அத்தியாயம் – 3..2
மருத்துவர்கள் அதிக ஸ்ட்ரெஸ் ஆகவே ஆகாது.. என அறிவுருத்தி ராஜனை வீட்டிற்கு போலாம் என்று சொல்ல.. ராஜனை அவரின் வீட்டில் விட்டுவிட்டு.. தன் வீட்டிற்க்கு வந்து.. தன் தந்தையிடம் ராஜனின் நலம் பற்றி சொல்லி.. அவரை சமாதானப் படுத்தியவனுக்கு.. அவனின் வேலைகள் அதிகரித்திருக்க.. கம்பெனியிலிருந்த அழைப்பு வரவும்.. அப்பொழுதே கிளம்பிப்போனவன்.. வீடு வர இரவு இரண்டு மணியானது. தன் அம்மாவும்.. தங்கையும் தூங்கியிருக்க.. இராமுதான் கதவை திறந்துவிட்டார். உடலில் அதீத சோர்விருக்கவும்.. அந்த நேரத்திலும் அலுப்பு தீர குளித்தான். குளித்தவனுக்கு பசியெடுக்க.. அப்பொழுதுதான் படுக்க போன தன் அப்பாவிடத்தில்..
‘அப்பா பசிக்குது.. எதாவது சாப்பிட இருக்கா..?” என்றான்.
‘இப்படியாடா சாப்பிடாம கொள்ளாம வேலைசெய்வ..?” என்று கடிந்தவர்.. சமையலறை சென்று பார்க்க.. அங்கு ஒரு பாத்திரத்தில் மீந்திருந்த சாதத்தில் தண்ணீர் நிரப்பி.. அதுமட்டுமே இருந்தது. மாறனுக்கு கஞ்சி என்றால் பிடிக்கவே பிடிக்காது என்றுணர்ந்த இராமு.. என்ன செய்யலாம் என்று தடுமாறி பிரிஜ்ஜை திறக்க.. அங்கு வந்த மாறன்.. ‘என்னப்பா..? ஒன்னுமில்லையா..?” என்றான்.
‘இல்லடா.. பழையசாதம்தான் இருக்கு..” என்று தயங்கியவர்.. ‘இரு மாவிருந்தா தோசை ஊத்திதரேன்..” என்று ‡பிரிஜ்ஜை ஆராய..
அங்கு மாவும் இல்லை என்பதை புரிந்த மாறன்.. ‘கஞ்சியே கரைச்சுங்கப்பா..”
‘சரி.. நீ போய் உக்காரு.. நான் கரைச்சி எடுத்திட்டு வரேன்..” என்றதும் மாறன் ஹாலுக்கு வந்து தன் அப்பாவின் ஈச்சேரில் களைப்பாய் படுத்து தலைசாய்த்தான்.
கஞ்சியை ஒரு டம்ளரில் ஊற்றி.. தோதாக ஊறுகாயை மாறன் கையில் கொடுக்கவும்.. அந்த நேரத்தில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவும்.. ராஜய்யாவுக்குதான் என்னவோ.. ஏதோவென்று பதைத்துப்போய் கதைவை திறந்தான் மாறன். இராமனும் பின்னோடு வர.. அங்கு நின்றிருந்தாள் தன் கணவன் கிசோரோடு நிவேதா.
‘நிவி.. என்ன இந்த நேரத்தில..?” என்று பதறியவன்.. ‘முதல்ல உள்ள வா.. வாங்க மாமா..” என்று நிவேதாவை உள்ளே அழைத்து வந்து உக்கார வைக்கவும்.. சிறுபிள்ளைப்போல் அப்படி கண்ணீர் விட்டாள் நிவேதா.
‘அம்மாடி.. என்னடா ஆச்சு..? எதுக்கு இப்படி அழற..?” என்று இராமு பதற.. மாறன் கிசோரைப் பார்த்தான். கிசோர் சிரித்த முகத்தோடு நிவேதா அழுவதை ரசித்துக்கொண்டிருக்க..
‘என்ன ஆச்சு மாமா..?” என்று வேண்டுதலாய் கிசோரிடம் மாறன் கேட்க..
‘உங்கக்காக்கெல்லாம் இருப்பத்தி ஒன்பது வயசுன்னு வெளிலயேது சொல்லிடாதிங்க..” என்று கிசோர் மீண்டும் சிரிக்க..
‘உங்களை உங்க வீட்டைவிட்டு வேற வீட்டுக்கு அனுப்பிவைச்சா.. அப்போ தெரியும் உங்களுக்கு..” என்று சொல்லி கிசோரை முறைத்தாள் நிவேதா.
நிவேதாவின் பேச்சில் மீண்டும் கிசோர் சிரித்து.. ‘மாறா.. உங்கக்கா.. காலைல எழுந்தா.. எங்கம்மாவை பார்த்துக்கிறதிலிருந்து.. எங்கப்பாக்கு மாத்திர கொடுக்கிற வேலை வரைக்கும்.. எல்லாம் பார்த்து பார்த்து செய்வா.. ஆனா.. எங்க ரூம்க்குள்ள வந்திட்டாள்னா போதும்.. உடனே கிறுக்கு பிடிச்சிக்கும்.
நான் இருக்கிற வரைக்கும் எங்கம்மாவை ஒரு வேலை கூட செய்ய விடமாட்டேன்.. அவங்களால இப்ப திடீர்ன்னு வேலை செய்ய முடியாது.. சோபனாக்கும் எதுவும் வேலை பண்ண தெரியாது.. அவ சின்ன குழந்தை மாதிரி.. மாறன் காலைல குளிச்சதும்.. காபி குடிக்கலைன்னா.. அவனுக்கு வேலையே ஓடாது.. அப்பாக்கு என் சமையல்தான் பிடிக்கும்.. எல்லாரும் என்ன பண்றாங்கன்னு தெரியலை.. நான் ஆட்டி வச்ச மாவு வேற காலியாயிருக்கும்.. அம்மாக்கு கிரைண்டர்ல மாவு ஆட்ட தெரியாது…” என்று கிசோரின் பேச்சு நீண்டுகொண்டே இருக்கவும்..
‘மாமா.. ஸ்டாப்.. ஸ்டாப்.. கேக்கிற எனக்கே மூச்சு வாங்குது.. நீங்க கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க..” என்று மாறன் சிரிக்க..
‘என்னால முடியல மாறா.. அதான் கூட்டிட்டு வந்தேன்..” என்றான் இலகுவாய்.
‘அப்பாவும் இந்த நேரத்துக்கு சாப்பிடமாட்டார். மாறனுக்கும் கஞ்சின்னா.. ஆகவே ஆகாது..” என்று தானாய் முனுமுனுத்தவள்..
‘இதென்னது..? இந்த நேரத்துக்கு கஞ்சி கரைச்சியிருக்கு..?” என்று நிவேதா கேட்க..
‘மாறன் இப்பதான்மா வந்தான்.. பசிக்குதுன்னான்.. வீட்ல இதுதான் இருந்துச்சி..” என்று இராமு சொல்லிக்கொண்டிருக்கும்போதே கஞ்சியை எடுத்துக்கொண்டு கிச்சனுக்குள் புகுந்தவள்.. கிச்சடி செய்து.. சிறிது தேங்காய் சட்னியும் அரைத்து பத்து நிமிடத்தில் சூடான கிச்சடியோடு வந்து..
‘சாப்பிடு மாறா..” என்றாள்.
‘ரவை இருந்துச்சாம்மா..?” என்று இராமு கேட்க..
[the_ad id=”6605″]
‘அவசரத்துக்கு ஆகும்னு எல்லாம் வாங்கி வச்சேன்ப்பா.. இந்த சோபனாகிட்ட சொல்லிட்டுத்தான் போனேன்.. அவ சொல்லலையா..?” என்றாள்.
‘காலைல கூட ஒன்னுமே இல்லன்னு சொல்லிட்டு.. சோபிதான்மா கடையில டிபன் வாங்கிட்டு வர சொன்னா..” என்று இராமு சிரித்தார்.
‘சமைக்கிறதுக்கு கஷ்டப்பட்டுட்டு அப்படி சொல்லியிருப்பாப்பா..” என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்க..
சாப்பிட்டு முடித்த பிறகுதான்.. ‘சாரி மாமா.. பசியில உங்களை சாப்பிட சொல்லனும்னு கூட தோணாம சாப்டுட்டேன்..” என்றான் அசடு வழிந்தபடி..
‘பரவாயில்ல மாறா.. இந்த நேரம் வரைக்கும் நான் சாப்பிடாம இருந்தேன்னா.. என் பொண்டாட்டி என்னை ஒருவழியாக்கிடுவா..“ என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் சத்தத்தில் வெளியே வந்த சுமதி தன் மகளைப் பார்த்து பதறியவராய்.. ‘நிவி..” என்றார்.
‘அம்மா.. பயப்படாதிங்க..” என்று ஆரம்பித்த மாறன்.. தன் அக்கா அவளின் கணவரை படுத்திய பாடெல்லாம் சொல்லி முடிக்கவும்..
‘என்ன நிவேதா.. நீ என்ன சின்ன பொண்ணா..? இனிமே அதுதான் உன் வீடு.. அங்க இருக்கிறவங்கமேலதான் உன் கவனமெல்லாம் இருக்கனும்..” என்று அரைமணிநேரத்திற்கு மேல் தன் மகளுக்கு புத்தி சொல்லிக்கொண்டிருக்க..
‘கிசோர் தம்பி.. உங்கத்தை விட்டா விடியற வரைக்கும் பேசிட்டே இருப்பா.. நீங்க போய் படுங்க..” என்று சொல்லி.. தன் மனைவியிடம்..
‘சுமதி.. நீ போய் சோபனாகிட்ட படுத்துக்கோ..” என்றார் ரகசியமாய்.
அவர்களின் வீடு ஒரு ஹாலோடு.. பத்துக்கு பத்து என்ற வகையில் இரண்டு படுக்கையறை.. ஒரு சின்ன சமையலறை.. என்பதால்.. சோபனாவும்.. நிவேதாவும் ஒரு ரூமிலும்.. சுமதி ஒரு ரூமிலும் படுத்துக்கொள்வார்கள். மாறனும்.. இராமனும் படுப்பது எப்பொழுதும் ஹாலில்தான்.
தன் அம்மா சோபனாவின் அறைக்கு படுக்கப்போகும்போதே.. மாறனுக்கு முதலில் வீடு கட்டும் எண்ணம்தான் தோன்றியது. ஆனால் சோபனாவின் திருமணம் முடியட்டும் என்றும் யோசித்தான்.
மாறனுக்கு தன் அம்மா சோபனா ரூமில் படுப்பது ஒன்றும் குறையில்லை.. ஆனால் அவளும் திருமண வயதில் இருப்பதால்.. நிவி வந்தா அம்மா நம்மகிட்ட வராங்கன்ற எண்ணம் தோணிடுச்சினா.. என்ற தடுமாற்றம்தான் அவனை சங்கடமாய் உணரச்செய்தது. வீடு கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருந்தாலாவது இப்போதைக்கு மேலயாவது ஒரு ரூம் போடலாம்.. ப்ச்ச்.. என்று சலித்துக்கொண்டவன்.. பல யோசனையோடு கண்மூடினான்.
எப்பொழுதும் ஆறு மணிக்கு எழுந்து கொள்பவன்.. இன்று ஒன்பது மணியாகியும் எழாமல் இருக்க.. நிவேதா அவன் எழுவதற்காக காத்திருந்தாள். இதற்கும் காலை எழுந்ததும் நிவேதாவைப் பார்த்ததும் சந்தோசத்தில் சோபனா கத்திய கத்தலுக்கும் கூட மாறன் அசரவில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
‘நிவி.. இப்ப கிளம்பினாத்தான் நான் பத்து மணிக்கு பேங்க்ல இருக்க முடியும்..” என்று கிசோர் சொல்ல..
‘இன்னும் பத்தே நிமிசம் ப்ளீஸ்..” என்றாள்.
‘நான் இப்ப கிளம்பறேன்.. நீ எல்லாரோடவும் ரிலாக்சா பேசிட்டிரு.. நான் ஈவ்னிங் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்..” என்றான்.
‘இல்ல இல்ல.. அங்க அத்தை என்னை தேடுவாங்க.. அவங்ககிட்ட சொல்லமலே வந்துட்டோம்.. நானும் உங்களோடவே வரேன்.. என்னை வீட்ல விட்டுட்டு நீங்க பேங்க்குக்கு போங்க..” என்று நிவேதா கூற..
‘சரி.. அப்ப கிளம்பு..” என்று கிசோர் சொல்ல..
கிளம்பவும் மனம் வராமல் நிவேதா தடுமாற.. மாறனை எழுப்பினார் இராமு.
இரண்டு சத்தத்திற்கு பிறகு கண்திறந்தவனுக்கு நிறைந்த சிரிப்போடு நிவேதா தரிசனம் கொடுத்தாள். புன்சிரிப்போடு எழுந்தவன் பாத்ரூம் சென்று வந்து நிவேதா கொடுத்த காபியை வாங்கியதும்..
‘அவருக்கு டைம் ஆகுதாம்.. நான் கிளம்பறேன் மாறா..” என்றாள் நிவேதா.
‘உங்கக்காவை இங்கையே இரு.. நான் ஈவ்னிங் வந்து பிக்கப்பண்ணிக்கிறேன்னு சொன்னா கேக்கமாட்றா மாறா..” என்றான் கிசோர்.
அதற்கு மாறன் பதிலளிக்கும் முன்னமே.. ‘இல்ல மாறா.. அங்க அத்தை என்னை தேடுவாங்க..” என்று நிவேதா இடைமறிக்க..
பெருமையுடன் தன் அக்காவை பார்த்தவன்.. ‘நீ கிளம்பு நிவி…” என்றான் சிரிப்போடே..
‘தோசை மாவுக்கு அரிசி ஊற வச்சிருக்கேன்.. டைம் இருக்கும்போது பக்கத்தில இருக்கிற மிசின்ல போய் அரைச்சிட்டு வந்திடு மாறா.. சோபி தோசை மட்டும்தான் நைட்ல சாப்பிடுவா..” என்றாள்.
‘அது கிரைண்டர்ல எப்படி போடனும்..? எவ்ளோ நேரம் கழிச்சி போடனும்னு சொல்லு நிவி.. நான் வீட்லயே அரைச்சிடறேன்..” என்றான்.
மாறனின் கேள்விக்கு விளக்கமளித்து நிவேதா கிளம்பவும்.. ‘ஒரு நிமிசம் நிவேதா.. மாப்பிள்ளைக்கு எப்போ டைம் இருக்குதோ.. அப்போ வந்து இரண்டு மூனு நாளைக்கு கூட இருந்திட்டு போ.. ஆனா.. இனி இந்த மாதிரி நைட் நேரத்தில வீட்ல பெரியவங்ககிட்ட சொல்லாம வரக்கூடாது.. மாப்பிள்ளையையும் இப்படி கஷ்டப்படுத்தக்கூடாது..“ என்று கண்டிப்புடன் சொன்னார் சுமதி.
‘சரிம்மா..” என்று நிவேதா கிளம்ப.. சோபனாவும் அரிபரியாய் அலுவலகத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்தாள்.
‘சோபி… நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..” என்றான் மாறன்.
‘டைம் ஆச்சு மாறா.. ஈவ்னிங் பேசலாமா..?” என்றாள்.
‘இரண்டே நிமிசம்தான்.. நீ உன் வேலையை பார்த்துகிட்டே.. நான் சொல்றதை மட்டும் கவனமா உள்வாங்கிட்டினா போதும்..” என்று தன் தங்கையை ஆழ்ந்து பார்த்தான்.
‘சரி.. என்னன்னு சொல்லு..” என்று தலை வாரிக்கொண்டே கேட்டாள்.
[the_ad id=”6605″]
‘அப்பா.. அம்மா..” என்று அவர்களையும் அழைத்தவன்.. அவர்கள் வந்ததும்..
‘நான் உனக்கு மாப்பிள்ளை பார்க்கப்போறேன்.. இப்ப இருந்து ஒரு மூனு மாசத்துக்குள்ள உனக்கு கல்யாணம் செய்திடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்..” என்றான் உறுதியான குரலில்.
‘ரொம்ப சந்தோசம் மாறா..” என்று சுமதியும்.. ‘பணத்துக்கு எங்கடா போறது..?” என்று இராமுவும் ஒரு சேரக் கேட்க.. அவர்களை விடுத்து சோபனாவை பார்த்தான்.
‘ஏன்..? உனக்கெதாவது அவசரமா..? அதான் ரூட் கிளியர் பண்ணிக்க பார்க்கிறியா..?” என்று மாறனை கிண்டலாய் பார்த்தாள் சோபனா.
‘நீ எப்படி வேண்ணா எடுத்துக்கோ.. உன்கிட்ட சொல்லவேண்டியதை நான் சொல்லிட்டேன்.. நீ கல்யாணத்துக்கு தயாராகிக்கோ.. இப்ப கம்பெனிக்கு கிளம்பு…” என்றான் சீரியசாக.
பேசிக்கொண்டே ரெடியானவள்.. ‘எதுக்கு இப்ப இவ்ளோ சீரியசா பேசற..? கல்யாணம்தான..? பண்ணிக்கிட்டா போச்சி.. கூல் புரோ…” என்று சிரித்தபடியே சொல்லி கிளம்பினாள்.
சோபனா கிளம்பியதும்.. ‘விளையாடுறியா மாறா..? இப்பதான் நிவேதா கல்யாணம் முடிஞ்சிருக்கு.. அதுக்கே லட்சக்கணக்கில செலவு செய்திருக்க.. இப்ப உடனே சோபனா கல்யாணத்துக்கு எங்க போறது..? நிவேதாக்கு மாதிரியே சோபனாக்கும் செய்யனும்னுதான் நான் நிவிக்கே அவ்ளோ செய்ய வேணாம்னு சொன்னேன்.. என் பேச்சை கொஞ்சமாச்சம் கேட்டியா நீ…? இப்ப பெரியவளுக்கு ஒரு மாதிரியும்.. சின்னவளுக்கு ஒரு மாதிரியும் பண்ணமுடியுமா..?” என்று இராமு புலம்ப..
‘அப்பா.. நான் நேத்து ஒரு பேக் கொண்டு வந்தனே.. அதை எடுத்திட்டு வாங்க..” என்றான்.
இராமு எடுத்து வந்து கொடுத்ததும்.. அதை பிரித்து காட்டினான்.. கட்டு கட்டாய் பணம்.. ‘மாறா.. என்னடா இது..? நீ எதுவும் தப்பான வழியில போகலைல்ல…?” என்று பதறினார் சுமதி.
‘அம்மா.. நான் எந்த தப்பான வழிக்கும் போகலை.. எல்லாம் நேர்மையான வழியில சம்பாரிச்சதுதான்.. உங்களுக்கு நான் சொன்னா புரியாது.. ஆனா.. நான் எப்படி சம்பாதிக்கிறேன்னு ராஜய்யாக்கு நல்லா தெரியும்.. உங்களுக்கு என்மேல நம்பிக்கையில்லன்னா.. நீங்க ராஜய்யாக்கிட்ட கேட்டுக்கோங்க..” என்று மாறன் சொன்னதுதான்..
உடனே முகம் தெளிந்தனர் இருவரும்.. ‘அப்பா.. நிவேதா கல்யாணத்துக்கு நான் யார்கிட்டயும் கடன் வாங்கல.. அவ கல்யாண செலவு போக இன்னும் ஐம்பது லட்சம் கிட்ட என்கிட்ட பணம் இருக்கு.. இதுல பத்து லட்சம் இருக்கு.. எப்பவும் செக்காத்தான் வாங்குவேன்.. இந்த முறை அவன் நெட் கேசா குடுத்துட்டான்.. அம்மா பணத்தை எடுத்து பத்திரமா வைங்க..” என்றான்.
ராமன் வாய் பிளந்து நின்றார்.. ‘என்னப்பா.. என்மேல நம்பிக்கை இல்லையா..?”
‘அது இல்ல மாறா.. இவ்ளோ பணம் வச்சிருக்க.. வீட்டு செவுறெல்லாம் எப்ப இடிஞ்சி விழும்னே தெரியாது.. நீ ஏன் அதைப்பத்தி யோசிக்கல..?” என்றார் தன் மகனின் இந்த திடீர் வளர்ச்சியில் குரலிறங்கியவராய்.
‘நிவிக்காவை நல்ல இடத்தில கல்யாணம் செய்து கொடுக்கனும்னுதான் எப்பவும் என் மனசு அரிச்சிட்டே இருக்கும்.. அது நல்லபடியா முடியவும்.. நிவிக்கு அதிக நாள் கல்யாணம் தள்ளி போன மாதிரி சோபனாக்கும் ஆய்டக்கூடாதுன்னுதான் இப்ப உடனே பார்க்கலாம்னு இருக்கேன்.. வீடு எப்பன்னாலும் கட்டிக்கலாம்ப்பா.. நாமதான குடியிருக்கோம்..? முதல்ல சோபிக்கு பார்க்கலாம்..” என்றான்.
‘இல்லப்பா.. ஐம்பது லட்சம் இருக்குன்ற..? ஒரு பத்து லட்சம் போட்டாலே வீடு கட்டிடலாமேப்பா..” என்றார்.
‘என் கூடப்பிறந்தவங்களுக்கு இவ்ளோ பார்க்கிறவன்.. என் பெத்தவங்களை பார்க்கமாட்டனா..? எங்களை படிக்க வைக்கிறதுக்கு.. நீங்க ரெண்டு பேரும் பட்ட கஷ்டத்தை கண்கூட பார்த்தவன் நான்.. பத்து லட்சம் வீடெல்லாம் எங்கப்பாம்மாக்கு பத்தாது.. பெரிய பங்களா கட்டி உங்க ரெண்டு பேரையும் உக்கார வச்சி அழகு பார்க்கப்போறேன்.. அதுக்கு முன்ன.. முதல்ல சோபி கல்யாணம் முடியட்டும்… அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.. இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த வீடுதான் நமக்கு..” என்றான்.
‘மாப்பிள்ளையும் பார்த்து வச்சிட்டியா..? இல்ல இனிமேதான் பார்க்கனுமா..?” என்றார் சுமதி..
‘அம்மா.. எனக்கு பணம் சம்பாதிக்கத்தான் தெரியும்.. மாப்பிள்ளை பார்க்கிற வேலையெல்லாம் எனக்கு சரிவராது.. நீங்களே பாருங்க..” என்றான் சிரித்தபடி..
‘எங்களுக்கு யாரைத் தெரியும் மாறா.. நிவேதாக்கே சின்னைய்யா பார்த்து சொல்லவும் ஆச்சு.. அதுக்காக சோபனாக்கும் அவர்கிட்டயே போய் நிக்கமுடியாதில்ல…? பேசாம நீ வேலைசெய்யிற இடம்.. உன்னோட படிச்ச பசங்கன்னு.. நீயே யாராவது நல்ல பையனா பாரு..” என்றார் இராமு.
‘அப்படியும் பார்க்கிறேன்.. எதுக்கும் நம்ம கிசோர் மாமாகிட்டயும் சொல்லி வைக்கலாமாப்பா..?” என்றான்.
‘நம்ம மாப்பிள்ளைதான் எதுவும் வேணாம்னு சொல்லிட்டார் மாறா.. இந்த காலத்தில யார் அப்படி சொல்வா..? மாப்பிள்ளைகிட்ட சொன்னா… அவர் அவருக்கு சமமா பார்ப்பார்.. நம்ம நிவிக்கு செய்ததை விட சோபிக்கு மிச்சமா செய்யிற மாதிரி வரும்..” என்று ராமு எடுத்து சொல்ல..
‘சோபிக்கு இல்லாது என்னப்பா.? எவ்ளோன்னாலும் செய்திடலாம்.. பையன் நல்லவனா இருந்தா மட்டும் போதும்..” என்றான்.
‘மாறா..” என்று.. ஆத்மார்த்தமாய் அழைத்து.. கண்கலங்க பெருமையாய் கட்டியணைத்தார் தன் மகனை.
[the_ad id=”6605″]
தகப்பனின் அணைப்பிலிருந்து விலகியவன்.. ‘அம்மா.. முதல்ல உன் சின்ன பொண்ணுக்கு சமையல் கத்து கொடுங்க.. ஒரு டீ கூட ஒழுங்க வச்சி தர மாட்றா.. நிவியை கட்டிக்கிட்டதால நம்ம மாமா தப்பிச்சார்.. சோபிகிட்ட மாட்டிகிட்டு எவன் முழிக்கப்போறானோ..?” என்று சிரித்தான்.
‘நான் சமையல்கட்டுக்கு போயே பதினைஞ்சு வருசத்துக்கு மேல ஆச்சு மாறா.. எனக்கே எல்லாம் மறந்திடுச்சி.. சோறு குழம்புன்னா செஞ்சிடறேன்.. இந்த டிபன் செய்யிறதுதான் பெரும்பாடு.. நிவிதான் வகை வகையா செய்வா.. எனக்கு அதெல்லாம் செய்யவே தெரியாது.. இதுல நான் எங்க உன் தங்கச்சிக்கு கத்து கொடுக்கறது..?” என்று நிவேதாவை நினைத்து கண்கலங்கினார் சுமதி.
தன் அம்மாவை இலகுவாக்க.. சிரித்தபடியே இராமுவிடம்.. ‘அப்ப பேசாம நாமளே களத்தில இறங்கிடலாமாப்பா…?” என்றான்.
‘நிவிக்கு கல்யாணம் ஆனதில இருந்து நைட்ல நான்தாண்டா சமைச்சிட்டிருக்கேன்.. உங்கம்மா சும்மா பக்கத்தில நிக்கிறதோட சரி..” என்றார் வெக்க சிரிப்போடு..
‘பார்டா.. எனக்கிது தெரியாம போச்சே.. சரி விடுங்க.. இனி நீங்க தனியா கஷ்டப்பட வேணாம்.. நானும் உங்களுக்கு உதவி பண்றேன்..” என்று சிரித்தவன்.. குளிக்கப்போனான்.
அலுவலகம் சென்று மாலை நான்கு மணிபோல் வீட்டிற்கு வந்தவன்.. முதலில் கிரைன்டரை கழுவி.. அரிசியை போட்டதும்.. அவனின் போன் அடிக்க.. ‘சொல்லுங்க ராஜய்யா.. உடம்பு பரவாயில்லையா..?” என்றான்.
‘உடம்பெல்லாம் நல்லாத்தான் இருக்கு.. மாறா.. நாளைக்கு ஞாயித்து கிழமை.. நீ வீட்லதான இருப்ப..?” என்றார்.
‘ஆமா ராஜய்யா..” என்றான்.
‘அப்ப.. வரியா..? நாளைக்கு என் பொண்ணை பார்க்க..” என்றார் ஆர்வமாக.
‘அதுக்கு என்னைய்யா அவசரம்..? சோபிக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்னு இருக்கேன்.. அந்த வேலை முடிஞ்சதும் பார்த்துக்கலாமே.. அவளை வீட்ல வச்சிகிட்டு இந்த விசயத்தை யோசிக்க கூட எனக்கு கஷ்டமா இருக்கு..” என்றான்.
‘அட.. இதைப்பத்தியெல்லாம் அவகிட்ட இப்ப பேசவேணாம் மாறா.. அவளை பார்க்கனும்னு ஆசையா இருக்கு.. ஆனா.. தனியா போய் பார்க்க எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. பயங்கரமா மிரட்டுறா.. அதுக்குத்தான் நீ கொஞ்சம் என்கூட வாயேன்…“ என்று தன் வயதை மறந்து கெஞ்சினார்.
‘சரி ராஜய்யா.. நான் நாளைக்கு உங்க வீட்டுக்கு வரேன்..” என்று ஒப்புதல் கொடுத்தவனுக்கு மனம் உறுத்தியது. அவ எப்படி இருப்பா..? இது சரி வருமா..? சரி வரலைன்னாலும் சரி படுத்திதான் ஆகனும்.. ராஜய்யாவுக்காக.. என நினைத்துக்கொண்டே.. மாவு ஆட்டுவதில் கவனத்தை செலுத்தினான்.