ஒரு முடிவின் துவக்கம்..
அத்தியாயம் — 18
‘உள்ள வாங்க சின்னைய்யா.. வாங்கம்மா..” என இராமு வரவேற்றார். ராஜன் மாறனைப் பார்க்கவும்.. மனோ.. லாவன்யா முன் எதுவும் பேசமுடியாதனாய்..
‘நீ ஸ்கூல் போகலயா மனோஜ்..?” என்றான்.
‘இன்னைக்கு முக்கியமான சாங்கியமாம் மாமா.. எங்கக்காக்கு முறை செய்யனுமாம்.. எங்கப்பாக்கடுத்த ஆம்பிளை வாரிசு நான்தானாம்.. இந்த முறையெல்லாம் தெரிஞ்சிக்கனுமாம்.. அதனால அப்பா லீவ் போட சொல்லிட்டார்..” என மனோஜ் சொல்ல..
லாவன்யாவை பார்த்த மாறன்.. ‘ப்ளஸ் டூ படிச்சிட்டிருக்க.. நீ லீவ் போட்டா.. ஸ்கூல்ல திட்டமாட்டாங்களா லாவன்யா..?” என்றான்.
‘அதெல்லாம் நாங்க பார்த்துக்குவோம்.. இப்போதான் உன் வீட்டுக்கு பர்ஸ்ட் டைமா வரேன்.. உள்ள கூப்பிடமாட்டியா..?” என அதிகாரமாய் கேட்டாள் லாவன்யா.
குழந்தைகளிடமும் தெளிவாக புரியவைத்துதான் இங்கு அழைத்து வந்திருக்கிறார் எனப் புரிந்த மாறன்.. ‘உள்ள வாங்க..” என்றான் பொதுவாக.
லாவன்யாவும்.. மனோவும் உள்ளே செல்லவும்.. ‘குமார்.. அந்த ஜாமனெல்லாம் இறக்குடா..” என்றார் ராஜன்.
அடுத்த நொடியே.. ‘ஒரு சின்ன பொருள் கூட வண்டியில இருந்து கீழ வரக்கூடாது குமார்..” என்று மிரட்டலாய் வெளிவந்தது மாறனின் பதில்குரல்.
‘மாறா..” என கோபமாய் ராஜன் குரலுயர்த்த..
‘யாரைக் கேட்டு இதெல்லாம் பண்றிங்க..?” என்றான் அழுத்தத்தோடு.
‘என் பொண்ணுக்கு செய்யிறதுக்கு நான் யாரைக் கேக்கனும்..?” என்றார் கர்ஜனையாக.
‘என்னைக் கேக்கனும் ராஜய்யா..” என்றான் திமிறாக.
‘மாறா.. என்ன பேச்சிது..?” என இடைமறித்த இராமு.. ‘சின்னைய்யா.. முதல்ல உள்ள வாங்க.. எதுன்னாலும் உக்கார்ந்து பேசிக்கலாம்..” என்று பணிவாக சொல்ல..
ராஜன் அங்கு அமைதியாய் நின்றிருந்த தன் மகளைப் பார்க்க.. ராஜனின் பார்வையை தவிர்த்தவள்.. மாறனிடம் வந்து ‘எனக்கு டைம் ஆச்சு..” என மெல்லிய குரலில் சொன்னாள்.
‘போலாம்.. போலாம்.. டைம் எட்டுதான் தான ஆகுது..? லாவிக்கும்.. மனோக்கும் எதாவது சாப்பிட கொடு..” என்றான் பொறுமையாக.
நந்தினி அமைதியாகவே நிற்கவும்.. ‘நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க.. வீடு தேடி வந்தவங்களை அவமதிக்கலாமா..?” என மாறன் எடுத்துரைக்க..
நந்தினிக்கு கண்களில் நீர் கோர்த்தது.. ஆனால் உடல் அசையவில்லை.. ராஜன் மீதுள்ள கோபத்தில் திருமணத்தன்று தாம் செய்ததுபோல்.. இன்றும் எதாவது செய்திடுவோமோ என அவள்மீதே அவளுக்கு பயம்.. எனவே கோபம் வந்தபோதும் முயன்று அமைதிகாத்தாள்.
‘அவங்க சின்ன பசங்க.. அவங்க என்ன பண்ணுவாங்க..? நான்தான் சொல்றேன்ல ராஜி..?” என்று மாறன் குரலுயர்த்த..
[the_ad id=”6605″]
‘மத்தவங்களுக்கு நான் தப்பானவளாவே இருந்திட்டுபோறேன்.. என் அம்மும்மாக்கும்.. நம்ம குடும்பத்துக்கும் மட்டும் நான் நல்லவளா இருந்தா போதும்..” என கண்ணீரோடே சொல்ல..
‘நீ அழாத நந்தினி எல்லாம் மாறன் பார்த்துக்குவான்..” என தன் மருமகளுக்கு தைரியம் சொல்லி உள்ளே அழைத்து வந்தவர்.. ‘நீ அமைதியா உக்காரு.. இவங்களை நான் பார்த்துக்கிறேன்..” என்று..
லாவன்யா.. மனோவிற்கு தண்ணீர் கொடுத்து.. ‘டிபன் சாப்பிடுறிங்களா கண்ணு..?” என வாஞ்சையாய் சுமதி கேட்க..
‘வேணாம் நாங்க இப்போதான் சாப்பிட்டோம்..” என்றாள் லாவன்யா.
‘உள்ளே வாங்க..” என தேவியை அழைத்தார் சுமதி.
நந்தினி உள்ளே சென்றதும்.. ‘இதெல்லாம் எதிர்பார்த்துதான் நான் உங்க பொண்ணை கல்யாணம் செய்திருக்கேனா..?” என காட்டமாக கேட்டான் மாறன்.
‘என் பொண்ணை கல்யாணம் செய்துகிட்டா.. நீ பெரிய இவனாய்டுவியா..? உன்கிட்ட பர்மிசன் வாங்கிட்டுத்தான் என் பொண்ணுக்கு நான் எதுன்னாலும் செய்யனுமா…? இல்ல இதெல்லாம் வாங்கிக்கோன்னு உன் காலைப்பிடிச்சிகிட்டு கெஞ்சனுமா..?” என ராஜனும் பதிலுக்கு கத்த..
அச்சோ என நினைத்து தன்தலைமீது கைவைத்தவன்.. ‘ராஜய்யா.. இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா உங்களைப் பத்தி ராஜிக்கு புரிய வச்சிட்டிருக்கேன்.. அவளுக்கும் உங்கமேல இருக்கிற கோபம் குறைய ஆரம்பிச்சிருக்கு.. இன்னும் கொஞ்சநாள் பொறுத்திருந்தா அவளே தானாவந்து உங்ககிட்ட பேசியிருப்பா..
ராஜி இடத்தில இருந்து கொஞ்சம் கூட யோசிக்கவேமாட்டிங்களா..? பொறுமைங்கிறதே உங்களுக்கு கொஞ்சம் கூட கிடையாது.. எப்பப்பாரு எல்லாத்திலயும் அவசரம் காட்டினா நான் என்னதான் பண்றது..?” என மீண்டும் கோபமாகவே மாறனும் கேட்க.. இருவரும் மாறி..மாறி வெளியில் நின்றபடியே வாக்கு வாதம் செய்துகொண்டிருந்தனர்.
‘மாறா.. நீ உள்ள வந்தா அவரும் வந்திடுவார்.. வா மாறா..” என தேவி அழைக்கவும்.. அப்பொழுதுதான் சுற்றிலும் பார்த்தான் மாறன். குழந்தைகளை பள்ளிக்கு விடச்செல்லும் பெற்றோர்.. வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் இவர்களின் வீட்டைப் பார்த்தபடியே மெதுவாக நடைபோட்டுக் கொண்டிருக்க.. ‘உள்ள வாங்க ராஜய்யா..” என கெஞ்சலாய் சொல்ல.. ராஜன் உள்ளே வர தானும் வந்தான்.
பத்து நிமிடம் வரை.. அனைவரும் அமைதியாய் நின்றிருந்தனர்.
‘இன்னைக்கு ஸ்கூலுக்கு லீவ் போடும்மா..” என ராஜன் நந்தினியைப் பார்த்து தன்மையாக சொல்ல.. வெடுக்கென முகம் திருப்பியவள்..
‘நான் நடந்து போய்க்கிறேன்..” என மாறனிடம் கோபமாக சொல்லி கிளம்ப பார்க்கவும்.. அவளின் கைபிடித்து தனதறைக்குள் அழைத்துச் சென்றான்.
உள்ளே சென்றதுதான்.. ‘எனக்கு செய்ய என் அம்மும்மா இருக்காங்க.. இவங்க யாரு எனக்கு செய்யிறதுக்கு..?” என கோபத்தில் வெளியில் இருப்பவர்களுக்கும் கேட்கும் படி சத்தமாகவே ஆத்திரத்தில் கத்த..
‘அவங்க கொடுத்ததும்.. நான் வாங்கிட்டேனா..? தயவுசெய்து அழாதடி..” என கெஞ்ச.. மாறனை கட்டிக்கொண்டு மேலும் அழுதாள்.
‘ப்ச்.. சொல்றேன்ல..?” என மாறன் அவளை சமாதானம் செய்துகொண்டிருக்க..
‘மாறா.. நான் உள்ளே வரலாமா..?” என ராஜனின் குரல் கேட்கவும்.. மாறனிடமிருந்து விலகியவள்.. சுவற்றோரம் முகம் திருப்பி நின்றுகொண்டாள்.
‘வாங்க ராஜய்யா..” என மாறன் குரல்கொடுக்க..
உள்ளே வந்தவர்.. நந்தினியையே பார்த்திருந்தார். தம் அரவணைப்பிலும் அன்பிலும் கரைந்து.. எப்படி செல்லமாய் வளரவேண்டிய தன் வீட்டு இளவரசி.. இன்று தன் முகத்தை கூட காணபிடிக்காமல் எப்படி அழுகிறாள்..? என வேதனையாய் பார்த்திருந்தார்.
பதினைந்து நிமிடம் போல் தன் மகளையே பார்த்திருந்தவர்.. ‘நந்துமா.. உங்கம்மாவை கைவிடனும்னு நான் நினைச்சதே இல்லடா.. கல்யாணம் செய்துக்கனும்ங்கிற எண்ணத்தோடதான் அவளோட வாழ்ந்தேன்.. ஆனா.. அவளுக்குதான் என்மேல நம்பிக்கையில்லாம போய்டுச்சி.. எங்கப்பாக்கு பயந்து என்கிட்டயும் சொல்லாம.. எங்க போறேன்ற உண்மையை கூட யார்கிட்டயும் சொல்லாம போய்ட்டா..” என்றார் கமறிய குரலில். நந்தினியிடம் பதிலில்லாமல் போக..
மெல்ல நந்தினியின் அருகில் வந்து.. ‘எது எப்படின்னாலும்.. என்னால பாதிச்சது அமுதாதான்.. நான் அதை ஒத்துக்கிறேன்.. ஆனா என்னை நம்பி என்னோட குடும்பம் நடத்தினவ.. யார் மிரட்டினாலும் என்கிட்டதான சொல்லனும்.. அதைவிட்டு சொல்லாம கொள்ளாம ஊரைவிட்டு போலாமா..?” என கேட்டு தன்நிலையையும் புரிய வைக்கும் நோக்கோடு நந்தினியின் முகம் பார்க்கவும்..
‘சரி.. நீங்க எந்த தப்பும் பண்ணல.. உங்கமேல ஒரு குற்றமும் சொல்லமாட்டேன்.. அதுக்காக நீங்க கொடுக்கிறதெல்லாம் வாங்கிக்கனும்ங்கிற அவசியம் எனக்கு கிடையாது.. எனக்கு தேவையானதை செய்யிறதுக்கு என் அம்மும்மாவும் என் புருசனும் இருக்காங்க.. நீங்க கிளம்பலாம்..” என்றாள் முடிவாக.
மகளின் பேச்சில் கோபம் வரவும்.. ‘உங்கம்மா எடுத்த முடிவு தப்பான முடிவு ராஜநந்தினி.. அதை அப்படியே விட என்னால முடியாது.. அதை சரிசெய்ய வேண்டிய கடமை உங்கப்பாவான எனக்கிருக்கு.. நீ என் பொண்ணு.. என் ரத்தம்.. நான் கொடுக்கிறதை நீ வாங்கித்தான் ஆகனும் ரா..ஜ..நந்தினி..” என்றார் கர்ஜனையாக.
ராஜன் உரிமையாய் ராஜநந்தினி.. என அழைத்ததில் கோபம் தலைக்கேறினாலும்..
‘சரி.. நீங்க சொல்றமாதிரி எங்கம்மா எடுத்த முடிவு தப்பானதாவே இருக்கட்டும்.. ஆனா.. அதை சரிசெய்யிறதுக்கு உங்களுக்கென்ன தகுதியிருக்;கு..? எங்கம்மா மாதிரியான வாழ்க்கையையா நீங்க வாழ்ந்திட்டிருக்கிங்க..? இல்லல்ல..? உங்களுக்குன்னு பொண்டாட்டி புள்ளைங்க இருக்காங்கல்ல..? உங்களுக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சிகிட்டிங்க தான..? போய் அவங்களுக்கு செய்ங்க எல்லாம்..‚” என்றாள் அழுத்தமாக.
பதில் பேச முடியாமல் ராஜன் திகைத்து நிற்க.. வெளியில் நின்று இவர்கள் பேசியதை கேட்டிருந்த தேவி உள்ளே வந்தார். மீண்டும் சுவற்றுப்புறம் திரும்பி நின்றாள் நந்தினி.
[the_ad id=”6605″]
நந்தினியருகே சென்று.. ‘இவரை நான் கல்யாணம் செய்து இருபது வருசம் ஆகப்போகுது.. இவர் வாழ்க்கையில என்னைத்தவிர வேற யாரும் இல்லன்னு நினைச்சித்தான் இவ்ளோ நாளா வாழ்ந்திட்டிருந்தேன்.. இத்தனை வருசத்துக்கப்புறம் ஒரு பொண்டாட்டியா உங்கம்மா விசயம் எனக்கு எப்படியிருக்கும்னு.. என் இடத்தில இருந்தும் கொஞ்சம் யோசிச்சி பார் நந்தினி..” என தேவி சொல்ல..
தேவியின் முகம் பார்த்தாள் நந்தினி. பரிதாபமான பார்வை பார்த்தாள். ஆனால் சில நொடிகள்தான்.. மீண்டும் முகம் திருப்பியவள்..
‘உங்க புருசனுக்கு எங்கம்மா ஒரு கடந்தகாலம்.. அவ்ளோதான்..‚ இப்பவும் உங்களுக்கு எதாவதுன்னா பக்கபலமா உங்க புருசன் பக்கத்தில இருக்கார்..” என்று கத்தியவள்.. ‘எங்கம்மாக்கு..?” என்றாள் வேதனை நிறைந்த குரலில்.
‘நானும் என் புருசனுக்காகவோ.. இல்ல உனக்காகவோ இங்க வரல.. உங்கம்மாக்காகத்தான் வந்தேன்..” என தேவி சொல்ல.. ஆச்சர்யமாய் தேவியை பார்த்தாள்.
‘உன் கல்யாணத்தப்ப.. எனக்கு உங்கம்மா விசயம் தெரியவரும்போது.. எல்லாப் பொண்ணுங்களுக்கும் மாதிரிதான் எனக்கும் தலைல இடிவிழுந்த மாதிரி.. என்னால தாங்கிக்கவே முடியல.. வீட்டுக்கு போனதுக்கப்புறமும் என்ன நடந்ததுன்னு தெரியல… அடுத்த நாள் கண்முழிச்சி பார்த்தா ஹாஸ்பிட்டல்ல இருந்தேன்..
நான் கண்முழிச்ச ஒருமணிநேத்துல.. உங்கம்மா என்னை பார்க்க வந்தாங்க..” என தேவி சொல்லவும்.. நம்பாத பார்வை பார்த்தாள் நந்தினி.
‘உன்ன மாதிரிதான் என்னாலயும் நம்ப முடியல.. உங்கம்மா என்னை பார்க்க வந்ததும் எனக்கு பிடிக்கல.. அவங்ககிட்ட பேசவும் பிடிக்கல.. இவருக்காக அமைதியா இருந்தேன்.
உங்கம்மா என்கிட்ட.. அத்தனை பேர் முன்னாடியும் நந்தினியை என்பொண்ணுன்னு சொல்லிட்டாரே.. சொத்துல பங்கு கேட்ருவாங்களோன்னு பயந்துக்காதிங்க.. எனக்கு தேவையானதை நான் சம்பாதிக்கிறேன்.. என் பொண்ணுக்கும் கவர்ன்மென்ட் வேலையிருக்கு.. யாரைநம்பியும் நாங்க இல்லன்னு சொன்னாங்க.. அப்பவே எனக்கு ஒரு மாதிரி சங்கடமாய்டுச்சி..
உன் கல்யாணத்தன்னைக்கு அவர் உங்கம்மா கழுத்தில போட்டுவிட்ட நகையையும் கழட்டி என்கிட்ட கொடுத்திட்டாங்க.. அந்த செயினை கழுத்தில போடுன்னு இவரும் உங்கம்மாகிட்ட சொன்னாரு..
உங்கம்மா.. என்னை அதிகாரம் பண்றதுக்கும் மிரட்டுறதுக்கும் யாருக்கும் உரிமையில்லன்னு திரும்பவும் செயினை என்கிட்டயே கொடுத்திட்டு..
நான் யார் வாழ்க்கையையும் பங்குபோட வரல.. இதுவரைக்கும் உங்க வாழ்க்கையில நான் எப்படி இல்லையோ.. அதே மாதிரிதான் இனிமேலும்னு சொன்னாங்க.. இத்தனை வருசத்துக்கப்புறம் அமுதான்னு ஒருத்தி வந்தா.. அவ வந்ததுக்கப்புறம்தான் இவங்க குடும்பம் இப்படி ஆகிடுச்சின்னு.. எனக்கு கெட்ட பேர் வாங்கி தந்துடாதிங்க.. எப்பவும் போல நீங்களும் சந்தோசமா இருந்து.. என்னையும் நிம்மதியா வாழவிடுங்கன்னு அழுதேட்டாங்க..
அதுக்கப்புறம்;தான்.. நான் உங்கம்மா இடத்தில இருந்து யோசிக்க ஆரம்பிச்சேன்.. உங்கம்மா இழந்த வாழ்க்கையை யாராலும் மீட்டெடுக்க முடியாது.. யாரும் யாரோட வாழ்க்கையையும் வேணும்னு நாசமாக்கனும்னு நினைக்கல.. உங்கம்மா என்கிட்ட பேசிட்டு போனதிலயிருந்து.. உன்னை நம்ம வீட்டு பொண்ணாத்தான் நான் நினைக்கிறேன்..
கல்யாணம் செய்து கொடுக்கிற பொண்ணுக்கு.. பிறந்த வீட்டு சீரா என்ன கொடுக்கனுமோ அதைத்தான் கொடுக்குறோம்..” என்று தேவி நந்தினியின் கையைப் பற்ற..
‘நான் யாரையும் எதுவும் நினைக்கல.. இனி தப்பும் சொல்லமாட்டேன்.. என்னால புதுசா எதையும் ஏத்துக்க முடியாது.. அது சீர்வரிசைன்னாலும் சரி.. உறவுகள்ன்னாலும் சரி… எனக்கு யாரும் வேணாம்.. எதுவும் வேணாம்..
என் அம்மும்மா நிம்மதிதான் எனக்கு முக்கியம்.. அவங்களும் நீங்க போட்ட செயினை வேணாம்னுதான சொல்லிட்டாங்க..? உங்க வாழ்க்கையில வரமாட்டேன்னு சொல்லிட்டாங்கதான..? நீங்களும் எங்கம்மா விருப்பத்தை ஏத்துகிட்டிங்கதான..? அப்போ என்னை மட்டும் எதுக்கு உங்க குடும்பத்துக்குள்ள இழுக்குறிங்க..? அம்மும்மாக்கு வேணாம்ங்கிற விசயம்.. எனக்கும் தேவையில்ல..” என்றாள்.
தேவி இவ்வளவு பொறுமையாக எடுத்துரைத்தும்.. நந்தினியின் புறக்கணிப்பு கோபத்தை வரவழைக்கவும்.. தன் போனை எடுத்த ராஜன்.. ‘டேய் குமார்.. எல்லா பொருளும் வீட்டுக்குள்ள கொண்டுவாங்கடா.. என்னதான் நடக்குதுன்னு நானும் பார்க்கிறேன்..” என்றார் சவாலாக.
‘ஒன்னும் நடக்காது.. நீங்க கொடுக்கிற பொருள் இங்க இருந்தா.. நான் இந்த வீட்ல இருக்கமாட்டேன்.. என் அம்மும்மாவை கூட்டிகிட்டு சென்னைக்கே கிளம்பிடுவேன்..” என்றாள் காட்டமாக.
‘அதான..? உங்கம்மா புத்திதான உனக்கும் வரும்..? அதனாலதான கட்ன புருசன் எக்கேடு கெட்டா என்னன்னு.. அவளைமாதிரியே விட்டுட்டு போகனும்னு நினைக்கிற..?” என ராஜன் கோபமாக பேச..
‘எங்கம்மா பத்தி பேசாதிங்க..” என்று ஆத்திரமாக கத்தியவள்.. ஓ..வென அழ ஆரம்பித்தாள்.
‘ராஜய்யா.. தேவையில்லாததை பேசாதிங்க..” என ராஜனை கடிந்து..
‘ராஜி.. நீ என்னை விட்டுட்டு போகமாட்டன்னு எனக்கு தெரியும்.. உனக்கு வேணாம்னா எனக்கும் வேணாம்தான்.. அழாத..” என தேற்ற..
‘நம்ம கல்யாணத்தப்ப.. நான்தான் அந்த அமுதாவை ஊரைவிட்டு போகசொன்னேன்னு அத்தனைபேர் முன்னாடி இவங்கப்பாவே சொன்னார்தான..? அவங்கப்பாவாலதான் எங்கம்மா இந்த ஊரைவிட்டு போனாங்கன்னு தெரிஞ்சும்.. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம.. இப்ப இவரே எங்கம்மாவை எவ்ளோ அசிங்கமா பேசுறார் பார்த்தியா..? இதெல்லாம் கேட்டுட்டு நான் அமைதியா இருக்கனுமா..?” என மாறனிடம் அழுதுகொண்டே கேட்டவள்..
‘அன்னைக்கும் இவராலதான் நான் உன்னை விட்டுட்டு போகனும்னு நினைச்சேன்.. இன்னைக்கும் எங்கம்மா தவிர வேறயாரும் வேணாம்னு தப்பு தப்பாவே முடிவு செய்திடறேன்.. இவங்களைப் பத்தி பேசினேன்னா.. நானும் அம்மும்மாவும் மறுபடியும் அநாதையாகிடுவமோன்னு எனக்கு பயமா இருக்கு.. நான் என்ன பண்றதுன்னு நீயே சொல்லு..” என மாறனிடமே தஞ்சமடைய..
[the_ad id=”6605″]
நந்தினியின் மறுபடியும் அநாதையாகிடுவோம் என்ற வார்த்தை வெகுவாய் தாக்க.. ‘நான் பேசினது தப்புதான்.. என்னை மன்னிச்சிடுடா..” என ராஜன் நந்தினியிடம் மன்னிப்பு வேண்ட..
ஓய்ந்து போனவளாய் அருகிலிருந்த சேரில் அமர்ந்தவள்.. ‘நீங்க என்கிட்ட மன்னிப்பும் கேட்கவேணாம்.. எனக்கு உங்ககிட்ட இருந்து எதுவும் வேணாம்.. என்னை விட்டுடுங்களேன்..” என கெஞ்சியபடி நந்தினி அழவும்..
‘ரொம்ப வருசமா காண கிடைக்காத பொக்கிசம்.. என் உயிர் பொக்கிசம்.. இப்ப என்கையில கிடைச்சும் எப்படிடா உன்னை விடறது..?” என குரலிரங்கியவராய் ஏக்கத்தோடும் கண்ணீரோடும் கேட்க..
ராஜனின் பக்க நியாயங்களை மாறன் சொன்னதிலிருந்து.. ராஜன் மேல் இருந்த வெறுப்பு நந்தினிக்கு முன்னமே தணிந்திருக்க.. இன்று கலங்கிய கண்களோடும் ஏக்கத்தோடும் தன்னிடம் பேசும் வார்த்தைகள் உண்மைதான் என மனம் எடுத்துரைக்க.. தன்விருப்பு வெறுப்பு என அனைத்தும் துறந்து.. ராஜன் மீதான தம் அம்மாவின் காதலையும் அவர்களின் தவ வாழ்வினையும் நினைத்தவள்..
ராஜனை ஆழ்ந்து பார்த்து.. ‘இதுக்கான பதில் என் மனசுக்குள்ள இருக்கு.. ஆனா அதை உங்ககிட்ட என்னால சொல்லமுடியாது.. அது கேட்டு வாங்குற விசயமும் இல்ல.. உங்களை கெஞ்சி கேட்டுக்கிறேன்.. தயவுசெய்து என்னை கஷ்டப்படுத்தாதிங்க..” என தனதிரு கரங்களையும் கூப்பி சொல்லொன்னா வேதனையோடு சொல்ல..
மாறன் புரியாத பார்வையை பார்க்க.. தேவியின் முகம் உச்சபட்ச அதிர்வைக் காட்ட.. ராஜன் மட்டும் சட்டென தெளிவானார்.. முகமும் சூரியனாய் பிரகாசிக்க.. ‘நீ ஒன்னும் சொல்லவேணாம்டா.. எல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நான் பார்த்துக்கிறேன்..“ என சொல்லிக்கொண்டே.. நந்தினியின் தலைநீவியபடியே தன் போனை கையிலெடுத்து..
‘குமார்.. எல்லா பொருளையும் நம்ம மாந்தோப்பு பங்களால போய் பத்திரமா இறக்கிடுங்க..” என சந்தோசமாய் சொல்லி இணைப்பை துண்டித்து..
மாறனையும் கட்டித்தழுவியவர்.. ‘நான் கிளம்புறேன் மாறா..” என்று சந்தோசமாக சொல்லி.. ‘வா.. தேவி..” என தேவியின் கைபிடித்து வெளியே அழைத்து வந்தார்.
ராஜனின் பேச்சிற்கு நந்தினி அமைதியாகவே இருக்கவும்.. ராஜய்யா அவளின் தலைகோதிய போது.. இவள் எப்படி அவரின் அன்பை ஏற்றாள்..? தம்மிடம் அப்படி சண்டை போட்டவர்.. எப்படி பொருள்களையெல்லாம் அவரே எடுத்துச்செல்ல பணித்தார்..? இவர்களுக்குள் அப்படி என்னதான் நடந்தது..? என.. விடைதெரியாதவனாய் திகைத்து நின்றான் மாறன்.