சுமதிக்கும்.. ராமுவிற்க்கும் சாப்பாடு எடுத்து வைத்து.. அவர்களை சாப்பிட சொன்னவள்.. ‘உங்களுக்கு தோசை ஊத்தறேன்..” என தகவல் சொல்லி அவன் பதிலை எதிர்பார்க்காமல் சமையலறை சென்றாள்.
எங்கப்பா கால்ல விழத்தெரியும்.. என்னை பார்க்ககூட முடியாதா இவளால..? என எரிச்சலடைந்தவன்… ‘அதென்ன..? உங்கத்தை மாமாகிட்ட மட்டும் என்ன வேணும்னு கேட்டுட்டு செய்யுற..? எனக்கு மட்டும் நீயே முடிவெடுக்குற..?” என்றான் கடுப்போடு.
‘உங்களுக்கு எதாவது வேணும்னா.. நீங்களேதான் என்கிட்ட சொல்லனும்.. இல்ல நானா ஒரு முடிவெடுத்திடுவேன்..” என சொல்லிக்கொண்டே தோசை வார்க்க ஆரம்பித்து. இரண்டு தோசை சுட்டு முடித்ததும் டேபிளில் வைத்தவள்..
‘சாப்பிட வாங்க.. தோசை ஆறிடும்..” என அவன் முகம் பாராமலே சொல்லி மீண்டும் கிச்சனுக்குள் போனாள்.
அவளை முறைத்தவன்.. அவள் பின்னோடே கிச்சனுக்குள் போய் கை கழுவ.. ‘மாமா.. என் தப்பை எனக்கு புரிய வச்சாங்க.. அதனால அவங்ககிட்ட பேசுறேன்.. இவன் பெரிய இவனாட்டம் முறுக்கிட்டு இருப்பான்.. நான் இவன்கிட்ட என்ன சாப்பிடுறேன்னு கேக்கனுமாம்…” என முனுமுனுத்தாள்.
ஏதோ முனுமுனுக்கிறாள் என உணர்ந்தவன்.. ‘என்ன சொன்ன..?”
‘ம்ம்.. தோசை ஆறிடும்.. முதல்ல போய் சாப்பிடு..” என்று தோசை வார்ப்பதில் கவனம் வைத்து.. மாறனுக்கு சாப்பாடு மட்டும்தான் முக்கியம் என்பதுபோல அவனை பாராமல் சொன்னாள்.
அவளருகில் சென்று.. ‘தோசை ஆறினா.. என்ன..? அதை சுடுற நீ சூடாத்தான இருக்க..?” என சன்ன குரலில் கேட்டவனுக்கு.. அவள் அணிந்திருந்த மல்லிகையின் வாசம் மயக்க.. ‘ம்ம்.. ஹா..” என பெரு மூச்செடுத்தபடி வெளியே வந்தான்.
[the_ad id=”6605″]
கைகழுவி சென்ற அந்த சின்ன இடைவெளியில்.. மாறனுக்கு நேற்றிலிருந்து இன்று மதியம் வரையிருந்த கோப முகம் முற்றிலும் மாறியிருந்தது.. அவனின் குரலில் இருந்த புது மயக்கத்தால்.. நந்தினி நெஞ்சுக்குள் இனிய படபடப்பு. ஆனாலும் ஏனோ.. கண்கள் கண்ணீரை சிந்தியது.
‘டேய்.. மாறா.. நிவி சுடுறதை விட இன்னமும் சன்னமா பேப்பர் மாதிரி சுட்டுருக்காடா..” என ஆச்சர்யத்துடன் சொன்னார் சுமதி.
மருமகளுக்கு ஜால்ரா அடிக்கும்.. தன் அம்மாவை முறைத்தாலும்.. இரண்டு நிமிடங்களிலேயே இரண்டு தோசையை முடித்து.. அவள் கொண்டு வந்ததையும் எடுத்து வைத்து சாப்பிட்டுக் கொண்டே.. மனதிற்குள் அப்படி மெச்சிக்கொண்டிருந்தான் தன் மனையாளின் கைபக்குவத்தை.
மேலும் இரண்டு தோசைகளை வைத்தாள். அதையும் சாப்பிட்டவன்.. கிரேவியை பார்க்க கொஞ்சம்தான் இருந்தது.
‘எனக்கு போதும்..” என்றான்.
காதிலேயே வாங்காமல்.. இன்னும் இரண்டு தோசைகளை அவனின் தட்டில் வைத்து.. மீதமிருந்த கிரேவியை போட்டவள்.. மீண்டும் சமையலறைக்கு சென்றாள்.
‘நீ என்னம்மா சாப்பிடபோற..? இன்னும் கொஞ்சம் சேர்த்து செய்திருக்கலாமில்ல..?” என்றார் இராமு.
‘காலைல கோவில்ல உடைச்ச தேங்காய் இருக்கு மாமா.. நான் சட்னி செய்துக்கிறேன்..” என்றவள் தனக்கு தோசை ஊற்றிக்கொண்டே.. பத்து நிமிடத்தில் சட்னியரைத்து தாளித்து எடுத்து வந்தாள்.
ராஜிக்கு கிரேவி பத்தாதே என சாப்பிடாமல் இருந்தவன்.. அவள் வந்ததும்.. ‘நான்தான் எனக்கு போதும்னு சொன்னேன்ல..? என்னால சாப்பிட முடியாது..” என கோபம் போல் சொல்லி எழப்போகவும்..
‘உக்காருங்க.. எதையும் வேஸ்ட் பண்ணக் கூடாது..” என கண்டிப்போடு சொல்லி.. மாறனுக்கும் கொஞ்சம் சட்னி வைத்து.. தானும் சாப்பிட ஆரம்பித்தாள்.
‘மதியமே ஒழுங்கா சாப்பிடல.. இப்பவும் இரண்டு தோசை மட்டும் உனக்கு ஊத்தியிருக்க..?” என அவளின் முகத்தை பார்த்து கேக்க..
மதியம் சாப்பிடாததுக்கு இப்போ கேக்கிறான்.. என மனதில் திட்டியவள்.. அருகில் தன் அத்தையும் மாமாவும் இருக்கவும்..
‘பத்தலைன்னா.. சாதம் கொஞ்சம் மீதியாகிடுச்சில்ல.. அதை சாப்டுக்குவேன்..” என சொல்லி அவள் போக்கில் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். ராமன் சாப்பிட்டு எழவும்.. சுமதி ராமன் சாப்பிட்ட தட்டை எடுக்கப்போக..
‘விடுங்கத்தை நான் பார்த்துக்கிறேன்..” என்றாள் சுமதியின் முகம் பார்த்து.
‘கிச்சனுக்குத்தான கை கழுவப் போறேன்.. அப்படியே எடுத்திட்டு போய்டுறேன் நந்தினி..” என இன்முகத்தோடு எடுத்துப் போனார்.
கிச்சனில் கை கழுவ வந்த ராமுவின் முகம் பார்க்காமல்.. சுமதி முகத்தை திருப்ப.. ‘உனக்கு பொய் பேச வராதுன்னு எனக்கு தெரியாதா சுமதி…?” என சுமதியின் முகத்தை தன் பக்கம் மென்மையாய் திருப்பவும்..
‘அப்போ எதுக்கு என்னை திட்டுனிங்க..?” என சுமதி முகம் சுருக்கவும்..
‘நம்ம மகனுக்காகவும்.. மருமகளுக்காவும்தான்.. எப்படிடா அவங்க தவிப்பை போக்கறதுன்னு நான் தவிச்சிட்டிருந்தேன்.. இந்த நேரம் பார்த்து நீயே நம்ம சின்னைய்யா பத்தி பேசிட்டியா..? அதான் அதை வச்சே நந்தினிக்கும் மாறனுக்கும் அவங்க மேல இருக்கிற தப்பை அவங்களுக்கு புரிய வச்சேன்.. இப்ப பாரு.. இரண்டு பேரு முகத்திலயும் கோபம் கொஞ்சம் குறைஞ்சிருச்சி.. இனி இரண்டு பேரும் சீக்கிரம் சமாதானம் ஆகிடுவாங்க..” என சொல்லி தன் மனைவியின் முகத்தை பரிவாய் இராமு பார்க்க.. கொஞ்சம் இயல்பானார் சுமதி.
[the_ad id=”6605″]
‘ஆமா.. நான் எங்க உன்னை திட்டினேன்..? கொஞ்சம் சத்தமாதான பேசினேன்..?” என்று இராமன் கேக்கவும்..
‘நான் தப்பா பேசிட்டனோன்னு பயந்தே போய்ட்டேன்..”
‘என்கிட்ட நீ எப்பவும் பயந்துக்க வேணாம்.. நீ எப்பவும் இதே மாதிரி உண்மையையே பேசு.. அதனால என்ன ஆனாலும் நான் பார்த்துக்கிறேன்.. சரியா..?” என கண்களில் அன்பை தேக்கி கேட்கவும்..
வெகு வருடங்களுக்குப் பிறகான.. தன் கணவனின் பார்வையில் தடுமாறி.. ‘ஏங்க.. நந்தினி நல்லா சமைக்கிறாள்ல..?” என சுமதி பேச்சை மாற்றவும்..
ஒல்லியா இருக்கேன்னு சொன்னா.. தன் மனைவிக்கு கோபம் வரும் என தெரிந்தே.. ‘ம்ம்.. மருமக கையால சாப்பிட்டாவது.. உன் உடம்பு தேறுதான்னு பார்ப்போம்..” என்றார் இராமு.
‘எல்லாம் இருக்கிற உடம்பே போதும்.. போங்க..” என்று வெடுக்கென சுமதி சொல்ல.. வழக்கம்போல் தன் மனைவியின் முந்தானையில் தன் கையை துடைக்கவும்..
‘முதல்ல என் புடவையை விடுங்க.. மருமக கைகழுவ வந்திடப்போறா..” என பதட்டமாக சுமதி நகரப்போக.
‘இருடி கொஞ்ச நேரம்.. அங்க உன் மகன் இப்பத்தான் என் மருமகளை பார்க்கவே ஆரம்பிச்சிருக்கான்.. நீ வாக்கில அங்க போய் நந்தினிகிட்ட.. வழவழன்னு உன் பழங்கதையை பேச ஆரம்பிச்சிடாத.. ஒழுங்கா தூக்கம் வருதுன்னு சொல்லிட்டு அங்கயிருந்து நகர்ந்திடனும்.. சரியா..?” என்றார்.
‘அப்பா சாமி.. நான் தூங்க போய்டுறேன்.. ஆனா தயவுசெய்து என்பின்னாடியே நீங்களும் ரூம்க்குள்ள வந்திடாதிங்க.. ஹால்ல படுத்துக்கோங்க..” என்றார்.
‘இந்த வீடு கட்டினதுக்கப்புறம்தான நமக்குன்னு ரூமிருக்கு..? அப்பவும் மாறன் கல்யாணமாகாம இருக்கும்போது.. நாம ஒன்னா ரூம்ல படுக்க கூடாதுன்னு வழக்கம்போல ஹால்லதான படுத்துகிட்டேன்.. மாறனுக்கும் கல்யாணம் ஆகிடுச்சின்னு ரொம்ப வருசத்துக்கப்புறம்.. நேத்துதான் பக்கத்தில படுக்கவே ஆரம்பிச்சேன்.. அப்பவும் உன்னை எதாவது தொல்லை பண்ணினேனா..? சும்மா அணைச்சி பிடிச்சிதான தூங்கினேன்.. அதுக்கே முறுக்கிக்கிற..?” என்றார் சிரிப்போடு.
‘ஆத்தீதீ…. இப்ப எதுக்கு இந்த பேச்சு..?” என்று சுமதி இங்கு தவிக்க..
உண்டு முடித்து மாறன் கைகழுவ எழவும்.. ‘தட்லயே கழுவிக்கோங்க.. நான் எடுத்து வச்சிக்கிறேன்..” என்றாள் அவனைப் பாராமல் சன்னக் குரலில்.
‘தட்ல கை கழுவினா நிவி திட்டும்.. சின்க்ங்குல கழுவியே பழகிடுச்சி.. நான் கிச்சன்லயே கழுவிக்கிறேன்..” என நடக்கவும்..
‘கொஞ்சம் இங்க வா..” என அவசரமாய் நந்தினி அழைக்கவும்..
அவள் ஒருமையில் அழைத்ததில் மனதில் மின்னலடிக்க.. மாறன் ஆர்வத்தோடு நந்தினியிடம் வரவும்.. ‘அங்க உங்கப்பாம்மா கை கழுவ போய்.. பத்து நிமிசத்துக்கும் மேல ஆகுது.. இன்னும் கழுவி முடிக்கல போல.. அவங்களை டிஸ்டர்ப் பண்ணாம ஒழுங்கா இங்கையே கழுவிட்டு போ.. நான் அப்புறமா எடுத்து வச்சிக்கிறேன்..” என்றாள் தன் தட்டில் கவனம் செலுத்தியபடி.
‘ஆங்.. “ என வாயைப் பிளந்தவன் பிறகு சுதாரித்தவனாய்.. ‘அவங்க எதாவது சோபி.. நிவியைப் பத்தி பேசிட்டிருப்பாங்க.. நீ தப்பா நினைக்காத..” என்றான் உறுதியுடன்.
‘அப்படியா..? அங்க பாரு..” என நந்தினி சொல்ல.. சிவந்த முகத்தோடு சுமதி வெளியே வரவும்.. பின்னோடே சின்ன சிரிப்போடு வந்தார் இராமன்..
இன்ப அதிர்ச்சியோடு நின்ற இடத்திலேயே மாறன் நிற்க்கவும்..
‘என்னடா அப்படி பார்க்குற..? இத்தனை வருசத்தில.. என்னைக்காவது நான் உங்கம்மாவை சத்தம் போட்டு நீ பார்த்திருக்கியா..?” என கேட்கவும்.. மாறன் தலை இல்லை என்பது போல் உருள..
[the_ad id=”6605″]
‘ம்ம்.. இல்லல்ல..? ஆனா இன்னைக்கு உன் பொண்டாட்டிக்காக நான் என் பொண்டாட்டியை திட்டிட்டேன்ல..? மனசு கேக்குல.. அதான் அன்பா இரண்டு வார்த்தை பேசி.. உங்கம்மாவை சமாதானப் படுத்தினேன்.. எங்களை கவனிக்கிறதை விட்டுட்டு.. உன் பொண்டாட்டியை போய் கவனிடா…“ என சொல்ல.. மாறனின் முகம் புன்னகையை பூசினாலும்.. தகப்பனின் புதிய பரிமாணத்தில் அவரையே பார்த்திருந்தான்.
‘எல்லாத்துக்கும் காரணமான சின்னைய்யாவை மன்னிக்க தெரியுமாம்.. கட்டின பொண்டாட்டி.. பாவம் சின்னபொண்ணு.. தெரியாம தப்பு செய்திடுச்சி.. அதை மட்டும் இவனுக்கு மன்னிக்க தெரியாது. இவனெல்லாம் என்ன காதலிச்சானோ..?” என தன் போக்கில் மேலும் மாறனை திட்டிக்கொண்டே தனதறை நோக்கி போனார் இராமன்.
தன் அப்பாவா.. ராஜய்யாவை குற்றம் சொல்கிறார்..? என பிரமித்து நின்றான்.
தன் மீதான அக்கறையில் தன் மாமனார்.. மாறனிடம் தன்னை குறித்து பரிந்து பேசியதும் மனம் சந்தோசமடைந்தாலும்.. தன்னைப் பற்றி தன் மாமனாருக்கு புரிந்தது கூட இவனுக்கு புரியவில்லையே என மனம் வேதனையடைய.. மாறன் முன் இருந்தால் மேலும் சண்டைதான் வரும் என நினைத்து.. சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்துக்கொண்டு சமையலறை சென்றாள் ராஜநந்தினி.