ராஜன் ஆச்சர்யமாய் விழிவிரிக்க.. ‘என் கல்யாணத்தில அத்தனைபேர் முன்னாடி நீங்க அடிச்சும்.. எதுன்னாலும் இன்னொரு நாளைக்கு பேசிக்கலாம்னு.. எதுக்கு அத்தனை பவ்யமா சொன்னாங்கன்னு யோசிங்க..
அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல லாவி மனோ முன்னாடி நீங்க செத்துடுவேன்னு சொன்னதும்.. குழந்தைகள் முன்னாடி என்ன பேச்சு பேசுறிங்கன்னு உங்ககிட்ட எத்தனை உரிமையா கேட்டாங்கன்னு யோசிச்சிப்பாருங்க..
உங்ககிட்ட இத்தனை கோபம் காட்றவங்க.. லாவிகிட்ட எதையும் காட்டிக்கிறதில்ல..” என்றான்.
ராஜன் புரியாத பார்வை பார்க்க.. ‘ஆமாம் ராஜய்யா.. லாவி தினமும் அத்தைகிட்ட போன்ல பேசிட்டுதான் இருக்கா.. அவகிட்டயும் அதிகமா பேசலன்னாலும்.. அவ கேக்குறதுக்கு பதில் சொல்லுவாங்களாம்.. லாவி சொன்னா..” என்றான்.
லாவண்யாவிடம் அமுதா பேசுவது சந்தோசம் என்றாலும்.. ‘மாறா.. நந்தினி கர்பமான விசயத்தை கேள்விபட்டதும்.. நான் அமுதாவைப் பார்த்தேன்.. அவமுகத்தில சந்தோசம் இருந்ததுதான்.. ஆனா அதையும் மீறி எதையோ சாதிச்சமாதிரியும்.. இனி எல்லாம் முடிஞ்ச மாதிரியும்.. ஒரு மாதிரி விரக்த்தியா நந்தினி பார்த்தா மாறா.. அவ பார்வையே சொல்லுது அவ எதோ தப்பான திட்டத்திலதான் இருக்கான்னு.. அது என்னன்னு கொஞ்சம் பாரு மாறா..” என்றார் பதட்டமாக.
தேவியும் நினைவு வந்தவராய்.. ‘ஏங்க அன்னைக்கு நான் அவங்ககிட்ட தனியா பேசினேன்ல..? அப்போ நந்துக்கு பிரசவம் பார்த்திட்டா நானே இந்த உலகத்தைவிட்டு போய்டுறேன்னு சொல்லிட்டு அழுதாங்க..” என்றார் பதட்டமாக.
பிறகுதான் மாறனும் நினைவு வந்தவனாய்.. ‘ராஜய்யா.. அன்னைக்கு இன்ஸ்டியூட் ஆரம்பிக்கிறேன்னு சொல்லும்போது கூட.. தம்பி என்னை நம்பி பெருசா எதையும் ஆரம்பிக்காதிங்க.. என் பேரப்பிள்ளைகள் வரும்வரைதான் பார்த்துக்குவேன்னு சொன்னாங்கதான..? நான்கூட அப்போ எதோ மருமகனாச்சேன்னு வெக்கப்படுறாங்கன்னு சாதாரணமா நினைச்சிட்டேன்.. எத்தனை தைரியம் இருந்தா சாகப்போறதை என்னவோ பாரின் டூர் போறமாதிரி சொல்லுவாங்க..? இவங்க எதாவது செய்துகிட்டா ராஜிக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்..?”என்று மாறனும் கோபத்தோடே கண்கலங்க..
‘அச்சோ..” என தாளமுடியாதவராய் தன் தலையில் ராஜன் அடித்துக்கொள்ள.. ராஜன் கையைத் தடுத்தவன்..
‘நீங்க கவலைப்படாதிங்க ராஜய்யா.. அத்தையை அந்தளவுக்கு போக விடமாட்டேன்..” என்று ராஜனுக்கு தைரியமளித்து.. ‘ராஜய்யா இனி அத்தையை நீங்க எந்த விதத்திலயும் தொல்லை பண்ணக்கூடாது..” என்றான் கட்டளையாக.
‘நீயும் என்னை தப்பா நினைக்கிறியா மாறா.. அமுதாகிட்ட எனக்கு எதுவும் வேணாம்.. அவ சிரிப்பு சத்தம் வெளிவரதுக்கு முன்னாடி.. அவ கண்ணு முகம்னு எல்லாம் சிரிக்கிற அந்த பழைய அமுதா வெளிவந்திட்டான்னா அதுவே எனக்கு போதும்..” என்று தழுதழுத்த குரலில் சொல்ல..
‘அதை நான் பார்த்துக்கிறேன்.. நீங்க அவங்களை நெருங்க நெருங்கத்தான் அத்தை ரொம்ப பலவீனமாகுறாங்க.. எத்தனை தூரம் அவங்களை விட்டு நீங்க விலகியிருக்கிங்களோ அந்தளவுக்கு அவங்க பலமானவங்களா உணருவாங்க..” என்று ராஜனை ஆழ்ந்து பார்த்தான்.
சரி என்பதாய் வேதனையாய் தலையசைத்தார்.
அமுதாக்கா உங்களை விட்டு விலக விலக.. அவங்கமேல இன்னும்தான் எனக்கு மதிப்பு கூடுது.. இனிமே அவங்களுக்கு எந்த தொல்லையும் நாம தரக்கூடாது.. மறுபடியும் நம்மளால இந்த ஊரைவிட்டு அவங்க போய்ட்டாங்கனா அதைவிட அசிங்கம் நமக்கு வேற எதுவும் கிடையாது…” என்று தன் கணவனிடம் கண்டிப்போடு சொல்ல.. அதற்குள் தேவிக்கு அழைப்பு வரவும்..
சரசு எதுக்கு போன் செய்யிறா..? என யோசித்தபடியே அழைப்பை ஏற்ற தேவி.. ‘என்ன சரசு..?” என்றார்.
‘அம்மா.. உங்கம்மாவும் பெரிய அண்ணனும் வந்திருக்காங்க..” என்றார் சரசு.
‘சரி கொஞ்ச நேரத்தில நாங்க வந்திடறோம்..” என்று அழைப்பை துண்டித்து..
‘ஏங்க.. எங்கம்மாவும் பெரியண்ணனும் வந்திருக்காங்களாம்..” என்றார் தேவி.
‘சரி மாறா நாங்க கிளம்பறோம்..” என்று இருவரும் கிளம்பினார்கள்.
[the_ad id=”6605″]
———————————————————————-
சோர்வாய் தூங்கிக்கொண்டிருந்த நந்தினியின் தலையை வருடிக்கொண்டிருந்த அமுதாவிற்கு. மனம் நிலைகொள்ளவில்லை.. தேவி சொன்னதுபோல தாம் ராஜனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் திரும்பவும் நெஞ்சுவலியேது வந்திடுமா..? என பலவாறு யோசிக்க.. மனம் பதறியது.
இருபது வருடங்களுக்கு முன்பே எப்படி வாழவேண்டும்.. என்று முடிவு செய்துட்டேனே.. கிட்டதட்ட முக்கால் கிணறு தாண்டியாகிவிட்டது.. அப்பல்லாம் என் கண்ணைப் பார்த்தே என் மனசை படிச்சிடுவிங்க.. இப்போ வார்த்தையால என் வலியை சொல்லியும் உங்களால என்னை புரிஞ்சிக்க முடியலையா..? இல்ல புரிஞ்சிக்காத மாதிரி நடிக்கிறிங்களா..? என மனம்வெம்ப.. அழுகை முட்டிக்கொண்டு வந்தது. சோபனாவும் நிவேதாவும் அருகிலிருக்க.. முகத்தில் எதுவும் காட்டாதவராய்.. அமுதா அமைதியாகவே இருந்தார்.
‘நிவி.. நான் அத்தைக்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்..” என்றான். இருவரும் வெளியேறிய பின்.. அமுதா மாறனைப் பதட்டமாக பார்க்க..
‘முதல்ல நீங்க ராஜய்யாவை நினைக்காம இருக்கிங்களா..?” என்று நேரடியாக விசயத்திற்க்கு வந்தான்.
‘என்ன சொல்றிங்க..?” என்று அமுதா மிரள..
‘உங்களுக்கு நான்வெஜ்ன்னா பிடிக்கும்தானே..? அப்புறம் ஏன் அதெல்லாம் சாப்பிடமாட்றிங்க..? இதுமட்டுமில்ல.. சினிமா பார்க்கிறது.. தலைநிறைய பூ வச்சிக்கிறதுன்னு எல்லாமும் பிடிக்கும்தான..? அப்போ ஏன் இதெல்லாம் உங்களுக்கு நீங்க செஞ்சிக்கிறதில்ல..?” என்றான் துளைக்கும் பார்வையோடு.
என் ஆசைகளை பார்த்து செய்ய என் அப்பாம்மாவா இருந்தாங்க..? தியேட்டர்க்கு போறதிலயிருந்து ஹோட்டல்ல சாப்பிடறதெல்லாம் ராஜன்தானே எனக்கு முதன்முதலா செய்தார்.. அதை எப்படி உன்னிடம் சொல்வது என்ற நினைவோடு அமுதா தலைகுனிய..
அருகிலிருந்த சேரை கட்டிலின் அருகே போட்டு அமர்ந்தவன்.. ‘உங்களுக்கு இதெல்லாம் பிடிக்காதுங்கிற வரைக்கும் ராஜிக்கு ஒன்னும் தப்பா தெரியல.. ஆனா இப்போ அவளோட சேர்த்து எனக்கும் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் தெரிஞ்சிடுச்சி.. நீங்க இப்படி இருக்கிறது எனக்கும் ராஜிக்கும் எவ்ளோ வேதனையா இருக்கு தெரியுங்களா..?
உங்க மனசு.. அது பரிசுத்தம்னு எனக்கு தெரியும்.. ஆனா உங்க புத்தியில இருக்க ராஜய்யாவைத் தூக்கி தூர எறிங்க.. அப்போ உங்களால உங்களுக்கு பிடிச்சதை சாப்பிட முடியும்.. உங்களுக்கான வாழ்க்கையை வாழ முடியும்.. நீங்க நல்லபடியா சாப்ட்டு.. சந்தோசமா இருந்திங்கனா ராஜி எவ்ளோ சந்தோசப்படுவா தெரியுங்களா..? என் பொண்டாட்டி சந்தோசத்திலதான் என் சந்தோசம் அடங்கியிருக்கு..” என்றான் பிணைப்பான குரலில்.
மாறனின் பாசத்தில் கண்கலங்கிய அமுதா.. முதன் முறையாய் ராஜனைப்பற்றி மனம் திறந்தார்.. ‘ராஜனோட எனக்கு இரண்டு வருசம்தான் பழக்கம்.. அந்த இரண்டு வருசத்தில சிலநேரம்தான் என்னோட காதலனா இருப்பார்…” என்று காற்றோடு கரைந்த குரலில் சொன்னவர்.. ‘மத்த நேரமெல்லாம் ஒரு குழந்தையைப் போல என்னை அனுசரிப்பார்.. அப்பாம்மாவோட பாசம்ன்னா என்னன்னு அவர்கிட்டதான் உணர்ந்தேன்.. அப்படிப்பட்ட என் ராஜன்.. என்னை மறந்து வேற பொண்ணை கல்யாணம் செய்துக்கிட்டார்னு கேள்விபட்டதும்.. என்னால தாங்கிக்கவே முடியல..
நான் அப்பாம்மா இல்லாத அநாதைங்கிற உண்மையை அன்னைக்குத்தான் முதல்முறையா உணர்ந்தேன்.. செத்துடலாம்னு முடிவெடுத்து பால்ல விசமும் கலந்துட்டேன்.. நந்து கைல பாலை கொடுத்ததும் எனக்கா அம்மும்மான்னு மழலை பேச்சுல ஆசையா வாங்கினா.. நாம செய்ததுக்கு குழந்தை என்ன செய்யும்னு அந்த நிமிசம் தோணுச்சி.. பாலைவாங்கி கீழ ஊத்திட்டு பொண்ணுக்காக வாழனும்னு நினைச்சேன்.. வாழனும்னு முடிவெடுக்கும்போதே எப்போ சாகனும்னும் இருபது வருசத்துக்கு முன்னமே முடிவெடுத்துட்டேன்..” என்று உறுதியோடு அமுதா பேசிக்கொண்டிருக்க.. அதிர்ந்து போனான் மாறன்..
மருமகனின் பதட்டமறிந்து.. ‘பயப்படாதிங்க தம்பி.. இனி நான் அந்தமாதிரி தப்பான முடிவை யோசிக்கமாட்டேன்.. நம்ம இன்ஸ்டியூட் ஆரம்பிக்கும்வரை அந்த முடிவோடதான் இருந்தேன்.. இப்போ நந்துக்காக என் முடிவை மாத்திக்கிட்டேன்..
இந்த ஊருக்கு வந்ததாலதான் அம்மா இப்படி ஒரு முடிவை தேடிக்கிட்டாங்களோன்னு என் பொண்ணு ரொம்ப வேதனைப்படுவா.. என் சாவுக்கான காரணத்தை அவங்கப்பாமேல திணிப்பா.. அவ அப்பாவை மறுபடியும் வெறுக்க ஆரம்பிச்சிடுவா.. அப்பாவையும் பொண்ணையும் பிரிச்ச பாவம் எனக்கெதுக்கு..? ” என்று சொன்ன அமுதாவின் முகம் வெகுவாய் இலகியிருக்க..
இருபது வருசத்துக்கு முன்னாடி எடுத்த முடிவில கொஞ்சநாள் முன்ன வரைக்கும் திடமா இருந்திட்டு.. இப்பவும் ராஜய்யாக்காக மட்டுமே முடிவை மாத்திக்கிட்டு.. பொண்ணுக்காகன்னு சாக்குபோக்கு சொல்றிங்களா..? என நினைத்தவன்..
[the_ad id=”6605″]
‘என் அத்தை… கம்பீரம் கன்னியம்னு எல்லாத்திலயும் வின்னர்தான்..“ என பெருமையோடு சொன்னவன்.. ‘உங்களுக்கான வாழ்க்கையை வாழ்றதுலதான் நீங்க லூசரா இருக்கிங்க.. உங்களை ஒதுக்கினவங்க முன்னாடி நீங்க இப்படி இருக்கிறதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு.. நீங்க மட்டும் உங்களுக்கான வாழ்க்கையை வாழ்ந்துகாட்டுங்க.. அப்போதான் நான் உங்களை சென்ட்பர்சென்ட் வின்னர்னு சொல்வேன்.. “ என்று சிறு பிள்ளைக்கு சொல்வதுபோல் சொல்ல..
தன்னை சிறுமியாய் பாவிக்கும் மாறனை அமுதா செல்லமாக முறைக்க.. ‘அச்சோ முறைக்காதிங்கத்தை எனக்கு பயமாயிருக்கு..” என்றான் சின்ன சிரிப்போடு பயந்தவன்போல்.
அமுதாவின் முகம் இலக.. ‘யார் உழைப்பிலயும் நீங்க வாழல.. அப்போ எதுக்கு மத்தவங்களுக்காக உங்களை நீங்க வருத்திக்கனும்..?” என்றான் மீண்டும் சிறுமிக்கு புரியவைக்கும் குரலோடு..
உங்களால முடியலன்னு மருமகன்கிட்ட என்னை ஒப்படச்சிருக்கிங்களா ராஜன் .. என நினைத்த அமுதா முகம் கண்ணீரோடே இயல்பை தத்தெடுக்க.. சந்தோசமடைந்தவன்..
‘இனி நம்ம வீட்ல எதாவது விசேசம்னா.. சோபி நிவிமாதிரியே நீங்களும் நகை போட்டுக்கனும்.. பூ வச்சிக்கனும்.. சரிங்களா..?” என்றான் ஆசையாக.
‘ம்ம்.. அப்புறம்..?” என்றார் கிண்டலோடு.
‘அப்புறம்..” என இழுத்தவன்.. ‘வர சன்டே ராஜியை பிரியாணி செய்ய சொல்லட்டுமா..?” என்றான் கரிசனையாக.
‘ம்ம்.. அப்புறம்..?” என்றார் சம்மதிக்கும் சன்னக்குரலில்.
‘அப்புறம் அவ்ளோதான்..” என்று சந்தோசமாக சொன்னவன்.. ‘நீங்க சந்தோசமா இருந்திங்கனா என் பொண்டாட்டியும் சந்தோசமா இருப்பா.. இதுக்குமேல இந்த இளமாறனுக்கு என்ன வேணும்..?” என்றான் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் மனைவியை வாஞ்சையோடு பார்த்தபடி.
மருமகன் மகளோடு தனிமைய விரும்புகிறார் என்றறிந்த அமுதா.. ‘சரி தம்பி நான் கிளம்பறேன்..” என்று எழவும்..
‘சரிங்கத்தை..” என விடைகொடுத்தவன் மனைவியை பார்வையால் விழுங்கிக்கொண்டிருக்க.. சற்று நேரத்திலேயே சோபனாவும் நிவேதாவும் உள்ளே வர..
‘சோபி.. உனக்கு டையர்டா இருக்கும்.. போய் ரெஸ்ட் எடு..” என்று மாறன் சொல்ல..
‘ஏன் இந்த ரூம்ல ரெஸ்ட் எடுத்தா ஆகாதா..?” என்று நக்கலாக கேட்டு கட்டிலில் அமர.. சோபனாவோடு அமர்ந்த நிவேதாவும்.. ‘பிள்ளைத்தாச்சி பிள்ளையை எதுக்கு விரட்டுற..?” என்று சிரிக்க.. சோபனாவும் சிரிக்க.. இவர்களின் சிரிப்பு சத்தத்தில் கண்விழித்த நந்தினி..
தானும் சிரித்தவள்.. ‘யார் பொழப்பு இப்படி சிரிப்பா சிரிக்குது..?” என்று சிரிப்போடே கேட்க..
‘உன் புருசன் பொழப்புத்தான்..” என்று சோபனா சிரிக்க..
‘அப்பாவா ப்ரமோசனாகியிருக்கார்.. ஏன் அவருக்கென்ன..? என் புருசனை எதுக்கு கிண்டல் செய்றிங்க..?” என்று நந்தினி சண்டைக்கு கிளம்ப..
‘என் புருசன் அப்பாவானது தெரிஞ்சதும் என்னை விட்டு நகரவேயில்ல.. உங்க புருசன் உங்கப்பாவையும் தேவிம்மாவையும் தனியா கூட்டிட்டுப்போய் அவங்களோட அரட்டையடிச்சிட்டு.. அப்புறம் உங்கம்மாவோட உக்கார்ந்து மணிக்கணக்கா பேசிட்டிருந்தான்.. பொண்டாட்டி மாசமாயிருக்காளேன்னு கூட இல்லாம.. உங்களை விட்டு எல்லார்கிட்டயும் இளிச்சி இளிச்சி பேசிட்டிருந்த புருசனையே இத்தனை தாங்கு தாங்குறிங்க.. இன்னும் கண்டுக்கிட்டிருந்தா உங்களை கைலயே பிடிக்க முடியாதாட்டங்குது.. ” என்று சோபனா நந்தினியை உசிப்பிவிட.. நந்தினி மாறனை முறைக்க..
‘ஏய் வில்லி.. நீ கிளம்பு..” என்றான் பொய்க்கோபமாக.
‘இப்படி சொன்னா போகமாட்டேன்.. மூஞ்சை சிச்சாமாதிரி வச்சிக்கிட்டு சொன்னாத்தான் போவேன்…” என்று சோபனா தன் முகத்தை அஷ்டகோணலாய் காண்பிக்க..
‘ஈஈஈஈ..” என தானும் பழிப்பு காட்டியவன்.. பிறகு இயல்பாய் சிரிக்க..
‘போனாப் போகுது.. மதியத்திலயிருந்து ரொம்ப தவிக்கிறான் உன் தம்பி.. வா நிவி போலாம்..” என்று எழுந்த சோபனா தடுமாற.. ‘ஏய் பார்த்து சோபி..” என சட்டென தாங்கியவன்..
‘பார்த்து எழ மாட்டியா..?” என கடிந்து.. கைத்தாங்கலாய் கதவுவரை மாறன் வர..
‘விடு மாறா நான் பார்த்துக்கிறேன்..” என்று சோபனாவின் கைப்பிடித்து வெளியேறிய நிவேதா.. மாறன் மனமறிந்து கதவை சாத்திவிட்டு போக..
‘நிவிக்கான்னா.. நிவிக்காதான்..” என்று சிரித்து கதவை தாழிட்டு வந்தவன்.. ஆசையாய் அணைத்தான் மனைவியை.
‘ஒன்னும் வேணாம் போ..” என நந்தினி சிணுங்கித் திமிற..
‘ஒன்னுமே வேணாமா..?” என்றான் அவளின் வயிற்றை வருடியபடி.
‘வேணாம் போ.. என்பின்னாடியே வருவன்னுதான் ரூம்க்குள்ள வந்தேன்.. நீ வரவேயில்ல..” என்று நந்தினி முகம் வாட..
‘உன் பின்னாடியே வந்திருந்தேனா.. வர சன்டே உனக்கெப்படி அந்த சர்ப்ரைசை கொடுக்க முடியும்..?” என்றான் புதிராக.
‘என்ன சர்ப்ரைஸ்..?” என்றாள் ஆவலாக.
[the_ad id=”6605″]
‘அது சன்டேதான் சொல்வேன்.. வர சன்டே அன்னைக்கு நீ துள்ளி குதிக்கப்போற பாரு..” என்றான் அவளின் நெற்றியில் முட்டியபடி.
‘சன்டேக்குள்ள எதாவது கிப்ட் வாங்கிடுவ.. கிப்ட்லதான் என் சந்தோசம் இருக்கா..? போ..” என்று மீண்டும் முறுக்கினாள்.
‘என் ராஜிப்புள்ளைக்கு எதுல சந்தோசம் இருக்குன்னு எனக்கு தெரியாதா..?” என்று இதழோடு இதழ் கலக்க.. பலவீனமாக சற்று திமிறியவள்.. பிறகு இளமாறனின் இதழ்முத்தத்தில் வழக்கம்போல் மயங்கி தானும் இசைந்துகொடுக்க.. நீண்ட முத்தத்தில் மாறனின் மனம் அடுத்தநிலைக்காக ஏங்கித்தவித்தாலும்.. மனைவியின் உடல்நிலையை நினைத்தவனுக்கு மேற்கொண்டு முன்னேற தயக்கம் உண்டாக.. அவளிடமிருந்து மெல்ல விலகினான்.
மாறன் அணைப்பிலேயே அவனின் மனமறிந்தவள்.. ஏன் விலகினாய் என்பதுபோல் பார்க்க.. மனைவியின் பார்வை புரிந்தவன் லேசாய் சிரிக்க..
மாறன் தன்னை கண்டுகொண்டதைப் புரிந்தவள்.. தலைகுனிந்து ‘போ..” என வழக்கம்போல் சிணுங்கினாள்.
மென்மையாய் தன்னோடு சேர்த்தணைத்தவன்.. ‘போ.. ன்ற ஒத்த வார்த்தையிலயே என்னை கட்டிப்போட்டுடறடி..” என்று கிசுகிசுத்தவன்.. மிக மென்மையாய் ஆளத்தொடங்கினான் மனைவியை.