அத்தியாயம் – 17–2
காலை எழுந்து குளித்து முடித்து.. வெளியே வரும்போது.. மணி எட்டரையை காண்பிக்க.. கிச்சனில் ராமுவும் சுமதியும் இருந்தார்கள். ரொம்ப லேட்டா எழுந்திட்டோமே.. என சங்கடமாய் உணர்ந்து ஹாலிலேயே நந்தினி நிற்க..
கொலுசொலி சத்தத்தில் எட்டிப்பார்த்த இராமன்.. தன் மருமகள் நின்றிருப்பதை கண்டு.. ‘சுமதி.. உன் மகன் நம்ம மருமகளை சமாதானப் படுத்திட்டான் போல.. நான் நந்தினியை கூப்பிடுறேன்.. நீ எதையும் வெளிப்படையா என் முன்னாடியே கேட்டுறாத..?” என தன் மனைவியிடம் சொல்லி..
‘வாம்மா.. ஏன் அங்கையே நின்னுட்ட..?” என இராமன் அழைக்க..
தயங்கி தயங்கி அவர்களிடம் வந்தவள்.. ‘என்னங்கத்தை செய்திட்டிருக்கிங்க..?” என்றாள் தாமதமாய் எழுந்த குற்ற உணர்வோடு.
‘தக்காளி சாம்பாரும் காரச்சட்னியும் செய்தேன்.. சாப்பாடு வேணும்னா வடிச்சிக்கலாம்.. இல்ல டிபனுக்குன்னாலும் இந்த குழம்பு நல்லா இருக்கும்..” என்றார்.
‘நீங்க காலைல சாப்பாடு சாப்பிடுவிங்களா..?” என நந்தினி கேட்க..
‘டிபன்தான் பிடிக்கும்.. ஆனா.. செய்யறதுக்கு சங்கடப்பட்டுகிட்டு சாப்பாடே செய்திடுவேன்.. அதுவே மதியத்துக்கும் ஆய்டும்..” என்றார்.
‘சரிங்கத்தை இனி நான் பார்த்துக்கிறேன்.. நீங்க போய் உக்காருங்க..” என சொல்லிக்கொண்டே டீ வைப்பதற்க்காக பாத்திரத்தை எடுத்தாள்.
‘அங்க பாரு நந்தினி.. பிளாஸ்க்குல டீ ஊத்தி வச்சிருக்கேன்.. எடுத்திட்டு வா ஹால்ல உக்கார்ந்து குடிப்ப..” என சொல்ல.. டீயை ஊற்றிக்கொண்டு ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து குடித்துக்கொண்டே வீட்டை நோட்டமிட.. எல்லாம் பெருக்கி சுத்தமாக இருந்தது.
‘அத்தை.. எதுக்கு வீட்டை க்ளீன் செய்திங்க..? நிவி அண்ணி இங்க இருக்கும்போது.. எப்படி நீங்க ப்ரீயா இருந்திங்களோ அதே மாதிரி இருங்க.. எல்லாம் நான் பார்த்துக்கிறேன்..” என சொல்ல..
‘நான் பண்ணல நந்தினி.. உங்க மாமாதான் செய்தார்..” என சுமதி சொல்ல..
‘அச்சோ.. ஏன் மாமா…?” என சங்கடமாய் பார்த்தாள் இராமுவை.
‘எப்பவுமே எனக்கு காலைல ஐஞ்சி மணிக்கெல்லாம் முழிப்பு வந்திடும்.. எட்டு மணிக்கெல்லாம் வழக்கமா வேலைக்கு கிளம்பிடுவேன்.. ஆனா இனிமே சின்னைய்யா வீட்டுக்கு வேலைக்கு போக்கூடாதுன்னு மாறன் சொல்லிட்டான்.. இப்ப ஒரு மாசமா வேலைக்கும் போறதில்ல.. என்னம்மா பண்றது..? என்னால சும்மாவே பொழுதை கழிக்க முடியல..
அதோட உன் அத்தை.. சமைச்சி பாத்திரம் தேய்க்கிறதுக்குள்ளவே சோர்ந்து போய்டுவா.. இந்த வீட்டை கட்டினதிலிருந்தே நான்தான் வீட்டை பெருக்குறதெல்லாம் பார்த்துக்கிறது.. நீ சங்கடப்படாத..” என்றார் இராமு.
இனி இப்படி தூங்க கூடாது.. நேரமா எழுந்து வேலை பார்க்கனும்.. என மனதில் நினைத்தபடி..
‘அத்தை நான் காளாள் கிரேவி பண்ணலாம்னு இருந்தேன்.. நீங்க குழம்பு வச்சிட்டிங்க.. நீங்க செய்த சாம்பாருக்கு தோசை ஊத்தவா..? இல்லன்னா அது வேஸ்ட்டாகிடும்..” என்றாள்.
‘அப்போ மதியத்துக்கு காளான் பிரியாணி பண்றயா..?” என ஆவலோடு சுமதி கேட்க..
சரி என்பதாய் தலையசைத்து ராமனை பார்க்க.. ‘எனக்கு எதுன்னாலும் சரிதான்மா.. ஆனா பத்து மணிக்கு மேல சாப்பிடறேன்..” என்றார்.
சுமதி சாப்பிட்டதும்.. மூவரும் பேசிக்கொண்டிருக்க.. ‘ராஜி.. காபி..” என வந்தமர்ந்தான் இளமாறன்.
‘மணி பத்தாகப்போகுது.. காபி கிடையாது டிபன் சாப்பிடு.. அப்புறம் காபி தரேன்..” என சொல்லிக்கொண்டே அவன் முகம் காண முடியாமல். சமையலறைக்குள் புகுந்துகொண்டாள்..
‘அதெல்லாம் முடியாது.. எனக்கு முதல்ல காபிதான் வேணும்..” என மாறன் பிடிவாதத்தோடு குரலுயர்த்த..
‘இன்னைக்கு ஒரு நாளைக்கு காபி கொடு.. நாளைல இருந்து சீக்கிரம் எழுந்துக்கிறேன்னு தன்மையா சொல்லு.. காபி தரேன்..‚ அதைவிட்டுட்டு லேட்டா எழுந்ததுமில்லாம.. அதென்ன சத்தம் அதிகமாகுது..?” என நந்தினியும் குரலுயர்த்த..
‘போடி.. இத்தனை நாளா நீ காபி கொடுத்துதான் நான் குடிச்சேனா..?” என முறுக்கியவன்.. ‘ம்ம்மா.. நீ போய் காபி போட்டுட்டு வாம்மா..” என்றான் சலுகையாக.
கிச்சனுக்கு வந்த சுமதி.. ‘நந்தினி.. காலைல குளிச்சதும் மாறனுக்கு காபி குடிச்சாகனும்.. பாவம் போட்டு கொடுத்திடேன்..” என சுமதி கெஞ்ச..
‘அத்தை.. உங்க மகன்தான் என்கிட்ட கெஞ்சனும்.. நீங்க என்னை மிரட்டனும்.. இப்படி சொன்னிங்கன்னா நான் காபி போட்டு தரமாட்டேன்.. எங்கே என்னை மிரட்டுங்க பார்ப்போம்..” என சிரிப்போடு சொல்லிக்கொண்டே.. பாலை அடுப்பில் வைத்தாள்.
‘மாறா.. உனக்கு இன்னைக்கு காபி கட்டு.. உங்கம்மா என்னைக்கு மருமகளை மிரட்டுறது..? நீ எப்போ காபி குடிக்கிறது..?” என இராமன் சிரிக்க..
‘அத்தை மிரட்டிலன்னா பரவால்ல மாமா.. அதுக்கு பதிலா உங்க மகனை என்கிட்ட கெஞ்ச சொல்லுங்க..” என நந்தினி பதில் கொடுக்க..
[the_ad id=”6605″]
‘அடிங்க.. யாரு யாருகிட்ட கெஞ்சறது..?” என மிரட்டலாய் சொல்லிக்கொண்டே அவன் எழவும்..
‘அச்சோ நான் பயந்துட்டேன்..” என நக்கலாய் சொன்னவள்.. காபி கலந்து சுமதியிடம் கொடுத்து.. ‘பாவம் பிழைச்சி போகட்டும்.. போய் கொடுங்க..” என கொடுத்தனுப்பினாள்.
அவளின் முகம் காணும் தவிப்பில்.. ‘எங்கம்மா உனக்கு எடுபிடியா..? ஏன் உன்னால வந்து கொடுக்க முடியாதோ..?” என உண்மையாகவே கடிந்தபடி சுமதியிடம் இருந்து காபியை வாங்கி பருகினான்.
காபியை கொடுத்த சுமதி.. மாறனோடே உக்கார்ந்து கொள்ள.. இராமனுக்கு தோசை வார்த்தவள்.. அத்தைகிட்ட காபியை கொடுத்தனுப்பியதுக்கே கத்துனான்.. இனி தோசையை கொடுத்தனுப்ப கூப்பிட்டோம்னா அவ்ளோதான்.. என நினைத்தவள்..
தோசையை எடுத்துக்கொண்டு மெல்ல வெளியே வந்து.. ‘மாமா.. சாப்பிடுங்க..” என்றாள் சன்னக்குரலில்.
சாப்பிட அமர்ந்த இராமன்.. ‘இதென்னம்மா..? நாலு தோசை சுட்டுருக்க..? நான் எப்பவும் மதியம்தான் சாப்பிடறதே.. காலைல சின்னைய்யா காட்டுல இளநீர் மட்டும்தான் குடிப்பேன்.. அங்க வேலைக்கு போகறதை நிறுத்தனுதுக்கப்புறம்.. இப்போ கொஞ்ச நாளாத்தான் காலைல சாப்புடுறேன்.. இன்னைக்கு சாப்டுக்கிறேன்.. இனி ரெண்டு தோசைக்கு மேல எனக்கு சுடாதம்மா..” என்றார்.
ராஜனின் பேச்சு வந்ததும் நந்தினியின் முகம் மாறினாலும்.. ‘சரிங்க மாமா..” என்று.. குரல் இயல்பாகவே வந்தது.
அவளின் முகவாட்டத்தை உணர்ந்தவன்.. ‘ஸ்கூல்க்கு எத்தனை நாள் லீவ் போட்டிருக்க..? எப்போ ஜாயின் பண்ணனும்..?” என்றான்.
‘பத்து நாள் போட்டிருந்தேன்.. கல்யாணத்துக்கு முன்னமே ஐஞ்சிநாள் முடிஞ்சிருச்சி.. வர மன்டே ஜாயின் பண்ணனும்..” என்றாள். ஆனால் இன்னும் அவன் முகம் பார்க்கவில்லை.
‘என் போன் உள்ள இருக்கு.. கொஞ்சம் எடுத்திட்டு வா..” என்றான்.
நந்தினி உள்ளே போய் ஐந்து நிமிடம் கழித்து.. ‘எங்க வச்ச..? காணோம்..” என்றாள் தேடிக்கொண்டே.
‘அங்கதான் எங்கையாவது இருக்கும் பாரு..” என்றான்.
‘சரி இருங்க.. என் போன்ல இருந்து ரிங் விட்டு பார்க்கிறேன்..” என சொல்லி மாறனுக்கு அழைக்க.. ரிங் போனது.. ஆனால் சத்தமில்லை.
‘ரிங் போகுது.. ஆனா காணோம்..” என்றாள் உள்ளிருந்தபடியே.
‘ப்ச்.. உன்கிட்ட சொன்னதுக்கு நானே வந்து எடுத்திருக்கலாம்..” என சலிப்பாய் சொல்லி எழுந்தவன்.. உல்லாசமாய் ரூமிற்க்குள் சென்றான்.
‘ஏங்க.. இவன் என்ன..? இப்பல்லாம் தேவையில்லாததுக்கெல்லாம் கோபப்படுறான்..?” என சுமதி இராமுவிடம் வருத்தப்படவும்..
‘அடியேய்.. அவன் போன்.. அவன் பாக்கட்லதான் இருந்தது.. நந்தினி போன் செய்ததும் லைட் எறிஞ்சிச்சே.. நீ அதை கவனிக்கலயா..?” என இராமு சிரிக்க..
‘ஆங்..” என சுமதி வாயை பிளக்க.. ‘மண்டு… வா கொஞ்ச நேரம் வெளில உக்காரலாம்..” என மனைவியை அழைத்துப்போனார்.
உள்ளே வந்ததும் ஆவேசமாய் நந்தினியை அணைத்தவன்.. ‘என்ன..? பார்க்க கூட மாட்ற..?” என குழைந்து.. அவளை வாசம் பிடித்தான்.
‘ப்ச்.. விடு.. அத்தை மாமா தப்பா நினைப்பாங்க..” என அவள் தவிக்க..
‘ம்கூம்..” என்றபடி அவளை கட்டிலில் சரித்து.. ‘கண்ணைத் திறடி..” என்க..
[the_ad id=”6605″]
‘போ..” என அழகாய் சினுங்கினாள்.
‘இப்போ நீ கண்ணைத் திறக்கிறியா..? இல்ல.. நான் கதவை மூடவா..?” என சிரித்தபடியே வில்லங்கமாய் மாறன் சொல்ல..
கண்திறந்தவள்.. வேறெங்கோ பார்த்து.. ‘என்…ன்ன..?” என்றாள் ராகமாக..
தன் முகம் பார்க்க வைக்க.. ‘அத்தைக்கு போன் செய்தியா..?” என்றான்.
பிறகுதான் மாறனை பார்த்தவள்.. ‘அச்சோ.. நான் மறந்தே போய்ட்டேன்..” என பதறி எழ..
‘இரு.. இரு..” என அவளை அமைதிப்படுத்தியவன்.. ‘உன்னை யாரு சுடிதார் போட சொன்னது..?” என கேட்டுக்கொண்டே கதவை தாழிட்டான்.
‘எனக்கு பிடிச்சிருந்தது நான் போட்டேன்..” என்றாள்.
‘எனக்கு பிடிக்கல கழட்டிட்டு சாரி போடு..” என மாறன் சொல்ல..
‘வீட்ல வேலை செய்யிறதுக்கு சாரியை விட சுடிதார்தான் பெஸ்ட்.. புல்லா கவர் ஆகும்..” என்றாள்.
‘அதனாலதான் சுடிதாரை எனக்கு பிடிக்கலைன்னு சொன்னேன்.. கழட்டு..” என சொல்லிக்கொண்டே.. சுடிதாரின் பின்னிருந்த முடிச்சை அவிழ்க்க..
‘வேணாம்.. விடு..” என நந்தினி மாறனை மறுக்க..
‘என்னோட ஒன்றரை வருசக் காதல்ல.. என்னைக்காவது உன்கிட்ட நான் கன்னியம் தவறியிருக்கிறேனா..?” என்றான்.
இல்லை என்பதாய் அவள் தலையசைக்க.. ‘என்னோட கன்னியமான காதலுக்காக நீ எதாவது கொடு..” என்றான் உரிமையாய்.
‘எல்லாம் கொடுத்தாச்சி.. கொடுத்தாச்சி.. விடு..” என நந்தினி திமிற..
‘நீ ஒன்னுமே கொடுக்கல.. நானா கொஞ்சமா எடுத்தேன்.. அதுவும் இருட்டுல ஒன்னுமே தெரியலை..” என மாறன் ஏக்கத்தோடு சொல்லிக்கொண்டே அவளின் சுடிதாரை அகற்ற முயல..
‘ப்ளீஸ் விடு.. நைட் பார்த்துக்கலாம்.. இப்போ ரொம்ப நேரம் இங்கே இருந்தேன்னா.. அத்தை மாமா முகத்தில முழிக்க எனக்கு சங்கடமா இருக்கும்..” என அவள் கெஞ்ச..
‘அவங்க ஒன்னும் நினைக்கமாட்டாங்க..” என பதிலளித்தவன்.. அதன்பின் அவளின் கெஞ்சலுக்கெல்லாம் இளமாறன் இளகவும் இல்லை.. பதிலளிக்கவும் இல்லை.. நேரம் செல்ல செல்ல.. அவனின் செயலால்.. மெல்ல மெல்ல அவளும் அவன் வசப்பட.. அவனின் தேவையை முழுமையாய் நிறைவேற்றியே அவளை விடுவித்தான்.
‘தடிமாடு.. தடிமாடு.. ஆளும் முகரையையும் பார்.. நேரம் காலம் தெரியவேணாம்..? இப்போ உடனே வேற டிரெஸ்சோட வெளில போனா.. அத்தை என்ன நினைப்பாங்க..? உனக்கென்ன..? நீ பாட்டுக்கு ஒன்னும் தெரியாதவனாட்டம் இருந்திடுவ.. எனக்குத்தான் அசிங்கம்..” என திட்டிக்கொண்டே குளித்துக்கொண்டிருந்தாள்.
நந்தினி வெளியே வரவும்.. அவளைப் பார்த்து சிரித்தவன்.. பாத்ரூமினுள் நுழைந்தான். நந்தினியின் போன் அடிக்கவும்..
‘அம்மும்மா..” என்றாள்.
‘சாப்டியா நந்து..? என்ன சமைச்ச..?” என்றார் அமுதா.
‘நான் எழறதுக்குள்ள அத்தை.. தக்காளி சாம்பார் வச்சி.. காரசட்னியும் செய்திட்டாங்கம்மா.. நான் தோசை மட்டும்தான் ஊத்தினேன்..” என நந்தினி வருத்தத்தோடு சொல்ல..
‘சரி பரவாயில்லை விடு..” என அமுதா இலகுவாய் சொல்லவும்..
‘அம்மும்மா.. நீங்க திட்டுவிங்கன்னு நான் நினைச்சேன்.. நீங்க என்னடான்னா இப்படி பட்டுன்னு பராவயில்லைன்னு சொல்லிட்டிங்க..?” என நந்தினி ஆச்சர்யப்பட..
‘அதொன்னுமில்ல நந்து.. நீதான் லேட்டா எழுந்திட்டேன்னு பீல் பண்ணிட்டல்ல..? இனி நீயே சீக்கிரம் எழுந்துக்குவ.. என் நந்து குட்டியைப் பத்தி எனக்கு தெரியாதா..?” என்று தன் மகளின் குரலிலேயே அவளின் வாழ்க்கை சரியாகிவிட்டது என்ற சந்தோசத்தில் அமுதா கனிவோடு சொல்ல..
‘ஆமாம் அம்மும்மா.. நானும் அதுதான் நினைச்சேன்.. இனி சீக்கிரம் எழுந்துக்குவேன்.. நீங்க கூழ் சாப்டிங்களா..? மதியத்துக்கு தயிர் போட்டுட்டிங்களா..?” என கேட்க..
‘ம்ம்.. எல்லாம் ஆச்சு.. மாப்பிள்ளை சாப்டாச்சா..?” என கேட்கவும்தான் நந்தினிக்கு மாறன் சாப்பிடவில்லை என்ற நியாபகம் வரவும்..
‘இல்லம்மா.. அவரும் லேட்டாதான் எழுந்தார்.. இனிதான் அவருக்கு தோசை ஊத்தனும்..” என்றாள்.
‘சரி நந்து.. நீ அங்க பாரு.. நான் அப்புறம் கூப்பிடறேன்..” என கட் செய்தார்.
பாத்ரூம் அருகில் நின்றவள்.. ‘சீக்கிரம் வா.. எனக்கு பசிக்குது.. நான் போய் தோசை ஊத்தறேன்..” என சொல்லி கிச்சனுக்கு வந்தாள்.
மாறன் வர.. இருவரும் சாப்பிட்டதும்.. தட்டை எடுத்துக்கொண்டு கிச்சனுக்குள் சென்றவள்.. அரைமணி நேரமாகியும் வராமல் இருக்கவும்..
உள்ளே சென்றவன்.. அவள் வெங்காயம் உரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து.. ‘இப்போதானே சாப்பிட்டோம்…? மறுபடியும் என்ன பண்ற..?” என்றான்.
‘நாம இப்போதான் சாப்பிட்டோம்.. ஆனா அத்தை காலைல எட்டரைக்கே சாப்டுட்டாங்க.. இப்போ மணி பனிரெண்டாகுது.. காலைலயே மதியத்துக்கு காளான் பிரியாணி செய்துதரேன்னு அவங்ககிட்ட சொல்லியிருந்தேன்.. சமைச்சி ஹாட் பாக்சில போட்டு வச்சிட்டா.. பசிக்கும் போது சாப்டுக்குவாங்கல்ல..? அதான் சமைக்க ஆரம்பிச்சிட்டேன்..” என்றாள்.
சந்தோசமாக உணர்ந்தவன்.. ’எதாவது ஹெல்ப் வேணுமா..?”
‘இங்க நிக்காம நீ கொஞ்சம் கிளம்பினின்னா.. அதுவே பெரிய ஹெல்ப்தான்..” \
[the_ad id=”6605″]
சிரித்தவன்.. ‘சரி.. நான் போய்.. கொஞ்சம் அபிசியல் வொர்க் பார்க்குறேன்..” எனசொல்லி தனது லேப்டாப்பை எடுத்து வந்து ஹாலில் உக்கார்ந்தான். இருவருக்கும் இன்பமாகவே சென்றது அடுத்தடுத்த நாட்களும்..
திங்கட்கிழமை அதிகாலையிலேயே எழுந்தவள்.. காலை டிபன் மதியத்திற்கு குழம்பு.. பொரியல்.. ரசம்.. என செய்து முடித்து.. சுமதியிடம் சென்று..
‘அத்தை.. மதியத்துக்கு சாப்பாடு மட்டும் சூடா வச்சிக்கிறிங்களா..?” என கேட்க..
‘இங்க எல்லாருமே.. எப்படின்னாலும் சாப்டுக்குவோம் நந்தினி.. சூடா இருக்கனும்னு இல்ல.. இப்படி நேரத்துக்கு ஒன்னொன்னா சமைச்சிட்டு கஷ்ட்டப்படாத..” என்றார் சுமதி.
‘துணி.. மிசின் ல போட்டுடறோம்.. மாமா வீட்டை சுத்தம் செய்துடறாரு.. சமையல் மட்டும்தான நான் பார்க்குறேன்.. இதுல ஒரு கஷ்ட்டமும் இல்லங்கத்தை.. இப்போ டைம் ஆச்சு.. இன்னைக்கு மட்டும் மதியத்துக்கு சாப்பாடு வச்சிடுங்க.. நாளைல இருந்து காலைலயே சாப்பாடும் சேர்த்தே செஞ்சிடுறேன்.. எனக்கும் மதியத்துக்கு டிபன் சாப்பிடனும்னா கொஞ்சம் கஷ்டம்தான்..” என சொல்லி தனதறைக்குள் சென்று.. அவசர அவசரமாக ரெடியாகிக் கொண்டிருந்தாள் பள்ளிக்கு.
‘ஏழரை மணிதான ஆகுது..? பொறுமையாவே கிளம்பு.. நான் ஸ்கூல்ல வந்து விட்டுட்டு வரேன்..” என்றான்.
‘ஆமாம்ல..? நீ வெட்டியாத்தான இருக்க.. அப்போ பொறுமையாவே கிளம்பலாம்..” என நந்தினி நக்கலாய் சொல்ல..
‘மாறா..” என்று.. இராமுவின் குரல் பதட்டமாய் ஒலிக்க..
‘என்னப்பா..?” என பதறி மாறன் வெளியே வர.. அங்கு முதல் லாரியில் வீட்டிற்கு தேவையான எவர்சில்வர் பித்தளை பாத்திரங்களும்.. இரண்டாவது லாரியில்.. பிரிட்ஜ்.. வாசிங்மிசின்.. ஏ.சி. சோபாசெட்.. பீரோ.. கட்டில்.. மற்றும் வீட்டிற்கு தேவையான எலக்ட்ரானிக் பொருள்கள்.. மற்றொன்றில்.. வெள்ளிப்பாத்திரங்கள்.. நகைகள்.. நந்தினிக்கு தேவையான ஆடைகள்.. என இரண்டு பெரிய அட்டை பெட்டிகளோடு.. வரிசை கட்டி நின்றிருந்தது.
‘குமார்.. என்ன இது..?” என மாறன் கேட்க..
‘அண்ணா.. சின்னைய்யாதான் இதை அனுப்பி வச்சார். அவர் மகளுக்கான சீர்வரிசையாம்..” என பெருமையோடு குமார் சொல்ல..
அதற்குள் லாரியில் இருந்த பொருள்கைளை எடுத்து இரண்டு பேர் கீழே வைத்துக்கொண்டிருக்க.. ‘டேய்.. நிறுத்து.. முதல்ல நீ கீழ வச்சதை எல்லாம் எடுத்து லாரிலயே வை..” என மாறன் மிரட்ட.. அவ்விருவரும் செய்வதறியாது திகைத்து நிற்க..
‘குமார்.. என் கோபத்துக்கு வீணா நீ ஆளாய்டாத.. முதல்ல வண்டியை எடுத்திட்டு கிளம்பு..” என மாறன் கோபத்தோடு சொல்ல..
‘ண்ணா.. சின்னைய்யாவை மீறி.. என்னால..” என குமார் தடுமாறும் போதே…
மாறன் ராஜனுக்கு போன் செய்தான். ராஜன் எடுக்கவில்லை. தேவிக்கு அழைத்தான்.. ‘என்ன மாறா..?” என்ற தேவியின் குரல்.. எப்பொழுதும் போல் பாசத்தோடு ஒலிக்க.. அவரிடம் தன் கோபத்தை காட்ட முடியாமல்..
‘ராஜய்யா என்ன பண்றார்..? நான் போன் செய்தேன்.. அவர் எடுக்கல.. ராஜய்யாகிட்ட கொடுங்க தேவிம்மா..” என்றான் பொறுமையை இழுத்துப்பிடித்து.
‘அவர் கார் ஓட்டிட்டிருக்கார்.. நாங்க இப்ப உங்க வீட்டுக்குத்தான் வந்திட்டிருக்கோம்..” என்று தேவி சொல்ல.. போனை கட்செய்தவன்..
ராஜன் வருகையை எதிர்பார்த்து.. கிட்ட தட்ட அரை மணிநேரமாக.. அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.
ராஜன் காரிலிருந்து இறங்க.. தேவியோடு சேர்த்து.. லாவன்யா.. மனோஜும் இறங்க.. இவர்களை எதிர்ப்பார்க்காத மாறன்.. குழந்தைகள் முன் எதை பேச..? என திகைத்து நின்றான்.
பள்ளிக்கு செல்ல ரெடியாகி.. வெளியே வந்த நந்தினி.. முதலில் அதிர்ந்தாலும்.. தாள முடியாத கோபத்தை உள்ளடக்கி.. சுட்டெரிக்கும் பார்வை பார்த்தாள் ராஜனை.