அத்தியாயம் – 4 .. 2
‘என்ன நக்கலா..? நான் உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்..‚ அவன் சரியான தண்ணியடி பார்ட்டி.. நைட் நேரத்தில தண்ணியடிச்சிட்டு நாலு பேரோட வந்தான்னா.. என்ன பண்ணுவ..?” என்ற மாறனின் குரல் கோபத்தோடு வெளிவந்தது.
இம்முறை மாறனின் கோபத்தில் நந்தினிக்கு உண்மையான அக்கறை தெரியவும்.. பரவாயில்லையே.. யாரென்றே தெரியவில்லை என்றாலும்.. தமக்கு நல்லது நினைக்கிறார்களே.. அம்மும்மா சொன்னது மாதிரி.. இங்க நமக்கு நல்ல பாதுகாப்பு இருக்கும் போல.. என பெருமையாய் நினைத்தவள்..
‘ஏன் உன் வீரமெல்லாம் பகல்ல மட்டும்தானா..? நைட் நேரத்தில நீ கோழையாய்டுவியா..?” என்று உரிமையாய் மாறனை பார்த்து கேட்டாள்.
நந்தினி அப்படி கேட்டதும்.. ராஜன் தன் மகளை ஆச்சரியமாய் பார்க்க.. ஒரு நிமிடம் தன்னிலையிழந்த மாறனோ.. பிறகு சுதாரித்து..
‘நைட்டெல்லாம் உன்னை காவல் காக்கிறதுதான் எனக்கு வேலையா..?” என்று கோபம் குறைந்தவனாய்.. மாறனும் சற்று உரிமையாகவே கேட்டான்.
மாறனின் பார்வை மாற்றம் உணர்ந்து.. ச்ச்ச.. நாம எதுக்கு இவன்கிட்ட உரிமையா பேசினோம்..? நாம முதல்ல பேசவும்தான இவன் இப்படி பேசறான்.. என நினைக்கும் போதே.. நந்தினியின் போன் அவளை அழைக்க.. உள்ளே சென்றவள்..
‘அம்மும்மா.. “ என்றபடியே வெளியே வந்தாள்.
நந்தினியின் அம்மும்மா அழைப்பில்.. உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் உணர்ந்த ராஜனோ.. நந்தினியையே விடாமல் பார்க்க..
‘நந்து குட்டி.. எங்க இருக்கிற..?” என்றார் அமுதா.
‘வீட்லதான் அம்மும்மா..” என்று காலையில் இருந்து நடந்ததெல்லாம் சொல்லி முடித்தவள்..
‘முக்கியஸ்த்தரே உங்க பேரென்ன..?” என்றாள் அசால்ட்டாய்.
‘ராஜன்..” என்று அவர் சொல்ல..
‘ம்ம்.. இங்க ராஜன்னு ஒருத்தர் அம்மும்மா.. அவர் மகனோட அந்த நேரம் பார்த்து இங்க வந்திருந்தார்.. அவங்க மகன்தான் என் பிரச்சனையை இப்போதைக்கு தீர்த்து வச்சிருக்கார்..” என்று நந்தினி இயல்பாய் சொல்ல..
அமுதாவிற்கு பேச்சற்ற நிலைதான் அங்கு.. பாலைவனம் கடந்து வந்த பாதங்கள்.. சட்டென குளிர்ந்ததுபோல் ஒரு உணர்வு.. இதயத்தை யாரோ அழுத்திப் பிடித்தார் போல் உணர்ந்த நிலையிலும்.. இனி தன் மகள் வாழ்க்கையை ராஜன் பார்த்துக்கொள்வார் என்ற நிம்மதியும் கூடவே பிறந்தது.. பேச்சற்ற நிலையில் ஐந்து நிமிடத்திற்கு மேல் அமைதியாய் இருந்தவர்.. மெல்ல சுதாரித்து..
‘அவங்க மகனுக்கு என்ன வயசிருக்கும்.?” என்றார்.
[the_ad id=”6605″]
மாறனை ஒரு மார்க்கமாக பார்த்தவள்.. ’ஒரு இருபத்தி ஏழு.. இல்ல எட்டிருக்கும்ன்னு நினைக்கிறேன்..” என்றாள் மேலிருந்து கீழ் வரை பார்த்தபடி.
அப்போ அது அவங்க மகனா இருக்காது.. வேற யாரோ அவங்களுக்கு தெரிஞ்சவங்களா இருக்கும்.. என மனதில் நினைத்து..
‘நம்ம நிலத்தை இவ்ளோநாள் பாதுகாப்பு பண்ணினதே அவங்கதான். உனக்கு எதாவது பிரச்சனைன்னா.. அவங்ககிட்ட சொல்லு.. அவங்க என்ன சொல்றாங்களோ.. அதுமாதிரியே நடந்துக்கோ.. அவங்க உனக்கு நல்லதுதான் பண்ணுவாங்க..” என்று முட்டிக்கொண்டு வந்த அழுகையை வெகு சிரமப்பட்டு மறைத்தவாறு பேசினார் அமுதா.
‘பையன் வேற.. கொஞ்சம் கருப்பா இருந்தாலும் கலைய்..யா.. லட்சணமா.. நல்லா வாட்டசாட்டமா இருக்கிறான்.. டக்குன்னு கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லிட்டார்ன்னா.. அப்பவும் அவர் சொல்றமாதிரியே கேட்டுக்கட்டுமா…?” என்று கிசுகிசுப்பாய் தன் அன்னையிடம் அவள் குறும்போடு கேட்க..
தன்னை மறந்த நிலையில் இருந்த அமுதாவோ.. ‘உனக்கும் பிடிச்சிருந்தா ஓ.கே. சொல்லிடு..” என்று உறுதியாய் வந்தது அமுதாவின் குரல்.
‘என்ன சொல்றிங்க அம்மும்மா..?” என்று நந்தினி பதற..
அதன்பிறகுதான்.. ச்ச.. நாமளே நம்ம பொண்ணு மனசை கெடுக்க பார்க்குறோமே.. என நினைத்து.. ‘அதை விடு.. இன்னும் கொஞ்ச நேரத்தில உனக்கு பிடிச்ச ஒன்னு உன்னை தேடி வரப்போகுது.. எங்கையும் வெளில போய்டாத.. வீட்லயே இரு..” என்றார்.
‘என்ன வரப்போகுது..?” என்று நந்தினி கேட்டுக்கொண்டிருக்கும் போதே.. அங்கே ஓரு மினி லாரி அவளின் வீட்டின் முன் வந்து நிற்கவும்..
‘அம்மும்மா யாரோ ராஜநந்தினியான்னு என்னை கேக்கிறாங்க..” என்றாள்.
‘ம்ம்.. நான்தான் அனுப்பி வச்சிருக்கேன்.. உனக்கு அந்த ஊர்ல வேலை கிடைச்சிடுச்சின்னு அப்பாயின்மென்ட் ஆர்டரை பார்த்த அன்னைக்கே.. ஆக்டிவா புக் பண்ணிட்டேன்..” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே.. பெரிய கண்ணாடி பதித்த.. சிறிய பீரோ.. அளவான சிறிய கட்டில்.. மெத்தை.. இரண்டு தலையணை.. அதோடு ஒரு ஆக்டிவாவும் வந்திறங்க…
‘அம்மும்……..மா…” என உற்ச்சாகமாய் கத்தியவள்.. ‘அம்மும்மான்னா.. அம்மும்மாதான்.. கீழ படுத்தா தூக்கமே வரமாட்டுக்குதே.. உங்ககிட்ட சொல்லி கட்டில் வாங்கவான்னு கேக்கலாம்னு.. நேத்து நைட்தான் நினைச்சேன்.. நீங்க கட்டில் அனுப்பி வச்சிட்டிங்க.. உம்ம்ம்மா..“ என்று ஒரு அழுத்தமான முத்தத்தை தன் அன்னைக்கு கொடுத்தவள்..
‘இருங்க.. நான் அப்புறம் பேசறேன்..” என்று கட்செய்து.. தனது வண்டியை ஆசையாய் ஆராய ஆரம்பித்தாள்.
‘இதுல ஒரு கையெழுத்து போடுங்க.. ராஜநந்தினி..” என்று பார்சல் சர்வீஸ்காரன் அவளின் முழுப் பெயரை சொல்ல.. கண்கள் தானாய் ஊற்றெடுத்தது ராஜனுக்கு.
நந்தினி கையெழுத்திட்டதும்.. சிட்டாய் பறந்து சென்று உள்ளிருந்து பணம் எடுத்து வந்தவள்.. பார்சல் கொண்டுவந்தவனுக்கு கொடுத்தாள்.. வாங்கிய பணத்திற்க்கு அவன் பொருள்களை இறக்கி கீழே வைக்கும் வரை.. நந்தினி தனது புது வண்டியை நோட்டமிடுவதில் கவனமாய் இருக்க..
‘ராஜய்யா.. தயவு செய்து அழாதிங்க.. உங்க பொண்ணு பார்த்திட போறா..” என்று முதலில் கெஞ்சிய மாறன்.. ராஜனின் கண்ணில் நிற்காமல் கண்ணீர் வந்துகொண்டே இருக்க.. பிறகு மிரட்டலாய் சமாதானப் படுத்தி கொண்டிருந்தான்.
வண்டியை ஆராய்ந்து முடித்தவள்.. ‘ப்ச்ச்.. இந்த கட்டில் பீரோவை உள்ள வைக்காத கூட போய்ட்டானே..” என்று சலித்துக்கொண்டே நந்தினி கட்டிலை ஒவ்வொரு புறமும் மாற்றி மாற்றி நகர்த்திக் கொண்டிருக்க.. அவளின் தலையிலிருந்த எண்ணையோடு சேர்த்து வந்த வியர்வை.. அவளின் கண்ணுக்கு எரிச்சலை கொடுக்க.. சிவந்திருந்த கண்களோடும்.. எண்ணை வழிசலோடும் இருந்த அவளின் பட்டு முகம் சூரியனின் தாக்கத்தால் பளபளத்து மின்ன.. ரசனையோடு பார்த்திருந்தான் இளமாறன்.
’ப்ச்ச்..” என்று கட்டிலை விட்டு வந்தவள் திண்ணையில் அமர்ந்து ஒரு துணிகொண்டு தன் கண்களை அழுந்த துடைத்துக்கொண்டிருந்தாள்.
‘இவ்ளோ எண்ணையை தலையில வச்சிகிட்டு.. சும்மா துடைச்சிட்டிருந்தா மட்டும் கண் எரிச்சல் போய்டுமா..? முதல்ல போய் குளி..” என்றான் ஆர்டர் போல்.
‘இல்ல.. இந்த பூச்செடியெல்லாம் நடனும்.. அதை முடிச்சிட்டு குளிச்சிக்கலாம்னு பார்க்கிறேன்..” என்றாள் கண்மூடிய நிலையிலேயே.
‘எப்படி..? இப்படி கண்ணை மூடிகிட்டே செடி நட போறியா..? செடி வச்சதுக்கப்புறம் இன்னொரு முறை கூட குளிச்சிக்கலாம்.. இப்ப போய் குளி..” என்றான் மீண்டும்.
‘கட்டில் பீரோ எல்லாம் வெளில இருக்கு.. கொஞ்சம் பார்த்துக்கிறிங்களா..? நான் பத்து நிமிசத்தில குளிச்சிட்டு வந்திடறேன்.” என்று கண்களை அரைகுறையாய் திறந்து திறந்து மூடியவாறு.. தயங்கியவளாய் கேட்டாள்.
அவள் உதவி கேட்ட தோரணை.. மாறனுக்கு தன்னைப் பார்த்து நந்தினி கண்ணடிப்பதாய் தோன்ற.. ‘ம்ம்..” என்றான் உள்ளுக்குள் சிரித்தவாறு..
பிறகுதான்.. ‘ஏன்.. இரண்டு பேரும் நிக்கிறிங்க..? திண்ணையில உக்காருங்க..” என்றாள் சற்றே கரிசனமாய்.
‘ம்ம்..” என்றான் மீண்டும்.
‘ம்ம்..” என்று அவனைப்போலவே சொல்லி.. லேசாய் சிரித்தவாறே உள்ளே போனாள்.
பூச்செடிகளை எண்ணியவன்.. கடப்பாரையை எடுத்து பள்ளம் தோண்டி கொண்டே.. ‘ராஜய்யா.. என் நிவியக்கா.. நான் சாப்பிட்ட தட்டை கூட என்னை எடுத்து வைக்க விடமாட்டாங்க.. ஆனா உங்க பொண்ணு.. பார்த்த முதல் நாள்லயே.. என்னை இப்..படி மண்ணை கவ்வ வச்சிட்டாளே..” என்று மாறன் குறைபட.
‘உன் வீட்டு வேலையை நீ செய்யாம வேற யார் செய்வா..?” என்று சிரித்தார்.
‘ம்ம்.. அதுவும் சரிதான்..” என உல்லாசமாய் சிரித்தவன்.. பேசிக்கொண்டே பள்ளங்களை தோண்டி முடித்திருக்க.. அப்பொழுதுதான் குளித்து வெளியே வந்தாள் நந்தினி.
செடிக்கான குழிகளை பார்த்தவள்.. ‘அச்சோ.. நீங்க ஏன் இதெல்லாம் செய்திங்க..?” என்றாள் குற்ற உணர்வோடு.
‘செடியையும் நட்டு வைக்கலாம்னுதான் யோசிச்சேன். ஆனா.. நீ ஆசையா வாங்கிட்டு வந்திருக்க.. உன் ரசனைக்கேத்தமாதிரி எந்தெந்த செடியை எங்கே வைக்கனுமோ.. அங்க நீயே வைச்சிக்குவன்னுதான் விட்டுவச்சேன்..” என்றான்.
[the_ad id=”6605″]
‘ரொம்ப தேங்க்ஸ்..” என்றாள்.
‘கிளம்பலாங்களா..” என்று ராஜனைப் பார்த்து மாறன் கேக்க.. கட்டில் பீரோவை எப்படி தூக்கி உள்ள வைக்கிறது..? என்ற யோசனையில் நந்தினி இருக்க..
‘மாறா.. அந்த கட்டிலையும் பீரோவையும் மட்டும் எடுத்து உள்ள வச்சிட்டு போய்டலாம்.. பாவம் சின்னபொண்ணு.. அதால தனியா எப்படி உள்ளே எடுத்து வைக்கமுடியும்..?” என உரிமை கலந்த கட்டளையோடு ராஜன் சொல்ல..
‘ம்ம்..” என இழுத்த படியே.. ராஜனை செல்லமாய் முறைத்தவன்.. பீரோவை தூக்கப்போக.. மறுபுறம் வந்து தூக்கினாள் நந்தினி. அவன் ஒருபுறம் இழுக்க.. அவள் ஒருபுறம் என இழுக்கவும்..
‘விடு.. நான் பார்த்துக்கிறேன்..” என கடிந்தான் உரிமையோடு.
அமைதியாய் நகர்ந்து போனாள்.. ‘ராஜய்யா.. பீரோ அவ்வளவா கனமில்ல.. ஆனா.. தனியா தூக்கறதுக்கு வாட்டம் பத்தல.. வந்து கொஞ்சம் அந்த பக்கம் பிடிங்க..” என்றான்.
ராஜனும் மாறனும் பீரோவை தூக்கிவந்து உள்ளே வைத்ததும்.. கட்டிலை நான் எடுத்திட்டு வந்திடறேன்.. நீங்க உக்காருங்க ராஜய்யா..” என்றான்.
ராஜன் திண்ணையில் வந்து அமர்ந்து கொள்ள.. இவள் உள்ளே கட்டில் போடுவதற்கு தோதாக இடத்தை ஒதுக்கி வைத்தாள். மாறன் கட்டிலோடு உள்ளே வரவும்.. ‘இந்த பக்கம்.. இந்த பக்கம்..” என்று நந்தினி அவசரமாய் சொல்ல..
‘இப்படி போட்டா.. வெளில இருந்து பார்த்தா கட்டில் தெரியும்.. இந்தாண்ட வா..” என்று ஒரு அதட்டல் விட்டவன்.. ஓரளவிற்கு வெளியில் இருந்து பார்த்தால் தெரியாதவாறு கட்டிலை போட்டு.. சட்டமாய் அதில் அமர்ந்து.. அங்கிருந்த ஒரு டவலை எடுத்தவன் வியர்த்திருந்த முகத்தை துடைத்தவாறு..
‘கொஞ்சம் தண்ணி கொடு..” என்றான்.
‘எழுந்திரு.. எழுந்திரு.. இது என்னோட புதுக்கட்டில்.. நான்தான பர்ஸ்ட் உக்காரனும்.. வீட்டுக்கு புதுசா எது வாங்கினாலும் அம்மும்மா என்னைதான் பர்ஸ்ட் யூஸ் பண்ண சொல்வாங்க.. நீ எதுக்கு உக்கார்ந்த..?” என்று கோபமாய் கேட்பதாய் நினைத்து.. உண்மையில் அவனிடம் சினுங்கிக் கொண்டிருந்தாள்.
‘அப்ப.. நீ உக்கார்ந்ததுக்கு அப்புறம் நான் உக்கார்ந்திருந்தா பரவாயில்லையா…?” என அவளை ஆழ்ந்து பார்த்து கேட்டவாறே எழுந்து.. அங்கு வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தான்.
‘அச்சோ.. அது நான் குடிச்சிட்டு வச்சது.. குடிக்காத.. குடிக்காத..” என்று நந்தினி பதறவும்.. அதன்பிறகு முற்றிலும் அந்த பாட்டிலை காலிசெய்தே வைத்தான்.
அவன் வேண்டுமென்றே செய்கிறான் என்று லேசாய் நந்தினிக்கு புரிய.. அவனை முறைத்தாள்.
‘உன்னோடது நீதான் பர்ஸ்ட்டு யூஸ் பண்ணனும்னு நீதான சொன்ன..? குடத்தில தண்ணி புல்லா இருக்கு.. அதை எடுத்து குடிச்சாலும்.. நான்தான் பர்ஸ்ட் குடிக்கனும்னு அதுக்கும் திட்டினாலும் திட்டுவ.. அதான் நீ குடிச்சி வச்ச தண்ணியையே குடிச்சிட்டேன்..” என்றான் குறும்போடு.
‘ஹெல்ப் பண்ணினா..? அதுக்குன்னு உடனே இவ்ளோ உரிமை எடுத்துக்குவியா..?” என்றாள் உண்மையான கோபத்தோடு.
‘நான்தான் கருப்பா இருந்தாலும்.. நல்லா லட்சணமா.. வாட்டசாட்டமா இருக்கேனே.. அப்படித்தான உங்கம்மாகிட்ட சொன்ன..? என்னை கேக்காமலே.. நீ மட்டும் என்கிட்ட உரிமை எடுத்துக்கலாம்.. ஆனா.. நான் உன்கிட்ட உரிமை எடுத்துக்கக்கூடாதா..?” என சன்ன சிரிப்போடு கேட்டவன்..
‘நான் எதேச்சையாத்தான் இங்க வந்தேன்.. ஆனா நீ உங்கம்மாகிட்ட என்னைப் பத்தி சொன்னதுக்கப்புறம்.. நீதான் எனக்குன்னு நான் பிக்சாய்ட்டேன்..” என உறுதியாக சொல்லி..
‘உன்னைப் பத்தி இன்னொரு நாளைக்கு தெரிஞ்சிக்கிறேன்.. என்னை பத்தின விபரம் கொஞ்சம் சொல்றேன்.. நான் ஆடிட்டர்.. எனக்கு ஒரு அக்கா.. ஒரு தங்கை.. அக்காக்கு இப்பதான் கல்யாணம் முடிச்சோம்.. என் தங்கைக்கு பார்த்திட்டிருக்கேன்.. அவளுக்கு கல்யாணம் முடியற வரைக்கும்தான் உனக்கு டைம்..” என்று அவன் பாட்டிற்கு சொல்லிக்கொண்டே போக.. அவள் விழிவிரித்து நிற்க..
[the_ad id=”6605″]
‘என்ன பார்க்குற..? நான் கொடுக்கிற டைம்.. என்னை கல்யாணம் செய்துக்கலாமா..? வேணாமான்னு நீ யோசிக்கிறதுக்கு இல்ல.. என்னை உன் புருசனா உன் மனசுல பதிய வைக்கிறதுக்கு.. புரியுதா..? இப்போயிருந்தே என்னை உனக்கானவனா மனசுல பதிச்சி பழகிக்கோ.. உன் கல்யாணம் என்னோடதான்..” என மீண்டும் உறுதியாய் சொன்னவன்..
‘நான் வரேன்..” என்று சத்தமில்லாத வசீகர சிரிப்போடு.. இலகுவாய் சொல்லி வெளியே வந்தான்.
அவன் பின்னே வெளியே வந்தவள்… ‘அதுக்கு.. முதல்ல எனக்கு உன்னை பிடிக்க வேணாமா..?” என்றாள் நிலத்தையும்.. அவனையும் மாறி மாறி பார்த்த நிலையில்..
‘என்னை பிடிக்காதவகிட்ட.. என்னைத்தான் கல்யாணம் செய்துக்கனும்னு சொல்றதுக்கு.. நான் என்ன அந்த முத்துவா..? அவன் கல்யாணம் செய்துக்கிறேன்னு சொன்னதும்.. அப்படி சீறிஎழுந்து அவன் கன்னத்தை பழுக்க வச்ச..? என்கிட்ட அப்படி ஒன்னும் காணோமே..” என ஆழ்ந்த பார்வையோடும்.. உரிமையோடும் கேட்டவன்..
‘என்னை உனக்கு பிடிச்சிருக்குன்னு.. எனக்கு தெரியும்..” என்றான் கர்வமாக. நந்தினி கலவரத்தோடு மாறனைப் பார்க்கவும்..
‘பிடிக்காதவன்கிட்டதான் உன் வீரம் பகல்ல மட்டும்தானா..? நைட்ல எங்க போய்டும்ன்னு உரிமையா கேட்டியா..?” என்று மீண்டும் அவளையே உற்று நோக்கினான்.
அதற்கும் அவள் ஏதோ சொல்ல வரவும்.. ‘இப்ப வேணாம்.. ராஜய்யா எனக்காக வெய்ட் பண்ணிட்டிருக்காரு.. இன்னொரு நாளைக்கு பேசலாம்..” என்று அவளின் பதிலுக்கு காத்திராமல் கிளம்பினான்.