ஒரு முடிவின் துவக்கம்..
அத்தியாயம் — 25
கட்டிலில் கவிழ்ந்து படுத்திருந்த மாறனின் மேல்.. தானும் படுத்திருந்தாள் கவிழ்ந்த நிலையிலேயே.. தன் மொத்த உடலும் மாறனின் மேல் படிந்திருக்க.. ‘லாலா.. லா.. லா.. இளா.. இளா..” என முனுமுனுத்துக்கொண்டிருந்தாள் நந்தினி..
‘இதென்னடி பாட்டு.. நான் கேட்டதே இல்லையே..” என மாறன் கேக்க..
‘இது.. என் இளாப்பாட்டு..” என்றாள் இன்னும் மாறனுக்கு அழுத்தம் கொடுத்தபடி.
‘நைட்லதான இளா.. இளான்னு ஹஸ்கி வாஸ்ல என்பேரை சொல்லி என்னை உசுப்பேத்துவ.. இன்னைக்கென்ன..? காலையே..” என்று உல்லாசமாய் கேட்டுக்கொண்டே.. நந்தினியை பெட்டில் சரித்து.. தற்போது மாறன் நந்தினி மீது படிந்திருக்க.. மாறனை கீழிறக்க போராடி தோற்றவள்..
‘அதுவா.. நான் ரொம்ப சந்தோசத்தில இருக்கேன்..” என்றாள் சந்தோசமாக.
லேசான இதழ்முத்தம் பதித்து.. ‘கார் வாங்குனதுனாலயா..?”
‘அது ஒரு பக்கம் இருக்குதுதான்.. ஆனா இது வேற..” என்றாள் உள்ளார்ந்து.
‘சரி.. என்னவோ இருந்திட்டு போகுது.. நாம கார் வாங்கினதை செலிபிரேட் பண்ணலாம்..” என சொன்ன மாறனின் பார்வை மாறியிருக்க..
‘நான் நேத்தே செலிபிரேட் பண்ற மூட்லதான் இருந்தேன்… நீதான் எங்கம்மாக்கு சாப்பாடு கொடுத்திட்டு வந்ததில இருந்து உர்ருன்னே இருந்த.. பெரிய பிஸ்த்தா மாதிரி நைட்டெல்லாம் லேப்டாப்பை எடுத்துகிட்டு உக்கார்ந்திட்ட.. என்னை பார்க்க கூட இல்ல.. போ.. போ.. ஒன்னும் வேணாம்..” என முறுக்கினாள்.
நந்தினியிடமிருந்து விலகி அமர்ந்தவன்.. ‘ராஜி.. நேத்து ஒரு பிரச்சனையாய்டுச்சி..” என்றான் வருத்தத்தோடு.
‘ஏன்..? யாருக்கு என்னாச்சி..?” என நந்தினி பதற..
‘நான் சொன்னதும்.. உடனே அத்தைகிட்ட என்ன ஏதுன்னு கேக்கக்கூடாது.. ராஜய்யாமேலயும் கோபப்படக்கூடாது..” என்று மாறன் கண்டிசன் வைக்கவும்..
நந்தினியின் பதட்டம் மேலும் அதிகமானது.. ‘நான் கோபப்படற அளவுக்கு அப்பா என்ன செய்துட்டார்..? என்னன்னு சொல்லு..” என கண்கலங்கினாள்.
‘நான் உன்னை கூட்டிட்டு வந்ததுக்கப்புறம்..” என ஆரம்பித்து.. அமுதா தன்னையே அசிங்கப்படுத்தி பேசியதையும்.. அதனால் வந்த கோபத்தில் ராஜன் அமுதாவை அடித்ததையும் வேதனையோடு சொன்னான்..
பிறகு தன் அத்தையை தான் தேற்றியது.. தேவிம்மா அத்தைக்காக பேசியது.. என அனைத்தும் சொல்லிமுடித்தவன்..
‘இதுல.. யாரை குற்றம் சொல்றது..” என்றான் வேதனையோடு.
‘அம்மும்மாக்கு இதெல்லாம் பிடிக்கலயா..?” என்றாள் கண்ணீரோடு.
‘ஆமாம் சுத்தமா பிடிக்கல.. கடந்த கால வேதனையையும் அவங்களால மறக்கமுடியல.. ராஜய்யாவையும் மன்னிக்க முடியல.. சென்னைக்கே போறேன்னு ஒரே அழுகை..
அவங்களை சரி செய்யிறதா நினைச்சி நாம பண்ற ஒவ்வொரு செயலும் அவங்களை ரொம்ப பாதிக்குது.. இது இப்படியே போனா நிச்சயம் வேற எதாவது தப்பான முடிவுக்கு வந்திடுவாங்களோன்னு கூட பயமாயிருக்கு..” என்றான் வேதனையாக.
[the_ad id=”6605″]
பயம் கலந்த அதிர்ச்சியோடு நந்தினி கண்ணீர் வடிக்க.. ‘நீ பயப்படாத ராஜி.. அப்படி எதுவும் தப்பான முடிவுக்கு போக விடமாட்டேன்.. இனி அத்தையை நான் பார்த்துக்கிறேன்..” என்றான்.
‘சின்ன வயசிலயிருந்தே அப்பாபத்தி எதாவது தப்பா சொல்லிட்டனா அம்மும்மா ரொம்ப கோபப்படுவாங்க.. அவங்கமேல எந்த தப்புமில்ல.. நான்தான் விட்டுட்டு வந்திட்டேன்னுதான சொல்வாங்க..? அன்னைக்கு கல்யாணத்தில அப்பா அடிச்சதுக்கு கூட அம்மா கோபப்படலயே.. இதெல்லாம் யோசிச்சிதான நான் அப்பாகிட்ட அம்மா சந்தோசத்தைப்பத்தி கேட்டேன்.. அன்னைக்கு அப்பாக்கு மயக்கமாய்ட்டதும் என்னாச்சோ ஏதாச்சோன்னு ரொம்ப அழுதாங்களே.. “ என்று நந்தினி தன்போல் புலம்ப..
‘ராஜய்யாக்காக அவங்களுக்கு பிடிச்சதெல்லாம் விட்டொழிச்சிட்டு ராஜய்யா நினைப்பாவே வாழ்ந்திட்டிருக்காங்களே.. அத்தையோட உண்மையான அன்புக்கு ஒரு அங்கீகாரம் வேணும்.. அவங்க வாழ்க்கைதான் போய்டுச்சி.. கடைசி காலத்திலயாவது ராஜய்யாவோட ஆறுதல் கிடைக்கட்டும்னுதான் நானும் இதுக்கெல்லாம் துணை நின்னுட்டேன்..” என்றான் வேதனையாக.
‘இப்ப என்ன பண்றது..? அம்மும்மா திரும்பவும் சென்னைக்கு போய்டுவாங்களா..?” என்றாள் தவிப்பாக.
‘நீ கவலைப்படாத.. நான் அத்தைகிட்ட பேசியிருக்கேன்..” என்று கம்ப்யூட்டர் சென்டரைப் பற்றி சொன்னவன்.. ‘எல்லாமும் உனக்கு தெரியும்ன்ற மாதிரி சொல்லிவச்சிருக்கேன்.. அத்தை அழுததும் அந்த நிமிசத்தில தோணின யோசனைதான் இது.. நான் வேற ஒரு பர்ப்பஸ்க்காக அந்த கட்டிடத்தை கட்டினேன்.. அத்தையை இங்கயே தங்கவைக்கிறதுக்கு.. இந்தநேரம் அது கைகொடுத்திடுச்சி..
உங்க ஸ்கூல்ல டல் ஸ்டூண்ட்ஸ் இருக்காங்கன்னல்ல.. முடிஞ்சவரை அவங்களை இன்ஸ்டியூட்டுக்கு வரவை.. ரொம்ப ஏழ்மையா இருக்கிற ஸ்டூண்ட்சுக்கு பீஸ்கூட கம்மி பண்ணிக்கலாம்.. இல்ல வாங்காம கூட விட்டுடலாம்.. அத்தை சென்னையில இருந்ததைபோல எப்பவும் பிசியாவே வச்சிக்கனும்.. அப்போதான் மத்ததை யோசிக்கமாட்டாங்க.. இனி நீயும் ராஜய்யாப்பத்தி அத்தைகிட்ட எதுவும் பேசாத..” என்றான் கண்டிப்போடு.
நந்தினி அமைதியாகவே இருக்கவும்.. ‘சரி வா சாப்பிடலாம்.. நானும் அத்தையும்.. வெளில போகனும்..” என்றவன்.. எதற்காக போகிறோம் என்றும் விளக்கினான்.
‘லீவ் போட்டுட்டு நானும் வரனே..” என கெஞ்சினாள்.
‘ராஜி.. அத்தையோட கன்னத்தை பார்த்தா.. உனக்கு கஷ்டமா இருக்கும்.. அதோட இப்போ அத்தையும் நல்ல சிந்தனையில இல்ல.. நீ ஸ்கூல் போ.. ஈவ்னிங் வந்து உன்னை கட்டடத்துக்கு கூட்டிட்டுப்போறேன்..” என சமாதானப்படுத்தி சாப்பிட்டு கிளம்பினான்.
——————————————————————
‘ராஜய்யா நான் உங்க வீட்லயிருந்துதான் பேசுறேன்.. அடுத்த வாரத்தில நல்லநாள் இருக்குன்னு அம்மா சொன்னாங்க.. அன்னைக்கே பூஜை வைக்கிறோம்.. தேவிம்மாகிட்ட சொல்லிட்டேன்.. நீங்களும் தேவிம்மாவும் பூஜைக்கு வந்திடுங்க..” என்று மாறன் போனில் சொல்ல..
‘மாறா.. பூஜைக்கு சோபி நிவியும் வருவாங்கதான..?” என்றார் ராஜன்.
‘கண்டிப்பா ராஜய்யா.. அவங்க இல்லாம எப்படி..?” என்றான்.
‘சரி மாறா..” என்றவர்.. தன் மகள் தன் வீட்டிற்கு வர சம்மதிக்கவும்.. பூஜைக்காக நிவேதாவும் சோபனாவும் வருவார்கள்.. எனவே அன்றே அனைவரையும் தன் வீட்டிற்க்கு விருந்திற்க்கு அழைக்கலாம் என நினைத்து.. சம்மந்தியை நேரில் சென்று அழைக்கலாம் என்றெண்ணி இராமன் வீட்டிற்க்கு கிளம்பினார் ராஜன்.
[the_ad id=”6605″]
———————————————-
அரைமணிநேர பயணத்திற்க்கு பிறகு.. லைசன்ஸ் வாங்கும் வேலை முடித்து.. பிறகு சோரூமிற்கு சென்றனர்.. கம்ப்யூட்டர் எந்த கம்பெனி வாங்கலாம்.. எந்த மாடல் என்பதையும்.. டைப்ரைட்டிங் மிசின்களையும் அமுதாவே தேர்வு செய்தார்.. பிறகு வீட்டிற்க்கு போகும் வழியில்.. ‘அத்தை ரொம்ப டைர்டா தெரியிறிங்க.. கடைலயும் சாப்பிடமாட்டேன்னுட்டிங்க.. வீட்டுக்கு போய் சாப்டுட்டு போலாம்..” என்றான்.
‘கார்ல தான வந்திருக்கோம்.. அப்டியொன்னும் டையர்டா இல்ல தம்பி.. நான் என்வீட்டுக்கே போறேன்..” என்று அமுதா மறுக்க..
‘இன்னும் கொஞ்ச நேரத்தில ராஜியும் ஸ்கூல்லயிருந்து வந்திடுவா.. உங்க பொண்ணையும் பார்த்திட்டு.. கொஞ்சம் ஸ்நாக்ஸ் சாப்ட்டு டீ மட்டும் குடிச்சிட்டு போய்டுங்க..” என்று அன்போடு சொல்ல அமுதா சம்மதம் தெரிவிக்க.. தன் வீடு நோக்கி பயனித்தான்.
மாறனின் வீட்டிற்கு வந்ததும் ராஜனைக் கண்ட அமுதாவின் முகம் இறுக.. ‘வாங்க ராஜய்யா..” என்றவன்..
அமுதாவை தன்னறைக்குள் அழைத்துச்சென்று கட்டிலில் அமரச்செய்து.. தானும் அமர்ந்தவன்.. பொறுமையாக.. மிகவும் பொறுமையாக.. ‘நிவி சோபி எந்தளவுக்கு எனக்கு முக்கியமோ.. அதேமாதிரிதான் எனக்கு நீங்களும்.. சென்னையில இருக்கும்போது எந்த மனநிலைல இருந்திங்களோ அப்படியே இருந்துக்கோங்க.. இனி ராஜய்யாவை ராஜியோட அப்பாவா மட்டும் நினைச்சிக்கோங்க..
என்னை தயவு செய்து தப்பா நினைக்காதிங்க.. ராஜய்யா தேவிம்மா இல்லாம நாங்க எந்த விசேசமும் செய்ததில்ல.. இன்ஸ்டியூட் பூஜை.. ராஜிக்கு கன்சீவானா வளைகாப்பு.. சோபனா வளைகாப்புன்னு இனி நம்ம வீட்ல வரப்போற எல்லா விசேசங்களுக்கும் அவங்களும் வருவாங்க..
இனி இந்த ஊர்லதான் நீங்களும் இருக்கப்போறிங்க.. இப்படி அவரை பார்க்கும்போதெல்லாம் டென்சன் ஆகிக்க வேண்டாம்.. நானும் உங்களை சரியா புரிஞ்சிக்காம விட்டுட்டேன்.. ஆனா என் அத்தை எவ்ளோ ஸ்ராங்ன்னு இப்போ புரிஞ்சிக்கிட்டேன்.. ராஜய்யா விசயத்தில உங்க மனசை புண்படுத்துற எந்த விசயத்தையும் இனி செய்யமாட்டேன்..“ என்று உறுதியோடு சொன்னவன்..
‘அதேநேரம் நம்ம வீட்ல நீங்க இல்லாமலும் இனி எந்த விசேசமும் நடக்காது.. இனிமேதான் நீங்க இன்னும் இன்னும் ஸ்ட்ராங்கா இருக்கனும்.. உங்களோட கன்னியத்தை காப்பாத்திக்க உங்களுக்கு யாரும் துணை தேவையில்லைன்னு எனக்கு தெரியும்..” என்று பெருமையோடு சொல்லி..
‘இருந்தாலும் இப்போ புதுசா நடந்த உங்க கல்யாணத்துனால.. யாராவது உங்களை தரக்குறைவா பேசினாலோ.. இல்ல இதை காரணம்காட்டி ராஜய்யாவே எதாவது தொல்லை செய்தாலோ.. உங்களுக்காக இந்த இளமாறன் இருக்கிறான்ங்கிறதை மட்டும் எப்பவும் மறந்திடாதிங்க..” என்றான் அன்புணர்வோடு.
கண்களில் கசிவோடும்.. முகத்தில் பெருமையோடும்.. தனது துன்பங்களையெல்லாம் மருமகனிடம் ஒப்படைத்த பாவனையோடு சந்தோசமாக அமுதா தலையாட்ட.. ஒரு சின்ன ஆறுதல் வார்த்தைக்கு கூட பஞ்சமாகிப்போன தன் அத்தையின் நிலையறிந்த இளமாறனின் கண்களுக்கு அந்த நேரம் தங்கையாய் தெரிந்தார் அமுதா.
‘ஒரு டீ குடிச்சிட்டே பேசலாம்.. இனி ராஜய்யா உங்களை தொல்லை பண்ணமாட்டார்.. வாங்க ஹாலுக்கு போலாம். ” என சமாதானப்படுத்தி அழைத்துவந்தான்.
ஹாலில் இராமனோடு பேசிக்கொண்டிருந்த ராஜனின் மனம் அமுதாவை சுற்றியே வட்டமிட்டது. சிறுவயது அமுதாவிற்கு.. பிடிவாதம் என்றால் என்னவென்றுகூடத் தெரியாது. ஆனால் இப்பொழுது இருக்கும் அமுதா முற்றிலும் புதியவள்.. தன்மீதான காதலை மறந்திடமாட்டாளா.? தன்னை வெறுத்தொதுக்கி அவளுக்கான வாழ்வை வாழ்ந்திட மாட்டாளா என்று ஏங்கித்தவித்தது மனம்.
[the_ad id=”6605″]
அமுதாவிடம்.. ‘அத்தை.. இனி இங்கதான் உங்க பிஸ்னஸ்ன்னு முடிவாகிடுச்சி.. சென்னை வீட்டை காலி செய்துடலாமா..?” என்றான்.
‘நேத்தே எதுக்கு சர்டிபிகேட்ன்னு.. பரமு என்னை துருவி துருவி கேட்டான் தம்பி.. நானும் சொல்லிட்டேன்.. அப்போ வீட்டை காலி செய்திடுவிங்களான்னு கேட்டான்.. ஆமாம் சொல்லிட்டேன்.. ஆனா எப்படி காலிபண்றதுன்னு புரியலை.. ராஜன் வேற இந்த புதுக்கோலத்தை கொடுத்து வச்சிருக்கார்.. அதனால எனக்கு அங்க போக ஒருமாதிரியிருக்கு..” என்றார் அவஸ்த்தையோடு.
அந்த நேரம் அமுதாவின் போன் அடிக்கவும்..
‘வீட்டு ஓனரம்மாதான் பேசுறாங்க.. பரமு சொல்லியிருப்பான்னு நினைக்கிறேன்.. அந்தம்மா ரொம்ப நல்லமாதிரி.. என்னை நினைச்சி ரொம்ப வருத்தப்படுவாங்க..” என தன் போல் பேசிக்கொண்டே அட்டன் செய்யவும்..
‘அமுதா… பரமு சொல்றதெல்லாம் உண்மையா..?” என்றார் அந்த வெங்கலக் குரல் பெண்மணி.
‘ஆமாம்மா.. உண்மைதான்..” என சொல்ல..
‘அத்தை போனை ஸ்பீக்கர்ல போடுங்க.. உங்களை பார்த்துக்கிட்டவங்க குரலை நானும் கேக்குறேன்..” என மாறன் சொல்லவும்.. அமுதா ஸ்பீக்கரை ஆன் செய்தார்.
‘அம்மாடி.. நந்தினி கல்யாணம் முடிஞ்சதும் இங்க வந்திடுவேன்.. ரிசப்சன் இங்கதான் வைக்கப்போறேன்னு சொன்ன..? இப்போ இப்படி பட்டுன்னு காலி பண்றன்றியே அமுதா..
நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத.. மருமகன் வீட்லயெல்லாம் ரொம்ப நாளைக்கு தங்க வேணாம்.. நீ இங்கையே வந்திடு.. இங்க நாங்க இருக்கோம் உனக்கு..” என்றார்.
‘இல்லம்மா.. இங்க என் வீட்லதான் இருக்கேன்.. இனிமே என்னால அங்க வரமுடியாது..” என்றார் சன்னக்குரலில்.
‘ஓ… ஊர்ல உனக்கொரு வீடுருக்கு.. அதை வித்துட்டு நந்தினிக்கு சீர் செய்திடலாம்னு சொன்னியே அந்தவீடா..?” என்றார்.
‘ஆமாம்மா..” என அமுதா சொல்ல..
‘நீ உன்வீட்ல இருக்கிறேன்னா.. உன் புருசனுக்கு தெரிஞ்சிருக்குமே.. உன் புருசன்தான் ரொம்ப நல்லவன்னு சொல்லுவியே.. உன்னையேது வந்து பார்த்தானா..? உன்னை வரதட்சனை கொடுமைசெய்த அந்த கிழம் செத்துடுச்சா.. இல்ல இன்னும் உயிரோடதான் இருக்கா…” என்றார் தவிப்பாக.
அமுதா தயங்கவும்.. ‘ஏன் அமுதா அமைதியாய்ட்ட..? உன் புருசன் எதாவது ரகளை செய்துட்டானா..?” என அந்த பெண்மணி தவிக்கவும்..
‘இல்லம்மா அப்படியெல்லாம் ஒன்னுமில்ல.. அவர் என்கூட வாழனும்னு சொல்றார்..” என்று தயக்கத்தோடே சொல்லவும்..