அவள் பெயர் பவித்ரா என்று தெரிந்ததும் அதை டாக்டர் இடம் சொன்னான் , பின் ஆபரேஷன் எப்படி நடந்தது அவளுக்கு எதாவது பிரச்னை இருக்கிறதா என்று அவன் கேட்டான் . அதற்கு டாக்டர் , ” சார் அவங்க உயிருக்கு ஒரு பிரச்னையும் இல்லை ஆனால் அவங்க முகத்துல கொஞ்சம் காயம் இருக்கு கண்ணுக்குள்ள கொஞ்சம் கல்லும் மண்ணும் போயிடு அதை வெளியே எடுத்து கண்கள் கட்டப்பட்டிருக்கு அவங்க முகம் எல்லாம் கட்டு போட்டுருக்கு , அதனால் அவங்க கண்ணனுக்கு ஏதாச்சும் பிரச்னையை னு தெரியவில்லை மற்ற படி அவங்களுக்கு பிரச்னை இல்லை . விக்ரம் , ” டாக்டர் , அவங்க கண்ணு தெரியவில்லை என்றால் அதை சரி செய்ய முடியுமா ? ” டாக்டர், ” அது ஒன்னும் பிரச்னை இல்ல விக்ரம் சார், வெறும் மணல் தானே இப்போ தெரியவில்லை என்றால் அவங்க கண்களை சுத்தம் செய்தால் தெரியும் கவலை படித்திங்க சார் ” விக்ரம் , ” சரி டாக்டர் , ரொம்ப
நன்றி அந்த பொண்ணை எப்போ பார்க்கலாம் டாக்டர் “. டாக்டர் , ” அவங்களை நாளைக்கு பார்க்கலாம் கட்டு பிரித்து விடுவோம் அவங்களுக்கு இன்னும் சுயநினைவு வரவில்லை இன்னும் 8 மணி நேரத்தில் வரும் ” விக்ரம் , ” சரி டாக்டர் , நான் கிளம்புகிறேன் , உங்களுக்கு எதாவது உதவி தேவை என்றால் மறக்காமல் என்னை அழையுங்கள் , என்னுடைய பாதுகாவலர்கள் கொஞ்ச பேர் இங்க இருப்பாங்க அவர்களிடமும் கேட்டுக்கொள்ளுங்கள் ” என்றான் . டாக்டர் அவனிடம் சரி என்று கூறி விடை பெற்றார் . அவனும் வீடு திரும்பினான் . அவனது மனம் பவித்தரவையே நினைத்தது , அவனுக்கு இந்த உணர்வு பிடித்திருந்தது ஆனால் ஒரு புதிய உணர்வு இதற்கு முன்னால் இப்படி ஒரு உணர்வு அவனுக்கு வந்ததில்லை , ஏன் இந்த உணர்வு என்று யோசித்தான் இருந்தும் அவன் அவள் முகத்தை பார்க்கவில்லை அவள் யாரென்று தெரியாது , அப்போது ஒரு சமையல்காரன் அவனிடம் இரவு உணவு என்ன வேண்டும் என்று கேட்டான் , அதற்கு அவன் எனக்கு ஒரு கப் பால் போதும் என்று கூறினான் . அவருக்கு வியப்பு இவன் இரவு தானே அதிகம் சாப்பிடுவான் இப்பொது ஒன்னும் உண்ணவில்லை , அவருக்கு மனம் கஷ்டமாக இருந்தது , அவனிடம் அவர் , ” தம்பி , நான் உங்க வீடு சமையல்காரன் தான் எனக்கு உங்களிடம் கேட்க உரிமை இருக்கிறதா என்று தெரியவில்லை இருந்தும் என் மனம் கேட்கவில்லை . உங்களுக்கு எதாவது பிரச்னையா தம்பி , உங்களுக்கு புடிச்சவங்களுக்கு ஏதாச்சும் ஆயிருச்சா என்று கேட்டார் . அவன் அதிர்ந்தான் , ” அண்ணா ! எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை ” , சமையல்காரனுக்கு அதிர்ச்சி , ” தம்பி நீங்க என்ன அண்ணன் என்று கூப்பிடுறிங்க , கண்டிப்பா என்னவோ இருக்கு என்னிடம் சொல்ல உங்களுக்கு விருப்பம் இல்லை பரவாயில்லை உங்களுக்கு சொல்ல தோணும் போது சொல்லுங்கள் எனக்கு மகிழ்ச்சி தம்பி , என்று சமையல்காரன் மகிழ்ச்சி ஓடு அவனுக்கு பால் கொண்டு வர போனான் . அவனுக்கும் ஆச்சர்யம் தான் எப்படி ஒரு சமையல்காரனை அண்ணன் என்று கூப்பிடுவோம் என்று , அதன் பின் பால் வந்ததும் குடித்துவிட்டு தூங்க சென்றான் . அவனுக்கு இரவு தூக்கமே வரவில்லை அவளை பார்க்கும் ஆவல்
பொழுது விடிந்தது அவன் டாக்டர்க்கு போன் செய்தான் அவளுக்கு எப்போது கட்டு பிரிப்பிங்க னு கேட்டான் டாக்டர் ,” இன்று காலை 11 மணிக்கு பிரிப்போம்” என்று கூறினார் . விக்ரம் ஆபீஸ் போனான்அவன் ஆபீஸ் போனாலும் அவன் நினைப்பு அவளாக தான் இருந்தது . அவனை அவனுடன் வேலை செய்யும் அனைவரும் பார்த்தார்கள் . அவனுக்குள் ஒரு மாற்றம் இருப்பதை உணர்ந்தார்கள் , அவனிடம் அவனது மேனேஜர் சமீரா வந்து , ” ஏன் சார் நீங்க ஆபீஸ் வரவில்லை உங்களை நான் தேடி கொண்டிருந்தேன் ” என்று அவன் அருகில் போனாள். அவனோ அவளை கண்களால் எரிக்கும் படி பார்த்தான் , அவளிடம் ,” சமீரா , கொஞ்சம் தள்ளி போ , ஒரு விபத்து நடந்து விட்டது அதனால் தான் வரவில்லை ” சமீரா , ” சார் , நான் கேள்விப்பட்டேன் , ஆனால் உங்களுக்கு ஒன்னும் பிரச்னை இல்லை ஒரு பொண்ணுக்கு தான அடி பட்டது , நீங்க எதுக்கு சார் அங்க இருந்து டைம் வேஸ்ட் பண்றீங்க நீங்க காசு கொடுத்து வந்த போதாது “. அவன் கடுப்பாகிறான் , ” சமீரா , உங்க வேலைய பார்த்து கொண்டு இருங்கள் தேவை இல்லாத விஷயத்தில் தலையிடினால் உங்களுக்கு வேலை பொய் விடும்” என்று கத்தினான் . .