ஒரு முடிவின் துவக்கம்…
அத்தியாயம் – 4
‘அம்மும்மா.. என்னோட ஸ்கூட்டியை எனக்கு அனுப்பி வைங்க..” என்று அமுதாவிடம் சினுங்கினாள்.
‘நடந்தா கால் மணிநேரத்தில ஸ்கூலுக்கு போய்டலாம்.. அதுக்கு ஸ்கூட்டியா..?” என கோபமாய் கேட்பதுபோல் கேட்டார் அமுதா.
‘ஸ்கூலுக்கு நடந்தே போய்டுவேன்.. கடைக்கு எங்கையாவது போகனும்னா ரொம்ப தூரம் நடந்து போகவேண்டியதா இருக்கு.. பஸ்சும் டைம் கணக்குக்குத்தான் வருது அம்மும்மா..” என்று கெஞ்சினாள்.
‘சரி.. உன் ஸ்கூட்டி அனுப்பி வைக்கிறேன்.. ஆனா.. வண்டியை எடுத்துகிட்டு சும்மா ஊர் சுத்திட்டிருக்கக் கூடாது.. வாரத்துக்கு ஒரு முறை சன்டே மட்டும்.. அதுவும் எதாவது வாங்க வேண்டிய தேவை இருந்தா மட்டும்தான் வெளில போகனும்.. சரியா..?” என்று அமுதா கண்டிப்போடு கேக்க..
‘ஓ.கே…” என்று ஸ்கூட்டி வரும் சந்தோசத்தில் சத்தமாய் கத்தினாள்.
‘அடுத்த வாரம் செகன்ட் சார்ட்டடேதான..? ஸ்கூல் லீவா இருந்தா.. வெள்ளிகிழமை நைட் கிளம்பி இங்க வரியா நந்து…” என்று ஏக்கமாய் அமுதா கேட்க..
‘நீங்க என்னை இந்த வாரமே வர சொல்லுவிங்கன்னு பார்த்தேன்.. நீங்க கூப்பிடலயில்ல.. போங்க.. நான் அடுத்தவாரமும் வரமாட்டேன்..” என்று நந்தினி கண்கலங்கினாள்.
‘நீதான இன்னைக்கு ஸ்கூல் இருக்குன்னு நேத் நைட் சொன்ன..? நாளைக்கு ஒரு நாள் லீவ்ல வந்துட்டு போனின்னா.. ரொம்ப அலைச்சலா இருக்கும்னுதான் நான் கூப்பிடலை நந்து..” என்று அமுதா சமாதனமாய் சொல்ல..
‘நாளைக்கெல்லாம் நான் மட்டும் இங்க தனியா இருந்து என்ன பண்றது..?”
‘வீட்டுக்கு முன்னாடி நிறைய இடமிருக்குல்ல..? எதாவது பூச்செடி வாங்கி வந்து நட்டு வை.. மேல பரண்ல கடப்பாரை.. கொடுவாள்.. இப்படி கொஞ்சம் சாமான் இருக்கும் நந்து.. செடி வைக்க உனக்கு எது தேவையோ அதை எடுத்துக்கோ.. தலைக்கு எண்ணை தேய்ச்சி குளி..” என்று வேலைகளை ஆடுக்க ஆரம்பிக்க..
‘சரி.. சரி.. நீங்க சொன்னமாதிரியே பண்றேன்.. இந்த ரெண்டு வேலையை செய்து முடிக்கவே எனக்கு சாய்ங்காலமாகிடும்.. நாளைக்கு டைம்பாஸ்க்கு இந்த வேலைமட்டும் போதும்..” என்று இடைமறித்தாள் நந்தினி.
அன்றிரவு தூங்கும்போது.. அடடா.. அம்மும்மாகிட்ட ஒரு கட்டிலும் பெட்டும் வாங்கி தர சொல்லியிருக்கலாமே.. ப்ச்.. இந்த தரையில படுத்தா.. வந்த தூக்கம்கூட ஓடிப்போய்டுது.. சரி.. நாளைக்கு கால் பண்ணும்போது இதுபத்தி சொல்லலாம்.. என நினைத்துக்கொண்டே ஒரு புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு படுத்தவள்.. அதில் கவனமானாள்.
அடுத்த நாள் காலை ஏழுமணிபோல் எழுந்தவள்.. பிறகு எண்ணை தேய்த்து குளிக்க வேண்டி.. இப்போதைக்கு முகம் கை கால்.. என அரைகுறையாக தன்னை சுத்தம் செய்துகொண்டு.. சத்து மாவு கஞ்சி செய்து குடித்துவிட்டு.. டவுனுக்கு போக வெளியே வரவும்.. கால் மணிநேரம் நின்றதுமே பொறுமையை இழந்தவள்.. அங்கு பஸ்சிற்க்காக காத்திருந்தவர்களிடம் பஸ் எப்போ வரும் என கேக்க.. இப்போ வந்திடும்.. என சொல்லிக்கொண்டிருக்கும்போதே பஸ்சும் வந்துவிட.. பயணம் செய்தவள்.. கள்ளக்குறிச்சியில் இறங்கி.. தேவையான பூச்செடிகளை வாங்கிக்கொண்டு ஆட்டோகாரரிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தாள்.
[the_ad id=”6605″]
‘ஏப்பா.. உங்க ஊரைத்தான் பாப்பா சொல்லுது.. கொஞ்சம் எடுத்து சொல்லுப்பா.. அதிகமா காசு கேக்கிறேன்னு வம்பு பண்ணுது..” என்று பக்கத்து ஆட்டோக்காரனான முத்துவிடம் சொல்ல..
‘எங்கங்க போகனும்..?” என முத்து கேக்க..
‘கச்சிராப்பாளையம்..” என்று நந்தினி சொல்ல.. நம்ம ஊர்ல இந்த பொண்ணை இதுவரை நான் பார்த்ததில்லையே.. என யோசித்தவன்.. அவளின் அட்ரசை கேக்கவும்.. அவள் சொன்னவுடன்.. ஆச்சரியப்பட்டவன்..
‘உங்க வீட்டுக்கும் பின்னாடி வயல்.. எங்களோடதுதான்.. பக்கத்து பக்கத்து வீட்டுக்காரரா ஆகிட்டோம்.. வாங்க நானே கூட்டிட்டு போய் விடறேன்..” என்றான் சற்றே வழிசலாய்.
‘நீங்கன்னா என்ன..? யார்ன்னா என்ன..? முதல்ல சவாரிக்கு எவ்ளோ பணம்னு சொல்லுங்க..” என்று அவள் கராறாய் கேக்க..
‘உங்களுக்கு எவ்ளோ ஞியாயம்னு படுதோ.. அதை மட்டும் கொடுங்க..” என்று அவளை சமாதானம் செய்து பூத்தொட்டியை தூக்கி ஆட்டோவில் வைப்பதற்கு உதவியும் செய்து அவளிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே ஆட்டோவை ஓட்ட ஆரம்பித்தான்.
வீட்டிற்கு வந்ததும் தானாகவே பூச்செடிகளை எடுத்து கீழே வைத்தவன்.. ஆட்டோவை எடுக்கப்போக.. ‘ஹலோ.. இந்தாங்க பணம்..” என்று பணத்தை அவள் கொடுக்க.. எதுவும் சொல்லாமல் வாங்கி சென்றான்.
வீட்டினுள் சென்றவள்.. உடை களைந்து.. நேற்றிரவு போட்டிருந்த நைட்சூட்டையே எடுத்து போட்டுக்கொண்டு.. தன் பின்னலை அவிழ்த்தவள்.. அதற்கு எண்ணை வைத்து.. கொண்டை போட்டு.. மணி பார்க்கவும் பத்தரை என்றது. மேலே பரணில் இருக்கும் கடப்பாரையை எடுத்தவள்.. வெளியே வந்து செடிகளை நடுவதற்கு பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தாள்.
‘குடும்மா.. என் பையன் பண்ணுவான்..” என்ற குரலுக்கு தலைநிமிர்ந்தாள்.
அங்கு சற்றுமுன் தன்னை அழைத்து வந்த ஆட்டோகாரன் நின்றிருக்க.. கூடவே இன்னொருத்தரும்.. அவனின் அப்பா போல.. என நினைத்தவள்..
‘பரவாயில்லைங்க.. நான் பார்த்துக்கிறேன்..” என்றபடி அவர்களை கவனியாது தன் வேலையில் கவனமானாள்.
‘பராவயில்ல கொடுங்க.. நீங்க ரொம்ப சிரமப்படுறிங்க.. இந்த வேலையெல்லாம் உங்களுக்கு பழக்கமில்லன்னு.. பார்த்தாலே தெரியுது.. நான் பண்றேன்..” என்று அவளிடமிருந்து கடப்பாரையை.. முத்து.. கிட்டதட்ட பிடுங்குவது போல் பிடித்து இழுக்க..
அதில் கோபமுற்றவள்.. ‘இங்க பாருங்க.. என் வேலையை செய்ய எனக்கு தெரியும்.. நீங்க கிளம்புங்க..” என்று குரலுயர்த்தினாள்.
‘அட.. என்னம்மா நீ..? உங்கம்மா மாதிரியே சீருற..? உதவி செய்யத்தானே கேட்டோம்.. இது ஒரு தப்பா…?” என்று முத்துவின் அப்பா கேட்க..
தன் அம்மாவைப் பற்றி சொன்னதும்.. ’உங்க பேர் என்ன..?” என்றாள்.
‘முத்து..” என்று முத்து பதிலளித்து பல்லிளிக்க..
‘நான் உங்க பேரை கேட்டேன்..” என்று முத்துவின் அப்பாவை பார்த்தாள்.
‘வேலாயுதம்..” என்றதும்..
[the_ad id=”6605″]
ஓ.. ஹோ.. நீதானா அது…? என நினைத்தவள்.. ‘மிஸ்டர் வேலாயுதம்.. உங்களோட நூறு ஏக்கர் நிலத்துக்கு முன்னாடி.. எங்களோட இரண்டாயிரம் சதுரடி நிலம் இருக்கிறது.. உங்களுக்கு அப்போ இருந்தே ரொம்ப தொல்லையா இருக்குல்ல…? இந்த நிலத்துக்காக எங்கம்மாவை இரண்டாந்தாரமா கல்யாணம் செய்து.. கட்டுன பொண்டாட்டிக்கு துரோகம் பண்ற அளவுக்கு நீங்க துணிஞ்சவங்கன்னு உங்களோட அருமை பெருமையெல்லாம் எனக்கு எங்கம்மா சொல்லித்தான் இங்க அனுப்பியிருக்காங்க.. உங்க நினைப்பெல்லாம் இங்க செல்லுபடி ஆகாது.. இப்ப ஒழுங்கா இடத்தை காலி பண்றிங்களா..? இல்லயா..?” என்று நந்தினி மிரட்ட..
அவளின் பேச்சு தோரணையில் வேலாயுதமும் முத்துவும் வாயடைத்து போன அதே நேரம்.. அங்கு வந்த இளமாறனும்.. ராஜனும் கூட ஸ்தம்பித்து நின்றனர்.
‘ஏய்.. என்ன தைரியம் இருந்தா.. எங்கப்பாவை பேர் சொல்லி கூப்பிடுவ..?“ என்று முத்து சீற..
‘இந்த கேடுகெட்டவனோட மகன்தான் நீன்னு.. எனக்கு தெரியாம போச்சி.. முன்னமே தெரிஞ்சிருந்தா.. நான் உன் ஆட்டோல ஏறியிருக்கவே மாட்டேன்..” என்று சொன்னவள்.. அப்பொழுதுதான் அங்கு நின்றிருந்த ராஜனைப் பார்த்ததும்..
‘வாங்க ஊர் முக்கியஸ்த்தரே… இதுதான் உங்க ஊரோட பெருமையா..? இப்படி தனியா இருக்கிற பொண்ணு புள்ளைக்கிட்ட சீறிட்டிருக்காங்க.. நீங்க வேடிக்கை பார்த்திட்டிருக்கிங்க..?” என்று ராஜனையும் நக்கலாகவே கேட்டு வைத்தாள்.
இளமாறன் நந்தினியையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்க.. ‘வேண்டாம் வேலா.. ஒழுங்கா உன் மகனை கூட்டிட்டு போய்டு..” என்று ராஜன் மிரட்ட..
‘அதை சொல்ல நீங்க யாரு..? நான் இவளைத்தான் கல்யாணம் செய்துக்க போறேன்..” என்று முத்து சவால் விடுவது போல் சொல்ல..
‘இந்த சொத்துக்காக உங்கப்பனுக்கு எங்கம்மா கேட்டுச்சி.. அது முடியலைன்னதும் உனக்கு நான் கேக்கிறேனா..? ஆளும்.. முகரையும்.. செருப்பு பிஞ்சிடும்.. போடா முதல்ல..” என்று நந்தினி பெண்சிங்கமாய் எகிற..
‘என்னையே போடாங்கிறியா.. அவ்ளோ உரிமை என்கிட்ட உனக்கு எங்கயிருந்து வந்தது..?” என்று கேட்டுக்கொண்டே முத்து நந்தினியை நெருங்க..
‘முத்து.. இன்னும் ஒரு அடி எடுத்து வச்ச.. நடக்கிறதே வேற..” என்ற இளமாறனின் குரல் கர்ஜனையாய் வெளிவர..
‘இதப்பார்டா.. எங்களை மாதிரி முதலாளிங்ககிட்ட.. அண்டி பிழைக்கிற நாய் நீ.. நீ.. என்னை மிரட்டுறியா..?” என்று இளக்காரமாய் கேட்டுக்கொண்டே நந்தினியின் கையை முத்து பிடிக்க.. அவளின் இன்னொரு கை முத்துவின் கன்னத்தை பதம் பார்த்த அதே நொடி.. இளமாறனின் ஒரு உதையில் தூரப்போய் விழுந்தான் முத்து.
சீறிக்கொண்டு பேச வந்த வேலாயுதத்தை இடை மறித்தவன்..
‘இங்க பாருங்க.. உங்ளுக்கு நூறு ஏக்கர்க்கு மேல சொத்திருக்குன்னு ஊரை வேண்ணா நீங்க ஏமாத்திட்டிருக்கலாம்.. ஆனா என்னை ஏமாத்த முடியாது. உங்ககிட்ட இருக்கிற சொத்துல பாதிக்கு மேல உங்களுது இல்லன்னு எனக்கு நல்லவே தெரியும்.. உங்க பாட்டன் பண்ணின சதி வேலையால.. எவ்ளோ ஊரான் சொத்து உங்க கையில இருக்கு.. அப்புறம் பாரஸ்ட்டுக்கு சேர்ந்த சொத்தையும் நீங்க உங்க சொத்துன்னு சொல்லிகிட்டு.. அதுல எத்தனை ஏக்கர் நிலத்தில விவசாயம் பார்த்திட்டிருக்கிங்க.. அதில்லாத.. புறம்போக்கு நிலம் எவ்ளோங்கிற விவரமெல்லாம்.. கனக்கச்சிதமா உங்களுக்கு நான் சொல்லவா..?” என சவாலாய் கேட்டவன்..
‘வீணா இந்த சின்ன இடத்துக்கு ஆசைப்பட்டு இருக்கிறதை இழந்திடாதிங்க..‚” என்று மாறன் எச்சரிக்கையாய் சொல்ல..
‘மாறா என்ன சொல்ற..? ஊரான் சொத்தை பிடிங்கி வச்சிருக்கானுங்கன்னு மட்டும்தான் எனக்கு தெரியும்.. நீ என்ன..? இன்னும் என்னென்னவோ சொல்ற..?” என்று ராஜன் ஆச்சரியமாய் கேட்க.. வேலாயுதம் வாயடைத்துப்போய் நின்றிருந்தான்.
‘ஆமாம்.. ராஜய்யா.. இவனுங்க இந்த வீட்டை இடிக்கறேன்னு சொன்னதும்.. நீங்க இவங்ககிட்ட என்னைக்கு சண்டைக்கு போனிங்களோ.. அன்னைக்கே இவனுங்களைப் பத்தி விசாரிக்க ஆரம்பிச்சிட்டேன்.. அதுக்கப்புறம் தெரிஞ்சதுதான் இவ்ளோ விசயமும்.. சரி.. மறுபடி எதாவது பிரச்சனை வந்தா.. அப்போ பார்த்துக்கலாம்னு விட்டுவச்சேன்..” என்று ராஜனைப் பார்த்து சொன்னவன்..
[the_ad id=”6605″]
‘எங்க இல்லன்னு சொல்ல சொல்லுங்க பார்ப்போம்..” என்று மாறன் சவாலாய் வேலாயுதத்தை பார்க்க.. யாருக்கும் தெரியாத நம்முடைய ரகசியமெல்லாம் இவனுக்கு தெரிந்திருக்கிறதே.. என்ற அதிர்ச்சியில்..
‘டேய் முத்து.. வாடா போலாம்..” என்ற வேலாயுதத்தின் குரல் வீம்புடன் வந்தாலும் குரலின் சத்தம் குறைந்திருக்கவும் எதுவும் சொல்லாமல் முத்துவும் அவன் அப்பாவோடு போனான்.
‘ஒரு நிமிசம் முத்து..” என.. தன் அதிகாரக் குரலால் தடுத்து நிறுத்திய மாறன்..
‘இங்க மறுபடி எதாவது உன்னால பிரச்சனை வந்ததுன்னா.. உங்ககிட்ட இருக்கிற பாதி ஊரான் சொத்தை பிடுங்கறதுமில்லாம.. மீதி இருக்கிற உங்களோட சொத்தையும் உங்களுக்கு தக்கவைக்காம பண்ணிடுவேன்.. ஜாக்கிரதை..” என்று மிரட்டியனுப்பினான்.
அவர்கள் சென்றதும்.. ராஜனிடம்.. ‘ம்ம்.. இப்ப ஒத்துக்கிறேன்.. நீங்க ஒரு நல்ல ஊர் முக்கியஸ்த்தர்ன்னு..” என்றாள் நக்கலோடு.
அவளின் பேச்சை ரசித்தாலும்.. ‘அறிவிருக்கா உனக்கு..? நீ என்ன பெரிய ஜான்சிராணியா..? இப்படித்தான் எடுத்ததும் ஒரு ஆம்பிளை மேல கையை வைப்பியா..? நீ தனியா இருக்கிற நேரத்தில அவன் வந்தான்னா.. உன் வீரமெல்லாம் காணாம போய்டும்.. தேவையில்லாத வம்பு வளர்க்காம.. ஒழுங்கா அடக்க ஒடுக்கமா இருக்க கத்துக்க..‚” என்று மாறன் நந்தினிக்கு கட்டளையிட..
‘ம்ம்.. அப்புறம்..?” என்றாள் அதே நக்கலோடு.