திடீரென்று சூர்யாவின் மண்டையில் மணி அடித்தது. காலையில் இருந்து இப்போது வரை நடந்த அனைத்தையும் ரீவைன் பண்ணி பார்த்தான். காலையிலிருந்து நட்சத்திரா வழக்கத்திற்கு மாறாக அதிகமான வேலை இழுத்துப்போட்டு செய்து கொண்டிருக்கிறாள். தன்னிடம் சகஜமாக பழகினாலும் வழக்கத்தை விட குறைவாகவே பேசினாள்.
எதையோ மறக்க தன்னை வேளையில் மூழ்கடித்து கொள்கிறாள். எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்யகிறாள். அப்போ கண்டிப்பா தன்னோட கவலையை மறக்கத்தான் இப்படி நடந்ததுக்குறா என கண்டுபிடித்து விட்டான்.
நட்சத்திரா போன் பேசிவிட்டு வந்தவுடன் சூர்யா, நட்சு உன்கிட்ட பேசணும்” என்றான். நட்சத்திரா, “சொல்லு மாமா” என்றாள்.
சூர்யா, “நட்சத்திரா நான் இந்தியாவுக்கு போவது உனக்கு கஷ்டமா இருக்கும் என்று எனக்கு தெரியும். அதை மறக்கத்தான் காலையில் இருந்து ஒவ்வொரு வேலையையும் இழுத்துப் போட்டு செய்து உன் கவனத்தை திசை திருப்ப ட்ரை பண்ணிட்டு இருக்க. நான் சொல்றது சரிதானே?” என்று அவள் முகம் பார்க்க நட்சத்திராவின் கண்ணீர் அவளது கன்னத்தை தாண்டி இருந்தது.
சூர்யா இதை எதிர்பார்க்கவில்லை. சூர்யா அதிர்ச்சியுடன் எழுந்து நிற்க நட்சத்திரா அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டாள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.
நட்சத்திரா, “மாமா என்னால முடியல மாமா. நானும் எவ்ளோ நேரம் தான் நார்மலா இருக்கிற மாதிரி நடிக்கிறது. நீ கிளம்புறது எனக்கு கஷ்டமா இருக்கு மாமா. என்ன விட்டுப் போகாத. நீ இல்லாம நான் எப்படி ஒரு வருஷம் தனியா இங்க இருப்பேன்? பேசாம நான் காலேஜை டிஸ்கண்டினியூ பண்ணிட்டு உன் கூடவே வந்துடவா?” என்று கூறி விம்மினாள்.
சூர்யா, “என்னது காலேஜை டிஸ்கண்டினியூ பண்ண போறியா? அப்படி எல்லாம் பண்ணிடாத…. அது உன் எதிர்காலம் டி. ஒரு வருஷம் தானே சீக்கிரமா கண்ணை மூடி கண் திறப்பதற்குள் ஓடிவிடும்” என்று கூறி அவளை சமாதானம் செய்தான்.
அடுத்து வந்த இரண்டு நாட்களுமே இருவருக்கும் கனமாகவே கழிந்தது. சூர்யா நட்சத்திராவை ஹாஸ்டலில் சேருமாறு கூற நட்சத்திரா மறுத்துவிட்டாள். சூர்யா இரண்டு நாட்களில் நட்சத்திராவிற்கு தேவையான அனைத்தையும் வாங்கி வைத்தான். ஹரிஷ் குடும்பத்தினரிடம் நூறாவது முறையாக நட்சத்திராவை பார்த்துக்கோங்க என்று கூறினான்.
ஹரிஷ், “இதோட நூறு தடவை சொல்லிட்ட. நட்சத்திரா எங்க வீட்டு பொண்ணு அவளை நாங்க நல்லா பார்த்துப்போம். நீ கவலைப்படாதடா” என்றான்.
சூர்யா கிளம்பும் நாளும் வந்தது. நட்சத்திரா அழுவாள் என்று சூர்யா அவளை ஏர்போர்ட் வரை வர வேண்டாம் என்று கூறிவிட்டான். நட்சத்திரா வாசல் வரை வந்து அவனை வழி அனுப்பி வைத்தாள். தன் இயன்ற அளவு முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டாள்.
அவன் சென்றதுமே வீட்டுக்குள் சென்று அழ ஆரம்பித்துவிட்டாள். சூர்யாவும் கனத்த மனதுடன் ஏர்போர்ட் சென்றான். அவனுக்கும் நட்சத்திராவை தனியாக விட்டுச் செல்வதில் துளியும் விருப்பமில்லை.
பல மணி நேர பயணத்திற்கு
பிறகு சூர்யா இந்தியாவை வந்து அடைந்தான். சூர்யாவை பார்த்ததில் அவன் குடும்பத்தினருக்கு சொல்லவென்னா மகிழ்ச்சி.
ஷீலா, “ரொம்ப இளைச்சி போயிட்டடா சூர்யா” என்று வருத்தப்பட்டார். சூர்யா தன் வருத்தத்தை வெளியே காட்டாமல் குடும்பத்தினரிடம் புன்னகை முகமாக பதிலளித்தான். சூர்யா, “அதான் இப்போ வந்துட்டேன்ல நல்லா சமைச்சு போட்டு என்ன பழையபடி ஆக்கிடுங்க” என்றான்..
கிஷோர், “சூர்யா நீ வந்துட்டல்ல. இனிமே பிசினஸ்ல பாதியை நீ தான் பார்த்துக்கனும். அப்பாவுக்கு வயதாகி விட்டது. எனக்கு வேலை அதிகமா இருக்கு” என்றான். சூர்யா, “கவலைப்படாதடா நான் இனிமேல் ஆபீஸ் வரேன் டா” என்றான்.
ரூமில் இருந்து வெளியே வந்த தாரா,
“என்ன சூர்யா பயணம் எப்படி இருந்துச்சு?” என்றாள்.
சூர்யா,” ம்ம் பரவாயில்லை… அண்ணி”என்றான். சூர்யாவின் முகத்திலிருந்து சோகத்தை தாரா கண்டு கொண்டாள்.
தாரா, “ரொம்ப டயர்டா இருக்க மாதிரி தெரியுது போய் ரெஸ்ட் எடு சூர்யா” என்றாள். ஷீலா, “ஆமாடா போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. அப்புறம் குளிச்சிட்டு சாப்பிட வா” என்றார்.
ரூம்க்குள் நுழைந்ததும் சூர்யா முதல் வேலையாக நட்சத்திராவிற்கு வீடியோ கால் செய்தான்.
சூர்யாவை பிரிந்த துக்கத்தில் சாப்பிடக் கூட தோன்றாமல் அப்படியே உறங்கிப் போயிருந்தாள் அவள். போன் ரிங்காகி அவளை எழுப்பி விட்டது. தூக்க கலக்கத்திலேயே போனை அட்டெண்ட் செய்து பேசினாள். அவளது அழுது வீங்கிய முகத்தைப் பார்த்த சூர்யாவிற்கு மனது கனமாகி விட்டது. பேச்சு வரவில்லை.
நட்சத்திரா, “மாமா வீட்டுக்கு போயிட்டியா?” சூர்யா, ” மம் இப்போதான் வந்தேன்” என்றான். நட்சத்திரா, “மாமா ஒரு நிமிஷம் முகத்தை கழுவிட்டு வரேன்” என்று எழுந்து சென்றாள்.
சூர்யா ‘நைட் ஃபுல்லா அழுதிருப்பா போல அதான் கண்ணு சிவந்து இருக்கு. கண்டிப்பா சாப்பிட்டு இருக்க மாட்டா. வரட்டும் கண்டித்து வைக்க வேண்டும்’ என நினைத்துக் கொண்டான்.
முகம் கழுவி விட்டு வந்த நட்சத்திரா, “சொல்லு மாமா” என்றாள். சூர்யா, “ஏய் குட்டச்சி சாப்பிட்டியா….?” நட்சத்திரா, “சாப்பிட்டேன் மாமா” என்றாள்.
சூர்யா, “என்கிட்டயே நீ பொய் சொல்றியா? நீ சாப்பிடலன்னு எனக்கு தெரியும்” என்றான். நட்சத்திரா மௌனமாகி விட்டாள்.
சூர்யா தொடர்ந்தான், “நேரத்துக்கு சாப்பிட்டு உடம்பை பார்த்துக்கோ. சும்மா என்னையவே நெனச்சு பீல் பண்ணிட்டு இருக்காத. படிப்பில் கவனத்தை செலுத்து” என்று அறிவுரை மழை பொழிந்தான்.
நட்சத்திரா தலையை தலையை ஆட்டினாள். சூர்யா, “தலையை ஆட்டிட்டு அப்புறம் எதுவும் செய்யாமல் இருக்காத. நான் ஹரிஷ் கிட்ட கேட்பேன்” என்றான். நட்சத்திரா, “சரி மாமா செய்றேன்” என்றாள்.
சூர்யா, “சரி இப்போ சாப்பாடு எடுத்துட்டு வந்து என் கண் முன்னாடி சாப்பிடு . அப்பதான் நான் சாப்பிடுவேன்” என்றான்.
நட்சத்திரா, “மாமா இப்ப வா? நான் இன்னும் பிரஷ் பண்ணல குளிக்கலை” என்றாள்.
சூர்யா, “நீ குளித்து பிரஷ் பண்ணிட்டு வா நான் வெயிட் பண்றேன்” என்றான்.
நட்சத்திரா, “மாமா அதுக்கு ரொம்ப நேரம் ஆகும் மாமா” என்றாள்.
சூர்யா, “எவ்வளவு நேரம் ஆனாலும் நான் வெயிட் பண்றேன். நோ பிராப்ளம்” என்றான்.
நட்சத்திரா குளித்து முடித்து வரும் வரை லைனில் காத்து இருந்தான். நட்சத்திரா சாப்பிட்டு முடித்த பிறகே விட்டான்.
சூர்யா, “சரிடி நான் சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சுக்கோ. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன்” என்றான்.
நட்சத்திரா, “சரி மாமா பாத்து பத்திரமா இரு” என்று காலை கட் செய்தாள்.
நட்சத்திராவிற்கு சூர்யா இல்லாமல் எதையோ இழந்தது போன்ற உணர்வு. சூர்யாவின் நிலைமையும் அதுதான். நட்சத்திரா பெயருக்கு காலேஜ் சென்று வந்தாள். காலேஜ் முடிந்து வீடு திரும்ப அவன் இல்லாமல் வெறுமையான வீடே அவளை வரவேற்றது. அவனுடன் இருக்கும்போது பிடித்திருந்த வீடும் பொருட்களும் இப்போது வெறுப்பை உண்டாக்கியது.
நட்சத்திராவிற்கு தனியே இருக்க பயமாக இருந்ததால் ஹாஸ்டலில் சேர அப்ளிகேஷன் போட்டு இருந்தாள். சூர்யா “இதை தான் நான் முதலிலேயே சொன்னேன். இப்போதாவது உனக்கு தோணுச்சே. சீக்கிரம் ஹாஸ்டல்ல ஜாயின் பண்ணு” என்றான்.
ஹரிஷ் தன் வீட்டிற்கு வருமாறு அழைக்க நட்சத்திரா மறுத்துவிட்டாள். சூர்யா தன் குடும்பத்தினருக்காக மகிழ்ச்சியாக இருப்பது போல காட்டிக் கொண்டான். நட்சத்திராவின் பிரிவு அவனை வாட்டி எடுத்தது.