அத்தியாயம் – 8–2
‘என்ன சின்னைய்யா இப்படி கேக்குறிங்க.. உங்க உப்பை திண்ணு வளர்ந்தவங்க நாங்க.. நீங்க எது சொல்றதா இருந்தாலும்.. அதிகாரமாவே சொல்லுங்க.. இப்படி இறங்கி பேசி.. என்னை நன்றி கெட்ட பாவியாக்கிடாதிங்க..” என்று இராமு சொல்லவும்.. மனம் குளிர்ந்து போனார் ராஜன். எப்பொழுதும் நன்றி என்ற வார்த்தையை பிடிக்காத ராஜனுக்கு இன்று ஏனோ பிடித்திருந்தது.
‘தங்கச்சி ஒன்னுமே சொல்லாம இருக்கே இராமு..” என்று ராஜன் சுமதியை பார்க்கவும்..
‘அச்சோ.. நான் என்னங்கய்யா சொல்றது..? நீங்களும் நிவியப்பாவும் என்ன சொல்றிங்களோ.. அதுதான் முடிவு..” என்றார் சுமதி..
தன் அம்மாவின் சம்மதம் கிடைத்ததும் மிகுந்த சந்தோசத்துடன்..
‘அம்மா.. ராஜய்யா மாதிரியே ராஜிக்கும் எவ்ளோ கோபம் வருதுங்கிறிங்க..? அன்னைக்கு ராஜிகிட்ட முத்து தப்பா பேசினதும்.. அவன் கன்னத்திலயே விட்டா பாரு ஒரு அறை.. அப்பவே அவளைத்தான் கல்யாணம் செய்துக்கனும்னு.. முடிவு பண்ணிட்டேன்..‚
உங்க எல்லாருக்கும் ஒன்னு சொல்றேன்.. ராஜிக்கு இன்னும் அவங்க அப்பா யாருன்னு தெரியாது.. அப்பான்ற வார்த்தையை சொன்னாலே ரொம்ப டென்சனாய்டுவா.. இதுல ராஜய்யா பொண்ணுங்கிறதாலதான் நீங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டிங்கன்னு தெரியவந்தா.. கண்டிப்பா அவ என்னை கல்யாணமே செய்துக்கமாட்டா. அதனால இனி எப்பவும் ராஜய்யா சொல்லிதான் நீங்க சம்மதிச்சிங்கன்னு யார்கிட்டயும் சொல்லக்கூடாது..” என்று மாறன் சொல்ல..
ராஜன் மீண்டும் கண்ணீர் வடித்தார். ராஜனின் மனம் புரிந்தவன்..
‘ராஜய்யா.. அவளோட அம்மா.. அவகிட்ட.. அவர் என்னை வேண்டாம்னு சொல்லலை.. நான்தான் அவரை விட்டுட்டு வந்துட்டேன்னு.. உண்மையைத்தான் சொல்லி வச்சிருக்காங்க. ஆனா.. உங்க பொண்ணுக்குத்தான் அவங்கம்மா தனியா கஷ்டப்பட்டதுக்கெல்லாம் முகம் தெரியாத அவளோட அப்பாதான் காரணம்னு நினைச்சி.. உங்க மேல அவ்ளோ வெறுப்பா இருக்கா.. ஒரு நாளைக்கு உண்மை தெரியவரும்போது உங்களை புரிஞ்சிப்பா.. அதுவரைக்கும் நீங்க கொஞ்சம் பொறுமையாத்தான் இருக்கனும்..‚ இப்படி அழுது உங்க உடம்பை கெடுத்துக்க கூடாது.” என்று மாறன் அன்பு கட்டளையிட்டான்.
‘மாறா.. நான் அவளை ரொம்ப பேசிட்டேன்..“ என்று சுமதி வருந்தவும்..
‘விடுங்கம்மா.. தெரியாமத்தான பேசுனிங்க..? அதுக்கு பதிலா அவளுக்கு வேற பரிகாரம் செய்து.. அவளை சமாதானப் படுத்திடலாம்..” என்று லேசாய் சிரித்தான்.
‘டேய்.. நீ சரியான கேடிதாண்டா…” என்று சோபனா சிரிக்கவும்..
ராஜன் அருகில் இருப்பதால்.. ‘நான் மன்னிப்பு கேட்டுடட்டுமா மாறா..?” என்று சுமதி தவிப்போடு கேட்கவும்..
[the_ad id=”6605″]
‘ஏம்மா.. அவளெல்லாம் ஒரு ஆளுன்னு.. நீங்க போய் அவகிட்ட மன்னிப்பு கேட்க போறிங்களா..? அதை இந்த இளமாறன் பார்த்திட்டிருப்பானா..? உங்க மருமகளை அதட்டி.. மிரட்டி.. உங்க மாமியார் கெத்தை காட்டுறதை விட்டுட்டு.. நீங்க இப்படி பேசினா.. அப்புறம் அவ உங்க தலையில மொளகா அரைச்சிடுவா. ஏற்கனவே யாருக்கும் அவ பயந்துக்கிறதில்ல..” என்று மாறன் தன்னவளின் பெருமையை சொல்ல..
‘வேற என்ன பண்றது மாறா..?” என்று சுமதி பாவமாய் கேட்க..
‘நீங்க யார்கிட்டையும் போய் மன்னிப்பு கேட்க வேணாம்.. சோபனாவும்.. நிவேதாவும் அவளைப் போய் பார்த்து.. சோபனா கல்யாணத்துக்கு வரசொல்லி பத்திரிக்கை மட்டும் வச்சிட்டு வரட்டும்.. மத்ததை நான் பார்த்துக்கிறேன்..” என்று மாறன் சோபனாவை பார்த்து கண்ணடிக்க..
சோபனா ‘அடப்பாவி..” என முனுமுனுத்து.. வாயை பிளந்தாள்.
‘பத்திரிக்கை மட்டும் போதுமா..? இல்ல.. புடவை.. நகை நட்டுன்னு எதாவது கொடுத்தனுப்பப் போறிங்களா மாறன்..” என்று கிசோர் கேட்டு சிரிக்கவும்..
‘அட..‚ ஆமாம் மாமா.. இந்த வீட்டுக்கு வரப்போற மருகளை.. முதன்முறையா பார்க்க போறாங்க.. சும்மா வெறும் கையோடு போக முடியாதில்ல..? இதுக்குத்தான்.. வீட்டுக்கு ஒரு பொருப்பான மருமகன் வேணும்ங்கிறது..‚
நிவிக்கா.. நீ என்ன பண்றன்னா.. உனக்கு வாங்கின சாரில ஒன்னை எடுத்திட்டு போய்.. அவளுக்கு கொடுத்திட்டு.. அப்படியே பத்திரிக்கையும் வச்சிடு.. நகை நட்டெல்லாம் நான் அப்புறம் பார்த்துக்கிறேன்.. ம்ம்.. அந்த கனகாம்பரம் கலர் சாரி உனக்கு பிடிக்கலைன்னு வேணாம்னுதான சொன்ன..? நான் சொன்னேன்னுதான வாங்கின..? அதனால அந்த சாரியையே எடுத்திட்டு போய் அவளுக்கு கொடுத்திடு..” என்று மாறன் முகம் மாறாமல் சொல்ல..
‘அடப்பாவி..” என்று மீண்டும் சோபனா வாயை பிளந்தாள்.
‘மாறா.. நீ நேர்மையாத்தான் இதெல்லாம் சம்பாதிக்கிறயா..? அந்த வேலாயுதம் ஐய்யாவே உனக்கு அப்படி பயந்துக்கிறார்..? அவங்க சொத்தை எல்லாம் என்ன பண்ணின..? காசு பணத்துக்காக.. நீ ரௌடியா மாறிட்டியா மாறா.. இப்பவெல்லாம் உன் பேச்சே சரியில்ல.. அந்த முத்துகிட்ட கூட நீ ரௌடிப் பையன் மாதிரிதான் பேசின..” என்று நிவேதா வருத்தப்படவும்..
‘ச்சீ.. ச்சீ.. நீ என்ன நிவி இப்படி பேசற..? நான் எதுக்கு ரௌடியா மாறப்போறேன்..? அடுத்தவங்க சொத்தை அபகரிச்சி அவனுங்க வாழ்ந்திட்டிருக்கிறது.. இந்த ஊருக்கே தெரியும்.. நான் அதை கொஞ்சம் சரிபடுத்தி.. உடைமைப் பட்டவங்களுக்கு வாங்கி கொடுத்தேன்.. அது ரௌடித்தனமா..? இந்த காலத்தில நல்லது செய்தா கூட ரௌடி பட்டம் கட்டிடறாங்க பார்த்திங்களா ராஜய்யா..” என்று மாறன் ராஜனை துணைக்கழைக்க..
‘ஆமாம் மாறா.. ஊரே அதைப் பத்திதான் இப்ப பேச்சு ஓடிட்டிருக்கு.. அதை விசாரிக்கலாம்னுதான் நான் இங்க வந்தேன்..” என்றார் ராஜன்.
‘அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் ராஜய்யா.. இன்னைக்கு நீங்க எங்க வீட்ல சாப்ட்டேதான் ஆகனும்..” என்று பேச்சை மாற்றினான் மாறன்.
‘சின்னைய்யா போய்.. நம்ம வீட்ல.. எப்படி சாப்பிடுவார்..?“ என்று இராமு தடுமாற..
‘அப்பா.. இது ராஜய்யாவோட முதல் சம்மந்தி வீடாக்கும்..‚ அவர் மட்டும் இன்னைக்கு நம்ம வீட்ல சாப்பிடலைன்னா.. கல்யாணத்துக்கப்புறம்.. அவர் பொண்ணை நான் சித்தரவதை செய்வேன்னு.. அவருக்கு தெரியாதா என்ன..?” என சொல்லிக்கொண்டே ராஜனைப் பார்த்து மாறன் சிரிக்கவும்…
‘அந்த முத்து பையன் என் பொண்ணுகிட்ட அரை வாங்கினதை பார்த்துமா மாறா இப்படி பேசுற..? யார் யாரை சித்தரவதை செய்யப்போறதுன்னு பார்க்கத்தானே போறேன்..?” என ராஜன் நந்தினியை நினைத்து.. பெருமையாய் பேச.. அந்த நேரம் ராஜனுக்கு போன் வர..
’அப்பா.. மாத்திரை கூட சாப்பிடாம.. அந்த மாறனைப் பார்க்க போய்ட்டிங்களா…?” என்று லாவன்யா கோபமாய் கத்தினாள்.. அவளின் குரல் அவரின் போனை தாண்டி மாறனுக்கே கேட்டது.
‘இவளுக்கு மட்டும் நீங்க என்கூட இருந்தா எப்படித்தான் மூக்கு வேர்க்குமோ..? ஒரு மாமாங்கிற மட்டு மரியாத இல்லாம.. பெத்து பேர் வச்சமாதிரி.. மாறனாமே.. மாறன்.. என் கொழுந்தியாளுக்கு ஒரு நாளைக்கு இருக்கு..‚“ என்று மாறன் சபதமிட..
சிரித்த ராஜன்.. ‘நிவேதாம்மா.. நான் மாத்திரை சாப்பிடாம சாப்பாடு சாப்பிடமாட்டேன்.. நீ கொஞ்சமா டீ மட்டும் கொடு.. நான் குடிச்சிட்டு கிளம்பறேன்..” என்றார்.
ராஜன் டீ குடித்து வெளியே வரவும்.. அவரோடு தனியே வந்த மாறன்..
‘ராஜய்யா.. நீங்க சொல்லித்தான் நான் உங்க பொண்ணை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சேன்னு எங்கம்மாக்கு மட்டும் தெரிஞ்சது.. என் ராஜிகிட்ட நான் காலி.. பேயாட்டாம் ஆடிடுவா.. எங்கம்மாக்கு எதுவும் மனசில தங்காது.. என்னைக்காவது ராஜிகிட்ட அப்படியே சொல்லிடுவாங்க.. அதனாலதான் நீங்க பேசும்போது.. நான் குறுக்க பேசினேன்..
[the_ad id=”6605″]
இனிமே எப்பவும் யார்கிட்டயும் இப்படி சொல்லாதிங்க.. நீங்க உங்க பொண்ணை சும்மா பார்க்கத்தான் ராஜிகிட்ட கூட்டிட்டு போனிங்க.. அவளைப் பார்த்ததும் எனக்கு பிடிச்சிருச்சின்ற மாதிரிதான் ராஜியோட சேர்த்து எல்லாருக்கும் தெரியனும்..‚” என்றான் அன்பு கட்டளையாக.
‘சரி மாறா..” என்றவர் சற்று அமைதிகாத்து.. ‘இந்த மாதிரி ஒரு கொடுமை எந்த அப்பனுக்கும் வரக்கூடாது..” என்று முகம் வாடினார்.
‘ராஜய்யா.. இதுல ஒரு கொடுமையும் இல்ல.. எல்லாம் சரி செய்திடலாம்.. நீங்க மட்டும் கவலைப்படாம இருங்க.. எனக்கு அதுபோதும்..” என்றான்.
ராஜன் எதையோ கேட்க சங்கடப்படுவது அவரின் முகத்தில் தெரியவும்.. ‘நான் அன்னைக்கே அவ்ளோ தூரம் சொல்லியிருந்தும்.. அந்த முத்து பையன்.. எங்கம்மாகிட்டயே நான் ராஜியை வச்சிட்டிருக்கேன்னு சொல்லியிருக்கான். இன்னும் தேவையில்லாம நிறைய பேசியிருக்கான். இது இப்படியே போனா.. ராஜியால இங்க நிம்மதியா இருக்க முடியாது..
அதோட.. என் வருங்கால பொண்டாட்டியை யாரையும் தப்பா பேச விடமாட்டேன்னு அன்னைக்கே நான் உங்களுக்கு வாக்கு கொடுத்திருந்தேன்ல..? அதான்.. அவனுக்கு ஒரு முடிவுகட்டிடலாம்னு..” என்று தான் யாரின் உதவியோடு இந்த மிகப்பெரிய வேலையை ஒரே வாரத்திற்க்குள் செய்து.. வேலாயுதத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் செய்தேன் என்று தன் மீசையை முறுக்கிய படி சொல்லிமுடித்தான் மாறன்.
‘மாறா.. நிவேதா சொல்றமாதிரி.. நீ சரியான ரௌடிப்பையல்தான் போல..” என்று சொன்னாலும்.. தன் மருமகனை பெருமையாகத்தான் பார்த்தார் ராஜன்.
‘உங்க ரௌடிப் பொண்ணுங்களுக்கு முன்னால.. என் தைரியமெல்லாம் கம்மிதான்.. அதுவும் உங்க பெரிய பொண்ணு.. ராஜியையாவது மிரட்டி உருட்டி சமாளிச்சிடலாம்… இந்த லாவி இருக்காளே.. யப்பா.. அவளைப் பொறுத்த வரை.. எனக்கு சரணடையறதை தவிர.. வேற வழியே இல்ல..” என்றான் சிரிப்போடு.
ராஜன் சிரித்தாலும்.. மீண்டும் அவர் முகத்தில் தயக்கம் தெரியவும்.. மாறன் ராஜனை ஊன்றிப் பார்த்து.. ‘என்கிட்ட உங்களுக்கு என்ன தயக்கம் ராஜய்யா..? எதோ கேக்கனும்னு நினைக்கிறிங்க.. எதுன்னாலும் கேளுங்க.” என்றான்.
‘அம்முவைப் பத்தி எதாவது தெரிஞ்சதா.?” என்றார் சங்கடத்தோடு.
‘ம்ம்.. அவங்க நம்பர் என்கிட்ட இருக்கு.. ஆனா உங்களுக்கு அது வேணாம்.. தேவிம்மாவை மனசுல வச்சிதான் நாம எதுன்னாலும் செய்யனும்.. முடிஞ்சவரைக்கும் அவங்க மனசு கஷ்டப்படறமாதிரி நீங்க நடந்துக்கவே கூடாது. அவங்க உங்க பொண்டாட்டி.. அவங்க தான் உங்களுக்கு எல்லாரையும் விட முக்கியமா இருக்கனும்..‚ என் அமுதா அத்தைக்கு நான் இருக்கேன்.. அவங்களுக்கு அதுபோதும்..” என்று கட்டளையாய் சொல்லி முகம் திருப்பினான்.
‘மாறா.. இதை நீ சொல்லித்தான் எனக்கு தெரியனுமா..? ஆனா.. எனக்கு அமுதாவை பார்த்து பேசனும்.. எதனால அவ இந்த முடிவு எடுத்து.. என்னை இந்த சித்திரவதைக்கு ஆளாக்கினான்னு எனக்கு தெரிஞ்சே ஆகனும்..‚” என்றார் உணர்ச்சி மிகுந்த குரலில்.
‘இதுபத்தி பேசினா வருத்தம்தான் மிஞ்சும்.. உங்களுக்குன்னு பொண்டாட்டி.. குழந்தைகள் இருக்காங்க.. நீங்க அவங்களை நினைங்க..‚ இதுபத்தி நினைக்காதிங்க..” என்று ஆறுதல் சொல்லி.. முடிந்தவரை ராஜனின் சங்கடத்தை போக்கியே அனுப்பிவைத்தான்..
மெல்லிய விசிலொலியோடு வீட்டினுள் வந்தான் மாறன். ‘ஒரு வாரமா.. இஞ்சி திண்ணவனாட்டாம் முகத்தை வெச்சிருந்திட்டு.. இப்ப எதுக்கு இந்த ஜொலி ஜொலிக்குது உன் மொகரகட்டை.. கல்யாணம் எனக்கா..? இல்ல உனக்கா..?” என்றாள் சோபனா.
[the_ad id=”6605″]
‘ம்ம்.. என் முகம் அப்படியா ஜொலிக்குது சோபி..? நான் ரொம்ப நல்ல பையன் சோபி.. கல்யாண வயசில தங்கச்சியை வீட்ல வச்சிகிட்டு நானெல்லாம் அப்படி அவசரபட்டு கல்யாணம் செய்துக்கமாட்டேன்.. வேணும்னா.. உனக்கு கல்யாணம் முடிஞ்சதும்.. மூ….னு மாசம் கழிச்சி கல்யாணம் செய்துக்கிறேன்..‚ அதுவுமே.. நீயும் கல்யாணம் ஆகி போய்ட்டின்னா.. அம்மா தனியா கஷ்டப்படுவாங்கல்ல..? அதுக்காகத்தான்..‚ நீயேது.. எனக்காகன்னு தப்பா நினைச்சிடாத..” என்று சிரித்தான்.
‘என்னவோ.. மூனு வருசம் கழிச்சி கல்யாணம் செய்துக்கிறமாதிரி.. மூனு மாசத்துக்கு இந்த இழு இழுக்கிறான்.. உங்க மகன் லட்சணத்தை பார்த்திங்களாப்பா..?” என்றாள் சோபனா.
‘ஏன் சோபி எப்பப்பாரு அவன்கிட்டையே வம்பு பண்ணிட்டிருக்க..?” என்று சுமதி சோபனாவை செல்லமாய் அதட்டி.. ‘மாறா.. சோபனா கல்யாணப் பொண்ணு.. அதனால அவ பத்திரிக்கை வைக்க போகவேணாம்.. நீயும்.. நிவியும் போய் நந்தினிக்கு பத்திரிக்கை வச்சிட்டு வாங்க..” என்று சுமதி சொல்ல..
‘அட.. ஆமாமில்லம்மா..? கல்யாணப் பொண்ணெல்லாம் வெளில வரக்கூடாதில்ல..? ஏய் சோபி.. நீ அடக்க ஒடுக்கமா வீட்லயே இரு.. நானும் நிவியும் போய் பத்திரிக்கை வச்சிட்டு வரோம்..” என்று மாறன் உல்லாசமாய் சிரிக்க..
‘யப்பா.. என் மச்சான் காட்ல அடைமழைதான் போ..” என்று கிசோரும் சிரித்தான்.
‘டேய்.. என்னை கழட்டிவிட்டுட்டு.. நீ போய் அண்ணியோட லூட்டியடிக்கலாம்னு பார்க்கிறியா..? அதெல்லாம் இந்த சோபிகிட்ட நடக்காது.. பார்த்த முதல் பார்வையிலயே உன்னை மயக்கின அந்த ரதியை நான் பார்க்க வேணாமா..? நானும்தான் வருவேன்..‚” என்று சோபனா சொல்ல..
‘நேத்து இதுக்காகத்தான் நான் உன்னை கெஞ்சினேன்.. ஆனா இன்னைக்கு நீ கெஞ்சுறமாதிரி ஆய்டுச்சி.. காலம்.. எவ்ளோ வேகமா சுத்துது பார்த்தியா சோபனா..?” என்று மாறன் நடிகை தேவியானி போல் கிண்டலோடு முனுமுனுக்க..
சோபனா முறைக்க.. ‘சரி.. சரி.. நீ உன் ஸ்கூட்டியில வா.. நானும் நிவியும் பைக்ல வரோம்.. கிளம்பு.. கிளம்பு..” என்று சத்தமாகவும் சந்தோசமாகவும் சொன்னவன்..
‘அவளுக்கு வாங்கின நகையையும் அம்மாக்கு தெரியாம எடுத்திட்டு வந்திடு சோபி.. என் செல்லமில்ல.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..” என்று கிசுகிசுப்பாய் கெஞ்சினான்.
நிவேதா நந்தினிக்கு வாங்கிய சாரியை சுமதியிடம் காண்பித்து கொண்டிருக்கையில்.. நகையை அவருக்கு தெரியாமல் வெளியே எடுத்து வந்து தன் ஸ்கூட்டிக்குள் வைப்பதற்குள் போதும்.. போதும் என்றாகிவிட்டது சோபனாவிற்க்கு.. ஒரு வழியாக நந்தினி வீட்டை வந்தடைந்தனர் மூவரும்.
கதவு லேசாக திறந்துதான் இருந்தது.. அப்பொழுதுதான் பள்ளியில் இருந்து வந்திருந்தாள். கட்டிலில் படுத்துகொண்டு.. மாறனின் அம்மா திட்டியதையே நினைத்து வருந்திக் கொண்டிருந்தாள்.
‘நந்தினி..” என்று அழைத்தபடி நிவேதா கதவைத் தட்ட..
‘யாரு..?” என்றபடி எழுந்து வந்தவள்.. வாசலில் நிவேதாவும்.. சோபனாவும்.. பேகோடு நின்றிருக்க.. திருதிருவென விழித்தாள் ராஜநந்தினி. பிறகுதான் பக்கவாட்டில் இருந்து மாறன் தன் முகத்தை காட்ட.. கண்கலங்கியவாறு முகம் திருப்பினாள்.
‘உன்வீடு தேடி வந்திருக்காங்க ராஜி..” என்று மாறன் சொல்ல.. யாரா இருக்கும்..? என்பதுபோல் நிவேதாவை பார்த்தாள் நந்தினி.
‘இவங்க.. என் அக்கா.. எனக்கு அம்மாபோல.. இவ என் தங்கை.. எப்பவும் என்கிட்ட சண்டைக்கு கிளம்பும் என் இனிய வில்லி..” என மாறன் அறிமுகப்படுத்தவும்.. சோபனா கோபத்தோடு மாறனை முறைக்க.. தன் அம்மாவை இவர்கள் என்ன சொல்லுவார்களோ என்ற பாவனையில் அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்து நின்றாள் ராஜநந்தினி.