“அந்தளவு வேண்டாம் சூர்யா. இப்ப நீங்க அமைதியா தூங்கி ஃப்ரெஷ்ஷா எழுந்திருங்க. உங்க மனசுல உள்ள பாரமெல்லாம் இறங்கிருச்சி. இதுவரை நடந்ததை எல்லாத்தையும் மறந்திருங்க” என்று அவளை மயக்கத்திலிருந்து தூக்கத்தில் விட்டு வெளியே வந்து நர்ஸ் ஒருவரை சூர்யாவிற்குத் துணையாய் அமர்த்தி டாக்டர் அறைக்குள் வர, சற்று நேரம் மூவருக்குள்ளும் அமைதி.
சட்டென்று குலுங்கி அழுத விக்னேஷை இருவரும் பாவமாகப் பார்க்க, “அவளை இப்படிப் பார்க்க முடியலை டாக்டர். கண்ட நாய்கள் செய்த தப்புக்குத் தண்டனையை இவள் அனுபவிக்கிறா. நான் அவளை ரசிச்சதோட நிறுத்தியிருக்கணும் டாக்டர். கல்யாணம் செய்து…”
“விக்னேஷ் நீங்க இல்லைன்னா இன்னொருத்தருக்கு முடிச்சி வச்சிருப்பாங்க. ஒரு வகையில் நீங்க அவங்க வாழ்க்கையைக் காப்பாத்தியிருக்கீங்க. உங்க இடத்தில் இன்னொருத்தன் இருந்தா அந்தப் பொண்ணோட நிலை என்னாகியிருக்கும்? மெண்டலாகக் கூட சாத்தியமிருக்கு.”
“டாக்டர்!”
“லைஃப்ல ஒவ்வொரு கட்டத்திலும் தன்னைத்தானே அலசி ஆராய்ச்சி பண்ணியிருக்காங்க. கட்டினவனுக்கு நேர்மையா இருக்கணும்னு கட்டம் போட்டு வாழ்ந்திருக்காங்க. அதை சிலர் தகர்க்கவும் செய்திருக்காங்க. இதுல முக்கியமா கவனிக்க வேண்டிய நபர் சபரி. அவரை உங்களுக்குத் தெரியுமா?”
“போன மாசம் வீட்டுக்கு வந்திருந்தார். சூர்யா சொன்ன மாதிரி ஆள் நல்லா ஹீரோ மாதிரியிருப்பார். அவருக்கு ஒய்ஃப் கிடையாது. மூணு வயசுல ஒரு பொண்ணு உண்டு. இவளைப் பார்த்ததிலிருந்து அம்மான்னுதான் கூப்பிடுவா. இவளுக்கு அதுல ஒரு சந்தோஷம்.” பிரம்மசக்தியைக் காண்பித்து டாக்டர்கிட்டக்கூட சொன்னேன். “நான் தொட்டா தொடத்தான செய்ற தொட்டுக்கோன்னு பாறை மாதிரி நிற்கிறவ, தெரியாமல் அவர் கைபட்டதுக்கே கூச்சத்தில் ஒதுங்குறா.”
“உங்க ஒய்ஃப்கிட்டப் பேசினதுல ஒரு உண்மையை நீங்க ஒத்துக்கிட்டே ஆகணும் விக்னேஷ்.
“நீங்க சொல்ல வர்றது புரியுது டாக்டர்” என்றான் மனம் கசங்க.
[the_ad id=”6605″]
“தெளிவாவே சொல்றேன். முதல்முறையா சபரியைப் பார்த்ததுல ஒரு ஹீரோ ஒர்ஷிப். தன் தோழிகளிடமும் அவர் போட்டோ காண்பிச்சி, அவங்க மச்சானோட அழகைக் காண்பித்து பெருமை பேசியிருக்காங்க. என் எண்ணம் என்னன்னா அவங்க சடங்கு போட்டோவை அப்பப்ப எடுத்துப் பார்த்திருக்கணும். கழுத்திலிருக்கும் செயின் இதுவரை கழட்டியதில்லைன்னா அதை அந்தளவு பத்திரமா பாதுகாத்திருக்கணும். இன்னொரு சந்தேகம் என்னன்னா அந்தச் செயினை தாலியாக்கூட கற்பனை செய்திருக்க சான்ஸ் இருக்கு.”
“டாக்டர்!”
“அது என்னோட சந்தேகம்னுதான் விக்னேஷ் சொன்னேன். சில இடங்கள்ல அவங்க நிறைய மறைச்சிருக்காங்க. அதை எந்தக் காலத்திலும் யாருக்கும் தெரியக்கூடாதுன்னு தனக்குள்ளேயே வச்சி அழுத்தியிருக்கலாம். சடங்கப்ப சபரி தன்மையா பேசினது, அவரோட போட்டோ, அந்த செயின்னு அவங்க மூளையில் அவங்களறியாம சபரியோட பெயர் பதிஞ்சிருச்சி. ஹீரோ க்ரஷ்ல இருந்தவங்க மனசு அவரை அவங்களுக்கு ஹீரோவாகவே ஆக்கிருச்சி.”
“கல்யாணம் பண்ணனும்ன்ற ப்ளான்லயே இல்லாதவங்களை நீங்க பெண் கேட்டுப் போனதுல குழப்பம். அதுவும் யாரோ ஒருத்தன் செய்ததுக்காக அவசரமா உங்களைப் பேசியிருக்காங்க. அம்மாவுக்காக சம்மதிச்சாலும் இதுதான் நம்ம வாழ்க்கைன்னு உங்களை ஏத்துக்கிற முடிவெடுத்திருக்காங்க. கனவுலயாவது உங்க முகம் தனக்குள்ள பதிஞ்சிருக்கான்னு பார்க்க, வேறொரு உருவத்துல குழப்பம் அதிகமாயிருக்கு. அவங்க மறைச்சாலும் அந்த உருவம் சபரிதான்னு நாம ஈஸியா கெஸ் பண்ணிரலாம். சப்போஸ் அப்பவே அது சபரிதான்னு தெரிஞ்சிருந்தா உங்களை மறுத்திருப்பாங்களோ என்னவோ! சூழ்நிலை உங்க வாழ்க்கையை இணைச்சிருச்சி.”
“உங்களுடைய அந்த வேகம் இவனும் மத்தவன் மாதிரிதான்னு விலக வச்சிருச்சி. நீங்க அவங்க விருப்பம் கேட்டு ஷாப்டா நெருங்கியிருந்தா ஒருவேளை இதான் தன் லைஃப்னு சகஜமாகியிருப்பாங்க. உங்க அவசரம், அவங்க மனநிலை, உங்களை அவங்க ஹஸ்பண்டா ஏத்துக்கவேயில்லை. இனியும் ஏத்துக்கிற ஐடியா கிடையாது. முடிஞ்சளவு உங்களை விட்டு விலகப்பார்ப்பாங்க.”
“என்னை விட்டுப் போயிருவாளா டாக்டர்?” அவனை மீறிய ஏக்கம் அவனுள்.
“நீங்க நல்லாயிருக்கணும்னு நினைக்கிறாங்க விக்னேஷ். அப்ப அதுக்கும் சாத்தியமிருக்கு. இதுல நீங்க கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னன்னா, கல்யாணத்துக்கு முன்ன கற்பை இழக்கக்கூடாது ஒழுக்கம்தான் முக்கியம்னு நினைக்கிறவங்க, சப்போஸ் உங்களை விட்டு விலகினாலும், ஏன் அந்த சபரியே வந்து கேட்டாலும் இன்னொரு கல்யாணம் செய்துக்கமாட்டாங்க.”
“இப்ப நீங்க தெளிவா முடிவெடுக்க வேண்டிய தருணம். இந்த வாழ்க்கையே போதும்னு நினைச்சா அவங்களை சரி செய்ய கொஞ்சம் டைம் எடுக்கும். காத்திருக்கீங்களா?” எனக் கேட்க…
“கொஞ்ச நேரம் அமைதியா இருக்கணும் டாக்டர். என் முடிவும் அதிலேயே எடுத்திருவேன்.”
“உங்க ஒய்ஃப் இருக்கிற அறையிலேயே இருக்கலாம். சின்னதா சப்தம் கூட வராது.”
“அதுக்கு முன்ன இந்த கூல்ட்ரிங்ஸ் குடிங்க” என்று கொடுக்க…
“வேண்டாம் டாக்டர். நல்ல முடிவோட வந்து குடிக்கிறேன்” என்று மனைவி இருக்கும் அறைக்குச் சென்றவன் அவள் முகம் வருட எழுந்த கையைக் கீழிறக்கி நர்ஸை வெளியே அனுப்பி அந்த சேரில் அமர்ந்தான்.
“எனக்காக உயிரையேக் கொடுக்கிறேன்னு சொல்ற உன்னால, சேர்ந்து வாழ்றேன்ற வார்த்தையை சொல்ல முடியலைல்ல. கடவுள் போடுற கணக்கு ரொம்பவே வலிக்குது சூர்யா. உன்னை ரசிக்க மட்டுமே முடியும்னு இருந்தப்ப, கேட்டுப் பார்ப்போம்னு பெண் கேட்டேன். எந்தவித கஷ்டமும் இல்லாம நீ கிடைச்ச. ஆனா, உன் கஷ்டம் எனக்குத் தெரியாமல் போச்சிதே. இப்பவும் உன்னை லவ் பண்றேன் சூர்யா. எனக்காக நீ மாற முயற்சி பண்ணியிருக்க. அதுவே நம் திருமணத்திற்கு நீ கொடுத்த மரியாதைதான்.”
“உன்னை டைவர்ஸ் பண்ணினாலும் உன் மச்சானை நீ கல்யாணம் செய்துக்க மாட்டன்னு டாக்டர் சொல்றார். நான் எப்படி அப்படியே விடுவேன். எனக்கு உன் வாழ்க்கை முக்கியம் சூர்யா. சூர்யனா என் வாழ்க்கையில் சுட்டெரிக்கிற நீ, சபரி வாழ்க்கையில் உதயாவா உதயமாகணும். அவர் கண்ணுல உனக்கான அன்பிருக்கு. கண்டிப்பா அது காதலாகும். அதையும் நான் நடத்திக் காட்டுவேன்.”
[the_ad id=”6605″]
“சின்ன வயசிலிருந்து கஷ்டத்தை மட்டுமே அனுபவிச்ச நீ எப்பவும் சந்தோஷமாயிருக்கணும். நான் கொஞ்சம் பக்குவமா நடந்திருந்தா நீ என் பக்கம் சாய்ந்திருப்பியாம். எனக்கு அதுல நம்பிக்கையில்லை சூர்யா. எத்தனை காலமானாலும் உன்னோட மனசு சபரியை விட்டு மாறவே மாறாதுன்றதுதான் நிஜம்.”
“நீ நல்லாயிருக்கணும்னா என்னைப் பிரியணும். இல்ல நான் உன்னைப் பிரிக்கணும். இதான் சரி. இந்தச் சமூகம் என்னையும் விட்டுவைக்காது. எல்லாத்தையும் தாண்டி உன் மனசுக்குப் பிடிச்ச வாழ்க்கையை நான் வாழ வைப்பேன். இது என் அம்மா மேல சத்தியம். இப்ப எழுந்ததும் என் மூலமா வர்ற கடைசி சோதனையையும் தாங்கிக்கத் தயாராயிரு சூர்யா.”
“என்ன முடிவு பண்ணியிருக்கீங்க விக்னேஷ்?”
“என் சூர்யா டாக்டர். அவள் வாழ்க்கை நல்லாயிருக்கணும். அவளுக்குப் பிடித்த அவளோட சபரி மச்சானோடவும், அந்தக் குழந்தையோடவும் சந்தோஷமா வாழணும்.”
“விக்னேஷ் அப்ப…”
“எஸ் டாக்டர். அவளோட ஹீரோவை அவளுக்குத் தரப்போறான் இந்த நண்பன்.”
“க்ரேட் விக்னேஷ். சிம்ப்ளி க்ரேட். எவ்வளவு பெரிய முடிவெடுத்திருக்கீங்க தெரியுமா? இதனால பாதிப்பு சூர்யாவிற்கு மட்டுமில்லை உங்களுக்கும்தான். அதுவும் சினி ஃபீல்டுல சின்னச் சின்னதா வந்துட்டிருக்கீங்கன்னு என் ஒய்ஃப் சொன்னாங்க. இந்த நேரத்துல உங்க பெர்சனல் அடியானா… எல்லாத்தையும் யோசிச்சிட்டீங்களா?” என்று டாக்டர்.ருத்ரன் கேட்க…
“ஆமா டாக்டர். என் சூர்யாவுக்காக! ஹ்ம்… இனி அப்படி சொல்லக்கூடாதுல்ல. சபரியின் உதயாவுக்காக!”
“லைப்ல ஒரு சிலரை மறக்க முடியாது விக்னேஷ். வயசுல சின்னவர்னாலும் உங்களோட பக்குவமான சிந்தனை என்னை மலைக்க வைக்குது. உங்களை மாதிரி ஒருத்தரை சந்திச்சதுக்கு நான் பெருமைப்படுறேன். ஹாட்ஸ் ஆஃப் யூ மேன்” என்று சல்யூட் வைக்க…
“ஆமா விக்னேஷ்… இப்ப கஷ்டமாயிருக்கிறது கொஞ்ச நாள்ல மாறும். அதுக்காக நீங்க கல்யாணம் செய்துக்காம இருந்திராதீங்க” எனறாள் வேகமாக.
பிரம்மசக்தியின் பயத்தில் சிரித்தவன், “நான் கல்யாணம் பண்ணிக்கலைன்னா அது என்னைப் பெத்தவங்களுக்குக் கொடுக்கிற தண்டனை டாக்டர். எனக்கு அடுத்து இரண்டு தம்பிகள் இருக்காங்க. என்னால அவங்க லைஃப் பாதிக்கப்படக்கூடாது. அதனால உண்மையைச் சொல்லி கண்டிப்பா பண்ணிப்பேன்.”
“விக்னேஷ் நாங்க உங்களுக்கு பொண்ணு பார்த்தால் ஓகேவா?”
“கண்டிப்பா டாக்டர். பட் சூர்யா சபரியோட சேருற வரைக்கும் அவங்க சில விஷயங்களை விட்டுக்கொடுக்கணும். சூர்யா மேல உள்ள காதலால கிடையாது. அவளோட லைஃப்ல சபரி கணவனா வர்றவரை மட்டும்தான். அதன் பிறகு அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துப்பாங்க. நண்பனா இருந்தாலும் ஒருத்தர் பெர்சனலுக்குள்ள ஓவரா நுழையக்கூடாது. அவளோட காதல் அவள் எண்ணத்தை மாற்றி வாழவைக்கும்” என்றான் தெளிவாக.
“குட் விக்னேஷ். என்னோட இத்தனை வருட வாழ்க்கையில் உங்களை மாதிரி ஒருத்தர்… சான்ஸேயில்லை.”
“தேங்க்யூ டாக்டர்.”
“ஃபேமிலி ஃப்ரண்டாகிட்ட மேன். அப்புறமென்ன டாக்டர்ன்ற அண்ணான்னே கூப்பிட.”
“சரிங்க டாக்… சரிங்கண்ணா. அடுத்து நான் செய்யப்போற எல்லாத்துக்கும் நீங்கதான் சாட்சி. அவள் முன்னால என்னைத் திட்ட, ஏன் அடிக்கக்கூட செய்யலாம்” என்றிருந்தான்.
வீடியோவைப் பார்த்து முடித்து கலங்கிய கண்களில் கண்ணீர் வர அமர்ந்திருந்தான் சபரி.
“நண்பன் உணர்வுதான் வருதுன்னு சொன்ன மனைவிக்கு கடைசி வரை நண்பனா இருக்கவே முடிவு பண்ணிட்டார் விக்னேஷ். அந்தளவு அவளைக் காதலிச்சிருக்கார். எந்தளவு தெரியுமா? அவளோட சர்டிபிகேட் கொடுத்து, அவளுக்குத் தையல் மட்டுமே தெரியும்ன்றதால ஃப்ரண்ட் மூலமா மும்பையில் வேலை வாங்கிக் கொடுத்து ஹாஸ்டல் ஏற்பாடு செய்து, வேலை பார்க்கிற இடத்தில் ஃப்ரண்ட் அப்பா ஸ்ரீகர் மூலமா அவளை என்கரேஜ் பண்ண வச்சிருக்கார்.”
“இதுல எந்த இடத்திலும் நாங்க கிடையாது. அவளைப் பொருத்தவரை செய்ததெல்லாம் நாங்கதான்.”
“ஏன் டாக்டர் இவ்வளவு கஷ்டப்படணும்? நேரடியா எங்ககிட்ட அனுப்பியிருக்கலாமே?”
“ம்… அனுப்பியிருக்கலாம். அப்படி அனுப்பியிருந்தா முகம் முழுக்கப் புன்னகையோட காதலிச்சவனையே கணவனா அடைஞ்ச சந்தோஷம் பிரதிபலிக்க இருக்கிற இந்த சூர்யா, கடைசிவரை உங்களுக்குக் கிடைச்சிருக்க மாட்டா.”
“டாக்டர்!”
“அதுதான் நிஜம். ஊருக்கு அனுப்பினா புருஷனை விட்டு வந்தவள்னு பேசிப்பேசியே சாகடிக்க ஒரு கூட்டமிருக்கு. ஏன் அவளைப் பெத்த தகப்பனே இருக்காரே. வாழ்க்கையும் போய் நிம்மதியும் கெட்டு, ஏற்கனவே மனசளவுல பாதிக்கப்பட்டிருக்கிறவள் முழுசா பைத்தியமாகியிருப்பா. அதிலிருந்து காப்பாத்தவும் செய்யணும், அதே நேரம் நீங்க அவளைத் தேடியும் வரணும். உங்க மனநிலை பார்த்துதான் அவளை உங்களோட சேர்த்து வைக்கவா இல்ல அவளுக்கான தனி அடையாளத்தோட நிம்மதியா இருக்கவிடவான்ற முடிவுல இருந்தார்.”
[the_ad id=”6605″]
“சூர்யா வீட்லயிருந்து சென்னைக்கு வர்றேன் சொன்னவங்களையும் வரவிடலை. சென்னைக்கு வந்தா கண்டிப்பா அவங்களைப் பார்க்க வருவீங்க. அப்படி வந்தா சூர்யாவைப் பார்க்காம போகமாட்டீங்க நினைச்சார். என்ன நீங்க லாங் கேப் விட்டு வந்தீங்க. அவர் ஒய்ஃப் காவ்யா என்னோட சிஸ்டர் மாதிரி. சினிமாவுல நடிக்க சான்ஸ் தேடிட்டே எங்க கார் கம்பெனியில என் அசிஸ்டெண்டா வேலை பார்த்தா. இப்ப சான்ஸ் கிடைச்சி நடிச்சிட்டிருக்கா. இவங்க ரெண்டு பேருக்குமான உறவு சினிமா. சோ ரெண்டு பக்கமும் பேசி கல்யாணத்தை முடிச்சி வச்சிட்டோம்.”
“அப்புறம் ஏன் டாக்டர் பிராத்தல் கேஸ்ல மாட்டிவிடணும்?”
“எல்லாத்தையும் நானே சொல்ல முடியாது சபரி. சம்பந்தப்பட்டவரிடமே கேட்டுக்கோங்க. இப்ப சொல்லுங்க? உங்க ஒய்ஃப் யார்னு தெரியாமல் இருந்தால்தானே ஆச்சர்யம்.”
“சரண்டராகிட்டேன் டாக்டர்” என்றான் புன்னகையுடன்.
“எனிவே கங்க்ராட்ஸ். ஹேப்பி மேரீட் லைஃப். உங்களை நெருங்கி வந்திருக்கிற சூர்யாவை தாம்பத்திய வாழ்க்கையிலும் இணைய வைங்க. ரொம்ப நாளா இழுத்தடிச்சா இந்த லைஃபே பழகிரும். இப்படியே போனா நீங்க சேர்றது எப்ப? சூர்யாவோட குழந்தை கனவு என்னாகிறது? என்னடா சட்டுன்னு இப்படிப் பேசுறாளே யோசிக்கிறீங்களா? டாக்டர்ஸ் சில இடங்களில் உண்மையை அப்படியே சொல்லிடணும். உங்க முதல் குழந்தைக்கான டெலிவரி நான் பார்த்தா இன்னுமே சந்தோஷப்படுவேன்.”
“பேசவிடாமல் நானே பேசுறேனா? சாரி ரொம்ப நேரமாகுது. நிதானமா பேச ஆரம்பிச்சா ஊர் போய்ச் சேர முடியாது. அப்புறம் டாக்டர்.ருத்ரன் ருத்ர அவதாரம் எடுக்க ஆரம்பிச்சிருவாங்க. அவங்க பிள்ளைங்க அதுக்கும் மேல. ஓகே பை சபரி. பைனலா சொல்றேன்… ரொம்பக் காத்திருக்காதீங்க. காதல்ல காத்திருத்தல் சரி. கணவன் மனைவி உறவுக்குக் கொஞ்சம் செட்டாகாது. ஆல் தி பெஸ்ட். உங்க வெள்ளச்சிக்கும் சொல்லிருங்க” என்று பேசிக்கொண்டே நிற்காமல் செல்பவளை வியப்பாய் பார்த்துக் கொண்டிருந்தான் சபரிநாதன்.