அத்தியாயம் – 10–2
‘மயிலம்மா… என் மயிலுக்குட்டி…” என கொஞ்சிக்கொண்டிருந்தான்.
‘வீட்ல இருந்தா அவளை தூக்கிவச்சே பழக்கி வச்சிட்ட.. நீ இல்லன்னாலும் யாராவது தூக்கினாதான் அழாம இருக்கா.. அவளை பெட்ல படுக்கவை மாறா..” என்று நிவேதா சொல்ல..
‘பிறந்து ஐஞ்சு மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ள அவ்ளோ விபரமா இருக்காளா..? என் மயிலம்மா..” என்று குழந்தையின் பிஞ்சு கால்களை தன் கன்னத்தில் வைத்துக்கொண்டு கேட்டான்.
‘நீ ஒரு நிமிசம் அவளை பெட்ல போட்டு பாரு.. அவ பண்ற ரகளையெல்லாம் அப்பதான் உனக்கு தெரியும்..‚” என்றாள் நிவேதா.
நிவேதா சொன்னதுபோல் மாறன் குழந்தையை பெட்டில் படுக்க வைத்த அடுத்த நொடி வீரென்று அழ ஆரம்பித்து தன்னை மீண்டும் தூக்கவைத்தாள் தன் மாமனை.
‘இல்லடா.. இல்லடா…” என குழந்தையை ஆசுவாசப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது மாறனுக்கு. குழந்தை அழுகையை நிறுத்தியதும்.. ‘என்ன நிவி இப்படி அழறா..?” என்று ஆச்சர்யமடைந்தான் மாறன்.
‘நீ குழந்தைல செய்த வேலையைத்தாண்டா உன் மருமக இப்ப செய்யிறா..” என்று சுமதி கூற..
சந்தோசமய் சிரித்தவன்.. ‘ம்ம்.. அப்படியாடா மயிலம்மா..” என மீண்டும் மாறன் கொஞ்ச.. அழகாய் சிரித்தாள் தன் மாமனைப் பார்த்து.
‘மாறா.. நிவி அவங்க வீட்டுக்கு போறேன்னு சொல்றா..” என்றார் சுமதி.
‘நிவி.. இப்பதான் மயிலம்மா முகம்பார்த்து சிரிக்க ஆரம்பிச்சிருக்கா.. ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நாளைக்கு இங்கையே இருக்கா..” என்றான் கெஞ்சலாக.
‘இல்ல மாறா.. அங்க அத்தைக்கு நான் இல்லாம ரொம்ப சிரமம்.. நான் ரெஸ்ட் எடுக்கனும்னுதான் என்னை கூப்பிடாம இருக்காங்க.. இங்க பக்கத்து ஊர்தான..? என்னை பார்க்க வரதுக்குத்தான் உனக்கு நேரம் இருந்ததில்ல.. உன் மயிலம்மாக்காகவாவது இனி அடிக்கடி என் வீட்டுக்கு வருவியா பார்க்கலாம். வர வியாழக்கிழமை நான் கிளம்பறேன் மாறா..” என தன்மையாகவே சொன்னாள் நிவேதா.
‘மம்மா..” என்று குழந்தை சொல்ல.. ‘நிவி.. மயிலம்மா என்னை மாமா சொன்னா..” என்று மாறன் குதூகலிக்க..
‘என்ன அதிசயம்டா இது..? எல்லா குழந்தைகளும் முதல்ல அத்த தான் சொல்லும்.. என் பேத்தி என் மகனை இப்பவே இப்படி மயக்குறாளே..” என்று சுமதியும் சந்தோசமடைய..
‘நிவிம்மா.. நாங்களே வளர்த்திடறோமே.. எங்க குட்டி நிவியை..” என்று இராமு கெஞ்சினார்.
‘சரிப்பா.. கொஞ்சநாள் அங்க.. கொஞ்ச நாள் இங்க.. உங்க பேத்திக்கு இப்படி அக்ரிமென்ட் போட்டுக்கலாம்..” என சிரித்தவள்..
‘ஏன் மாறா.. நந்தினியோட அம்மா என்னதான் சொல்றாங்க..?” என்றாள்.
‘அத்தை இங்க வந்தாங்ன்னா.. ராஜய்யாவோட நிம்மதி போய்டும்னு என்கிட்ட சொல்றாங்க.. அவங்கம்மா கஷ்டம் புரியாம.. இந்த ராஜி.. நீ வேலையை விட்டுட்டு வந்தாதான் நான் கல்யாணமே செய்துப்பேன்னு அவங்கம்மாகிட்ட அடம்பண்றா.. இதை ராஜிக்கு எப்படி புரியவைக்கிறதுன்னு எனக்கும் தெரியலை..
இதுல ராஜய்யா வேற.. நான் அமுதாவை பார்த்து ஏன் என்னை விட்டுட்டு போனேன்னும்.. என்ன காரணம்னு கேட்டே ஆகனும்னு துடியா துடிச்சிட்டிருக்கார்.. எல்லாத்துக்கும் மேல இதெல்லாம் தேவிம்மாக்கு தெரிஞ்சா அவங்க என்னமாதிரி ரியாக்சன் கொடுப்பாங்கன்னு அதுவேற பெரிய கவலையாயிருக்கு.. இது எங்க போய் முடியும்னு எனக்கு தெரியலை நிவி.” என்றான் சோர்வாக.
[the_ad id=”6605″]
‘வேலையை விட்டுட்டு வரலைன்னாலும்.. எப்படியும் கல்யாணத்தில நம்ம சின்னையாவை அவங்க பார்க்கிறமாதிரிதான ஆகும்..? இதுக்கு மேல எதையும் மறைக்க முடியாது மாறா.. எப்படியும் ஒரு பிரச்சனை கிளம்பத்தான் போகுது.. அதுக்காக எவ்ளோ நாள் நீ கல்யாணத்தை தள்ளி போட்டுட்டே இருப்ப..? நம்ம அப்பாம்மா.. சின்னைய்யாக்காக உன் மாமியார்கிட்ட கூட அதிர்ந்து பேசமாட்டாங்க.. அவங்களை நம்பினா வேலைக்காகாது.. பேசாம நீயே உங்க அத்தைகிட்ட இதுக்கு என்ன பண்ணலாம்னு பேசி சீக்கிரம் ஒரு முடிவுக்கு வரசொல்லு..” என்றாள் நிவேதா.
‘பேசறேன் நிவி..” என்றான்.
‘அது சரி.. நீ என்ன இப்பெல்லாம் நந்தினியை போய் பார்க்கிறதே இல்லையாம்.. போன்ல பேசறதோட சரியாம்.. அவ உன்னை பார்த்தே மூனு மாசம் ஆகிடுச்சின்னு ரொம்ப வருத்தத்தோட சொல்றா..?” என்றாள் சந்தேகத்தோடு.
‘ஆமாம் நிவி.. இப்பவெல்லாம் அவளை போய் பார்க்கவே எனக்கு சங்கடமா இருக்கு.. ராஜியோட அப்பா யார்ன்னு எனக்கு தெரியும்னு.. இன்னும் அவகிட்ட சொல்லாம இருக்கிறது.. ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு நிவி.
அவளுக்கு அவங்கம்மா சென்னையில இருந்து இங்கையே நிரந்தரமா வரதுக்கு மறுப்பு சொன்னதில இருந்து.. அவளோட அப்பா இந்த ஊர்லதான் இருப்பார்ன்னு ரொம்பவே டவுட் வந்திடுச்சி.. என்கிட்டையே இதை பலமுறை சொல்லியிருக்கா.. ராஜி மனசுல என்னன்னா… அவங்கம்மாவை யாரோ ஏமாத்திட்டாங்கன்னும்.. அவங்களாலதான் என் அம்மும்மா ரொம்ப கஷ்ட்டப்பட்டாங்கன்னும்.. அவராலதான் அவங்க வாழ்க்கையே வீணாகிடுச்சிங்கிறதும் அவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.. அங்க சென்னையில.. வரதச்சனையால டிவோர்ஸ் ஆகிடுச்சுன்னு அவங்கம்மா எல்லார்கிட்டையும் சொல்லிவச்சிருக்காங்களாம். இப்படித்தான் ஏதேதோ சொல்லி.. எப்பவும் அவங்கம்மாவை நினைச்சேதான் ரொம்ப வருந்துவா..”
‘அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமா உண்மையை புரிய வைக்கலாம்னு.. ஒருவேளை உங்கப்பா நல்லவரா கூட இருந்திருக்கலாம்.. என்ன நடந்ததுன்னு முழுசா தெரியாம யாரையும் தப்பா பேசக்கூடாதுன்னு ஒரே ஒரு நாள் சொன்னேன்..
அதுக்கு என்னா கத்து கத்துறாங்கிற நிவி..? எனக்கு யாரும் அப்பா இல்ல.. நான் உருவாகறதுக்கு காரணம் எங்கம்மாவோட காதலன்தான்.. அவ்ளோதான் அந்தாளுக்கு மரியாதை..‚ அதைத்தாண்டி அப்பா குப்பான்னு யாரும் எனக்கில்லைன்னு பேய் மாதிரி கத்துறா.. அவளை பொருத்தவரை.. அவங்கம்மாவோட காதலன்தான் அவளோட ஜென்ம எதிரி.. இப்படி எண்ணம் இருக்கிறவகிட்ட.. ராஜய்யா நல்லவர்ன்னு நான் எப்படி புரிய வைக்கிறது..?” என்று வேதனையோடு சொன்னான்.
நிவேதா முகமும் வாடிடவும்.. சூழலை மாற்ற எண்ணி.. ‘ஆமா நிவி.. இந்த சோபி ஏன் எனக்கு போனே பண்றதில்ல..? உனக்கேது பண்ணினாளா..? எப்படியிருக்காளாம்..? நான் சோபிகிட்ட பேசியே பத்து நாளுக்கு மேல ஆய்டுச்சி..” என்றான்.
‘உனக்கு விசயமே தெரியாதா..? சோபி இப்ப கன்சீவா இருக்கா.. உனக்குதான் முதல்ல சொல்லலாம்னு போன் செய்தாளாம்.. வெக்கமா இருந்ததால சொல்லலையாம்.. அம்மாக்கு கூட அவளா சொல்லலை.. நான்தான் அம்மாகிட்ட சொன்னேன்.. என்கிட்ட சொல்லவே அந்த தயங்கு தயங்கினா மாறா.. நானாத்தான் ஹாஸ்பிட்டலுக்கு போனியான்னு கேட்டு விசயத்தை வாங்கினேன்..” என சிரித்தாள்.
‘ஹே.. சூப்பர் நிவி.. வரியா நாம போய் சோபிய பார்த்திட்டு வரலாம்..” என்றான்.
‘குழந்தையை தூக்கிட்டு ரொம்ப அலைச்சலாய்டும் மாறா.. நீ போய்ட்டு வா.. சோபி அடுத்த மாசம் வரன்னு சொல்லியிருக்கா.. நான் அப்ப பார்த்துக்கிறேன்..”
‘அதெல்லாம் முடியாது.. கார்லதான போகப்போறோம்..? மயிலம்மாக்கு வலிக்காம நான் பார்த்துக்கிறேன்.. வா.. நிவி.. ப்ளீஸ்…” என கெஞ்சினான்.
‘உனக்கு துணைக்கு ஆள் வேணும்னா உன் ஆளை கூட்டிட்டு போகவேண்டியதுதான..? என்னை ஏண்டா தொல்லை பண்ற..?” என்று பொய்யாய் கோபித்தாள் நிவேதா.
‘ம்கூம்.. அவ வந்திட்டாலும்…” என ராகமிழுத்தவன்.. ‘அவளோட அம்மும்மா கல்யாணம் முடியிற வரைக்கும் எங்கையும் ஊர் சுத்தக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்களாம்.. அவ அதை ஸ்ட்ரிக்டா பாலோ பண்றா.. நம்ம கல்யாணத்துக்குத்தான் எல்லாரும் சம்மதிச்சிட்டாங்கள்ல..? இப்பவாவது எங்கையாவது வெளில போலாம்னு எத்தனை முறை கூப்பிட்டிருக்கேன்.. வரவே முடியாதுன்னு உறுதியா மறுத்திடறா..” என்று எரிச்சலாக சொன்னான்.
‘சரி விடு மாறா.. நாம பட்ட கஷ்டம் நம்ம பிள்ளைக்கு வரக்கூடாதுன்னு நினைச்சி கூட அவங்கம்மா அப்படி சொல்லியிருப்பாங்க.. அதுவும் நல்லதுக்குத்தான..? இதுக்குத்தான் சீக்கிரம் கல்யாணம் பண்ற வழியை பாருன்னு சொல்றேன்..”
‘நிவி.. நீ என்னோட ரூமுக்கு வா.. நான் உன்னையும்.. நம்ம அப்பாம்மாவையும் மட்டும்தான் பார்க்க வந்தேன்…” என்று ஒலித்த சோபனாவின் குரலில் திடுக்கிட்ட மாறன்.. ‘ஹேய்.. வா.. வா.. சோபி..” என்று உற்ச்சாகமாய் அவளிடம் ஓடினான்.
‘ஒரு போன் செய்து கூட பேசலாம்னு உனக்கு தோணலைல்ல..? இப்ப மட்டும் எதுக்கு அப்படியே நடிக்கிற..? ஒன்னும் வேணாம் போடா..” என்று கண்கலங்கினாள்.
‘உண்மையா இப்ப உங்க வீட்டுக்கு வரதுக்குதான் சோபி நிவிகிட்ட கேட்டுட்டிருந்தேன்..” என்று சோபனாவை மாறன் கட்டியணைக்க..
‘ம்ம்.. என்னை யாரும் உள்ள வான்னு கூப்பிடறமாதிரி தெரியலை.. நானே போய்க்கிறேன்..” என்று பொய்யாய் சலித்தவாறு முரளி உள்ளே செல்ல..
‘என்னடா இது..? இன்னைக்கு எல்லாருமே என்மேல கோபமாவே இருக்காங்க..?” என முனுமுனுத்தவன்..
‘சாரி முரளி.. நீங்க மெச்சூரிட்டியான பெர்சன்.. எதையும் தப்பா நினைக்க மாட்டிங்க.. ஆனா என் தங்கை அப்படியில்ல.. அதான் அவளை சமாதானப்படுத்திட்டிருந்தேன்…” என்று சோபனாவின் கையை கெஞ்சுதலாய் பிடித்து..
‘சாரி சோபி.. நான் போன் செய்திருக்கனும்தான்.. போன் செய்து என் சோபிகுட்டி வயித்துக்குள்ள இருக்கிற குட்டி.. நல்லாயிருக்காங்களான்னு கேட்டிருக்கனும்தான்..” என்று சோபனாவின் வயிற்றை பார்த்து சொல்லவும்.. சோபனாவிற்கு கோபம் போய்.. வெக்கம் வரவும்.. அதை மறைக்க..
‘நீ கேட்டாலும் நான் சொல்லமாட்டேன்..” என்று முகம் திருப்பினாள்.
‘நீ சொல்லலைன்னா.. நான் முரளிகிட்ட கேட்டு தெரிஞ்சுக்குவேனே..” என்றவன்.. முரளியிடம்.. ‘என்ன முரளி.. என்ன சொல்றாங்க உங்க வாரிசு..?” என்றான்.
‘இப்பவே என் பொண்டாட்டியை போட்டு படுத்தி எடுக்குறாங்க மாறன்..” என்றான் புன்னகைமுகமாக.
‘வாங்க தம்பி.. வா சோபி..” என்றவாறு சுமதியும் இராமுவும் வரவும்.. நேரம் கலகலப்பாக சென்று கொண்டிருக்க..
மாறனுக்கு அழைப்பு வரவும்.. பார்த்தவன்.. ‘இவங்களா..?” என அதிசயித்து.. ‘ஹலோ.. எப்படியிருக்கிங்கத்தை..?” என்றான்.
மாறன் அத்தை என்று சொல்லவும்.. ‘நமக்கு தெரியாத அத்தை யாரு நிவி..?” என்று சோபனா முனுமுனுக்க.. ‘ஷ்ஷ்…” என்று ஒற்றை சத்தத்தில் சோபனாவை அடக்கிய நிவேதா.. மாறன் பேசுவதை கவனித்தாள்.
[the_ad id=”6605″]
‘ம்ம்.. சரிங்கத்தை.. ம்ம்.. ம்ம்… ம்ம்.. ரொம்ப சந்தோசம்.. உங்க விருப்பப்படியே செய்திடலாம்.. நான் ராஜய்யாகிட்ட சொல்றேன்..” அந்த பக்கம் அமுதா என்ன சொன்னாரோ..
‘இல்ல.. இல்லங்கத்தை… அப்படி எதுவும் நடக்காது.. நான் சொன்னா ராஜய்யா கேப்பார்.. நீங்க கவலைப்படாதிங்க..” என்று பேசிக்கொண்டிருந்தவனின் முகம் சந்தோசத்தில் ஜொலிக்கவும்.. இப்பொழுது அனைவருக்கும் புரிந்தது.. மாறன் நந்தினியின் அம்மாவிடம்தான் பேசிக்கொண்டிருக்கிறான் என்று. அவன் மீண்டும் பத்து நிமிடம் வரை பேசினான். பிறகு தன் அம்மாவை கட்டியணைத்தவன்..
‘அம்மா.. என் கல்யாணத்தை எப்ப வச்சிக்கலாம்..?” என்றான் சந்தோசத்தோடே.
‘யாரு மாறா..? நந்தினியோட அம்மா பேசினாங்களா..? என்ன பேசினாங்க..?” என்றார் இராமு.
‘ஆமாம்ப்பா.. அத்தைதான் பேசினாங்க.. இனி நாம பார்த்து சொல்ற டேட்ல கல்யாணம் வச்சிக்கலாம்னு சொன்னாங்கப்பா..” என்றான்.
‘அவங்க இங்க வரதுக்கு சம்மதிச்சிட்டாங்களா..?”என சுமதி பதட்டமாய் கேட்க..
‘சம்மதிச்சிட்டாங்கம்மா.. ஆனா நீங்க பதட்டப்படாதிங்க.. ராஜய்யாவோட வாழ்க்கையில அவங்க இனி நுழைய மாட்டாங்க.. அதை அவங்களே என்கிட்ட உறுதியா சொல்லியிருக்காங்க.. ராஜய்யா அவங்களை பார்த்ததும் தேவிம்மா நிலைமை என்னாகும்னு நீங்க தப்பா நினைக்காதிங்கமா.. கொஞ்சம் பிரச்சனை வரும்தான்.. ஆனாலும் அவங்க வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வராம நான் பார்த்துக்கிறேன்.. தேவிம்மாவும் உங்களை போல எனக்கு இன்னொரு அம்மா மாதிரிதான்..” என்று தைரியமளித்தான்.
‘சுமதி.. எல்லாம் மாறன் பார்த்துக்குவான்.. நீ ஒன்னும் கவலைப்படாத.. என் பெரிய பேத்தி என் மக வயித்தில வந்ததும் அவங்க மாறன் மாமனை வீட்டை கட்ட வச்சது.. இப்ப என் சின்ன பேரனோ.. பேத்தியோ என் சின்ன மக வயித்துல இருக்கும்போதே அவங்க மாமனுக்கு கல்யாணம் செய்து வைக்க போகுது..” என்று தன் பேரப்பிள்ளைகளை முன் நிறுத்தி.. பெருமை பேசினார் இராமு.
‘ஏங்க… நம்ம நல்ல நேரம் சின்ன மாப்பிள்ளை இங்க இருக்கார்.. நீங்க பெரிய மாப்பிள்ளைக்கு போன் பண்ணி இன்னைக்கு வேலை முடிஞ்சதும் இங்க வீட்டுக்கு வர சொல்லுங்க.. எல்லாரும் இருக்கும்போதே எதெது எப்ப பண்ணலாம்னு கலந்து பேசி முடிவு பண்ணிக்கலாம்..” என்றார் சுமதி.
‘சரிம்மா.. நான் போன் பண்றேன்..” என்று சொன்ன ராமு கிசோருக்கு போன் செய்து விசயத்தை சொல்ல..
கிசோரும் ‘நான் அங்கதான் வந்திட்டிருக்கேன் மாமா.. என் பொண்ணு நினைப்பாவே இருந்ததுங்களா.. உடனே பேங்க்ல இருந்து கிளம்பிட்டேன்.. இன்னும் இரண்டு நிமிசத்தில என் பொண்ணு பக்கத்தில நான் இருப்பேன்..” என்றான் சந்தோசத்துடன்.
‘மாறா.. முதல்ல அண்ணிக்கு போன் பண்ணு.. அவங்க ரியாக்சன் என்னான்னு பார்ப்போம்..” என்று சோபனா சொல்ல.. மாறன் நந்தினிக்கு அழைக்க.. சோபனா போனில் ஸ்பீக்கரை ஆன் செய்து நடுவில் இருந்த டேபிளில் வைத்தாள்.
நந்தினி.. ‘என்ன..?” என்றாள் கடுப்பாக.
மாறன் சங்கடமாய் முகம் சுழிக்க.. ‘அதெல்லாம் முடியாது.. நீ இப்படியேதான் பேசியாகனும்..” என்றாள் சோபி.
‘அம்மும்மா போன் செய்து கல்யாணத்தை பத்தி பேசியிருப்பாங்களே..? அதுக்கப்புறம்தான் சாருக்கு என் நினைப்பே வந்ததா..? நான் உன்கிட்ட பேசற மூடுல இல்ல..” என்று கடுப்பாக சொல்லி கட் செய்தாள்.
திரும்பவும் போன் செய்து மாறன் தனியே செல்ல எத்தணிக்க..
‘இந்த வேலையெல்லாம் ஆகவே ஆகாது.. நீ அண்ணிகிட்ட எப்படி வழியிறன்னு நான் இன்னைக்கு பார்த்தே ஆகனும்.. இங்கையே பேசு..” என்று மீண்டும் ஸ்பீக்கரை ஆன் செய்தாள் சோபனா.
‘என்ன..?” என்றாள் வேண்டா வெறுப்பாக.
‘ஏய்.. உனக்கென்னடி இப்ப பிரச்சனை..?” என்று மாறனும் எகிறினான்.
‘என்னது..? டி யா..? வேணாம்.. அப்புறம் நானும் எதாவது சொல்லுவேன்..”
‘என்னடி சொல்லுவ..? இல்ல என்ன சொல்லுவன்னு சொல்லேன்தான் பார்க்கலாம்..” என குரலுயர்த்தினான்.
‘கஷ்டப்பட்டு நான் என் அம்மும்மாகிட்ட பேசி.. அடம் பண்ணி.. இந்த ஊர்லையே செட்டிலாகறதுக்கு சம்மதம் வாங்கி.. அதுக்கப்புறம் எனக்கு கல்யாணம் செய்து வைங்கன்னு… நானே எல்லா பிரச்சனையும் தீர்த்து வச்சதுக்கப்புறம்.. உனக்கு என்கிட்ட பேசனும்னு தோணியிருக்கு.. இதுல கோபம் வேற வருது…” என்று உயர்ந்த குரலில் ஆரம்பித்து..
‘உன்னை பார்த்தே மூனுமாசம் ஆகுது.. ஒரு மாசமா போன் கூட நீ பண்றதில்ல… உனக்கென்ன..? உன்னை சுத்தி உன் சொந்தபந்தம் எல்லாரும் இருக்காங்க.. இங்க ஒருத்தி தனியா இருக்காளே.. போன்லயாவது என்ன பண்ணிட்டிருக்கான்னு கேக்கலாம்னு உனக்கு தோணல இல்ல..? இவ்ளோ நாளா என்ன ஏதுன்னு கூட கண்டுக்காம இருந்துட்டு.. இப்ப மட்டும் எதுக்கு போன் பண்ற..?” என தளர்ந்த குரலில் முடித்தாள்.
‘சாரி.. கொஞ்சம் வேலை அதிகம் அதான்..” என்றான் சமாதானமாக.
மாறன் குரலிறங்கி பேசவும்.. சற்றே சமாதானம் ஆனவள்..
‘ப்ரீயா இருந்தா மட்டும்.. அப்படியே எல்லாம் தலைகீழா மாத்திடுவ பாரு..” என்று கோபமாக சொல்லி..
‘நீ வெறும் மாறன்தான்.. எல்லாரும் நினைக்கிற மாதிரி.. நீ பெரிய லாடு லபக்கெல்லாம் இல்ல…” என்றாள் சின்ன உற்சாகத்துடன்.
‘ஏய்.. என்னை என்னன்னு நினைச்ச..?” என்று மாறன் சீற..
[the_ad id=”6605″]
‘ஒரு வருசத்துக்கு முன்னாடி காதல் சொன்னோமே.. கன்னத்துல வேணாம்.. நெத்தியில வேணாம்.. அட..‚ ஒரு ப்ளைன் கிஸ்சாவது உண்டா..? இதுல என்னை என்னென்னு நினைச்ச.? வெண்ணைன்னு நினைச்சேன்னு.. வாய்க்கொன்னும் குறைச்சல் இல்ல.. நீ இளமாறன் இல்ல.. சரியான கிழமாறன்..” எனும்போதே..
‘ஓ… ஹோ….” என்ற சோபியின் உற்ச்சாக சத்தம் கேட்டு.. ‘அச்சோ..” என்று பதறியவளாய் இணைப்பை துண்டித்தாள் ராஜநந்தினி.
அந்த நேரம் அங்கு வந்து சேர்ந்த கிசோரோடு.. முரளியும் பெரும் சப்தமெடுத்து சிரிக்கவும்.. ‘என் தம்பி ரொம்ப நல்ல பையனாக்கும்.. இதுல இளிக்கிறதுக்கு என்ன இருக்கு..?” என்று இருவரையும் திட்டியவள்..
‘நீ சமத்து மாறா.. அவங்க சிரிக்கிறதெல்லாம் நீ பெருசா எடுத்துக்காத..” என்று சிறு பிள்ளைக்கு சமாதானம் சொல்வதுபோல் சொல்லிக்கொண்டிருந்தாள் நிவேதா.
‘ஆனாலும்.. நீ இவ்ளோ நல்லவன்னு நான் நினைக்கவே இல்ல மாறா..” என்று சோபனாவும் வாற…
‘அம்மா.. இவளுக்கு ஒன்னும் சமைச்சி தராதிங்க.. அவளே சமைச்சி சாப்பிடட்டும்..” என்று தன் தங்கையை பெரிதாய் பழிவாங்க திட்டமிட்டவனின் மனம் உல்லாசத்தில் மிதந்தது. நம்ம மூச்சுக்காத்து பட்டாலே.. படபடன்னு பட்டாம்பூச்சி மாதிரி கண்ணை சிமிட்டிட்டு அப்படி பதறுவா.. இன்னைக்கு முத்தம் கேக்கிற அளவுக்கு தைரியம் வந்திடுச்சா..? உனக்கிருக்கு இருடி.. என்று மனதில் திட்டுவதாய் நினைத்து கொஞ்சினான்.