தேவியிடம்… ‘மன அழுத்தத்தை தவிர உங்களுக்கு வேற எந்த பிரச்சனையும் இல்லன்னு டாக்டர் சொன்னாங்க.. இது என்னால வந்த மன அழுத்தம்னு எனக்கு புரியுது.. மறுபடியும் சொல்றேன்.. என் பொண்ணுக்காகத்தான் நான் வந்தேன்.. உங்களை கெஞ்சி கேட்டுக்கிறேன்.. உங்க உடம்மையும் கெடுத்துகிட்டு என்னாலதான் எல்லாம்னு மத்தவங்க என்னை கேவலமா நினைக்கிறமாதிரி வச்சிடாதிங்க.. நான் கிளம்பறேன்..” என்று சொல்லி மாறனைப் பார்த்தார்.
அந்த நேரம் உள்ளே வந்த நர்ஸ்.. ‘சார்.. பில் செட்டில் பண்ணிட்டு நீங்க கிளம்பலாம்..” என்று சொல்ல…
‘தேவிம்மா.. உடம்பை பார்த்துக்கோங்க.. நான் ஈவ்னிங் உங்களை வீட்ல வந்து பார்க்கிறேன்..” என்று சொல்லி மாறனும் அமுதாவும் கிளம்ப..
தன் மனைவியின் தலையை கோதியபடி.. ‘வீட்ல லாவியும்.. மனோவும் உன்னை எப்போ பார்ப்போம்னு தவிச்சிட்டிருப்பாங்க தேவி.. நான் போய் பில் கட்டிட்டு வந்திடறேன்டா.. அப்பதான் வீட்டுக்கு சீக்கிரம் போகமுடியும்…” என வாஞ்சையாய் சொல்லி.. வெளியே வந்ததும் மாறனுக்கு அழைத்து..
‘மாறா.. ரிசப்சன்ல வெய்ட் பண்ணு.. நான் வந்திட்டிருக்கேன்..” என்று கட் செய்து வேகமாய் நடையை போட்டார்.
இருவரையும் பார்த்ததும்.. ‘மாறா.. நான் அமுதாகிட்ட கொஞ்சம் தனியா பேசனும்..” என்று ராஜன் சொல்ல..
‘மாறன் இந்த இடத்தை விட்டு கிளம்பினா.. உடனே நானும் கிளம்பிடுவேன்.. எது கேக்கிறதா இருந்தாலும்.. என் மருமகன் முன்னாடியே கேளுங்க.. அதுவும் இன்னைக்குத்தான் நீங்க என்கிட்ட பேசுறது கடைசியா இருக்கனும்..‚” என்று இம்முறையும் ராஜனை பாராமலேயே அமுதா கடினமாக சொல்லவும்..
மருத்துவமணை என்பதால் வேறு எதுவும் சொல்ல முடியாமல்.. கண்களை இறுக மூடி தன்னை சமன் செய்த ராஜன்.. ‘எதுக்காக என்னை விட்டுட்டு போன..?” என்றார்.
‘அதைத்தான் அத்தனை பேர் முன்னாடி உங்கப்பாவே சொல்லிட்டாரே..” என்றார் அமைதியாகவே.
‘அப்பா சொன்னா.. அதை என்கிட்ட சொல்றதை விட்டுட்டு.. பெரிய இவளாட்டம் இப்படி ஒரு மடத்தனமான முடிவெடுப்பியா..?” என்றார் கோபமாக.
‘பழசை கேட்டு இப்ப என்ன ஆகப்போகுது..?” என்றார் அசால்ட்டாய்.
‘எல்லாம் முடிஞ்சிருச்சி.. இப்பவாவது எனக்கு உண்மையை சொல்லு அம்மு..” என்றார் மனவலியோடு மன்றாடலாய்.
இரண்டு நிமிடம் அமைதிகாத்து.. ‘என் பாட்டி இறந்தப்ப.. நந்தினி என் வயித்தில அஞ்சி மாசம்.. என் வயிறு நான் மாசமாத்தான் இருக்கேன்னு தெரியற அளவுக்கு கொஞ்சம் பெருசாதான் இருந்திச்சி..
உங்க வாழ்க்கையை சரி செய்யறதுக்காவது.. நான் யாருக்கோ மாசமா இருக்கேன்னு என்னை பத்தி கேவலமாவாவது உங்கப்பா உங்ககிட்ட சொல்லுவார்.. அப்போ அது உங்க குழந்தைதான்னு உங்களுக்கு புரிஞ்சிடும்.. கண்டிப்பா நீங்க வந்து என்னை பார்ப்பிங்கன்ற நம்பிக்கையில.. உங்களை எதிர்பார்த்து என் பாட்டி காரியம் முடிஞ்சதுக்கப்புறமும் அஞ்சி நாள் வரை இங்கதான் இருந்தேன்.. ஆனா நீங்க வரல.. என்கிட்ட இருந்த பணமும் என் பாட்டி காரியத்து செலவாய்டுச்சி.. வெறும் தண்ணியை மட்டும் குடிச்சிகிட்டு மறுபடியும் இரண்டு நாள் உங்களுக்காக காத்திட்டிருந்தேன்..
உங்களுக்கு பதிலா உங்கப்பாதான் மறுபடியும் என்னைத் தேடி வந்தார்.. என் வயித்தை பார்த்துட்டு.. நான் ஊரைவிட்டு துரத்தியதும்.. அதுக்குள்ள இன்னொருத்தனை பிடிச்சிட்டியான்னு கேட்டு.. என்னை கேவலமா பார்த்தார்..
[the_ad id=”6605″]
பொண்டாட்டி செத்ததும் இன்னொரு கல்யாணம் செய்துகிட்ட உங்கப்பன் மாதிரிதான நீயும் இருப்ப..? காதலிக்கிறோம்ங்கிற பேர்ல பணக்காரப் பசங்களை வளைச்சிபோடுற.. உன்னை மாதிரி எத்தனைப் பேரை பார்த்திருப்பேன்னு ரொம்ப அசிங்கமா பேசினார்.. இதெல்லாம் போக.. பாட்டிசாவுக்கு வந்தமா போனமான்னு இருக்கனும்.. இல்ல.. பிராத்தல் கேசுல உள்ளதள்ளி உன் பேரையே நாரடிச்சிடுவேன்னு ரொம்ப மிரட்டினார்.
ஊருக்கு போறதுக்கு கையில காசில்ல.. என் கம்மலை நளினிகிட்ட கொடுத்து வித்துட்டு வர சொன்னேன்.. அவ முந்நூறு ரூபாதான் கொடுத்தாங்கன்னு கொண்டு வந்து கொடுத்தா.. அப்பவும் ஒரு அற்ப நம்பிக்கையில அன்னைக்கு நைட்டாவது நீங்க வந்து என்னை பார்ப்பிங்கன்னு எதிர்பார்த்தேன்.. நீங்க வரல..
கையில இருக்கிற காசும் செலவாய்டுச்சினா.. ஊருக்கு போறதுக்கு என்ன பண்றதுன்னு கவலை ஒரு பக்கம்.. என் குழந்தையை உங்கப்பா எதாவது செய்திடுவார்ன்ற பயம் ஒரு பக்கம்.. மானத்துக்கும் என் குழந்தை உயிருக்கும் பயந்து.. அடுத்த நாள் விடியகாலம் சென்னைக்கு கிளம்பிட்டேன்..” என்று உணர்வுகளை துடைத்த முகத்தோடு சொல்லிமுடித்தார் அமுதா.
உள்ளுக்குள் உயிர் உறுகிக் கரையும் நிலைதான் ராஜனுக்கு.. ‘உங்க பாட்டி இறந்தப்போ.. நான் இந்த ஊர்லயே இல்ல அம்மு.. நீ சேலத்தில இருக்கிறதா உங்க பாட்டி சொன்னாங்க.. உன்னை கண்டுபிடிக்கிறதுக்காக நான் சேலத்திலயே ஒரு வீடு எடுத்து தங்கியிருந்தேன்.. உன் பாட்டி இறந்ததே எனக்கு பத்து நாள் கழிச்சிதான் தெரியும்..” என்று ராஜன் கண்கலங்க..
‘ப்ச்.. நான் முழுசா முடிச்சிடறேன்.. நான் இந்த ஊரைவிட்டு போனதுக்கப்புறம் நாலு வருசமா நீங்க இந்த ஊர்ல இல்லன்னு.. பாட்டிகாரியம் முடிஞ்சி சென்னை வந்ததுக்கப்புறம்.. நளினியோட அப்பா மூலமா தெரிஞ்சிகிட்டேன்..
அன்னைக்கப்புறம் நாலுவருசமா.. சம்பளம் வாங்கினதும் நான் பண்ற முதல்செலவே நளினிஅப்பாக்கு போன்செய்து உங்களைப்பத்தி விசாரிக்கிறதுதான்.. ஆனா அவர்கிட்ட கூட.. நீங்க என்னை காதலிக்கிறதா நான் சொன்னதே இல்ல.. நான்தான் உங்களை விரும்புறேன்னும்.. உங்கப்பாக்கு பயந்து இங்க வந்திட்டதாவும்தான் சொல்லிவச்சிருந்தேன்.. நீங்க எப்ப ஊருக்கு வந்தாலும் எனக்கு சொல்ல சொல்லி.. நான் வேலைசெய்யிற ஹாஸ்பிட்டலோட போன்நம்பரை கொடுத்திருந்தேன்.
நாலுவருசத்துக்கப்புறம் உங்கவீட்டுக்கு வந்த நீங்க.. எதையோ இழந்தமாதிரியே இருந்திங்கன்னு நளினியோட அப்பா சொன்னார்.. அவர் அப்படி சொன்னதும்.. நீங்களும் எனக்காகத்தான் காத்திட்டிருக்கிங்கன்னு உள்ளுக்குள்ள ரொம்ப சந்தோசப்பட்டேன்..
அப்பவும் உங்கப்பாவை நினைச்சி பயமாத்தான் இருந்தது.. ஆனா என்னையும் குழந்தையையும் பார்த்திட்டா.. மத்ததெல்லாம் நீங்க பார்த்துக்குவிங்கன்ற நம்பிக்கையில இங்க வரலாம்னு முடிவெடுத்து.. நான் வேலைசெய்யிற இடத்தில இனி இங்க வேலைக்கு நான் வரல.. எனக்கு பணம் செட்டில் பண்ணுங்கன்னு கேட்டேன்..
அவங்க.. இதுமாதிரி சடர்ன்னா வேலையை விட்டு போகமுடியாது.. மூனுமாசத்துக்கு முன்னாடியே சொல்லனும்னு சொன்னாங்க.. வீட்டுவாடகை பால்காரன் பாக்கி ஊருக்கு வரதுக்குன்னு.. நிறைய பணம் தேவைப்பட்டதால.. சரி மூனுமாசம்தான..? அவங்க சொன்னமாதிரி செய்திட்டா.. பணம் கொடுத்திடுவாங்க.. நாமளும் எல்லாம் செட்டில் பண்ணிட்டு கிளம்பிடலாம்னு சந்தோசத்தோடவே வேலைசெய்தேன்..
வழக்கம்போல அடுத்தமாசமும் சம்பளம் வாங்கினதும் நளினியோட அப்பாக்கு போன் செய்தேன்.. இருபது நாளுக்கு முன்ன பள்ளத்தில தவறி விழுந்து.. அவர் இறந்துட்டார்ன்னு நளினி சொல்லிட்டு அழுதா. இந்த ஊர்ல எனக்காக பரிதாபப்பட்ட ஒரே ஜீவன்.. அவரும் போய் சேர்ந்திட்டாரான்ற வருத்ததில இரண்டுமாசமா அவங்க வீட்டுக்கு நான் போன் பண்ணல..
மூனுமாசம் முடிய ஒருவாரம் இருக்கும்போது நளினிக்கு போன் செய்தேன்.. அவகிட்ட நேரடியா உங்களைப் பத்தி கேக்கிறதுக்கு எனக்கு தயக்கமா இருந்ததால.. நான் ஊருக்கு வரப்போறேன்.. அங்க வந்தா அந்த வேலாயுதம் என் வீட்டை விலைக்கு கேட்டு மிரட்டுவான்னு பயமா இருக்கு.. நான் வந்ததும் நம்ம ஊர் தலைவர் தண்டபானி ஐய்யாகிட்ட போய் சொன்னா.. அவர் எனக்கு உதவி செய்வாரான்னு கேட்டேன்..
அதுக்கு நளினி.. இப்பெல்லாம்.. அவர் மகன்தான் எல்லாம் பார்த்துக்கிறாரு.. சின்னைய்யா ரொம்ப நல்லமாதிரி.. நீ தைரியமா வான்னு சொன்னா..
[the_ad id=”6605″]
ஒரு நிமிசம் ரொம்ப சந்தோசப்பட்டேன்.. அந்த சந்தோசத்தோடவே சின்னைய்யா நல்லா இருக்காரான்னு கேட்டேன்..
சின்னைய்யா ரொம்ப நல்லா இருக்கார்.. இப்பதான் ஒரு மாசத்துக்கு முன்ன அவருக்கு கல்யாணம் ஆனுச்சி.. ஊருக்கே விருந்து வச்சாங்க.. நான் கூட கல்யாணத்துக்கு போய்ட்டு வந்தேன்னு.. அப்புறம்தான் நளினி சொன்னா..
அப்போதைக்கு என்னால வேற என்ன செய்ய முடியும்..? ஒரு ஐஞ்சாறு மாசம் ரொம்ப அழுதேன்.. என் அழுகையைப் பார்த்து என் பொண்ணு அழ ஆரம்பிச்சிட்டா.. அதுக்கப்புறம் என் பொண்ணைப்பத்தி மட்டும் யோசிக்க ஆரம்பிச்சேன்..” என்று.. அழுததெல்லாம் அந்தகாலம் என்பதுபோல.. நிமிர்வாகவே சொல்லிமுடித்தார் அமுதா.
‘ஏண்டா ஏமாத்தினன்னு என்னை திட்றதுக்காகவாவது.. இங்க வரனும்னு தோணலயா உனக்கு..?” என்றார் கண்ணீரோடு இறங்கிய குரலில்.
‘தேவியோட புருசனைத் திட்டி.. இந்த அமுதாக்கு என்னாகப்போகுது…?” என விரக்தியாய் சொல்லி..
‘நந்துக்கு நாலு வயசு ஆரம்பிச்சதும்.. அவளை ஸ்கூல்ல சேர்த்தறதுக்கும்.. மேற்கொண்டு நான் படிக்கிறதுக்காக.. காலேஜ்ல டி.சிக்கு அப்ளை பண்றதுக்காகவும்.. ரேசன்கார்ட் இதெல்லாம் எடுத்துட்டு போகறதுக்காக இங்க வந்தேன்.. வந்த பத்து நிமிசத்திலயே எனக்கு தேவையானதை எடுத்திட்டு கிளம்பிட்டேன்..
என் பொண்ணோட நல்ல வாழ்க்கைக்காக.. என்னை இன்னும் மேம்படுத்திக்கனும்னு யோசிச்சேன்.. அதுக்காக படிச்சேன்.. ஆடம்பரம் இல்லன்னாலும்.. வறுமைங்கிற நிலையில்லாத அளவுக்கு சம்பாத்திச்சேன்.. சின்ன சின்ன விசயத்திலகூட என் பொண்ணுக்கு எந்த குறையும் வராம பார்த்துக்கிட்டேன்.. தரமான ஸ்கூல்ல சேர்த்து படிக்கவச்சேன்.. நான் நினைச்சமாதிரி அவளை ஆளாக்கிட்டேன்..” என பெருமையாக சொல்லி…
‘உங்களுக்கு தேவையான விளக்கம் கொடுத்திட்டேன்னு நினைக்கிறேன்.. எனக்கு உங்ககிட்ட எந்த விளக்கமும் வேணாம்.. தயவு செய்து இதுக்கு மேல என்கிட்ட பேச முயற்ச்சி பண்ணாதிங்க..” என்று கட்டளையான குரலில் சொல்லி.. மாறனைப் பார்த்தவர்..
‘தம்பி.. உங்களை மறுவீட்டு விருந்துக்கு அழைக்கிறதுக்கு மதியம் வீட்டுக்கு வரேன்னு வீட்ல சொல்லியிருக்கேன்.. இனிதான் போய் சமைக்கனும்.. நான் கிளம்பறேன்..” என சொல்லி.. தன் ஆக்டிவாவில் புயலெனப் பறந்தார் அமுதா.
[the_ad id=”6605″]
மாறனின் போன் அடிக்கவும்.. ‘சொல்லுங்கப்பா..” என்றான்.
‘எங்கடா இருக்க..? குலசாமி கோவிலுக்கு போகனும்டா.. எல்லாரும் ரெடியா இருக்கோம்.. நீ வரதுதான்.. சீக்கிரம் வீட்டுக்கு வா..” என்று இராமு கடுகடுக்க..
‘இன்னும் பத்து நிமிசத்தில வந்திடறேன்ப்பா..” என்றவன்.. ‘ராஜய்யா.. குலதெய்வ கோவிலுக்கு போகறதுக்காக எனக்காக எல்லாரும் வெயிட் பண்ணிட்டிருக்காங்களாம்.. நான் கிளம்பறேன்..” என்று சொல்லி கிளம்பினான்.
அமுதாவின் நிலையை நினைத்து மனம் கனத்து போனது ராஜனுக்கு.. எதாவது பண்ணனும்.. என்ற யோசனையில் பத்து நிமிடம் வரை அங்கேயே நின்றிருந்தார். பிறகு தன் மனையாளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்க்காக.. ரிசப்சன் நோக்கி நடந்தார்.