக்குடன் விரல்களை அவள் உதடு படுமாறு வைத்து எடுத்தவனின் விரல்களில் சிறு துண்டு கேக். அவளைப் பார்த்தவாறு தன் வாய்க்குள் வைத்து புருவம் தூக்கி “சூப்பர்” என்றான்.
வாயிலுள்ள கேக் அப்படியேயிருக்க ஆவென பார்த்திருந்தவள் அவன் வாயில் மீதி கேக்கை வைத்ததும், ‘அடப்பாவி!’ என்று முறைக்க… “ஹே” என்ற சத்தத்தில் இருவரும் நிதானத்திற்கு வந்தார்கள்.
“ரொம்ப நல்லாயிருக்கு. ஒருத்தனைக் கல்யாணம் பண்ணி இன்னொருத்தனோட கூத்தடிக்கிறது.” தர்மராஜன் குற்றச்சாட்டில் அனைவரும் அவரைக் கொலை வெறியாய்ப் பார்க்க… “ஏன்டி பொண்ணை ஒருத்தனுக்கு ஊரறிய கட்டிக் கொடுத்துட்டு, இப்ப இன்னொருத்தனுக்கு ஊரறியாம கூட்…”
“சும்மா நிறுத்துங்க” என்று பரத் கத்த… மற்றவர்கள் வந்த கோபத்தை அடக்கியபடி நிற்க… “இதுக்கு மேல பேசினா அப்பான்னு கூடப் பார்க்கமாட்டேன். என் அக்காவைப் பேச உங்களுக்கு என்ன தகுதியிருக்கு?” என்றவன் தாயிடம் திரும்பி, “நாம நிம்மதியாயிருந்தா இவருக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சும் ஏன்மா இந்தாளைக் கூட்டிட்டு வந்தீங்க?” என்றான்.
பரத் பேசுவதை யாரும் தட்டிக் கேட்காதிருக்க, அதில் இன்னும் கோபம் வந்த தர்மராஜன், “பெத்தவன்னு மட்டு மரியாதையில்லாம பேசுறான். நீ பார்த்திட்டிருக்க? முதல்ல உன்னைக் கொல்லணும்” என்று கை ஓங்கியபடி அடிக்க வர… அதற்குள் அவரின் கை சூர்யாவின் கைப்பிடியில் சிக்கியிருக்க பத்திரகாளியாய் நின்றிருந்தாள்.
“எங்கம்மா மேல ஒரு அடி விழுந்தது கொன்னுருவேன். மட்டையை வச்சிலாம் அம்மா, பையன்னு எல்லாரும் எங்கம்மாவை அடிப்பீங்களாமே? அதை வச்சி உங்களை ரெண்டே ரெண்டு அடி அடிச்சிப் பார்க்கட்டுமா?” பெற்ற தகப்பன் மேலிருந்த அத்தனை வருடத்துக் கோபம் அவள் வார்த்தையாய்.
“ஏய்! நீயெல்லாம்…”
“ச்சு… சும்மா கத்தாதீங்க. அடிச்சா உங்களுக்கு வலிக்காதோ? அப்படி வலிக்கும்னு தெரிஞ்சிருந்தா, அந்த வலியை நீங்களும் உணர்ந்திருந்தா, அம்மாவை அடிச்சிருக்க மாட்டீங்க. வலின்னா என்னன்னு தெரியாமலே பிறந்ததிலிருந்து இதோ இப்ப வரை வளர்ந்துட்டீங்க. யாராவது ஒருத்தர் அந்த வலியை உங்களுக்குக் கொடுத்திருந்தா, பொண்டாட்டியை மத்தவங்க அடிக்கவிட்டு வேடிக்கை பார்த்திருக்க மாட்டீங்க.”
“ஹா… எனக்கென்ன தலையெழுத்தா அடிவாங்க. நான் பிறந்ததிலிருந்து ராஜா.”
“அப்ப எங்கம்மாவுக்கு மட்டும் என்ன தலையெழுத்தா உங்ககிட்ட அடிவாங்க. ராஜாவாம் ராஜா. பொண்டாட்டியை மதிக்காதவனுக்கு அவளைக் கைநீட்ட மட்டும் உரிமையிருக்கா?”
“நான் ஆம்பளை. அவள் நான் சொல்றதை தான் சொல்லணும். ஏன்னா நான் அவளுக்குத் தாலி கட்டியிருக்கேன். எனக்கில்லாத உரிமையா?”
“தாலி கட்டுறவன்லாம் ஆம்பளையாகிட முடியாது” என்றாள் பட்டென்று.
“சூர்யா பேசாதமா. நீ பேசப்பேச அவர் இன்னும் பேசுவாரு” என்று பூவரசி தடுக்கவும், கோபத்தின் உச்சிக்கே சென்றாள்.
“ம்மா… பேசாம விட்டு விட்டுதான் ஆம்பளைன்ற ஆணவத்துல ரொம்பவே ஆடுறார்.”
“ரொம்பப் பேசுற நீ. பெத்த தகப்பனைப் பேசுற பேச்சா இது? ஆம்பளைன்னா ஆணவம் இருக்கதான் செய்யும். ஆம்பளையா இருந்ததாலதான் உன் அம்மா இத்தனை குழந்தைகள் பெத்திருக்கா. என்னோட பழகின பொண்ணுங்ககிட்டக் கேட்டுப்பாரு தெரியும். பெத்ததாச்சேன்னு பொறுமையா போனா என்னையே ஆம்பளையான்னு கேட்கிறியா?” கோபத்தில் பதிலுக்கு தன்னைத்தானே கேவலப்படுத்துவது அறியாது பேச…
“பெத்த பொண்ணுகிட்டப் பேசுறதையா நீங்க பேசுறீங்க? பொண்டாட்டியை விட்டுட்டு பத்து பொம்பளைங்களை வச்சிருக்கிறதுக்குப் பெயர் ஆம்பளைத்தனம் கிடையாது. அதுக்கு வேற பெயர். தான் ஆம்பளை இல்லையோன்னு தன் மேலேயே நம்பிக்கை இல்லாதவன்தான் அதை நிரூபிக்கப் போறேன்னு கண்ட பொம்பளைகிட்டப் போவான். நீங்க எதை நிரூபிக்க அவங்ககிட்டப் போறீங்க?” நெற்றியடியாகக் கேட்க…
[the_ad id=”6605″]
“சபாஷ் அக்கா!” என்று விசிலடிக்கப் போனவனை சபரி தடுக்க அமைதியாக நின்றான் பரத். இருப்பினும் கண்களில் ஆர்வம் மின்னியது.
ஒரு தகப்பனைத் திட்டினால் ஆர்வம் வருமா? வருகிறது தர்மராஜன் பெற்ற பிள்ளைகளுக்கு.
“அடிச்சி உதைச்சி பொண்ணை அடைஞ்சா அதுக்கும் பெயர் ஆம்பளைத்தனமா? அதுதான் ஆம்பளைத்தனம்னா… நீங்க போற பொம்பளைங்ககிட்ட அந்த ஆம்பளைத்தனத்தைக் காட்டினா, அடுத்த நிமிஷம் செருப்பால அடிச்சி வெளிய போகச்சொல்லி காரித்துப்புவா” என்று ஆங்காரமாகக் கத்த…
“ஏய்ய்ய் உன்னை…” மகளிடம் கேட்க முடியாமல், “என்னடி பார்த்துட்டிருக்க?” என்று மனைவியிடம் பாய…
“ப்ச்… நான் பேசிட்டிருக்கும்போது அங்க என்ன சத்தம்?” என அதட்டி, “நான் சொன்னதுல என்ன தப்பு? அந்த மாதிரி பெண்கள் நீங்க அடிச்சா பரவாயில்லன்னு நின்னு வாங்கிட்டிருப்பாங்களா? அவங்ககிட்ட இறங்கிப் போற உங்களை மாதிரி ஆண்கள், மனைவிகிட்ட கொஞ்ச நேரம் உட்கார்ந்து அன்பா பேசிப்பாருங்க, அவங்க உங்களைத் தாங்குற விதமே வேற. மத்தவளை மென்மையா அரவணைக்கத் தெரியுதுல்ல? அதைக் கட்டினவள்கிட்டக் காட்டினால்தான் என்ன போச்சி உங்களுக்கு? அதைச் செய்திருந்தா ஆம்பளைன்னு ஒத்துக்கலாம். கட்டினவள்கிட்ட மட்டும்!” என்றாள் அழுத்தமாக.
“கல்யாணம் உரிமை இதெல்லாம் நீ பேசாத. கட்டினவனை விட்டுட்டு கண்டவனோட அலையுற நீ பேசுறியா என்னை?”
மகள் சொன்னது எதுவும் அவர் காதில் ஏறவில்லை. ஏறவும் ஏறாது. ‘ஆண்மகன் என்பவன் பெண்ணை ஆளப்பிறந்தவன்! ஆணவமானவன்! தான் சொல்வதுதான் சரியென்று நிற்கும் திமிரானவன்! படித்திருக்கிறேன் என்ற மமதையானவன்! பெண்கள் என்பவர்கள் தங்களுக்கு சேவை செய்ய மட்டுமே என்ற ஈகோத்தனம் அதிகமுள்ளவன்!’