ம்க்கூம்.. இன்னும் லவ்வையே சொல்லல.. அந்த பாக்கியம்லாம் எனக்கில்ல.. என ஏக்கத்தோடு நினைத்து.. ‘இரண்டு வருசம் கழிச்சின்னாலும் கதிர்கிட்ட சொல்லி பொண்ணு கேட்டா தவிர.. அவகிட்ட காதல் சொன்னா நிச்சயம் ஒத்துக்க மாட்டா.. அந்தளவுக்கு அவங்க பெரிய பொண்ணால பட்ட அவமானத்தை சொல்லி சொல்லி வளர்த்துட்டிருக்கார் அவங்கப்பா..” என்றான் தளர்வாக.
செல்வி.. ‘ரெண்டு வருசம் கழிச்சி கதிர்கிட்ட சொல்றதை இப்பவே சொல்லிடேன்.. இல்ல உனக்கு முன்ன யாராவது நல்ல இடத்துல பொண்ணு கேட்டு.. பெரியவளால பட்ட அவமானத்துக்கு பயந்து சின்ன வயசுன்னாலும் பரவால்ல.. நல்ல இடம் அமையும் போதே கல்யாணம் செய்துடலாம்னு அவங்கப்பா முடிவு செய்துட்டா பெரிய வம்பாகிடும்..” என்றாள்.
‘அச்சோ இப்படி வேற ஒன்னு இருக்கா..?” என யோசித்தவன்.. ‘ஆனாலும் செய்த உதவிக்கு நன்றி கடனா பொண்ணை கேக்குறாங்கன்னு அவங்கப்பா தப்பா நினைச்சிட்டா..” என்றான் தயக்கத்தோடு.
‘போடா முட்டாள்.. இதுவரைக்கும் எத்தனை பேருக்கு உதவி செய்திருக்க.? எல்லார்கிட்டயும் பொண்ணு கேட்டு நிக்க முடியுமா.? யார் புரிஞ்சிக்கலைன்னாலும் உன் மச்சான் உன்னை புரிஞ்சிப்பான்.. அவன் அவங்கப்பாகு சொல்வான், கை சரியானதும் உன் மனசை ஜெயிச்சவளை பார்க்க போறோம்..” என்றாள் கட்டளையாக.
அப்பொழுதும் மனம் தாளாமல்.. ‘இப்போதான்க்கா அவளுக்கு பதினெட்டு வயசு..” என்றான் சங்கடமாக.
‘டேய்.. என்ன ஓவரா போற.? நியாயமா பார்த்தா லவ் பண்ற பொண்ணை கட்டிக்க நீதான் எங்ககிட்ட கெஞ்சனும்.. போனாப் போகுது சின்ன பையன் ஆசைப்பட்டுட்டானேன்னு பார்த்தா..” என்றாள் பொய் மிரட்டலாக.
கலையரசன் அமைதியாக இருக்க.. ‘இப்போதைக்கு பேசி முடிக்கிறது மட்டும் செய்துக்கலாம்.. கல்யாணம் அப்புறம் செய்துக்கலாம்.. கதிரவன்கிட்ட உன் மனசை வெளிப்படுத்தி அவங்கப்பாம்மாகிட்ட பேச சொல்லு.. உனக்கு தயக்கம்னா என்கிட்ட விடு.. நான் பார்த்துக்கிறேன்..” என்றாள்.
‘இல்லயில்ல நானே பார்த்துக்கிறேன்..” என்றான்.
‘ம்.. கை சரியானதும் பொண்ணு பார்க்க வரோம்னு சொல்லிடு..” என்றாள் செல்வராணி. கலையரசன் தாய் தந்தையரைப் பார்க்க.. ‘கலா அமைதியாக இருந்தாலும் மயில்சாமி சம்மதமாய் தலையசைக்க.. ‘சரிக்கா..” என்றான் சந்தோசத்தோடு.
—- ——- ——- —— ——
இரண்டு வாரம் கழித்து கையில் கட்டு பிரிக்கப்பட.. ‘இன்னும் இரண்டு மாசம் வரைக்கும் ப்ராக்டிஸ் பண்ணக் கூடாது.. அதுக்கப்புறமும் கைக்கு ஸ்ட்ரெயின் ஆகுறமாதிரி எக்ஸ்சர்சைஸ் செய்ய கூடாது..” என கண்டிப்போடு சொன்னார் டாக்டர்.
வீட்டிற்கு வந்த மகனிடம்.. ‘அதான் ப்ராக்டிஸ் செய்யக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காங்கள்ல.? மெடிக்கல் லீவ்லதான இருக்க.? இங்கையே இரேன்..” என்றார் கலா.
‘இல்லம்மா அங்க ஒருத்தரை பார்க்கனும்..“ என சாக்கு போக்கு சொல்லி கிளம்பியிருந்தான் திருச்சிக்கு.
தஞ்சையில் இருக்கும் போதே இரண்டு முறை கால் செய்திருந்தான் கதிரவன்.. உடல்நிலையைப் பற்றி சொன்னவன் நிலாவைப் பற்றி ஏதும் பேசவில்லை.
தற்போது அழைக்கலாம் என கதிரவனிற்கு அழைத்தான். எப்பொழுதும் இரவுதானே அழைப்பார் என்ற யோசனையோடு அழைப்பை ஏற்ற கதிரவன்.. ‘கட்டு பிரிச்சாசிங்களா.? கை வலி பரவால்லைங்களா.?” என்றான்.
‘ம் பிரிச்சாச்சி கதிர்.. இங்க திருச்சி வந்துட்டேன்..” என்றான்.
‘ஏன் கலை வந்திங்க.? இங்க தனியா கஷ்டப்படனுமே..” என்றான் அக்கறையாக.
‘ஒரு முக்கியமான வேலை.. அதான் வந்தேன்..”
‘ஓ..” என்ற கதிரவன் அமைதியாகிட.. ‘கதிர் நீங்க பிஸியா.? நான் வேற இந்த டைம்ல போன் செய்துட்டேன்.. அப்புறம் கால் பண்ணவா.?” என்றான்.
‘என்ன கலை இப்படி சொல்லிட்டிங்க..? நீங்க எனக்கு கால் செய்து பேசுறதே பெரிய விசயம்.. இன்னைக்கு ஏதோ அதிசயமா இந்த டைம்க்கு கால் பண்ணிருக்கிங்க..” என்றான் கேள்வியாக.
‘உங்களை பார்க்கனும்.. எப்போ ஃப்ரீன்னு சொல்லுங்க.. நான் ராசிபுரம் வரேன்..” என்றான்.
‘சரிங்க கலை.. இப்போ ஆஃபீஸ்ல இருக்கேன்.. ஒரு ப்ராஜக்ட் ஒர்க் போய்ட்டிருக்கு.. நான் மதியம் கூப்பிடட்டுங்களா.?” என்றான்.
கலை சரியென்கவே இணைப்பை துண்டித்தவன்.. அவரச வேலையிருப்பதாக அலுவலகத்தில் சொல்லி கிளம்பினான் திருச்சிக்கு.
மதியம் ஒன்னரை மணிபோல் திருச்சி வந்தவன் கலையரசன் வீட்டின் அழைப்பு மணியை அழுத்த.. பிரபாகரனாக இருக்குமென நினைத்து கதவைத் திறந்த கலையரசனிற்கு இன்ப அதிர்ச்சிதான். ‘கதிர்.. வாங்க வாங்க..” என அழைத்தான் உற்சாகமாக.
கதிரவன் உள்ளே வர.. ‘என்ன கதிர் இப்படி இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டிங்க.?” என சிரிப்போடு கேட்க.. ‘என்னை பார்க்கனும்னு உங்களுக்கு தோணினதே எனக்கு பெரிய சந்தோசம்.. இப்போதான் ஆப்ரேசன் செய்துருக்கிங்க.. உங்களை அலைய வைக்கவேணாம்னு நானே வந்துட்டேன்..” என்றான் தானும் சிரிப்போடு.
‘யாவரும் நலமே..” என கிண்டலோடு சொன்னவன்.. அங்கே உணவு இருப்பதை கண்டு.. ‘இன்னும் லன்ச் சாப்பிடலைங்களா.?” என்றான்.
‘இனிதான்.. “ என்க.. கலையின் உடல்நிலையை கதிரவன் விசாரிக்க.. சில நிமிடம் அதுகுறித்து பேசி முடித்து.. ‘உங்கள்ட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும்.. நானே நேர்ல வரலாம்னு இருந்தேன்.. சொல்லாம கொள்ளாம நீங்க வந்து நிக்கிறிங்க..” என்றான் கலையரசன்.
இரண்டு வருடங்களாக சகஜமாக பேசிப் பழகியிருப்பதால் ‘என்ன விசயம் கலை..?” என ஆர்வத்தோடு கதிரவன் கேட்க.. ‘நான் இங்க தனியா இருந்து கஷ்டப்படறேனாம்.. அதனால எனக்கு கல்யாணம் செய்யனும்னு அப்பா அம்மா ஒரே பிடிவாதம்..” என்றான்.
‘நல்ல விசயம்தானே..?” என்றான் சந்தோசத்தோடு.
‘ம்.. நல்ல விசயம்தான்.. ஆனா என் மனசுக்கு பிடிச்ச பொண்ணுக்கு இன்னும் படிப்பே முடியலயே.? எப்படி போய் பொண்ணு கேட்க..?” என்றான் மொபைலை பார்த்தவாறு.
‘கலை.. லவ் பண்றிங்களா.?” என்றான் அதிர்வோடு.
‘ஏன் கதிர்.? லவ் அவ்வளோ பெரிய தப்பா.? இப்படி அதிர்ச்சியாகுறிங்க..” என்றான் தன் பதட்டம் மறைத்து.
‘நான் சொல்றனேன்னு தப்பா நினைக்காதிங்க கலை.. சுவாதி இப்படி செய்ததாலோ என்னவோ.. இந்த லவ்வுன்னாலே எனக்கு டென்சன் ஆகிடுது..” என இறுகிய முகத்தோடு சொன்னவன்.. பின்னே சற்று இயல்பாகி.. ‘ம்.. எனக்கு அப்படிங்கிறதால எல்லாருக்கும் அப்படியிருக்கனும்னு இல்லையே.. நீங்க சொல்லுங்க..” என்றான் ஆர்வமாக.
‘இரண்டு வருசம் முன்னதான் முதன்முறையா அவளைப் பார்த்தேன்.. பார்த்ததும் அவ தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்சது.. அப்போ லவ் கிடையாது.. அதுக்கப்புறம் திரும்ப பார்க்கும்போதுதான் நான் லவ் பண்றேன்னு எனக்கே தெரிஞ்சது..” என்றான்.
‘வீட்ல அம்மாப்பா ஒத்துக்க மாட்றாங்களா.?” என்றான்.
‘அதெல்லாம் பேசி சம்மதம் வாங்கியாச்சு.. ஆனா சம்மதப்பட்ட பொண்ணுகிட்ட இன்னும் என் மனசை திறந்ததில்ல..” என்றான்.
சின்னப் பொண்ணுமான்னு எத்தனை சொன்னாலும்.. பொண்ணுன்னு இருந்தா நாலு பேரு கேட்கத்தான் செய்வாங்க.. அப்படி யாராவது கேட்டு நீ லவ் பண்ற பொண்ணுக்கு வேற இடத்துல கல்யாணம் முடிவாகிடப் போகுது.. அதனால இப்போ பேசி முடிச்சிக்கலாம்.. ஆறு மாசம் கழிச்சி கல்யாணம் வச்சிக்கலாம்.. கல்யாணம் முடிச்சிட்டு நீ எவ்ளோன்னாலும் உன் பொண்டாட்டியை படிக்க வைன்றாங்க..” என்றான்.
‘காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்ன்னா நம்ம நிலா வயசுதான்.. ஆனாலும் கல்யாணம் முடிச்சிட்டு படிக்க வைன்றாங்களே, இதுவே பெரிய விசயம், ” என பெருமையோடு சொன்னவன், ‘இதுல என்கிட்ட பேச என்னயிருக்கு கலை..? அந்த பொண்ணுகிட்டயோ இல்ல அவங்க வீட்லயோதான பேசனும்..” என்றான்.
‘எஸ் கதிர்.. நான் நிலவழகியைத்தான் லவ் பண்றேன்.. அதான் உங்கள்ட்ட பேசிட்டிருக்கேன்..” என்றான் நேர்கொண்ட பார்வையோடு.
அதிர்ச்சியில் கதிரவன் எழுந்து நின்றிட..’எதுக்கு கதிர் இவ்வளவு அதிர்ச்சி.? உங்க தங்கைக்கு நான் பொருத்தமில்லையா..?” என்றான் பொறுமையாகவே.
கலையரசனின் உயரமும் குணமும் அறிந்த கதிரவன்.. ‘அது.. அதுயில்ல கலை.. உங்கள்ட்ட இதை நான் எதிர்பார்க்கல..” என்றான் திணறலாக.
‘ம்.. அதுயில்ல.. என் தங்கையை விரும்புவிங்கன்னு..” என உரிமையான முறைப்போடு சொன்னவன்.. ‘ஆனா நிலா ரொம்ப சின்ன பொண்ணு.. இப்போதான் பதினெட்டு வயசு..” என்றான் கவலையாக.
‘அப்போ நான் ஓ.கே வா..” என்றான் ஆவலாக.
‘ம்.. இப்படியொரு தங்கமகன் என் தங்கையை கேட்ட பின்ன.. வேற யாரையாவது உங்களுக்கு நிகரா வைக்க முடியுங்களா.?” என்றான் பெருமையாக.
‘தேங்க்ஸ் கதிர்..” என்றான் உணர்ச்சிப் பெருக்கோடு.
தங்கள் வீட்டில் அனைவருக்கும் சம்மதமென கலையரசன் சொல்லியிருக்க.. ‘அம்மா பிரச்சனையில்ல.. ஆறு மாசத்துல கல்யாணம்னா அப்பா ஒத்துக்கிறது கஷ்டம்தான்..” என்றான் யோசனையாக.
‘வீட்ல எல்லார்கிட்டயும் பேசிட்டு எனக்கு கால் பண்ணுங்க கதிர்.. முக்கியமா உங்க தங்கை என்ன சொல்வாளோன்னு டென்சனாவே இருக்கு..” என்றான்.
இப்படியாக இவர்கள் பேசிக்கொண்டிருக்க.. இங்கே கீதாராணி.. ‘அவன் எப்படி லவ் பண்ணலாம்.? அதுக்கு நீங்க எப்படி சம்மதிச்சிங்க.? எங்களையெல்லாம் அப்படியா வளர்த்திங்க.? என்னை விட்டுட்டு நீங்களா ஒரு முடிவுக்கு வந்துருக்கிங்க.. என்னை கூட விடுங்க.. என் புருசன் என்ன நினைப்பார்.? அவர்கிட்ட கூட கலந்துக்காம முடிவு செய்துருக்கிங்க.. அவருக்கு என்ன மரியாதையிருக்கு..?” என பொறிந்து கொண்டிருந்தாள்.