அத்தியாயம் – 10
இருவரே பார்க்கும் படவிழா
திரையிடும் மோக திருவிழா
காதின் ஓரம் சாய்ந்து நீ கூந்தல் கோதிடு
போதும் என்ற போதும் நீ கேட்டு வாதிடு
நேர் மரம் சாய்க்காமல்
முதல் புயல் முடியாது
காதல் தீவர தீவர வேர்வையில் முழுகுது
என்னை தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
“என்னது ரித்துவைக் காணமா? என்ன சொல்ற?” தூக்கக் கலக்கத்திலும் பதட்டமாகக் கடுகடுத்தான் கணவன்.
“ஹலோ… என்ன காலையிலேயேக் கடுகடுப்பு? காணம்னு சொல்றேன் அவ்வளவு தான்.” பதில் கடுகடுப்பு மனைவியிடமிருந்து.
கடுகடுப்பு + கடுகடுப்பு சேர்ந்ததும் பையன் கூலிங்க் பியர் அடிச்ச போல சாந்தமாகிட்டான். “சரி… மொபைல்ல கூப்புடு. வெளிய வாக்கிங் போயிருப்பான்.” சாந்த சொரூபி அவார்ட் டேக் ஹிம்..
“அதுதான் இங்கயே இருக்கே. நேத்து அவன் மெடிக்கல் ஷாப் போனப்புறம் பாத்தேன். டேபிள்ளயே வெச்சிட்டுப் போய்ட்டான். அது அந்த டேபிள்லயே இருக்கு. எனக்கு என்னவோ அவன் திரும்பி வந்தானோன்னே தெரியலை. பயமாருக்கு ஜித்?” பயந்த குரலில் சொல்ல,
சுஜித்தையும் கவலை கொஞ்சம் கட்டிப்பிடித்தது. “ரம்யா கிட்ட சொல்லீட்டுப் போயிருப்பானோ? அவ கிட்ட கேட்டுப் பார்க்கலாம், நீ போய் அவ எழுந்துட்டாளா பாரு, நேத்து ரொம்பவே பயந்துட்டா” என மனைவியிடம் சொல்ல,
அவளும் “ம்ம்… கேக்கலாம். இரு நானே கேக்குறேன்.” லேசாகத் திறந்திருந்த கதவைத் தள்ளியவள் அப்படியே திரும்பவும் மூடிவிட்டு ஓடி வந்தாள்.
“என்னடி கேக்காம… போன வேகத்துல கதவ மூடீட்டு வந்துட்ட? தூங்குறாளா இன்னும்?” என்ற கணவனைப் பார்த்து, சத்தம் போடாதே என்று சைகை காட்டி விட்டு அவன் கையைப் பிடித்து கிச்சனுக்குள் கூட்டிச் சென்றாள் சித்ரா.
“ரித்துவும் உள்ள தான் தூங்குறான். அதான் கதவை திரும்பவும் மூடீட்டேன்.” மெல்லியக் குரலில் கிசுகிசுத்தாள்.
“ஓ உள்ளதான் தூங்குறானா? அதுக்கு ஏன் இந்த கிசுகிசுப்பு? இது ஓவர் பில்டப்” என்ற கணவனின் மண்டையில் தட்டியவள் “ஐயோ… மெதுவாத்தான் பேசேன். தூங்குறான்னா…. தூங்குறான். புரிஞ்சிக்கோடா மரமண்டை. “நறுக்கென்று கொட்டினாள்.
“மண்டு…. உடனே அதான் நினப்பா உனக்கு…. நம்மள மாதிரியே எல்லாரையும் நெனச்சா எப்படி? உள்ள சும்மா துணைக்குப் படுத்திருப்பான்.” என்றவனின் இடுப்பைக் கட்டிக்கொண்டு காதருகில் சொன்னாள்.
“ஆமாமா…. சும்மா துணைக்குப் படுத்திருக்கிறவந்தான் சட்டையக் கழட்டீட்டுப் படுத்திருக்கான். அவன் நெஞ்சுல தலைய வெச்சு இவளும் கட்டிப் புடிச்சிக்கிட்டு தூங்குறாளா? ஜீன்ஸ் ஏன் தரைல இருக்கு? ரம்யாவோட டாப்சும்தான். வாழப்பழம் வேண்டாங்குற குரங்குண்டா? இந்த விஷயத்துல என்னையவே நம்ப மாட்டேன். இவங்க ரெண்டு பேரையும் மட்டும் நம்பீருவேனா?” என மையலானக் குரலில் சொன்ன மனைவியை அணைத்துக் கொண்டான் சுஜித்.
நினைக்கும் பொழுதே அவனும் காதல் டிரெயினுக்கு டிக்கெட் எடுத்தான். “அப்படியா சொல்ற. இருக்கும். இருக்கும்.” சித்ராவின் நெற்றித் தொடங்கி முகம் முழுவதும் எச்சில் படுத்தினான். சிறிது நேரம் கழித்து “சரி.. இப்ப என்ன செய்யலாம்?” என்றான் அவளின் இடையை வருடியபடியே..
“அட… ஒன்னுமே தெரியாதோ என்னோட ஷோனோர் பங்ளா ராஜாவுக்கு. அவங்களா வெளிய வரட்டும். கடைக்குப் போகனும்னு நீ ரித்துவை வெளிய கூட்டீட்டுப் போ. அவனே ஏதாச்சும் சொல்வான். எங்கிட்ட காட்டுன பேச்சுத் திறமைல கொஞ்சத்த அவன் கிட்ட காட்டு. சரியா? நான் ரம்யாவை ஒரு வழி பண்றேன்.” மனைவியின் திட்டத்தில் மீண்டும் அவள் முகம் எச்சிலாகியது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து ரித்விக் வெளியில் வந்தான். எதுவும் நடந்தது போலவே காட்டிக் கொள்ளவில்லை. சித்ரா குடுத்த டீயைக் குடித்தான்.
“ஜித், என்னோட பிரஷ் காணோம். ஹொசா பிரஷ் வாங்கனும். வர்ரியா கடைக்குப் போகலாம்?” அவனே பேச்சை ஆரம்பித்தான்.
“புது பிரஷ்ஷா… வீட்டுலயே இருக்கே. எப்பவுமே ரெண்டு ஸ்பேர் பிரஷ் வெச்சிருப்போம். இரு எடுத்துட்டு வர்ரேன்.” பெருமிதத்தோடு எழுந்தான் நண்பன்.
மங்குனி.. மங்குனி… பெட்ரூமுக்குள் நுழையப் போனவனை முறைப்போடு தடுத்தாள் மனைவி. “அந்த பிரஷ் அன்னைக்கு உங்க வீட்டுக் காக்கா வந்தப்ப குடுத்துட்டேனே தெரியாதா.? புது பிரஷ் வீட்டுல இல்ல.” புரிந்து கொண்டு வழிந்தான் கணவன். “ஆமா மச்சான்… அன்னைக்கு சித்தப்பா வந்தப்போ சித்ரா எடுத்துக் குடுத்துட்டா. நான் தான் மறந்துட்டேன்..” அசடு வழ்ந்தவன் “வா.. கடைக்குப் போய் வாங்கிட்டு வந்துடலாம்.” ஒருவழியாக நண்பனை அழைத்துக் கொண்டு கிளம்பினான் சுஜித்.
சொல்லி வைத்த மாதிரி அவர்கள் வெளியே சென்றதும் ரம்யா வெளியே வந்தாள். அவள் வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத மகிழ்ச்சி அவள் ஒவ்வொரு அசைவிலும் தெரிந்து போனது. மறைக்க மறைக்க வெளியே தெரிந்தது.
“என்னடி… இப்ப உடம்பு எப்படியிருக்கு?” கேட்டத் தோழியை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டாள் ரமி. “ஏய்… நான் சித்து. உன்னோட ரித்து இல்ல.” சிரித்துக் கொண்டே சொன்னாள் சித்ரா.
“ஆமா… என்னடி இது? நேத்து ஈவ்னிங்க் அவ்ளோ பேசுன? என்னென்னவோ கேட்ட. கதையப் படிச்சவங்கள்ளாம் உன்னைய பெரிய அறிவாளின்னு வேற பாராட்டீட்டாங்க. பாத்தா அன்னைக்கு ராத்திரியே இப்பிடி? என்னாச்சு? எல்லாமே முடிஞ்சிருச்சா?” என கிண்டல் குரலில் கேட்க,
அந்தக் கிண்டலை பொருட்படுத்தாமல், வெட்கத்துடன் தலையை ஆட்டி ஆமாம் என்றாள் ரம்யா.
“அடிப்பாவி. வெச்சாக் குடுமி… சிரச்சா மொட்டையா? இப்ப அவங்க அம்மா அழ மாட்டாங்களா? அழுதா என்ன செய்வ?” அவளுக்குத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.
ரம்யாவின் வெட்கப் பனி விலகியது. “நீ கேக்குறது சரிதான். நேத்து அவன் எலக்ட்ரால் கொண்டு வந்து குடுத்தான். குடிச்சப்புறம் பக்கதுல கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்துட்டுத் தான் வெளிய போனான். போனவனை நான்தான் போக விடலை. எனக்கு ரொம்ப பயமாயிருந்தது. அவனையும் உள்ளயே இருக்கச் சொன்னேன். அவன் இருக்குறது பாதுகாப்பா இருந்துச்சு. அதுக்கப்புறம்…. அதுக்கப்புறம்….. எப்படி தொடங்குச்சுன்னு தெரியலை. ஆனா நடந்துருச்சு.” சின்னக் குரலில் இரவு நடந்ததைச் சொன்னாள்.
“நடந்தது எல்லாம் சரிதான். எந்த நம்பிக்கைல இப்பிடி செஞ்ச? அவன் விட்டுட்டுப் போய்ட்டான்னா? அப்போ என்ன செய்வ?” என்றாள் விடாமல்.
“போக மாட்டான்” ரம்யாவின் குரல் பெல்ஜியன் வைரமானது.
“எப்படிச் சொல்ற?” – சித்ரா
“தெரியாதுடி. அவனை நான் நம்புறேன். நேத்து ஈவ்னிங் அவனை என்னால நம்ப முடியலை. ஆனா இப்ப முடியுது. நான் செஞ்சது சரியா தப்பான்னு எனக்குத் தெரியாது. ஆனா இதுக்கு நானே பொறுப்பு. என்னோட ரித்து மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.” ரமியின் பேச்சின் ஆழத்தில் ரித்விக்கின் மேல் இருந்த அவளது நம்பிக்கை பிரகாசித்தது..
“என்னது…. உன்னோட ரித்துவா? இது எப்போ இருந்து… நடக்கட்டும்… நடக்கட்டும்ம்ம்ம்ம்… நல்லா இரு தாயே. நல்லா இரு” சிரித்துக் கொண்டே தோழியின் கன்னத்தில் முத்தமிட்டாள் சித்ரா.
தொடரும்….
பின் குறிப்பு
ரம்யாவின் காதில் ரித்விக் சொன்ன கன்னடக் கவிதை. மொழி மாற்றப்பட்டு உங்களுக்காக.
சர்க்கரை நோயாளிக்கும் பரிந்துரைப்பேன்
முத்தத்தை விருந்தென
தித்தித்தாலும் மருந்தென
– மொழிபெயர்ப்பாளர் (ரித்விக்கின் ரம்யா)
தொடரும்