ஒரு முடிவின் துவக்கம்..
அத்தியாயம் — 20
ஒருமணிநேரம் கழித்து.. டாக்டர் அலட்சிய பாவனையோடு வெளியே வரவும்..
‘வாட் இஸ் ஹிஸ் சிட்டிவேசன்..? டெல் மீ ரைட் நௌ..” என அமுதா அழுத்தமாய் கேட்க..
‘ஹி இஸ் பெட்டர் நௌ..” என சொன்ன டாக்டரின் முகம் தடுமாறுவதைபோல் உணர்ந்த அமுதா.. அவர் சென்றதும்.. அங்கிருந்த செக்கியுரிட்டி மறுப்பு சொல்ல சொல்ல.. எதையும் கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றார்.
அங்கே சிரித்து பேசிக்கொண்டிருந்த மாறனையும் ராஜனையும் பார்த்த அமுதா பத்ரகாளியாய் முறைக்க.. அமுதாவை எதிர்பார்க்காத மாறன்..
‘அத்தை.. ராஜய்யாத்தான் இப்படி பண்ணசொன்னார்.. என் போனையும் வாங்கிவச்சிகிட்டார்.” என்று தயக்கத்தோடு சொல்ல.. அங்கு டேபிளில் இருந்த ராஜனின் பைலை எடுத்து பார்த்தவர்.. என்ன…? சுகர்.. பிரசர்.. இரண்டும் லோவானதுனால வந்த மயக்கமா..? என வருந்தினாலும்.. ஆளைப்பார்த்தா நல்லா வக்கனையா திண்ணு கொழுத்துபோன உடம்புமாதிரி தெரியுது.. எப்படி லோ வானது..? என யோசித்து..
‘ஹார்ட் அட்டாக்குன்னு நினைச்சி.. வெளில தேவி குழந்தைகளெல்லாம் எப்படி அழுதிட்டிருக்காங்க.. கொஞ்சமாச்சம் அறிவிருக்கா உங்களுக்கு..?” என கோபத்தோடு கேட்க..
‘இல்லையே.. என்ன பண்ண..?” என்று பாவம்போல் ராஜன் திருப்பி கேக்க..
‘அப்போ.. மயக்கமும்..” என அமுதா சந்தேகமாய் ராஜனைப் பார்க்க..
‘அச்சோ.. மயக்கமெல்லாம் உண்மைதான் அம்மு.. நீ கட்டில்மேல நின்னுகிட்டு சேலையை கழுத்தில மாட்டிகிட்டதும்.. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல.. மாறனை கூப்பிட்டது மட்டும்தான் எனக்கு தெரியும்..” என சீரியசாக சொன்னவர்..
‘அதுக்கப்புறம் நீ முதலுதவி செஞ்சது கூட.. மயக்கம் தெளிஞ்சதும் இப்போ மாறன் சொல்லித்தான் எனக்கு தெரிஞ்சது…” என சொல்லி.. உதட்டை மடித்து சன்ன புன்னகை புரிய..
குப்பென சிவந்தது அமுதாவின் முகம்.. மருமகன் அருகிலிருக்கவும் வெளியேற எத்தணிக்க.. ‘முகத்தை சோகமா வச்சிகிட்டு போ அம்மு.. நான்தான் டாக்டர்கிட்ட பொய் சொல்ல சொன்னேன்னு தெரிஞ்சா தேவி என்னை பந்தாடிடுவா.. அப்புறம் நிஜமாவே எனக்கு நெஞ்சுவலி வந்திடும்..” என ராஜன் சிரிப்போடு சொல்ல..
எரிச்சலோடு வெளியேறிய அமுதாவின் பின்னோடே வந்த மாறன்..
[the_ad id=”6605″]
‘தேவிம்மா.. ராஜய்யா முழிச்சிகிட்டார்.. எல்லாரும் வந்து பாருங்க..” என சொல்ல..
அனைவரும் உள்ளே வரவும்.. அமுதா அங்கேயே நிற்கவும்.. ‘நீங்களும் வாங்கக்கா..” என தேவி அழைக்க.. அமுதா இறுகிய முகத்தோடு கிளம்பப்போக..
‘உங்களை அந்த நிலைல பார்த்ததுக்கப்புறம்தான் அவருக்கு நெஞ்சுவலி வந்திருக்கு.. உங்களுக்கு ஒன்னுமில்லன்னு தெரிஞ்சாதான் அவர் நிம்மதியாவார்.. வாங்கக்கா..” என கண்ணீரோடு தேவி அமுதாவின் கைப்பிடித்து அழைத்துச்சென்றார்.
அமுதாவைத் தவிர அனைவரின் முகமும் மிகுந்த கலக்கத்தில் இருப்பதை பார்த்த ராஜன்.. ‘பயப்படாத தேவி.. எனக்கு ஒன்னும் ஆகாது.. நான் செய்ய வேண்டிய கடமை இன்னும் நிறைய இருக்கு.. என் கடமையை நிறைவேத்த முடியலைன்னாதான் எனக்கு எதாவது..” என சொல்லும்போதே.. ராஜனின் வாயில் கைவைத்த தேவி..
‘ஏன் இப்படி அபசகுணமா பேசுறிங்க..? நீங்க நினைக்கிறதெல்லாம் நடக்கும்.. எதையும் மனசுல போட்டு வருத்திட்டிருக்காதிங்க..” என கண்ணீரோடே சொல்ல..
பிறகுதான் பள்ளிச்சீருடையோடிருந்த லாவண்யாவைப் பார்த்தவர்.. ‘யார் கூடடா வந்த..?” என கவலையாய் கேட்டார்.
‘நந்தினி அக்கா கூட்டிட்டு வந்தாங்கப்பா..” என சொல்ல.. நந்தினியை பாசத்தோடு ராஜன் பார்க்க.. தலைகுனிந்திருந்தாள்.
‘சரிடா.. நான் நல்லாதான் இருக்கேன்.. எல்லாரும் வீட்டுக்கு போங்க.. இந்த டிரிப்ஸ் இறங்கி முடிஞ்சதும் நான் மாறன் கூட வீட்டுக்கு வந்திடுவேன்..” என தன் பெரிய மகளும் தன்னை பார்க்க வந்திருந்த சந்தோசத்தில்.. நெகிழ்ச்சியோடு சொன்னார்.
‘நான் மாறனை நம்பி போகமாட்டேன்.. எதாவது அவசரத்துக்கு கூப்பிடுவாங்கன்னு கூட இல்லாம.. போனை எதுக்கு சுட்ச்ஆப் செய்திருக்க..?” என லாவண்யா கோபமாக மாறனைப் பார்த்து கேட்க..
‘லாவன்யா.. நீ என்னன்னாலும் அவர்கிட்ட கேட்கலாம்.. ஆனா மரியாதையோட கேக்கனும்.. மாறன் சொல்லக்கூடாது.. மாமான்னு சொல்லனும்..” என நந்தினி கட்டளையாய் சொல்ல..
‘அது.. தாத்தாவும் அப்படித்தான் சொல்லசொன்னார்.. ஆனா டக்குன்னு வரமாட்டுக்குது..” என லாவண்யா பாவம்போல் சொல்ல..
‘விடு ராஜி.. சின்னபொண்ணு அவ.. எப்படியோ சொல்லிட்டுப்போறா..” என லாவண்யாவிற்க்காக மாறன் பரிந்து பேச..
‘ஓ.. அப்போ நான் எதுவும் அவளுக்கு சொல்ல வேணாமா…? அப்படியே விட்டுடட்டுமா..?” என மாறனிடம் நந்தினி அர்த்தமாய் கேட்டு.. வெளியே போகவும்.. நந்தினியின் கையைப்பிடித்து தடுத்த லாவண்யா..
‘இல்ல இல்ல.. நீங்க எதுன்னாலும் எனக்கு சொல்லுங்க.. மாறன் பேச்சு கேக்காதிங்க..” என சொல்லி தன் நாக்கை கடித்துக்கொண்டவள்.. ‘சாரி.. மாமா பேச்சு கேக்காதிங்க.. இனிமே மாமான்னு சொல்றேன்..” என்றாள் சமத்தாக.
நந்தினி லாவண்யாவை மெச்சுதலாக பார்க்க.. ‘உங்களுக்கு எங்கமேல இருக்கிற கோபம் போய்டுச்சா..?” என லாவண்யா ஆவலோடு கேட்க..
‘எனக்கு உன்மேல எப்போ கோபம் இருந்தது..?” என நந்தினி கேட்க..
‘அப்புறம் ஏன் நாங்க அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்தப்ப.. எங்களுக்கு நீங்க தண்ணிகூட கொடுக்கல..? எல்லாரும் உள்ளபோய் ரொம்ப நேரம் சண்டை போட்டுட்டு இருந்திங்க.. அப்பா உங்களுக்காக வாங்கின எதையும் நீங்க வாங்கிக்கல.. அன்னைக்கு எனக்கு ரொம்ப பயமாய்டுச்சி..
உங்க கோபம் போய்.. நீங்களும் அமுதாம்மாவும் சந்தோசமா இருந்தாத்தான் எல்லாருக்கும் சந்தோசமாம்.. அப்பாக்கும் அதனாலதான் அடிக்கடி உடம்பு சரியில்லாம ஆகுதாம்.. இனிமே அப்பாக்கு இப்படி ஆகாதில்ல..?” என்று சாதாரணமாய் பேசிக்கொண்டிருந்தவளின் கண்களில்.. திடுமென கண்ணீர் பெருக நந்தினியும் கண்கலங்கினாள்.
[the_ad id=”6605″]
‘ஏய் லாவி.. இதுபத்தியெல்லாம் நீ யோசிக்ககூடாது.. இது பெரியவங்க விசயம்டா.. நீ படிப்புலதான் கவனம் செலுத்தனும்..” என்று மாறன் லாவண்யாவை தேற்ற..
‘என்னால படிக்கவே முடியல மாமா.. உங்க கல்யாணத்தில இருந்தே அப்பாவும் தாத்தாவும் பேசிக்கிறதில்ல.. எல்லாம் என்னாலதான்.. நான்தான் அமுதாக்கு துரோகம் செய்திட்டேன்.. என்னாலதான் உங்கக்கா யாருமில்லாத அநாதையா வளர்ந்திட்டா.. உங்கக்கா உன்கூட பேசலைன்னாலும் நீ போய் பேசு.. உங்கக்கா என்னசொன்னாலும் நீ கோபிக்காதன்னு.. தாத்தாவும் இப்பல்லாம் ரொம்ப ரொம்ப அழுதிட்டே இருக்கார்.. வீட்ல இருக்கவே பிடிக்கமாட்டுக்குது மாமா..” என்ற லாவண்யாவின் அழுகை மேலும் அதிகமாக.. மனோவும் கண்கலங்கி நின்றான்.
குழந்தைகள் முன் என்னதான் நாம் எதையும் காட்டிக்கொள்ளாமல் இருந்தாலும்.. நம்மளோட மாறுதல் அவர்களை எவ்வளவு பாதிக்கின்றது.. என யோசித்தவராய் ராஜனும் தேவியும் கலங்கினார்கள்.
குழந்தைகள் அழுவதை காணசகிக்காமல் அமுதா வெளியே போக எத்தணிக்கவும்.. ‘ஒரு நிமிசம் அமுதா..” என அழுத்தமாய் வந்த ராஜனின் குரலுக்கு.. அனைவரும் அருகிலிருப்பதால் அமுதா அடிபணிய..
‘நம்மளாலதான் எல்லா பிரச்சனையும்னு நினைச்சிகிட்டு.. எங்கையாவது கண்காணாத இடத்துக்கு போய்டலாம்.. இல்ல செத்து போய்டலாம்.. அப்படி இப்படின்னு மறுபடியும் எதாவது கிறுக்குத்தனமா செய்தன்னு வை.. லாவண்யாவும் மனோவும் நிரந்தரமா அவங்கப்பாவை இழந்திடுவாங்க..“ என்று ராஜன் சொன்ன அடுத்தநொடி.. லாவண்யாவின் அழுகை மேலும் அதிகரிக்க.. லாவண்யாவின் அழுகையைப் பார்த்து மனோவும் தேம்பித்தேம்பி அழவும்..
‘குழந்தைங்க முன்னாடி.. என்ன பேச்சு பேசுறிங்க..?” என்று அமுதா ராஜனிடம் தன் கோபத்தை காட்ட..
‘அப்படித்தாண்டி பேசுவேன்.. என் பெரிய பொண்ணை என்கண்ல கூட காட்டாம வளர்த்த கல்நெஞ்சக்காரிதான நீ..?” என கோபமாய் கேட்டவர்..
பிறகு குரலிரங்கியவராய்.. ‘பெத்த பொண்ணு மனசில அப்பாங்கிற ஸ்தானம் இல்லாம இருக்கிறதே பெரிய கொடுமை.. இதுல அம்மாவை ஏமாத்தி நிர்கதியா விட்டுட்ட பாவியா மனசில பதிஞ்சிருக்கேனே.. இதைவிட கொடுமை ஒரு தகப்பனுக்கு இருக்குமா..?” என ராஜன் கண்ணீர் வடிக்க..
ராஜனின் நிலை மாறனுக்கும் வேதனையளிக்க.. ‘ராஜய்யா.. ராஜி உங்களை புரிஞ்சிகிட்டா.. அத்தையும் ராஜிகிட்ட உங்களைப் பத்தி தப்பா சொல்லி வளர்க்கல.. திரும்ப திரும்ப அதையே பேசாதிங்க..” என்று சிறு அதட்டலோடே சொல்லி..
‘தேவிம்மா.. லாவி மனோவை கூட்டிட்டு வீட்டுக்கு கிளம்புங்க.. ராஜி.. அத்தையை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டுப்போ.. அப்பா நீங்களும் கிளம்புங்க.. நான் ராஜய்யாவோட வந்திடறேன்..” என்றான் கட்டளையாக.
‘நான் போகமாட்டேன்.. அப்பாவோடதான் இருப்பேன்..” என்று பயத்தோடே லாவன்யா பிடிவாதமாய் சொல்ல..
‘எனக்கு ஒன்னுமில்லடா.. இப்பவே ரொம்ப நேரமாச்சி.. நாளைக்கு ஸ்கூல் போகனுமில்ல..? அம்மாகூட போ லாவன்யா..” என்று ராஜன் அன்போடு சொல்ல..
அப்பொழுதும் லாவண்யா தயங்கியே நிற்க.. ‘லாவி.. தாத்தா என்னவோ ஏதோன்னு நினைச்சிட்டிருப்பார்.. அப்பா நல்லாயிருக்காருன்னு நாம போய் சொல்லலாம் வா..” என தேவி அழைக்க.. அதன்பின்தான் கிளம்பினாள் லாவண்யா.
அனைவரும் கிளம்பியிருக்க.. ‘ராஜய்யா.. லாவி ரொம்ப பயந்திட்டா.. குழந்தைங்க முன்னாடி இப்படித்தான் பேசுவிங்களா..?” என்று மாறன் சண்டையிட.
‘லாவண்யாவைப் பத்தி உனக்கு தெரியாததில்ல.. அவ்ளோ சீக்கிரம் யாரும் அவகிட்ட நெருங்கிட முடியாது.. நான் ராஜனோட பொண்ணுடாங்கிற கர்வத்தோடதான் எப்பவுமே இருப்பா.. ஆனா இப்போ நந்தினியோட பேசறது.. உன்னை மாமான்னு கூப்பிடறதுன்னு.. எனக்காக என் நிம்மதிக்காக.. சடர்னா எல்லாத்தையும் மாத்திக்கிட்டிருக்கா..
என் பெரிய பொண்ணு.. ஒரு தகப்பனா என்கிட்டயிருந்து எந்த பலனும் அனுபவிக்காம வளர்ந்தவ.. விபரம் தெரிஞ்ச நாள்ல இருந்து என்னை எதிரியாவே நினைச்சிட்டிருந்தவ.. என்மேல இருக்கிற அவளோட கோபத்தையெல்லாம் கைவிட்டுட்டு.. முதல்முறையா அவங்கம்மாவோட சந்தோசத்தை என்கிட்ட கேக்குறா..
[the_ad id=”6605″]
என் இரண்டு பொண்ணுங்களும்தான் இப்படி எனக்காக அவங்களோட சுயத்தை விட்டுட்டு இருக்காங்கன்னா.. தேவி.. என் நிம்மதிக்காக அவ வாழ்க்கையையே பங்குபோடற அளவுக்கு துணிஞ்சிட்டா..” என சொல்லும்போது.. வாரத்தில இரண்டுநாள் நீங்க வெளியூர் போறதா நான் நினைச்சிக்கிறேன் என்று.. கண்ணீரோடே தேவி சொன்னது நினைவு வரவும்.. மீண்டும் கண்கலங்கினார் ராஜன்.
‘என்ன ராஜய்யா இது..? எப்பப்பாரு அழுதிட்டு..” என கடிந்து.. ‘தேவிம்மாவே உங்களை புரிஞ்சிகிட்டாங்க.. இதுக்குமேல வேற என்னவேணும் உங்களுக்கு..? எல்லாம் சரிசெய்திடலாம்.. இனி லாவண்யா மனோ முன்னாடி நீங்க இப்படி பேசக்கூடாது..” என உரிமையாய் உபதேசித்தான்.
‘என்ன பண்றது மாறா..? அப்பான்ற உரிமைவேணாம்.. சீர்செனத்தி வேணாம்.. எங்கம்மாவோட சந்தோசத்தை திருப்பிகொடுன்னு என்பொண்ணு என்கிட்ட புதுவிதமான சீதனம் கேட்டிருக்கா.. நானும் அதை செய்யிறேன்னு வாக்கு கொடுத்திருக்கேன்..
அமுதாகிட்ட பேசப்போனா.. அவ சாகறதுக்கு போறா.. அவளை காப்பத்தறதுக்காக கதவை உடைக்கலாம்னு நான் நினைக்கும்போதே.. எப்பவும் அவ உயிரை என்னால பிடிச்சி வைக்கமுடியாதுன்ற மாதிரி.. அவ என்னை மிரட்டின மிரட்டல்ல.. நான் ஆடிப்போய்ட்டேன்.. ..
தினம்தினம் என்னை நினைச்சி நினைச்சே ஏங்கி செத்திட்டிருக்கா.. ஆனா என்கூட பேசக்கூட அவ தயாரா இல்ல.. அவளை கட்டாயப்படுத்துற தகுதியும் எனக்கில்ல.. அம்முவை சரிசெய்யறதுக்கு எனக்கு வேற வழி தெரியலையே மாறா..” என்றார் வேதனையோடு.