திமிர் 4 : அந்த மருத்துவ வளாகத்தின் உள்ளே கர்ப்பிணிகள் நடை பயிலும் இடத்தில் தன் வயிற்றை பிடித்து நடந்துக் கொண்டிருந்தாள் அக்ஷிதா. மருத்துவர் கூறிய நாளிற்கு இரண்டு வாரத்திற்கு முன்பே அக்ஷிதாவின் அழுத்தம் காரணமாக வலி வந்து விட இதோ இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அதிகாலை 3 மணியிலிருந்து வலி விட்டு விட்டு வர தேவகி அனலிற்கு தகவலை சொல்லிவிட்டு உடனே மகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து விட்டார். அனலும் உடனே விடுமுறை […]
Readmoreஅத்தியாயம்-26 மனிதர்களுக்கே உணவு மற்றும் தண்ணீருக்குப் பஞ்சமான இன்றைய காலகட்டத்தில் சிறு பறவைகளுக்கு அதன் தாக்கத்தைத் தீர்க்க உணவு மற்றும் தண்ணீர் என தினமும் வைப்பவள் நேத்ரா. பறவைகளின் கீச்… கீச்… என்ற ஒலியில் அவன் நினைவுகளில் இருந்து மீண்டவன் அவன் கைகளில் ஏந்தியிருந்த நளனும் நேத்ராவும் இருந்த புகைப்படத்தை மீண்டும் சுவற்றில் மாட்டிவிட்டு, அவர்கள் வாழ்ந்த அப்பார்ட்மெண்ட்டின் பால்கனியை அடைந்தான். ஆம் நேத்ராவுடன் நடந்த இன்டெர்வியூவுக்குப் பின் நளன் அவர்கள் இருவரும் […]
Readmoreஅத்தியாயம்-14 நேத்ராவுடன் இருசக்கர வாகனத்தில் வந்த நந்தகுமாருக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சி. அந்த சந்தோஷத்தில் வந்தவனிடம், “என்ன அண்ணா ரொம்ப அமைதியா வர்ற, உனக்கு பிடிச்சிருக்கு தானே” என்றாள் நேத்ரா. “ம்ம் ஏன் பிடிக்கலைன்னா, உடனே பிரேக் அப் பண்ணிப்பியா என்ன?” என்ற நந்தனிடம் அமைதி காத்தவள், “அண்ணா நெஜமாவே உனக்கு பிடிக்கலையா” என்றாள் பயத்துடன். “ஹே குட்டி பிசாசு, அதெல்லாம் ரொம்ப நல்ல மாதிரியா தெரியுறாரு, உன் மேல ரொம்ப பாசமா இருக்காரு, விட்டா இப்போவே […]
Readmoreஅத்தியாயம்-13 வெளியில் இருந்து பார்க்க சிறிய ஹோட்டலாக இருந்தாலும், உள்ளே விசாலமான புல்வெளியில் ஆங்காங்கு டேபிள் மற்றும் சேர்கள் இடப்பட்டிருக்க, டேபிள் மேல் ஒளி விளக்குகள் அதன் மெல்லிய தங்க நிற ஒளியைப் பாய்ச்சிக் கொண்டிருந்தது. நந்தன் மற்றும் நேத்ராவின் வருகைக்கு முன்பே அங்கே அவர்களுக்காக காத்திருந்தான் நளன். சந்தன நிற டீ ஷர்ட்டும் அதற்க்கு ஏற்றார் போல் பேண்ட்டும் அணிந்து, இடக்கை அவன் அலைபேசியை பிடித்து அவன் காதுக்குக் கொடுத்துக் கொண்டிருக்க, வலக்கையயை அவன் இடுப்பில் […]
Readmoreஅத்தியாயம்-10 நேத்ராவை கல்லூரி வளாகத்தினுள் இறக்கிவிட்டு நேராக கார்த்திகேயன் அறைக்கு சென்ற நளனை பிரின்சிபாலும், மற்ற ஆசிரியர்களும் வரவேற்றனர். பின் விருந்தினர்களுடன் விழா நடக்கும் அரங்கத்திற்கு சென்றவன், அவர்களுடன் அமர்ந்தான். வரவேற்பு நடனம் நேத்ரா என்றவுடன் நளனின் கண்கள் அசுவாரஸ்யமாக மேடையைத் தொட்டது. அங்கு பச்சை வண்ண பரதநாட்டிய உடையில் கால்களில் சலங்கையுடன் கைகளிலும் கால்களிலும் சிவப்பு வண்ண சாயம் பூசப்பட்டு, கண்களிலும் உடல் மொழியிலும் அபிநயம் பிடித்தவளைக் கண்ணிமைக்காது பார்த்தான் நளன். அதை இப்போது […]
Readmoreஅத்தியாயம்-7(1) முகிலினங்கள் வான் மேகத்திற்குள் தங்களை மறைத்து ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்க, சுற்றிலும் டூலிப் மலர்கள் தங்கள் வண்ண வண்ண இதழ்களால் நிலத்தை வண்ணமயமாக்க, அந்த டூலிப் மலர்களுக்கு நடுவே அவள் உடுத்தியிருந்த ஸ்லீவ் லஸ் மேக்ஸி உடையை காற்று அதன் போக்கில் இழுக்க, சில்லென்ற காற்று உடலுக்குள் ஊடுருவி மேனியில் நடுக்கத்தை விளைவிக்க, கைகளை விரித்து, சிப்பி இமைகளை மூடி, கன்னக்குழியுடன் விரித்துவிட்ட கூந்தல் காற்றில் தவழ நின்றிருந்தவள் குளிர் காற்றினால், கைகளை மடக்கி மார்பின் […]
Readmoreஅத்தியாயம்-5 இடம்: சென்னை சென்னையின் வெப்பம் தார் சாலையைக் கூட இளக்கிக் கொண்டிருக்க, ஓரளவு நடுத்தர மக்கள் இருசக்கர வாகனங்களிலும், பஸ்ஸிலும் பயணிக்க, ஏசி காரில் செல்வோருக்கு ஏசி போதாமல் வெப்பம் தாக்கி…அஸ் புஸ் என்று புலம்பி கொண்டிருக்க, என் பிள்ளைகளின் வயிற்றுப் பசியை விட இந்த வெயில் ஒன்றும் எங்களுக்கு பெரிய விஷயம் இல்லை என்று அங்கே தெருக்களிலும், நடை வண்டியிலும் கடை வைத்திருப்பவர்கள் அவரவர் வேலையை கவனிக்க, இங்கே நேத்ராவும் அஸ் புஸ் என்று […]
Readmoreநேத்ரா கூறியதை உண்மையென நம்பி தன் அறைக்குச் சென்ற நந்தகுமரன் அவன் போனை எடுத்துப்பார்க்க, அதில் நோ நோட்டிபிகேஷன் என்று இருந்ததில் கடுப்பானான். மீண்டும் உறுதி செய்துகொள்ள ரீசன்ட் கால் ஹிஸ்ட்ரியில் பார்த்தவன் அதில் சுலோச்சனாவிடம் இருந்து எந்த மிஸ்ஸுடு காலும் வந்த அறிகுறி இல்லாமல் இருக்கவும், “ச்ச இந்த குட்டி பிசாசு பொய் சொல்லீருக்கு, வெளிய வரட்டும் இருக்கு இன்னைக்கு” என்றவன் வேகமாக மற்றொரு குளியல் அறைக்கு செல்ல நினைத்தான், ஆனால் ஏற்கனவே அங்கு ஈஸ்வரமூர்த்தி […]
Readmoreவரம் நீயே 27 (final) ஒரு வாரம் சொந்த ஊரிலேயே தங்கி விட்டு, மதுரை சென்று சேர்ந்தனர். வைசாலியும் அரசனும். அங்கிருந்து இராமநாதபுரம் கிளம்பிச் சென்றனர். அங்கு வைசாலியின் சொந்தபந்தங்களை சந்தித்து, நண்பர்களோடு அளாவளாவி நாட்களை கடத்தினர். அங்கிருந்து கிளம்பும் போது, வைசாலி வேலையை விட்டுவிட்டு கிளம்பினாள். மீண்டும் மதுரை வந்து கொண்டிருந்தனர். அரசன் காரை ஓட்ட, வைசாலி தூங்கிக் கொண்டிருந்தாள். அரசனின் கைபேசி மெல்ல அதிர்ந்தது. பெயரை பார்த்தவன், காரை ஓரமாக நிறுத்தி விட்டு எடுத்து […]
Readmoreவரம் நீயே 26 (pre final) மாதவன் தந்தையை பார்த்தபடி அமர்ந்து இருந்தான். மனம் எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருந்தது. நேற்று மாலை வைசாலியின் திருமணத்தை நிறுத்தவென சென்றவன், மனம் நொந்து வெளியே வந்திருந்தான். அவனால் வைசாலி அரசனை காதலிப்பதை ஏற்கவே முடியவில்லை. மனம் முழுவதும் கோபம், ஆற்றாமை. வைசாலி வேறு யாரையும் திருமணம் செய்திருந்தால் இவ்வளவு கோபப் பட்டிருப்பானா? தெரியவில்லை. ஆனால் அரசனை அவளோடு பார்க்க முடியவில்லை. வைசாலியிடம் மேலும் பேசி மனம் நோகாமல் வெளியே வந்து […]
Readmore