அத்தியாயம் 7
அரண்மனை வாசலில் அந்த ஊர் மக்கள் அனைவரும் சூழ்ந்து இருக்க அழுகை ஒலி அந்த அரண்மனையில் பட்டு எதிரொலிக்க அப்பொழுதுதான் போலீசிற்கு தகவல் வந்து அவர்கள் தங்கள் பணியை செய்ய தொடங்கி இருந்தனர் …இது எப்பவும் இங்கு நடக்கும் ஒரு வழக்கமான செயலாகிப் போனது …இங்கு நடக்கும் விசித்திரமான செயல்களால் இங்கு இறப்பவர்களின் காரணத்தை போலீசாரால் சட்டத்திற்கு தெரிவிக்க முடியாது இதுவே அவர்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது …பேய் அனைவரையும் சாகடிக்கிறது என்று சட்டத்திடம் போய் இவர்கள் தெரிவிக்க இயலாது…எனவே இவ்வாறு ஏதேனும் ஒரு உயிர் பலியானால் அது போலீசிற்கு மிகப்பெரிய நெருக்கடியாக இருந்து வருகிறது…
அங்குள்ள கூட்டத்தை விளக்கிக் கொண்டு உள்ளே சென்று பார்த்த மகேந்திரன் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டான்…
அந்த இளைஞனின் தலை தனியாக ஒரு பக்கம் கிடைக்க ஒரு கை பிடுங்கப்பட்டு அது ஒரு பக்கம் கிடைக்க முண்டம் மட்டும் தனியாக கீழே விழுந்து கிடந்தது உடலில் ஒரு சொட்டு ரத்தம் கூட இல்லாமல் நிறம் மாறி காணப்பட்டது …
அந்த இளைஞனின் தாய் கீழே விழுந்து அழுது புரண்டு கொண்டிருக்க அந்த ஊர் மக்கள் அனைவரும் அந்த இளைஞனுக்காக வருத்தப்பட்டு கொண்டு நின்று இருந்தனர் …
நம் ஊரை பத்தி தெரிஞ்சு இங்கேயே வளர்ந்த இந்த பையன் எதுக்கு வீட்டை விட்டு வெளியே வந்தான் என்று ஒருவர் கூற
அவன் ஏதோ பக்கத்து ஊரு பிள்ளையை காதலிச்சானாம் அந்த புள்ள வீட்ல கண்ணாலத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டாங்கன்னு இவனும் அந்தப் பிள்ளையும் சேர்ந்து ராவோடு ஊரை விட்டு ஓடி போக நெனச்சு வீட்டை விட்டு வந்திருக்கான் …இப்படி அந்த சாத்தான் கையில சிக்கி அநியாயமா செத்துப் போயிட்டான் என்று பக்கத்தில் இருந்த மற்றொருவர் கூறினார் …
இந்த காலத்து பசங்களே இப்படித்தான் தைரியமா அதை செய்றேன் இத செய்றேன்னு அவசரப்பட்டு உசிர விடுறாங்க…அப்பா இல்லாமல் எவ்ளோ கஷ்டப்பட்டு வளர்த்தா அவளை கொஞ்சம் நினைச்சு பார்த்திருந்தானா இப்படி பண்ணியிருப்பானா என்று அனைவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தனர்
அதைப் பார்த்த மகேந்திரன் அதிர்ச்சியில் நின்று கொண்டிருக்க அவனை கவனித்த சுந்தரபாண்டி தன் அருகில் நின்று இருந்த மூத்த மகனிடம் ஜாடை காட்ட கணேசன் தன் தந்தை கூற வருவதை உணர்ந்து மகேந்திரன் அருகில் சென்றான் …
கணேசன் அருகில் வந்து மகேந்திரனின் தோளினை தொடவும் யார் என்று பார்த்தான் மகேந்திரன் …
இங்க நீங்க ஏன் வந்தீங்க மாப்பிள்ளை நீங்க உள்ள போங்க என்று கணேசன் கூறி அவனை கையோடு அழைத்துக் கொண்டு அரண்மனைக்குள் சென்றான் …
போலீஸ் ஊரின் தலைவரான சுந்தரபாண்டியிடம் வந்து போஸ்ட்மார்ட்டம் செய்வதற்காக எடுத்துச் செல்வதாக கூறி அங்கு இருந்து டெட் பாடியை எடுத்துச் சென்றனர்
மகேந்திரனோடு உள்ளே நுழைந்த கணேசன் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்திருந்த வெண்மதியிடம் சென்று
வெண்மதி மாப்பிள்ளைய வெளியே தனியா அனுப்பிட்டு நீ இங்க உக்காந்துட்டு இருக்க… இந்த இடத்தை பத்தி உனக்கு தெரியும் தானே அவரை இனிமேல் எங்கேயும் தனியா அனுப்பாத என்று கூறிவிட்டு அவளிடம் மகேந்திரனை ஒப்படைத்து விட்டு சென்றான்
அரண்மனையில் உள்ள அனைவரும் அந்த இளைஞனின் இறப்புச் செய்தி கேட்டு வருத்தம் அடைந்தனர் …
அனைவரது முகத்திலும் புன்னகை துடைத்து எடுத்த போல் இருந்தது அந்த அரண்மனையில் சிரிப்பு சத்தம் இல்லாமல் அமைதியாக காணப்பட்டது
அரண்மனையில் உள்ள அனைவரும் தங்களுடைய அன்றாட வேலைகளை பார்ப்பதற்கு தொடங்கினர்…சிறியவர்கள் கல்லூரிக்கும் பள்ளிக்கும் கிளம்ப பெரியவர்கள் தமது வேலைகளை கவனிக்க செல்ல அங்கு நடப்பதை அனைத்தையும் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் மகேந்திரன் …
வெண்மதி மகேந்திரனை அழைத்துக் கொண்டு தங்களுடைய அறைக்கு சென்றாள்…
இங்கு என்ன நடக்குது மதி… வெளியே ஒருத்தன் தலையில்லாமல் முண்டம்மா செத்து கிடக்கிறான் …இப்ப என்னன்னா எல்லாரும் அவங்கவங்க வேலைய பார்க்க போறாங்க எனக்கு ரொம்ப குழப்பமா இருக்குது என்று வெண்மதியிடம் கேட்டான்…
ஃபர்ஸ்ட் டைம்னா எல்லாரும் ஷாக் ஆகி பாப்பாங்க இது எப்பவும் இங்கு நடக்கிற ஒரு விஷயம் அதனால அவங்கவங்க வேலையை பார்க்க கிளம்பிட்டாங்க என்றாள் வெண்மதி
புரியல மதி எப்பவும் நடக்கிறதா.. இதெல்லாம் யார் செய்யறது
நான் சொன்னாலும் நீ நம்ப மாட்டேங்குற உனக்கு எப்படி நான் சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல நம்ப முதல்ல இங்கிருந்து சீக்கிரம் கிளம்பனும்…இதுக்கு தான் நான் நேற்று கிளம்பலாம்னு சொன்னேன் நீ தான் திருவிழா பார்க்கிறேன் இங்கு ஒரு வாரம் இருக்கணும் என்று என்கிட்ட கேட்டேன் ஆனா இங்க நடக்கிறது பார்த்தா எனக்கு பயமா இருக்குது இதுக்கு மேல நம்ம இங்க இருக்கிறது எனக்கு சரியா படல நம்ம கிளம்பலாம் நான் போய் அம்மாகிட்ட பேசிட்டு வரேன் என்று கூறி எழுந்து அங்கிருந்து செல்ல நினைக்க அவளின் கைப்பற்றி இழுத்து மீண்டும் தன் அருகில் அமர வைத்தான் மகேந்திரன்
நான் கேட்கிற கேள்விக்கு முதல்ல பதில் சொல்லிட்டு போ மதி…யாரு சாத்தான் என்ன நடக்குது இங்க தெளிவா சொல்லு எனக்கு என்று கேட்டான் மகேந்திரன் …
இந்த ஊர்ல ஒரு சாத்தான் இருக்கு அது இரவு நேரங்களில் வெளிய யாராச்சும் வந்தாங்கன்னா அவங்கள கொன்னு இங்க வந்து அரண்மனைக்கு முன்னாடி போட்டுட்டு போயிடும் இதுக்கு பயந்து தான் யாரும் இரவு நேரங்களில் வெளியே வரவில்லை என்று கூறினால்…
யார் அந்த சாத்தான் எதுக்கு நைட்ல மட்டும் வெளியே வரவங்கள கொல்லுது என்று மகேந்திரன் கேட்க
அது பெரிய கதை அதை சொல்ல இப்ப நேரம் இல்ல நம்ம முதல்ல இங்கிருந்து கிளம்பலாம் என்று மதி திரும்பவும் கூறி வெளியே செல்ல எத்தனிக்க
சந்தோஷ் எப்படி இறந்தாரு…என்று மகேந்திரன் கேட்ட கேள்வியில் வெண்மதியின் கால்கள் நகராது அங்கேயே நின்றது …
உன்னோட கல்யாணம் அப்போதான் சந்தோஷம் இருந்ததா சொன்ன… நேத்து சாத்தான் தான் சந்தோஷ ஏதோ பண்ணிட்டதா சொன்ன நான் நேத்து அத விளையாட்டாய் எடுத்துக்கிட்டேன் ஆனா இப்போ நடக்கிறது எல்லாம் பார்த்தா எனக்கு பயமா இருக்கு உண்மைய சொல்லு சந்தோஷ் எப்படி இறந்தார் …
அவன் கேட்க கேட்க கண்களில் கண்ணீர் வடிந்தது வெண்மதிக்கு …அவளின் நினைவுகள் தன்னுடைய திருமண நாளை நோக்கி சென்றது ….வெண்மதியின் திருமணத்தன்று அந்த சாத்தானின் கோரத்தாண்டவம் நினைவுக்கு வர அவள் உடல் நடுக்கம் கண்டது …
நான் உன்னிடம் கேட்டது உனக்கு கஷ்டப்படுத்தும்னு தெரியும் ஆனாலும் நான் தெரிஞ்சுக்க நினைக்கிறேன் ப்ளீஸ் சொல்லு என்று கேட்க அவனுக்கு பதில் கூற தொடங்கினாள் வெண்மதி
நானும் சந்தோஷம் காலேஜ் படிக்கும் போது லவ் பண்ண ஆரம்பிச்சோம்…அம்மாவுக்கு என்னுடைய காதல் பிடிக்கலைன்னாலும் ரொம்ப அவங்களை கன்வினன்ஸ் பண்ணி தான் ஒத்துக்க வச்சோம்… பாட்டி கல்யாணம் இங்க தான் நடக்கணும்னு ஸ்ட்ரிக்டா சொன்னதால எல்லாரும் கல்யாணத்துக்கு காலையில தான் வந்தோம்…எங்க அப்பா இறந்ததுக்கு அப்புறம் இந்த ஊருக்கு நாங்க அப்போதான் வந்தோம் அதுவரை அம்மா என்னை இங்கே வர விடல அவங்களும் வரல
அன்னைக்கு எல்லாம் நல்லபடியா தான் நடந்துச்சு எங்க கல்யாணமும் முடிஞ்சது…அன்னைக்கு நைட் அரண்மனையில் தான் நாங்க இருந்தோம்…நைட்டு ஒன்பது மணிக்கு சந்தோஷ் அவனோட பிரெண்ட்ஸ் கூட இந்த அரண்மனையோட மாடியில இருந்தான் அப்போ …
அப்புறம் என்ன மச்சான் உனக்கு …நீ லவ் பண்ண பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்ட என்று அவனின் நண்பன் கேட்க
ஒரு புன்னகையுடன் தலையசைத்த சந்தோஷ்
வெண்மதி என்னோட வாழ்க்கடா…அவ என்னோட உசுரு…அவ கூட நான் ஏழேழு ஜென்மத்துக்கும் சேர்ந்து வாழணும்…அவ இல்லாத ஒரு வாழ்க்கை என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது…என்று காதலுடன் வெண்மதியை மனதிற்குள் நினைத்துக் கொண்டு சந்தோஷ் பேசிக்கொண்டிருக்க அதைக் கேட்டு அவனுடைய நண்பர்கள்
இவன் வெண்மதி புராணம் ஆரம்பிச்சிட்டாண்டா…. இவன் காதலிக்க ஆரம்பிச்சதுல இருந்து வெண்மதி வெண்மதின்னு சுத்துனது பார்த்து நான் கூட எங்க இவன் பைத்தியமாயிடுவானு நினைச்சேன் நல்ல வேலை அவளையே கல்யாணம் பண்ணிக்கிட்டான்…காதலிக்கும் போது தான் வெண்மதி பத்தியே பேசி எங்க காதுல ரத்தம் வர வைச்ச இப்பவாச்சு எங்களை விடேன்டா என்று அவனுடைய நண்பர்கள் அவனை கிண்டல் செய்தனர்
அவர்களுக்குத் தெரியும் சந்தோஷ் வெண்மதியின் மீது எவ்வளவு காதலை வைத்து இருக்கிறான் என்று இருப்பினும் அவனிடம் எப்பொழுதும் கிண்டலாக பேசி விளையாடுவர்…
திடீர்னு கருமேகம் சூழ்ந்து புயல் காற்று போல வீச சந்தோசம் அவனுடைய நண்பர்களும் கீழே இறங்கி செல்லலாம் என்று எண்ணி திரும்பி நடக்க அப்பொழுது சந்தோஷியின் முன் வந்து நின்றது அந்த சாத்தான்…
அதைப் பார்த்து பயத்தில் உறைந்து நின்றான் சந்தோஷ்….
முன்னாள் சென்ற அவனின் நண்பர்களும் அதை பார்த்து பயத்தில் சந்தோஷிடம்
டேய் சீக்கிரம் வாடா என்று அவர்கள் கத்த…
சந்தோஷால் நின்ற இடத்தை விட்டு அசைய முடியவில்லை
பயத்தில் கத்திக்கொண்டு இருக்க சத்தம் கேட்டு மேலே ஓடி வந்தனர் அரண்மனையிலிருந்து அனைவரும் …
அந்த சாத்தான் கை சந்தோஷின் கழுத்தை இறுகப்பற்ற மூச்சு விட முடியாமல் திணறினால் சந்தோஷ்…
அவனை அப்படியே காற்றில் தூக்கி அரண்மனை வாசலில் போட்டது அந்த சாத்தான்…
அதைக் கண்ட சந்தோஷின் நண்பர்கள் அனைவரும் கீழே இறங்கி ஓட எதிரில் ஓடி வந்த அனைவரும் என்ன நடந்தது என்று விசாரிக்க தாங்கள் கண்டவற்றை கூறவும் பயந்து போன அனைவரும் அரண்மணியின் வாசலை நோக்கி ஓட ஆரம்பித்தனர் … அவர்களுடன் வெண்மதியும் ஓடினாள்…
அரண்மனை வாசலில் சந்தோசை கீழே தள்ளிய சாத்தான் அவனின் ஒற்றை கையை பிய்த்து எடுத்து அதில் வடிந்த இரத்தத்தை குடித்தது
வலி தாங்க முடியாமல் சந்தோஷ் அலறுவதை ரசித்துக்கொண்டே இருந்த அந்த சாத்தான் நொடியில் சந்தோஷம் தலையை திருவி கையோடு எடுத்திருந்தது ….தன்னுடைய வேலை முடிந்தது என்று அந்த இடத்தை விட்டு சென்றது சாத்தான்….
அனைவரும் ஓடி வரவும் அவர்கள் காலடியில் உருண்டு வந்தது சந்தோஷம் தலை…அதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியில் நிற்க…
சந்தோஷ் என்று கதறி அழுதாள் வெண்மதி…
வெண்மதியை திருமணம் செய்ததால் தான் சந்தோஷுக்கு இந்த நிலைமை என்று சந்தோஷின் பெற்றோர்களும் அவனின் உறவுகளும் அவளை பழி சொல்லினர்
தன்னுடைய கடந்த காலத்தை கூறி கொண்டு இருந்த வெண்மதி அதன் தாக்கத்தில் கதறி அழுக அவளை அணைத்துக் கொண்டான் மகேந்திரன் …
அவனுக்கு அவள் கூறியதை கேட்டு நம்பவும் முடியவில்லை ஆனால் இன்று நடந்ததை பார்த்து நம்பாமலும் இருக்க முடியவில்லை…
என்னால தான் சந்தோஷ் இறந்து போனான் ….இங்க இருந்தா உனக்கும் ஏதாவது ஆகிடும் வா நாம போலாம் என்று மகேந்திரனின் அணைப்பில் அடங்கி கதறி அழுதாள் வெண்மதி…
அவளது அழுகையை பார்த்து சந்தோஷ் மிகவும் வேதனை பட்டான்…வெண்மதியின் கண்ணீருக்கு தானே காரணம் ஆகிவிட்டேன் என்று வருத்தப்பட்டவனுக்கு இதற்கெல்லாம் காரணமான அந்த சாத்தானின் மீது கோபம் வந்தது …
காதலித்த பெண் மனைவியாக அமைவது ஒரு வரம்…காதலித்து பல போராட்டங்களுக்குப் பின் திருமணம் நடந்து வாழ முடியாமல் போன தன்னுடைய நிலைமையை எண்ணி ஒவ்வொரு நாளும் வருந்திக் கொண்டு இருக்கிறான் சந்தோஷ்…
அழுதுகொண்டு இருந்த வெண்மதியை சமாதானம் செய்வதற்காக மகேந்திரன் அவளிடம்
அழுகாத மதி மா …சாரி பழசு ஞாபகப்படுத்தி உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்…நீ ஒன்னும் பயப்படாத அந்த சாத்தானா நானா ஒரு கை பார்த்திடலாம்… என்று மகேந்திரன் கூற
அவன் கூறியதை கேட்டு நிமிர்ந்து அவளை முறைத்துப் பார்த்தாள் வெண்மதி
ஏய் என்ன ?…இப்படி பாக்குற …மாமா மேல உனக்கு நம்பிக்கை இல்லையா…என் முன்னாடி மட்டும் அந்த சாத்தான் வந்து நின்னுச்சுன்னு வை அப்படியே ஒரு குத்து அதோட தல பறந்து போய் விழுந்து விடும் என்று அவன் செய்கையில் செய்து காட்ட அதைப் பார்த்து வெண்மதிக்கு முகத்தில் புன்னகை தோன்றியது….
அப்பாடா சிரிச்சிட்டா இவ சிரிக்கறதுக்கு என்னெல்லாம் சொல்ல வேண்டியதா இருக்கு…
எது அந்த சாத்தான நீ அடிப்பியா என்று நக்கலாக கேட்ட வெண்மதி
இப்போ பேசுறதெல்லாம் அந்த சாத்தான் கேட்டுட்டு தான் இருக்க போகுது இன்னைக்கு நைட்டு உன்னை வந்து கதம் பண்ண போகுது என்று விளையாட்டாக சொல்ல
திரு திருவென்று முழித்த மகேந்திரன் மனதிற்குள் பயத்துடன்
சாத்தான் சார் சாத்தான் சார் நான் எதுவும் விளையாட்டுக்கு சொன்னேன் அதை போய் சீரியஸா எடுத்துக்கிட்டு நைட்டு என்கிட்ட வந்தராதீங்க என்றும் மனதிற்குள் புலம்பினான் மகேந்திரன்
அவனைப் பார்த்து வாய்விட்டு சிரித்த வெண்மதிக்கு இருமல் வர அவளை தன்னோடு அணைத்துக் கொண்டு நின்றிருந்த மகேந்திரன் அவளுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுக்கலாம் என்று நினைத்து திரும்ப அங்கு அவன் கண்ட காட்சியில் அதிர்ந்து போய் நின்றான்
தானாக தண்ணீர் வாட்டர் கேன் காற்றில் மிதந்து அவன் அருகில் வந்தது … அதைக் கண்டு பயத்தில் நின்றிருந்தான் மகேந்திரன்
மெல்லமாக அப்பொழுது காற்றில் ஒரு உருவம் மகேந்திரனின் கண்ணிற்கு புலப்பட ஆரம்பித்தது …அதையெல்லாம் கண்டு அதிர்ந்து போய் கண்கள் வெளியே வரா குறையாக பார்த்துக் கொண்டு நின்ற மகேந்திரனுக்கு கை கால் எல்லாம் நடுங்கத் தொடங்கியது ….
மெது மெதுவாக அந்த உருவம் முழுமை பெற அந்த உருவத்தை பார்த்து ஷாக் ஆகி நின்றான் மகேந்திரன் ….
அது சந்தோஷ் தான் …மகேந்திரனின் கண்ணிற்கு தன்னுடைய இருப்பை காட்டினான் சந்தோஷ்….வெண்மதி வேறு விடாமல் இரும்பிக் கொண்டு இருக்க தன் கையில் உள்ள தண்ணீர் பாட்டிலை அவளிடம் கொடுக்குமாறு மகேந்திரனை கண்களால் மிரட்டினான் சந்தோஷ்
பயத்துடன் கைகள் நடுங்க பாட்டிலை வாங்கிய மகேந்திரன் வெண்மதிக்கு கொடுக்க அவனின் பார்வை முழுதும் சந்தோஷம் மீதே நிலைத்திருந்தது ….
தண்ணீரை வாங்கி குடித்த வெண்மதி இருமல் நிற்க மகேந்திரன் புறம் திரும்பியவள்
என்னடா அப்படி பாத்துட்டு இருக்க…
உனக்கு அங்க எதும் தெரியலையா என்று கேட்டான் மகேந்திரன்
மகேந்திரனை ஒரு மாதிரி பார்த்த வெண்மதி பின்பு புன்னகையுடன்
என்ன என்னை பயப்படுத்த நினைக்கிறியா இதுக்கெல்லாம் நானும் பயப்பட மாட்டேன் வெயிட் பண்ணு குளிச்சிட்டு வரேன் ரெண்டு பேரும் சேர்ந்து போய் சாப்பிடலாம் என்று கூறிவிட்டு டவல் எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தாள் வெண்மதி
எது நான் பயமுறுத்த நடிக்கிறேனா…அடியே அதுக்குள்ள பாத்ரூம் குள்ள போயிட்டியா என்னை இப்படி தனியா கோர்த்து விட்டுட்டு போயிட்டியே என்று வாய்க்குள் முணுமுணுத்து கொண்டு சந்தோஷை பார்த்தவாறு நின்று இருந்தான் மகேந்திரன் …
மகேந்திரனை பார்த்து புன்னகை தான் சந்தோஷ்….