அத்தியாயம்…13
மணிமேகலைக்கு, வீராவின் சிட்டு என்ற அழைப்பில் பழைய நினைவுகள் வந்து போயின…ஆனாலும் பதிலுக்கு அவள் அழைப்பான அத்தான் என்று அழைக்காது, அவள் எதை தெரிந்துக் கொள்ள வீராவை பேசியில் அழைத்தாளோ…அதற்க்கு உண்டான கேள்வியான…
“வசுவுக்கும் சித்தி பையனுக்கும் கல்யாணமா…?” என்ற கேள்வியில் இப்போது வீரா ஆடித்தான் போனான்.
“நீ எ..ன்ன கேட்குற…?” என்று கேட்ட வீராவின் குரலில் இருந்த தடுமாற்றம் மணிமேகலைக்கு புதியதாக தெரிந்தது. அவன் பேச்சு எப்போதும் வள வள என்று நீண்டு இருக்காது.
சொல்ல நினைப்பதை நறுக்கு தெரித்தார் போல, வார்த்தைகளையும் அதிகம் உபயோகிக்காது, கேட்பவர்களுக்கு புரியும் படியும், தன் பேச்சில் எந்தவித ஒரு பிசிறும் இல்லாது சொல்லி விடுவான். அவனின் இந்த குரல் தடுமாற்றத்தில்…
நாம் என்ன கேட்டோம்…வாசு வசுவின் திருமணம் விசயத்தை பற்றி தானே… அது உண்மையாக இருக்கும் பட்சத்திலும் அவன் அதிர்ச்சி அடைய என்ன இருக்கு…? என்று தான் கேட்ட கேள்வியை மறந்து மணிமேகலையின் சிந்தனையை கலைத்து வைத்தான் வீரேந்திரன் கேட்ட கேள்வி மூலம்.
“உனக்கு தெரியும் தானே… வாசுவும், வசுந்தராவும், விரும்புவது…?” இதற்க்கு மணிமேகலை என்ன என்று பதில் சொல்லுவாள்.
தெரியும் என்றா…இல்லை தெரிந்த விசயத்தின் அளவு பற்றியா…? வசுவும், வாசுவும் பார்த்தார்கள். அந்த அளவுக்கு தான் மணிமேகலைக்கு தெரிந்த விசயம். பார்த்தவர்களை எல்லாம் விரும்பி விட முடியாது. இது அவள் தன் அனுபவத்தில் தெரிந்துக் கொண்டது.
வசு சொன்னாள் தான். இந்த பார்வை உன் பார்வையிடல் போல இல்லை என்று…அது வரை தான் அவளுக்கு தெரிந்த விசயம். இதை எப்படி அவள் சொல்வாள்…
இன்று ஏனோ வீராவின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் மணிமேகலையின் சிந்தனைகள், மீண்டும் மீண்டும் பழைய நினைவுகளில் சஞ்சரிக்க ஆராம்பித்து விடுகிறது.
தனியாக இருப்பவர்களின் சிந்தனைக்கு எந்த வித இடையூரும் இருக்காது. ஆனால் மணிமேகலை பேசியில் ஒருவருடன் பேசிக் கொண்டு இருக்கும் போதே…இங்கு இல்லாது வேறு ஒரு உலகுக்கு செல்வது போல..
அவள் நினைவுகள் அவ்வப்போது வட்டமடித்துக் கொண்டு இருந்தால், பேசியில் அந்த பக்கம் இருக்கும் வீரேந்திரன் சும்மா இருப்பானா….?
[the_ad id=”6605″]
“மணி..மணி…உனக்கு என்ன ஆச்சு…” மணிமேகலை கேட்ட வசு…வாசுவின் விசயத்தில் அவன் அழைத்த பழைய அழைப்பான சிட்டு மறைந்து போய் …சாதரணமாக அவன் அழைக்கும் மணி என்ற பெயரே வீராவின் வாயில் தன்னால் வந்து வந்தது.
“இல்ல ஒன்னும் ஆகல…ரொம்ப நாள் கழிச்சி இப்போ தான் வசு போன் போட்டா…அது அவ நம்ம வீட்டு உறவு ஊர் உறவுன்னு சொல்லிட்டு இருந்தா…அது தான் உங்க கிட்ட கேட்டேன்.” என்று தான் சொல்ல வேண்டியதை வீராவிடம் ஒருவாறு சொல்லிமுடித்து விட்டோம் என்று மணிமேகலை நினைத்தாள்.
ஆனால் வீரா கேட்ட… “உன் உறவுக்குள் வர்றேன் என்று தான் சொன்னா…நீ எப்படி சரியா வாசுவுக்கும், வசுந்தராவுக்கும் திருமணமான்னு கேட்ட…?”
வீரேந்திரன் சரியான வட்டிக்காரன் மட்டும் இல்லை. நாம் பேசும் வார்த்தைகளை வைத்தே…வார்த்தையாடுவதில் கெட்டிக்காரன் என்று அவன் கேட்ட கேள்வி மூலம் மணிமேகலைக்கு உணர்ந்தினான்.
“அது…அது…” என்று மணிமேகலை திணறினாள்.
“மணி இந்த கல்யாண பேச்சே உன்னை வெச்சி தான் ஆராம்பிச்சி முடிஞ்சு இருக்கு. நீ ஒன்னும் தெரியாத்து போல கேட்குற…? எனக்கும் ஒன்னும் புரியல…
நீ என்ன நடந்தது என்று எனக்கு விளக்கமா சொன்னா தான் புரியும்…” என்று வீரேந்திரன் கேட்கவும்…
மணிமேகலை… “ நான் அங்கு இருக்கும் போது நம்ம வீட்டுக்கு வரும் போது வசு சித்தி பையனை பார்ப்பா…” என்ற மணிமேகலையின் பேச்சில்..
வீரேந்திரன்… “வரும் போது பார்ப்பாளா…? பார்ப்பதற்க்கு என்றே வருவாளா…?” என்று வீரேந்திரன் கேட்ட குரலில் அவன் பல்லைக் கடித்துக் கொண்டு இக்கேள்வியை கேட்கிறான் என்பதை மணிமேகலையால் நன்கு உணர முடிந்தது. இதற்க்கும் மணிமேகலை என்ன என்று பதில் சொல்வாள்.
ஒரு வயதில் நாம் செய்யும் ஒரு சில விளையாட்டு தனம், வயது கொஞ்சம் முதிர்ச்சி அடைந்த போது அபத்தமாக தோன்றும். அதே போல் தான் இப்போது மணிமேகலைக்கு அப்போது நாம் என்ன செய்து வைத்திருக்கிறோம்.
சைட் என்பது ஒரு சாதரணமான விசயம்…இதில் என்ன தப்பு இருக்கிறது என்று தோன்றியது. ஆனால் இப்போது…இதோ இந்த நாட்டில் தன்னை கேள்வி கேட்க ஆள் இல்லை. நான் யாரை பார்த்தாலும், என் வீட்டுல் இருப்பவர்களுக்கு யாருக்கும் தெரிய போவது இல்லை.
அப்படி இருக்கும் போது இங்கு ஏன் நான் யாரையும் பார்க்கவில்லை. பார்க்க வில்லை என்பதை விட அவள் பார்க்க வேண்டும் என்ற நினைப்பு கூட அவளுக்கு எழவில்லையே…
அதுவும் ஜான் விக்டர்…அவர் பேச்சில் செயலில் அனைத்திலும் தன் மீது இருக்கும் அவரின் ஆர்வம் எனக்கு தெரிகிறது. எனக்கு தெரிய வேண்டும் என்று தான் அவர் அப்படி பேசுகிறார் என்றும் அவளுக்கு தெரிகிறது.
இருந்தும் தெரியாதது போல்… அவனிடம் பேசி கடந்து விடுகிறேனே…அது ஏன்…? அதுவும் சோனாலி சொல்வது போல் ஜான் விக்டரிடம் எந்த வித குறையும் சொல்ல முடியாத முழுமையான ஆண்மகன். இது அவளுக்கும் தெரிகிறது.
இருந்தும் அவனிடம் காதல் என்ன…?ஒரு ஈர்ப்பு கூட எனக்கு வரவில்லையே…?அது ஏன்…? என்று யோசித்தவளுக்கு அது ஏன் என்று மட்டும் விளங்கவில்லை. ஆனால் அவனிடம் ஏற்படாத ஒரு நெருக்கம் அவன் அன்னை மலர்விழையை பார்த்ததும் ஏற்படுகிறது. அதற்க்கும் அவளுக்கு காரணம் புரியவில்லை.
சோனாலி சொன்னது போல…அவன் வீட்டில் தன்னை பற்றி சொல்லி விட்டான் என்று தான் அவளுக்கு தெரிகிறது. மணிமேகலைக்கும் ஜான் விக்டரின் குடும்பத்தை பிடித்து இருக்கிறது.
தன் வீட்டில் இல்லாது ஒரு அந்நியோன்யம் ஜான் விக்டர் வீட்டில் இருக்கிறது. அதுவும் வில்சன் விக்டர் அங்கிளும், மலர் விழி ஆன்டியும் கண்ணாலேயே பேசிக் கொள்ளும் அந்த காதல்… தன் பெற்றோர்களிடம் பார்க்காத அந்த காதலை மணிமேகலைக்கு ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கு…இதை மட்டும் வைத்தே ஜான் விக்டரை ஏற்றுக் கொள்ள முடியுமா…? அப்போ என் விருப்பம்…?இதை எல்லாம் நினைத்து தான் ஜான் விக்டர் தன்னை நெருங்க நெருங்க மணிமேகலை விலகி விலகி செல்கிறாள்.
அப்படி ஒருவன் தனக்காக உருகிக் கொண்டு இருக்கும் போது அவனை பார்க்காது இருக்கும் நான், ஏன் ஊரில் அனைவரையும் பார்த்தேன். நினைக்கும் போதே ஏதோ பெரிய தவறு செய்த உணர்வு ஏற்பட்டது மணிமேகலைக்கு…
“நீ பேசுறது என் கிட்ட…ஆனா நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம ஏன் அப்போ அப்போ அமைதியா ஆயிடுற…?” என்று மீண்டும் தன் கேள்வியில் மூலம் மணிமேகலையை நிகழ் காலத்திற்க்கு கொண்டு வந்தான் வீரேந்திரன்.
அதுவும் அவன் அடுத்து கேட்ட… “நீ ஏதாவது தப்பு செய்து இருக்கியா மணி.” என்ற வீராவின் கேள்வியில், உண்மையில் மணிமேகலை ஆடித்தான் போய் விட்டாள்.
உடனே… “நா…ன் என்ன தப்பு செய்து இ…ருக்க போறேன்…?” என்ற மணிமேகலையின் இந்த திணறலிலும், வசுந்தரா கல்யாண விசயத்தில் நகர்த்திய முறையையும் நினைத்து ஏதோ இருக்கு என்று மட்டும் அவன் உள்மனம் அடித்து சொன்னது.
அப்போதும் வீரா… “எதுன்னாலும் என் கிட்ட சொல் மணி. நான் பார்த்துக்குறேன். இங்கு அந்த வசு உன்னை வெச்சி தான் உன் அண்ணனையே கல்யாணம் செய்துக்க முடிவு செய்து இருக்கா…” என்ற வீராவின் பேச்சில்..
மற்றத்தை எல்லாம் விட்டு… “என்ன…என்ன சொல்றிங்க..என்னை வெச்சா…ஏன் ஏப்படி…?”
மணிமேகலைக்கு உண்மையிலேயே மிக பயமாக இருந்தது. இந்த வசு என்னை வெச்சி என்ன செஞ்சி இருக்கா…? என்று அவள் இன்னும் குழம்பும் முன் வீரேந்திரன்…
“வாசுவும் வசுவும் லவ் பண்றது உனக்கு தெரியுமா…சின்ன வயசுல இருந்து நீயும் அவளும் பிரியாம இருக்கிங்கலே… அது கல்யாணம் ஆன பின்னும் தொடரனும் என்று நீ தான் ஆசைப்பட்டு.. நீ வாசுவை கல்யாணம் செஞ்சிட்டா…நாம ஒன்னா இருக்கனும் என்று சொன்னியாமே…” என்று வீரேந்திரனை முழுவதும் சொல்ல விடாது…
“எனக்கு அந்த எண்ணமே இல்ல. அந்த வீடு..அந்த ஊரு இதுவே என்னதுன்னு என்னால உணர முடியல. எப்போடா அந்த நாட்டை விட்டு போகலாம். என் அப்பா அம்மாவையும் நான் இருக்கும் இடத்திற்க்கு அழச்சிக்கலாமுன்னு நினச்சிட்டு இருக்கேன்.அப்படி இருக்கும் போது…எப்படி…?” என்று சொல்லிக் கொண்டே வந்தவளுக்கு அப்போது தான் ஒன்று உரைத்தது நான் என்ன பேசிக் கொண்டு இருக்கிறேம் என்ற உண்மை.
இப்போது மணிமேகலையின் பேச்சுக்கு, அழைப்பில் அந்த பக்கம் இருந்த வீராவிடம் இருந்து பதில் வராது அமைதியாக கழிய…
மணிமேகலை தான்… “ஹலோ… ஹலோ… லைனில் இருக்கிங்கலா…?” என்று இரு முறை அழைத்து கேட்க…
“ம் ம்..இருக்கேன். தொடர்பில் தான் இருக்கேன். நான் எப்போவும் துண்டித்தது கிடையாது. துண்டிக்க எண்ணமும் இல்லை.” என்ற வீரேந்திரனின் பேச்சு மணிமேகலைக்கு பாதி புரிந்தும், மீதி புரியாமலும் போனது.
ஆனால் இப்போது அதை பற்றி கேட்க..ஏன் யோசிக்க கூட தோனாது… “வசு வசு என்ன சொன்னா…?” தன் பிரச்சனை தான் பெரியது என்பது போல் மணிமேகலையின் பேச்சு, ஏனோ வீராவுக்கு கோபத்தை வரவழைத்தது.
எப்போதும் வீரேந்திரன் அந்த ஒரு நாள் அவள் கன்னத்தில் அரைந்ததை தவிர… மணிமேகலையிடம் தன் கோபத்தை காட்டியது கிடையாது.
இப்போது அவள் சொன்ன எனக்கு இந்த வீடு பிடிக்கல நாடு பிடிக்கலே…கூடவே என் பெற்றோரையும் அழச்சிக்க நினைக்கிறேன் என்ற வார்த்தைகள், அவள் வாயில் இருந்து கேட்டதில்…கோபத்தில் தான் ஏதாவது சொல்லி விடுவோமோ என்று நினைத்து தான் தன்னை அடிக்கியவனாய் எதுவும் பேசாது அமைதி காத்தான்.
மணி …கேட்ட லைனில் இருக்க்கிங்கலா…? என்ற அந்த வார்த்தையில், தன்னால் அவன் மனதில் இருந்தது வெளி வந்தது.
ஆனால் மணிமேகலை அதை கூட புரிந்துக் கொள்ளாது… தனக்கு தெரிய வேண்டிய விசயம் தெரிந்தே ஆக வேண்டும் என்பதில் காட்டும் ஆர்வம்…ஏன் தன் பேச்சில் இருக்கும் அர்த்தத்தை ஆராய்வதில் யோசிக்கவில்லை.
அந்த கோபத்தில் என்னிடம் இருந்து இனி உனக்கு இங்கு நடக்கும் எந்த விசயமும் தெரியாது என்று நினைத்துக் கொண்டவன்.. பின் அவளிடம் வெட்டத்தியாக தான் பேசினான்.
எப்போதும் இந்த பாவம் மணிமேகலையிடம் தான் இருக்கும். முன் எல்லாம் வீரா தான் மணியிடம்… “என்ன…ஏது…” என்று கேள்வி கேட்பான்.
மணிமேகலை ஒரு மதிப்பெண்ணுக்கு கொடுக்கும் பதில் போல் தான், அவளிடம் இருந்து வார்த்தைகள் வெளிப்படும். ஆனால் இன்று மணிமேகலை வீராவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க…
[the_ad id=”6605″]
வீராவோ… “ம்..வசு தான், வாசுவை கல்யாணம் செய்துக்க போறா…” என்று வீரா… இதே பதிலை பலவிதமாய் சொன்னானே ஒழிய அடுத்து ஒரு தகவல் அவளுக்கு தெரியும் படி பேசவில்லை.
அப்போது சங்கரி… “என்ன வீரா அடுத்த மாதம் கல்யாணம் வெச்சிட்டு இப்படி போனும் கையுமா இருக்க…வட்டி எல்லாம் அப்புறம் வாங்கலாம். இப்போ நாம பஜார் போய் என் மருமகளுக்கு ஒரு காசிமாலை வாங்கனும்.” என்று தன் அத்தை பேசுவதை அந்த பக்கத்தில் அழைப்பில் இருந்த மணிமேகலைக்கு தெளிவாக கேட்டது.
என்னது வட்டிக்காரனுக்கு கல்யாணமா…?நம்ம கிட்ட சொல்லவே இல்ல…என்று தான் நினைத்தாள்.
மணிமேகலை இப்படி நினைக்கும் போதே வீரா சொன்ன… “அவளுக்கு நகை எல்லாம் பிடிக்காது. அதனால வீணா காச நகையில கொட்டாதிங்க.” என்ற பேச்சும் அதற்க்கு சங்கரி அத்தை…
“நகையில் கொட்டாம உன் வட்டிக்கடையில் கொட்டனுமா…?” என்ற பேச்சில் அழைப்பில் இருந்த மணி கொல் என்று சிரித்து விட்டாள்.
அப்போது தான் வீரா மணிமேகலையிடம் பேசிக் கொண்டு இருக்கோம் என்ற நினைவு வந்ததோடு…இவளுக்கு நம் மூலமாகவே கல்யாணம் விசயமும் தெரிய வந்துடுச்சே…என்ற எரிச்சலில்…
“இப்போ எதுக்கு சிரிக்கிற…?” என்று வீரா எரிந்து விழுந்தான்.
என்னை போலவே அத்தையும் வட்டிக்காரன் என்று சொன்னதை நினைத்து சிரித்தேன் என்றா சொல்ல முடியும்…? அதனால்… “இல்ல உங்களுக்கு கல்யாணம்லே…அதான் சிரிச்சேன்.” என்று மணிமேகலை சொன்னாள்.
“ஓ எனக்கு கல்யாணம் ஆவது உனக்கு சிரிப்பா இருக்கா…?” என்று கேட்டவன்..
தொடர்ந்து… “இன்னும் எனக்கு யார் கூட ஆவதுன்னு தெரிஞ்சா இன்னும் உனக்கு சிரிப்பு சிரிப்பா இருக்கும் போ…” என்ற அவன் பேச்சை அப்போது பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.
மேலும் வீராவிடம் பேசியதில் இருந்து வசு தன் பெயரை உபயோகித்து, வேலைக்கு சென்றதோடு தன் வீட்டிலும் வந்து விட்டாள் என்று தான் நினைத்தாள். ஆனால் அதோடு ஒரு பெரிய விசயம் அடுத்த நாள் தன் அன்னையிடம் பேசும் போது தான் அவளுக்கு தெரிய வந்தது.
“அம்மா எப்படி இருக்கிங்க…?” என்ற மணிமேகலையின் கேள்விக்கு எப்போதும் போல்…
“ம்…” என்று கொட்டியவர். பின் எப்போதும் போல் அவர் பேச்சான…
“பார்த்து நடந்துக்க…எப்படி போனியோ அப்படியே திரும்பி வரனும்.” என்ற சொல்லோடு எப்போது போல் அவர் பேசியை அணைக்க பார்த்தார்.
ஆனால் மணிமேகலை…”அம்மா நீங்க கூட கல்யாண விசயத்தை என் கிட்ட சொல்லலே. நீங்க எப்போவும் அதிகம் பேச மாட்டிங்க தான். ஆனால் இது எவ்வளவு முக்கியமானது…”
என்ன தான் மணிமேகலைக்கு அந்த வீட்டில் அந்த அளவுக்கு ஒற்றுதல் இல்லை என்றாலும், சித்தி மகனுக்கும், வசு ஒரு காலத்தில் தனக்கு தோழி… ஆனால் இவர்களை பொறுத்த வரை இன்றும் அவள் எனக்கு தோழியாக தானே தெரிகிறாள். அதை வைத்து தானே அவள் அந்த வீட்டிற்க்குள்ளேவே நுழைகிறாள். அவர்களுக்கு கல்யாணம்.
அந்த கல்யாணத்தை பற்றி… இந்த அம்மா சொல்வதற்க்கு என்ன…?பேச்சு அதிகம் இல்லை என்றாலும், தினம் பேசுகிறார் தானே…என்ற ஆதாங்கத்தில் எப்போதும் தன் அன்னையின் குணம் அறிந்து நடந்துக் கொள்பவள்…
இன்று தோழி தனக்கு செய்த துரோகத்தில் வார்த்தையை விட்டு விட்டாள். ஆனால் அதற்க்கு வரலட்சுமி சொன்ன…
“வசு தான் நானே பேசிக்கிறேன். அவள் இந்த மாசத்தோடு ட்ரையினிங் முடியுதுல…முடிஞ்ச உடன் இந்தியா கூப்பிடுங்க. அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாமுன்னு சொன்னா…
[the_ad id=”6605″]
நான் கூட உன் கல்யாண புடவை எடுக்கும் போது அந்த போன்ல முகம் தெரிஞ்சு பேசுவாங்கலே அதுல கூப்பிடு. அவளே பிடிச்சது எடுக்கட்டும் என்று சொன்னேன். ஆனா வசு தான் அவ டேஸ்ட் எனக்கு தெரியுமுன்னு சொன்னா… நம்ம வீரா தம்பியும் உனக்கு பாத்து பாத்து தான் புடவையே தேர்வு செய்தார் மணி.”
எப்போதும் ஒன்று இரண்டு வார்த்தைகளோடு பேசும் வரலட்சுமி. இன்று பேசிய தொடர் பேச்சில்…மணிமேகலையின் மூச்சு நிற்கும் படியாக பேசியாகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்
“யா…ரு க..ல்யாண..புடவை.” நாம் தான் தவறாக புரிந்துக் கொண்டோமோ என்று நினைத்து கேட்டாள்.
ஆனால் அன்னை சொன்ன… “என்ன மணி கேள்வி இது உனக்கும் வசுவுக்கும் தான் கல்யாணப்புடவை எடுத்தது.” என்ற வரலட்சுமியின் பேச்சில் மாப்பிள்ளை யார் என்று கூட கேளாது பேசியை அணைத்து விட்டவள்.
அடுத்து பேசியில் மணிமேகலை அழைத்ததோ… நம் ஜான் விக்டருக்கு…