‘என்ன..? இப்படி தடுமாறுறிங்க.. பொண்டாட்டின்னதும் உங்களுக்கு யார் நினைப்பு வந்தது..? இப்போ புரியுதா…? உங்க பொண்டாட்டிக்கும் எனக்கும் உள்ள வித்யாசம்..” என கேட்டு தன்னைத்தானே அசிங்கப்படுத்திக் கொள்ளும்.. தன் நிலையை நொந்தபடி தலைகவிழ்ந்தார்.
முறைத்த ராஜன்.. ‘உன்னை அடிச்சிட்டனேன்ற வருத்தத்திலதான் தடுமாறினேன்.. இப்போ என்ன உன் பிரச்சனை..? தேவியோட நடந்த என் முதல் கல்யாணம்.. அதான..? ஒத்துக்கிறேன்.. நீ எனக்கு இரண்டாவது பொண்டாட்டிதான்.. தேவிதான் என் முதல்பொண்டாட்டி..” என கர்ஜனையாய் சொல்லி..
கவிழ்ந்திருந்த அமுதாவின் முகம் நிமிர்த்தி குரலிறங்கியவராய்.. ‘ஒரு பொண்ணு கழுத்தில முதல்ல தாலிகட்றது முக்கியமா..? இல்ல அவ மனசை தொடறது முக்கியமா..? தேவியை தொடறதுக்கு முன்னாடி.. மனதளலவிலயும் உடலளவிலயும்.. உன்னதாண்டி முதல்ல தொட்டேன்..” என கண்கலங்கிய ராஜன்..
அமுதாவின் முகம் பார்த்து.. ‘அப்போ இருந்து இப்போ வரைக்கும்.. உன்னை என் பொண்டாட்டியாத்தான் நினைக்கிறேன்..
ஆசைநாயகி.. அதுஇதுன்னு உன்னை நீயே அசிங்கபடுத்திக்கிட்டாலும்.. எனக்கும்தான் அந்த அசிங்கம்..” என்றார் காட்டமாக.
ஏதோ யோசனையில் அமுதா தன் கையிலிருந்த போனையே பார்த்திருக்கவும்..
‘செத்துட்டா என்ன பண்ணுவன்னு யோசிச்சிட்டிருக்கியா..? செத்தா சாவு.. உன் உயிரை பிடிச்சி வைக்க என்னால முடியாது.. நீ செத்ததும் நானும் கூடவே செத்துடுவேன்னும் சொல்லமாட்டேன்.. இத்தனை வருசம் கழிச்சி வந்தும்.. என் அம்மாவை கொன்னுட்டியேன்னு என் பெரியபொண்ணும் என்னை சபிக்கட்டும்.. உன் உயிரை காப்பாத்த முடியலைன்னாலும்.. உன் ஆத்மாவுக்காவது சாந்தி கொடுக்க முயற்ச்சி பண்றேன்..” என வெறியாய் கத்தினார் ராஜன்.
‘இப்ப மட்டும் என்ன..? பண்றதெல்லாம் பைத்தியக்காரன் வேலைதான..? இந்த வயசில கல்யாணம் செய்துக்கிட்டு..” என நினைத்து .. தனக்கு மட்டும் அளவாய் சமைத்த சாதத்தை போட்டு.. சாப்பிட அமர்ந்தார் அமுதா.
தட்டில் போட்ட சாதத்தை பார்த்து மீண்டும் கோபம் வரவும்.. ‘நடக்கத்தெரியாத குழந்தைகூட இதைவிட அதிகமா சாப்பிடும்.. இதை சாப்டுட்டு உயிர் வாழ்றதுக்கு பேசாம சாவு..” என கத்தி.. சாப்பாட்டை பிடுங்கி விசிறியடிக்க.. தலையில் கைவைத்து கண்மூடினார் அமுதா.
‘ஐயா..” என்ற குமாரின் சத்தம் கேக்க.. கடைக்காரனும் கூட வந்திருக்க.. இருவரும் பிரிட்ஜை எடுத்துக்கொண்டு உள்ளே வரவும்..
‘ஏய்.. அங்கையே நில்லு.. காலைதான சொன்னேன்..? இந்த வீட்டுப்பக்கம் இனி வரக்கூடாதுன்னு.. யாரைக்கேட்டுடா வாங்கி வந்த..? ஒழுங்கா எடுத்திட்டு ஓடிடு..” என அமுதா மிரட்ட..
ராஜன் அருகில் இருப்பதால் தற்போது குமாருக்கு அமுதாமீது பயமெல்லாம் வரவில்லை.. ஆனால் அமுதாவின் கன்னத்தில் நிலைத்திருந்தது அவனின் பார்வை.
‘நீ போ குமார்..” என ராஜன் கட்டளையிட..
குமார் எதையும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல்.. ‘நான் கிளம்பறேங்கைய்யா..” என சொல்லி ராஜனின் தலையசைப்பு கிடைத்ததும் கிளம்பிவிட்டான்.
பசிவேற கண்ணை கட்டுது.. டீ யாவது வைக்கலாம் என எண்ணி அடுப்பில் பாலை வைக்கவும்.. நம்மளைவிட இவளுக்கு ரொம்ப பசிக்கும்போல என நினைத்த ராஜன்.. தன் போனை எடுத்து..
‘மாறா.. எங்கயிருக்க..?” என்றார்.
‘இப்போதான் ராஜய்யா.. வீட்டுக்கு வந்தோம்..” என சொல்ல..
‘சரி.. வீட்ல சாப்பாடு இருந்தா எடுத்திட்டு வா.. நந்தினியை கூட்டிட்டு வராத..”
‘சரிங்க ராஜய்யா..” என்றவன்.. ‘ராஜி.. ஒரு சாப்பாடு பாக்சுல போடு.. ராஜய்யா சாப்பாடு எடுத்திட்டு வரசொல்றார்.. உங்கம்மா தயிர்சாதம் சாப்பிடறதுக்கேது கோபப்பட்டுருப்பாரா இருக்கும்.. உன்னை கூட்டிட்டு வரவேணாம்னு சொன்னார்.. நீ இங்கையே இரு நான் போய் சாப்பாடு கொடுத்திட்டு வரேன்..” என்றான்.
‘எப்படியோ.. அம்மும்மா சாப்பிட்டா சரிதான்.. அப்பாக்கும் சேர்த்தே போட்டுகொடுக்கிறேன்..” என்று ஆசையாய் போட்டு கொடுத்தனுப்பினாள்.
வெளியே கார் சத்தம் கேட்கவும்.. ராஜன் எட்டிப்பார்க்க அங்கு தேவி வந்தார்.. கூடவே குமார் ஒரு பையை எடுத்து வந்தான்.
‘குமார்.. அதை உள்ள வச்சிட்டு நீ போய் கார்ல வெய்ட்பண்ணு..” என தேவி கட்டளையிட.. அவ்வாறே செய்தான் குமார்.
அமுதாவின் கன்னத்தை பார்த்த தேவி.. ‘நம்ம சரசு புருசன் சரசை அடிச்சதுக்கு.. அவனை என்ன செய்திங்க..?” என அமைதியாய் கேட்டார். தான் அணிந்திருக்கும் பெல்ட்டால் சரசுவின் கணவனை அடித்தது நியாபகம் வர..
‘அமுதா என்ன பேசினா தெரியுமா..?” என ராஜன் ஆரம்பிக்க..
‘சரசு புருசன்கிட்ட காரணம் கேட்டிங்களா..?” என அழுத்தமாய் கேட்கவும்.. தனக்காக பேசிக்கொண்டிருக்கும் இவர்களின் உரையாடலை சகிக்கமுடியாமல்..
‘தயவுசெய்து இரண்டு பேரும் கிளம்புறிங்களா..?” என அமுதா எரிச்சலோடு சொல்ல..
அமுதாவிடம்.. ‘எனக்கிங்க ஒருவேளையும் இல்ல.. அவர் பசிதாங்க மாட்டார்..” என தேவி சொல்ல.. அதற்க்குள் மாறன் சாப்பாடோடு வந்தான்.
தேவியைப் பார்த்ததும் மீண்டும் ஏதோ பிரச்சனைபோல என நினைத்தவன்.. பிறகுதான் அமுதாவைப் பார்க்கவும்.. கண்மண் தெரியாத ஆத்திரம் வந்தது மாறனுக்கு..
[the_ad id=”6605″]
‘என்ன செய்திருக்கிங்க ராஜய்யா..?” என மாறன் ஆத்திரத்தோடு கத்தவும்..
‘சோறு போடுடின்னா.. உங்க பொண்டாட்டிகிட்ட போய் கேளுன்றா.. அப்போ நீ யாருடி எனக்குன்னா..? நான் உங்க முன்னால் ஆசைநாயகி.. இப்போ ஊரறிஞ்ச வப்பாட்டிங்கிறா.. என்னை என்ன பண்ண சொல்ற மாறா..?” என ராஜனும் கோபமாக பேசினாலும்.. முகம் அத்தனை வேதனையை காட்டியது.
‘தம்பி.. நீங்க கிளம்புங்க..” என கட்டளையாய் அமுதா சொல்லவும்..
பிடிவாதத்தோடு மாறன் நின்றிருக்க.. ‘நீங்களும் என் பேச்சை கேக்கமாட்டிங்களா..?” என கலங்கிய கண்களோடு அமுதா கேட்கவும்..
மறுபேச்சின்றி பேகோடு திரும்பிய மாறனிடம்.. ‘சாப்பாட்டை வச்சிட்டு போங்கதம்பி.. இல்லன்னா நந்தினி வருத்தப்படுவா..” என சொல்ல.. பேகை வைத்துவிட்டு வேதனையோடு மாறன் கிளம்பவும்.. தேவியும் அவ்விடம் விட்டு நகர..
‘நீ இரு தேவி…” என்று அமுதா அழுத்தத்தோடு சொல்ல.. மீண்டும் சண்டையா..? என நினைத்த மாறனின் கால்கள் அதற்குமேல் நகரவில்லை. மீண்டும் தன் அத்தையை பார்த்தான்.
‘போங்க தம்பி..” என்று அமுதா கெஞ்சலாய் சொல்லவும்..
‘நான் உங்களுக்கு எப்படியோ தெரியாது.. ஆனா நீங்க எனக்கு என் கூடபிறந்த அக்காபோல.. தம்பி தம்பின்னு நீங்க சொல்லும்போதெல்லாம் நான் உங்களை சோபி நிவியைப் போலத்தான் நினைக்கிறேன்.. நீங்களே விரும்பலைன்னாலும் உங்களுக்கொரு கஷ்டம்ன்னா.. என்னால பார்த்திட்டு சும்மா இருக்கமுடியாது..
ராஜய்யாகிட்ட நீங்க பேசினது அவருக்கு வேண்ணா தப்பா தெரியலாம்.. எனக்கு அப்படி தெரியல.. உங்க உள்ளுணர்வுகளோட வெளிப்பாடுதான் அந்த வார்ததைகள்.. ராஜய்யா உங்க வாழ்க்கையில இல்லன்னாலும் அவரை நினைச்சிக்கிட்டு வாழமுடிந்த உங்களால..
இப்போ கண்ணுமுன்னால அவர் இருந்தாலும்.. அவரை உங்களுக்கு பார்க்கக்கூட பிடிக்கல.. ஏன்னா அவர் இப்போ தேவிம்மாவோட புருசன்.. அந்த நினைப்புதான் உங்களை படுத்துது..
உங்களால அதிலயிருந்து வெளிவர முடியலைன்னாலும் பரவாயில்ல.. நீங்க ராஜய்யாவோட வாழலன்னாலும் பரவாயில்ல.. அதுக்காக உங்களை நீங்களே இப்படி அசிங்கப்படுத்திக்காதிங்க..” என மிகுந்த வருத்தத்தோடு சொல்லி.. ஒரு சகோதரனின் பாசத்தோடும் வாஞ்சையோடும்.. அமுதாவின் அடிபட்ட கன்னம் வருடியவன்..
‘உங்களை இப்படி சொல்லிக்கிட்டது ராஜிக்கு தெரிஞ்சா.. அவ மனசு என்னபாடுபடும்னு யோசிச்சிப்பாருங்க.. அவளுக்காகவாவது இனி இந்த வார்த்தை உங்க வாய்ல இருந்து வரவேக்கூடாது..” என அன்போடு கண்டித்து..
‘உங்களோட உணர்வுகளை நான் மதிக்கிறேன்.. நீங்க எப்படி வாழ்ந்தா நிம்மதியா இருப்பிங்கன்னு என்கிட்ட சொல்லுங்க.. ராஜய்யாவே எதிர்த்தாலும் பரவாயில்ல.. நான் அதை பண்றேன்.. என்னோட அக்காக்கு நிம்மதியை கூட கொடுக்க முடியலைன்னா.. அப்புறம் நான் என்ன தம்பி..?” என்றான் பிணைப்பான குரலில்.
‘தம்பி..” என உணர்ச்சிப் பெருக்கோடு மாறனின் கையைப் பிடித்துக்கொண்டு..
‘எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல.. நான் திரும்ப வேலைக்கு போகனும்.. வேலைக்கு போனா பகல்பொழுதெல்லாம் ஹாஸ்பிட்டல்ல போய்டும்.. நைட்ல அங்க சென்னை வீட்ல.. என்னால நிம்மதியா இருக்க முடியும்..
என்னை வேணாம்னு ஒதுக்கினவங்களே.. திரும்பவும் என்னை கவனிச்சிக்கிறது எனக்கு பிடிக்கல.. எனக்கு சென்னைக்கு போகனும்.. ஆனா ராஜன் அங்கயேது வந்து என்னை தொல்லை பண்ணுவாரோன்னும் பயமாயிருக்கு..” என்று அமுதா கதறியழவும்.. மாறனோடு சேர்த்து.. ராஜன் தேவியும் கண்கலங்கினர்.
‘அழாதிங்கத்தை.. எப்படி இருக்கனும்னு தோணுதோ அப்படியே இருங்க.. உங்களுக்கு வேலைக்குதான போகனும்..? போய்க்கலாம்.. ஒரே ஒருவாரம் பொறுத்திருங்க.. அதுக்குள்ள எல்லாம் ரெடி பண்ணிடறேன்..
ஆனா சென்னைக்கு மட்டும் வேண்டாம்.. உங்களாலயும் ராஜியை பார்க்காம இருக்கமுடியாது.. நீங்க பக்கத்தில இல்லன்னா ராஜியும் நிம்மதியா இருக்கமாட்டா.. ராஜிக்காக இனிமே நீங்க இங்கதான் இருந்தாகனும்.. இது ஒன்னைத்தவிர வேற எதுக்கும் நான் உங்களை கம்ப்பெல் பண்ணமாட்டேன்..” என்றான் பொறுமையாக.
[the_ad id=”6605″]
‘இங்க என்ன வேலை பார்க்குறது..? என்னால ரொம்ப கஷ்டப்பட முடியாதே..” என அமுதா தவிப்போடு சொல்லவும்..
தான் கொண்டு வந்த சாப்பாட்டை தட்டில் போட்டவன்.. ‘முதல்ல சாப்பிடுங்க.. நான் சொல்றேன்..” என தட்டை நீட்டினான்.
அமுதா சாப்பிடவும்.. ‘தேவிம்மா.. ராஜய்யாக்கு சாப்பாடு கொடுங்க..” என்றான்.
தேவி ராஜனுக்கு பரிமாற.. ‘நீ சாப்ட்டியா தேவி..?” என ராஜன் கேட்க.. ஆம் என்பதாய் தேவி தலையசைக்கவும்.. ராஜனும் சாப்பிட்டார்..
‘அத்தை.. இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க..” என மாறன் சொல்ல..
‘இல்ல தம்பி.. என்னால இவ்ளோதான் சாப்பிடமுடியும்.. ரொம்ப வருசமா அப்படியே பழகிடுச்சி..” என அமுதா இயல்பாகத்தான் சொன்னார். ஆனால்.. சிறுவயதில் அமுதா எவ்வளவு சாப்பிடுவார் எனத்தெரிந்த ராஜனின் மனம்தான் கலங்கித் தவித்தது. வெளிகாட்டாமல் முயன்று சாப்பாட்டில் கவனம் செலுத்தினார்.
‘யார்கிட்ட தம்பி வேலை கேட்டு வச்சிருக்கிங்க..?” என்றார் ஆவலாக.
‘உங்களுக்கு இருக்கிற திறமைக்கு நீங்க எதுக்குங்கத்தை அடுத்தவன்கிட்ட கைகட்டி நிக்கனும்..? நீங்களே முதலாளி ஆகப்போறிங்க..” என்றான் பெருமையோடு.
அமுதா புரியாமல் பார்க்கவும்.. ‘இரண்டு வருசத்துக்கு முன்ன ஒரு இடம் விலைக்கு வாங்கியிருந்தேன்.. அதுல ஒரு பெரிய ஹாலும்.. இரண்டு ஆபீஸ் ரூமும் கட்டியிருக்கேன்..
நம்மஊர் பசங்க கம்ப்யூட்டர் கிளாஸ்.. டைப்ரைட்டிங்க்குன்னு.. ரொம்ப தூரம் போய்தான் கத்துக்கிறாங்க.. உங்களுக்குத்தான் இதெல்லாம் தெரியுமே.. அதனால இனி நீங்க கம்ப்யூட்டர் டீச்சர்..
அதோட ப்ளஸ் டூ ல நல்ல மார்க் எடுத்த ஸ்டூடண்ஸ் கூட இங்கிலீஷ் நாளேட்ஜ் இல்லாம தடுமாறுறாங்கன்னு பலமுறை என்கிட்ட ராஜி வருத்தப்பட்டுருக்கா.. அதுமாதிரி ஸ்டூடண்ட்ஸ்க்கும் சேர்த்து ஸ்போக்கன் கிளாஸ் மாதிரியும் நடத்தலாம்..
என் அத்தைதான்.. இங்லீஷ்ல சும்மா பாரின்காரங்க மாதிரி கலக்குறிங்களே..” என்றான் பெருமையாக. அமுதாவும் சின்ன சிரிப்பு சிரித்தார்.
‘கட்டட வேலையெல்லாம் முடிஞ்சது.. உங்க பேர்ல ஒரு லைசன்ஸ் மட்டும் வாங்கிட்டா போதும்.. இப்போதைக்கு பத்து கம்ப்யூட்டர்.. பத்து டைப்ரைட்டிங் மிசின்.. கொஞ்சம் டேபிள் சேர் இதெல்லாம் வாங்கனும்.. இப்போ கார் வாங்கினதுனால என்கிட்ட பணம் இல்ல.. அதுகூட பிரச்சனையில்ல.. இப்போதைக்கு கடன் வாங்கிக்கலாம்.. ஒரு நாலஞ்சி மாசத்தில எனக்கு ஒரு அமௌன்ட் வரும்.. அப்போ திருப்பிக் கொடுத்துக்கலாம்..
கஷ்டப்படுற குழந்தைகளுக்கு கல்வியறிவு கொடுத்த மாதிரி இருக்கும்.. உங்களுக்கும் நிம்மதி கிடைக்கும்..” என்றான்.
‘தம்பி.. என்னை நம்பி பெருசா எதுவும் ஆரம்பிக்காதிங்க.. நந்துக்கு குழந்தை பிறக்கிற வரைக்கும்தான் நான் வேலைபார்ப்பேன்.. அதுக்கப்புறம் நான்..” என தடுமாறியவர்.. தன்னை நிலைப்படுத்தி..
‘எனக்கு.. என்.. பேரக்குழந்தையோட.. என்.. டைம்.. எனக்கு.. சரியாய்டும்..” என்று ஏதோபோலும்.. திக்கிதிணறியபடியும் சொல்ல..
சந்தோசமா சொல்லவேண்டிய விசயத்தை ஏன் இப்படி சொல்றாங்க.. என யோசித்தான்தான் மாறன்.. ஒருவேளை மருமகன்றதால வெக்கப்படுறாங்களோ என்னவோ என நினைத்து..
‘பரவாயில்லைங்கத்தை.. உங்களால முடிஞ்ச வரைக்கும் பார்த்துக்கோங்க.. அதுக்கப்புறம் வேற ஏற்பாடு செய்துக்கலாம்.. எனக்கு இப்போதைக்கு உங்க நிம்மதிதான் முக்கியம்.. அதுக்காக என்னன்னாலும் செய்வேன்..” என்றான் உறுதியாக.
அமுதா அமைதியாகவே இருக்கவும்.. ‘உங்களுக்கு இந்த வேலை பிடிச்சிருக்குதான..?” என்றான் ஆவலோடு.
‘வேலை பிடிச்சிருக்கு.. அந்த இடம்..” என தடுமாற..
[the_ad id=”6605″]
‘இடம் எங்கப்பா பேர்லதான் ரிஜிஸ்தர் செய்திருக்கேன்.. அது உண்மையா நம்மளோடதுதான்..” என்றான் அமுதாவின் உள்ளம் புரிந்து..
‘உங்களை கஷ்டப்படுத்திற எந்த விசயத்தையும் இனி நான் செய்யமாட்டேன்..” என்று நம்பிக்கையான பார்வை பார்க்கவும்..
சரி என்பதாய் அமுதா தலையசைக்கவும்.. ‘அப்போ நாளைக்கு லைசன்ஸ்க்கு அப்ளை செய்திடலாம்..” என்றான்.
சற்றுநேரம் மௌனம் காத்த அமுதா.. ‘தம்பி.. ஹாஸ்பிட்டல்ல ரிலீவ் லட்டர் கொடுத்தா.. ஒரு அஞ்சாறு லட்சம் வரைக்கும் எனக்கு பணம் வரும்.. அதுல எல்லாம் வாங்கிடலாம்..” என்றார் மிகுந்த ஆர்வத்தோடும் பெருமையோடும்.
தாம் எத்தனை கோடிகளில் புரண்டு என்னபயன்..? என அமுதாவையே வேதனையோடு பார்த்திருந்தார் ராஜன்.
அமுதா.. ‘தம்பி.. என் சர்டிபிகேட்செல்லாம் சென்னையில இருக்கே..” என்றார் கவலையாக.
‘அங்க யார்கிட்டயாவது சாவி கொடுத்திட்டு வந்திருக்கிங்களா..?” என்றான்.
‘ம்ம்.. மெட்ரோவாட்டர் மோட்டர் சுவிட் நம்ம வீட்டுக்குள்ளதான் இருக்கு.. அதனால பரமுகிட்ட சாவி கொடுத்திட்டு வந்திருக்கேன்.. ஆனா.. பீரோ பூட்டியிருக்குமே..” என்றார்.
‘பரமு நல்லமாதிரியானவனா இருந்தா.. எதாவது செய்து பீரோவை திறக்கசொல்லி.. உங்க சர்டிபிகேட்சை போட்டோ எடுத்து.. வாட்ஸ்ஆப் ல அனுப்ப சொல்லுங்க..” என்றான்.
‘அதெல்லாம் ரொம்ப நல்லபையன் தம்பி.. அவன்தான் எனக்கு எப்பவுமே ஹெல்ப் பண்ணுவான்.. நான் அனுப்ப சொல்றேன்..” என்றார் அமுதா.
‘சரிங்கத்தை.. நாளைக்கு காலைல பத்துமணிபோல வரேன்.. லைசன்ஸ் வாங்க என்ன பிரசியூஜர்னு பார்க்கலாம்.. நான் கிளம்பறேன்..” என்றான்.
அமுதா தலையசைக்கவும்.. ‘நான் வரேன் தேவிம்மா..” என நிம்மதியோடு கிளம்பினான்.
நிம்மதி பெருமூச்செடுத்து.. ‘சரி.. உங்க சாப்பாட்டு மூட்டையை எடுத்துகிட்டு நீங்க கிளம்புங்க..” என்றார் எரிச்சலாக.
‘நீங்க கார்ல இருங்க.. நான் ஒரு இரண்டு நிமிசம் பேசிட்டு வந்திடறேன்..” என ராஜனிடம் தேவி சொல்ல.. ராஜன் தேவியை முறைத்தார்.
‘சரி.. நான் இன்னொரு நாளைக்கு வந்து பேசிக்கிறேன்..” என்றார் தேவி.
‘எதுன்னாலும் இப்பவே சொல்லு.. இதை காரணம் காட்டி.. மறுபடியும் வரவேணாம்..” என அமுதா கடிய..
‘ஐஞ்சு நிமிசம்தான்.. ப்ளீஸ்..” என தேவி ராஜனிடம் கெஞ்ச.. கடுப்போடு வெளியே சென்றார் ராஜன்.