அவன் ஆபீசை விட்டு புறப்பட்டான் . போகும் போது அவனது காரில் இனிமையான காதல் பாடல் கேட்டு கொண்டு போனான் . அந்த பாடல் அவனுக்கு ரொம்ப பிடித்திருந்தது . அவன் . இதுவரை பாடல் கேட்டதோ இல்லை அதன் வரிகளை கவனிப்பது இல்லை ஆனால் இப்போது அவன் பாடல் வரிகளை கேட்டு உணர்கிறான் . ஒவ்வொரு வரிகளையும் ரசிக்கிறான் . அவன் போகும் வழியில் ஒரு பூங்கொத்து கடை இருந்தது . அங்கு பொய் அவளுக்கு பூங்கொத்து வாங்க நினைத்தான் . அவன் அங்கு சென்றான் அங்கு பொய் . சிகப்பு ரோஜாக்கள் நிறைந்த ஒரு பூங்கோதை வாங்கி கொண்டு மனது நிறைய உணர்ச்சிகள் உடன் அவன் வீட்டுக்கு போனான் . அவள் அவனது அறையில் அவனது படுக்கையில் உட்காந்து இருந்தாள். அவள் ஒரு நீல நிற முழு சுடிதார் போட்டுருந்தால் . அது ஒரு கருநீலமும் கிளிப்பச்சையும் சேர்ந்த ஒரு சுடிதார் . அதுவும் நன்றாக வேலைப்பாடுகள் உடைய உடை அவள் ஒரு தேவதை போல் இருந்தாள் . அவள் பக்கத்தில் ஒரு தட்டில் ஆரஞ்சு பழம் இருந்தது அவள் அதை சாப்பிட்டு கொண்டிருந்தாள் . அவள் சாப்பிடுவதை பார்க்கும் போது ரொம்ப அழகா இருந்தது அவள் உதடு மென்மையாக இருந்தது.
அவன் அவள் அருகே போனான் . அவன் அவளிடம் அவன் வாங்கி வந்த பூங்கொத்தை கொடுத்தான் . அவள் முகத்தில் உள்ள மகிழ்ச்சியை பார்த்து பூரிப்பு அடைந்தான் . அவன் அதன் பின் பொய் குளித்து கொண்டு வருகிறேன் என்று கூறி விடை பெற்றான் . அவன் வாங்கி வந்த பூங்கொத்தை பார்த்து அவள் மனம் மகிழ்ச்சி அடைந்தது . அந்த பூங்கொத்தில் இருந்து ஒரு பூவை எடுத்து நுகர்ந்து பார்த்தாள், பின் புன்னகைத்தாள் . அதை அவன் பின்னால் நின்று பார்த்து சிரித்தான் . பின் குளிக்க சென்றான் . அவளிடம் வந்து , ” அனன்யா உங்களுக்கு உடை எடுக்க போகலாம் வாங்க . உங்களுக்கு பிடித்த உடையை எடுக்கலாம் ” என்றான் . அவள் அவனை பார்த்து புன்னகைத்தாள் . அவனிடம் , ” விக்ரம் , கேட்கிறேன் என்று தப்ப நினைக்காதீங்க எனக்கு புடவை கட்டி விட முடியுமா ?” என்று கேட்டாள். அவன் அவளை பார்த்து சிரித்தான் , ” அனன்யா உங்களுக்கு சுடிதார் இருக்கே நீங்க அதை உடுக்கலாமே” என்றான் . அவள் அவனிடம் , ” சுடிதார் எல்லாமே ரொம்ப கணம் ஆகா இருக்கு அதற்கு சாரீ பரவாயில்லை ” என்றாள். அவன் சிரித்து கொண்டு ஒரு புடவை எடுத்தான் . அது எலுமிச்சை மஞ்சளும் கருப்பு பார்டர் உடைய புடவை . அது அவளுக்கு நன்றாக இருந்தது . அவன் அவளுக்கு புடவை கட்டி விட்டான் . அவள் நெற்றியில் குங்குமம் வைத்தான் . அவள் அழகாக தலை வாரி கொண்டு அவனோடு கிளம்பினாள் . அவன் ஒரு கருப்பு கோட் போட்டு கிளம்பினான் . அவன் பார்க்க அவ்ளோ அழகாக இருந்தான் . அவர்கள் கிளம்புவதை பார்த்து கொண்டிருந்த அவனது சித்தி வயறு எரிந்தால். அவளுக்கு இதை எல்லாம் பொறுக்க முடியவில்லை . எங்கோ இருந்தவளை கல்யாணம் செய்து கொண்டு இவன் இப்படி கூத்து அடிக்கிறான் . இவன் இப்படி இருந்தால் என்னுடைய மகளுக்கு எப்படி திருமணம் நடக்கும் அவள் பாட்டுக்கு அண்ணன் என்று அவனுக்கு சாதகமாக இருக்கிறாள் . அவள் வாழ்க்கையை பற்றி அவளுக்கு கவலையே இல்லை என்று புலம்பி தீர்த்தாள் .
இனி என்ன நடக்கும் ?
அவன் காதல் அவனுக்கு புரியுமா ? அவளிடம் சொல்வானா ?
அவளுக்கு நியாபகம் வந்தால் என்னவாகும் ?