ஒரு முடிவின் துவக்கம்…
அத்தியாயம் — 17
வீட்டை பூட்டி தனதறைக்கு வந்த இளமாறன்.. தன் அம்மா மீதான அப்பாவின் காதலைத்தான் நினைத்திருந்தான். இத்தனை வருடத்தில் அப்பாவின் இந்த பரிமானம் மாறனுக்கு முற்றிலும் புதிது. அதிலும் ராஜிக்காக தன் அப்பா ராஜய்யாவை விட்டுக்கொடுத்து பேசியதுதான் அவனுக்கு நம்ப முடியாத ஆச்சர்யம். அதன் தாக்கம் அவன் முகத்தை மலரச் செய்ய.. மனம் ராஜியின் அருகாமையை எதிர்பார்த்தது.
சமையலறையிலேயே கால்மணி நேரம் வரை இருந்தவள்.. பிறகு ஹாலில் இருந்த டி.வி.யை உயிர்ப்பித்து.. சேனலை மாற்றிக்கொண்டே இருந்தாள்.
ஒரு மணிநேரமாகியும் வரவில்லை என்றதும்.. தனதறையில் இருந்து வெளியே வந்தான். பார்வை தொலைக்காட்சியில் இருந்தாலும் கவனம் வேறெங்கோ இருந்தது ராஜிக்கு.
‘அதான் ஒன்னும் நல்லாயில்ல இல்ல.. அப்புறம் ஏன் சேனலை மாத்திட்டே உக்கார்ந்திருக்க..?” என்று அவளருகில் அமர்ந்தான்.
அமைதியாகவே அமர்ந்திருந்தாள். ‘வா தூங்கலாம்..” என்றான் கனிவாக.
‘அத்தையும்.. மாமாவும்.. தூங்க போய்ட்டாங்க.. இனி நடிப்பை கன்டினியூவ் பண்ண வேண்டாம்.. போங்க..” என்றாள் காட்டமாக.
‘அப்போ… நீங்களும் வாங்க..” என்றான் இலகுவாக.
‘என் முகத்தை பார்க்க பிடிக்காமத்தான நேத்து வெளில கிளம்ப பார்த்திங்க..? இப்ப மட்டும் என்ன..?” என கண்கலங்கினாள்.
‘நீ செய்தது தப்புன்னு இன்னைக்கு உணர்ந்திட்டல்ல..? விடு..” என அவளின் கண்ணீரை துடைத்தான். அவனின் கையை தட்டி.. தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள்.
‘உன் கோபம் நியாயமானதுதான்.. அதுக்காக.. ராஜய்யாவை நீ என்னன்னாலும் கேட்டிருக்கலாம்.. அதை விட்டுட்டு.. நான் கட்டின தாலியை கழட்ட நினைக்கலாமா..?” என்றான் கொஞ்சம் காரமாக.
‘நான் எத்தனை முறை உன்கிட்ட.. எங்கம்மாவோட காதலன் இந்த ஊர்லதான் இருப்பாங்களோன்னு சந்தேகமா இருக்குன்னு சொல்லியிருக்கேன்..? அந்த ராஜன்தான் அந்தாளுன்னு.. நீ ஏன் என்கிட்ட சொல்லல..? உன்னால எப்படி என்கிட்ட பொய் பேச முடிஞ்சது..? எங்கம்மாக்கு அடுத்ததா உன்னைத்தான நம்பினேன்.. சொல்லப்போனா.. எங்கம்மாகிட்ட சொல்லமுடியாத விசயங்களை கூட உன்கிட்ட தான சொன்னேன்..?” என்றாள் அவளும் காட்டமாக.
‘பொய் பேசனும்னு இல்ல ராஜி.. ராஜய்யாதான் உங்கப்பான்னு தெரிஞ்சா.. என்னை வேணாம்னு சொல்லிடுவியோன்ற பயத்திலதான் நான் சொல்லல.. கொஞ்சம் என்னை புரிஞ்சிக்கோயேன்..” என்றான் கெஞ்சுதலாக.
[the_ad id=”6605″]
‘உனக்கு வேண்ணா அந்தாளு தெய்வமா கூட இருக்கலாம்.. ஆனா.. என்னை பொருத்தவரை அவன் எங்கம்மா வாழ்க்கையை சீரழிச்சவன்.. அந்தாளோட உண்மையை நீ மறைச்சதால எனக்கு அந்த நேரம்.. உன் காதல் பொய்யின்னு தோணுச்சி.. அவர் உன் பிரண்டுங்கிறதால.. அவர் செய்த தப்பை நீ சரிசெய்ய பார்த்தன்னு தோணுச்சி..
இதெல்லாம் விட.. பொண்டாட்டியோட அந்தாளு குடும்பமா வந்து நிக்கும்போது.. அந்தாளு முன்னாடி எங்கம்மா தனி மரமா..” என்றவளுக்கு அதற்கு மேல் பேச்சு வரவில்லை.. கதறி அழுதாள்.
மாறன் என்ன சமாதானம் செய்தும் ராஜியின் அழுகை நின்றபாடில்லை.. இவளின் சத்தத்தில் எங்கே தன் அம்மாவும் அப்பாவும்.. வெளியே வந்திடுவார்களோ என நினைத்தவன்.. ஹாலின் லைட்டை அணைத்து.. ராஜியை கைகளில் அள்ளிக்கொண்டு தனதறைக்கு போனான்.
மாறன் தூக்கிய அதிர்ச்சியில்தான் ராஜியின் அழுகை சற்று மட்டுப்பட்டது. அழுகை நின்றாலும் அவளின் வாய் புலம்பலில் இருந்து இன்னும் ஓயவில்லை..
‘ஒரு வார்த்தை.. அந்த அந்தாளுன்னு சொல்லியிருந்தேன்னா.. எங்கம்மாமை இங்க வரசொல்லியிருக்கவே மாட்டேன்.. அந்தாளு பொண்டாட்டி குழந்தைகளோட சந்தோசமா இருக்கும்போது.. அதை பார்த்த எங்கமாக்கு.. எப்படி இருந்திருக்கும்..?” என்று தவித்தவள்..
‘அந்த நேரம்.. என் சின்ன வயசில இருந்து எங்கம்மா பட்ட வேதனையும்.. அந்தாளால இழந்த வாழ்க்கையும்தான் என் கண்முன்ன நின்னுச்சி.. நீ உட்பட வேற எதுவும் எனக்கு முக்கியமா படல..” என திடீரென கத்தினாள்.
‘சரி.. சரி… கொஞ்ச நேரம் நான் பேசுறதையும் கேளுடி..” என்று அவளை தட்டிகொடுத்தபடி.. கட்டிலில் அமரச்செய்து.. தானும் அவளருகில் அமர்ந்தான்.
ம்கூம்.. மாறன் பேச்செல்லாம் நந்தினியின் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை.. ஆனால் கோபம் போய் குரலின் சத்தம் குறைந்தவளாய்..
‘என்னாலதான எல்லாம்.. நான் வர சொல்லவும்தான மனசை கல்லாக்கிட்டு.. என் சந்தோசத்துக்காக இங்க வந்தாங்க.. என் அம்மும்மா நிம்மதிக்காக.. எல்லாத்தையும் விட்டொழிச்சிட்டு.. அம்மும்மாவையும் கூட்டிகிட்டு.. மறுபடியும் சென்னைக்கே போய்டலாம்னுதான் அப்படி செய்திட்டேன்..” என தன் போக்கில் பேசிக்கொண்டே இருந்தாள்.
எழுந்து கதவை தாழ்போட்டு அவளருகில் வந்தவன்.. அவளின் நெற்றியில் இதழொற்றினான்.. பேச்சு நிற்கவில்லை.
பின்பு கன்னத்தில் சற்று அழுத்தமாய்.. மாறனை தள்ளிவிட்டபடி அப்பொழுதும் தன் புலம்பலை தொடர்ந்து கொண்டேதான் இருந்தாள். ‘ரா..ஜி..” என்றான் ஏக்கத்தோடு சலித்தபடி.
‘எல்லா உறவுகளோடவும் வளர்ந்த.. உனக்கெப்படி எங்க கஷ்டமெல்லாம்.. புரியும்..? தூரத்து சொந்தம்னு கூட சொல்லிக்க ஆளில்லாம.. வாழ்ந்த எங்களுக்குத்தான் தெரியும்..” என மீண்டும் கண்கலங்க..
‘இவளை..” என முனுமுனுத்தவன்.. அவளின் இதழோடு இதழ்கலக்க.. திமிறினாள்.
சில நொடிகளிலேயே விடுவித்து ராஜியைப் பார்க்க.. மாறனை முறைக்க முயன்று கொண்டிருந்தாள்.
‘ஷப்பா.. மழை பேய்ஞ்சி ஓய்ஞ்ச மாதிரி.. ஏண்டி வாய திறந்தா மூடவே மாட்டியா..?” என அவளின் இடையை வளைத்தான்.
‘விடு.. நேத்து நைட் அப்படி திட்டினல்ல..?” என்று முகம் திருப்பினாள்.
விடுவித்தவன்.. ‘நல்லகாலம்.. இப்பவாவது உனக்கு என் நியாபகம் வந்ததே..” என சொல்லி.. அவள் முகத்தை குனிந்து பார்த்தான் கண்களில் காதலை தேக்கி.
‘உனக்கு என்னைய விட அந்த ராஜன் குடும்பம்தான பெருசு..?” என்றவளுக்கு மீண்டும் முனுக்கென கண்ணீர் வெளிவர..
‘இப்ப உன்கிட்ட உன் அம்மும்மா முக்கியமா..? இல்ல நான் முக்கியமான்னு கேட்டா நீ என்ன சொல்லுவ..?” என்றான்.
‘இதென்ன..?” என தடுமாறினாள்.
‘பதிலில்ல இல்ல.. லூசு..” என செல்லமாய் திட்ட..
புரியாமல் பார்த்தவளிடம்.. ‘எங்கப்பாம்மா எனக்கு எவ்ளோ முக்கியமோ.. அதே மாதிரிதான் எனக்கு ராஜய்யாவும்.. அதுக்காக நீ எனக்கு முக்கியமில்லாம ஆகிடுவியா..?” என்றான்.
‘நீ எனக்கு எவ்ளோ முக்கியம்னு.. என்னோட வாழப்போற நாள்ல.. நல்லா தெரிஞ்சிக்கலாம்.. அதுக்கு முன்ன நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.. உணர்ச்சிவசப் படாம.. அழாம நான் பேசி முடிக்கிற வரைக்கும் குறுக்க பேசாம.. கொஞ்சம் பொறுமையா கேக்குறியா..?” என்றான் கெஞ்சலாக.
இவள் மண்டையை உருட்டவும்..
‘ராஜய்யா உங்கம்மாவை ஏமாத்தனும்னு நினைச்சிருந்தார்ன்னா.. இத்தனை வருசம் கழிச்சும்.. அவரோட மனைவி குழந்தைகள் பக்கத்தில இருக்கும்போதே அத்தனை பேர் முன்னாடி.. அவ்ளோ தைரியமா.. எதுக்காக என்னை விட்டுட்டு போனன்னு உங்கம்மாகிட்ட கேப்பாரான்னு கொஞ்சம் யோசி.. எல்லார் முன்னாடியும் நீ அவரோட பொண்ணுன்னு எதுக்காக அவர் தப்பை ஒத்துக்கனும்…?” என்றான் மிக மிக பொறுமையான குரலில்.
‘அவ்ளோ கோபமா.. என்னை எதுக்காக விட்டுட்டு போனன்னு கேட்டும்.. எதுன்னாலும் நாளைக்கு பேசிக்கலாம்ன்னு ராஜய்யாகிட்ட அத்தை எப்படி கெஞ்சினாங்க பார்த்தியா..? தன்னை ஏமாத்துனவங்ககிட்ட யாராவது அப்படி கெஞ்சுவாங்களா..?” என்றான் அவளை ஆழந்துபார்த்து.
‘உங்கம்மாவை ராஜய்யா அடிச்சும் கூட.. உங்கம்மா அவர் அடிச்சதை ஒரு பொருட்டாவே எடுத்துக்கல.. அந்த நேரம்.. எல்லாருக்கும் அவர் கோபம்தான் தெரிஞ்சிருக்கும்.. ஆனா எனக்கு ராஜய்யா உங்கம்மா மேல வச்சிருக்க காதல் தான் தெரிஞ்சது..” என்றான் பெருமையாக.
‘அத்தை ஊரைவிட்டு போனதுக்கப்புறம்.. நாலு வருசம் பைத்தியம் பிடிச்சமாதிரி உங்கம்மாவை தேடிட்டிருந்தாராம்.. இப்ப மாதிரி போன் வசதி எல்லாம் அப்ப இல்லல்ல.. எதாவது ஒரு சின்ன க்@ கிடைச்சிருந்தா கூட.. ராஜய்யா அத்தையை தேடி கண்டுபிடிச்சிருப்பார். இப்படி உங்களை தவிக்க விட்டிருக்கமாட்டார்.” என வருத்தத்தோடு சொன்னவன்…
[the_ad id=”6605″]
‘ஒரு பொண்ணை நாசம் செய்து.. ஏமாத்தனும்னு நினைக்கிற அளவுக்கு ராஜய்யா மோசம் கிடையாது ராஜி. தண்டபானி தாத்தா மிரட்டலுக்கு பயந்து.. ராஜய்யாகிட்ட கூட சொல்லாம உங்கம்மா இந்த ஊரைவிட்டு போயிருக்காங்க..
தப்பு இரண்டு பேர் மேலயுமே இருக்கு.. ராஜய்யாவும் கல்யாணத்துக்கு முன்ன.. அத்தைகிட்ட தப்பா நடந்திருக்கவே கூடாது.. இவ்ளோ பயந்துக்கிற அத்தையும் கல்யாணத்துக்கு முன்ன.. தன்னை கொடுத்திருக்கக் கூடாது.
நந்தினி வேதனையோடு கேட்டுக்கொண்டிருந்தாள். ராஜய்யாவைப் பத்தி தாம் பேசுவதை.. ராஜி பொறுமையாய் கேட்டுக்கொண்டிருப்பதே மாறனுக்கு சற்று நிம்மதியளித்தது.
‘நீ இந்த ஊருக்கு வரும்போது நான் கேரளால இருந்தேன். ஒரு முக்கியமா ஆடிட்டிங் மீட்ங்கில இருந்ததால.. போனை சுட்ச் ஆப் செய்து வச்சிருந்தேன்.
அத்தை வீட்டுக்கு யாரோ வந்திருக்காங்கன்னு தகவல் தெரிஞ்சதும்.. ராஜய்யா உங்க வீட்டுக்கு வந்திருக்கார். வந்தவர் அத்தைபோலவே இருக்கிற உன்னை பார்த்ததும்.. பரிதவிச்சி போயிருக்கார். உன்னை பார்த்ததில இருந்து அத்தையை நினைச்சி நினைச்சி நெஞ்சுவலியே வந்திருச்சி.. அன்னைக்கு சாய்ங்காலம் என் அப்பாகிட்ட இருந்து எனக்கு போன்.. காலைல இருந்து எத்தனை முறைடா உனக்கு போன் பன்றது..? சீக்கிரம் வாடான்னார்..
எதுக்குப்பா இவ்ளோ பதட்டமா இருக்கிங்கன்னு கேட்டேன்.. ராஜய்யாக்கு நெஞ்சு வலி வந்திடுச்சின்னும்.. ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்கன்னும் சொன்னார். அடிச்சி பிடிச்சி கிளம்பினேன்.. அடுத்த நாள் காலைல ராஜய்யாவை போய் பார்த்தேன்.
ஹார்ட் அட்டாக்குன்னு சொன்னாங்க. ரொம்ப கிரிட்டிக்கல் பொசிசன்லதான் இருந்திருக்கார்.. என்னைப் பார்த்ததும் தேவிம்மா குழந்தைகள் எல்லாரையும் அனுப்பிட்டு.. என்னை மட்டும் இருக்க சொன்னார்.
எல்லாரும் போனதுக்கப்புறம்தான்.. என்கிட்ட முதன்முதலா அத்தையைப் பத்தி சொன்னார். ராஜய்யா இப்படி செய்திருப்பார்ன்னு.. அவரே சொல்லிகூட என்னால நம்பவே முடியலை.. என்னை மறக்க முடியாம எதாவது தப்பான முடிவுக்கு அமுதா வந்திருப்பாளோன்னு கூட பல சமயம் எனக்கு தோணியிருக்கு.. ஆனா உயிரோட இருந்தாள்ன்னா.. கண்டிப்பா என் நினைப்போடதான் எங்கையாவது ஒரு மூலைல தனியா வாழ்ந்திட்டிருப்பா.. எங்க இருக்காளோ..? என்ன கஷ்டப்பட்டு இருக்காளோன்னு நான் நினைக்காத நாளில்ல..
ஆனா இப்படி என் குழந்தையை சுமந்திட்டிருப்பான்னு நான் நினைக்கவே இல்ல மாறா.. அந்த சின்ன வயசில.. தெரியாத ஊர்ல.. வயித்தில குழந்தையோட.. தனியா எப்படி வாழ்ந்திருப்பான்னு.. அத்தையை நினைச்சி அப்படி அழுதார்.. அவர் அழுகையைப் பார்த்துதான் அவர் உண்மையைத்தான் சொல்றாருன்ற நம்பிக்கையே எனக்கு வந்துச்சி.
என்ன நடந்தாலும் இனிமே அம்முவையும்.. என் பொண்ணையும் விடவேமாட்டேன்னு.. பைத்தியம் மாதிரி புலம்ப ஆரம்பிச்சிட்டார். டாக்டர் வேற அவரை அதிக ஸ்ட்ரெஸ் ஆகக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. ஆனாலும் அவரால நார்மலா இருக்கவே முடியல. அவரோட கண்ணுல பொய் இல்ல ராஜி.. அவரோட தவிப்பு உண்மை..
சரி ராஜய்யாவை விடு.. அவரைப் பத்தி உனக்கு தெரியாது.. ஒரு வருசத்துக்கும் மேல நாம காதலிக்கிறோம்.. என் குணம் என்னன்னு உனக்கு தெரியாதா…? அத்தைன்னு இல்ல.. ஒரு பொண்ணை ஏமாத்தி நாசமாக்கினார்ன்னு தெரிஞ்சா.. அது ராஜய்யாவா இருந்தா என்ன..? இல்ல யாரா இருந்தா என்ன..? அவங்களோட நான் பழகிட்டிருப்பேனா..?” என்று அவளை ஆழ்ந்து பார்த்தான். தாம் சொல்வது உண்மையென அவள் புரிந்துகொள்கிறாள்.. நடந்த உண்மையை உணர்கிறாள்.. என்பதை அவளின் முகம் காட்ட..
இதுக்கு மேல.. கொஞ்சம் பொய்.. கொஞ்சம் உண்மை என்றுதான் பேசி ஆகனும்.. என உள்ளுக்குள் நினைத்தவன்..
‘அவரை நார்மலாக்கறதுக்காக உங்க பொண்ணைப் பார்த்ததும் என்ன பேசுனிங்கன்னு கேட்டேன்.. வீட்டைப் பத்தி உன்கிட்ட பேசினேன்னு சொன்னார். அத்தையை பார்க்கிற ஆசையில நீ அமுதா பொண்ணுதான்னு நான் எப்படி நம்புறதுன்னு கேட்டு.. உங்கம்மாவை இங்க வரசொல்லுன்னு சொன்னாராம்.. அதுக்கு நீ.. இந்த சின்ன விசயத்துக்கெல்லாம் என் அம்மா தேவையில்லைன்னு.. வீட்டு பத்திரத்தோட ஜெராக்சை எடுத்து வந்து மூஞ்சில அடிச்ச மாதிரி போட்டியாம்..
ரொம்ப தைரியமா பேசுனியாம்.. அப்படி இப்படின்னு உன்னை புகழ்ந்திட்டே இருந்தார். அதனால எனக்கு உன்னை பார்க்கனும்னு தோணுச்சா.. ராஜய்யாகிட்ட நாளைக்கு போய் உங்க பொண்ணை பார்க்கலாமான்னு கேட்டேன்.. அவரும் உன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தார்.” என்றான்.
அமைதியாய் உள்வாங்கிக் கொண்டிருந்தாள். அவளின் முகத்தில் முன்புபோல் ராஜய்யாவின் மீதான வெறுப்பு இல்லை. மாறாக தன் அன்னையின் கடந்த கால நிகழ்வுகள் அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது.
ராஜய்யாவை பற்றி தான் எடுத்துரைத்ததும்.. அவரின் மேல் இருந்த இத்தனை வருட கோபத்தையும் கைவிட்டுட்டாளே.. அவ்வளவு ஏன்..? நேற்று கோபத்தில் அவள் செய்த செயலின் தாக்கம் தன்னை அப்படி வாட்டியிருக்க.. இன்று இப்படி மாறுவாள் என தான் நினைத்து பார்த்தோமா..? என வியப்பாய் நினைத்தவன்..
இப்படி எத்தனை பேருக்கு இந்த குணமிருக்கும்..? இவள் தனக்கு கிடைத்த பொக்கிசம்.. நேற்று நடந்ததை பற்றி பேசி.. இவளை இனி துன்புறுத்தக்கூடாது.. என சற்று நேரம் ஆழ்ந்த யோசனையில் இருந்தவன்.. அவளின் முகம் பார்க்க.. இன்னும் என்னென்ன சொல்லுவானோ.. என ஆவலோடு மாறனின் முகம் பார்த்திருந்தாள்.
இவ விட்டா.. விடிய விடிய கதை கேப்பா போலிருக்கே.. இது ஆகாது.. இனி நம்ம மேட்டருக்கு வரலாம் என நினைத்தவன்..
‘உன்னை முதல் முறை பார்க்கும்போதே.. நீ முத்துகிட்ட வாக்குவாதம் செய்திட்டிருந்தியா.. அவனும் ஆள்வேற சரிகிடையாது.. எனக்குள்ள ஏதோ ஒரு இனம்புரியாத தவிப்பு உன்மேல வந்திடுச்சி.. நீ அவனை அடிச்சிட்டன்ற ஆத்திரத்தில.. அவனேது ஆளில்லாத நேரத்தில உன்கிட்ட வம்பு செய்தா என்ன பண்றதுன்னு ரொம்ப கவலையாய்டுச்சி.. சரி அழகா இருக்கா.. தனியா வேற இருக்கா.. அதனால கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க சொல்லலாம்னு.. உனக்கு அட்வைஸ் பண்ணினா..
நைட் நேரத்தில நீ கோழையாய்டுவியான்னு என்னையே திருப்பி கேக்குற..? ம்ம்..? பத்தாததுக்கு உங்கம்மாகிட்ட ஆள் கொஞ்சம் கலர் கம்மின்னாலும்.. லட்சணமா.. கலையா.. வாட்டசாட்டமா.. இன்னும் என்ன சொன்ன..?” என கேட்டான் புன்சிரிப்போடு.
‘நீயே என்னை ரசிச்சி பேசுனதுக்கப்புறம்.. இந்த அழகியை அடுத்தவனுக்கு விட்டுக்கொடுக்க.. நான் என்ன ஜடமா..? இல்ல முட்டாளா..?” என்றான் நிறைந்த காதலோடு.
[the_ad id=”6605″]
ராஜியின் முகத்தில் முன்பிருந்த ஆர்வம் போய்.. வெக்கம் மிளிர… அதை மறைக்க தன் முகம் திருப்பினாள்.
‘ஆனா.. சோபிக்கு முடிக்காம என்னால கல்யாணம் செய்துக்க முடியாது. ஒரு வேளை சோபிக்கு கல்யாணம் முடியறதுக்குள்ள.. உங்கம்மா.. உனக்கு திடீருன்னு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிடுவாங்களோன்ற பயத்திலதான்.. அன்னைக்கே உன்கிட்ட என் காதலை சொன்னேன்..” என்றான் காதலோடு… ராஜி அமைதியாகவே இருக்கவும்..
கட்டிலில் அமர்ந்திருந்தவளை பின்னிலிருந்து இதமாய் அணைத்தவன்.. ‘நான் உன்னை பார்த்ததும் மயங்குன மாதிரியே.. நீயும் என்னைப் பார்த்ததும் மயங்கிட்டியா..? அதனால என் வேலை சுலபமா முடிஞ்சிடுச்சி..” என்றான் மயக்கும் குரலில்.
‘ஆமாமா.. மயங்குனாங்க மயங்குனாங்க.. நினைப்புத்தான்..” என முறுக்கியவளின் காது மடலெல்லாம் அவனின் அருகாமையில் சிலிர்த்து சிவந்திருக்க.. அதை ரசனையோடு பார்த்திருந்தவனுக்கோ.. பெண்னவளை அறிந்து கொள்ளும் ஆர்வமும்.. அதற்கான உணர்வுகளும் மெல்ல உயிர்த்தெழ..
அவளை மேலும் தன்னுள் சேர்த்தணைத்து.. தன் அணைப்பால் தன் தாபம் உணர்த்தி.. ராஜியின் சோல்டரில் தன் தாடையை வைத்தவன்.. ‘நான் கிழமாறனா..? இல்ல.. இளமாறனான்னு இப்போ உனக்கு காட்டவா..?” என அவளின் காதோரம் சொன்னான் குழைந்த குரலில்.
நந்தினி எழ முற்பட.. ம்கூம் அசையமுடியவில்லை அவளால்.. ‘கல்யாணத்துக்கும் முன்னாடி நைட் மண்டபத்தில வச்சி.. அப்படி பேசுன..? எல்லாம் வாய் சவடால்தானா..?” என்று அவள் நக்கலாய் சொன்னதையே.. அத்தனை ஏக்கத்தோடு அவளுக்கு திருப்பினான்..
என்ன குரல் இது..? என பரிதவிப்பாய் திரும்பி அவனின் முகம் பார்க்க முயல..
ராஜியை விடுவித்தவன்.. எழுந்து அவள் முன் அமர்ந்து.. அவளின் இரு கைகளையும் தன்னிரு கைகளில் அடக்கி.. ‘எனக்கு நீ வேணும்.. உனக்கு நான் வேணாமா..?” என தாபத்தோடு கேட்டவனின் கண்களில்தான்.. எத்தனை எத்தனை கெஞ்சல்.. இப்படி இளமாறனை நந்தினிக்கு தெரியவே தெரியாது.
மாறன் தன் தேவையை வாய்திறந்து கேட்டுவிட்டான்.. ஆனால் கன்னிகைக்கு அவனைப்போல் வாய்மொழியால் சம்மதம் சொல்ல நாணம் தடுக்க.. அவனிடமிருந்து தன் கையை உருவிக்கொண்டு கட்டிலில் சரிந்தவள்.. அருகிலிருந்த தலையணையை எடுத்து தன் முகத்தை மூடிக்கொண்டாள்.
இளமாறனின் கைகள்.. அவளது நைட்டியின் மேல் அழுத்ததுடன் பதிந்து.. உரிமையோடு ஊர்ந்து.. அவளுடலில் மெல்ல மெல்ல முன்னேற.. தலையணையை விடுத்து மாறனின் கைகளை தடுக்க ஆரம்பித்தாள் ராஜநந்தினி.
தாளமுடியாத மோகத்தில்.. ‘ப்ச்.. ரா..ஜ்..ஜீ..” என அவன் கெஞ்ச.. அதற்க்கு மேல் அவனைத் தடுக்க.. அவளாலும் முடியவில்லை.
மறைத்திருந்த தலையணையிலிருந்து தன் முகத்தை விலக்காமல்.. ‘லைட்.. லைட்..டா.. வது.. ஆப் பண்ணு..” என சன்னக்குரலில் அவள் திக்கி திணற..
அவளின் சம்மதம் கிடைத்த சந்தோசத்தில்… எழுந்து அவள் சொன்னதை செய்த இளமாறனின் கைகள்.. அவள் மீதிருந்த தலையணையை விலக்கி.. அவனிற்க்கான தடையை நீக்கும் பணியினை ஆரம்பிக்க.. அவளின் உறுதியற்ற மறுப்புகளை எளிதாய் வென்று.. அதில் வெற்றியும் கண்டு.. தன் இளமைத் தேடலை அவளுள் துவங்க.. அவனின் இதழ்களோ.. அவளின் நெற்றியிலிருந்து தன் பணியினை ஆரம்பித்து.. சிறிது நேரம் அவள் இதழ்களில் தஞ்சமடைந்து.. பிறகு தடை நீக்கிய அவள் மேனியெங்கும்.. இலக்கணமில்லாமல் அலைபாய.. இன்பமாகவே நீண்டது அவர்களின் உறவும்.. இரவும்..‚‚