நண்பனை ‘அம்போ’வென போலீசிடம் விட்டுவிட்டு தன் திட்டத்தை செயல்ப்படுத்த பார்க்கிற்க்குள் ஓடினான் ஆதி. முகத்தில் பாதியை அவனது நீண்ட கர்சீப் மறைத்திருந்தது.
அகண்ட மரத்தின் பின்னே மறைவாய் நின்று இரு டேடீ’களையும் நோட்டமிடத்தொடங்கினான் ஆதித்யா.
திட்டப்படி, ஜெயதேவை ஆதி தாக்கும்போது அது ராஜகோபால் கண்ணில் விழுந்து அவர் ஜெயதேவை காப்பாற்ற வரும்போது சில அடிகள் வாங்குவது போல வாங்கிவிட்டு, அங்கிருந்து ஓடிவிடுவது. தன் திட்டத்தை தானே ஒருமுறை மனதிற்குள் ஓட்டிப்பார்த்துக்கொண்டான்.
சுற்றுப்புறமும் சூழ்நிலையும் அதற்க்கு ஒத்துழைக்குமா என அவன் ஆராய, குறுக்கும் நெடுக்குமாய் அந்த பார்க்கிற்க்குள் ஒரு குட்டி கிராமமே சுற்றிக்கொண்டிருந்தது.
‘நீங்கலாம் ஏன்டா வாக்கிங் போக பார்க் வரீங்க? உங்க தெருவுல மொட்டமாடில எல்லாம் நடந்தா ஆவாதா?’ என அவர்களை மானசீகமாய் வைதுக்கொண்டே, தூரத்தில் ‘வார்ம் அப்’ செய்துக்கொண்டிருந்த ஜெயதேவை நெருங்கும் மார்கத்தை வகுத்தான் ஆதி.
அவன் நேரத்திற்கு ஜெயதேவை சுற்றி பலரும் நின்று உடற்பயிற்சியில் ஈடுப்பட்டிருக்க, சற்று அருகே அருகம்புல் சாறு கடையில் வேறு கூட்டமாய் சில ஆட்கள்.
‘இப்ப என்ன பண்றது?’ என ஆதி தவித்துக்கொண்டிருக்க, ராஜகோபால் தன் மொபைலில் பேசிக்கொண்டே ஒரு ஓரமாய் சென்றுக்கொண்டிருந்தார்.
[the_ad id=”6605″]
அவர் பேச்சுப்போக்கில் நடந்து சென்றுக்கொண்டிருந்த திக்கில் ஆள் நடமாட்டம் சற்று குறைவாகவே இருக்க, ஆதிக்கு அவன் திட்டத்தில் சிறு மாறுதல் செய்தால் என்ன? என்று தோன்றியது.
ஜெயதேவை குறி வைத்து காத்திருப்பதை விட, கிடைத்திருக்கும் ராஜகோபாலை தாக்கினால் என்ன? என்று தோன்ற, மறுநொடி யோசிக்காமல், விறுவிறுவென ராஜகோபாலை நோக்கி நடக்க ஆரம்பித்தான் ஆதி. ராஜகோபால் தன்போக்கில் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவர் ஒரு மரத்தடியில் நின்றுவிட, ஆதி அவரை நெருங்கும் சமயம்,
“ஹலோ மிஸ்டர். ராஜகோபால்! ஹவ் ஆர் யூ?” என கேட்டபடியே வந்தார் ஒருவர்.
‘ஹையோ… லூசுப்பயலே! நான் அட்டாக் பண்ற நேரத்துல தான் வந்து ‘ஹாய்’ சொல்லுவியாயா?’ என கடுப்பாகி அவர்கள் பின்னே தாமதித்து நின்றான் ஆதி. ஆள் நடமாட்டம் குறைவாய் இருக்கும்போதே ‘அடித்துவிடலாம்’ என்றால் அவன் அவசரம் வந்தவருக்கு எங்கே புரிகிறது?! பெருங்கதையாய் பேசிக்கொண்டிருந்தார் ராஜகோபாலிடம்.
பேசிக்கொண்டிருப்பவர் போகட்டும் என சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே பரபரப்புடன் அவன் நிற்க, ராஜகோபால் அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தார்.
அதை கண்ட ஆதிக்கு ‘பக்’கென்றது.
பார்த்தவரோ மீண்டும் திரும்பி வந்தரிடம் பேச்சைத்தொடர, ‘ஹப்பா சும்மாதான் பார்த்துருக்காரு போல’ என ஆசுவாசமானான் ஆதி.
அடுத்த ஒரு நிமிடத்தில் இருமுறை அவனை திரும்பி பார்த்துவிட்டார் ராஜகோபால். ஆதி தன் முகக்கவசத்தை இன்னும் நன்றாய் மேல்நோக்கி பாதி கண் மட்டுமே தெரியும்படி இழுத்துவிட்டுக்கொண்டான்.
பேசிக்கொண்டிருந்தவர் ராஜகோபாலிடம் விடைப்பெற, அதைப்பார்த்த ஆதி நொடியும் தாமதிக்காது, அவரை நோக்கி பாய, சட்டென ஆதியை நோக்கி திரும்பிய ராஜகோபால், “என்ன ஆதி இந்த பக்கம்?” என்றார் இயல்பாய்.
‘நானும் ரவுடி தான்’ என கெத்தாய் கிளம்பி வந்தவனை பார்த்த உடனே அவர் சரியாய் அடையாளம் கண்டுவிட, அந்த குழந்தை ஏமாந்து தான் போனது.
அவனுக்கு வார்த்தையே எழவில்லை. அவர் தன்னை கண்டுக்கொண்டாரே! என்றதிலே ‘ஸ்டன்’னாகி நின்றுவிட்டான் அவன்.
[the_ad id=”6605″]
“ஆதி உன்னை தான்ப்பா? என்கிட்ட எதுவும் பர்சனலா பேசணுமா? அதான் இங்க வந்தியா?” என அவர் மேற்கொண்டு பேச, இயலாமையுடன் முகத்தில் இருந்த கர்சீபை அகற்றியவன், “எப்படி சார் நாந்தான் ‘ஆதி’ன்னு கண்டுப்பிடிச்சீங்க?” என்றான் பாவமாய்.
அவனை புரியாது பார்த்தவர், “ஏன் ஆதி?” என்றார்.
“இல்ல, முகத்துல கர்சீப் கட்டிருந்தேனே?” என கேட்க, அவனைக்கண்டு நமட்டு சிரிப்பு சிரித்த ராஜகோபால், “யூ ஆர் ஆல்வேஸ் ஃபன்னி(funny)” என்றார் அவன் தோள்த்தட்டி.
அவர் தன்னை அடையாளம் கண்டுக்கொண்டதில், போட்டிருந்த மொத்த பிளானும் சொதப்பியதே என பெரும் வருத்தம் வாட்ட, “சொல்லுங்க சார், எப்டி என்னை கண்டுப்பிடிச்சீங்க?” என்றான் விடாது.
அவனை விநோதமாய் பார்த்தவர், “முகத்துல கர்சீப் இருந்தா எனக்கு உன்னை அடையாளம் தெரியாம போய்டுமா என்ன? மோர்ஓவர் கழுத்துல நம்ம கம்பெனி ‘டேக்’ வேற மாட்டிருக்க!” என அவர் சுட்டிக்காட்ட, தன் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த கம்பெனியின் அடையாள அட்டையை கண்டவன், “கோகுல்ல்ல்ல்ல்ல்…” என ஆத்திரமாய் பல்லைக்கடித்தான்.
அதிகாலையில் இருவரும் பார்க்கிற்கு கிளம்பிய நேரம், “நம்ம பிளானை முடிச்சுட்டு அதுக்கு பிறகு கிளம்பி ஆபிஸ் போக லேட் ஆகும் மச்சி! அதனால ஆபிஸ்க்கு போற மாறி கிளம்பிட்டு, போற வழில இந்த சின்ன வேலையை முடிச்சுடுவோம்” என புத்திசாலியாய் யோசனை சொன்னவனே கோகுல் தான்!
மனதிற்குள் கோகுலை ஆதி சபித்துக்கொண்டிருக்க, மனசாட்சியோ, ‘மண்டைல இருந்த கொண்டையை மறந்துட்டியேடா’ என நக்கலடித்தது.
“ஆதி! எனிதிங் இம்போர்டன்ட்?” என மீண்டுமாய் கேட்டிருந்தார் ராஜகோபால்.
“ம்ம்ம்? இல்ல சார்! உங்களை பார்த்ததும் உள்ள வந்துட்டேன்” என்றான் வேண்டாவெறுப்பாய்.
“சரி வா! அப்டியே ஒரு வாக் போவோம்” என அவர் முன்னே நடக்க, அவர் போகும் பாதையின் முடிவில் தான் உடற்பயிற்சி எனும் பெயரில் கைக்காலை ஆட்டிக்கொண்டிருந்தார் ஜெயதேவ். தூரத்தில் இருந்தவரை ராஜகோபால் கண்டுக்கொள்ளவில்லை என்றாலும், இவனுக்கு அது தெரியும் என்பதால், “நோ சார்! யூ கேரி ஆன்! எனக்கு வேற வேலை ஒன்னு இருக்கு” என்றான் முகத்தை சற்று மறைத்தபடி.
ராஜகோபால் என்ன நினைத்தாரோ?! “ஓகே, ஆபிஸ்ல பார்க்கலாம்” என்றுவிட்டார்.
ஆதி அழுகாத குறையாய் அங்கிருந்து திரும்பி நடக்க, அவன் பெயரை சொல்லிக்கொண்டே பின்னோடு வேகமாய் வந்த ராஜகோபால், “அப்பா அம்மாகிட்ட பேசுனியா ஆதி? நான் எப்போ அவங்கக்கிட்ட பேசட்டும்?” என்றார்.
“அதுக்கு தான் சார் ப்ளான் போட்டேன், எல்லாம் சொதப்பிடுச்சு! இப்ப மறுபடி முதல்ல இருந்து யோசிக்கணும்”
மைன்ட் வாய்ஸ் என்று நினைத்து அவன் வாய்விட்டே சொல்ல, “என்ன சொல்ற நீ?” என்றார் ராஜகோபால்.
உடனே சுதாரித்தவன், “ஹிஹி! நல்ல நாள் பார்த்து நானே பேச வைக்கணும்ன்னு சொன்னேன் சார்” என்றான் அசடாய் சிரித்து. இருந்தும் ராஜகோபால் அடுத்து ஏதோ கேட்க வர, “ரொம்ப அர்ஜென்ட் வொர்க் சார்… ஐயம் லீவிங் நவ்” என்றுவிட்டு அவரிடம் இருந்து பதில் எதிர்ப்பார்க்காமல், அடுத்த இரண்டே நிமிடத்தில் தன் பைக்கில் ஏறியிருந்தான்.
நேரே அலுவலகம் சென்றவன் தன் கேபினுக்குள் நுழைந்து ஏசியை இயக்கினான். சுழல்நாற்காலியில் உடல் தளர அமர்ந்தவனுக்கு ‘அடுத்து என்ன?’ என்ற கேள்வி சுற்றியடித்தது.
காலை எட்டு மணிக்கு அந்த ஆபீசே வெறிச்சோடி இருக்க, பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியவனை வாட்ச்மேனே அதிசயமாய் தான் பார்த்திருந்தார்.
ஆதிக்கு தன்யாவை அவன் வழிக்கு கொண்டு வருவதை விட, இரு வீட்டு தலைவர்களையும் ‘பழம்’ விட வைப்பதே முக்கியம் என பட்டது.
தான் ஜெயதேவின் மகன் என்று தெரிந்தால் ராஜகோபால் கண்டிப்பாக தன்னை மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்ள மாட்டார் என திடமாய் நம்பினான். அதேபோல, ராஜகோபால் வீட்டிற்கு மாப்பிள்ளையாக தன் மகனை அனுப்ப ஜெயதேவுமே ஒப்புக்கொள்ளத்தான் மாட்டார்.
இருவரும் ஒன்றிணைவதை தவிர வேறு மார்க்கம் இருப்பதாய் அவனுக்கு தோன்றாமல் போக, ‘என்ன செய்யலாம்?’ என்ற வினா மட்டும் மனதில் விலகாது நின்றது.
தன்யா அன்று வெகு சீக்கிரமே அலுவலகம் வந்திருந்தாள். சில முக்கிய கோப்புகளில் கையொப்பமிட வேண்டிய அவசியம் இருந்தது. அதை முடித்துவிட்டு கட்டுமான பணி நடைப்பெறும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் விரைவிலேயே கிளம்பி அலுவலகம் வந்தவள், தன் அறை நோக்கி நடக்க, இயல்பாய் அவள் கண்கள் ஆதியின் கேபினை தேடி சென்றது.
ஆளில்லாத அலுவலகத்தில் அவன் கேபினின் உள்ளிருந்து மட்டும் வெளிச்சம் வர, அவள் அறைக்கு செல்ல வேண்டிய கால்கள், தன்னைப்போல் அவனைத்தேடி சென்றது.
அவன் கேபின் கதவை அனுமதியின்றி அவள் திறக்க, கண்ணை மூடி அசைவின்றி அமர்ந்திருந்தான் ஆதி.
நேற்றிரவு போனில் அழைத்து சம்பந்தமே இல்லாது, தந்தையை பற்றி கேட்டவன், இப்போதோ ஆளுக்கு முன் வந்து அலுவலகத்தில் அமர்ந்திருக்க, ‘என்னவாய் இருக்கும்?’ என சிந்தித்தபடியே “க்கும்..க்கும்…” என சத்தமாய் கனைத்தாள் தன்யா.
[the_ad id=”6605″]
“ம்ச்!” என்ற சலிப்போடு கண்ணை திறந்தவன் எதிரே தன்யா நிற்ப்பதை கண்டதும், இன்ஸ்டன்ட்டாய் வந்து ஒட்டிக்கொண்டது உற்சாகம்.
“ஹே தனு! நான் சீக்கிரம் வருவேன்னு தெரிஞ்சே நீயும் சீக்கிரம் வந்துட்டியா?” என அவன் கண்ணடிக்க, “உன் மூஞ்சி…! பத்து மணிக்கு வர சொன்னாலே வரமாட்ட! இப்போ என்ன வாட்ச்மேனுக்கு முன்னாடி வந்து உட்காந்துருக்க?” என்றாள் சந்தேகமாய்.
“எல்லாம் என் செல்லத்தை பார்க்கத்தான்” என்றவன் மெல்ல அவள் அருகே வந்திருந்தான்.
தன்யா, “செல்லமா? ஓ?! இங்க டெய்லி ஸ்வீபிங் வேலை செய்றாங்களே? அந்த ஆன்ட்டியை பார்க்க வந்தியா?” வேண்டுமென்றே அவனை சீண்ட,
“ஆன்ட்டியா? நான் எதுக்கும்மா ஆன்ட்டியை பார்க்கணும்! என் பியூட்டி…..யே எனக்காக இருக்கும்போது” அவள் எதிர்ப்பார்க்காத தருணம், வெடுக்கென தன்னோடு அவளை இணைத்து அணைத்திருந்தான் ஆதி.
அவன் நெருக்கத்தில் உடல் குழைந்தாலும், அவன் பிடியில் இருந்து விடுப்பட திமிறிக்கொண்டிருந்தாள் தன்யா.
“ரொம்ப ட்ரை பண்ணாத! உன்னால முடியாது!” என சிரித்தான் ஆதி.
தன்யா அவன் புன்னகை முகத்தை கண்டு எரிச்சலாகி, “உன்னால இதுல மட்டும் தான் என்னை வளைக்க முடியும்” என்றாள் சீற்றமாய்.
அவள் வேண்டியது போலவே அவன் முகம் புன்னகை தொலைத்து மெல்ல மெல்ல இறுக, “அப்படியா?” என அவன் கண்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது, பார்வையை தளர்த்தினாள் தன்யா.
அவளை அணைத்திருந்த பிடியை துளிக்கூட தளர்த்தாதவன், மேற்கொண்டு அவளை அவனோடு சேர்த்து இறுக்க மொத்தமாய் அவனோடு ஒட்டிக்கொண்டாள் தன்யா.
ஏசி காற்றில் அவள் செவியோரம் தூளியாடிக்கொண்டிருந்த குழல் கற்றையை செவியோடு ஒட்டும்படி உதடுகளால் அழுத்தியவன், “உன்கிட்ட எல்லாத்துக்கும் வளைஞ்சுக்குடுக்க நான் தயாரா தான் இருக்கேன்! நீதான் பிடிவாதம் பிடிக்குற!” என சொல்ல, ஒவ்வொரு வார்த்தைக்கும் அவன் உதடுகளும் மீசையும் அவன் செவிமடலில் நடத்திய நாட்டியத்தில் மயிர்க்கால்கள் கூசிட, சிலிர்த்துப்போனாள் தன்யா.
அவன், அவள் உணர்வுகளை முழுதாய் உணர்ந்தவன் ஆய்ற்றே! மேற்கொண்டு சென்றாலும் அவளிடம் இருந்து பெரிய எதிர்ப்பு வராது என்பதை உணர்ந்திருந்தும், ஆதி மெல்ல அவனிடம் இருந்து அவளை விடுவித்தான்.
அவனை விட்டு ஓரடி நகர்ந்தவளுக்கு திடமாய் நிற்கவே சில நொடிகள் தேவைப்பட்டது. நிமிர்ந்து அவனை பார்க்க முடியாது, அவமானமா, வெட்கமா என பகுத்தறிய முடியாத உணர்வு எழ, மௌனமாய் திரும்பி வெளியேற சென்றவளை சகஜமாக்கும் எண்ணம் கொண்டான் ஆதி.
“ஓய்! நானும் பார்த்துட்டே இருக்கேன், வயசுல பெரியவன்னு கூட மரியாதை குடுக்காம, ‘போ, வா’ன்னு சகட்டு மேனிக்கு பேசிட்டு இருக்க! கோவமா இருந்தா மரியாதை குடுக்கக்கூடாதா என்ன?” என்றான்.
வேகமாய் திரும்பியவள், “வேணுன்னா, ‘அண்ணா’ன்னு கூப்பிடவா?” என்றாள் அவனுக்கு பழிப்புக்காட்டி!
பாசாங்காய் அவளை முறைத்த ஆதி, “அண்ணா எதுக்கு, சித்தப்பான்னு கூப்பிடு” என கடுப்பாய் சொல்ல, மறுநொடி, “ஓகே சித்தப்பா” என்றாள் தன்யா.
“ஏய்…” என அவளை திட்ட வந்தவனை அவனது அலைபேசி ஒலி தடுத்தது. அவன் ‘போனை’ பார்க்க எடுத்துக்கொண்ட இரு வினாடியில் அந்த அறையை விட்டு வெளியேறியிருந்தாள் தன்யா.
தெய்வானை தான் அழைத்திருந்தார். தன்யா அங்கிருந்து சென்றதுமே அவனது பழைய கவலை தன்னால் வந்து ஒட்டிக்கொண்டது.
[the_ad id=”6605″]
“சொல்லும்மா” என்ற ஆதியின் குரலிலேயே சிறு பேதத்தை உணர்ந்தவர் போல, “ப்ளான் புட்டுக்கிச்சா?” என்றார் சரியாய்.
நடந்த கூத்தை சுருக்கமாய் சொன்னவன், “ம்ச்! போ மா! ப்ளான் புட்டுக்கிட்டது கூட பரவால்ல! என்னை பார்த்ததும் ‘இங்க என்ன ஆதி பண்ற?’ன்னு அவர் கேட்டாரு பாருங்க… டோடல்லி அப்செட்! அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கேன்” என்றான் ஆதி.
“இப்படி தான் நடக்கும்ன்னு எனக்கு தெரியும்! அதான் நான் ஆல்ரெடி சென்னை வந்து இறங்கிட்டேன்” என ஆதிக்கு இன்பதிர்ச்சி கொடுத்தார் தெய்வா.
அவர் சொல்லை நம்பாதவன், “விளையாடாதம்மா!” என சலிக்க, “டேய், சத்தியமா நானும் மதுவும் இப்போ சென்னை ஏர்போர்ட் வெளில தான்டா நிக்குறோம்… கேப் டிரைவர் கிட்ட வீட்டு அட்ரெஸ் சொல்லத்தான் உனக்கு கால் பண்ணேன்!” என அவர் சொல்ல, ஏதோ புது தெம்பு வந்து சேர்ந்ததை போல உணர்ந்தான் ஆதி.
டிரைவரிடம் முகவரியை சொன்னவன், வேகமாய் அலுவலகம் விட்டு வீட்டை நோக்கி ஓடினான். தன் அறையில் இருந்து வெளியே வந்த தன்யா, ஆதி ஓடுவதைக்கண்டு, ‘இவனுக்கு என்ன தான் ஆச்சு?’ என குழம்பி நின்றாள்.
ஆதி வீட்டிற்கு செல்லவும் அடுத்த சில நிமிடங்களில் தெய்வானை வந்து சேரவும் சரியாய் இருந்தது. அன்னையை கண்டதும், “மாதாஜி! ஐ மிஸ் யூ” என ஆசையாய் அவரிடம் ஓடி சென்று அணைத்துக்கொண்டான் ஆதி.
அவனை விட்டு சட்டென விலகியவர், “யாருடா அந்த பொண்ணு? இத்தனை வருஷமா யாரையாது லவ் பண்ணுறியான்னு கேட்டப்போ எல்லாம் ‘சன்னியாசி’ மாறி பேசி ஏமாத்திட்டு, இப்போ என்னவோ அஞ்சு வருஷ லவ்வு, பத்து வருஷ லவ்வுன்னு கதை விடுற?” என கடுகாய் பொரிந்தவர்,
“புடிச்சது தான் புடிச்ச! உங்கப்பனுக்கு பகை இல்லாத வீட்டுல புடிச்சுருக்கக்கூடாதா?” என சலித்துக்கொண்டு அங்கிருந்த சோபாவில் சோர்வாய் அமர்ந்தார்.
“நல்லா கேளும்மா! நம்மக்கிட்ட கூட இத்தனை வருஷமா சொல்லாம மறைச்சுருக்கான் பாருங்க” என சொல்லிக்கொண்டே இரு பைகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்க்குள் நுழைந்தாள் மதுதேவா.
அவர்கள் கேட்டதற்கு பதில் சொல்வதை தவிர்த்த ஆதி, “கம்பெனியை பாத்துக்கோங்கன்னு உங்களை நம்பி தானே அப்பா விட்டுட்டு வந்தாரு! இப்படி அம்மாவும் பொண்ணும் ஜோடி போட்டுட்டு கிளம்பி இங்க வந்துட்டா, அங்க யாரு எல்லாத்தையும் கவனிப்பா?” என்றான்.
“ஆமா, நாங்க போய்தான் கம்பெனியை கட்டி நிமிர்த்த போறோமா?! போடா!!!” என அசட்டையாய் பதில் சொன்னார் தெய்வானை.
மதுதேவா, “அங்க இப்போதைக்கு எந்த எமெர்ஜென்சி வொர்க்கும் இல்லண்ணா… மேனேஜர் கிட்ட ரொம்ப அவசியம்ன்னா கால் பண்ணுங்கன்னு சொல்லிட்டு வந்துருக்கோம்” என்றாள் ஆதியிடம்.
ஆதி, “நீங்க இங்க வந்தது அப்பாக்கு தெரியுமா?” என கேட்க, “ஐயோ, தெரியாதுண்ணா” என்றாள் மது.
ஆதி, “அப்பா கேட்டா என்ன சொல்லுவீங்க?”
“ம்ம்ம்? உங்களை பார்க்காம என்னால அங்க இருக்க முடியல, அதான் ஓடோடி உங்களைத்தேடி வந்துட்டேன்னு சொல்லுவேன்!” என்ற தெய்வா, “ஒழுங்கா என் மருமகளை காட்டுடா! நான் வந்ததே அதுக்குத்தான்” என்றார் அதட்டலாய்.
“அப்ப, எனக்கு ஹெல்ப் பண்ண வரலையா?” என ஆதி முறைக்க, “டூ இன் ஒன் பர்பஸ்ன்னு வச்சுக்கோ” என்ற தெய்வா, “என்ன ப்ளான் வச்சுருக்கன்னு சொல்லு, செஞ்சுடலாம்” என்றார் பெரிய ‘தாதா’ போல.
‘ம்கும்’ என நொடித்துக்கொண்ட ஆதி, “எனக்கு ஒன்னும் ஓடல! என்ன செய்யலாம்ன்னு நீதான்ம்மா சொல்லணும்” என அன்னையிடம் முழுதாய் சரணடைந்தான்.
“ம்ம்ம்ம்…” என நீளமாய் ‘உம்’ கொட்டி யோசித்த தெய்வா, “சரி நீ ஆபிஸ் கிளம்பு, நான் யோசிக்குறேன்” என்றார் உடனே.
அன்னையின் மீதிருந்த அபரிவித நம்பிக்கையில் மறுபேச்சின்றி எழுந்துக்கொண்ட ஆதி, மீண்டும் அலுவலகம் நோக்கி படையெடுக்க கிளம்ப, “இது உன் பிரண்ட் வீடு தானேடா? எங்கே அவன்?” என்றார் தெய்வா.
அவர் கேட்டதும் தான் காலையில் போலிஸ் கோகுலை அள்ளிக்கொண்டு சென்றது நினைவு வர, “நோஓஓஓஓஓ…..” என ‘ஹைபிட்ச்’சில் அலறியவன், மதுதேவா படித்துக்கொண்டிருந்த செய்தித்தாளை பிடுங்கி வீச, அக்காகிதங்கள் காற்றில் பறக்க, அதன் நடுவே ஆவேசமாய், நண்பனை காப்பாற்ற வீட்டை விட்டு வெளியே ஓடினான் ஆதி.
வாசல் தாண்டி சென்றவனை இருகரங்கள் வளைத்துப்பிடித்துக்கொண்டு தடுக்க, “என்னை விடுங்கஆஆஆஆ… நான் என் நண்பனை காப்பாத்த போகணும்… அவனை நான் காப்பாத்தியே ஆகணும்” என ஆதி த்ரட்மில்லில் ஓடுபவன் போல ஒரே இடத்தில் ஓடிக்கொண்டிருந்தான்.
அவனை தடுத்துப்பிடித்திருந்த கரங்களுக்கு சொந்தக்காரன், “உன் உணர்சிகளை கொஞ்சம் அடக்கு! நான் வந்துட்டேன்!” என சொல்ல, தன் ஓட்டத்தை நிறுத்திய ஆதி, “கோகுல்… கோகுல்…” என கூவிக்கொண்டே அவன் முகத்தை தொட்டுத்தொட்டு பார்க்க,
“போதும், ரொம்ப ஓவரா இருக்கு” என்றான் கோகுல்.
“போலிஸ் எப்டிடா உன்னை விட்டாங்க?” ஆதி வியப்பாய் கேட்க, அவனை சந்தேகமாய் பார்த்த கோகுல், “நீ கேட்குறதே சரியில்லையே?” என்றான்.
“இல்லடா, எப்படி உன்னை இவ்ளோ சீக்கிரம் விட்டாங்கன்னு ஆச்சர்யமா கேக்குறேன்”
“நான் என்ன இரட்டை கொலை பண்ணிட்டு ஆயுள் தண்டனைலயாடா ஜெயிலுக்கு போனேன்? மாசக்கடைசில கேஸு புடிக்கனுமேன்னு என்னை இழுத்திட்டு போயிருக்காங்க!”
ஆதி, “அப்பறம் எப்படிடா தப்பிச்சு வந்த?” என கேட்க, ‘தப்பிச்சு வந்தேனா?’ என முறைத்த கோகுல், “முன்னாள் பத்திரிக்கைக்காரன்னு சொன்னேன்! கொஞ்ச நேர உட்கார வச்சுட்டு அனுப்பிட்டாங்க” என்றான் முறைப்புடனே!!!
தெய்வா, மதுதேவாவுடன் சிறிது நேரம் அளவளாவிய கோகுல், ஆதியுடன் அலுவலகம் சென்றுவிட்டான். அன்றைய பொழுது விதவிதமாய் திட்டம் தீட்டுவதிலேயே கழிந்திட, இறுதியாய் தெய்வா சொன்ன திட்டமே ஒருமனதாய் ஒப்புக்கொள்ளப்பட்டது. மறுநாள் அதை செயல்ப்படுத்த முனைப்புடன் காத்திருந்தனர்.