அத்தியாயம் 11 காரிருள் சூழ கருமை நிறம் கொண்ட வானத்தில் நிலவுமகள் ஒற்றையாய் ஜொலித்துக்கொண்டிருக்க.. அதனையே விழியகலாது பார்த்துக் கொண்டிருந்தாள்.. சிற்பிகா. அப்பொழுது வேகமாய் வீசிச்சென்ற குளிர்க்காற்று அவளின் தேகத்தை சிலிர்க்க செய்ய… உடலைக் குறுக்கி.. அந்த ரம்மியமான பொழுதை ஆழ்ந்து அனுபவித்தாள்.. திருமணம் முடிந்த அன்றே.. அனைவரும் பெங்களூர் வந்துவிட்டனர்.. லிங்கேஷ்வரன் குடும்பத்தினரும் நாளை மறுநாள் நடக்கவிருக்கும் ரிஷப்ஷனிற்காக அவர்களுடனே வந்துவிட்டார்கள்.. வீட்டிற்குள் நுழைந்த சிறிது நேரத்திலேயே அபய் வெளியே சென்றுவிட.. […]
Readmoreஅத்தியாயம்-32 பத்து நாட்கள் கடந்திருந்த வேளையில் ஒரு நாள் மாலை நேரம் கடந்து ஆபீசில் இருந்தாள் நேத்ரா, ப்ராஜெக்ட் சம்மந்தமான சிறு வேலையை முடித்துவிட்டுப் போக எண்ணி அருணுடன் அமர்ந்திருந்தவள், வெளியில் இருட்டியதை உணரவில்லை. திடீரென்று நிமிர்ந்து பார்த்தவள், அங்கே ஒரு சிலர் மட்டும் அமர்ந்திருக்க கைக்கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தாள். பார்த்தவள் மணி எட்டு என்று காட்டவும் “ஓ ஷிட், இவ்வளவு நேரம் ஆயிடுச்சா? ஐ ஹவ் டு கோ” என்றவள் வேகமாக கணினியை […]
Readmoreஅத்தியாயம்-27 அந்திமாலைச் சூரியன் மேற்கில் தன் அஸ்தமனத்தைத் தொடங்கியிருந்த வேளை, “அம்மு விடுங்க நான் போயி குளிக்கணும், வார வாரம் இப்படியே பண்றீங்க எத்தனை தடவை கோவிலுக்கு போவோன்னு சொல்லிக்கிட்டே இருக்கேன், இன்னைக்காவது கோவிலுக்கு போகலாம்” என்று, நளனின் கைவளைவுக்குள் சிக்குண்டவாறு அவனது மார்பின் முரட்டு ரோமங்களை கைகளாளும் முகத்தாலும் தடவிக்கொண்டு அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் நேத்ரா. அவள் ஒருத்தி இங்கு பேசிக் கொண்டிருக்க, அமைதியாக அவன் உறக்கத்தைத் தொடந்து […]
Readmoreஅத்தியாயம்-19 ஞாயிறன்று காலை வேகமாக விழிப்புத் தட்டியவுடன் நளனின் கையணைப்பிலிருந்து மெதுவாக எழுந்தவள், அவனை அசைக்காமல் அவள் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு தன் தாய்க்கு அழைத்தாள். “தங்கம் எழுந்துட்டியா, நானும் அப்பாவும் அங்க தான் வந்துட்டு இருக்கோம், உனக்கு பேசணுன்னு நெனச்சேன் நீ தூங்கீட்டு இருப்பியேன்னு தான் கொஞ்ச நேரம் கழிச்சு பேசலான்னு இருந்தேன் அப்படியே மறந்துட்டேன்” என்ற ரேணுகாவிடம், “அப்படியா ஏம்மா முன்னமே சொல்லலை” என்று சலித்துக் கொண்டவள், சரி […]
Readmoreஅத்தியாயம்-18 அவன் பாத்திரம் கழுவுவதை எட்டிப் பார்த்தவள் “உங்களுக்கு இதெல்லாம் கூட செய்ய தெரியுமா” என்று ஆச்சரியமாக வினவியவளிடம், “ம்ம்ம் கொஞ்சம் கொஞ்சம் தெரியும், படிக்கும் போது நானும் வினோத்தும் தான் ஒரே ரூம்ல இருந்தோம், அப்போ வினோத் சமைப்பான் நான் எதாவது சின்ன சின்ன வேலைகளை செய்வேன்” என்றவன், வேறு பாலை எடுத்து ஊற்றி அடுப்பை பற்ற வைத்தான். அடுப்பில் வைத்தவன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு நேத்ரா புறம் திரும்பி, “ஹனி… ஒன்னு […]
Readmoreஅத்தியாயம்-15 மனதிற்கு சந்தோசம் என்றாலும் கஷ்டம் என்றாலும் நம் மனம் தேடும் இடங்களில் ஒன்று கோவில், கோவிலுக்கு செல்லும் முன் ஆயிரம் எண்ணங்கள் மனதினில் ஓடினாலும் இறைவன் சன்னிதானத்தின் முன் கைகூப்பி நிற்கையில் மனம் வெற்றுக் காகிதம் போல் இறைவன் ஒருவனையே மனதினுள் நினைக்கும். அது போல் நேத்ராவின் தாய், தந்தை, அண்ணனுடன் விநாயகர் சன்னிதியில் கைகூப்பி சிப்பி இமைகளை மூடி நின்றிருந்தாள் நேத்ரா. கத்தரிப்பூ வண்ணத்தில் மெல்லிய தங்கச் சரிகை வைத்த பட்டுப்புடவையில் எளிமையான அலங்காரத்தில் […]
Readmoreஅத்தியாயம்-13 வெளியில் இருந்து பார்க்க சிறிய ஹோட்டலாக இருந்தாலும், உள்ளே விசாலமான புல்வெளியில் ஆங்காங்கு டேபிள் மற்றும் சேர்கள் இடப்பட்டிருக்க, டேபிள் மேல் ஒளி விளக்குகள் அதன் மெல்லிய தங்க நிற ஒளியைப் பாய்ச்சிக் கொண்டிருந்தது. நந்தன் மற்றும் நேத்ராவின் வருகைக்கு முன்பே அங்கே அவர்களுக்காக காத்திருந்தான் நளன். சந்தன நிற டீ ஷர்ட்டும் அதற்க்கு ஏற்றார் போல் பேண்ட்டும் அணிந்து, இடக்கை அவன் அலைபேசியை பிடித்து அவன் காதுக்குக் கொடுத்துக் கொண்டிருக்க, வலக்கையயை அவன் இடுப்பில் […]
Readmoreஅத்தியாயம்-12 பால் வண்ண சுடிதாரில் இருந்தவளின் எளிமையான அழகில், தன் கோபம் தானாக குறைவதை உணர்ந்தவன் கோபத்தை இழுத்துப் பிடிக்கும் பொருட்டு அவள் புறமிருந்து பார்வையைத் திருப்பி வேறுபுறம் நோக்கினான். நேத்ரா கார் அருகே வந்தவுடன் ஆட்டோ லாக்கை விடுவித்தவன், அவள் முன்னே ஏறியதும் காரை வேகமாக செலுத்தினான். காரில் ஏறி அமர்ந்தது முதல் நளன் நேத்ராவிடம் எதுவும் பேசாமல் இருக்கவும், ஏன் அவள் புறம் திரும்பாமல் கூட இருக்கவும், அங்கிருந்த சாக்லேட்டைப் பிரித்து உண்டு கொண்டே […]
Readmoreஅத்தியாயம்-11 நளன் அவன் மடிக்கணிணியுடன் அவன் பால்கணியில் அமர்ந்து நேத்ராவைத் தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்தான் சமூக வலைத்தளங்களில்… “ஹே… வனிதா போன எடுக்க இவ்வளவு நேரமா, என்ன டி பண்ற” என்ற நேத்ராவிற்கு, “பேசுவ ம்மா பேசுவ… உனக்கென்ன, உங்க அம்மா நீ சாப்பிட்ட பிளேட்டை கூட உன்னைய கழுவ விட மாட்டாங்க, எனக்கு என்ன அப்படியா அம்மா கூட இருந்து அடுப்படிய ஒதுங்க வைக்க வேண்டாமா” என்ற வனிதாவிடம், “ஓஒ சரி சரி, சும்மா தான் […]
Readmoreஅத்தியாயம்-10 நேத்ராவை கல்லூரி வளாகத்தினுள் இறக்கிவிட்டு நேராக கார்த்திகேயன் அறைக்கு சென்ற நளனை பிரின்சிபாலும், மற்ற ஆசிரியர்களும் வரவேற்றனர். பின் விருந்தினர்களுடன் விழா நடக்கும் அரங்கத்திற்கு சென்றவன், அவர்களுடன் அமர்ந்தான். வரவேற்பு நடனம் நேத்ரா என்றவுடன் நளனின் கண்கள் அசுவாரஸ்யமாக மேடையைத் தொட்டது. அங்கு பச்சை வண்ண பரதநாட்டிய உடையில் கால்களில் சலங்கையுடன் கைகளிலும் கால்களிலும் சிவப்பு வண்ண சாயம் பூசப்பட்டு, கண்களிலும் உடல் மொழியிலும் அபிநயம் பிடித்தவளைக் கண்ணிமைக்காது பார்த்தான் நளன். அதை இப்போது […]
Readmore