அத்தியாயம் – 29
சுப்பிரமணியமும் இவர்களுடன் தங்க வந்ததும், நேரம் பறப்பது போல் தோற்றமளித்தது. இப்போது தான் தன் குருவிடம் சென்று சேர்ந்தது போல் இருந்தது, அதற்குள் ஒரு படம் முடிவடைந்து அடுத்த படத்திலும் பாதிக்கும் மேல் முடிவடைந்திருந்தது. இந்த இரண்டாவது படத்தில் தான் மாயா பிரித்வியை சந்தித்தாள்.
இந்த சை-பை படத்தை இயக்குபவரும் பெரிதாக போற்றப்படுபவரே. அவரிடம் தான் பிரித்வி உதவி இயக்குனராக பணியாற்றினான். ஒரு நாள் பிரசாத் ஸ்டியோஸில் படப்பிடிப்பு முடிந்து கார்த்திக்குடன் கிளம்பும் வேளையில், பிரித்வி ஓடி வந்தான். “மாயா, சார் ஒரு நிமிஷம்….”
யார் என கார்த்திக் மனைவியை நோக்க, “இவங்க தான் பிரித்வி அண்ணா. நான் சொல்லிருக்கேன்ல??” என்று மாயா நினைவு கூற, கார்த்திக்கும் எதிரில் இருந்தவனோடு கை குலுக்கினான்.
“என்னோட பையனோட ஃபிரஸ்ட் பெர்த்டே வர சண்டே. நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பா வரனும்.”
மாயா, “ஹே குட்டிக்கு பெர்த்டேவா? கண்டிப்பா வரோம்னா….” என்று சந்தோஷத்தோடு சொன்னாள். மாயா இப்படத்தில் பணியாற்றும் போது பிரித்வியுடன் நல்லதொரு தோழியானாள். அவளின் கணவனும் அதையே வழிமொழிய, பிரித்வி வீட்டு முகவரியை அளித்துவிட்டு விடைப்பெற்றான்.
அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பார்த்த மழலை செல்வங்களின் அழகில் தங்களின் முடிவை மீண்டும் மறுபரிசீலனை செய்தாள் மாயா. அன்றைய இரவு தூங்கும் போது, “ஹே இன்னிக்கு நிறைய பாப்பா பார்க்குறதுக்கே எவ்வளவு அழகா இருந்தாங்கல??” என்று தூண்டில் போட்டாள்.
“ஆமா நல்லா இருந்தாங்க.”
“நம்மளும் பெத்துக்கலாமா??”
[the_ad id=”6605″]
ஒரு சில நொடிகள் அங்கே மௌனம் புடை சூழ்ந்தது! பாவையவள் தலைவனின் முகத்தை அண்ணாந்து பார்த்தபடி அவன் மார்பில் தலை சாய்ந்து கேட்க, தலைவனோ மறுக்கவும் இல்லாமல் சம்மதிக்கவும் இல்லாமல் ஒரு விடையை அளித்தான்.
“ஹ்ம்ம்ம் பார்க்கலாம் கண்ணம்மா. நீ முதல்ல இந்த படத்தை முடி. அதுக்கப்புறம் இதை பத்தி யோசிப்போம்.” அதன் மேல் மாயாவாலும் அவனை வற்புறுத்த இயலவில்லை… இந்த வேளையில் தான், கார்த்திக் அலுவகத்தில் தன் இடைவிடாத உழைப்பால் பதவி உயர்வு பெற்றான். அதை கொண்டாடவென வீட்டில் மூவரும் அன்றிரவு வெளியே சென்று சாப்பிடுவதாக ஏற்பாடு.
தற்போதைய படப்பிடிப்பு செங்கல்பட்டு அருகில் செட் போட்டு எடுத்துக் கொண்டிருந்தனர். “திரும்ப வீட்டுக்கு வரலாம் டைம் இல்ல…. நீங்க ரெண்டு பேரும் கார்ல அங்க வந்திருங்க. ஹோட்டலுக்கு அங்கயிருந்து போலாம்.”
மாயா காலை உணவின் போது கூறியதை கேட்டு கார்த்திக் இளப்பமாக பதிலுரைத்தான். “வந்து பிக்கப் பண்ணிக்கோன்னு சொல்லு. லென்த்தா டையலாக் பேசாத!” உதட்டை பிதுக்கி அவனின் கேலியை ஒதுக்கியவளுக்கு, அன்றே தான் உதட்டை பிதுக்கி அழப் போகிறோம் என தெரியவில்லை! அன்று மதியம் ஒரு மணி அளவில் முக்கியமான சீனை முடித்துவிட்டு, அனைவரும் உணவருந்த சென்றனர். மாயா மட்டும் ரவீந்திரனிடம் சென்று தன் கேள்வி கனைகளை வீசினாள். “ஏன் சார் கிளோஸ் அப் ஷாட் வைக்க வேண்டிய இடத்துல, வைட் ஆங்கிள் ஷாட் வைச்சிங்க?? கிளோஸ் அப் வைச்சா இன்னும் நல்லா இருந்துருக்கும்ல சார்??”
“ஷாட் எல்லாமே நம்ம முடிவு பண்றது தான். அதை பொறுத்து தான் ஆடியன்ஸுக்கு மூட் செட் ஆகும் படம் பார்க்கும் போது.”
அதன் மேற்கொண்டு இருவரும் சுமார் இரண்டு மணி நேரம் இதை ஒட்டி பேசினர். ரவீந்திரன் சாப்பிட்டுக் கொண்டே பேசி, கை கழுவி மீண்டும் பேச கூட அமர்ந்து விட்டார். அப்போதும் மாயாவுடனான கலந்துரையாடல் முடிந்தபாடாக காணோம். “நீ போய் சாப்பிட்டுட்டு வா மாயா. அப்புறமா பேசலாம்.”
ரவீந்திரன் கூறியதை மறுத்து, “பரவாயில்ல, நீங்க சொல்லுங்க சார்.” என்று பேச்சை வளர்த்தாள் சிஷியை. ஒரு மாணவியின் ஆர்வம் அவள் கண்ணில் மின்ன ரவீந்திரனும் அதன் மேல் அவளை நிறுத்தவில்லை. வெவ்வேறு படத்தை பற்றி, அதில் வந்த சீன்களை பற்றி அலசி ஆராய்ந்து, துவைத்து காயப்போட்டனர்.
மூன்று மணி அளவில் அடுத்த சீன்னுக்கு நேரமாக, ரவீந்திரன் கிளம்ப வேண்டி வந்ததால், மாயா சாப்பிட சென்றாள். அவள் கிளம்பும் முன், “இருந்தாலும் கார்த்திக் ரொம்ப பாவம் தான். என்னையே இவ்வளவு கேள்வி கேக்குற, அவரை எப்படியெல்லாம் கேப்ப??” என்று கேலியாக ரவீந்திரன் வினவ, மாயாவின் முகத்தில் பெரிய புன்னகை குடி புகுந்தது.
“அதெல்லாம் அவரு என்னை சூப்பரா சமாளிப்பாரு சார்.…. நான் தான் முழிச்சுட்டு நிப்பேன்!”
[the_ad id=”6605″]
மாயா சிரித்தபடி வயிற்றுக்குள் கபடி ஆடும் எலியை சமாளிக்க, சாப்பிடும் இடத்திற்கு சென்றாள். படப்பிடிப்பில் இருக்கும் பெரிய ஆட்களை தவிர, மற்ற எல்லோரும் சாப்பிடும் இடம் அதுவே. அங்கேயே உடன் வேலை பார்க்கும் நண்பர்களோடு எப்போதும் சாப்பிடுவாள். மாயா சாப்பிட சென்ற நேரம் பெரும்பாலானோர், படப்பிடிப்பில் இருந்தனர்.
இவள் பாட்டிற்கு தட்டில் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு, அங்கே இருந்த மேசையில் அமர்ந்து சாப்பிட தொடங்கினாள். எங்கிருந்து தான் அந்த பிரோடக்ஷனின் சாப்பாடு மேற்பார்வையாளர் வந்தாரோ?? நேராக இவளிடம் வந்து, “யார்மா நீ இப்போ வந்து சாப்பிடுற? மணி என்னாச்சு பார்த்தியா??” என்று அதட்டல் தோனியில் கேட்டார்.
“நான் ரவீந்திரன் சார்கிட்ட அஸிஸ்டென்டா இருக்கேன் சார். கொஞ்சம் லேட் ஆயிடுச்சு இன்னிக்கு….” கையில் வைத்திருந்த கவளை உணவை மீண்டும் தட்டில் போட்டபடி, வாயில் வைத்திருந்த உணவை மென்று விழுங்கி அவருக்கு பதில் அளித்தாள் மாயா….
“அஸிஸ்டென்ட் தான?? உன் இஷ்டத்துக்கு வந்து சாப்பிடுவியா?? இங்க உட்காந்து சாப்பிடுற? இங்க எல்லாம் சாப்பிட கூடாது! எழுந்துரு…”
“ஏன் டெய்லி இங்க உட்காந்து தான் சாப்பிடறோம். இப்போ மட்டும் என்ன சார்??”
“எதிர்த்து பேசாத! கிளம்புனா கிளம்பு, நீயெல்லாம் இங்க உட்காந்து சாப்பிட கூடாது… அவ்வளவு தான்.”
கூறிவிட்டு அவர் பாட்டுக்கு முறைத்து நிற்க, கேட்டவளின் குருதி கொதித்து அவளை அந்த இடத்திலிருந்து எழ வைத்தது. கைகளை நன்றாக உதறி, அதில் ஒரு பருக்கையும் இல்லாது செய்தவள் தட்டை நேராக அதன் இடத்தில் போட்டு, ஓரமாக யாரின் கண்ணிலும் படாதவாரு அமர்ந்தாள்.
சாப்பாட்டை அவ்விடத்தில் அமர்ந்து சாப்பிடக் கூட தான் தகுதியற்றவளா?? ஏன் அவர் அப்படி விரட்ட வேண்டும்?? என்ன தரமிழந்து போனோம் நாம்?? இவ்வாரே அன்று படப்பிடிப்பு முடிவடையும் வரை சிந்தனை ஓடியதில், கண்கள் வேர்ப்பதை மறைக்க பெரும்பாடு பட வேண்டி இருந்தது. எல்லாம் கார்த்திக்கும் சுப்பிரமணியமும் வரும் வரை தான்.
அவர்களை பார்த்து காரில் ஏறி அமர்ந்த நொடி, மடை திறந்த வெள்ளம் சீறிப் பாயந்தது! அவள் முன் இருக்கையில் ஏறாமல், பின் பக்கம் ஏறும் போதே வேறுப்பாட்டை உணர்ந்தான் கார்த்திக். பின் இருக்கையில் அமர்ந்தவள், சுப்பிரமணியத்தின் மடியில் விழுந்து அழத் தொடங்கினாள். என்ன ஏது என தெரியாமல் பரிதவித்த மற்ற இருவரும், அவளிடம் காரணத்தை கேட்டு கெஞ்ச தொடங்கினர்!
வெள்ளம் நிற்காமல் ஓட கார்த்திக்கின் அதட்டல் ஒலியில் தான் அடங்கியது. அப்போதும், தேம்பல் தொடர, “என்னாச்சு கண்ணம்மா?? ஏன் இப்படி அழற??” என தன் மேல் அவளை சாய்த்து கொண்டு கேட்டவனை பார்த்து, ஓட்ட பந்தயத்தில் ஓடும் வீரனாய் வார்த்தைகளை ஓட விட்டு தன் அழுகையின் மூலிடத்தை விளக்கினாள்.
கேட்ட சுப்பிரமணியமும் சரி, கார்த்திக்கும் சரி மிகவும் வருந்தினர். சுப்பிரமணியம் அவளின் தலையை கோதி தன் ஆறுதலை சொல்ல, கார்த்திக் வேறு சொன்னான். “அவரு பண்ணது தப்பு தான்டா. கோவம் வர தான் செய்யும். ஆனா, சினிமால அசிங்கப்படாம ஜெயிக்கறது ரொம்ப கஷ்டம்டா! இத நான் சொல்லல, உனக்கு பிடிச்ச கவுண்டமணி சார் தான் சொன்னாரு.
இன்னும் எவ்வளவோ பார்க்க வேண்டி இருக்கு. விடு இதெல்லாம் பெரிய விஷயமே இல்ல.!!”
[the_ad id=”6605″]
கண்களை துடைத்துக் கொண்டு தன் வருத்தத்தை போக்கியவள், “ஆமா நீ வேணும்னா பாரு, அவனே என்னை கூப்பிட்டு சாப்பாடு போடற நிலமைக்கு வரேனா இல்லையான்னு. இதெல்லாம் எனக்கு ஒரு லெசன் தான்.”
“ஹ்ம்ம்ம் இதான் கண்ணம்மாக்கு அழகு. போலாமா??”
அதன் பிறகு பெரிய ஹோட்டலுக்கு சென்று, பேசிக் கொண்டே சாப்பிட்டாலும் மாயாவின் மனதில் அச்சம்பவம் வடுவாகவே படிந்தது. மீண்டும் வீடு திரும்பும் வேளையில், சோகத்திலும் யோசனையிலும் மூழ்கி இருந்தவளை பார்க்க கார்த்திக்கிற்கு உவப்பாக தோன்றியது.
“ஹே செல்லம்மா ஏன்டி அதையே நினைச்சுட்டு இருக்க?? விடுடா…. எவ்வளவோ பார்த்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா!”
“இல்ல சில விஷயம் நம்ம மனசுல அப்படியே நின்னுடும்ல? அந்த மாதிரி எனக்கும் இது நின்னுடுச்சு! பட், இதேல்லாம் தான் மோட்டிவேட்டிங் திங்க்ஸ். கத்துக்கறேன் ஒவ்வொன்னா….”
“ஹ்ம்ம்ம் சரி விடு. இன்னும் ரெண்டு நாள் தான இங்க ஷூட்டிங். அப்புறம் மேடம் ஒரே ஃபிளைங் தான். ‘நான் போகிறேன் மேலே மேலே’ தான்.”