அத்தியாயம் 4
” கதவுகளை மூடிவிட்டு அந்த அறையை ஒரு பார்வை பார்த்தவன் பெருமூச்சுடன் எனக்கு ஃபர்ஸ்ட் நைட் கொண்டாட தான் கொடுத்து வைக்கலனு நெனச்சேன் அட்லீஸ்ட் அந்த ரூம்லயாவது என்ஜாய் பண்ணலாம்னு குப்பை காடு மாதிரி இருக்குது என்ன பண்றது உனக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான் மகேந்திரா ” என்று தனக்கு தானே புலம்பியபடி பெட்டில் உள்ள குப்பைகளை மெத்தை விரிப்பை உதறி சரியாக விரித்து விட்டவன்
“வாம்மா தூங்கலாம்… நேத்தும் தூங்கல செம டயர்டா இருக்குது ” அவளிடம் கூறியவாறு பெட்டில் சென்று படுத்தான்…
அவனை முறைத்து பார்த்து “நீ இங்க படுத்த நான் எங்கடா படுக்கிறது கீழே படுடா…”என்று கூறினாள்
“கீழ படுக்கணுமா …. கொஞ்சம் கீழே பாருங்க மேடம்…எப்படி இருக்குதுன்னு …குப்ப மேட்டுக்கு சமமா இருக்கு .நான் எப்படி கீழே படுக்கிறது என்னால எல்லாம் கீழே படுக்க முடியாது…”என்று கூறியவாறு போர்வையை போர்த்தி கொண்டு கண்ணை மூடி படுத்துக் கொண்டான்…
அவன் கூறுவது அவளுக்கு புரிந்தாலும் ஒரே பெட்டில் நண்பன் என்றாலும் ஒரு ஆண் கூட படுப்பதற்கு அவளுக்கு பிடிக்கவில்லை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு சிறிது நேரம் நின்று கொண்டிருந்தவள் கால் வலிக்க பெட்டில் சென்று அமர்ந்தாள்….
அவள் கவனம் மகேந்திரன் புறம் திரும்ப அவன் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தான்…
‘எப்படி தூங்குது பாரு எருமை எல்லாம் இவனால வந்தது ‘என்று அவனை மனதிற்குள் திட்டி விட்டு இரண்டு தலையணையை எடுத்து இருவருக்கும் நடுவில் வைத்துக் கொண்டு வேறு வழியின்றி அவளும் பெட்டில் படுத்தாள்…அலைச்சலின் காரணமாக படுத்த சிறிது நேரத்திலேயே அவளும் உறங்கிப் போனாள்….
காலையில் சூரிய வெளிச்சம் முகத்தில் அடிக்க தூக்கம் கலைந்த வெண்மதி திரும்பி படுக்க நினைக்க அவளால் நகர முடியவில்லை அப்பொழுதுதான் தன்னை எதுவோ அழுத்திக்கொண்டு இருப்பதை உணர்ந்தவள் தூக்கம் அவளை விட்டு பறந்து போனது பட்டென்று கண்களை விழித்துப் பார்த்தவள் உச்சகட்ட கோபத்தில்
“டேய் எருமை …என்னை விடுடா….” என்று அவனை திட்டியவாறு அவனிடம் இருந்து விடுபட போராடினாள்…அவனும் அவள் விலக விலக இழுத்து டெடி பியரை போல் அணைத்து கொண்டு படுத்து தூக்கினான்
அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளியவாறு அவன் முகத்திலேயே இரு கைகள் கொண்டு படப்பட வேண்டும் என்று அடித்தாள்…
“மலை குரங்கு ,பன்னி,விடுடா என்னை ” என்று அவள் கத்திக்கொண்டு அவனை அடிக்க அதில் தூக்கம் கலைந்தவன் மெதுவாக கண்விழித்து பார்க்க தன்னை சரமாரியாக தாக்கிய வெண்மதியை விட்டு சட்டென்று விலகியவன்
“அடியே.. ஏண்டி என்னை இப்படி போட்டு அடிக்கிற “என்று அவன் முகத்தை தேய்த்துக்கொண்டு கேட்க
“நான் நடுவுல தலகாணி வெச்சிருந்தேன் இல்ல அது எங்கடா …எதுக்குடா என்னை கட்டிப்பிடிச்சு படுத்து இருந்தா ” என்று அவள் முறைத்துக் கொண்டு கேட்க
“ஈஈஈ…என்று இளித்தவாறு 32 பல்லையும் காட்டிக்கொண்டு சாரிடி பழக்க தோஷத்துல பசங்க கூட தூங்குற ஞாபகத்துல அப்படி பண்ணிட்டேன் “என்று அசடு வழிய கூறினான்…
“எது பசங்க கூட கட்டிப்பிடிச்சு தூங்கிட்டு இருப்பியா டேய் பேச்சுலர் என்று சொல்லி ரூம் எடுத்து என்னடா அசிங்கம் பண்ணிட்டு இருக்கீங்க ” என்று அவனை ஒரு மாதிரி பார்த்தவாறு அவள் கேட்க
“அடியேய்…நான் அந்த மாதிரி பையன் இல்லை “என்று அவன் ஷாக் ஆகி கத்த…
அவனையே குறுகுறுவென்று சந்தேகமாக பார்த்தாள் வெண்மதி…
“வேணாண்டி என்னை இப்படி பாக்காத ” என்று அவன் அவளிடம் பேசிக் கொண்டு இருக்க கதவு தட்டும் ஓசை கேட்டு இருவரும் அமைதி ஆனார்கள்…
“நீ போய் கதவை திற “என்று அவள் கூற
“நான் திறக்க முடியாது நீ போய் கதவை திற ” என்று அவன் கூறிவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டான்…
அவனை முறைத்தவாறு எழுந்து சென்று கதவை திறந்தவள் அவளை தள்ளிக் கொண்டு உள்ளேன் நுழைந்தார் செங்கமலம்
“ப்ச்சு… இப்ப எதுக்கு பாட்டி அப்படி என்னை தள்ளிட்டு உள்ள வருது ” என்று அவள் தனக்குள் கேட்டபடி திரும்பி பார்க்க
அதற்குள் உள்ளே நுழைந்த செங்கமலம் அறை இருந்த கோலத்தைப் பார்த்து …
“அடியாத்தி பேரனுக்கு மதி புள்ள மேல ரொம்ப தான் ஆசை போல ” என்று முகவாயில் கை வைத்து கூறியவர்
பெட்டில் படுத்திருந்த மகேந்திரனை பார்க்க
அவன் ” வாங்க பாட்டி “என்று கூறியவாறு எழுந்திரிக்க…
“நீங்க படுத்து ஓய்வெடு ராசா என்று அவனைப் பார்த்து வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டே வெண்மதியின் புறம் திரும்பியவர்
“சீக்கிரமா தலைக்கு குளிச்சிட்டு கீழே வந்து சாமி கும்பிடு ” என்று கூறிவிட்டு சென்றார்…
‘இந்த பாட்டி என்ன ஆச்சு ஒரு மாதிரி நடந்தது ‘ என்று புலம்பியவாறு மகேந்திரனை பார்த்தவள் அவன் நமட்டு சிரிப்புடன் அவளை பார்க்க
“என்ன சிரிப்பு உனக்கு? “என்று கேட்டான்
“புரியல தானே ” என்று அவன் கேட்க
“என்ன புரியல “என்று இவள் அவன் கூறியது புரியாமல் திரும்ப கேட்க….
“பாட்டி சொன்னது புரியலையா ” என்று வெட்கத்துடன் கூறுவதைப் போல் ஆக்சன் உடன் கூறினான்
முகத்தில் அருவருப்பைக் காட்டி “என்னடா செய்யுற ” என்று வெண்மதி கேட்க
“ச்சீ போ… பாட்டி நமக்குள்ள எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சானு பாக்க வந்தாங்க…ரொம்ப பாத்துட்டு கன்ஃபார்ம் பண்ணிட்டு போய்ட்டாங்க ” என்றான்
“என்ன கன்ஃபார்ம் பண்ணிட்டு போனாங்க ” என்று யோசித்தவாறு கூறியவர் அவன் கூறியது புரிந்து ஷாக்காகி அவனை பார்க்க
அவன் போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு லேசாக வெளியே எட்டிப் பார்த்து ஆமாம் என்று தலையசைத்தான்…
“இந்த பாட்டிக்கு என்ன லூசா புடிச்சிருக்கு ஊருல இருக்குற குப்பை எல்லாம் ரூம்ல வந்து கிடைக்குது இதை பார்த்தால் அதுக்கு அந்த மாதிரி தோணுச்சா… “என்று கூறியவள்…
“சரி லேட் பண்ணா மறுபடியும் மேல வந்து ஏதாச்சும் திருப்பி தனமா நினைச்சுக்கும்…நான் போய் குளிக்க போறேன் “என்று கூறியவாறு பாத்ரூம் சென்று குளித்துவிட்டு ஒரு சுடிதார் அணிந்து கொண்டு வெளியே வந்தாள்…
அவள் வெளியே வந்ததும் மகேந்திரன் குளிப்பதற்கு பாத்ரூம் போக வெண்மதி கீழே வீட்டிற்குள் சென்றாள்…
கீழே வந்த பாட்டி அங்கு இருப்பவர்களிடம் என்ன கூறியதோ அனைவரும் இவளை ஒரு மாதிரி குறுகுறுவென்று பார்ப்பதைப் போல் உணர்ந்தாள்…
அவளது உறவுக்கார பெண் ஒருத்தி அவளிடம் வந்து
“என்ன மதி நைட்டு ம்ம்…ம்ம்…. “என்று சிரித்துக் கொண்டே கேட்க
“என்னடி ம்ம்…இருக்கிற கடுப்புல டென்சன கிளப்பாதே… பாட்டி நீ கையில கிடைச்ச செத்த “என்று கத்திக்கொண்டே அவள் பாட்டியே தேடிக் கொண்டு ஒவ்வொரு அறையாக உள்ளே நுழைய
அவளைப் பார்த்த உறவுக்கார பெண்மணி அத்தை ஒருவர் “வெண்மதி குளிச்சிட்டு வந்துட்டியா போய் முதல்ல விளக்கேத்தி சாமி கும்பிடு ” என்று கூற அவரிடம் மறுக்க முடியாமல் அவர் கூறியதை செய்தவள் …
“நீ போயி மாப்பிள்ளையே சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்ப சொல்லு சாப்பிட்டு எல்லாரும் கிளம்பலாம் வேன் வந்துடுச்சு ” என்று கூறினார்…
“சரிங்க அத்தை ” என்று கூறிவிட்டு மீண்டும் மேலே அறைக்கு செல்ல போக…அதற்குள் அங்கு வந்த பாட்டி டம்ளரை அவள் கையில் கொடுத்து
“இதுல பாதாம் முந்திரி எல்லாம் போட்டு ஸ்பெஷலா காட்சி கொண்டு வந்து இருக்கேன் போய் பேரனுக்கு கொடு அப்பதான் உனக்கு தென்பா இருக்கும் ” என்று கூறினார்
உறவினர்கள் அனைவரும் இருக்க பாட்டியை எதுவும் கூற முடியாமல் அவரை முறைத்துப் பார்த்து அவர் கொடுத்த பாலை வாங்கிக் கொண்டு மேலே அறைக்குச் சென்றாள்
அப்பொழுதுதான் குளித்துவிட்டு வெளியே வந்தவன் துண்டினை கட்டிக்கொண்டு
“ராஜா கைய வச்சா
அது ராங்கா போனதில்லை ”
என்று பாட்டு பாடி கொண்டு இருக்க…
“ஐயோ… ச்சீ…கருமம்… எருமை குளிச்சிட்டு டிரஸ் பண்ணிட்டு வெளியே வர தெரியாதா துண்ட கட்டிட்டு பேஷன் ஷோ காமிச்சிட்டு இருக்கே…என்னோட கண்ணு அவிஞ்சு போச்சு “என்று கண்ணை மூடியவாறு அவள் கத்த…
தன்னை ஒரு முறை பார்த்துக்கொண்ட மகேந்திரன்
“எது கருமம்மா… கண்ணு அவிஞ்சு போச்சா…நல்லா பாருடி குருடி ஜிம்முக்கு போயி எவ்வளவு சூப்பரா பாடி மெயின்டன் பண்ணி வச்சிருக்கேன்… கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ” என்று அவன் கூற
அவனை முறைத்துப் பார்த்தவள் ” நான் குருட்டியா நான் கழுதையா” என்று அவனை அடிப்பதற்கு பொருள் தேட அதற்குள் சீக்கிரமாக தன்னுடைய டிரஸ்ஸை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் சென்று மறைந்தான்…
டிரஸ் பண்ணி கொண்டு அவன் வெளியே வர அவனுக்கு பாட்டி கொடுத்து விட்ட பாலை இவள் குடித்துக் கொண்டு இருக்க
“என்னடி குடிக்கிற ” என்று கேட்டுக்கொண்டே தலைவாரிக் கொண்டு இருந்தான்
“உனக்கு தான் ஏதோ ஸ்பெஷல் பாலம் பாட்டி போட்டு தந்துச்சு அதுக்கு கொழுப்ப பாரு ஏத்தி எனக்கு கொடுக்காம உனக்கு மட்டும் கொடுக்குது ” என்று கூறியவாறு அவர் குடித்துக் கொண்டிருக்க
அதிர்ச்சியுடன் அவளை பார்த்தவன்
“அடிப்பாவி எனக்கு கொடுத்த பாலை நீ குடிச்சிட்டு இருக்கியா “என்று அவளிடம் இருந்து பிடுங்கி அவன் குடிக்க தொடங்கினான்…
கிராமத்திற்கு செல்வதால் பாட்டி சேலை கட்ட சொல்லி இருக்க
“டேய் வெளியே போடா “என்று அவள் கூற
“பால் தானடி வாங்கி குடிச்சேன்..அதுக்கு என்ன விட்டு விட்டு வெளியே போக சொல்ற ” என்று சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு அவன் கேட்க….
தன் தலையிலேயே அடித்துக் கொண்டவள் “எருமை உன்னை ரூம்ப விட்டு தான் வெளியே போக சொன்னேன் சேலை கட்டணும் ” என்று கூற
“அப்படி தெளிவா சொல்லணும் சின்ன பையன் புரியாம பயந்துட்டேன் இல்ல ” என்று கூறியவாறு வெளியே சென்றான் …
வெண்மதிக்கு அவனுடன் சண்டை போடுவது ஒன்றும் வித்தியாசமாக தெரியவில்லை ஏனென்றால் அவனைப் பார்த்ததிலிருந்தே இருவரும் சண்டை கோழிகளாக இப்படித்தான் அடித்துக் கொண்டு சுத்தி கொண்டே இருப்பார்கள்… ஆனால் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த பாசம் உள்ளது …
இருவரும் சண்டை போட்டவரே ஒருவாரு கிளம்பி வெளியே வர அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தது கிராமத்திற்கு விருந்துக்கு செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேன் …அனைவரும் உள்ளே ஏறிக்கொண்டு இருக்க தானும் உள்ளே ஏறி சென்று ஒரு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தாள் வெண்மதி
வேனில் ஏறிய சாந்தி வெண்மதி இடம் எதுவும் பேசாமல் பின்னால் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார்…தன்னிடம் பேசாமல் போகும் அன்னையை சோகமாக பார்த்துக் கொண்டு இருந்தால் வெண்மதி…
வேன் புறப்படும் நேரத்தில் அனைவரும் ஏறிய பின்பு வேனில் ஏறிய மகேந்திரன் அமர்வதற்கு இடம் பார்க்க வேண்டும் என்று முழு சீட்டிலும் கால்களை சம்மனங்கள் போட்டு உட்கார்ந்து கொண்டாள் வெண்மதி
அதை கவனித்த பாட்டி செங்கமலம்
“என்ன ராசா அங்கேயே நிக்கிற வா இப்படி வந்து மதி புள்ள பக்கத்துல உக்காரு “என்று கூறினார் …
‘இந்த பாட்டி இருக்கே…இதுக்கு வேற வேலையே இல்ல…உன்னோட கிரைம் ரேட் ஏறிக்கிட்டே போகுது பாட்டி ‘என்று அவரைப் பார்த்து சிரித்தவாறு மகேந்திரனுக்கு இடம் விட்டு அமர்ந்தாள்….
“ஹாய் பொண்டாட்டி என்ன என்னை விட்டுட்டு நீ மட்டும் ஜாலியா உக்காந்துக்கலாம்னு நினைச்சியா ” என்று கேட்க
அவன் பொண்டாட்டி என்று கூட்டத்தில் கோபத்துடன் அவனை முறைத்தாள் வெண்மதி
“என்ன பொண்டாட்டி மாமாவ ரொம்ப பாசமா பாக்குற மாதிரி இருக்கு “என்று மேலும் அவளிடம் வம்பு வளர்க்க
அவன் தொடையில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள்…
“ஆஆஆ …”என்று சத்தமாக அவன் கத்தி விட அனைவரும்
“என்ன ஆச்சு மாப்பிள்ளை… என்னாச்சு ராசா… ” என்று மாற்றி மாற்றி கேட்டனர்…
வெண்மதி பயந்து திரு திருவென்று முழிக்க…
“ஒன்னும் இல்ல எறும்பு கடிச்சிடுச்சு ” என்று அவன் கூறி சமாளிக்க… “அனைவரும் தங்களுக்குள் பேசியபடி மீண்டும் அவரவர் இடத்தில் அமர்ந்தனர்
“எருமை ஏன்டா கத்தின… “பல்லை கடித்தவாறு அவன் காது அருகே சென்று வெண்மதி கேட்க
“ஏண்டி என்ன கிள்ளி வச்ச ” என்று அவன் பதில் கேள்வி கேட்டான்
“நான் மெல்லமா தானே கிள்ளினேன் அதுக்கு ஏன்டா அப்படி கத்தின “என்று அவள் கேட்க
“நீ என்னை கிள்ளுன மாதிரி நான் உன்னை கிள்ளி காட்டினா உனக்கு அந்த வலி தெரியும் “என்று கூறியவன் அதற்குள் பவித்ரன் போன் செய்ய அதை அட்டென்ட் பண்ணி பேச ஆரம்பித்தான்
“என்ன மச்சான் ஃபஸ்ட் நைட் எல்லாம் கொண்டாடியாச்சா “என்று மகேந்திரன் கேட்க
அவன் பேசியதை கேட்ட வெண்மதி தலையிலேயே அடித்துக் கொண்டாள்…அவளை ஒரு பார்வை பார்த்தவன் தோள்களை ஒதுக்கியவாறு பவித்திரனிடம் மேலும் பேச தொடங்கினான்…
சிறிது நேரத்தில் தன் தோள்களில் பாரம் உணர திரும்பிப் பார்த்தவன் வெண்மதி தோளில் சாய்ந்து தூங்கி கொண்டு இருப்பதை கண்டான்…
அவளை சுற்றி தோள்களில் கை போட்டு அவளை தன் கையணையில் வைத்துக்கொண்டு அவளின் தலையே வருடியபடி
‘உன்ன எப்பவுமே சந்தோஷமா வச்சுக்குவேன் மதிமா இனிமேல் உன்னை எந்த கஷ்டமும் நெருங்காமல் ‘ என்று கூடியவன் … அவனுக்கு தகுந்தார் போல் வேனில் காட்டும் ஓடிக்கொண்டு இருந்தது …
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்.. கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேன் அடி செல்லமா..
நான் கண்கள் மூட மாட்டேன் அடி செல்லமா..
ஆதி நீதான் யென் சந்தோஷம்
பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேசலாம்
நான் கேட்கும் சங்கீதம்
உன் புன்னகை நான் செமிகிந்திர செல்வமாடி
நீ இல்லை என்றாள் நானும் இங்கே ஏழியடி
பாடலைக் கேட்டுக் கொண்டே அவளுடன் ஆன பயணத்தை கண்கள் மூடி ரசித்து கொண்டு இருந்தான் மகேந்திரன் …அவன் இந்த நிம்மதி இன்னும் சில மணி நேரத்தில் போகப் போவது தெரியாமல்
அவர்கள் இருவரையும் கண்களில் வலியுடன் வேதனையாக பார்த்துக் கொண்டு இருந்தான் சந்தோஷ்… அவர்கள் இருவரையும் அந்த நிலையில் பார்க்க முடியாமல் அந்தக் கோபத்தை வேனில் காட்டினான் சந்தோஷ்
கிராமத்திற்கு பக்கத்தில் வந்த வேன் திடீரென்று ஓர் இடத்தில் நின்று விட்டது …அதில் தூக்கம் களைந்து எழுந்த வெண்மதி தன்னை அணைத்தவாறு கண்மூடி உட்கார்ந்து இருந்த மகேந்திரனை தன் கைமுட்டி யால் அவன் விலாஎலும்பில் ஒரு குத்து குத்தினாள்…
“ஆ….ஏண்டி “என்று அவளைக் கேட்க
“வேன் நின்றுச்சு என்னாச்சுன்னு போய் பாரு ” என்று கூறினாள்…
அந்த வேனில் குழந்தைகளும் குமரிகளும் பெண்களும் இருந்தனர் ஆண்கள் முன்னாடி நாள் இரவே விருந்திற்கு ஏற்பாடு செய்வதற்காக கிளம்பி இருக்க எழுந்து போய் என்னவென்று டிரைவரிடம் விசாரிக்க…
“என்னாச்சுன்னு தெரியல சார் எல்லாம் கரெக்டா தான் இருக்குது நான் செக் பண்ணி தான் வண்டி எடுத்துட்டு வந்தேன் திடீர்னு வண்டி எப்படி இவ்ளோ ஹீட் ஆச்சுன்னு தெரியல அதான் வண்டி நின்னுடுச்சு தண்ணி ஊத்துனா சரியாயிடும் ” என்று கூறினான்…
“அப்புறம் என்ன அண்ணா தண்ணி கேன் தான் உள்ள இருக்குதுல்ல எடுத்து ஊத்துங்க வேணுங்கிற தண்ணிய ” என்று அவன் கூற
“ஒரு கேன் தண்ணி எல்லாம் தேவையில்லை தம்பி கொஞ்சம் தண்ணி இருந்தா போதும் ” என்று கூறி அவருக்கு தேவையான தண்ணீரை எடுத்து வண்டியில் ஊற்றி சிறிது நேரம் கழித்து வண்டியை எடுத்து கிராமத்தை அடைந்தனர் ….
வேனில் இருந்து ஒவ்வொருவராக இறங்க …அந்த கிராமத்தில் தனக்கு காத்திருக்கும் ஆபத்து தெரியாமல் அங்கு காலை பதித்தால் வெண்மதி …