அத்தியாயம் – 5–2
இரண்டு நாள் பள்ளிவிடுமுறை என்பதால் வெள்ளிகிழமை இரவே கிளம்பி சென்னை வந்திருந்தாள் நந்தினி. வந்தவள் சற்றே வீங்கிச் சிவந்திருந்த தன் அம்மாவின் முகத்தை பார்த்ததும் அதிர்ந்து போனாள். காய்ச்சல் அதிகமாய் இருக்கவும்.. அமுதா வேலைசெய்யும் மருத்துவமணையிலேயே ஒரு டாக்டரை அழைக்கவும்.. வீட்டிற்கே வந்து பார்த்த டாக்டர்.. ஊசி போட்டு.. மருந்து மாத்திரையையும் கொடுத்து.. ‘ஏன் இவ்ளோ ஸ்ட்ரெஸ்சா இருக்கிங்க.? ரிலாக்சா இருங்க..” என சொல்லி கிளம்பினார்.
காலை எட்டு மணிபோல் பக்கத்தில் குடியிருக்கும் பெண்மணி..
‘அமுதாக்கா..” என அழைத்தபடியே வந்தார்.
கதவைத் திறந்தவள்.. ‘வாங்க ஆன்ட்டி..” என்றாள்.
‘நீ எப்ப வந்த நந்தினி..? நல்லாயிருக்கியா..? நீ ஊருக்கு போனதும் ஒரு வாரம் நல்லாத்தான் இருந்தாங்க.. இப்ப நாலஞ்சி நாளாத்தான் உடம்பு சரியில்லாம போய்டுச்சி.. உன் நியாபம் வந்திடுச்சாட்டங்குது.. முகத்தில சிரிப்பே இல்ல.. ரொம்ப சோகமாவே இருந்தாங்க.. நீ இப்படி இருக்கிறதுக்கு பேசாம உன் பொண்னோடவே போய் இருக்கான்னு நானும் சொல்லிப்பார்த்திட்டேன்.. உங்கம்மாதான் கேக்கமாட்றாங்க..” என சலித்துக்கொண்டார்.
அமுதா அமைதியாகவே இருக்கவும்.. ‘நீ தங்கியிருக்கிற இடமெல்லாம் பரவாயில்லையா நந்தினி..? வேலைக்கு போற இடத்தில நல்லா பழகுறாங்களா..?”என பல விசாரிப்புகளுக்கு பிறகு நளினி அவ்விடம் விட்டு நகரவும்…
‘அம்மும்மா.. அதுக்கு பேசாம என்கூடவே வந்திடலாமில்ல..?” என்று கெஞ்சிக்கொண்டிருந்தாள்.
‘நீ கல்யாணம் பண்ணிகிட்டதுக்கப்புறம் உன்னை விட்டுட்டுதான நான் இருந்தாகனும்..? அதுக்கு இப்போ இருந்தே பழகிக்கிறேன்..” என்று நந்தினியை சமாதானம் செய்தார்.
அமுதா தனக்கு கல்யாணம் என சொன்னதும் நந்தினிக்கு மாறனின் நினைவு வரவே.. ‘அம்மும்மா..” என ஆரம்பித்து அன்று மாறன் செடிகளை நடுவதற்கு பள்ளம் வெட்டியதிலிருந்து.. அவளிடம் திருமணம் பற்றி பேசியதையும் ஒன்று விடாமல் சொன்னாள்.
அமுதா அதிர்ச்சியாய் விழிவிரித்து.. ‘உன் கூட யாரோ ஒரு முக்கியஸ்த்தர் இருந்தாங்கன்னு சொன்னியே.. அவங்க எதுவும் அந்த பையனை திட்டலையா..?” என்றார் ஆற்றாமையாக.
‘அவன் கட்டிலை தூக்கி உள்ளபோடும் போது சொன்னான் அம்மும்மா.. அந்தாளு அப்ப வெளில இருந்தார். இவன் சொன்னது அவருக்கு தெரியாது. ஆனா.. ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் போல.. ரெண்டு பேரோட வயசு வித்யாசத்தைப் பார்த்தா.. அப்பா மகன் போல இருக்காங்க.. ஆனா பிரெண்டுங்க மாதிரி பேசிக்கிறாங்க..” என்றாள்.
‘நந்து.. அந்த முக்கியஸ்த்தர் உனக்கு நல்லவர்ன்னு தோணுச்சினா.. அவர்கிட்ட இந்த பையன் பேசினதை சொல்லு.. அப்பதான் அவனால எதாவது பிரச்சனைன்னா கூட உன்னால சமாளிக்க முடியும்..” என்று சொன்ன தாயுள்ளம் பதைத்தது.
‘அந்தாளு ஊருக்கு வேண்ணா முக்கியஸ்த்தனா இருக்கலாம்.. எனக்கு நீங்க மட்டும்தான் முக்கியம்.. என் பிரச்சனையை உங்ககிட்ட மட்டும்தான் சொல்வேன்.. “ என்று திடமாய் சொன்னவள்..
‘அதோட.. அவனைப் பார்த்தா அப்படி பிரச்சனை செய்வான்னு தோணலை அம்மும்மா..” என்றவளின் முகம் லேசாய் சிவந்திருக்க..
‘உனக்கு அவனை பிடிச்சிருக்கா..?” என்றார்.
‘அது தெரியலை.. ஆனா.. நீ அடிக்கடி சொல்லுவ இல்ல..? யாரை லவ் பண்ணினாலும் முதல்ல கல்யாணத்தை பத்திதான் பேசனும்.. அதுக்கு முன்னாடி அப்படி இப்படின்னு ஊர் சுத்தக்கூடாதுன்னு.. நீ நினைக்கிற மாதிரியே அவன் என்கிட்ட ஐ லவ் யூன்னு சொல்லலை அம்மும்மா.. நான் உன்னைத்தான் கல்யாணம் செய்துக்கப்போறேன்னு சொன்னானா… அதுவும் உறுதியா சொன்னானா.. அதோட.. அப்படி சொல்லிட்டு போனதுக்கப்புறம் அடுத்து வந்த நாலு நாளும் அவன் என் கண்லயே படல.. எந்த மிஸ் பிகேவும் பண்ணல.. அதான் கொஞ்சம் நல்லவன்தானோன்னு தோணுது..“ என்றாள் சிறு தயக்கத்தோடு.
[the_ad id=”6605″]
‘அவனைப் பத்தி வேற எதாவது சொன்னானா..?”என்றார்.
‘ம்ம்.. அவன் ஆடிட்டராம்.. ஒரு அக்கா.. ஒரு தங்கையாம்.. இப்போதான் அக்காக்கு கல்யாணம் முடிச்சாங்களாம்.. தங்கைக்கு பார்த்திட்டிருக்காங்களாம்.. அவன் தங்கைக்கு கல்யாணம் முடிச்சதும்.. என்னை கல்யாணம் செய்துக்கிறேன்னு சொல்லிட்டு அவன் பாட்டுக்கு கிளம்பிட்டான்..” என்றாள்.
‘சரி.. விடு.. நான் என் பிரெண்டுகிட்ட சொல்லி விசாரிக்க சொல்றேன்.. அதுவரைக்கும் கொஞ்சம் பார்த்து ஜாக்கிரதையா இருந்துக்கோ.. அதுக்குள்ள அவனைப் பார்த்தா.. உனக்கு பிடிச்சிருக்கு அப்படி இப்படின்னு எதாவது உளறி வச்சிடாத.. இந்த காலத்தில யாரையும் நம்ப முடியாது..” என்றார் கவலையாக.
‘அன்னைக்கென்னவோ.. ஆள் நல்லா இருக்கிறான்னு சொன்னதுக்கு உனக்கு பிடிச்சா கல்யாணம் செய்துக்கோன்னு சொன்ன..? இப்ப ஏன் இப்படி கவலைப்படற..?” என்றாள் குறும்போடு.
‘நீ எதோ விளையாட்டுக்கு சொல்றன்னு நினைச்சேன்.. அவன் இப்படி பேசினான்னு நீ அன்னைக்கு சொன்னியா..? அதோட நான் அப்ப அந்த வேலாயுதத்தால உனக்கு எதாவது ஆபத்து வந்திடும்ன்ற டென்சன்ல இருந்தேன்.. அப்பப்பார்த்து எதாவது உளறியிருப்பேன்.. நீ அதெல்லாம் மனசில வச்சிக்காத..” என்றார் கண்டிப்போடு.
‘ம்ம்..” என்று பொம்மையாக தலையாட்டினாள்.
ராஜன்.. அன்று நந்தினி பக்கத்தில் இருந்ததால்.. பதட்டத்தில் தாம் இருந்ததை நந்தினியிடம் சொல்லவா முடியும்…? அவர் பக்கத்தில் இருக்கும்போதே நந்தினியிடம் இப்படி பேசியிருக்கிறான் என்றால்… ஒரு வேளை.. மகளுக்காக பார்த்திருப்பாரோ.. என்று பலமாக யோசித்து படுக்கையில் சாய்ந்தார்.
ஞாயிற்று கிழமை காலை டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது.. ‘அம்மும்மா.. நான் இன்னைக்கு கிளம்பினேன்னா.. அப்புறம் வரதுக்கு ஒரு மாசத்துக்கு மேல ஆகும்.. இன்னும் இருபது நாள்ல மன்த்திலி டெஸ்ட் வருது.. அதுக்கு போர்சன் முடிக்கனும்.. அப்புறம் பேப்பர் கரெக்சன்னு ரொம்ப பிசியாய்டுவேன்..” என்று பாவமாய் பார்த்தாள் அமுதாவை.
‘நந்து.. என்னால அங்க வரமுடியாதுடா.. நீ பிறக்கிறதுக்கு முன்னாடியே இங்க வந்துட்டேனா..? இப்ப நான் அங்க வந்தா.. உன்னோட அப்பா யாரு..? எங்க இருக்கார்..? அவர் ஏன் வரலை..? உங்கப்பா உன்னை விட்டுட்டு போன மாதிரியே.. உன் பொண்ணோட அப்பனும் போய்ட்டானான்னு என்னை படுத்தி எடுப்பாங்க.. அதிலும் ஒரு சில பேர்.. என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னயில்ல..? இப்ப பாரு உன் வாழ்க்கை எப்படியாய்டுச்சின்னு என்னை கேவலமா பார்ப்பாங்க.. அப்படி ஒரு சூழலை நான் விரும்பலை.. என்னை புரிஞ்சிக்கோடா..” என்று அமுதா தளர்ந்த குரலில் கண்கலங்கியவாறே சொல்லவும்..
‘சரி.. சரி.. விடுங்க அம்மும்மா.. நீங்க கவலைப்படாதிங்க.. நான் சும்மாத்தான் கேட்டேன்.. எனக்கு டைம் இருக்கும்போது நானே வந்து உங்களை பார்த்துக்கிறேன்.. என் அம்மும்மாவோட மன நிம்மதித்தான் எனக்கு முக்கியம்..‚” என்று அமுதாவிற்கு ஆறுதலளித்தாள் ராஜநந்தினி.
‘சரி.. நந்து.. உனக்கு அந்த ஊர் பழகுற வரைக்கும் நைட் டிராவல் வேண்டாம்.. காசு போனா போய்ட்டுப்போகுது.. இப்பவும் நீ டாக்சியிலயே போய்டு.. நானும் கொஞ்சம் பயமில்லாம இருப்பேன்..” என்றார்.
‘அம்மும்மா.. அங்க எனக்கு நைட்ல தூக்கமே வரமாட்டுக்குது..” என்றாள்.
‘அடுத்த முறை நீ வரும்போது ஒரு டி.வி. வாங்கி தரேன்.. அதுவரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா.. “ என்றார்.
‘எனக்கு டி.வி. வேணாம்.. ஒரு டச் மொபைல் வாங்கி தாங்க.. எங்க ஸ்கூல்ல எல்லா டீச்சர்சும் ஆன்ட்ராய்டு மொபைல் வச்சிக்கிட்டு எப்படி பந்தா பண்றாங்க தெரியுமா..? நான் மட்டும்தான் இந்த பட்டன் போன் வச்சிருக்கேன்..” என்று சினுங்கினாள்.
அமுதா.. ‘அதுல கண்ட கருமமெல்லாம் வரும்..“ என முனுமுனுக்க..
‘நான் நல்ல பிள்ளையாக்கும்.. இப்பதான் பெரியவளாய்ட்டேன்ல..? ப்ளீஸ்…” என கெஞ்ச..
‘சரி.. வாங்கி தரேன்.. ஆனா நைட்ல ரொம்ப நேரம் மொபைல் பார்க்கக்கூடாது..” என்று அமுதா கண்டிசன் வைக்க..
‘ம்ம்.. பார்க்கமாட்டேன்… பார்க்கமாட்டேன்..” என்று குஷியாக சொன்னவள்..
‘அப்படியே உங்களுக்கும் ஒன்னு வாங்குங்க அம்மும்மா.. நாம ரெண்டு பேரும் வீடியோ கால்ல பேசிக்கலாம்..” என்றாள் கெஞ்லோடு.
‘சரி.. ரெடியாகு.. இன்னும் கொஞ்ச நேரத்தில டாக்சி வந்திடும்.. இப்ப கிளம்பினா.. ஈவ்னிங்க நாலு மணி பக்கமா வெளிச்சத்திலயே வீட்டுக்கு போய்டலாம்.” என்று நந்தினியை விரட்டி.. பக்கத்து வீட்டில் இருக்கும் பரமுவிற்கு அழைத்தார்.
‘ஆன்ட்டி சொல்லுங்க ஆன்ட்டி..” என்றான் பரமேஸ்வரன்.
‘பரமு.. கொஞ்சம் வீடு வரைக்கும் வரியா..?” என்க.. அவனும் பத்து நிமிடத்தில் வந்தான்.
‘பரமு.. நந்தினிக்கு மொபைல் வாங்கனும்.. அப்டியே எனக்கும் வாங்கனும்.. என்னால இப்ப அலைய முடியாது.. நீ கொஞ்சம் வாங்கி வந்து தரியா..? நந்தினி கிளம்ப ரெடியாய்ட்டிருக்கா.. அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்..” என்றார்.
‘சரிங்க ஆன்ட்டி..” என்றான்.
[the_ad id=”6605″]
‘கொஞ்சம் நல்லதா வாங்கினா எவ்ளோ ஆகும்..?” என்றார்.
‘ஒரு பதினைஞ்சாயிரம் போட்டா நல்ல மொபைலாவே வாங்கலாம் ஆன்ட்டி..”
‘சரி.. இரு.. என்று பணத்தை எடுத்து வந்து பரமுவிடம் கொடுத்தனுப்பினார்.
அடுத்த ஒரு மணிநேரத்தில் பரமு மொபைலோடு வரவும்.. ‘நந்து…” என்றழைத்தார் அமுதா.
‘இதோ வரேன்ம்மா..” என்றபடியே பேகோடு வந்தாள் நந்தினி.
பரமு சிரிக்கவும்.. ‘ஏய்.. என்னடா சிரிக்கிற..?” என்று செல்ல மிரட்டல் விட..
‘டொன் ட்டொடைய்ங்…” என்று பரமு மொபைலை காண்பிக்கவும்..
‘அம்மும்மா…” என்று சிறு குழந்தையாய் குதித்து.. தன் அம்மாவிற்கு கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டாள்.
சிரித்த அமுதா… ‘ரொம்ப ஐஸ் வைக்காத.. உன் போனை கொடு.. பரமு அந்த புது போன்ல உன் சிம்மை மாத்தட்டும்..” என்றார்.
பரமு போனதும்.. தயங்கினாலும்.. ‘அம்மும்மா.. அவன் மறுபடி வந்து என்கிட்ட எதாவது கேட்டா.. நான் என்ன பண்ண..?” என கேட்டு தலைகுனிந்தாள்.
‘முதல்ல உன் தங்கை கல்யாணத்தை முடிச்சிட்டு வந்து என்னைப் பாரு.. இப்ப கிளம்புன்னு தெளிவா சொல்லிடு நந்து.. அவன் ரொம்ப நல்லவனாவே இருந்தாலும் சரி.. தயவு தாட்ச்சன்யமே பார்க்காத.. அம்மா உன் நல்லதுக்குத்தான் சொல்வேன்..”
‘சரி அம்மும்மா.. நீங்க சொன்னமாதிரிதான் நான் செய்வேன்.. உங்களை மீறி எதையும் நான் பண்ணமாட்டேன்.. நீங்க கவலைப்படாம இருங்க..” என்றாள்.
‘உனக்கு பிடிச்ச வாழ்க்கையை கொடுக்கத்தான் நானும் ஆசைப்படுவேன் நந்து.. ஆனா.. அதுல எந்த பிரச்சனையும் வந்திடக்கூடாதுன்னுதான் யோசிக்கிறேன்.. நான் நளினிகிட்ட சொல்லி அந்த பையனைப் பத்தி விசாரிக்க சொல்றேன்.. அதுக்கப்புறம் நல்ல முடிவா எடுக்கலாம்.. வேற ஊர் பையனா இருந்தாகூட பராவியல்ல.. என்னைப்பத்தின கேள்வி அதிகம் வராது.. வந்தாலும்.. இப்ப எல்லார்கிட்டயும் சொல்ற மாதிரியே நான் டைவர்சின்னு சொல்லிடுவேன்..
ஆனா அந்த ஊர்ல அப்படி சொல்லிட்டு தப்பிக்க முடியாது.. கல்யாண போட்டோ காட்டு.. அப்படி இப்படின்னு துருவி.. துருவி அவரைப்பத்தி கேப்பாங்க. இத்தனை வருசத்துக்கப்புறம் அவரைப்பத்தி வெளியில சொல்ல எனக்கு விருப்பமில்ல.. அந்த பையனோட குடும்பத்துக்கு கச்சிராப்பாளையம்தான் பூர்வீகமா இருந்ததுன்னா.. கண்டிப்பா அவனுக்கு என்னைப் பத்தி தெரியலைன்னாலும்.. அவன் அப்பாம்மாக்கு என்னை தெரிஞ்சிருக்கும்..‚ நான் சின்ன வயசிலயே அந்த ஊரைவிட்டு வந்துட்டதுனால.. அவங்களுக்கு உன் பிறப்பு மேல சந்தேகம் வரலாம்..
[the_ad id=”6605″]
அந்த பையன்கிட்ட அவங்க அப்பாம்மா என்னைப் பத்தி தப்பா கூட எதாவது சொல்லலாம்.. அதனால உன் கல்யாணம் கூட தடைபடலாம்.. அதனால தான் சொல்றேன்.. அதுக்குள்ள அவசரப்பட்டு அதிக ஆசையை உன் மனசில வளர்த்துக்காத.. உன் சந்தோசம்தான் என் சந்தோசம்.. உன் வாழ்க்கை சரியில்லாம போய்டுச்சினா.. அதை தாங்குற சக்தி எனக்கில்ல..” என்று கண்கலங்கினார்.
‘அழாத அம்மும்மா.. உங்களைப் பத்தி எனக்கு தெரியாதா..? ஒருவேளை அப்படியேது வந்து அவன் என்கிட்ட பேசினான்னா.. நீங்க சொன்னமாதிரியே நான் சொல்லி அனுப்பிடறேன்.. என்ன நடந்தாலும் சரி.. எனக்கு பிடிச்சவனா இருந்தாலும் சரி.. எல்லாரையும் விட எனக்கு நீங்கதான் முக்கியம்..” என்று உறுதியாய் சொன்னாள்.
பெருமையாய் தன் மகளை பார்த்தவர்.. ‘சரி நந்து.. நீ கிளம்பு.. இப்ப கிளம்பினாத்தான் ஈவ்னிங்க்குள்ள வீட்டுக்கு போய்ட முடியும்..” என்று அனுப்பி வைத்தார்.
அதன் பிறகு இருபது நாள் கழித்து.. ‘நந்து.. அந்த பையனைப் பத்தி விசாரிச்சேன்.. அவன் குடும்பத்தை பத்தி அவன் சொன்னதெல்லாம் உண்மைதான். அவன் அப்பாம்மாவை நான் பார்த்திருக்கேன்.. ஆனா.. பேசிக்கிட்டதில்ல.. முன்ன ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பம்தான்.. இப்ப மாறன் நல்லா சம்பாதிப்பானாட்டங்குது.. அவன் அக்காவை பெரிய இடத்திலதான் கட்டி கொடுத்திருக்காங்க. அமைதியான குடும்பம்தான்னு நளினி சொன்னா.. அவங்க உண்டு.. அவங்க வேலையுண்டுன்னு இருப்பாங்களாம்..” என்று போனில் பேசினார் அமுதா.
ஆனா.. அதுக்கப்புறம் அவன் என்னைப் பார்க்க வரவே இல்ல அம்மும்மா.. என மனதில் நினைத்தாள் சோர்வோடு.. ‘ஹலோ.. நந்து.. கேட்டுட்டிருக்கியா..?” என்று அமுதா சற்று குரலுயர்த்த..
‘ம்ம்.. கேட்டுட்டதான் இருக்கேன் அம்மும்மா..” என்றாள்.
‘இப்பவும் சொல்றேன்.. நீ மனசுல ஆசையை வளர்த்துக்காத.. மறுபடியும் அவன் உன்னைத்தேடி வந்தான்னா.. அதுக்கப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்..” என்றார்.
‘சரி அம்மும்மா.. நீங்க என்ன சொல்றிங்களோ.. அதுமாதிரிதான்.. நான் வச்சிடறேன்..“ என்று இணைப்பை துண்டித்தவளுக்கு.. ஒருபுறம் அவனை நினைத்து பெருமையாக இருந்தாலும்.. மறுபுறம் பார்த்த அன்னைக்கே கல்யாணம் செய்துக்கிறேன்னு சொல்லிட்டு இப்பவரைக்கும் என்ன ஏதுன்னு கூட கண்டுக்காம இருக்கானே.. அவன் சொன்னதெல்லாம் உண்மைதானா..? ஒருவேளை.. அவன் சொன்னது உண்மை இல்லைன்னாலும்.. நம்மளால அவனை நினைக்காம இருக்க முடியலையே.. அதுமாதிரி அவனுக்கு எதுவும் இல்லையோ..? என பலவாறு யோசித்தாள்.