ஒரு முடிவின் துவக்கம்…
அத்தியாயம் — 14
காலை ஏழு மணிபோல் மாறனுக்கு அமுதாவிடமிருந்து அழைப்பு வரவும்.. அப்பொழுதுதான் கண்விழித்தவன்.. யாரென்று பார்க்காமலே..
‘ஹலோ..” என்றான்.
‘தம்பி.. நான் அமுதா பேசறேன்.. எனக்கு ஒரு உதவி வேணும்..” என்றார்.
‘என்னன்னு சொல்லுங்கத்தை..” என்று மாறன் கேட்க்கவும்..
‘தேவியை அட்மிட் செய்திருக்கிற ஹாஸ்ப்பிடலுக்கு என்னை கூட்டிட்டு போறிங்களா..? ப்ளீஸ்..” என்று கிட்ட தட்ட கெஞ்சினார் என்றே சொல்லலாம்.
‘அத்தை.. ராஜய்யா என்னையே வரவேணாம்னு சொல்லிட்டார்.. அதுவுமில்லாம.. அவங்க எந்த ஹாஸ்பிட்டல்ல இருக்காங்கன்னு கூட எனக்கு தெரியாது..” என்றான்.
ஒரு தனியார் மருத்துவமணையின் பெயரை சொன்னவர்.. ‘இங்க பக்கத்திலதான் இருக்காங்க.. நீங்க என்கூட வந்திங்கன்னா கொஞ்சம் பெட்டரா இருக்கும்.. இல்லன்னா.. நானே தனியா போகப்போறேன்..” என்றார் உறுதியாக.
‘கொஞ்ச நாளைக்கு ப்ரீயா விடலாம்த்தை.. அப்புறம் பேசிக்கலாமே..” என்றான் தன்மையாக.
‘கொஞ்ச நாளைக்குன்னு இல்ல தம்பி.. எப்பவுமே அவங்களை தொந்தரவு செய்யிற எண்ணம் எனக்கில்லை.. ஆனா நான் இப்ப தேவியை பார்த்தே ஆகனும்..” என்றார் மீண்டும்.
கடந்த மூன்று மாதமாக அமுதாவிடம் நன்கு பழகியிருந்ததால்.. அவரின் குணங்களை நன்கு அறிந்திருக்கவும்.. வேறெதுவும் தவறாக யோசிக்க முடியாதவனாய்..
‘சரி.. நான் வரேன்..” என்றான்.
‘நந்தினிக்கு தெரிய வேணாம்..” என்றார் அமுதா.
‘சரிங்கத்தை.. இன்னும் பத்து நிமிசத்தில நான் ரெடியாய்ட்டு வந்து.. உங்களை பிக்கப் பண்ணிக்கிறேன்..” என்றான்.
‘இல்ல தம்பி.. நான் நந்தினியோட வண்டில வந்திடறேன்..” என்றதும்..
‘வீட்டுக்கு வாங்கத்தை.. சாப்டுட்டு போய்டலாம்..”
‘இல்லல்ல.. நான் காலைல எப்பவும் ராகி கூழ்தான்.. நீங்க சாப்டுட்டு ஒரு ரிங் விடுங்க..” என்று கட் செய்தார்.
அடுத்த அரைமணிநேரத்தில் இருவரும் மருத்துவமணையை அடைந்திருக்க..
[the_ad id=”6605″]
‘அத்தை.. தேவிம்மா ரொம்ப ஸ்ட்ரெஸ்சா இருப்பாங்க போல.. பிரசர் ஹையா இருக்குன்னு தண்டபானி தாத்தா சொன்னார்.. நாம போய் பேசி.. இன்னும் எதாவது பிரச்சனையாய்டப் போகுது..” என்று வருந்தினான்.
‘சில விசயங்களை பேச வேண்டிய நேரத்தில பேசிடனும்.. எனக்கு இப்ப விட்டா.. அப்புறம் தேவிகிட்ட பேச வாய்ப்பிருக்காது. உங்க தேவிமாக்கு ஒன்னும் ஆகாது.. நீங்க வாங்க..” என்று ரிசப்சனில் அறை எண்ணை விசாரித்துக்கொண்டு நடந்தனர்.
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டதும்.. கதவைத் திறந்த ராஜன் மாறனைப் பார்த்ததும்.. ‘மாறா.. நான்தான் இங்க பார்த்துக்கிறேன்னு சொன்னேன்ல..? அப்புறம் எதுக்கு வந்த…?” என்று கோபத்துடன் கேட்ட பிறகுதான்.. அமுதாவைப் பார்த்த ராஜன் அமைதியாய் நிற்க..
ராஜனை கண்டுகொள்ளாமல் உள்ளே சென்று தேவியைப் பார்த்தார் அமுதா. அமுதாவைப் பார்த்ததும் தேவியின் கண்களில் கண்ணீர் வந்தது. கட்டிலின் அருகே ஒரு சேரை எடுத்துப்போட்டு தேவியின் அருகில் உக்கார்ந்தவர்..
‘உங்க வாழ்க்கையை கெடுக்க நான் இந்த ஊருக்கு வரலை தேவி.. என் பொண்ணுக்காகத்தான் இங்க வந்தேன்.. நான் வரலைன்னா கல்யாணமே செய்துக்கமாட்டேன்னு சொல்லிட்டா.. ஆறு மாசத்துக்கு தான் லீவ் போட்டுட்டு வந்திருக்கேன்.. நான் இங்க வந்து மூனுமாசம் முடிஞ்சிடுச்சி.. இன்னும் மூனு மாசத்துக்கு மட்டும்தான் இங்க இருப்பேன்.. என்னோட சம்பளம் முப்பதாயிரம்… யாரை நம்பியும் நான் இல்ல.. என் பொண்ணும் கவர்ன்மென்ட் ஸ்கூல்ல டீச்சரா இருக்கா.. இதெல்லாம் போக மாறனைப் பத்தி நான் சொல்லி நீங்க தெரிஞ்சிக்கனும்னு இல்ல..
தங்கமான மருமகன் எனக்கு கிடைச்சிருக்காப்ல.. இனி என் பொண்ணை அவர் பார்த்துக்குவார்.. எங்கடா அத்தனை பேர் முன்னாடியும் ராஜன் நந்தினியை என் பொண்ணுன்னு சொல்லிட்டாரே.. சொத்துல பங்கு தரவேண்டி வருமோன்னு யோசிக்காதிங்க..” என்று இயல்பாகவே அமுதா பேசியும்.. தேவியின் முகத்தினில் நிம்மதியில்லை.
ஒரு பெண்ணாக தேவியின் மனதினை அறிந்தாலும்.. மாறன் இருப்பதால் மேலும் பேசத்தயங்கி ஐந்து நிமிடம் மௌனம் காத்த அமுதாவின் கண்களும் லேசாய் கலங்க.. தயங்கினாலும்.. பரவாயில்லை பேசிடலாம் என முடிவெடுத்து..
தேவியின் கரங்களை ஆதரவாய் பற்றிக்கொண்டு.. ‘ராஜனுக்காக இங்க வரதாயிருந்திருந்தா நான் எப்பவோ வந்திருப்பேன்.. அவ்ளோ சின்ன வயசிலயே.. அந்த தெரியாத சென்னையில.. வயித்தில குழந்தையோட யாருமில்லாத அநாதையா இருக்கும்போதே..” என்றவருக்கு கண்ணீர் இப்பொழுது அவரின் கன்னத்தை தொட.. வெளிவராத குரலை சிரமப்பட்டு வரவழைத்து..
‘என் ம..ன..சும்.. உ.. ட.. லு..ம் ராஜனைத் தேடும்போதே… என் உணர்வுகளை கட்டுப்படுத்தி வாழப் பழகியவள் நான்..‚ இப்ப எனக்கு வயசும் ஆகிடுச்சி.. என் உணர்வுகளும் செத்திடுச்சி..” என்று கண்ணீர் விட்டபடியே.. காற்று பாதி.. வார்த்தை பாதியாக சொல்லி.. தேவியின் கைகளிலேயே தன் முகத்தை புதைத்தார்.
இதை கேட்டுக்கொண்டிருந்த ராஜனின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுக்க அமுதாவின் அருகே தன்னையறியாமல் சென்ற ராஜனை.. அவரின் கைபிடித்து தடுத்தான் இளமாறன்.
சற்று நேரத்திலேயே அந்த மனநிலையிலிருந்து வெளிவந்தவர்.. கண்களை துடைத்துக்கொண்டு.. ‘நேத்து வரைக்கும் நான் எப்படி உங்க வாழக்கையில இல்லையோ இனிமேலும் அப்படித்தான்.. என்னை நம்புங்க.‚ நீங்க உங்களை இப்படி வருத்திக்கிட்டிங்கனா.. அந்த பழியும் என்னைத்தான் சாரும்..
அமுதான்னு ஒருத்தி புதுசா முளைச்சதாலதான் தேவிக்கு இப்படி ஆகிடுச்சிம்பாங்க.. எப்பவும் போல நீங்க சந்தோசமா இருந்து.. என்னை நிம்மதியா வாழ விடுங்க..” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே டாக்டர் ரௌன்ட்ஸ் வரவும்..
தேவியை பரிசோதிக்கும் வரை அமைதியாய் இருந்த அமுதா.. ‘ஹெள இஸ் ஹெர் கண்டிசன் ரைட் நௌ..?” என ஆரம்பித்து.. டாக்டரிடம் செழிப்பான ஆங்கிலத்தில் தேவியின் உடல்நிலை குறித்து நிறைய கேள்விகள் கேட்டு விசாரிக்கவும்.. ராஜன் உட்பட மாறனுமே அதிசயித்துப் போனான்.
[the_ad id=”6605″]
அமுதாவின் பேச்சில் மயங்கிய ராஜன்.. நீண்ட நெடிய வருடங்களுக்குப் பிறகு அமுதாவை கண்களால் அளவெடுத்துக்கொண்டிருந்தார். அன்று போலவே இடையைத் தாண்டி நீண்டிருக்கும் நீண்ட பின்னல்.. ஆனால் கருங்குழலோடு பாதிக்குப் பாதியாய் நரையும் கூடியிருந்தது. எனினும் முதுமைக்கு நரை அழகுதானே.. என்றுதான் அந்தநேரம் தோன்றியது.
எந்த ஒப்பனையுமில்லாது.. நெற்றியில் மட்டும் சிறிதாய் ஒரு சிவப்பு பொட்டு.. அதுவும் அன்றுபோலவே சாந்து பொட்டுதான்.. காதோடு ஒட்டியிருந்தது ஒற்றை மணி பவளத்தோடு. அன்று போட்டிருந்த அதே ஒற்றை சிவப்புக்கல் மூக்குத்தி. கழுத்தில் ஒரு வெள்ளிச்சங்கிலியோடு ராஜன் அணிவித்த பெரிய டாலர் செயின்.. ஒரு கையில் மெரூன் நிற வாட்ச்.. மற்றொரு கையில் மூன்று சிவப்பு கண்ணாடி வளவிகள்..
பார்வை அமுதாவின் காலுக்கு ஆவலுடன் செல்ல.. அங்கே அமுதாவின் கால்களை எந்த ஆபரணமும் அலங்கரிக்கவில்லை. தான் வாங்கி கொடுத்த கொலுசெங்கே..? என் நினைவோடு சேர்த்து அதையும் தூர எறிந்துவிட்டாளா..? என்று யோசித்தவரின் முகம் மீண்டும் வாட..
‘ஷி இஸ் பெட்டர் நௌ.. டு டே யு கேன் டேக் ஹெர் டு ஹோம்..” என்று டாக்டர் சொல்ல.. அந்த டாக்டருக்கு உதடுகள் பிரியாத.. கன்னியமான ஒரு புன்னகையை அமுதா பரிசாய் கொடுக்க.. அப்புன்னகையின் கம்பீரம் கண்டு திகைத்துப்போனார் ராஜன்.
டாக்டர் சென்றதும்.. மீண்டும் தேவியிடம் திரும்பும் அந்த சிறு மணித்துளி இடைவெளியில் ராஜன் தன்னைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று உணர்ந்த அமுதா.. இந்த பார்வையை மறக்க முடியாமதாண்டா இருபத்தைந்து வருசமா தவிச்சிட்டிருக்கேன்.. மறுபடியும் என்னை சோதிக்கிறதுக்காவே இப்படி பார்க்கிறியா..? என உள்ளுக்குள் குமறினார்.. சிலநொடிதான்.. முயன்று ராஜனின் எண்ணங்களை ஒதுக்கி தேவியிடம் தன் கவனத்தை திருப்பினார்.
பல வருடங்களுக்கு முன்பு போலவே இன்றும் சிலிர்த்து சிவந்தது அமுதாவின் உடலும் முகமும்.. அமுதாவையே கவனித்திருந்த ராஜன்.. ‘கேடி.. பார்க்காத மாதிரியே இருக்கா.. ஆனா.. நாம பார்த்ததை கண்டுபிடிச்சிட்டா..” என்று உள்ளுக்குள் இதமாய் நினைத்துக் கொண்டே தன் பார்வையை தொடர.. அமுதா தன் கழுத்திலிருந்து ராஜன் அணிவித்த நகையை கழற்றவும்.. ராஜனின் முகம் மீண்டும் கடினமானது.
‘தேவி.. உங்களோட இந்த பரம்பரை நகையை நீங்களே வச்சுக்கோங்க..” என்று வரவழைத்த புன்னகையோடு தேவியின் கையில் அமுதா ஒப்படைக்க..
[the_ad id=”6605″]
‘இல்ல.. இல்ல.. இதை நீங்களே வச்சுக்கோங்க..” என வாங்க மறுத்தார் தேவி.
‘பரவாயில்ல.. சின்ன வயசில இருந்தே நாங்க கஷ்டப்பட்ட குடும்பம்தான்.. இத்தனை வருசத்துக்கு அப்புறம்.. புதுசா இது எனக்கு தேவையில்ல.. அதோட இந்த நகையை ராஜன் எனக்கு போடும் போது.. உங்க மனசு தவிச்ச தவிப்பை உங்க முகத்தில நான் பார்த்தேன்..” என்றபடியே தங்கச்சங்கிலியை தேவியின் கைக்குள் அமுதா திணிக்க..
‘அமுதா.. அது வெறும் தங்கம் மட்டும் இல்ல.. என்னோட கௌரவமும் அதுல அடங்கியிருக்கு.. ஒழுங்கா அதை வாங்கி கழுத்தில போடு..” என்று ராஜன் கட்டளையாய் சொல்ல..
ராஜனை திரும்பியும் பாராமல்.. ‘அப்பவே இதை கழட்டி வீசியிருப்பேன்.. நான் மட்டும் அப்படி செய்திருந்தேன்னா.. என்பொண்ணு ரொம்ப ஆட ஆரம்பிச்சிடுவான்னும்.. அவ எதாவது செய்யப்போய்.. அது என் மருமகனுக்கு அசிங்கமாய்டும்னும்தான் அமைதியா இருந்திட்டேன்..
எந்த விசயத்துக்காகவும்.. எதுக்காகவும்.. இந்த ஆர்டர் போடறது.. கோபப்படறதுன்னு.. இப்படி.. என்கிட்ட யாரும் உரிமை எடுத்துக்க கூடாது..” என்று ராஜனுக்கு மேல் அழுத்தமாய் சொன்ன அமுதா..