‘பார்த்தியா.. நான்தான் நந்து குழந்தையா இருக்கும்போதில இருந்து சொல்றேன்.. ஒருமுறை போய் குழந்தையை காட்டிட்டு வா.. உன்னை ஏத்துக்குவாங்கன்னு.. நீதான் உன் மாமனாருக்கு பயந்துகிட்டு இங்கையே இருந்திட்ட.. எப்படியோ.. சந்தோசமா இருந்தா சரிகண்ணு..” என்றவரின் குரல் தழுதழுத்தது.
‘ஆமா.. இத்தனை வருசமா உன் புருசன் வேற கல்யாணமே செய்துக்காமயா இருந்தான்..?” என கேக்க..
‘இல்லம்மா.. நான் செத்துட்டேன்னு நினைச்சி இன்னொரு கல்யாணம் செய்துகிட்டார்.. அவருக்கு இப்போ இரண்டு குழந்தைங்க இருக்காங்க..” என அழுத்தமாக அமுதா சொல்ல..
பேசுடி.. பேசு.. பேசிப்பேசியே என்னை சாகடிக்கலாம்னுதான இருக்க..? இப்படியாவது உன் வேதனை குறையட்டும்.. என நினைத்து அமுதாவையே ஆழ்ந்து பார்த்திருந்தார் ராஜன்.
‘உன் புருசனோட இரண்டாவது பொண்டாட்டி இதுக்கு ஒத்துக்கிட்டாளா..?” என அதிசயமாய் அந்த பெண்மணி கேக்கவும்..
‘ம்ம்.. அந்த பொண்ணுதான் இதுக்கு முழுசம்மதம் கொடுத்திருக்கு..” என்றார்.
‘பரவாயில்லையே.. இந்தகாலத்தில.. இப்படி ஒரு பொம்பளையா..?” என அதிசயித்து..
‘ஆமா.. நந்துக்கு அவங்கப்பான்னாலே ஆகாதே.. நீ அந்தாளை நல்லவன்னு சொன்னாலே சண்டைக்கு வருவா.. இப்போ அவங்கப்பனை ஏத்துக்கிட்டாளா..?” என கேக்கவும்..
எரிச்சலானது அமுதாவிற்கு.. ஆனால் அந்த பெண்மணியை அமுதாவால் கேபித்துகொள்ள முடியாதே.. எத்தனையோ பேர் இன்னும் சேர்த்து வாடகை தரேன்.. அந்த வீட்டை எனக்கு விடு.. என சொல்லும்போதெல்லாம்..
அமுதா எனக்கு மகமாதிரி.. நான் அவளை காலி பண்ண சொல்லமாட்டேன்னு சொன்ன தாயுள்ளமாச்சே.. இந்தம்மா விடாது.. பேசாம ஒரேயடியா எல்லாமும் சொல்லிடலாம் என நினைத்து..
‘இல்லம்மா.. நந்துவும் அவரை புரிஞ்சிகிட்டா..” என்று ராஜன் நந்தினிக்கு சீர் செய்ததையும் சொன்னார்.
‘உன் புருசன் பேரு ராஜனா..? அதென்ன பேர் சொல்லிகிட்டு..? மாமான்னு சொல்லனும்..” என்று வேறு புத்திமதி சொல்ல.. அமுதா முகத்தில் கடுகு வெடித்தது.
‘சரிம்மா.. நான் அப்புறம் பேசுறேன்..” என அமுதா கடுப்போடு சொல்லியும்..
‘இங்க ரிசப்சன் இல்லயா..? அப்போ பாப்பாவை ஒருமுறை அவ புருசனோட இங்க வரசொல்லு.. கண்ல இருக்கமாதிரியே இருக்கா.. அழகம்மா.. அழகம்மான்னு என்னை கிண்டல் பண்ணிகிட்டே இருப்பா..” என்று.. நந்தினி மாறன் அவர்களது குடும்பத்தினர் என அனைத்தும் அறிந்த பிறகே.. போனை வைத்தது அந்த நல்ல உள்ளம்.
எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாத மாறன்.. ‘அத்தை.. உங்களுக்கு சங்கடமா இருந்தா நீங்க சென்னைக்கு போக வேண்டாம்.. எனக்கு தெரிஞ்ச பசங்களை வச்சி சாமான் எடுத்துக்கலாம்.. நீங்க உங்க வீட்டுஓனர்கிட்ட பசங்க வருவாங்கன்னு மட்டும் சொல்லிவச்சிடுங்க..” என்றான்.
அமுதா சரி என்பதாய் தலையசைக்கவும்.. ‘நீங்க எந்த ஹாஸ்பிட்டல்ல வேலைசெய்திங்க..?” என்று அமுதாவிடம் விபரம் சேகரித்தவன்..
‘நான் வேலையை ரிசைன் பண்றேன்னு.. உங்க எம்.டி.க்கு ஒரு மெயில் அனுப்புங்க.. மத்தது நான் பார்த்துக்கிறேன்..” என்றான்.
‘தம்பி மெயிலெல்லாம் அனுப்பக்கூடாது.. நேர்ல போய்தான் லட்டர் கொடுக்கனும்.. அதுதான் ஹாஸ்பிட்டல் ரூல்ஸ்.. அந்ததாளுக்கு பணபலம்.. ஆள்பலம்ன்னு கொஞ்சம் பெரிய கை.. ரொம்ப எகுறுவான்.. ஏற்கனவே என்னோட ஆறுமாச லீவை கேன்சல் செய்துட்டேன்.. அடுத்தமாசமே நீங்க வரனும்னு சொல்லிட்டிருக்கான்.. “ என்று சற்றே பயத்தோடு சொல்லி..
‘அதோட.. அங்க நான் மேனேஜ் பண்றமாதிரி.. வேற யாரலையும் பண்ணமுடியாது.. அதான் விடமாட்றானுங்க.. இன்னும் சம்பளம் சேர்த்து தரேன் வாங்கன்னு ரொம்ப தொல்லை பண்றாங்க..” என்றார் பெருமையோடு.
‘அதான..? எங்கத்தைன்னா சும்மாவா..?” என மாறனும் பெருமைபட்டு..
‘நீங்க இப்ப ஒரு மெயில் அனுப்புங்க.. அவன் என்ன பண்றான்னு நான் பார்க்கிறேன்..” என்று சவாலாக சொன்னவன்.. அமுதா எத்தனை மறுத்தும் பிடிவாதம் செய்து மெயிலை அனுப்பவைத்தான் மாறன்.
மாறன்.. அவனது நண்பன் ஜித்தேந்திரனிடம்.. அமுதா வேலைசெய்த இடம்.. என முழுவிபரத்தையும் சொல்லி முடித்து.. வெற்றியோடு அமுதாவை பார்த்தான்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் அமுதாவிற்கு அழைப்பு வரவும்.. பதட்டத்தோடே ஆன் செய்தார். ‘ஹலோ..” என அமுதா சொல்ல..
‘என்ன மெயில் அனுப்பி வச்சிருக்கிங்க..? இது நம்ம ரூல்சே கிடையாது.. நீங்க வந்துதான் ஆகனும்.. இல்லன்னா என்னை மீறி இந்த தமிழ்நாட்ல.. உங்களால எங்கையும் வேலைசெய்ய முடியாது..“ என அமுதாவின் எம்.டி அத்தனை வசைபாடினான்.. கடுப்பான மாறன்.. பேசிக்கொண்டிருக்கும் போதே அமுதாவிடமிருந்து போனை பறித்து கட்செய்தான்.
முகம் வாடியவராய்.. ‘நான்தான் சொன்னேன்ல..? இப்ப என்ன செய்வானோ..? என் பணத்தையும் தரமாட்டான்..” என புலம்பினார்.
தாம் எத்தனை கோடிகளில் புரண்டு என்ன பயன்..? என அமுதாவையே வேதனையோடு பார்த்திருந்தார் ராஜன்.
மீண்டும் அமுதாவிற்கு அழைப்பு வரவும்.. ஸ்பீக்கரை ஆன் செய்து.. ‘பேசுங்க..” என்றான் மாறன். மீண்டும் பதட்டத்தோடே அமுதா.. ‘ஹலோ..” என்கவும்..
அத்தனை மன்னிப்பு வேண்டினான் அந்த எம்.டி. ‘மேடம்.. நீங்க இளமாறன் அத்தைன்னு ஏன் என்கிட்ட சொல்லலை..? இளமாறனும் ஜித்தேந்திரனும் உயிர் தோழர்கள்.. தயவுசெய்து உங்க மருமகன்கிட்ட நான் சாரி கேட்டேன்னு சொல்லிடுங்க.. உங்க அக்கௌன்ட்டுக்கு பணம் டிரான்ஸ்பர் செய்திட்டேன்..” என்றான் பதட்டத்தோடு.
அமுதா வியப்பின் உச்சத்திற்கே சென்றார். ‘சாரியெல்லாம் வேணாம் சார்.. என்னால இப்ப வரமுடியாத சுட்டிவேசன்.. அதான்..” என அமுதா இறங்கிய குரலில் சொல்ல..
‘மேடம்.. நீங்க வரவே வேண்டாம்.. ஆனா தயவுசெய்து நான் சாரி கேட்டேன்னு இளமாறன் சார்கிட்ட சொல்லுங்க.. இல்லன்னா என்னால இங்க ஹாஸ்பிட்டல் நடத்த முடியாது..” என மன்றாடினான்.
‘ஹலோ.. நான் இளமாறன் பேசுறேன்..” என்றான் கம்பீரக் குரலில்.
[the_ad id=”6605″]
‘சார்..” என பதட்டமாய் ஆரம்பிக்கும்போதே.. இடைமறித்த இளமாறன்.. ‘விடுங்க மாணிக்கம்.. நீங்க என் அத்தைன்னு தெரியாமதான பேசிட்டிங்க..” என்றான் கம்பீரமாகவே.
‘சாரிங்க சார்..” என மீண்டும் சொல்ல.. ‘ஓ.கே. விடுங்க மாணிக்கம்.. என் அத்தையை இத்தனை வருசமா கன்னியமா நடத்தியிருக்கிங்க.. இனி உங்களுக்கு என்னால பிரச்சனை வராது..” என்றான் இயல்பான குரலில். பிறகுதான் மாணிக்கம் ஆசுவாசமானவனாய் பல நன்றிகளை சொல்லி போனை வைத்தான்.
‘தம்பி.. அந்தாளுக்கு அறுபது வயசுக்கு மேலயிருக்கும்.. இதுவரை டாக்டர்ங்களை கூட அவர் மேடம்னு சொன்னதேயில்ல.. என்னைப்போய் இத்தனை மேடம் போடுறான்.. ரொம்ப நல்லவன்தான்.. ஆனா அடாவடியும் உண்டு. உங்களுக்கு இப்படி பயப்படுவான்னு நான் நினைச்சே பார்க்கல..” என்றார் மீளமுடியாத ஆச்சர்யத்தோடு.
‘அதெல்லாம் அப்படித்தான்.. விடுங்கத்தை.. இனி உங்களுக்கு எந்த பிராப்ளமும் இல்ல.. இங்க நீங்க ப்ரீயா வேலை பார்க்கலாம்..” என்றான் சந்தோசமாக.
‘தம்பி.. பத்துலட்சம் போட்டுருக்கான்..” என்று தன் செல்பேசியில் மெசேஜ் பார்த்து வாயைப் பிளந்த அமுதா.. ‘ஆமாம்.. அந்தாளு பேரு.. உங்களுக்கெப்படி தெரியும்..?” என கேட்க..
‘அது அப்படித்தான்.. நீங்க இதெல்லாம் யோசிக்காதிங்க.. உங்க சந்தோசம்.. நிம்மதிதான் எனக்கு முக்கியம்..” என்றான் தன்மையாக.
ராஜனும் அதிசயித்தவராய்.. ‘ஜித்தேந்திரன்ங்கிறது யார் மாறா..?” என கேட்க..
மதுரை எம்.பி. மணிகண்டனோட மகன்தான் ராஜய்யா ஜித்தேந்திரன்.. இருபத்திமூனு வயசுதான் ஆகுது.. ஒருடிகிரி முடிச்சதும் நஷ்டத்தில இருந்த அவங்கப்பாவோட சாப்ட்வேர் கம்பெனியை இவன் பார்க்க ஆரம்பிச்சான்.. நான் ஆடிட்டிங் செய்திட்டிருக்க கம்பெனி ஓனர்தான் அவன்கிட்ட என்னை அறிமுகம் செய்தார்.. என்னை ஆடிட்டிங் பண்ண கேட்டான்.. நான் உள்ள போனதுக்கப்புறம் எப்படி நஷ்டம் வந்தது.. யார் அங்க நரிவேல செய்தாங்கன்னு புட்டுபுட்டு வச்சதிலயிருந்து .. அந்த கம்பெனிக்கு மட்டுமில்லாம அவங்களோட கோடிக்கணக்கான சொத்துகளுக்கும் என்னையே ஆடிட்டிங் பண்ண கேட்டான்..
முன்ன ஆடிட்டர்க்கு கொடுத்த பணத்தைவிட நான் கம்மியாதான் கேட்டிருந்தேன்.. என் நேர்மையும் நாணயமும் பிடிச்சிபோனதால எனக்கு பிரண்டாய்ட்டான்.. எங்கையும் என்னை விட்டுகொடுக்கமாட்டான்..” என்று பெருமையாக சொல்ல..
‘கருவாப்பயலே.. உன்னை மருமகனா நான் செலக்ட் செய்தது.. கொஞ்சம் சரிதான் போல…” என பெருமையோடு சொன்னார் ராஜன்.
‘அம்மும்மா..” என்றபடி உள்ளே வந்தாள் நந்தினி.
‘நந்து… ஸ்கூல் முடிஞ்சதா..? டைம் என்ன ஆச்சி..?” என பார்க்க.. ‘ஓ.. ஐஞ்சு மணி ஆய்டுச்சா..?” என சொல்லி.. அன்று நடந்தவைகளை சொல்ல ஆரம்பித்து.. மாறனின் புகழையே பேசிக்கொண்டிருந்தார் அமுதா.
‘உங்க மருமகன் புராணம் போதும்.. ” என்ற நந்தினி.. வேதனையாய் பார்த்திருந்தாள் தன் அன்னையின் தடித்து சிவந்திருந்த கன்னத்தை.. மகளின் பார்வை புரிந்த அமுதா தடுமாற..
‘இன்னும் வலிக்குதா..?” என கண்கலங்கி அமுதாவின் கன்னம் தடவிக்கொடுக்க..
குற்ற உணர்வில் ராஜன் தடுமாற.. ‘ப்ச்.. ராஜி..” என்று மாறன் குரல்கொடுக்க..
‘என்னப்பா செலக்ட் செய்திங்க..?” என நந்தினி கேட்க..
பதறிய மாறன்.. ‘அது ஒன்னுமில்ல ராஜி.. நான் உன்னை செலக்ட் செய்தது சரிதான்னு சொன்னாரு..“ என்று அவசர விளக்கமளிக்க.. தன் மகள்மீதான மாறனின் பயத்தில் தன்னை மறந்து சிரித்தார் அமுதா..
நீண்ட வருடங்களுக்கு பிறகு.. அமுவதாவின் சிரிப்பை பெருத்த நிம்மதியோடு பார்த்திருந்தார் ராஜன்.
‘தம்பி உங்க அக்கௌன்ட் நம்பர் சொல்லுங்க.. நான் பணம் போடுறேன்.. வாங்கின கடனை திருப்பிகொடுத்திடலாம்..” என்றார்.
‘அத்தை உங்ககிட்ட பத்துலட்சம் இருக்கு.. நாலு லட்சத்தி அறுபதாயிரம் தான் செலவாகியிருக்கு.. மீதி பணத்துல.. உங்க வீட்டை கொஞ்சம் எக்ஸ்டென்ட் செய்திடலாமா..?” என்றான்.
‘எதுக்கு தம்பி..? என் ஒருத்திக்கு அதுவே போதும்.. மீதி பணத்தில நந்துக்கு எதாவது வாங்கிகொடுத்துக்கலாம்..” என்றார் அமுதா.
‘பெருசா ஒன்னும் மாத்த வேண்டாங்கத்தை.. காலைவெயில் வீட்டுக்குள்ள வராம இருக்கிறமாதிரி.. முன்னாடி ஒரு டாப் மாதிரி இறக்கிட்டு.. அட்டாச் பாத்ரூமோட ஒரே ஒருரூம் மட்டும் எக்ஸ்டென்ட் செய்துக்கலாம்.. ராஜிக்கு குழந்தை பிறந்தா யூசாகும்.. “ என்றான்.
‘ஓ.. உங்க பொண்டாட்டிக்காகவா..? செய்ங்க.. செய்ங்க..” என்றார் சந்தோசத்தோடு.
‘நந்துமா பூஜை முடிஞ்சதும்.. உங்க வீட்ல எல்லாரையும் கூட்டிக்கிட்டு நம்ம வீட்டுக்கு வரியா..?” என்றார் எதிர்பார்ப்போடு.
நந்தினி சம்மதம் தெரிவிக்க.. ராஜன் சந்தோசமாய் கிளம்பினார்.
[the_ad id=”6605″]
———————————————
‘அத்தை கட்டடத்தை போய் பார்த்திட்டு வந்திடலாமா…? ராஜியும் இன்னும் பார்த்ததில்ல..” என்றான்.
அமுதாவிற்கு முன் நந்தினி.. ‘ம்ம்.. போலாம்.. போலாம்..” என்றாள் குஷியோடு.
டீ குடித்து கட்டடத்திற்கு கிளம்பினர்.. கட்டடத்தை பார்த்த நந்தினிக்கு மிகுந்த சந்தோசம்தான்.. ஆனால்.. ‘இங்க சுத்தியும் வீடுங்களே அதிகம் இல்ல.. இவ்ளோ பெரிய கட்டடமா இருக்கு.. ஸ்டூடன்ஸ் இல்லாத டைம்ல அம்மும்மா எப்படி தனியா இருப்பாங்க..?” என்றாள் கவலையாக.
‘அத்தை.. நம்ம குமாரோட தம்பியிருக்கான் அவனை கூப்டுக்கலாம்..” என்றான் மாறன்.
‘எந்த குமார்..?” என கேக்க..
‘ராஜய்யாவோட டிரைவர்தான் குமார். குமாருக்கு ஐஞ்சு வயசும்.. அவன் தம்பிக்கு இரண்டு வயசும் இருக்கும்போது.. அவங்கப்பாவும் அம்மாவும்.. கல்லு உடைக்கிற வேலைக்கு போன இடத்தில.. பாறைக்கு வேட்டு வச்சது தெரியாம போய்.. இரண்டுபேரும் இறந்துட்டாங்க..
ராஜய்யாவோட அம்மாதான் குமாரையும் அவன் தம்பியையும் குழந்தையில இருந்து பெத்தபிள்ளைபோல பார்த்துக்கிட்டாங்க.. பெரியம்மா இறந்ததுக்கப்புறம்.. ராஜய்யாதான் இரண்டுபேரையும் படிக்க வச்சார்.. குமாருக்கு படிப்பு வரலை.. பத்தாவது பெயிலானதும் ராஜய்யாவுக்கு காரோட்ட வந்துட்டான். அவன் தம்பி நல்லாத்தான் படிச்சான்.. பனிரெண்டாவுதுல கூட நல்ல மார்க் வாங்கினான்.
ரொம்ப ஆசைப்பட்டு இன்ஜினியரிங் சேர்ந்தான்.. இங்கிலிஷ் நாளேட்ஜ் இல்லாம நிறைய பேப்பர் அரியர் வச்சிருக்கான்.. குமாருக்கு அவன் தம்பி கவலைதான் பெரிய கவலை.. அவன் சம்பாதிக்க ஆரம்பிச்சாத்தான் கல்யாணம் செய்துக்குவேன்னு சொல்லிட்டிருக்கான்.. இரண்டுபேருமே ரொம்ப நல்லபசங்க.. சரவணன் உங்களுக்கு ரொம்ப உதவியா இருப்பான்..” என்றான் மாறன்.
அமுதா சரி என்பதாய் தலையசைக்க.. ‘ரொம்ப சந்தோசம்ங்கத்தை..” என்றான் நிறைவோடு.