அத்தியாயம் – 24
அன்று மாயா அவளை அறியாமல் தோள் சாய்ந்த தினம், கார்த்திக்கின் மனதின் கல்வெட்டாய் பதிந்தது! அவன் மனைவி அத்துடன் நிற்கவில்லை. அப்பாடல்களை தன் அலைபேசியிலும் ஏற்றிக் கொண்டே உறங்கப் போனாள். அவள் உறங்கியப் பின்னும் கூட கார்த்திக்கிற்கு தூக்கம் வருவேனா என சண்டித்தனம் செய்தது.
இக்கணம் வரை கார்த்திக் தன் காதலை, மாயாவிடம் காட்டியதே இல்லை. ஒரு எதிர்பார்ப்பில்லாத தெளிந்த நீரோடையாய் ஓடும் அன்பு மட்டும் அவனிடம் இருந்து வெளிப்படும். காதலும் அன்பின் மறுபிறவி தான்! ஆனால், கார்த்திக் இதுவரை காட்டியது ஒரு குழந்தையிடம் அதன் தந்தை அல்லது தாய் காட்டும் அன்பே! அதனால் தான் மாயாவும் அவள் தாயுடன் அவனை ஒப்பிட்டது கூட நடந்தது! இன்று அவளே நெருங்கி வந்ததும், தன் பக்க அடியை அவளை நோக்கி எடுத்து வைக்க தயாரானான் அந்த கணவன்.
இனிமேல் அவளிடம் ஒரு முழு முதற்காதலனாக நடக்க வேண்டும் என்று உறுதி பூண்டது மனது…. இதே எண்ணத்துடன் அடுத்த நாள் மருத்துவரை அழைத்தான். மாயாவிடம் தென்பட்ட மாற்றங்களை சந்தோஷத்துடன் கார்த்திக் பகிர, கீதாஞ்சலியும் மகிழ்ந்துப் போனார்!
“நெஸ்க்ட் நீங்க அவள வெளிய நிறைய கூட்டிட்டு போக ஆரம்பிங்க. அப்போ இருக்குற கொஞ்ச நஞ்ச பயமும் போகும். ஃபீரியா பீல் பண்ணுவாங்க.”
[the_ad id=”6605″]
மருத்துவரே தான் இதற்கு முன் வெளியே தேவையில்லாமல் அழைத்துச் செல்ல வேண்டாம் என கூறியிருந்தார். அவளுக்கு நடந்த அந்த கசப்பான சம்பவம் ஒரு பொது இடத்தில் நடந்ததால் தான் மருத்துவர் அவளின் விருப்பம் இல்லாமல், எங்கேயும் அழைத்துச் செல்ல வேண்டாம் என வற்புறுத்தினார்.
மாயாவும் கல்லூரி, யோகா கிளாஸ் செல்வதற்கு மட்டுமே வெளியே செல்வாள். அதுவும் கல்லூரிக்கு வாரத்தில் மூன்று நாட்கள் கார்த்திக் எப்பாடுப்பட்டாவது அவளை அழைத்து வர கல்லூரி சென்றுவிடுவான். காலையில் அவளை தினமும் அவனும் கூட வந்து தான் டிராப் செய்வது. கூட்டிச் செல்வது என்றால் பஸ்ஸில் அவளுடன் உடன் செல்வது. மீண்டும் மாலை அவளுடன் பஸ்ஸில் வந்து, வீடு வந்து சேர்வார்கள் இருவரும். கார்த்திக்கே இது பிடிக்கவில்லை. கூடிய விரைவில் ஒரு கார் வேண்டும் என்ற திட்டம் ஒரு வார காலமாக அவனுள் ஓடிக் கொண்டிருக்க, சுப்பிரமணியமும் போனில் அதையே வேறு வார்த்தைகளால் வழிமொழிந்தார்.
இதன் மேலும் பொறுக்க வேண்டாம் என முடிவெடுத்து மறுநாளே மாயா கல்லூரி விட்டு வெளி வந்ததும் பஸ் ஸ்டாப் செல்லாமல், கார்த்திக் ஆட்டோ பிடித்தான். “எதுக்கு ஆட்டோ?? எங்க போறோம்?”
மாயாவின் கேள்விக்கு கார்த்திக்கின் குறும்பு பார்வையும், புன்னகையுமே பதிலாகியது. எதற்கு என்று தெரியாமலே உடன் பயணித்தவள், ஆட்டோ டோயோட்டா ஷோரூம் முன் நின்றதும், கண்கள் விரிய அங்கு வந்த காரணத்தை புரிய முற்பட்டாள்.
“கார் வாங்கப்போறியா கார்த்தி??”
“வாங்கப் போறியா இல்ல… வாங்கப் போறோம்!”
மாயாவின் முகமே மலர்ந்தது இப்பதிலை கேட்டு. இருவரும் பல முறை ஷோரூம்மை சுற்றி வந்து இறுதியில் மெட்டாலிக் ப்ளூ லிவா மாடலை தேர்ந்தெடுத்தனர். மாயா அப்போது தான் அவளின் சந்தேகத்தை கேட்டாள். “ஏன் பைக் வாங்காம கார் வாங்குற??”
மாயாவின் கண்களை ஆழ்ந்து ஒரு நொடி ஊன்றியவன், பின் காரணத்தை அவளுக்கு ஞாபகப்படுத்தினான். “நான் தான் சொன்னேன்ல பைக் ஓட்ட மாட்டேன்னு. கார் தான் ஓட்டினேன் கோயம்பத்தூர்ல இருக்கும் போது கூட.”
“ஆனா உனக்கு கார்ர விட பைக் தான பிடிக்கும்??”
“ப்ளீஸ் மாயு. எனக்கு பைக் இனிமேல் இல்லன்னு எப்பயோ முடிவு பண்ணிட்டேன். நம்ம டிஸைட் பண்ண மாதிரி இந்த காரே வாங்கலாம். ஓகே??”
“ஹ்ம்ம்ம் சரி.”
மாயாவின் ஒற்றை வார்த்தை பதிலிலேயே அவளின் சினுங்கலை உணர்ந்தவன், வீட்டிற்கு சென்று இவளை கவனிப்போம் என தனக்குள் சொல்லியபடி, ஷோம்ரூம் ஆட்களிடம் பேசச் சென்றான். ஆனால், ஷோம்ரூம் விட்டு வெளியே வந்தது ஆட்டோ பிடித்து, கார்த்திக் ஒரு பிரபலமான ஹோட்டலின் பெயரை கூறி அங்கே நிறுத்தச் சொல்லவும், மாயா உணவை பார்சல் கட்டிக் கொள்ளப் போவதாக நினைத்தாள்.
கார்த்திக் அவளிடம், “இங்கயே சாப்பிட்டுட்டு போலாம்டா. சரியா??” என்று கேட்டபடி உள்ளே செல்லவும், மாயாவுக்கு வேறு வழியிருக்கவில்லை! ஹோட்டலில் அவளுக்கு பிடித்த உணவை இவனே ஆர்டர் செய்து, மாயாவுக்கு பைக் வாங்காததற்கான காரணத்தை மீண்டும் எடுத்துரைத்தான். “நான் பைக் ஓட்டியே ஒரு வருஷத்துக்கும் மேல ஆகப்போகுது மாயா. இப்போ திரும்ப ஓட்ட சுத்தமா விருப்பமில்ல. எனக்கு அதை பார்த்தாலே கதிர் தான் ஞாபகத்துக்கு வரான். சோ, ப்ளீஸ்!”
அவன் வார்த்தைகளில் உணர்ந்த வலி, கண்கள் இன்னமும் தன் நண்பனை இழந்த தவிப்பை கண்ட மாயா ஒன்றும் பேசாமல் தலையசைத்து தன் சம்மதத்தை கூறினாள். அடுத்த இரண்டு நாட்களிலேயே டோயோட்டா லிவா கார் அவர்கள் அப்பார்ட்மென்டின் ஒரு பகுதில் குடியேரியது! தங்கள் குடும்பத்தினரை பார்த்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகியதால், காரிலேயே கோயம்பத்தூர் சென்றனர் மாயாவும், கார்த்திக்கும்…..
[the_ad id=”6605″]
ரித்தியா அப்போது தான் கல்லூரி செல்ல தொடங்கி இருந்தாள். சென்னையிலேயே அவளுக்கு தேவையான சுடிதாரை அள்ளி குவித்தான் கார்த்திக். “ஏன் இவ்வளோ வாங்கறீங்க??” மாயாவின் கேள்விக்கு ரெடியாக பதில் வந்தது.
“உனக்கும் சேர்த்து தான் எடுக்கறேன். ரெண்டு பேரும் சேர்ந்து டிஸைட் பண்ணிக்கோங்க. யாருக்கு எந்த சுடிதார் வேணும்னு.”
ஊரில் ஒரே சீராட்டல் தான்!! விநாயகமும், ரித்தியாவும், கார்த்திக்கும் சேர்ந்து அடித்த கூத்துக்கள் பல.
மாயா அதை எல்லாம் முகத்தில் ஒரு புன்னகையுடன் பார்ப்பாள். சில நேரம் பதில் அளிப்பவள், ரொம்பவும் கிண்டல் அடித்தால் கார்த்திக்கிற்கு கெஞ்சலாக கண்களால் அழைப்பு விடுப்பாள். “ஹே ரொம்ப ஓட்டாதீங்கடா. நாளைக்கு கொஞ்சம் ஸ்டாக் வைங்க.” அவனும் வஞ்சபுகழ்ச்சி அணியை எடுத்துவிடுவான்.
இப்படியே அங்கே இருந்த நான்கு நாட்களுக்கு கலாட்டாவாக செல்ல, கிளம்பும் தினத்தன்று அனைவரையும் அதிசயப்படுத்தும் கேள்வி ஒன்றை கேட்டாள் தன் மாமனாரிடம். “மாமா நீங்களும் அங்க சென்னைக்கே வந்துடுங்க. ஏன் இங்க தனியா இருக்கீங்க??”
தன் மகனுடன் பேசத் தொடங்கிய பொழுதிலிருந்து அவரும் யோசிக்கும் விஷயம் தான். கார்த்திக் ஏற்கனவே கேட்ட ஒன்றென்றாலும், தன் மருமகள் திடீரென கேட்கவும் அவருக்கு நெஞ்சம் குளிர்ந்தது. “கண்டிப்பா வரேன். ஆனா, இப்போ இல்லமா. இங்க ரொம்ப வருஷமா பார்க்கற கிளையன்ட்ஸ் இருக்காங்க. அவங்கள எல்லாம் அப்படியே விட்டுட்டு வர முடியாது இல்லையா?? நானே எல்லாத்தையும் முடிச்சிட்டு வரேன் அங்க.”
“ஹ்ம்ம்ம் சரி மாமா. ஆனா ரொம்ப நாள் ஆக்கக் கூடாது.”
“சரி, பார்க்கலாம்டா….”
ஒருவழியாக வாக்குறுதிகளும், விடைபெறுதல்களும் முடிய சென்னை திரும்பினர் கார்த்திக் தம்பதியர். வாரத்தில் மீதமிருந்த மூன்று வார நாட்களை கடந்தவுடன், கார்த்திக் வெள்ளி இரவன்று வீடு திரும்பியதும், தன் மடிக்கணினி முன் அமர்ந்து பார்வையை அதில் வைத்திருந்தான்.
சமையல் அறையில் இரவு உணவை தயார்படுத்திக் கொண்டிருந்த மாயாவை, ஹாலுக்கு கூப்பிட்டான். மாயா வந்ததும் அவளிடம் மடிக்கணினியை காட்டி, “ரவீந்திரன் சார் சினிமாட்டோகிராபி பண்ண படத்துக்கு நாளைக்கு நம்ம ரெண்டு நாளைக்கு போறோம். ஷோ பதினொரு மணிக்கு.” என்று கூறினான் சந்தோஷமாக.
ஆன்லைனில் டிக்கெட்டை முன்பதிவு செய்யததை பார்த்தபடி மாயா நின்றிருந்தாள்.
“இப்போ எதுக்கு திடீர்னு??”
“அதெல்லாம் நான் ரொம்ப நாளா நினைச்சுட்டு இருந்தேன். உன்னை நிறைய படத்துக்கு கூட்டிட்டு போகனும்னு! அப்போ தான் நீயும் கத்துக்க முடியும் புதுசா வர படத்துல எப்படி ஷாட் எல்லாம் வைச்சிருக்காங்கன்னு. இனிமேல் பாரு வார வாரம் படத்துக்கு போவோம்!”
உண்மை தான்…. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், நிறைய விதவிதமான படங்களை மொழி எல்லாம் கடந்து காண்பர். மாயாவுக்கும் ஆசை தான். ஆனால், சேலத்திலும் கோயம்பத்தூரில் இருந்த போது மாதம் ஒரு படத்திற்காவது தங்கையுடன் சென்று வருவாள். அதற்கு மேல் அவர்களின் அன்னை எனும் நிதி அமைச்சர் ஒப்புதல் அளிக்க மாட்டார். சென்னைக்கு வந்ததும் ஒரு மாதம், இரண்டு மாதமாகியது.
வார இறுதிகளில் ஊருக்கு செல்வதால், அவளால் முன் போல படத்திற்கு படையெடுக்க முடியாமல் போயிற்று. அவளின் வகுப்பு தோழர்கள் பார்த்துவிட்டு வந்து விவாதிக்கும் போது, அதையெல்லாம் உள்வாங்கிக் கொள்வாள். ஆனால், இப்போது கார்த்திக்குடன் மீண்டும் செல்கிறோம் என்று ஒரு பக்கம் சந்தோஷம் இருந்தாலும், மறுபக்கம் வெளியே நிறைய செல்லாமல் இருந்ததால் வந்த ஒரு வித தயக்கயுணர்வு வந்து ஒட்டிக் கொண்டது.
[the_ad id=”6605″]
எல்லா தயக்கமும் பயமும் மறுநாள் கார்த்திக் அவளின் கைகளை பற்றியபடி, வீட்டை விட்டு செல்லும்வரை தான். அவனாக கைகளை பற்றவும், மாயா அவனின் முகத்தை பார்க்க, இமைகளை மூடித் திறந்து, பற்றியிருந்த கைகள் சிறு அழுத்தம் கொடுத்து ‘நான் இருக்கிறேன்’ என நம்பிக்கை விதையை மறுபடியும் அவளின் நெஞ்சில் விதைத்தான், அவளின் நாயகன்.
இவன் மட்டும் ஏன் தனக்காக இவ்வளவு செய்ய வேண்டும்?? ஒவ்வொரு முறையும் தனக்காக மட்டுமே யோசித்து செயல்பட வேண்டும்?? அவ்வளவு காதலா தன் மீது…. அதற்கு தான் தகுயானவள் தானா?? நூற்றி பத்தாவது முறையாக நினைத்துக் கொண்டாள் மாயா. இப்போதும் விடை தான் தெரியவில்லை.
ஒரு பிரபலமான மாலில் காரை பார்க் செய்துவிட்டு, நேராக திரையரங்குக்கு சென்றனர் இருவரும். சென்னையில் மாலுக்கு மாயா செல்வது அதுவே முதல் முறை. எங்கேயும் கார்த்திக்கின் கையை விடாமல் அவள் சென்றாள். திரையில் படம் ஓடத் துவங்கியதும், கவனம் முழுதும் அதில் பதிந்தது. அன்று அவர்கள் சென்ற படம் நகைச்சுவையை அடித்தளமாக கொண்ட ஒன்று.
மாயாவும் சரி கார்த்திக்கும் சரி நிறைய நாட்கள் கழித்து, வயிறு குலுங்க சிரித்து மகிழ்ந்தனர். அந்த சந்தோஷமான மனநிலை, அன்று முழுவதும் தொடர்ந்தது! மறுநாள் ஞாயிறு என்பதால், இருவரும் பொறுமையாக எழுந்து காபி அருந்தினர். “மாயு இனிமே எல்லா சன்டேவும் ஸ்பெஷல் மெனு நம்ம வீட்டுல. நெட்டுல பார்த்து நான் விதவிதமா சமைக்க போறேன். நீ எனக்கு ஹெல்ப் மட்டும் பண்ணு போதும்.”
இதை கேட்டு மாயாவின் முகமே சிரிப்பை பூசியது. “நான் தான் பலி ஆடா?”
“ஆமா டெஸ்டிங் எலி நீ தான்.”
கண்ணடித்து கார்த்திக் கூறவும், சோபாவின் குஷனை அவன் மேல் விட்டெறிந்தாள் மாயா. வீட்டில் இதுவரை அவர்கள் செய்யும் உணவு சாதாரணமாக இருக்கும். இப்போது புதிது புதிதாக சமைப்போம் என்ற நினைப்பு மாயாவுக்கும் உவகையை தந்தது. இப்படியே தான் செய்யும் சின்ன சின்ன வேலைகளில் கூட அவளை ஈடுபடுத்தும் வித்தயை நன்றாக கற்றிருந்தான் கார்த்திக். சமைக்கிறேன் பேர்வழி என்று, மாயாவை கூடவே இருத்திக் கொள்வான் அவன். சமைத்த உணவை மாயா எதிர்பாரா சமயத்தில் அவளின் வாயில் திணித்துவிட்டு, “நல்லா இருக்கா??” என கேட்டு, கார்த்திக் தேர்வெழுதுவதும் நடப்பதே!
சிறிது சிறிதாக மாயா பழைய படி மாறிக் கொண்டு வருவதை கண்டு, கார்த்திக்கிற்கு மிக்க சந்தோஷம். இப்படியே மாதம் இரண்டு கழிய, அதற்குள் மாயாவின் பேச்சும் பழகும் முறையும் நன்றாகவே மாறியது. தன் கூட்டினுள் அடைப்பட்டு கிடந்த கிளி, வெகு நாட்கள் கழிந்து தட்டுத்தடுமாறி அதன் அடிகளை எடுத்து வைக்க தொடங்கியிருந்தது.
அப்படி அவள் கூறும் சிறு வார்த்தைகளும், முகபாவனைகளும் கணவனின் மனதை முழுவதுமாக நிறைத்தது. மனதை நிறைத்தது ஒருப்புறம் என்றால், இருவருக்கும் மிகப்பெரிய புரிதல் வரத் தொடங்கியது இந்த தமயத்தில் தான்…. கார்த்திக்கிற்கு மிகவும் பிடித்த, தற்போது மாயா பையித்தியமாக கேட்கும் பாரதியார் பாடல்களை ரசிக்கும் போது, கார்த்திக்கின் அருகில் அமர்ந்து அவனுடன் அந்த நொடிகளை அனுபவித்தபடி, “நீ இந்த பாட்டை பாடுன ஞாபகம் தான் வருது” என்று கூறுவாள் அவன் மனைவி.
கார்த்திக்கிற்கு சொல்லவே வேண்டாம். பின்னால், பல தேவதைகள் வெள்ளை ஆடையில் நடமாட, தன் தேவதையை காதல் பொங்க பார்ப்பான். இதில், சில சமயம் அவன் கல்சுரல்ஸில் பாடிய வீடியோவை போட்டு, இருவரும் ஒரு சேர மெய்சிலிர்க்கும் தருணங்களும் உண்டு! அடுத்தக் கட்டமாக, அவர்களின் விருப்பமான பாரதியார் பாடல்களையும் கார்த்திக்கே பாடி, அவளின் அலைபேசியில் ஏற்றிக் கொடுத்தான்.
இப்படி மகிழ்ச்சியுடன் கழிந்த நேரமும் உண்டு, உயிரை உருவி எடுத்தது போன்று வலியுடன் உரையாடியதும் உண்டு!
“நீ இல்லனா நான் என்ன ஆயிருப்பேன்??” திடீரென ஒரு நாள் டிவி பார்த்துக் கொண்டிருந்த போது அவனை பார்த்துக் கேட்ட மாயாவை, கார்த்திக் தோளோடு அணைத்து பதிலளித்தான். “நீ இல்லனா நான் மட்டும் எப்படி இருப்பேன்?? ஏன் இந்த மாதிரி யோசிக்கற??”
“சும்மா சொல்லாத கார்த்தி…. எப்படியோ இருக்க வேண்டியவ!! நீ இல்லனா நான் தான் மோசமா போயிருப்பேன். பட், நான் உன் வாழ்க்கையில வரலைனா நீ எப்போவும் போல நல்லாத் தான் இருந்திருப்ப.”
“இங்க பாரு மாயு. என் முகத்தை பாரு…. எனக்கு முதல்ல பிடிச்ச பொண்ணும் நீ தான். கடைசியா பிடிச்ச பொண்ணும் நீ தான். எத்தனையோ பொண்ணுங்க கூட பேசிறிக்கேன், பழகியிருக்கேன். ஆனா, உன்னை மாதிரி யாருமே என்னை பாதிச்சது இல்ல! எப்போத்துலந்து உன் மேல இவ்வளவு பிரியம், அன்பு எல்லாம் எனக்கே தெரியலை… ஆனா, நீ என்னோட லைப்ல வந்த அப்புறம் தான் லவ்வுனா என்ன, வாழ்க்கைனா என்னன்னு எனக்கு புரிஞ்சுது. லவ் மேல நம்பிக்கையே இல்லாம இருந்தேன்! அப்படிப்பட்டவன், கதிர் அவனோட லவ் சொல்லிட்டு போயிட்ட அப்புறம், மனசு ஒடஞ்சு போறதுனா என்னன்னு தெரிஞ்சிகிட்டேன்.
[the_ad id=”6605″]
உன்னை எந்தளவுக்கு விரும்புறேன்னும் தான். ஆனா, நான் அப்போ அந்த டெஸிஷன் எடுக்கலைனா நம்ம வாழ்க்கை வேற மாதிரி போயிருக்குமோ தெரியலை. அந்த ஒரு பத்து மாசம், உன்னை மறக்க நான் பட்ட கஷ்டம், எனக்கு மட்டும் தான் தெரியும்…. நீ சொன்னப்போ எல்லாம் பைக்க ஒழுங்கா ஓட்டாம இருந்தேன். இப்போ அதை தொடறதுக்கு கூட தைரியம் இல்லாதவனா ஆயிட்டேன்.
நீ மட்டும் இல்லனா, என்னோட லைப் ரொம்ப சாதாரணமா எல்லார மாதிரியும் போயிருக்கும். நீ வந்து தான்டி எல்லாத்தையும் மாத்துன! இப்போ, நீ சினிமால எவ்வளவு சாதிக்கனும்னு நினைக்கறியோ, அதை விட பல மடங்கு நான் ஆசைப்படறேன். இனிமே நீ இல்லாம நான் நல்லா இருந்திருப்பேன்னு மட்டும் சொல்லாத!!!”
கார்த்திக் முடிக்கும் போது அவன் குரல் கரகரத்தது என்றால், மாயா அவன் மடியிலேயே உடைந்து அழ தொடங்கினாள். கார்த்திக் அவளின் முடி கோதி, மாயா அழுதவாரே அவன் கால்களை தடவி, ஒருவரை ஒருவர் மௌனமாக ஆறுதல் படுத்துக் கொண்டனர்.
வாழ்க்கையில் சில உரையாடல்கள் நம் மனதை எக்கணமும் விட்டு நீங்காதவை. இந்த சம்பாஷனையும் அந்த வகையை சேர்ந்தது என மாயா நினைத்துக் கொண்டாள். கார்த்திக்குடன் மேலும் நெருங்கி பழகியவளின் மனதில் குடியிருந்த நன்றியுணர்ச்சி சிறுது சிறிதாக அதன் வலுவிழந்து தகர்ந்தது. கார்த்திக்கிற்கு அதுவே பெரும் பாரம் இறங்கியதாக இருந்தது. ஒரு முறை இப்படி அவனை கலங்கடிப்பவள், மறுமுறை குளிர்ந்த மழையாய் நெஞ்சை கொள்ளை கொள்ளவும் தவறவில்லை.
அன்று வழக்கம் போல், லேகாவுடன் இருவரும் விளையாடிவிட்டு, அவளை மைதிலியிடம் ஒப்படைக்க சென்றனர். அங்கே போனதும், லேகா குளிர்சாதானப்பெட்டில் இருந்து மருதாணி கோனை எடுத்து வந்து தன் அன்னையிடம் வைத்துவிட கட்டளையிட்டாள்.
மைதிலியும் வேறு வழியின்றி லேகாவின் பிஞ்சு விரல்களில் இரண்டே நிமிடங்களில் வைத்து விட, அடுத்த நொடி மாயா தன் கைகளை இரண்டையும் அவள் முன் நீட்டினாள்.
“அக்கா எனக்கும் வைச்சுவிடுங்க.”
“இப்போ வைச்சுட்டு எப்படி நைட் சமைக்க, சாப்பிட எல்லாம் பண்ணுவ??”
“அதுக்கு தான் என் புருஷன் இருக்கானே?? என்ன சமைச்சு ஊட்டிவிட மாட்ட??”
கார்த்திக்கை பார்த்து கண்சிமிட்டியபடி மாயா கேட்க, அவனின் இதயம் ஒரு நிமிடம் துள்ளி அடங்கியது. ஒன்றும் பேசாமல் அவன் தலையாட்ட, மைதிலி இவர்களின் மௌன பரிபாஷயை கண்டு நகைத்தாள்.
“ஹ்ம்ம்ம் நீங்க நடத்துங்க…. ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல….”
[the_ad id=”6605″]
அன்று வீடு திரும்பியதும் கார்த்திக் தோசை வார்த்து அவளுக்கு ஊட்டி விடும் போது திடும்மென மாயா சொன்னாள். “நான் இப்போ முன்ன மாதிரி இல்லைல?? இப்போலாம் நல்லா பேசறேன்ல….”
கார்த்திக்கின் கை ஒரு நிமிடம் அந்தரத்தில் தொங்கி மீண்டும் அவளுக்கு ஊட்டிவிட, அவன் முகமோ புன்னகை பூத்து அவளின் கூற்றை தலையசைத்து ஆமோதித்தது.
இந்த மாறுதல்கள் மாயாவே உணர்ந்ததால், மறுமுறை டாக்டரிடம் சென்ற போது அவளே தன் மாத்திரைகளை நிறுத்திக் கொள்ளலாமா என கேட்டாள். மருத்துவரும் புன்னகைத்து, “உனக்கே வேண்டாம்னு தோணுச்சுனா போடத் தேவையில்லை. நிறுத்திக்கலாம்.” என்று கூறவும், சந்தோஷம் பொங்கி வழியும் கண்களுடன், கார்த்திக்கின் முகத்தை ஏறிட்டாள் மாயா.
ஆனால், அடுத்து மாயாவை வெளியனுப்பி மருத்துவர் கூறியதை கார்த்திக் ஏற்கவில்லை.
“டாக்டர் இது பெரிய ரிஸ்க்…. ப்ளீஸ், இது வேண்டாம்!”
“இது நீங்க நினைக்குற அளவுக்கு ஒண்ணும் பெரிய விஷயமில்ல. அதுமட்டுமில்லாம, இது நாங்க குடுக்குற ட்ரீட்மென்ட்டோட கடைசி கட்டம். மாயா நைன்டி பெர்ஸன்ட் குணமாயிட்டா. சோ, தயங்காம இதை செய்யுங்க. நல்ல ரிஸல்ட்டா வரும், பாருங்க.”
முழுமனதாக கார்த்திக் ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும், அவனுக்கும் வேறு வழியிருக்கவில்லை. டாக்டர் கூறியதை செய்து தானே ஆக வேண்டும்?? தடத்தடக்கும் மனதுடம் அந்நாளுக்காக காத்திருந்தான்!!