உனது காதலில் விழுந்தேன்
அத்தியாயம் 2:
ஏய் எழுந்திரிடி, கல்யாணத்துக்கு நேரம் ஆகுது, சீக்கிரம் கிளம்பற வழிய பாரு என்றார் அண்ணாமலை.
ஏங்க, மணிய பாருங்க 4 தாங்க ஆகுது. இவ்ளோ சீக்கிரம் எழுந்து என்னங்க பண்றது. நான் கிளம்ப எனக்கு அரை மணி நேரம் போதுங்க. நான் என்ன பட்டு புடவையா கட்ட போறன், இல்ல நீங்க வாங்கி கொடுத்து வச்சிருக்க நகையை தான் போட போறனா, எதும் இல்ல சும்மா குளிச்சி கிளம்ப போறன். அதுக்கு எதுக்கு இவ்ளோ சீக்கிரம் எழுந்து கிட்டு, உங்களுக்கு வேணும்னா நீங்க போய் கிளம்புங்க என்ன இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடுங்க என்று எரிச்சல் பட்டார் தேவி.
ஏண்டி, அதான் பீரோ நிறைய பட்டு புடவை வச்சிருக்கல, அதுல ஒன்ன எடுத்து கட்டு, என்னமோ புடவையே இல்லாதவ மாதிரி இந்த புலம்பு புலம்பற, ஆமா அப்புறம் என்ன சொன்ன நகை நட்டு போடவா போறன்னு கேக்கற, ஏன் நான் உனக்கு இதுவரை நகையே வாங்கி கொடுத்தது இல்லையா? கல்யாணம் பண்ண நாளா வருஷா வருஷம் நகையை வாங்கி தந்துட்டு தானடி இருக்கன். அத போட வேண்டியது தான என்று அவரும் தன் பங்குக்கு எரிச்சல் பட்டார் அண்ணாமலை.
ஆமா, புடவை எத்தனை இருந்து என்ன பண்ண, அத கட்ட முடியனும்ல.
ஏண்டி, புடவை எல்லாம் நல்லா தான இருக்கு. என்னமோ எல்லா புடவையும் ஒரே நேரத்துல கிழிஞ்சி போய்ட்டா மாதிரி பேசற.
நீங்க வேற கடுப்ப கிளப்பாதீங்க, புடவை நல்லா இருந்தா போதுமா, அத அப்படியே எப்படிங்க கட்ட முடியும்.
வேற எப்படிடி இருக்கணும், அதான் எல்லாம் நல்லா இருக்குனு சொல்றல, அப்போ கட்டிக்க வேண்டியது தான என்று கடுப்புடனே பேசினார் அண்ணாமலை
என்னங்க நீங்க வேற, ஒன்னும் தெரியாம இருக்கீங்க. அயன் பண்ணாம பட்டு புடவை எல்லாம் கட்ட கூடாதுங்க. என்கிட்ட ஒரு புடவை கூட அயன் பண்ணி இல்ல, அதான் என்னால பட்டு புடவை கூட கட்ட முடியாதுனு சொன்னத நீங்க தப்பா புரிஞ்சிகிட்டு என்கிட்ட கோபப்பட்டா எப்படி?
ஏண்டி, பட்டு புடவை அயன் பண்ணாம கட்ட கூடாதுனு சட்டம் ஏதும் புதுசா போட்டு இருக்காங்களா நாட்டுல.
அது எனக்கு தெரியாது. ஆனா அயன் பண்ணி தான் கட்டணும்னு எங்க அம்மா சொல்லி இருக்காங்க.
ஏண்டி செத்துப்போன உங்க அம்மா சொன்னத, இன்னும் கேட்டுக்கிட்டு இருப்பியா நீ.
ஆமா கேக்க தான் செய்வன். அவங்க பாத்து வச்ச மாப்பிள்ளை உங்க கூட வாழும் போது, அவங்க சொன்ன அத எப்படிங்க மறப்பன் என்றார் தேவி.
ஏண்டி கட்டின புருஷன் என்னோட வாழறதும், அயன் பண்ணி புடவை கற்றதும் ஒண்ணாடி என்று அழாக்குறையாக கேட்டார் அண்ணாமலை.
[the_ad id=”6605″]
அது எனக்கு தெரியாது ரெண்டும் எங்க அம்மா சொன்னாங்க நான் கேட்டு தான் தீருவேன் என்று விடாப்பிடியாக கூறினார் தேவி.
நீ சொல்ற படியே வச்சிக்கிட்டாலும் இன்னிக்கு கல்யாணம்னு ஒரு மாசத்துக்கு முன்னாடியே தெரியும்ல, அப்போ புடவையை அயன் பண்ணி வச்சி தொலைக்க வேண்டியது தான.
அது எப்படிங்க ஒரு மாசத்துக்கு முன்ன பண்ண முடியும். ஏன் பண்ணா என்ன? அது இல்லங்க பட்டு புடவை எல்லாம் அயன் பண்ணி வைக்க கூடாதுங்க. இல்லனா சீக்கிரம் கிழிஞ்சி போயிடும்னு…. தெரியும், நிறுத்து. இதையும் உங்க அம்மா சொன்னாங்க அப்படி தான என்றார் அண்ணாமலை. அய்யோ ஆமாங்க எப்படிங்க கரெக்டா கண்டு பிடிச்சீங்க.
ஆமா இது பெரிய சீனா ஊஹான் ரகசியம் பாரு கண்டுபிடிக்க கஷ்டப்படணும். போடி, போய் கிளம்பற வழிய பாரு, பேசி பேசியே அரைமணி நேரம் போயிடுச்சி.நீ கெளம்பிட்டு சமைக்க வேற செய்யணும், மறந்துட்டியா ?
நீ போய் குளி, நான் அதுக்குள்ள சமையலுக்கு தேவையான காய் எல்லாம் வெட்டி வைக்கிறேன். நீ வந்த பிறகு நான் போய் கெளம்பறன் என்றார் அண்ணாமலை. ஆமா ஆமா சமைக்க வேற செய்யணும்ல, மறந்தே போய்ட்டேன் பாருங்க. எங்கயாவது இந்த கொடுமை நடக்குமா இன்னிக்கு என்னோட ஒரே ஒரு பையனோட கல்யாணம். அன்னிக்கு கூட என்னால ஒரு பட்டு புடவை கட்ட முடியல, வச்சிருக்க நகையை போட முடியல, அட அத கூட விடுங்க ஒரு ஹோட்டல் கூட போய் சாப்பிட முடியாத கொடுமையை நான் என்னனு சொல்றது என்று மறுபடியும் புலம்பினார் தேவி.
அந்த புலம்பலை கேட்டு எரிச்சலான அண்ணாமலை, ஏய் கொஞ்சம் நேரம் சும்மா இருடி, என்னமோ உனக்கு மட்டும் தான் நெனச்சது நடக்காத மாதிரி பேசாத, எனக்கு கூட தான் உன் பையன் கல்யாணத்தால ஏகப்பட்ட நஷ்டம். நான் என்ன உன்ன மாதிரியா பொலம்பிக்கிட்டு இருக்கன் என்று கேட்டார் அண்ணாமலை.
என்னங்க சொல்றிங்க, எனக்கு தெரியாம ஏதாச்சும் கடனை வாங்கிட்டீங்களா இந்த கல்யாணத்துக்காக என்று குரலில் கவலை தொனிக்க கேட்டார் தேவி. தேவியின் குரலில் கவலை தெரிந்ததும், இதுவரை அண்ணாமலையிடம் இருந்த எரிச்சல் காணாமல் போனது.
[the_ad id=”6605″]
ஏய், தேவி அது எல்லாம் நான் யார் கிட்டயும் கடனை வாங்கல. அதனால நீ கவலை படாம இரு, உனக்கு வேற ஏற்கனவே லோ பி பி இருக்கு. அப்புறம் உனக்கு வேற உடம்புக்கு ஏதாச்சும் வந்து தொலைக்க போகுது. ஏற்கனவே இந்த கல்யாண பேச்ச ஆரம்பிச்சதுல இருந்து ஏகப்பட்ட பிரச்சனை, இதுல நீ வேற தேவையில்லாம உன்னோட பங்குக்கு ஏதாவது இழுத்து விட்டு வைக்காத என்றார் அண்ணாமலை.
அண்ணாமலை பேசுவதை கேட்டுக்கொண்டே வந்தான் நமது நாயகன் பிரபு. (இப்போது நமது சங்கத்தினருக்கு அண்ணாமலை, தேவி யார் என்று புரிந்து இருக்குமே. அப்படி புரியாத உறுப்பினர்கள் கவலை கொள்ள வேண்டாம், எப்படியும் கதை முடிவதற்குள் அவர்கள் பிரபுவிற்கு என்ன உறவு என்பதை புரிய வைக்கிறேன் சும்மா சும்மா)
ஆமா, அப்படியே இவரு ரெண்டு பஸ் நெறைய சொந்தக்காரங்கள ரெண்டு நாள் முன்னாடியே என் கல்யாணத்துக்கு கூட்டி வந்து, அவங்க தங்க இடம் தந்து, திங்க சோறு தந்து எல்லாம் பண்ணதுல இவருக்கு நஷ்டம் வந்துடுச்சா என்று தனது அன்னையிடம் கேட்டான் பிரபு.
டேய் டேய் ஏன் டா கேக்க மாட்ட, நீ இதுவும் பேசுவ, இன்னமும் பேசுவ. ஏன் டா நான் உன் கல்யாணத்துக்கு ஒண்ணுமே பண்ணலியா? ஒரே மாசத்துல இந்த ஊருக்குள்ள இருக்க பெரிய மண்டபம் பாத்து, சமையல்காரன், பந்தல்காரன், மேளக்காரன், இப்படி கல்யாணத்துக்கு தேவையான எல்லாருக்கும் அட்வான்ஸ் கொடுத்து, அது மட்டும் இல்லாம ஆயிரம் பத்திரிக்கை அடிச்சி, சொந்தக்காரன், தெரிஞ்சவன் அறிஞ்சவன் எல்லாருக்கும் கொடுத்து இப்படி இவ்ளோ வேலை நான் தனி ஆளா பண்ணா , நீ வந்து ஏன் என்ன கேள்வி கேக்க மாட்ட என்று மூச்சு விடாமல் பேசினார் அண்ணாமலை.
ஏங்க நானும் தான சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்து பத்திரிக்கை கொடுத்தேன். என்னமோ நீங்க மட்டும் தனியா போய் பத்திரிக்கை வச்ச மாதிரி பையன் கிட்ட சொல்றிங்க. அப்புறம் அம்மா நம்ம கல்யாணத்துக்கு ஏதும் செய்யலைன்னு நம்ம பையன் பீல் பண்ண போறாங்க. அதனால அதையும் சேர்த்து சொல்லிடுங்க என்று தன் பங்கிற்கு அண்ணாமலையை வெறுப்பேற்றினார் தேவி
ஆமா ஆமா நீயும் என்னோட வந்த போதுமா, அதனால தான் பாவம் உன்னால உன் பட்டு புடவைய கூட அயன் பண்ண தர முடியாம போச்சி. இதையும் உன் பையன் கிட்ட சொல்லிடறேன், அப்போ தான அம்மாவோட தியாகமும் அவனுக்கு புரியும் என்றார் நக்கலாக.
ஆமா நீங்க என்ன பண்ணி என்ன என் கல்யாணம் எப்படில்லாம் நடக்கும்னு நான் கனவு கண்டேன். ஆனா இப்போ பாருங்க, எப்படி நடக்குதுனு என்று சோகமாக கூறினான் பிரபு. பிள்ளையின் சோகம் பெற்றோரையும் தாக்கியது.முதலில் சுதாரித்த அண்ணாமலை சரி சரி விடுடா, உனக்கு எல்லாம் கல்யாணம் நடக்கிறதே பெருசு, இதுல அது எப்படி நடந்தா என்ன என்று தனது மகனை கலாய்த்தார்.
என்ன உன்னால எனக்கு தான் ஏகப்பட்ட நஷ்டம் ஆகிப்போச்சு போ. ஏங்க அப்போதைக்கு இருந்து நஷ்டம், நஷ்டம் சொல்றிங்க. ஆனா ஏன் நஷ்டம், எவ்ளோ நஷ்டம் ஏதும் சொல்ல மாற்றிங்க என்று தனது கணவனிடம் கேட்டார் தேவி.
தேவி அத பத்தி அப்புறம் பேசலாம். முதல்ல நீயும், உன் பையனும் ரெடி ஆகுங்க என்றார் அண்ணாமலை. அவர் சொல்வதும் சரியென படவே பிரபுவை தயாராக கூறிவிட்டு தானும் குளிக்க சென்றார் தேவி.