மறுநாள் காலையில் ஸ்ரீதர்க்கும் யாழினிக்கும் பரிசம் போட்டனர். யாழினிக்கு உள்ளே பயம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். ஒரு வழியாக பரிசம் போட்டு முடித்ததும் எல்லோரும் மண்டபத்துக்கு கிளம்பத் தயாராகினர். மித்ரன், யாழினி முகத்தில் இருக்கும் பயத்தை பார்த்து விட்டு பங்கு ஏன் இப்படி இருக்க அங்க பாரு நாளைக்கு ஓடிப் போக போற ஸ்ரீதர் எவ்வளவு சந்தோஷமா இருக்கான். நாளைக்கு நல்ல பிள்ளையாக போற நீ ஏன் இவ்ளோ ஃபீல் பண்ற என்றான். யாழினி மித்து சொல்வதைக் கேட்டு, ஸ்ரீதரை பார்த்து சிரித்து விட்டாள். எல்லோரும் மண்டபத்துக்கு கிளம்ப தயாராகினர். நம்ம வானரங்கள் எல்லாம் ஒரு வேனில் ஏறி கிளம்பினார்கள்….
மித்ரன் காய்ஸ் இனிமே தான் நம்ம கவனமா இருக்கணும். நம்ம பிளானை கேர்ஃபுல்லா எக்ஸிக்யூட் பண்ணனும் என்றான். யாரும் சொதப்பி விடாதீங்க இது யாழினி வாழ்க்கை என்றான். யாழினி ஆமாப்பா நமக்குள்ளே ஏதாவது வாய்க்கா தகராறு இருந்தா அப்புறமா பேசி தீர்த்துக்கலாம். யாரும் என்னை பழி வாங்கிடாதீங்க என்றாள். எல்லோரும் கோரஸாக நாங்க இருக்க பயமேன் என்றனர். யாழினி நீங்க இருக்கிறதுதானே பயம் என்றாள். மித்ரன் யாழினி கிளிசரின் எல்லாம் வச்சிருக்கேல? கரெக்டா பெர்பார்ம் பண்ணிடு என்றான். மற்றவர்களிடம் உங்களுக்கு நான் கொடுத்த வேலை எல்லாம் ஞாபகம் இருக்கா ? எவனாவது டீசண்டா இருந்தா அவன வாட்ச் பண்ணனும். அவனை மேடை பக்கத்தில் நெருங்க விடக்கூடாது என்றான். அவன் சூர்யாவிடம் , டேய் நீ மேடைக்குப் பக்கத்தில் நிக்குற. எவனாவது வந்தா எனக்கு சிக்னல் குடுக்கனும் என்றான். சூர்யாவும் டன் என கட்டை விரலைக் காட்டினான் . அப்புறம் சுஜி நீ என்ன பண்றனா யாழினி அழும்போது அவளை சமாதானம் பண்ற மாதிரி ஆக்ட் பண்ணனும் என்றான். மித்ரன் யாழினியிடம், பங்கு செம்மையா அழுகுற, முடிஞ்சா மயக்கம் போடுற மாதிரி ஆக்க்ஷன் பண்ற என்றான். யாழினி தலையை முன்னும் பின்னும் ஆட்டினாள் .
பின் மித்ரன் அனைவரிடமும், இதையெல்லாம் விட முக்கியமான விஷயம் பார்வதி பெரியம்மாவும் மகேந்திரன் பெரியப்பாவும் வந்ததும் கருணாகரன் மாமா செம்மையாக கோபப்படுவார். அப்ப பயப்படாம எல்லாரும் அவங்கவங்க டயலாக்கை மறக்காம சொல்லணும் என்றான். எல்லோரும் தலையை தலையை ஆட்டிச்சுங்க. தலையை தலையை ஆட்டுறீங்க கரெக்டா செஞ்சா சரி. கடவுளே நீதான் என்னை காப்பாத்தணும் பா என்றான்….
மித்ரன், அப்புறம் இது தான் நாம போடுற கடைசி மீட்டிங் . மண்டபம் போயிட்டா இதைப்பற்றி பேச முடியாது என்றான். மண்டபம் வந்தது எல்லோரும் மண்டபத்திற்கு உள்ளே போய் திங்க்ஸ் எல்லாம் வச்சு செட்டில் ஆயிட்டாங்க. ஸ்ரீதர் வீட்டிலிருந்து எல்லோரும் வந்திட்டாங்க. மணமகள் அறையில் யாழினி, சுஜி, மது மற்றும் யாழினியோட பிரண்ட்ஸ் எல்லோரும் உட்கார்ந்து பேசிகிட்டு இருந்தாங்க….
துருவ் தன் வீட்டில் தன் பெற்றோரிடம் கூறி கொண்டிருந்தான் . கருணா மாமாவோ இல்ல தாத்தா பாட்டியோ உங்களை திட்டினாலோ அவமானப்படுத்தினாலோ ஏன் அடிக்க கூட செஞ்சாலும் நீங்க அமைதியா இருக்கணும் என்றான். பார்வதியும் மகேந்திரனும் கோரசாக அவங்க எங்கள கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினாலும் நாங்கள் பேசாமல் இருப்போம் என்றனர். துருவ் குட் இதைத்தான் நான் உங்ககிட்ட எதிர்பார்த்தேன் வெரிகுட் என்றான். பார்வதி துருவ் எனக்கு கருணா அண்ணாவை நெனச்சாதான் பயமா இருக்கு . அவர் என்ன பார்த்தா கோபப்படுவார் என்று தான் இத்தனை நாள் அவர் கண்ணில் படாமலே இருந்தோம். அண்ணா ரொம்ப கோபப்படுவார் என்றார். துருவ் அம்மா உங்களுக்கு உங்க ஃபேமிலியோட சேர்ந்து சந்தோசமா வாழனுமா? வேணாமா ? என்றான். பார்வதி வேண்டும் என தலையை ஆட்டினாள். அப்போ இந்த கஷ்டத்தை தாங்கித்தான் ஆகணும் என்றான். பார்வதி எதுனாலும் செய்கிறேன் என்றார் உறுதியாக….
துருவ், சரி நானும் சித்துவும் அபியும் இப்பவே கிளம்புறோம். நீங்க மார்னிங் மண்டபத்துக்கு பக்கத்தில எங்கயாவது வெயிட் பண்ணுங்க. நான் கால் பண்ணதும் உள்ளே வாங்க என்று விட்டு சித்து அபியுடன் மண்டபத்துக்கு புறப்பட்டான்…..
துருவ் மண்டபத்தில் நுழைந்ததும் சென்றது யாழினியின் ரூமிற்கு தான். அங்கே அனைவரும் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர். துருவ், சரி எல்லோரும் வெளியே போங்க. நானும் என் ஆளும் பேச்சிலரா இருக்க போற கடைசிநாள என்ஜாய் பண்ணனும் என்றான். மித்ரன் என்ன பேச்சுலரா இருக்க கடைசி நாளா? என்றான். துருவ் ஆமா நாளைக்கு எனக்கும் யாழினிக்கும் கல்யாணமாகிடும்ல என்றான். மித்ரன் அந்த நம்பிக்கை வேற இருக்கா உனக்கு என்றான். துருவ் ஜர்க்காகி என்னடா மச்சான் இப்படி சொல்லிட்ட என்றான். மித்ரன் பின்ன இதுங்களை வச்சுட்டு என்ன பண்றது என்றான். துருவ் அவர்களைப் பார்த்தான். சுஜியும் சூர்யாவும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். ஆகாஷ் வழக்கம்போல சந்திரிக்காவுடன் போனில் கடலை போட்டு கொண்டிருந்தான். சுபா பிரபுவுடன் பேசிக்கொண்டிருந்தாள். திவ்யா கோபமாக இருக்க, ஹரி அவளை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தான். துருவ் இவர்களை பார்த்து தலையில் கை வைத்துவிட்டான் . மித்ரன் மச்சி இந்த பைத்தியங்களை வச்சுக்கிட்டு என்னடா பண்ணுவது என்றான். துருவ் ஆமா டா என்றான் இவர்கள் பேசுவதை கவனித்த எல்லோரும் ஹலோ ஹலோ நாங்க என்ன பண்ணாலும் உங்க வேலைய கரெக்டா பண்ணி விடுவோம் என்றனர் அவர்கள். துருவ் எல்லாம் கரெக்டா நடந்தா சரி என்றான் ….
நாம போய் ஸ்ரீதர் ரூம்ல தூங்குவோம் எனக்கு கிளம்பினர் மித்ரனும் துருவ்வும். அங்கு ஸ்ரீதர் மீராவுடன் கடலை போட்டுக் கொண்டிருந்தான். அதைப் பார்த்து துருவ், எல்லோரும் அவன் அவன் ஆள் கூட பேசிட்டு இருக்கான். நான் மட்டும் தனியா புலம்பறேன் என்றான். ஸ்ரீதர் அவனிடம் என்ன ப்ரோ ஏதாவது சொன்னிங்களா? என்றான். துருவ் ஒன்றுமே இல்லை யூ கண்டின்யூ என்றான். ஸ்ரீதர் தன் வேலையை தொடர்ந்தான்…
துருவ் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். வசந்தி யாழினி அறையில் உள்ள அனைவரையும் தூங்க அனுப்பிவிட்டு அவளை தொந்தரவு செய்யாதீங்க. அவ தனியா தூங்கட்டும். நீங்க இருந்தா அவளை தூங்க விட மாட்டீங்க. அவ காலையில் சீக்கிரம் எந்திரிக்கணும் என்றார. அவர் பேச்சை கேட்டு அனைவரும் வேறு அறைக்கு சென்று விட்டனர்….
துருவ் தூக்கம் வராமல் வெகுநேரம் புரண்டு கொண்டிருந்தான். பின் யாழினியிடம் பேசலாம் என யாழினி ரூம்க்கு சென்றான். யாழினிக்கும் அதே நிலைமைதான். துருவ் ரூம் கதவை தட்ட, யார் இந்த நேரத்தில் என கதவை திறந்தவள் துருவ்வை பார்த்ததும் அவனை உள்ளே இழுத்து கதவை பூட்டி என்ன பேபி இந்த நேரத்திலே என்றாள். அவன் தூக்கம் வரல பேபி என்றான். யாழினி உனக்குமா? எனக்கும் தான் பேபி என்றாள். துருவ் நாளைக்கு இந்நேரம் என்ன நடந்திருக்கும்னு தெரியல பேபி? நினைச்சாலே பயமா இருக்கு என்றான். யாழினி பயப்படாத பேபி, கண்டிப்பா நல்லதே நடக்கும் என்றாள். துருவ் யாழினி மடியில்படுத்து பேசி கொண்டிருந்தவன் அப்படியே உறங்கி விட்டான். யாழினி அவனை எழுப்ப முயற்சித்து முடியாத காரணத்தினால் அவனுக்கு அருகில் படுத்துகொண்டாள்….
மறுநாள் காலையில் வசந்தி யாழினி, கதவ திற டைமாயிடுச்சு என கதவை தட்டிக் கொண்டிருந்தார். பிளானை கரெக்டா செயல்படுத்துவதற்காக மித்ரன் சீக்கிரம் எழுந்து குளித்து துருவ்வை தேடிக்கொண்டிருந்தான். தேடி கொண்டிருந்தவன் வசந்தி கதவை தட்டுவதை பார்த்து, அத்தை நீங்க போய் வேலையை பாருங்க. இவளை நான் எழுப்புறேன் என்றான். வசந்தியும் சீக்கிரம் அவளை எழுந்து கிளம்ப சொல்லுப்பா என்று விட்டு அவர் கிளம்பினார்…
மித்ரன் யாழின் கதவை தட்ட அவள் திறக்கவே இல்லை. யாழினியும் துருவ்வும் எழுந்தபாடில்லை. மித்ரன் ஹேங்கரை இழுக்க அது திறந்து கொண்டது சீ…..இழுத்தோன திறக்குற கதவை தானா இவ்வளவு நேரம் தட்டிட்டு இருந்தேன் என கதவை திறந்தவன் ஷாக் ஆகி விட்டான். ஏன்னா அவன் பார்த்த காட்சி அப்படி. யாழினியும் துருவும் கட்டிப்பிடிச்சு தூங்கிட்டு இருந்தாங்க. மித்ரன் ஓடிச் சென்று அட கருமம் புடிச்சவங்களா? இதுங்க நம்மள கொண்ணு கொல்லி வைக்காமல் விடாதுங்க போலவே என புலம்பி விட்டு, யாழினியை உளுக்கினான். யாழினி எழுந்து தூக்கக் கலக்கத்தில் என்ன மித்து ஏன் இவ்வளவு சீக்கிரம் எழுப்புற? காபி கொண்டு வந்தியா என்றாள். மித்து, காபி கொண்டு வரலை பங்கு. உன்னை குழிதோண்டிப் புதைத்த கடப்பாரை கொண்டு வந்திருக்கேன் என்றான். யாழினி எதுக்கு பங்கு என்ன திட்டுற என்றாள். மித்ரன் உன் பக்கத்துல பாரு என்றான். யாழினி துருவ்வைப் பார்த்து விட்டு ஐயோ இவன் இங்கேயே தூங்கி விட்டானா என முழித்தாள். மித்ரன் முழிக்கிற முழியை பாரு கண்ணத்தோண்டி காக்காவுக்கு போட்றுவேன். எழுப்பி விடு அவனை என்றான். யாழினி, பேபி எழுந்திரு என எழுப்பினாள். துருவ், பேபி கொஞ்ச நேரம் தூங்கிவிடேன் என்றான்…..
மித்ரன் அட நாசமா போனவனே எண்ணமோ மறு வீட்டுக்கு வந்த புது மாப்பிள்ளை மாதிரி கொஞ்ச நேரம் தூங்கிகிறேன்றானே! எழுந்திருடா என உதைத்தான். துருவ் அடிச்சு புடிச்சு எழுந்து என்னாச்சுடா மச்சி என்றான். மித்ரன், என்ன நொன்னாச்சு. ஏன்டா எருமை மாட்டு பயலே! நீ எதுக்கு டா இங்க வந்த என்றான். துருவ் மச்சான் என் பேபி கூட பேச வந்தேன் அப்படியே தூங்கிவிட்டேன் என்றான். மித்ரன் ஒன்னுவிட்டேன் வை அவ்வளவு தான் . ரூமை விட்டு போடா சீக்கிரம் யாரும் பாக்குறதுக்கு முன்னாடி என்றான். துருவ் எழுந்து சென்று விட்டான்….
மித்ரன் கடவுளே எப்படியாவது கல்யாணம் முடிஞ்சு என்னை இப்படியே உயிரோட வீட்டுக்குக் கொண்டு போய் சேர்த்துடுப்பா என வேண்டினான். கல்யாண வேலை பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. நம்ம வானரங்கள் எல்லாம் எழுந்து குளித்து ரெடியாகி அவர்களுக்கு கொடுத்த வேலையை செய்து கொண்டிருந்தனர் . அதாங்க கல்யாண வயசுல பசங்க யாராவது இருக்காங்களான்னு கண்காணிச்சிட்டு இருந்தாங்க. மித்ரன் எல்லா வேலையும் சரியாக நடக்கிறதா என சூப்பர்வைஸ் செய்து கொண்டிருந்தான்…..
சுஜி அண்ணா காப்பாத்து என ஓடி வந்தாள் . சூர்யா உன்னை விடமாட்டேன் என ஓடி வந்தான். சுஜி மித்ரன் பின்னாடி ஒளிந்து கொண்டு அண்ணா காப்பாத்து இவன் என்னை அடிக்க வர்றான் என்றாள். சூர்யா , மித்து அவளை விடு. நான் அவளை அடிக்காம விடமாட்டேன் என்றான். மித்ரன் என்ன சண்டை உங்களுக்குள்ள என்றான்……
சூர்யா , அவ என்னை பாத்து பானிபூரி விக்குறவன் மாதிரி இருக்கேன்னு சொல்றாள் என்றான். சுஜி அவன்தான் ஃபர்ஸ்ட் என் டிரஸ்ஸ பார்த்து கேவலமா இருக்குன்னு சொன்னான் என சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். மித்ரன், சில்லுவண்டை எல்லாம் பிளான்ல சேர்த்தது என் தப்பு தான் என நினைத்து விட்டு சூர்யாவிடம் உனக்கு நான் என்ன வேலை கொடுத்தேன் என்றான். சூர்யா ஸ்டேஜ் பக்கத்துல நிற்கிறது என்றான். மித்ரன் அதை பண்ணாம என்ன பண்ற என்றான். சூர்யா அது மாப்பிள ஓடிப் போன பிறகுதான் நிக்க சொன்ன என்று கத்தி, சொன்னான். மித்ரன் அவன் வாயை மூடி ஏன்டா லூசு இப்படி கத்துற? யாருக்காவது கேட்டா என்ன பண்றது. உனக்கு எல்லாம் வேலையை கொடுத்தேன் பாரு என்ன எதால அடிக்குறதுன்னு தெரியல என்று விட்டு, உன்னை கெஞ்சி கேட்கிறேன் தயவு செஞ்சு எதையும் சொதப்பிடாதடா என்றான். சூர்யா , சரி சரி ரொம்ப கெஞ்சாத நான் போய் என் வேலையை பாக்குறேன் என்று கிளம்பினான் . மித்ரன் சுஜியிடம் திரும்பி ஏதோ கூறுமுன் சுஜி, நிறுத்து எனக்கு தெரியும் நான் போய் என் வேலையை பார்க்கிறேன் என்றாள்….
மீரா வந்து மித்துவிடம் மித்து ஸ்ரீதர் ரூம் எங்க இருக்கு என்றாள். மித்ரன் அந்த ரூமை கைகாட்டி விட்டு மற்றவர்கள் என்ன செஞ்சுட்டு இருக்காங்க என்று பார்க்கப்போனான். மது புடவை கட்டி அழகாக நடந்து வந்து கொண்டிருந்தாள். அதைப் பார்த்த மித்ரன் அப்படியே சிலையாக நின்று விட்டான்….
மது மித்ரனிடம் மாமா எப்படி இருக்கு எனக்கு புடவை என்றாள். மித்ரன் நீ எப்பவுமே அழகுதான் செல்லகுட்டி. சாரியில் செம அழகா இருக்க என்றான் . அவன் பேசிக் கொண்டிருக்கும்போது சுபா ஒரு வயதான தாத்தாவுடன் சென்று கொண்டிருந்தாள். மித்ரன் சுபாவை அழைத்தான். சுபா அந்த தாத்தாவிடம் அந்த ரூம் தான் நீங்க போங்க நான் வரேன் என்று விட்டு , மித்ரனிடம் என்ன பங்கு என்றாள்…..
மித்ரன் யார் அந்த தாத்தா என்றான். சுபா அதுவா யாழினியோட தாத்தாவோட ஃப்ரண்ட். ஸ்ரீதரை பாக்கணும்னு சொன்னாரு அதான் அவன் ரூம்க்கு கூட்டிட்டு போறேன் என்றாள். மித்ரன் அடியே பாதகத்தி எனக்கு ஆப்பு வைக்கிறதுக்குனே எங்கிருந்து வரீங்க? அங்க மீரா இருக்கா என அவசரமாக ஓடினான் …..
அதற்குள் அந்த தாத்தா உள்ள போய் மீராவும் ஸ்ரீதரும் நெருக்கமாக உட்கார்ந்து இருப்பதை பார்த்துவிட்டார். மித்ரன் ஓடிவந்து தாத்தா ஏன் இப்படி சிலை மாதிரி நிக்கிறீங்க என்றான். தாத்தா, டேய் என்னடா மாப்பிள்ளை வேற ஒரு பொண்ணோட உட்கார்ந்து இருக்கான் என்றார். மித்ரன் என்ன சொல்வது என்று தெரியாமல் சிரித்துக் கொண்டு நின்றான். தாத்தா என்னடா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே இருக்க என்றார். ஸ்ரீதர் மீராவும் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தனர். மித்ரன் அங்கு சென்று கொண்டிருந்த துருவ்வை அழைத்து, தாத்தா இவர்தான் மாப்பிள்ளை அவர் மாப்பிள்ளையோட ஃப்ரண்ட் என்றான். தாத்தா இல்லையே வெளியே பிளக்ஸ்ல இவனோட போட்டோ தான் இருந்துச்சு என்றார். மித்ரன் ஐயோ தாத்தா உங்களுக்கு சரியா கண்ணு தெரியலைனு நினைக்கிறேன். இங்க பாருங்க இவன் தான் பட்டு வேட்டி சட்டை போட்டு டிப் டாப்பா இருக்கான் என்றான் . தாத்தா சரி சரி மாப்ளை நல்லா ஜம்முனு இருக்காரு என்று விட்டு கிளம்பினார்…..
மித்ரன் ஸ்ரீதரையும் மீராவையும் கொலைவெறியோடு முறைத்தான். ஸ்ரீதரிடம் இப்படியே பண்ணிட்டு இருந்தா உன்ன போட்டுக் கொடுத்து விடுவேன் என்றான் . மீரா ஐயோ மித்ரன் கோபத்தில் ஏதாவது பண்ணி விடாதே என்று வேகமாக ரூமை விட்டு வெளியேறினாள். மித்ரன் துருவ்விடம், மச்சான் நான் சொன்ன மாதிரியே நீ எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்ற. மாமா முன்னாடி அப்படியே நல்லவனா நடிக்கிற ஓகேவா என்றான். துருவ், உண்மைக்கே நான் நல்லவன் தான் டா இதுல என்ன நடிக்கிறதுக்கு இருக்கு என்றான். மித்ரன் போதும் போதும் சீன் போட்டது போய் மாமாவை கவர் பண்ற வழியை பாரு என்றான் . துருவ் கருணாகரன் முன்னாடி வேலை செய்வது போல நடித்துக் கொண்டிருந்தான்….
யாழினி ரூமில் கிளம்பிக் கொண்டிருந்தாள் . திவ்யா அவளுக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருந்தாள். ஒரு பெண் யாழினி ரூம்க்கு வந்தாள். கல்யாண பெண் போல மேக்கப் போட்டு பட்டு சேலை உடுத்தி இருந்தாள். வந்தவள் யாழினியை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள் . அவள் பின்னாலேயே வந்த இளைஞன் யாழினியை முறைத்துவிட்டு , கவி நீ இங்க என்ன பண்ற? வா அப்பா கூப்பிட்டார் என அழைத்துச் சென்றான் ……
திவ்யா யாரு இதுங்க? ஏன் இப்ப உன்ன முறைத்துவிட்டு போதுங்க என்றாள். யாழினி அதுங்க ஸ்ரீதரோட அத்தை பசங்க. அந்த பொண்ணு பேரு காவ்யா . அந்த பையன் பேரு சாத்விக். அந்த பொண்ணுக்கு ஸ்ரீதரை கல்யாணம் பண்ணிக்க ஆசை. ஆனால் ஸ்ரீதர் மறுத்துவிட்டாராம் . அதான் அந்த பொண்ணு என்ன இப்ப முறைச்சுட்டு போது என்றாள். திவ்யா அது முறைக்கிறதை பார்த்தால் கல்யாணத்தை நிறுத்த ஏதோ ப்ளான் பண்ணிருச்சு போல என்றாள். யாழினி விடு பங்கு, நமக்கும் நல்லதுதான். நமக்கும் எக்ஸ்ட்ரா ஒரு சான்ஸ் கிடைக்கும்ல என்றாள். திவ்யா அதுவும் சரிதான் பங்கு என்றாள். வசந்தி வந்து என்னை யாழினி இன்னும் கிளம்பிட்டு இருக்க. சீக்கிரம் ரெடி ஆகு டைம் ஆயிடுச்சு என்று விட்டு சென்றார்…..
கலாட்டாக்கள் தொடரும்…..
|
|
|
|