‘நானே இப்போதான் ரொம்ப கஷ்டப்பட்டு கமலேசையும் உன் அக்காவையும் தூங்கவச்சி.. அவங்களை ஏமாத்திட்டு வந்தேன்.. கொஞ்சநேரம் ராஜய்யாவோட பேசிட்டிருந்திட்டு தூங்கறனே..” என மாறன் கெஞ்ச..
‘திருத்தவே முடியாது உங்களை..” என்று லாவண்யா சொல்ல..
‘யாரை திருத்தனும் லவ்ஸ்..?” என்றபடி ஜித்தேந்திரன் லாவண்யாவின் அறையிலிருந்து வெளிவர..
‘ப்ச்.. அப்பா முன்னாடி ஒழுங்கா லாவண்யா சொல்லு..” என்று லாவண்யா முனுமுனுப்பாய் கடிய..
‘உனக்கும் அர்ச்சணைதானா ஜித்..?” என்று மாறன் சிரிக்க..
‘லாவண்யாவை சுருக்கித்தான் லவ்ஸ் சொல்றேன்.. அதுக்கு முறைக்கிறா..” என்று ஜித்தேந்திரன் சிரிக்க.. ‘நீங்க பேசிட்டிருங்க மாறா.. நான்போய் கொஞ்சநேரம் படுக்கிறேன்..” என்று ராஜன் எழ…
‘உங்க பெரிய மாப்பிள்ளையோடதான் பேசுவிங்களா மாமா..?” என்று ஜித்தேந்திரன் கேட்க..
‘அதுக்கில்ல தம்பி..” என்று ராஜன் சங்கடப்பட..
‘மாறன்ணாவோட நான் எப்போன்னாலும் பேசிக்குவேன்.. நாளைக்கு மதுரை கிளம்பினேன்னா பின்னே எப்போ வருவேன்னு தெரியாது.. எனக்கு உங்களோடதான் டைம் ஸ்பென்ட் பண்ணனும்..” என்று சொல்ல..
‘சுத்தம்.. நீங்களும் இவங்களோட ஐக்கியமாக போறிங்களா…? எப்டியோ போங்க.. அப்பாக்கு மட்டும் உடம்புக்கு முடியாம ஆகட்டும்.. அப்போ இருக்கு இரண்டு பேருக்கும்..” என முறைத்து அவளறைக்குள் சென்றுவிட்டாள்.
‘மாறன்ணா எப்பவும் உங்களைப் பத்தியேதான் பெருமையா பேசுவார் மாமா..” என ஆரம்பித்த ஜித்தேந்திரனின் பேச்சில் ராஜனுக்கும் நேரம் போனதே தெரியவில்லை.. மாமனாருக்கு தன்மீதிருந்த அசௌகரியங்களை இரண்டுமணிநேரப் பேச்சிலேயே போக்கியிருந்தான் ஜித்தேந்திரன்.
சோபாவில் மனோமீது படுத்திருந்த மஞ்சரியைப் பார்த்த ஜித்தேந்திரன்.. ‘மாறன்ணா.. நம்ம பொண்ணு செம்ம க்யூட்.. அண்ணிகிட்ட சொல்லி பெரிய பூசனிக்காயா சுத்திபோட சொல்லுங்க..” என்று சொல்ல..
‘அதென்ன..? எப்பப்பாரு மஞ்சரியை மட்டும் கொஞ்சுற..? கமலேஷ் பெருசாகி உன்னை பழிவாங்கப்போறான்..” என்று மாறன் மிரட்ட..
‘இந்த ஏஞ்சல் காதணி விழாவுக்கு வரப்போய்தான என் ஏஞ்சலை பார்க்கமுடிஞ்சது.. மஞ்சுகுட்டி இல்லன்னா என் லவ்ஸ் எனக்கு கிடைச்சிருக்கமாட்டாளே..” என்றான் பெருமையாக. நேரம் இனிமையாக சென்றுகொண்டிருக்க.. ராஜனின் முகத்தினில் சோர்விருக்கவும்..
‘ராஜய்யா கொஞ்சநேரம் போய் படுங்க.. ஜித் நீங்களும் போய் ரெஸ்ட் எடுங்க..” என சொல்லி தானும் சற்றுநேரம் படுத்துறங்கினான்.
அழகான மாலை நேரம்.. ரம்யமான மெல்லிசையோடு லாவண்யா ஜித்தேந்திரனின் ரிசப்சன் இனிதே நடந்துகொண்டிருக்க..
‘எப்டிம்மா இருக்க..?” என்று நந்தினியை நலம் விசாரிக்க.. மலங்க மலங்க விழித்தாள் ராஜநந்தினி.
‘நான் தேவியோட அண்ணன்..” என்று சேகர் சொல்ல..
‘ம்ம்.. நல்லாயிருக்கேன்..” என்று தலை குனிந்தவள்தான் பிறகு நிமிரவேயில்லை.
சேகர் நந்தினியிடமிருக்க.. நந்தினியின் முகம் கவிழ்ந்திருக்க.. என்னவோ ஏதோவென பதறியபடி தேவி தன் அண்ணனிடம் வந்து நிற்க.. நந்தினி சங்கடமாய் தேவியைப் பார்க்க..
‘அண்ணா அவர் கூப்பிடறார்..” என்று சேகரை தனியே அழைத்து வந்தார் தேவி.
‘நான் ஒன்னுமே சொல்லலடா.. நல்லாயிருக்கியா..? நான் தேவியோட அண்ணன்தான் சொன்னேன்.. அதுக்கே முகம் வாடிட்டா..” என்று சேகர் வருந்த..
‘அவங்கம்மாவை யார் என்ன சொல்லாவங்களோன்ற பயம்.. இன்னும் அவளை விட்டு போகல..” என்று வருத்தப்பட்ட தேவி ..
‘உங்கப்பாகிட்ட உனக்குதான் முதல் உரிமை.. மனோ.. லாவண்யால்லாம் உனக்கு அடுத்ததுதான்னு நானும் எத்தனையோ சொல்லிப் பார்த்திட்டேன்.. அவளால எதையும் ஏத்துக்க முடியல..” என்றார் வேதனையாக.
சேகர் பிரமித்து நிற்க்க.. ‘மாந்தோப்பு பங்களாவை நந்தினி பேருக்கு எழுதிடலாம்னு மாறன்கிட்ட சொன்னார்.. வேண்டவே வேணடாம்னு நந்தினி மறுத்திட்டா.. உங்க அன்பும் பாசமும் மட்டும் போதும்ப்பா.. எதாவது செய்யனும்னா மஞ்சரிக்கு செஞ்சிக்கோங்கன்னுட்டா.. அவளுக்கு வாங்கின பொருளைக்கூட இன்னமும் அவ வாங்கிக்கல..“ என்றார் வருத்தத்தோடு.
ஏன் என்பது போல் சேகர் பார்க்க.. ‘அவளை சொல்லியும் புன்னியமில்ல.. பணக்கார பசங்களை வளைச்சிபோடுற எத்தனை பேரை நான் பார்த்திருப்பேன்னு.. மாமா அப்போ ரொம்ப அசிங்கமா அமுதாக்காவை பேசியிருக்கார்.. அதை நந்தினிகிட்ட அவரே உளறிக்கொட்டிட்டார்.. அது அவ மனசுல அப்படியே தங்கிடுச்சி..” என்றார் வேதனையாக.
‘இது எப்ப..?” என்று அதிர்ச்சியோடு கேட்க..
‘மாமா உடம்பு சரியில்லாம போனதும் அமுதாக்காகிட்ட மன்னிப்பு கேட்கனும் அவங்களை பார்க்கனும்னு சொல்லிட்டிருந்தார்.. நாங்க யாரும் அவங்ககிட்ட சொல்லல.. சொல்லும் தைரியமும் யாருக்கும் இல்ல.. லாவிதான் அழுதிட்டே போய் சொல்லியிருக்கா..
லாவியோட ஒருநாள் மதியம்போல வீட்டு வாசல்ல வந்து நின்னாங்க.. யாரும் எதிர்பார்க்கவே இல்ல.. அவர் சோபால உக்கார்ந்து ஆளுங்களுக்கு சம்பளக் கணக்கு பார்த்திட்டிருந்தார்.. அவங்களை பார்த்த அதிர்ச்சியில எங்க இரண்டு பேருக்கும் வாங்கன்னு கூட சொல்லத்தோணல..
எல்லாரும் பார்க்க வர இருக்காங்கன்னு மாமாவை ஹால்லதான் படுக்க வச்சிருந்தோம்.. யாரையும் கண்டுக்காம லகான் கட்டின மாதிரி நேரா மாமாகிட்ட போனவங்க.. அமைதியா அவரையே பார்த்திட்டிருந்தாங்க.. அவங்களை பார்த்ததும் மாமாக்கு பேச்சே வரல.. கண்ணீரோட கையெடுத்து கும்பிட்டார்..
‘அழாதிங்க.. உங்கமேல எனக்கு எந்த வருத்தமும் இல்ல.. எல்லா அப்பாவும் மகனுக்கு பெரிய இடத்தில பொண்ணெடுக்கனும்னுதான நினைப்பாங்க..? நீங்களும் அதைத்தான செய்திங்க..? வருந்தாதிங்க விடுங்கன்னு தன்மையாதான் மாமாக்கு ஆறுதல் சொன்னாங்க..
இருக்கமாட்டாம அந்த நேரம் பார்த்து சரசு தண்ணிகொண்டு வந்து அமுதாக்காகிட்ட நீட்டினா.. அவளை முறைச்சாங்க பாரு ஒரு முறைப்பு.. அவ்ளோதான் மாமாக்கு இன்னும் குற்ற உணர்ச்சி அதிகமாய்டுச்சி.. ரொம்ப அழ ஆரம்பிச்சிட்டார்..
ஒரு காலத்தில உங்க மகனை விரும்பின உள்ளம் இது.. அவர் என்னை விட்டு விலகினாலும்… சுயத்தோடவும் தன்மானத்தோடவும் நான் வாழ்றது உங்களுக்கு பெருமை இல்லையா..? எதுக்கு இப்படி அழறிங்கன்னு நிமிர்வோட கேட்டு..
அத்தனை பேர் முன்னாடியும் நந்தினியை என்பொண்ணுன்னு ராஜனும் சொல்லிட்டார்.. நந்தினியும் உங்களோட சேர்ந்துட்டாளே.. இன்னுமென்னனு கனிஞ்ச குரல்ல கேட்டு..
என்னை நினைச்சி வருந்தாதிங்க.. நான் சந்தோசமாத்தான் இருக்கேன்னு சிரிச்ச முகத்தோடவே மாமாக்கு ஆறுதல் சொல்லிட்டு கிளம்பிட்டாங்க..
அமுதாக்கா வந்துட்டு போன கொஞ்ச நேரத்திலயே நந்தினி வீட்டுக்கு வந்தா.. அமுதாக்கா இங்க பச்சத்தண்ணிகூட குடிக்காததை நினைச்சி வருந்திட்டிருந்த மாமா.. உங்கம்மாவை நான் தெரியாம பேசிட்டேன் கண்ணுன்னு அப்போ அமுதாக்காவை பேசினது அத்தனையும் நந்தினிகிட்ட சொல்லி அழவும்..
அவங்கம்மாபட்ட அவமானத்தை நினைச்சி ரொம்ப அழுதா.. அதனாலதானோ என்னவோ நந்தினியும் இதுவரை அவங்கப்பாகிட்டன்னு காசுபணம் எதுவுமே வாங்கினதில்ல.. அவரும் பொண்ணோட உணர்வை மதிச்சி எதுக்கும் கம்பெல் செய்ய மாட்டார்..” என்று தேவி விளக்க..
(அமுதா வந்துபோன ஒருவாரம் கழித்து தண்டபானி இறந்திட.. அவரின் சாவுக்கெல்லாம் அமுதா செல்லவில்லை.. ஏன் வரலை என்று அமுதாவை கேட்போரும் யாருமில்லை..)
‘இவ்ளோ நடந்திருக்கு.. என்கிட்ட ஏண்டா சொல்லவே இல்ல..?” என்று சேகர் கேட்க..
‘சொல்லக்கூடாதுன்னு இல்லண்ணா.. மாமா அப்போ இருந்த நிலையில எனக்கு அவர்மேலதான் கவனம் இருந்தது.. அதோட நீ எதுன்னாலும் புரிஞ்சிக்குவ.. சின்னண்ணுங்க எதாவது ஆரம்பிச்சா என்ன செய்றதுன்னும்.. தேவையில்லாத சச்சரவு எதுக்குன்னும்தான் சொல்லல..” என்றார்.
‘அமுதாப் பொண்ணு எப்படியிருக்கு..?” என்று அனைத்து மனபாரங்களும் நீங்கி அக்கறையோடு நலம் விசாரிக்கவும்..
‘நந்தினிக்கு மேல அவங்கம்மா ரோசக்காரங்க.. நான் பணம் கொடுத்தா அத்தை சங்கடப்படுவாங்க.. நீயா இருந்தாலும் நிறைய பணம் கொடுத்தினா அத்தை வாங்கிக்கமாட்டாங்க.. அதனால சம்பளப் பணத்தில பாதியை உங்கம்மாக்கிட்ட கொடுத்திடுன்னு மாறன் சொல்லியிருக்காப்பில.. நந்தினியும் சம்பளத்தில இருந்து இருபதாயிரம் கொடுத்திருக்கா.. அவங்க பொண்ணுகிட்டயே பணம் வாங்க மறுத்து.. இன்ஸ்டியூட்டை பார்த்துக்கிறதுக்கு மாறன்கிட்ட சம்பளம் வாங்கிக்கிறேன்னாங்களாம்..
என்கிட்ட பணம் வாங்கிக்கலன்னா நான் வேலையை ரிசைன் செய்திடுவேன்னு மிரட்டவும்தான் நந்தினிகிட்ட பணம் வாங்கிக்கிறாங்க..” என்றார்.
சேகர் பிரம்மித்து நிற்க்க.. ‘அன்னைக்கு நீங்க கல்யாணத்தில பேசுனதை நினைச்சி.. மறுபடியும் அவங்கம்மாவையேது தப்பா பேசிடுவிங்களோன்னு லாவி கல்யாணத்துக்கு கூட நந்தினி வரலன்னுதான் சொன்னா.. அப்படி எதுவும் ஆகாதுன்னு.. நான்.. அவர்.. மாறன் எல்லாம் சேர்ந்து சொன்னதாலதான் மதுரைக்கு வந்தா..
கல்யாணத்தில நீங்க அவகிட்ட எதுவும் பேசலல்ல..? இப்போ பேசவும் எனக்கு கொஞ்சம் பதட்டமாகிடுச்சி.. அதான் வந்தேன்..” என்று தேவி அக்கறையோடு சொல்ல..
தன் தங்கையை பெருமையோடு பார்த்த சேகர்.. ‘நீ கவலைப்படாதடா.. சின்னவனுங்ககிட்டயும் அமுதாப் பொண்ணைப் பத்தி சொல்லிதான் வச்சிருக்கேன்.. இனியாரும் அவங்களை எதுவும் சொல்லமாட்டாங்க..” என்றார் உறுதியாக.
‘சரிண்ணா.. நான்போய் வந்தவங்களை பார்க்கிறேன்..” என்று நிம்மதியோடு மகளின் ரிசப்சனை கொண்டாடினார் தேவி.
————————————————–
‘கல்யாண பிசியில என் பொண்டாட்டியை சரியா கவனிக்க முடியாம போய்டுச்சி..” என்று தாபக்குரலோடு நந்தினியை கட்டியணைக்க..
‘இரண்டு பிள்ளை பெத்தாச்சி.. ஒன்னும் நம்மகிட்ட படுக்கமாட்டுது.. உனக்கும் அது வாட்டமா போய்டுச்சி..” என்று நந்தினி முறைக்க..
‘ராஜய்யாவும் குட்டி அமுதாவை நாங்களே பார்த்துக்கிறோம்னு அஞ்சுவருசமா அங்கையே வச்சிகிட்டார்.. மண்ணு மாமா மண்ணு மாமான்னு நம்ம பொண்ணும் மனோவோடதான் இருக்கா.. கமலேஷ்க்கு எங்கப்பா கதை சொன்னாத்தான் தூங்கறேன்றான்.. கணக்கு சரியா வரனும்ல..? அதான் உங்கப்பாக்கு என்பொண்ணு.. எங்கப்பாக்கு என்மகன்னு பிரிச்சிவிட்டிருக்கேன்..” என பேசிக்கொண்டே ராஜியின் முகத்தோடு தனது முகத்தை உரச..
‘இப்போ புதுமாப்பிள்ளை நீயா..? இல்ல ஜித்தா..?” என நந்தினி நைட்டியை கையிலெடுக்க.. ‘நான் பழைய மாப்பிள்ளைதான்.. ஆனா நீதான் தினம்தினம் எனக்கு புதுசா தெரியற..” என்று மனைவியை அணைக்க..
‘இளா..” என்றாள் ஏகத்துக்கும் இளகிய குரலில்..
இத்தனை நேரம் கடுகடுத்தவளின் குரல் திடுமென மாறவும்..
‘ரா..ஜ்ஜீ…” என்று உற்ச்சாகத்தோடு மின்னலென தன்புறம் திருப்ப..
‘இந்த ஊர்ல எனக்கு வேலை கிடைக்கலனா.. நீ எனக்கு கிடைச்சிருக்கமாட்டல்ல..?” என்று கண்கலங்க..
‘ஏய் என்ன இது.. இத்தனை வருசம் கழிச்சி இப்படி யோசிக்கிற..?” என்று கேட்க..
‘எப்படி இளா என்னை பார்த்ததும் உனக்கு பிடிச்சிச்சு..?” என்றாள் காதலோடு..
ஒருவேளை போட்டுவாங்குறாளோ.. எத்தனை டிசைனா கேட்டாலும் நீ அசந்திடாதடா மாறா.. ஓய் ராஜி.. பொய் கணக்கு எழுதி பொழப்பு நடத்துற எங்ககிட்டையே வா..? என மனதில் நினைத்தவன்..
‘இப்படிபட்ட அழகியை பார்த்ததும் பிடிக்கலனாதான் ஆச்சரியப்படனும்..” என்று தன் மனைவியை அணைக்க..
‘நல்லவேளை உனக்கு என்னை பிடிச்சது..” என்றாள் பெருமையாக.
‘என்னாச்சி ராஜி உனக்கு..?” என மாறன் வாஞ்சையாக கேட்க..
‘இருபத்திஐந்து வருசமா அப்பாயில்லாத எனக்கு ஒரு அன்பான அப்பா கொடுத்திருக்க.. எனக்கு விபரம் தெரிஞ்சநாள்லயிருந்து நான் பார்க்காத.. புது அம்மாவை கொடுத்திருக்க.. கூடவே தேவிம்மா.. அவங்களைப்பத்தி சொல்றதுக்கு வார்த்தையே இல்ல..” என்று ஆனந்த கண்ணீர் வடித்தாள் ராஜநந்தினி.
‘என்னால ஒன்னும் இல்ல ராஜி.. உங்கம்மாவோட பெருந்தன்மையும்.. உண்மையான அன்பும்.. ராஜய்யா தேவிம்மாவோட நல்ல மனசும்தான் இதுக்கெல்லாம் காரணம்..“ என்று சொல்ல..
‘நீ சொல்றதும் உண்மைதான்.. ஆனாலும் என் பிறப்பு தெரிஞ்சும் நீ என்னை கைவிடலல்ல..? நம்ம கல்யாணம் நடக்கப்போய்தான.. நாரதர் கலகம் மாதிரி அன்னைக்கு நடந்த கலகத்தால.. என் அம்மாவோட முடிஞ்சிபோன வாழ்க்கையில சின்னதா ஒரு துவக்கம் வந்திருக்கு..? நீதான் இளா எல்லாத்துக்கும் காரணம்..” என்று உளமாற சொல்லி.. கணவன் தோள்சாய..
வியாக்கியானம் பேசி சான்சை விட்டுடாதடா மாறா என நினைத்தவன்.. ‘அப்போ இன்னைக்கு என்ன கேட்டாலும் கிடைக்கும்னு சொல்லு..” என்று மனைவியை சேர்த்தணைக்க..
‘ம்ம்..” என்றாள் சிணுங்கலாக..
‘வேணாம்டி.. ஏற்கனவே பத்து பதினைஞ்சி நாளாய்டுச்சி.. ரொம்ப காஞ்சிபோயிருக்கேன்.. யோசிச்சிக்கோ..” என்று எச்சரித்தபடியே வன்மையாக இதழோடு இதழ் கலக்க.. நீண்ட முத்தத்திற்கு பிறகு.. மூச்சுவாங்க விலகியவள்..
‘நீதான் காஞ்சிபோயிருக்கியா..?” என்று முனுமுனுக்க.. கண்களை அகலவிரித்தவன்.. ‘என் ராஜிப்புள்ள நாளுக்கொரு தினுசா தெரியறாளே..” என்று தாபத்தோடு கிசுகிசுத்தவாறே மனைவியின் ஏக்கம் தணிக்க.. மின்னல் வேகத்தில் செயல்பட ஆரம்பித்தான்..
இனி எல்லாம் சுபம் சுபம் சுபமே..