அத்தியாயம் – 9–2
‘என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கத்தை..” என்றான் மாறன்.
‘ஏய்..” என்று நந்தினி பதற.. அமுதா.. நீதான் மாறனா..? என்பதுபோல் பார்க்க..
‘ஆமாம்த்தை நான்தான் உங்க மருமகன் இளமாறன்..” என்றான்.
‘நல்லாயிருக்கியா தம்பி..” என்று நலம் விசாரித்த அமுதா முகத்தில் சந்தோசம் இல்லை. பதட்டம்.. பரிதவிப்புதான் இருந்தது.
‘எங்கப்பாம்மா எங்க கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க.. உங்க சம்மதம் வாங்கறதுக்காக உங்களை அடுத்த மாசத்தில ஒரு நாள் நேர்ல வந்து பார்க்கிறேன்த்தை..” என்றான் தன்மையாக.
அமுதா.. ‘நீங்க ஆசைப்பட்டுட்டிங்கன்ற காரணத்துக்காக.. பின்னாடி வர பிரச்சனை தெரியாம உங்க வீட்ல ஒத்துகிட்டிருப்பாங்க.. எதுவும் முடிவாகாம.. எதுக்கு இப்படி சாரியெல்லாம் வாங்கி கொடுத்திருக்கிங்க.? கல்யாணம் நல்லபடியா முடியற வரைக்கும் இந்த மாதிரி எதுவும் வாங்கிதராதிங்க..” என்றார் கண்டிப்போடு.
‘நான் ராஜியைத் தவிர வேற யாரையும் கல்யாணம் செய்துக்க மட்டேன்னு எங்க வீட்ல ரொம்ப உறுதியா சொன்னேன்.. யார் அந்த பொண்ணுன்னு கேட்டாங்க.. நான் ராஜிக்கு இங்க வேலைகிடைச்சி இங்க தங்கியிருக்கிறதை பத்தியும்.. இந்த வீட்டுக்கு சொந்தக்காரரோட அமுதாவோட பொண்ணுதான் ராஜிங்கிறதைப் பத்தியும் சொன்னேன்.. எங்கப்பாம்மாக்கு உங்களையும்.. உங்க அப்பாம்மாவையெல்லாம் முன்னமே தெரிஞ்சிருக்கு.. உங்க பேர் சொன்தும் அவங்க உங்களை நியாபகத்துக்கு கொண்டுவந்திட்டாங்க..” என்றவன்.. சற்று தயக்கம் கொண்டு..
‘அப்புறம் உங்களைப் பத்தின மீதி விபரங்களை.. எங்கப்பாவோட முதலாளி.. தண்டபானி தாத்தாவோட மகன் சொன்னாரு..” என்று ராஜி பக்கத்தில் இருப்பதை கருத்தில் கொண்டு.. கவனமாக ராஜனின் பெயர் சொல்வதை தவிர்த்தவன்..
‘அவர் சொன்னதும் எங்க வீட்ல உங்களை புரிஞ்சிகிட்டாங்க.. எங்கப்பாம்மா நான் ராஜியை கல்யாணம் செய்துக்க பரிபூர்ணமா சம்மதம் சொல்லிட்டாங்க… உங்க சம்மதம் மட்டும்தான்த்தை பாக்கியிருக்கு..” என்றான் நிறைவான பார்வையோடு.
‘உண்மையாவா..? உங்கப்பாம்மா என்னை தப்பா நினைக்கலையா..?” என்று இன்ப அதிர்ச்சியோடு அமுதா கேட்டார்.
‘உண்மையாவே எங்க வீட்ல யாரும் உங்களை தப்பா நினைக்கல.. உங்க வயித்தில பிறந்த ராஜியை.. நான் கல்யாணம் செய்துக்கிறதை நினைச்சி.. எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு..” என்றான் மகிழ்வோடு.
ஆனந்த பிரவாகத்தில் அமுதா கண்கலங்கவும்.. ‘ஒரு நிமிசம் இருங்கத்தை..” என்றவன் போனை நந்தினியிடம் கொடுத்து.. தன் இன்னொரு கையில் வைத்திருந்த நகைபெட்டியைத் திறந்தவன்.. அதிலிருந்த நகையை அமுதாவிடம் காண்பித்து..
‘இது என் ராஜிக்காக நான் முதன்முதலா ஆசையா வாங்கின பரிசு.. கொஞ்சம் வாங்கிக்க சொல்லுங்கத்தை..” என்றான் கனிவாக.
தான் நினைத்ததுபோல்.. ராஜன் அவர் மகளை இனம் கண்டு கொண்டதோடு இல்லாமல்.. தன் மகள்தான் நந்தினி என்பதை.. மாறன் வீட்டில் மனதாற ஒப்புக்கொண்டுள்ளார்.
[the_ad id=”6605″]
தன் மகளின் திருமணம் இனி தடையில்லாமல் நடப்பதோடு.. கௌரவமாகவும் நடக்கும்.. என்ற பெருமையில் மூழ்கியிருந்த அமுதாவிற்க்கு கண்களில் கண்ணீர் வெளியேறிக் கொண்டிருடிருக்க.. தன் மகள் வாழப்போகும் வீட்டினருக்கு அவளின் பிறப்பை பற்றிய விபரம் தெரிந்தும்.. நந்தினியை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இனி தன் மகளின் பிறப்பை யாரும் குறை சொல்லாமல் ராஜன் பார்த்துக்கொள்வார் என்ற நிம்மதியிலும் பெருமையிலும்.. அமுதா தன்னை மறந்திருந்த நிலையில்..
‘நீங்க சொன்னா என் பொண்டாட்டி வாங்கிக்குவா.. இந்த நகையை ராஜியை வாங்கிக்க சொல்லுங்கத்தை…” என்று மீண்டும் சொன்னான் கெஞ்சும் தோரணையில்.
‘மாறன் தம்பி கொடுக்கிறதை வாங்கிக்கோ நந்தினி.. இனி உனக்கு எந்த கவலையும் வேண்டாம். எல்லாம் மாறன் தம்பி பார்த்துக்கும்..” என்று தன்னை மறந்து ஒப்புவிப்பவர் போல் சொல்லி இணைப்பை துண்டித்தார் அமுதா.
‘ஆங்..” என வாயைப் பிளந்தவள்.. ‘நான் என் அம்மும்மாவோட வீடியோ கால் பேசிட்டிருக்கும்போது.. என் பர்மிசன் இல்லாம.. நீ எதுக்கு இடையில நுழைஞ்ச..? அதுவும் ராஜி.. ராஜின்னு வேற சொல்ற..? எனக்கு அப்படி கூப்பிட்டா பிடிக்காதுன்னு எங்கம்மாக்கு நல்லாவே தெரியும்.. நீ அவங்ககிட்டையே சும்மா.. ராஜி.. ராஜின்னு சொல்லிட்டே இருக்க..? அம்மும்மா என்னை பத்தி என்ன நினைப்பாங்க..? கொஞ்சமாச்சம் அறிவிருக்கா உனக்கு.?” என்று நந்தினி கோபமாக கத்தினாள்.
‘என் அத்தையே ஒன்னும் நினைக்கல.. நீ ஏன் தேவையில்லாம டென்சன் ஆகுற..? இப்படி கொஞ்ச நேரம் அமைதியா உக்காரு..” என்று அவளை கட்டிலில் அமரவைத்தவன்.. அவளின் காதில் இருந்த கம்மலை கழற்ற ஆரம்பித்தான்.
‘என்ன பண்ற..?” என்று நந்தினி பதற.. ‘ம்ம்.. தெரியலை..? கம்மலை கழட்டுறேன்..” என்று குழைவாக பதிலளித்துக்கொண்டே அவளின் கம்மலை கழற்றி முடித்தவன்..
தான் வாங்கி வந்த கம்மலை எடுத்து.. அவளின் முகத்தை பார்த்தவாறே கம்மலுக்கு லேசாய் இதழ்பதித்து.. அவளின் காதில் அணிவித்து.. பிறகு அவளின் கையிலிருந்த வாட்சை கழற்றியவன்.. இரு வளவிகளையும் எடுத்து.. அதற்கும் அழுந்த முத்தமிட்டு அவளின் கையில் போட்டு அழகுபார்த்து.. கடைசியாக அவளின் கழுத்திலிருந்த செயினை மென்மையாய் வருடி.. மெல்ல அதை கழற்றவும்.. அதுமட்டும் அவள் கழுத்திலிருந்து வரமாட்டேன் என வசமாய் எதிலோ மாட்டிக்கொள்ள..
‘அது.. அது.. விடு.. செயின் இதுவே இருக்கட்டும்..” என்றாள் திணறியபடி.
‘ம்ம்.. கூம்.. நான் இதை இப்ப உனக்கு போட்டே ஆகனும்.. அதை கழட்டு..” என்று பிடிவாத குரலோடு சொல்ல..
‘அது.. இப்ப கழட்ட முடியாது..” என்றாள் சன்னக் குரலில்.
‘ஏன்..?” என்றான்.
‘அதெல்லாம் சொல்லமுடியாது.. எனக்கு கம்மலும்.. வளையலும் போதும்.. செயின் அப்புறம் போட்டுக்கிறேன்.. அதோட ஸ்கூலுக்கு இப்படி நகை போட்டுட்டு மினிக்கிட்டெல்லாம் என்னால போகமுடியாது.. நீ செயினை கைலயே கொடு..” என்றாள் முடிவாக.
‘முடியாது.. இதை இப்பவே நான் உனக்கு போட்டு பார்க்கனும்.. ஸ்கூலுக்கு போகும்போது கழட்டி வச்சிடு.. இப்ப இந்த செயினை கழட்டு..” என்று மீண்டும் செயினை பிடித்து மாறன் இழுக்க..
‘ப்ச்.. அது ஜாக்கெட் கொக்கியோட சேர்த்து போட்டிருக்கேன்.. விடு..” என்று முகம் திருப்பினாள்.
லேசாய் சிரித்தவன்.. ‘சரி.. அங்க போய் கழட்டிட்டு வா..” என்று கிச்சனை காண்பித்தான்.
‘நான்தான் அப்புறம் போட்டுக்கிறேன்னு சொல்றேன்ல..?” என்றாள் முகம் சிவந்து.
‘இப்ப நீ கழட்டுறியா..? இல்ல.. நான்..” எனும்போதே நந்தினி உள்ளே சென்றிருந்தாள். சற்று நேரம் கழித்து வெறும் கழுத்தோடு நந்தினி வெளியே வரவும்.. தான் வைத்திருந்த செயினில் இருந்த டாலருக்கு.. சற்று சத்தம் வரும்படி இதழ்பதித்து அணிவித்தான்.. அந்த செயினின் டாலர் அவள் நெஞ்சுக்கூட்டை எட்டிப் பிடிக்கும் தூரத்திலிருக்க..
[the_ad id=”6605″]
‘இன்னும் கொஞ்சம் பெருசா வாங்கியிருந்தா.. என் கிஸ்.. உன் மனசை தொட்டிருக்கும்..” என்றான் ஏக்கத்தோடு.
ஷப்பா.. இவன் நேரடியா நமக்கே முத்தம் கொடுத்திருந்தானா கூட இப்படி அவஸ்த்தை இருக்காது போல.. என நினைத்தவள்..
‘எல்லாம் முடிஞ்சதில்ல..? கிளம்பு.. கிளம்பு..” என்றாள் உடல் சிலிர்த்தபடி.
‘எனக்கு ஒன்னும் இல்லையா..?” என்றான் மென்மையான குரலோடு.
என்ன வேணும்..? என்பது போலவும்.. தப்பாய் எதாவது கேட்டிடுவானோ.. என்ற பாவனையோடும்.. பதட்டத்தோடும் மாறனைப் பார்த்தாள்.
அவளின் பதட்டத்தை பார்த்தவன்.. ‘பெருசா ஒன்னும் வேணாம்.. அன்னைக்கு வச்சி கொடுத்தியே.. கேவலமா ஒரு டீ.. அதுமாதிரி இல்லாம.. இன்னைக்காவது கொஞ்சம் பெட்டரா குடிக்கிறமாதிரி வச்சிக்கொடு..” என சொல்லி அவளிடமிருந்து விலகி.. கட்டிலில் அமர்ந்து.. அவளின் தலையைணையை எடுத்து தன் மடிமீது வைத்துக்கொண்டான்.
‘எனக்கு அப்படித்தான் வைக்கத்தெரியும்..” என்று முறைப்போடு சொன்னவள்..
‘உங்கக்காக்கு என்ன ஆச்சு..? இப்ப எப்படி இருக்காங்க..?” என்றாள் அக்கறையோடு.
‘கொஞ்சம் டல்லாத்தான் இருக்காங்க.. எல்லாம் எங்க மாமா செய்த வேலை..‚” என்று கோபமாய் சொல்வது போல் சொன்னான்.
‘ஏன் என்ன செய்துட்டாங்க..?” என்றாள் பதட்டத்தோடு.
‘எங்கக்காவை அம்மாவாக்கி.. என்னை தாய்மாமாவாக்கி.. என் தங்கையை சித்தியாக்கி.. எங்கம்மாப்பாவையும் தாத்தா பாட்டி ஆக்கிட்டார்..” என்றான் குரலில் கோபம் கொண்டும்.. முகத்தில் மென்மை கொண்டும்.
‘என்ன..?” என்று புரியாமல் அவன் முகம் பார்க்க.. தலைசாய்த்து மாறன் அர்த்தமாய் சிரிக்க.. பிறகு சட்டென புரியவும்.. ‘உன்னை..” என்று முறைத்து…
‘இரு அன்னைக்கு விட இன்னைக்கு ரொம்ப கேவலமா ஒரு டீ வச்சி தரேன்..” என்று பேசிக்கொண்டே கிச்சனுக்குள் சென்றாள்.
அவளின் செய்கையை ரசித்தவன்.. ‘ஆமா.. உனக்கெதுக்கு இரண்டு பில்லோ..?” என்று கட்டிலில் வாகாய் படுத்துக்கொண்டு.. இன்னொரு தலையணையை எடுத்து தன் மேல் வைத்து தன்னிரு கரங்களாலும் அணைத்துக்கொண்டு கேட்டான்.
‘ப்ச்.. அதை கொடு..” என்று அவனருகில் வந்து அத்தலையணையை உருவவும்.. அது அவனிடமிருந்து வர மறுத்தது.
‘உனக்கெதுக்கு இரண்டு பில்லோன்னு சொல்லு.. விடறேன்..” என்றான் மீண்டும்.
‘அது.. இது என் அம்மும்மா..” என முனகியவள்.. ‘ப்ச்.. அது என் காலுக்கு வச்சிக்குவேன்..” என்றாள்.
‘ஓ.. ஹோ.. இதைத்தான் உன் அம்மும்மாவா நினைச்சி.. கட்டிபிடிச்சிக்குவியா..?” என கேட்டு.. மேலும் அதனை சேர்த்தணைத்து.. அழுத்தமாய் இதழொற்றினான் அத்தலையணைக்கு.
‘ப்ச்.. என்ன பண்ற..? விடு இதை..” என்று அவனிடமிருந்து அத்தலையணையை உருவ.. விட்டுகொடுத்தவன்.. ‘உன் அம்மாவை கட்டிப்பிடிச்சிட்டு தூங்கினதெல்லாம் போதும்.. இனி அது நான்..” என்று அவள் வைத்திருந்த தலையணையை காட்டினான் புன்சிரிப்போடு.
அவன் மீதே அத்தலையணையை போட்டவள்.. மீண்டும் கிச்சனுக்குள் சரணடைந்து டீ வைப்பதில் கவனம் செலுத்தினாள்.
என்ன சிரித்தாலும்.. ராஜியின் முகத்தினில் வாட்டம் இருக்க.. டீ வைக்கும் வரை அமைதியாய் இருந்தான்.. டீ யை நந்தினி நீட்ட.. அதை வாங்கியவன்..
‘ராஜி.. நான் அன்னைக்கு அவ்ளோ சொல்லிட்டுப்போயும்.. அந்த முத்து பேச்சை கேட்டு எங்கம்மா பேசினதுக்கு.. இப்படி அழுதிட்டு.. சின்ன குழந்தைமாதிரி உங்கம்மாக்கு போன்ல சொல்லி.. அவங்களையும் நிம்மதியில்லாம செய்திருக்க..‚” என்றான் கோபமாக.
மாறனின் கோபமெல்லாம அவள் கண்ணுக்கு தெரியவில்லை.. மாறன் அமுதாவிடம் சொன்னதும் சரிவர நந்தினிக்கு புரியவில்லை ஆதலால்.. அவனின் பெற்றோர் தம்மை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால்.. ஸ்திரமாய் தன்னில் நிறைந்திருக்கும் இவனை எப்படி மறப்பது..? என்ற எண்ணமே மேலோங்கியிக்க.. முகம் வாடினாள்.
‘எல்லாம் மாறன் தம்பி பார்த்துக்கும்னு இன்னைக்கு உங்கம்மாவே சொல்லிட்டாங்கதான..? இனிமே யார் என்ன சொன்னாலும்.. உடனே எனக்குதான் நீ கால் பண்ணனும். உன் அம்மும்மா என்கிட்ட பேசும்போது.. அவங்க முகத்தில எவ்ளோ சந்தோசமும்.. நிம்மதியும் இருந்தது பார்த்தல்ல..? சும்மா.. எதுன்னாலும் உங்கம்மாகிட்ட சொல்லி அவங்க நிம்மதியை கெடுக்ககூடாது.. புரிஞ்சதா..?” என்றான் பொறுமையாகவே.
‘ம்ம்..” என்றாள்.
[the_ad id=”6605″]
‘நான் இன்னைக்கு போனேன்னா.. இனி என் தங்கை கல்யாண வேலையை பார்க்கவே சரியாயிருக்கும்.. கல்யாணம் முடிஞ்சதும் என்னோட ஆடிட்டிங் பெண்டிங் வேலையெல்லாம் பார்க்கனும்.. மோஸ்ட்டா வெளிலதான் சுத்திட்டிருப்பேன்னு நினைக்கிறேன்..” என சொல்லி டீ டம்ளரை நீட்டினான்.
வாங்கியவள்.. ‘ஏன் பாதி டீ வச்சிட்ட.?” என்றாள் இயல்பாய்.
‘நான் வாங்கி கொடுத்த நகை எப்படியிருக்கு..? உனக்கு பிடிச்சிருக்கான்னு முதல்ல சொல்லு..? அதுக்கப்புறம் டீ யை ஏன் வச்சிட்டேன்னு சொல்றேன்..” என்று மாறனும் இயல்பாகவே கேட்டான்.
‘ம்ம்.. ரொம்ப நல்லாயிருக்கு..” என்றாள் மலர்ந்த முகத்தோடு.
அவளின் நிறைந்த பார்வையில் மனம் மயங்கியவன்.. இனி இங்கிருக்க வேணாம் என நினைத்து.. ‘சரி நான் கிளம்பறேன்..” என்றெழுந்தான்.
‘டீ எப்படியிருக்குன்னு சொல்லிட்டு போ..” என்றாள்.
‘ம்ம்.. இதேமாதிரி டீ.. இன்னும் இரண்டு முறை குடிச்சா போதும்.. நான் சுகர் பேசன்ட்டாய்டுவேன்.. டீ ல அவ்ளோ சக்கரை..‚” என்றான்.
‘இல்லையே சரியாத்தான இருந்தது..” என்று முகம் சுருக்கினாள்.
‘அப்ப நான் பொய் சொல்றேனா..? வேணும்னா நீ குடிச்சி பாரு..” என்றான்.
நந்தினி அதிர்ச்சியாய் விழி விரிக்க.. ‘ஏன் நான் குடிச்சா.. நீ அதை குடிக்க மாட்டியா..?” என மாறன் உரிமையான கோபத்தோடு கேட்க.. உரிமையா கேக்குறானே.. குடித்துதான் பார்க்கலாமா..? என யோசித்தாலும் அவன் அருகில் இருப்பதால் தயங்கி நின்றாள்.
‘சரி.. நான் கிளம்பறேன்..” என்று முறைப்போடு சொல்லி வெளியே போக எத்தணிக்கவும்.. ‘இரு.. நான் குடிச்சி பார்த்து சொல்றேன்..” என்று டீ யை எடுத்து ஒரு சிப் குடித்தவள்.. அவனை முறைப்போடு பார்க்க… அதற்குள் அவளருகில் நெருங்கி நின்றவன்..
‘இன்னும் ரெண்டு முழுங்குதான்.. இதையும் குடிச்சிட்டு திட்டு..” என்று சின்ன சிரிப்போடு முனுமுனுத்து.. அவள் தவிர்க்க முடியாதபடி டம்ளரை அழுத்திப் பிடித்திருந்தான்.
நந்தினி குடித்து முடித்திருக்கவும்.. ‘சோபி கல்யாணம் நாமக்கல்ல வச்சிருக்காங்க.. நாலு மணிக்கெல்லாம் பிரம்ம முகூர்த்தத்திலயே தாலிகட்டிடனும்னு முரளி வீட்ல சொல்லியிருக்காங்க.. அந்நேரத்துக்கு நீ தனியா வரவேணாம்.. கல்யாணத்துக்கும் முதல் நாள் நைட்டே ரெடியா இரு.. நாங்க கிளம்பும்போது எங்களோடவே நீ வந்திடு.. எங்கப்பாம்மா இருப்பாங்களேன்னு யோசிக்காத.. அவங்க உன்னை ஒன்னும் சொல்லமாட்டாங்க.. எங்களோட வர உனக்கு சங்கடமா இருந்தா.. நீ கிசோர் மாமாவோட வந்திடு.. நிவி கன்சீவா இருக்கிறதால.. மாமா எங்கக்காவை தனியா கார்ல கூட்டிட்டு வரேன்னு சொல்லியிருக்கார்.. எங்களோட வரியா…? இல்ல உன் கிசோர் அண்ணனோட வரியா..?” என்றான்.
‘நான் அவங்களோடவே வந்திடறேன்..” என்றாள்.
‘சரி.. நான் கிளம்பறேன்… நீ பத்திரமா இரு..” என சொல்லி.. அவளின் தலையணையை பார்த்து.. ‘என்னையும் பத்திரமா பார்த்துக்கோ..” என கண்சிமிட்டி சொல்லி கிளம்பினான்.