நிம்மியின் அறைக்குள் நுழைந்த தேவகன்யாவை பார்த்து தயங்கி எழுந்தவளை கட்டிக்கொண்ட கன்யா..
“ஒரு அம்மா வா அவங்க எப்பவுமே டாப் தான்..அண்ணன் விஷயத்துல ஓவர்டோஸாயிடுச்சு..அதான் சீரியல் மாமியாராயிட்டாங்க..அம்மா இயல்பிலேயே நல்லவங்க அண்ணி..போக போக உங்கள புரிஞ்சுப்பாங்க…” என்றாள்.
தன்னை சரியாக புரிந்து கொண்ட நாத்தனாரை மெச்சுதலாக பார்த்தாள் நிம்மி. அத்தைமார் கொடுத்த பால்செம்புடன் தன் கணவன் இருக்கும் அறைக்கு சென்று தாழிட்டவள் சொம்பை மேஜை மேல் வைத்துவிட்டு தன் கணவனின் அருகில் வந்தவள்.
“அவங்க தான் புரியாம பேசறாங்க னா நீங்களும் சைலன்டா கேப்பீங்களா?..” என அவன் தலையில் வலிக்க வலிக்க கொட்டினாள். கோபியோ..
“ஸ்..ஆஆஆஆ..வலிக்குதுடி குட்டிச்சாத்தான்..” என அவள் கைகளை தட்டிவிட, அவள்..
“இன்னிக்கு பர்ஸ்ட் நைட்ம் இல்ல ஒன்னும் இல்ல.. போய் அம்மா மடில படுத்துகங்க பின்னாடியே பீடிங் பாட்டில் ல பால் கொடுத்தனுப்புறேன்..” என கோபமும் அழுகையுமாய் ஜன்னல் கம்பியை பற்றி நின்றாள்.
அமைதியாய் நகர்ந்த நிமிடங்களை கண்டு ‘என்ன பண்றான் இவன்..?’, என திரும்பி பார்க்க..கன்னத்தில் கை வைத்தபடி அவளையே பார்த்திருந்தான். சற்று தடுமாறியவள் வேகமாக அவனை நெருங்கி..
“இப்படி பார்த்தா கண்ணை நோண்டிடுடவேன்..” எனக்கூற பார்வையை திருப்பி அவளை கடந்து சென்று ஜன்னலருகே நின்றான்.
அவன் இறுகிய தோள்கள் அவன் மனதில் நிகழும் பிரளயங்களை தெளிவாக எடுத்துரைக்க முதல் முறையாக பயந்து போனாள் நிம்மி. கனிவு நிறைந்த குரலுடன்..
“என்னாச்சு உங்களுக்கு..?”
“…….”
“ஏன் பேச மாட்டேங்கிறீங்க..?”
“…….” கணவனின் அருகே சென்று அவன் தோளை தொட, சற்று தள்ளி நின்றான் தருண்கோபி.
கண்களில் நீர் திரள அவனை பின்னிருந்து இறுக்கி அணைத்து அவன் முதுகில் முகத்தை அழுத்தியவாறே..
“என்னை திட்டுங்க, அடிங்க, கொன்னு போட்டா கூட ஓகே, ஆனா நீங்க மட்டும் என்னை அவாய்ட் பண்ணாதீங்க..” என கண்ணீரில் இறைஞ்சுபவளை கண்டு இவன் கண்களும் சற்று கலங்க, அவளை முன்னுக்கு இழுத்து அவள் முகத்தை பற்றியவன்,
“சோ.. என் அம்மா வேண்டாம் னு சொன்னதும், என்னை கட்டம் கட்டிட்ட..இல்ல னா மேடம் காதல் வரல, வந்தா சொல்றேன் னு என்னை மட்டுமில்ல உன்னையும் ஏமாத்திட்டு இருந்திருப்ப..அப்படி தான? இவ்வளவு ஆசையை என் மேல வச்சிட்டு எப்படி என்க்கிட்ட நடிக்க முடிஞ்சுது?..உன்னை பார்த்ததும் உன்கிட்ட விழுந்துட்டேன் னு சொல்றதுக்கு நான் வெக்கபடல, ஒரு காதலனா நிமிர்ந்து நிக்கிற பீஃல்..ஆனா நீங்கல்லாம் போட்டி போட்டு என்னை பந்தாடுவீங்க இல்லயா..?” என சீறினான் கோபி.
கண் சிமிட்டாது தன்னையே பார்த்திருந்தவளை விட்டு கட்டிலில் சென்று அமர்ந்தான். ‘அச்சோ..கோபத்தை கூட அழகா காட்டுறானே மை புருஷன்..அழகன் டா நீ’ என நினைத்து அவனருகே ஒட்டி அமர்ந்தவள்..
அவனுக்கு கோபம் வந்து வெறியேத்திக்கனும் னா உன் போட்டோவை ஒரு நிமிஷம் பார்ப்பான், அடுத்த செகண்ட் எதிரிங்களை சும்மா அடிச்சு துவம்சம் பண்ணிடுவான். அப்படி யாரு டா இவனை வெறியேத்துறா னா மொபைலை வாங்கி பார்த்தப்ப பிசைஞ்சு வச்ச பால்கோவா மாதிரி க்யூட்டா ன உன் முகம், பார்த்ததும் மனசுல ஒட்டிக்கிட்ட,..அப்போலிருந்தே எனக்கு உன்னை தெரியும், நான் உன்னை விரும்புறேன் னு விஷ்வாக்கு கூட தெரியாது..இன்பேக்ட் கன்யா கூட நான் நெருங்கி பேச இன்னொரு காரணம் உன் முகஜாடை தான்..இதெல்லாம் இப்பவும் சொல்லிருக்க மாட்டேன்..என் கேள்வியை வச்சு என்னை மடக்கினதால சொல்றேன்..சோ நான் தான் சீனியர் உங்கள லவ்வினதுல..புரியுதா..? “ என அவன் முடியை கலைத்துவிட்டாள் நிம்மி.
அவள் கூற்றில் உள்ளம் உருக, காதல் தாபமாய் மாற அவள் கைகளை பற்றி கட்டிலில் சரித்தவன், அவள் நெற்றியில் தன் நீள விரல்களை பதித்து கீழிறங்கியவாறே..
“என்னை அம்மா, அப்பா, தம்பி, அண்ணனா பார்க்குறேன் சொன்னியே, உன் புருஷனா எப்படி இருப்பேன் னு நீ தெரிஞ்சுக்க வேணாமா..? “ என கேட்க அவன் அருகாமையில், ஸ்பரிசத்தில் அவன் பேச்சில் முகம் சிவக்க தலை திருப்ப, அவள் தாடையை பற்றி..
“என் கண்ணை பாரு நிர்மலா தேவி..” என கிறங்கிய குரலுடன் கூறுபவனை பார்க்கவியலாது கண்களை மூட தன் முதல் அச்சாரத்தை அவள் மூக்குத்தியில் பதித்தான் தருண்கோபி.
படுக்கை விரிப்பை இறுக்கி பிடித்து அவன் முத்தம் தந்த சிலிர்ப்பில் தவித்தவளை மேலும் தன் தேகக்கிரணங்களால் தீண்டி தவிக்க துடிக்க வைத்து பெண்ணாய் உணரவைத்தான் அந்த தாமரையின் காதலன்.
அதிகாலைப்பொழுதில் இருவருக்குமே விழிப்பு தட்ட அவன் தோளில் படுத்திருந்த மனைவியின் தலையை வருடியபடி அவளிடம் கோபி..
“ஆமா..என்னை அவ்ளோ பிடிக்குமா உனக்கு..? ஓங்கி அறையாத குறையா நேத்து அப்படி எகிறிட்டு வந்தியே அம்மாட்ட..அம்மாக்கு நீ மிலிட்டரி வார் ல வேலை செய்ற பொண்ணு, வீட்டுக்கு அடங்கி நடக்கமாட்ட, அடக்க முடியாது னு தப்பா புரிஞ்சிட்டிருகாங்க..ஆனா என்னை பார்த்தா மட்டும் சர்வமும் அடங்கி போகுதே உன்க்கிட்ட..இட்ஸ் எ ஹெவன்லி பீஃல் தெரியுமா?..உன்னை ஒரு நாள் கண்டிப்பா புரிஞ்சுக்குவாங்க..எனக்கு நீங்க இரண்டு பேருமே ரொம்ப முக்கியம், பாப்பா கூட”..
“அவங்களை என்னால புரிஞ்சிக்க முடியுது தருண்..ஆனா என் கேரக்டரை, கேரியரை வச்சு என்னை எடை போடறது பிடிக்கல..அதான் பதிலடி கொடுத்தேன்..இனியும் கொடுப்பேன்..ஆனா உங்க மனைவியா உங்களை எங்கயும் வருத்தபட வைக்க மாட்டேன்..” என்றவளின் நெற்றியில் இதழ் பதிக்க..அமைதியாக உள்வாங்கிய நிம்மி..
“அத்தை சொல்லிவிட்டாங்க, காலை ல நேரத்துல எழுந்து இரண்டு பேரும் குளிச்சிட்டு வெளிய வாங்க னு..நான் முதல்ல குளிச்சிட்டு வர்றேன்..” என்று எழுப்போனவளை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டவன் அவள் காதில்,
“குளிச்சிட்டு வெளிய போகனும்..அவ்ளோ தான, ரெண்டு பேரும் சேர்ந்து குளிக்கலாமே..?” என அவள் கழுத்தில் இதழ் பதிக்க..அவனை விலக்கிக்கொண்டு எழுந்தவள்..
“ஆள விடுங்க பா, சாமி..” என அவனிடமிருந்து துள்ளி ஓடியவளை சிரிப்புடன் பார்த்து படுத்திருந்தான் கோபி.
“அம்மா..கேஸ் சிலிண்டர்…” எனும் பையனின் சத்தத்தில் சுயநினைவிற்கு வந்த நிம்மி வெளியே சென்றாள்.
அன்று வார இறுதியில் தன் நண்பனை சந்திக்க ரெஸ்டாரன்ட் சென்ற அவினாஷ் பக்கத்தில் உள்ள பப்பில் மகிழ்மொழி இரு ஆடவருடன் சிரித்து பேசியபடி இருந்ததை கண்டு ஓஓ மேடம்க்கு இந்த பழக்கம் வேற இருக்கோ என நினைத்தபடி நண்பனிடம் விரைந்தான்.
உணவு முடித்து வெளியே வரும் வேளையில் பப்பிலிருந்து சத்தம் வர என்னவென்று பார்த்தவனுக்கு அங்குள்ள வெயிட்டரை மொத்திக்கொண்டிருந்தாள் மகிழ். அவன் நண்பன்
“சரியான ரவுடி போல, பேஷனா ட்ரஸ் பண்ணிட்டு வந்து எவனாவது கை நீட்டினா சீனை போடறது..இதே பொழப்பா வச்சிட்டிருக்கு அந்த பொண்ணு..”
“உனக்கு அந்த பொண்ணை தெரியுமா டா..? “ என அவி கேட்க அவன்..
“நிறைய வாட்டி இங்க பார்த்துருக்கேன்..எப்பவும் அந்த பசங்களோட தான் வருவா.. அதும் பப்க்கு..அதிலேயே தெரியலயா அவ லட்சணம்..? “என தன் வண்டியை ஸ்டார்ட் செய்ய பின் அமர்ந்த அவினாஷின் மனதில் மகிழை பற்றிய தவறான எண்ணம் உதயமானது.
சில நாட்கள் கழித்து தன் க்ளினிக்கிற்கு பக்கத்து வீட்டு அக்கா குழந்தையுடன் வந்தவளை கண்டும் காணாமலும் அவினாஷ் குழந்தையை கவனிக்க, இது இவன் க்ளினிக் என தெரியாமல் வந்திருந்தவள் இவனை பார்த்ததும் கண்கள் மின்ன ஹாய் சொல்ல வாயடுத்தவள் அவனின் ஒதுக்கம் கண்டு ‘என்னாச்சு இந்த மலமாடுக்கு?’ என குழம்பியவாறே தன் போனை பார்த்துக்கொண்டிருந்தாள். கிளம்பும் முன்னர் அவனை பார்க்க வேண்டுமென்றே அவன் தவிர்ப்பதை உணர்ந்து இவளும் சற்று கோபமாகவே வெளியேறினாள்
அன்று தேவான்ஷூடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் அவியின் தோழி கீதா..
“அவி நான் இப்ப டெல்லி ல இருக்கேன்..என் ஹாஸ்பிட்டல் ல ஒரு எமர்ஜென்சி..அந்த குழந்தையை உடனே அட்டன்ட் பண்ண முடியுமா..?”
“இப்பவே கிளம்புறேன்..” என நேராக அவள் தோழி மருத்துவமனைக்கு சென்று அந்த குழந்தையை பரிசோதித்து மேற்கொண்டு செய்யவேண்டியவற்றை ட்யூட்டி டாக்டரிடம் கூறிவிட்டு தேவ்வுடன் வெளியேறும் போது பக்கத்து அறையில் மகிழ்மொழி இருப்பதை பார்த்து கண்கள் சுருக்கியவன் ட்யூட்டி டாக்டரிடம் விசாரிக்க..
“அபார்ஷன் கேஸ் சார்…” என்றதும் அவிக்கு உள்ளுக்குள் ஏதோ நொறுங்கும் உணர்வு..முயன்று முகத்தை சீராக வைத்தவன் தேவான்ஷூடன் வீட்டிற்கு கிளம்பினான்.
இப்படியே விதி இவர்கள் இருவருக்குள்ளும் கபடி விளையாட அன்று மேகாவை ஆர்.வி.எம் டெம்பிள் ஒர்க்ஸ் அலுவலகத்தில் விட்டுவிட்டு தன் க்ளினிக்கிற்கு கிளம்பியவன் வழியில் மகிழை பார்த்தும் அமைதியாக கடந்து செல்ல அவன் பின்னே சென்று வழியை மறித்து..
“என்னை ஏன் அவாய்ட் பண்றீங்க?”..என நேரடியாக கேட்க, வேறெங்கோ பார்த்தபடி..
“உன்னை மாதிரி கல்ச்சர்லெஸ் பொண்ணுங்களை பேச என்ன பார்க்க கூட பிடிக்கல..வழி விடு..”என அவி நகர..அவன் கையை பிடித்த மகிழ்..
“என்ன உளர்றீங்க?”.. என அவளும் கோபத்துடன் கேட்க..அவள் கையை பார்த்து அவளை பார்த்தவன்..
“ஏன் ஒருத்தன் போதாதா உனக்கு? வெரைட்டியா வேணுமோ?..அதான் பார்த்தேனே பப்ல பசங்களோட கூத்தடிச்சுட்டு, லாஸ்ட் வீக் ஹா..ஹாஸ்பிடல்ல அபார்ட் பண்ணிட்டு னு நீ பத்தினியா வேஷம் போடறதை..” என்று கேட்டவனின் கையை சட்டென விட்டவள் ஓர் நொடி மரித்து போனாள். தன் உயிரில் நிறைந்தவனின் விஷம் தோய்ந்த கேள்வி கூடை தணலை தலையில் கொட்டியது போலிருந்தது மகிழுக்கு.
கண்கள் கலங்கினாலும் முயன்று அடக்கியவள்..கைகளை கட்டிக்கொண்டு சுற்றி நிறுத்திவைக்கப்பட்டிருந்த கற்சிற்பங்களை காட்டி..
“தோ இங்க இருக்கிற உயிரில்லா சிற்பங்களுக்கு கூட உயிர், உணர்வு இருக்கு னு தப்பா பேசமாட்டாங்க என் மேடமும் மேகா சாரும்..அவருக்கு பிறந்த பையன் நீங்க சீ…” என நிறுத்தியவள் பின்..
“பசங்க கூட பப்க்கு போனா நான் மட்டம் னா..யெஸ் ஐம்..ஒன்னு என்ன ஒன்பது வாட்டி கூட அபார்ட் பண்ணுவேன்..எனக்கு வெரைட்டி வேணும் தான்..பட் யூ கெனாட் சாடிஸ்ஃபை மீ..காட் இட்?” என அவன் முகத்துக்கு நேராக சொடக்கு போட்டவள்..
“இனி என் கண்ணுல நீ படவே கூடாது னு சாமிய வேண்டிக்கிறேன்..” என்று கூறிவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினாள் மகிழ்மொழி.
அவள் கூறியதை கேட்டு அவளை கொன்று போடுமளவிற்கு ஆத்திரமடைந்தவனின் கண்களும் தீப்பிழம்பாக அவள் செல்வதையே பார்த்திருந்தன.
வீட்டிற்கு செல்ல மனமின்றி எலியட்ஸ் கடற்கரைக்கு சென்று மணல்மேட்டில் அமர்ந்து கொண்டாள் மகிழ்மொழி. காலை வேளைகளில் கூட்டம் அதிகமாக இல்லாது வெறிச்சோடி போயிருந்தது இவளுக்கு வசதியாக இருக்க, உள்ளிருக்கும் வேதனைகள் கண்ணீர் மூலமாக வெளியேறியது.
‘என்னை பார்த்து என்னெல்லாம் சொல்லிட்டான்..ராஸ்கல்..’ என கண்டமேனிக்கு வாய்விட்டு அவினாஷை திட்டி தீர்த்தாள். இதுவே வேறு ஒருவன் சொல்லியிருந்தால் அவனை மாறு கால் மாறு கை வாங்கியிருப்பாள். இவனையும் நையப்புடைக்க வெறி வந்தாலும் அவனை காதலித்த பாவத்துக்கு அவன் வலியை பார்த்து இவள் இதயமும் துடிக்குமே, சீ மானங்கெட்ட இதயம் என தன்னையும் திட்டிக்கொண்டாள். தான் பேசியது அவனை விட அவன் தன்மானத்தை ஆண்மையை சோதிக்கும் வகையில் அவன் மனதை சுக்கு நூறாய் உடைத்திருக்குமே என காதலியாய் இவள் மனம் கலங்கியது.
சுமார் ஒரு மணி நேரமாய் அழுது கரைந்தவள் மெல்ல மெல்ல தன்னை தானே தேற்றியபடி எழுந்து கண்களை துடைத்துக்கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பினாள் மகிழ்மொழி.